Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருமணத்திற்கு முன் சேர்ந்து வாழ்வது சரியா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திருமண ஆராய்ச்சி! திருமணத்திற்கு முன் சேர்ந்து வாழ்வது சரியா?

on 20-07-2009 05:07

ஆஸ்திரேலியா பல்கலை கழகம் இரண்டாயிரத்து 500 ஜோடிகளிடம் சமீபத்தில் கருத்து கணிப்பு நடத்தியது. 2001-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு வரை சேர்ந்து வாழ்ந்த தம்பதியர்களிடம் கருத்து கணிப்பு எடுக்கப்பட்டது. இது குறித்து, கலினா ரோடஸ் என்ற ஆராய்ச்சியாளர் குறிப்பிடுகையில், "எந்தவித பொறுப்பையும் உணராமல் சேர்ந்து வாழ்வதால்தான் திருமணத்துக்கு முன்பே சேர்ந்து வாழும் ஜோடியினர் நீண்ட நாட்கள் இணைந்து வாழ்வதில்லை. கணவன் மனைவி இணைந்து வாழும் காலம் அதிகரிப்பதற்கு குழந்தைகளும் ஒரு காரணமாக அமைகின்றனர்" என்றார். இது பத்திரிகை செய்தி!

இந்த விஷயத்தை ஆராய்ச்சி செய்துதான் மக்களுக்கு தெரிவிக்க வேண்டுமா? என்று இந்தியர்களாகிய நாம் நினைக்கிறோம். ஏனென்றால் நம் முன்னோர்கள் திருமண விஷயத்தில் வகுத்துக் கொடுத்து சென்ற பாதை அப்படி. திருமணம் முடிவதற்கு முன்னர் மாப்பிள்ளையும் பெண்ணும் சந்தித்துப் பேச அனுமதித்தாலும் அதற்கும் ஒரு வரைமுறையை பெண்ணுக்கு சொல்லிக் கொடுத்து விடுகிறார்கள். கல்யாணத்துக்கு முன் மாப்பிள்ளையே உடலுறவுக்கு வற்புறுத்தினாலும் பெண் அதற்கு சம்மதிக்காமல் "அதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம்" என்று வெட்கத்துடன் மறுத்து விடுகின்றனர். திருமணமான பின் ஒரு வருடத்துக்குள் குழந்தை பிறந்து விட வேண்டுமென்று இருதரப்பும் அவசரப்படுவதற்கு காரணம் பல இருந்தாலும், அதில் ஒரு காரணமாக பொறுப்புணர்ச்சியும் அமைகிறது.

என்ன முணுமுணுக்கிறிர்கள்?

நீங்கள் எந்த காலத்தில் உள்ளீர்கள் என்று கேட்கிறீர்களா?

அதெல்லாம் பழங்காலம். இப்போது புது ட்ரெண்ட் உருவாகியுள்ளது என்கிறீர்களா? அதுவும் சரிதான். இந்தியா கம்ப்யூட்டர் மயமாகி அவுட் சோர்ஸிங் செய்ய ஆரம்பிக்கப்பட்ட பின் தற்கால இளைய சமுதாயம் நம்முடைய பழம்பெரும் பண்பாட்டை-ஆஸ்திரேலியா ஆராய்ச்சியாளர் கருத்துக் கணிப்பு செய்து ரூம் போட்டு யோசித்து வெளியிட்ட ஆராய்ச்சி முடிவை- மறந்து திருமணத்துக்கு முன்னே உறவு வைத்துக் கொண்டு சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்கள். அதிலும் சமீபத்திய பத்திரிக்கைகளை படிக்கும் பழக்கம் உள்ளவர்கள் இப்படிப்பட்ட செய்திகளை அடிக்கடி வாசிக்கும் பாக்கியம் பெற்றிருப்பார்கள்.

இப்படியே அமெரிக்க பண்பாட்டை பின்பற்றி இந்திய இளைய உள்ளங்கள் செல்ல ஆரம்பித்தால் இன்னும் சில வருடங்களில் இந்திய பல்கலைகழகத்தைச் சேர்ந்த இந்திய ஆராய்ச்சியாளர் ஒரு ஆராய்ச்சி செய்ய வேண்டி இருக்கும்.

அது...

ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர் ஆராய்ந்த அதே விஷயத்தைத்தான் ஆராய வேண்டியிருக்கும்.

