Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆட்காட்டி குருவியின் கண்ணீர் கவிதையாகின்றது: நிழலி

Featured Replies

வேதனை சுமக்கும் இரவுகளில் இருந்து

ஒரு சொட்டு

கண்ணீர்

கவிதையாகின்றது

கேட்கின்றதா உங்களுக்கு

வயல் வெளி தோறும்

என் தலைவனின்

காலடிச் சுவடு தேடி

ஆட்காட்டி குருவி பாடும் பாட்டு

கேட்கின்றதா உங்களுக்கு?

தன் தலையை மண்ணில்

மோதி அலறி

அழுகின்றது

அது

முழுச் சிறகும் உதிர்த்து

ஒற்றைக் காலில்

தவம் இருக்கின்றது

அதன் அலறல் கேட்கின்றதா

உங்களுக்கு

அதன் குரலில்

இந்த யுகத்தின் அலறல்

இருக்கின்றது

குருவியின் தனிமையில்

காலம் உறைகின்றது

உறைந்த காலத்தில்

நாம் சிதைவுற்றிருந்தோம்

ஆட்காட்டி குருவி கூட

காட்ட ஆளின்றி

ஊர் முழுதும்

சுற்றி வந்து

அழுகின்றதாம்

அது முன்னர்

வீரர்களின் கல்லறையில்

இருந்து பாடி

தூங்க வைத்தது

மூத்த மகனை போருக்கு

இழந்த தாயின் அருகிருந்து

கண்ணீர் துடைத்து

ஆறுதல் கொடுத்தது

வீட்டின் முகப்பில்

இருந்து ஊரை தூங்க

வைக்க தாலாட்டும்

பாடியிருந்தது

இன்று ஆட்காட்ட அதுக்கு

தோழர் இல்லை

இளைப்பாற

போராளியின் தோளில்லை

பறந்து பாட்டுப் பாட

வான் வெளி

இல்லை

புரண்டு சாக

ஒரு மண் கூட இல்லை

ஏன் இப்படி ஆனது

என்று சொல்ல

யாருமில்லை அதுக்கு

ஆட்காட்டி

யாருமற்ற தனிமையில்

வெளிகள் தோறும்

கண்ணீரை எழுதிச் செல்கின்றது

ஆட்காட்டியின்

வேதனை சுமக்கும் இரவுகளில் இருந்து

ஒரு சொட்டு

கண்ணீர்

கவிதையாகின்றது

: நிழலி: 12-Aug-2009

இரவு: 10:25

Edited by நிழலி

வயல் வெளி தோறும்

என் தலைவனின்

காலடிச் சுவடு தேடி

ஆட்காட்டி குருவி பாடும் பாட்டு

கேட்கின்றதா உங்களுக்கு?

தன் தலையை மண்ணில்

மோதி அலறி

அழுகின்றது

: நிழலி: 12-Aug-2009

இரவு: 10:25

ஆட்காட்டி மட்டுமில்லை நாங்களும் தான் அழுகின்றோம், எங்களின் தலைவனின் காலடி சுவடு தேடி... :)

  • கருத்துக்கள உறவுகள்

பறந்து பாட்டுப் பாட

வான் வெளி

இல்லை

புரண்டு சாக

ஒரு மண் கூட இல்லை

எங்கள் கனவுகள் பொய்த்த நிலையும் இதுதான்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆட்காட்டி குருவி கூட

காட்ட ஆளின்றி

ஊர் முழுதும்

சுற்றி வந்து

அழுகின்றதாம்

நிழலியின் கவிதை மிகநன்றாக இருக்கிறது.ஆட்காட்டிக்குருவ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

...................... :) :)

கவிதை மிகநன்றாக இருக்கிறது.ஆட்காட்டிக்

குருவியின் சோகம் எங்கள் எல்லோருடையதுமாகும்.

Edited by ஜீவா

  • கருத்துக்கள உறவுகள்

ஆட்காட்டியின் இடத்தில் ஈழத்தமிழர்களை வைத்து பாருங்கள் அது தான் இன்றைய வாழ்க்கை

.மாறாத சோகமும் தீராத கவலையும். நன்றி உங்கள் பதிவுக்கு நிழலி

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி உங்களின் கவிதை மிகவும் நன்றாக உள்ளது....

ஐந்து அறிவு ஜீவனுக்கு உள்ள அறிவு கூட, எங்கள் இனத்தை குண்டு போட்டு அளித்தவனுக்கு இல்லாமல் போய்விட்டது.

தன் தலையை மண்ணில்

மோதி அலறி

அழுகின்றது

அது

முழுச் சிறகும் உதிர்த்து

ஒற்றைக் காலில்

தவம் இருக்கின்றது

என் மனதை மிகவும் தொட்டு சென்ற வரிகள் இவை...

