Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத் தமிழர்களுடன் சந்திப்பு: சும்மா ஆடுமா அமெரிக்கக் குடுமி--வேல்தர்மா

Featured Replies

எண்பதுகளில் பிலிப்பைன்சில் தனது தளங்களின் இருப்புக்கு சாவால்கள் எழுந்தபோதே அமெரிக்கா தன்து அடுத்த இலக்காக இலங்கையத் தேர்ந்தெடுத்தது. அமெரிக்காவின் டியாகோகசியத் தளம் நிலப் பரப்பு அளவில் சிறியது. ஈராக்கிற்கு எதிரான முதற் போர்

புரியும் போது அது புலப்பட்டது. எண்பதுகளில் இலங்கையில் எரிபொருள் நிரப்பு வசதியும் நீர்மூழ்கிக் கப்பல்களுக்கான் தொடர்பாடல் வசதியும் அமெரிக்காவிற்கு தேவைப் பட்டது. அதிலிருந்து

இலங்கையில் தமிழர்கள் பலிக்கடா ஆக்கப்படுதல் இந்திரா கந்தி அம்மையாரால் ஆரம்பித்து வைக்கப் பட்டது.

இன்று தமிழர்கள் பலி கொடுக்கப் பட்டு எல்லாம் பறித்தெடுக்கப் பட்டு நிற்கதியாக நிற்கின்றனர். எண்பதுகளில் சீனா அமைதியாக இலங்கையில் நடப்பவற்றை ஏது மறியாது போலவும் தனக்கு இலங்கையில் நடக்கும் அமெரிக்க இந்திய ஆதிக்கப் போட்டியில் சம்பந்தம் இல்லாதது போலவும் இருந்து கொண்டு தனது பொருளாதார இராணுவ பலத்தைக் கட்டியெழுப்புவதில் அக்கறை காட்டிக் கொண்டிருந்தது.

இந்த அமைதியின் பின்னணியில் ஒரு நம்பிக்கை சீனாவிற்கு பலமாக இருந்தது. அதுதான் சிங்கள மக்கள் மத்தியில் இருந்த அமெரிக்க இந்திய எதிர்ப்பு உணர்வு. அமெரிக்காவை சர்வ தேசஅரசியல் ரீதியிலும் இந்தியாவை கலாச்சார சரித்திர பிரந்திய ஆதிக்க எதிர்ப்பு ரீதியிலும் சிங்களவர்கள் பலமாக எதிர்க்கின்றனர். சீனா தனது பொருளாதாரம் வளர்ச்சியடைய இலங்கையில் தனது பிடியை நிதானமாகவும் உறுதியாகவும் இறுக்கிக் கொண்டது.

இலங்கை ஒரு சர்வாதிகார நாடகலாம் சீன ஆதரவுக் கொள்கையைக் கொண்ட ஒரு சர்வாதிகார நாடாக மாறும் சாத்தியம் இலங்கையில் ஏற்படுகிறது. இலங்கைக்கு இப்போது சர்வதேச ரீதியாகவும் பொருளாதார இராணுவ ரீதியாகவும் சீனாவின் ஆதரவு இருக்கிறது. இதன் வெளிப்பாடே அமெரிக்கா வன்னி முகாம்களில் இருக்கும் மக்கள் தொடர்பாக கருத்து தெரிவித்த போது அமெரிக்கவிற்கு செருப்படி கொடுப்பது போல ஹெகேலிய ரம்புக்வேல பதிலளித்தார்.

தமிழர்கள் மீது அமெரிக்க கரிசனை இலங்கையின் தற்போதைய மனிதாபிமான சூழ்நிலை தொடர்பில் புலம்பெயர் தமிழர் அமைப்புக்களுடன் அமெரிக்க இராஜதந்திர உத்தியோகத்தர்கள் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளனர்.