- ஏ.ஆர்.முருகேசன்

அதிகாலை

ஏன் இந்த வீண் வம்பு கறுப்பி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போத்துட்டு படுத்தாலும் படுத்திட்டு போத்தினாலும் ஓன்று தான் ஆனால் பெட் சீட்டை மாத்தாமல் இருந்தால் சரி

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கேள்வியில் பதில் உள்ளதே .......... திரு (புனித, தூ ய்மையான )மணம் . அதை அவசரப்பட்டு அசிங்க படுத்த்வேனாமே .

குற்ற உணர்வு ஏற்படுமே.கிணற்று தண்ணீரை ஆற்று வெள்ளமா அடித்துக்கொண்டு போய் விடும் . பொறுமை.....தேவை.

பழகலாம் எல்லை தாண்ட கூடாது . எந்த முறை யானாலும் மத அனுஷ்டானக்களுடன் தொடங்குவது தான் ஒரு நல்ல காரியத்துக்கு அழகு.

உடல் இணைய முன் மனங்கள் இணையவேண்டும்.புரிந்து கொள்ளவேண்டும்.

எமது பண்பாடு கலாசாரம் உள்ளவரை. எல்லை மீற வேண்டாமே.

  • கருத்துக்கள உறவுகள்
:lol:
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:lol:

மோனே இதுவிடை சொல்ல நீங்கள் நல்ல பொருத்தமானவர் எங்க சொல்லுங்கோ பார்ப்பம்,சிரிச்சு தப்பிடலாம் என்று பார்கிறிங்கள் என்ன,கோவிலுக்குள்ள போகலாம் கோபுரத்தில ஏறக்கூடாது :lol:

  • கருத்துக்கள உறவுகள்

உடல் இணைய முன் மனங்கள் இணையவேண்டும். புரிந்து கொள்ளவேண்டும்.

ஹிஹி.. இது வேற லோகத்தில நடக்குதா? :lol:

நடக்கிற திருமணங்களில பாதிக்கு மேல பெற்றோரால பார்த்து நிச்சயிக்கபட்டவை. இவையளெல்லாம் மாசக்கண‌க்கில இணையாமல் இருந்து ஆளையாள் புரிஞ்சு கொண்டு பிறகு விசயத்துக்கு வந்தவையோ? :lol:

காதல் கல்யாணம் பண்ணினவங்களை விட இவையள்தானப்பா பத்து மாசத்தில டாண் எண்டு பிள்ளையோட நிக்கினம்..! :lol::lol:

காதல் கல்யாணம் பண்ணினவங்களை விட இவையள்தானப்பா பத்து மாசத்தில டாண் எண்டு பிள்ளையோட நிக்கினம்..! :lol::lol:

10 அல்ல டங்கு 9 மாதம், அதிகம் தமிழ் சினிமா பார்த்தால் இப்படியெல்லாம் தப்புத் தப்பா தான் புரிஞ்சு கொள்வீர்கள்

...என் பிள்ளைகள் இப்படி திருமணம் செய்ய முனைந்தால், நிச்சயம் வரவேற்பேன் ஆதரவு கொடுப்பேன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கல்யாணத்திற்கு முன் குடித்தனம்?

இரண்டு பேருக்கும் ஒத்து வராம போகுமாய் இருந்தால் - பிரிவதற்கு மன பக்குவம் உள்ளவர்கள் தாராளமாய் இருக்கலாம் இப்படி. :lol:

இல்லை, என்ன தான் ஆனாலும் கடைசில கல்யாணத்தில் தான் முடியோனும் :lol: என்று நிர்பந்தம் இருப்பின், என்ன வில்லங்கத்திற்கு- முன்னரே ஒன்றாக குடித்தனம் நடத்துவான்? :lol:

அதில் ஏதும் லொஜிக் இருப்பதாய் படவில்லை. ஆயுள் தண்டனைக்கு யாரவாது வேளைக்கே போய் செக் இன் பண்ணுவானா?!! :lol:

ஆனால் வருட கணக்கில் கல்யாணம் முடிக்காமல் சந்தோசமாக ஒன்றாக உள்ளவர்களும் உண்டு. கலாச்சாரம் என்ற பெயரில், அவர்களின் சந்தோசத்தை - தரம் குறைத்து பார்க்கிறவர்கள் - விளங்கி கொள்ள வேணும் - மனுசர் மனுசருக்காக உண்டாக்கியது தான் கலாச்சாரமே தவிர கலாச்சாரத்திற்காய் மனுசர் படைக்க படவில்லை.