யாயினி

நல்லதொரு கவிதை......... நன்றி நிழலி அண்ணா.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிழலிக்கு

ஆட்காட்டியின் சோகம் சொல்லப்பட்ட வரிகள் மிக அழகு.... வாழ்த்துக்கள்....

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த குரல் நல்லா இருக்கு.

இந்த குரலில் கவிதையை கேட்க சோகம் நெஞ்சை தொடுகிறது.

வாழ்த்துக்கள் நிழலிக்கும் அந்த குரலின் சொந்தக்காரிக்கும்.

நிழலி தொடர்ந்து இப்படி ஒலிவடிவிலேயே கவிதைகள் படைத்தால் கேட்க நல்லா இருக்கும் :blink::(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வேதனை சுமக்கும் இரவுகளில் இருந்து

ஒரு சொட்டு

கண்ணீர்

கவிதையாகின்றது

கேட்கின்றதா உங்களுக்கு

வயல் வெளி தோறும்

என் தலைவனின்

காலடிச் சுவடு தேடி

ஆட்காட்டி குருவி பாடும் பாட்டு

கேட்கின்றதா உங்களுக்கு?

தன் தலையை மண்ணில்

மோதி அலறி

அழுகின்றது

அது

முழுச் சிறகும் உதிர்த்து

ஒற்றைக் காலில்

தவம் இருக்கின்றது

அதன் அலறல் கேட்கின்றதா

உங்களுக்கு

அதன் குரலில்

இந்த யுகத்தின் அலறல்

இருக்கின்றது

குருவியின் தனிமையில்

காலம் உறைகின்றது

உறைந்த காலத்தில்

நாம் சிதைவுற்றிருந்தோம்

ஆட்காட்டி குருவி கூட

காட்ட ஆளின்றி

ஊர் முழுதும்

சுற்றி வந்து

அழுகின்றதாம்

அது முன்னர்

வீரர்களின் கல்லறையில்

இருந்து பாடி

தூங்க வைத்தது

மூத்த மகனை போருக்கு

இழந்த தாயின் அருகிருந்து

கண்ணீர் துடைத்து

ஆறுதல் கொடுத்தது

வீட்டின் முகப்பில்

இருந்து ஊரை தூங்க

வைக்க தாலாட்டும்

பாடியிருந்தது

இன்று ஆட்காட்ட அதுக்கு

தோழர் இல்லை

இளைப்பாற

போராளியின் தோளில்லை

பறந்து பாட்டுப் பாட

வான் வெளி

இல்லை

புரண்டு சாக

ஒரு மண் கூட இல்லை

ஏன் இப்படி ஆனது

என்று சொல்ல

யாருமில்லை அதுக்கு

ஆட்காட்டி

யாருமற்ற தனிமையில்

வெளிகள் தோறும்

கண்ணீரை எழுதிச் செல்கின்றது

ஆட்காட்டியின்

வேதனை சுமக்கும் இரவுகளில் இருந்து

ஒரு சொட்டு

கண்ணீர்

கவிதையாகின்றது

: நிழலி: 12-Aug-2009

இரவு: 10:25

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"எங்கள் உணர்வுகளை மொத்தமாக உள்வாங்கி அப்படியே உருக்கி வார்த்திருக்கின்றீர்கள் நிழலி அண்ணா

ஆனால் 'ஆட்காட்டி" என்ற சொல்லுத்தான் பிடிக்கேல்லை.

  • தொடங்கியவர்

நன்றி .. மிக நன்றி...இதனை நான் எதிர்பார்த்திருக்கவில்லை.... நன்றி சாந்தி

  • தொடங்கியவர்

"எங்கள் உணர்வுகளை மொத்தமாக உள்வாங்கி அப்படியே உருக்கி வார்த்திருக்கின்றீர்கள் நிழலி அண்ணா

ஆனால் 'ஆட்காட்டி" என்ற சொல்லுத்தான் பிடிக்கேல்லை.