இலங்கையின் மனிதாபிமான நிலைமை மற்றும் அரசியல் மறுசீரமைப்பு போன்ற விடயங்கள் தொடர்பில் 16 தமிழ் புலம்பெயர் அமைப்புக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

தென் மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்கரின் பிரதி செயலாளர் ரொபர்ட் ஓ பிளெக் மற்றும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜேம்ஸ் மூர்ஸ் ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டுள்ளனர்.

இலங்கையில் நிரந்தர சமாதானம் ஏற்படுத்தப்பட வேண்டுமாயின் நீதி மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மையை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் தமிழர்களை ஒன்றிணைத்து நடைமுறைச் சாத்தியப்பாடுடைய ஓர் தீர்வுத்திட்டத்தை வழங்குவதன் மூலம் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

அதிகாரப் பகிர்வு மற்றும் மனித உரிமை மீறல் போன்றவை தொடர்பில் அவதானம் செலுத்தப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா இலங்கை தொடர்பாக தனது நிலைப்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்திவிட்டது என்பதை இது எடுத்துக் காட்டுகிறது. அமெரிக்க அணுகு முறை இந்திராகந்தியினது அணுகுமுறைபோல் சுய நலன் கொண்டதாகத்தான் இருக்கும். ஆனால் நடுக்கடலில் தத்தளிப்பது போல் நிலையில் இருக்கும் தமிழர்களுக்கு இப்போது எதைக் கிடைத்தாலும் பற்றிக் கொள்வர்.

உலகவர்த்தகதின் மூன்றில் இரு பகுதி இந்து சமுத்திரப் பிராந்தியத்தினூடாகவே நடை பெறுகிறது. அப்பிரந்தியத்தில் சீன வல்லாதிக்கத்தை அமெரிக்கா ஏற்றுக் கொள்ளாது. இலங்கைக்கு எதிராக ஒரு புதிய திட்டம் அமெரிக்காவிற்கு உண்டு என்பதையே மனித உரிமைக் கழகம் அண்மையில் வெளியிட்ட புகைப் படங்களும் புலப் படுத்துகின்றன.

இதுவரைகாலமும் விடுதலைப் புலிகளின் தலைமை தமிழர்களை எந்த ஒரு நாட்டின் பிடிக்குள்ளும் செல்லவிடாமல் தடுத்து வைத்திருந்தனர். அதனால் அவர்கள் நம்பிய இந்தியாவால் துரோகமிழைக்கப் பட்டு தனிமைப் படுத்தப் பட்டனர். இனிதமிழர்கள் ஒரு பலமிக்க நாடு சார்ந்தே தமது சுதந்திர போராட்டத்தை முன்னெடுப்பர்.

http://www.paranthan.com/index.php?option=...9&Itemid=53

இதுவரைகாலமும் விடுதலைப் புலிகளின் தலைமை தமிழர்களை எந்த ஒரு நாட்டின் பிடிக்குள்ளும் செல்லவிடாமல் தடுத்து வைத்திருந்தனர். அதனால் அவர்கள் நம்பிய இந்தியாவால் துரோகமிழைக்கப் பட்டு தனிமைப் படுத்தப் பட்டனர். இனிதமிழர்கள் ஒரு பலமிக்க நாடு சார்ந்தே தமது சுதந்திர போராட்டத்தை முன்னெடுப்பர்.

தமிழருக்கு இருக்கும் ஒரே வழி இனி இதுதான்.ஏதோ ஓர் இடத்தில் இறுக்கப் பற்றினால் தான் இந்தியாவை உடைக்கவோ ஆப்பிறுக்கவோ முடியும்.

எந்தப் பேயுடனும் கூட்டுச்சேர்ந்து தமிழர்களை ஒழிப்பேன் என்று ஒரு காலத்தில் ஜேஆர் சொன்னார்.

எமது இலட்சியத்தை அடைவதற்கு நாங்களும் எந்தப் பேயுடனும் கூட்டுச்சேருவதில் தப்பில்லை.