ஆக்கபூர்வமான மாற்றங்களை தழுவுவது ஒரு காலகட்டத்தில் இருந்து இன்னொரு காலகட்டத்திற்கு சந்ததிகளை சீராக வழிநடத்தி செல்லும். :lol:

எனது தனிப்பட்ட கருத்து அது.

எனது நண்பர்கள் அவ்வாறு இருக்க விரும்பினால் நானும் அதை வரவேற்பேன்.

ஆனால் எனது சுதந்திரத்தில், எனது தனிமையில் எனக்கு உள்ள பிடிப்பினால் கல்யாணத்திற்கு முன் சேர்ந்து வாழ்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. :lol:

சேர்ந்து வாழ்வது என்று மொட்டையாக சொன்னால் எப்பிடி? கிச்சுக்கிச்சு இல்லாமல் என்றா அல்லாட்டிக்கு கிச்சுக்கிச்சு செய்துகொண்டோ?

...என் பிள்ளைகள் இப்படி திருமணம் செய்ய முனைந்தால், நிச்சயம் வரவேற்பேன் ஆதரவு கொடுப்பேன்

உதை நீங்கள் இப்பிடி வாழ்ந்து பார்த்துப்போட்டு அனுபவத்தோட பிள்ளைக்கு சொன்னால் இன்னமும் நல்லாய் இருந்து இருக்கும். :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏன் இந்த வீண் வம்பு கறுப்பி

இதைப்பத்தி நீங்கள் என்ன நினைக்கிறீங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தப்பில்ல

பிழை இல்லை, ஆனால் எங்கட தமிழ் சமுதாயம் ஏற்றுக்கொள்ளது...!

  • கருத்துக்கள உறவுகள்

10 அல்ல டங்கு 9 மாதம், அதிகம் தமிழ் சினிமா பார்த்தால் இப்படியெல்லாம் தப்புத் தப்பா தான் புரிஞ்சு கொள்வீர்கள்

ச்சே.. ஒரு மாசம்கூட டைம் (Grace Period) தரமாட்டிங்களா? :lol:

ஆனால் எனது சுதந்திரத்தில், எனது தனிமையில் எனக்கு உள்ள பிடிப்பினால் கல்யாணத்திற்கு முன் சேர்ந்து வாழ்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. :lol:

இன்னும் ஒண்டும் ஆப்பிடேல்ல எண்டதை டீச்ன்டா சொல்லுறார் இளையபிள்ளை..! :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிழை இல்லை, ஆனால் எங்கட தமிழ் சமுதாயம் ஏற்றுக்கொள்ளது...!

புலம் பெயர் சமுதாயத்தில் பல இடங்களில் இது நடைபெற்றுக் கொண்டிருக்கிறதே?

புலம் பெயர் சமுதாயத்தில் பல இடங்களில் இது நடைபெற்றுக் கொண்டிருக்கிறதே?

ஒரு சில இடங்களில் நடக்கிறது உண்மை கறுப்பி... புலத்திற்கு வந்து நீண்ட காலம் (25- 30 வருடங்களாக) இங்கேயே வாழ்ந்தவர்களாக இருக்கும், அல்லது அவர்களின் பிள்ளைகளாக இருக்கும்... அவர்கள் தங்களை வெளிநாட்டுப் பிரஜைகள் என்று தான் அறிமுகப் படுத்துவார்கள்.... கவனித்துப் பாருங்கள்....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சேர்ந்து வாழ்வது என்று மொட்டையாக சொன்னால் எப்பிடி? கிச்சுக்கிச்சு இல்லாமல் என்றா அல்லாட்டிக்கு கிச்சுக்கிச்சு செய்துகொண்டோ?

:lol:

கிச்சுகிச்சு + joint bank accounts + joint mortgage + தெரிஞ்ச துன்பம் +தெரியாத துன்பம் etc etc ... எல்லாம் தான் கலைஞன்......

கூட்டி கழிச்சு பார்த்தால் நட்டம் தான் கூட என்று என்ர spreadsheet சொல்லுது.