சின்ன வயதில் இரவில் அப்பா அம்மாக்கு நடுவில் படுத்திருக்கும் போது வானத்தில் ஒரு குருவியின் இசை தூரத்தில் இருந்து கேட்கத்தொடங்கும்..மெல்ல மெல்ல கிட்ட வந்து வீட்டுக் கூரையின் விட்டத்தினை கடந்து மீண்டும் விலகிச்செல்லும்...அம்மா அது பற்றி கதைகள் சொல்வா. அப்பா அது பற்றி விளக்கம் சொல்லுவார். அதன் குரலே ஒரு இசை, அதன் பாடலே ஒரு சுகம். என்ன குருவி அம்மா எனக் கேட்டால், ஆட்காட்டி குருவி என்பா அம்மா. அதன் பெயரின் காரணம் என்னவெனத் தெரியாது...ஆனால் குரலில் இருக்கும் மென்சோகம் மனதை உருக்கும். அடிக்கடி வராது அது, வந்தாலும் பாடிச் செல்லாது. ஒரு முறை வந்து மறுமுறை வர சிறிது காலம் கடந்து போயிருக்கும். இடையில் வாழ்வில் சில மாறுதல்களும் அதனூடான அனுபவங்களும் வந்திருக்கும். அதன் மென் சோகம் அந்த கால இடைவெளியில் கரைந்து போயிருந்த துயரை தொட்டுச் செல்லும்

ஆட்காட்டி எனும் சொல்லு இன்று எம் மத்தியில் மிகக் கனமான துரோகச் சொல்லாக மாறிவிட்டதும் கூட எம் போராட்ட காலத்தின் மிகப் பெரிய சோகம் என்றுதான் சொல்லுவேன்.

ஊரில் இருக்கும் என் சித்தியிடம் கேட்டேன் ஆட்காட்டி குருவி இப்பவும் வாரதா என. இல்லையெனச் சொன்னா சித்தி...ஒருவேளை தனக்கிடப்பட்ட தமிழ் பெயரை நினைத்து இன்று மெளனமாகி விட்டதோ தெரியவில்லை..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சின்ன வயதில் இரவில் அப்பா அம்மாக்கு நடுவில் படுத்திருக்கும் போது வானத்தில் ஒரு குருவியின் இசை தூரத்தில் இருந்து கேட்கத்தொடங்கும்..மெல்ல மெல்ல கிட்ட வந்து வீட்டுக் கூரையின் விட்டத்தினை கடந்து மீண்டும் விலகிச்செல்லும்...அம்மா அது பற்றி கதைகள் சொல்வா. அப்பா அது பற்றி விளக்கம் சொல்லுவார். அதன் குரலே ஒரு இசை, அதன் பாடலே ஒரு சுகம். என்ன குருவி அம்மா எனக் கேட்டால், ஆட்காட்டி குருவி என்பா அம்மா. அதன் பெயரின் காரணம் என்னவெனத் தெரியாது...ஆனால் குரலில் இருக்கும் மென்சோகம் மனதை உருக்கும். அடிக்கடி வராது அது, வந்தாலும் பாடிச் செல்லாது. ஒரு முறை வந்து மறுமுறை வர சிறிது காலம் கடந்து போயிருக்கும். இடையில் வாழ்வில் சில மாறுதல்களும் அதனூடான அனுபவங்களும் வந்திருக்கும். அதன் மென் சோகம் அந்த கால இடைவெளியில் கரைந்து போயிருந்த துயரை தொட்டுச் செல்லும்

ஆட்காட்டி எனும் சொல்லு இன்று எம் மத்தியில் மிகக் கனமான துரோகச் சொல்லாக மாறிவிட்டதும் கூட எம் போராட்ட காலத்தின் மிகப் பெரிய சோகம் என்றுதான் சொல்லுவேன்.

ஊரில் இருக்கும் என் சித்தியிடம் கேட்டேன் ஆட்காட்டி குருவி இப்பவும் வாரதா என. இல்லையெனச் சொன்னா சித்தி...ஒருவேளை தனக்கிடப்பட்ட தமிழ் பெயரை நினைத்து இன்று மெளனமாகி விட்டதோ தெரியவில்லை..

நிழலி அண்ணா,

நான் இப்பத்தான் இந்தகுருவி பெயரைக்கேள்விப்படுறன். நீங்கள் சொல்வது மாதிரி இப்போது எத்தனையோ சொற்களும் கூட துரோகத்துக்கே விலை போகின்றன. என்ன செய்வது இதுவும் காலத்தின் கொடுமை தான்.

  • தொடங்கியவர்

நிழலி அண்ணா,

நான் இப்பத்தான் இந்தகுருவி பெயரைக்கேள்விப்படுறன். நீங்கள் சொல்வது மாதிரி இப்போது எத்தனையோ சொற்களும் கூட துரோகத்துக்கே விலை போகின்றன. என்ன செய்வது இதுவும் காலத்தின் கொடுமை தான்.

இந்த குருவியின் இன்னொரு பெயர்தான் வானம்பாடி என்றும் சிலர் சொல்வர். சரியாக தெரியாது எது சரியென

  • கருத்துக்கள உறவுகள்

பின் னணி இசையில் நிழலியின் கவிதையை படித்த சாந்தியின் , குரல் வளம் அருமை . பாராடுக்கள் சாந்தி . நிழலி .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.