  • தொடங்கியவர்

நமக்கு துரோகம் செய்தவர்களுக்கு ஆப்படிக்க எந்த நாயுடனோ எந்த பேயுடனோ நான் சேரத் தயார்....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நமக்கு துரோகம் செய்தவர்களுக்கு ஆப்படிக்க எந்த நாயுடனோ எந்த பேயுடனோ நான் சேரத் தயார்....

நானும் தான் ...

நமக்கு துரோகம் செய்தவர்களுக்கு ஆப்படிக்க எந்த நாயுடனோ எந்த பேயுடனோ நான் சேரத் தயார்....

அத அப்ப ஜோசிச்சிருக்கோனும்.. இப்ப நாயும் பேயும் எங்கள சனியங்கள் மாதிரி பாக்குதுகள்.....

நானும் எந்த சனியனுடன் சேர்ந்தாவது தமிழனை தவிர மிச்ச எல்லா நாய்களுக்கும் துரோகம், நம்ப வைத்து கழுத்தறுத்தல், முதுகில் குத்துதல் இன்ன பிற...

எல்லாம் செய்ய தொடங்கிட்டன் என்பதை இத்தால் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ் நிலா, மின்னல், தாரகி, ரவுடி, சனியன் எல்லாம் அமெரிக்காவோட கூட்டுச்சேரப் போகினம்!

ஐயோ... இனி என்ன நடக்கப்போகுதோ தெரியேல்லையே?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் நிலா, மின்னல், தாரகி, ரவுடி, சனியன் எல்லாம் அமெரிக்காவோட கூட்டுச்சேரப் போகினம்!

ஐயோ... இனி என்ன நடக்கப்போகுதோ தெரியேல்லையே?

கின்டல் சுன்டல் என்ன :unsure:

  • தொடங்கியவர்

தமிழ் நிலா, மின்னல், தாரகி, ரவுடி, சனியன் எல்லாம் அமெரிக்காவோட கூட்டுச்சேரப் போகினம்!

ஐயோ... இனி என்ன நடக்கப்போகுதோ தெரியேல்லையே?

எனக்கு மத்தாக்களை பத்தி கவலையில்லை நான் அமெரிக்கனோட சேந்து முற்றுமுழுதா வேலை செய்யப்போறன்.

  • கருத்துக்கள உறவுகள்

எமது இலட்சியத்தை அடைவதற்கு நாங்களும் எந்தப் பேயுடனும் கூட்டுச்சேருவதில் தப்பில்லை.

ஒரு பேய் கூட நம்மை மதித்துக் கூட்டுச் சேராது, "சில்லறை"ப் பேய்களைத் தவிர!

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நிலா, மின்னல், தாரகி, ரவுடி, சனியன் எல்லாம் அமெரிக்காவோட கூட்டுச்சேரப் போகினம்!

ஐயோ... இனி என்ன நடக்கப்போகுதோ தெரியேல்லையே?

கப்பலை கொண்டு வந்து விட்டு விட்டு மக்களை (வன்னியில்) மீட்க தயார் என்று சொன்ன ஆட்கள் எல்லோ. இவர்களை நம்பி "மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கிய கதை தான்".

நானும் தயார் யாரோட எண்டாலும் சேர்ந்து செயற்பட..............

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நிலா, மின்னல், தாரகி, ரவுடி, சனியன் எல்லாம் அமெரிக்காவோட கூட்டுச்சேரப் போகினம்!

ஐயோ... இனி என்ன நடக்கப்போகுதோ தெரியேல்லையே?

கொழும்பு ஒட்டு குழுக்களுடன் கூட்டுசேர்ந்து திரிகிறார்கள் சிலர் அதனாலேயே ஏதும் நடக்கவில்லை......

அமெரிக்காவோடு கூட்டு சேர்ந்து என்ன பெரிதாய் நடக்க போகின்றது?