அதனால அந்த spreadsheet ஆலேயே போர்த்து கொண்டு படுக்கிறது மேல்... சுப்பண்ணை சொன்ன பெட்ஷீட் வீண் செலவு & வேலில போன ஒணானை பிடித்து பெட்ஷீட்டுக்குள் விடக்கூடாது!!! :lol:

இன்னும் ஒண்டும் ஆப்பிடேல்ல எண்டதை டீச்ன்டா சொல்லுறார் இளையபிள்ளை..!

:lol: ஆப்பு இட்டதால தான் வலி..வேதனை :lol:

  • கருத்துக்கள உறவுகள்

கல்யாணத்திற்கு முன் குடித்தனம்?

இரண்டு பேருக்கும் ஒத்து வராம போகுமாய் இருந்தால் - பிரிவதற்கு மன பக்குவம் உள்ளவர்கள் தாராளமாய் இருக்கலாம் இப்படி. :lol:

எனக்கு அந்த பக்குவம் இருக்கெண்டுறதால நான் இப்பவும் READY :lol:

இல்லை, என்ன தான் ஆனாலும் கடைசில கல்யாணத்தில் தான் முடியோனும் :lol: என்று நிர்பந்தம் இருப்பின், என்ன வில்லங்கத்திற்கு- முன்னரே ஒன்றாக குடித்தனம் நடத்துவான்? :lol:

உதுக்கு ஒரு மாதிரியும் மூளைச்சலவை செய்யேலாதோ?

  • கருத்துக்கள உறவுகள்

திருமண ஆராய்ச்சி! திருமணத்திற்கு முன் சேர்ந்து வாழ்வது சரியா?

எதுக்கும் தாலியை கட்டிய பின் ........

முதலிரவு , தேன்நிலவு கொண்டாடுவதில் தான் ஒரு திரில் இருக்கு . :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லா சொன்னீங்க மாப்பிளை அவசர படஇ பொண்ணு வெக்கப்பட எல்லாம் ஒரு திரில் தான்....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்னும் ஒண்டும் ஆப்பிடேல்ல எண்டதை டீச்ன்டா சொல்லுறார் இளையபிள்ளை..! :lol:

இல்லை டங்கு இ பிள்ளை ஏற்கனவே பார்த்து வைச்சிருக்கிறார் அதாலதான் நாங்கள் எல்லாம் கலியாணத்துக்கு முதல் என்ன செய்தனாங்கள் என்று பார்க்கத்தான் இப்பிடி கதைக்கிறார் :D .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எதுக்கும் தாலியை கட்டிய பின் ........

முதலிரவு , தேன்நிலவு கொண்டாடுவதில் தான் ஒரு திரில் இருக்கு . :lol:

என்ன மச்சான் இப்பிடி சொல்லுறிங்கள்,ஒரே ஒருக்கா போட்டோவில பார்த்தவளோட எப்பிடி உந்த நிலவு எல்லாத்தையும் கொண்டாடுறது எல்லாம் இழவாயல்லோ போயிடும்,கொஞ்சம் எழும்படியப்பா என்றாலும் காது கேக்காதவள் போல படுத்திருப்பாள்,ஆனால் காதலிச்சு தாலிகட்டினபின் கொண்டாடுறதில நீங்க சொன்ன ஒரு திரில் இருக்கு தான்,ஆனால் பக்கத்தில பழம் இருந்தால் கடிக்க சொல்லுமே, :D

கிராமத்து பெண்ணை கட்டின மாப்பிள்ளை சொன்னாராம் உன்னை" கனிமூன்''அழைத்து செல்லுகிறன் என்று ஒரு வெளிநாட்டுக்கு அழைத்து சென்றார் மாப்பிள்ளை.ஒருகிழமையால கிராமத்து பெண்கேட்டாலாம் கனிமூண் காட்டுறன் என்று சொன்னியள் ஒன்றயையும் காட்டவில்லையேஎன்று,இதைத்தான

எமது நிலை அப்படி அகிவிடக்குடாது என்று தான் நம் முன்னோர்கள் பாதை வகுதுகொடுதிருக்கிரர்கள், அதன்படி வகுத்த பண்பாடு கலாச்சாரத்தை பின்பற்றவேண்டும், இவ்வாறு பின்பற்றினால் இப்படி ஒரு ஆராட்சி செய்யவேண்டி வராது!

என்ன அண்ணன்மார்களே சொல்வது சரிதான?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.