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவுடன் கூட்டுச் சேர்ந்தவர்கள் கெட்டுப் போகவில்லை.(இஸ்ரேல் தென்கொரியா யப்பான் முதலியவை) நாங்கள் கம்பிய இந்தியா ரஸ்சியா லிபியா கியூபா நோர்வே என்பன எம்மைக் கைவிட்டு விட்டன. நடுக்கடலில் தத்தளிக்கும் நாம் கிடைக்கின்ற மரக்கட்டையைப் பற்றி முதலில் கரை சேருவோம் .கட்டையை தொடர்ந்து வைத்திருப்பதா வீசி எறிவதா என்பதைப் பிறகு பார்ப்போம் நம்பிக்கைத் துரோகம் அது இது எல்லாம் பார்க்கக் கூடாது .எல்லாம் பார்த்துத் தான் எமக்கு இந்த நிலை எல்லாம் தமிழரின் சுயநலமாகச் சிந்திக்க வேண்டும். அமெரிக்காவிற்கு நிபந்தனையற்ற ஆதரவளிக்க நான் தயார்.

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவுடன் கூட்டுச் சேர்ந்தவர்கள் கெட்டுப் போகவில்லை.(இஸ்ரேல் தென்கொரியா யப்பான் முதலியவை) நாங்கள் கம்பிய இந்தியா ரஸ்சியா லிபியா கியூபா நோர்வே என்பன எம்மைக் கைவிட்டு விட்டன. நடுக்கடலில் தத்தளிக்கும் நாம் கிடைக்கின்ற மரக்கட்டையைப் பற்றி முதலில் கரை சேருவோம் .கட்டையை தொடர்ந்து வைத்திருப்பதா வீசி எறிவதா என்பதைப் பிறகு பார்ப்போம் நம்பிக்கைத் துரோகம் அது இது எல்லாம் பார்க்கக் கூடாது .எல்லாம் பார்த்துத் தான் எமக்கு இந்த நிலை எல்லாம் தமிழரின் சுயநலமாகச் சிந்திக்க வேண்டும். அமெரிக்காவிற்கு நிபந்தனையற்ற ஆதரவளிக்க நான் தயார்.

ஓருலகத் தலைமையாக இருக்கும் அமெரிக்கா அல்லது மேற்குலகு(இங்கே மேற்குலகென்பதே அமெரிக்கத் தலைமையிலான சக்திகளே) இந்திய ஊடாக, இந்தியாவைப் பயன்படுத்தித் தனது மேற்குக் கிழக்கு வர்த்தகத்திற்கான பாதுகாப்பானதொரு கடற்பாதையை தக்கவைத்திருக்கவே இலங்கையோடு மிக நெருக்கமாக நின்று பயங்கரவாதப் பூச்சாண்டி காட்டித் தமிழினத்தினது விடுதலைப் போரையும் பயங்கரவாதமாகச் சித்தரித்துச் சிங்கள பேரினவாத அரசினது இனஅழிப்புக்கு ஆதரவையும் கொடுத்திருந்தனர். இலங்கை இந்தியா ஊடாகச் சிங்கப்பூர்வரை ஒரு வர்த்தக இணைப்புப் பாலத்தை அமைப்பதனூடாகச் சீனச் சந்தைப்படுத்தலுக்கு நெருக்கடியை கொடுக்கப் போட்ட திட்டமானது, தமிழரது ஆயுதப் போரினது உறைநிலையோடு தகர்ந்து பொடிப் பொடியாகிய நிலையில் , சிறிலங்காவிலே சீனாவினது அதிகரித்த செல்வாக்கால் தம்மை விட்டுக் கைநழுவிச் செல்லும் சிறிலங்காவைக் கட்டுப்படுத்த எடுத்த முயற்சிகள் தோல்வியுற்ற நிலையில், அமெரிக்காவினது நகர்வானது சிங்களத்தை எச்சரிக்கை செய்யும் ஒரு நகர்வா என்பது குறித்தும் நாம் கவனத்திலே கொள்ள வேண்டியது அவசியமானது. ஏனெனில் தமிழர்தரப்பிற்க்கும் அரசுக்குமிடையேயான அமைதிப் பேச்சு முயற்சியிலே அமெரிக்காவில் தமிழர்தரப்பை ஓரங்கட்டிவிட்டு அமெரிக்கா தலைமையிலான இணைத்தலைமைகளின் மாநாட்டை அமெரிக்கா கூட்டியதையும் நாம் மனம் கொள்ளல் வேண்டும். எனவே இந்த விடயங்களையும் கருத்திலே கொண்டு, அமெரிக்காவானது நாம் தனியரசுக்கான போராட்டத்தை நிராகரிக்கவில்லை. ஆனால், அதற்காகத் தமிழர்களது ஆயுதவன்முறையையே தாம் எதிர்பதாகப் பல்லவி பாடிவந்தது. தற்போது ஆயுதப்போர் உறைநிலைக்கு வந்து அரசியற்களம் திறக்கப்பட்டுள்ள சூழலில் தமிழரது தரப்பாகச் செயற்படுவோர் அனைத்துவிடயங்களையும் எமக்குச் சாதகமாக மாற்றும் விதமான அரசியல் நகர்வுகளை முன்னெடுத்தலே காத்திரமானதொரு வழியாக இருக்குமென்பதில் சந்தேகமில்லை. நாம் பிடித்துக் கரைசேர இருப்பது பாம்பாக இருப்பினும் பாம்பின் வாலைப் பிடிக்காது தலையைப் பிடித்துவிட வேண்டும்."கட்டையை தொடர்ந்து வைத்திருப்பதா வீசி எறிவதா என்பதைப் பிறகு பார்ப்போம்" என்பதே யதார்த்தமும் கூட.

இந்தியா செய்த நம்பிக்கைத் துரோகத்தின் முன் நாமொன்றும் பெரிதாகச் செய்துவிடப் போவதில்லை. தமிழீழக் கடற்படைப் படகுகள் நடமாடியபோது இந்தியாவினது தென் கோடி பாதுகாப்பாகவே இருந்தது. இனி இருக்காது என்பதை உணர்ந்து இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும். தமிழரது பாதுகாப்பான வாழ்வும் இந்தியாவினது தென் கோடியின் பாதுகாப்பும் பின்னிப் பிணைந்தவை என்பதைக் காலம் கடந்தேனும் புரிந்து கொண்டால் சரி. ஆனால் அதுவரை தமிழினம் தனது அழிவைப் பார்த்துக் கொண்டு இந்தியா இந்தியா என்றவாறு இருக்காதென்பதை உலகத் தமிழினம் உணரவைக்க வேண்டும்.

Edited by nochchi

சும்மா கூப்பிட்டு கதைச்சதுக்கே ஏதோ அமெரிக்கா எல்லாத்தையும் செய்யுமென்று நம்ப முடியாது, அப்பிடி அவர்களை செய்ய தூண்ட முடிந்தால் நல்லதுதானே?

40 000, 50 000 என்டு சனம் சாகுபோது எவந்தான் எங்களை திரும்பிப் பார்த்தான்?

சும்மா கூப்பிட்டு கதைச்சதுக்கே ஏதோ அமெரிக்கா எல்லாத்தையும் செய்யுமென்று நம்ப முடியாது, அப்பிடி அவர்களை செய்ய தூண்ட முடிந்தால் நல்லதுதானே?

40 000, 50 000 என்டு சனம் சாகுபோது எவந்தான் எங்களை திரும்பிப் பார்த்தான்?

அப்படிச் செத்தாவது விடுதலைப் புலிகள் அழியட்டும் என்று பார்த்துக் கொண்டு இருந்தவன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.