Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அத்தை மகளே ...போய் வரவா ?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அத்தை மகளே ...போய் வரவா ?

மேகங்களுள் நீந்தி வந்த விமானம் தரை தட்ட ஆயத்தமாக விமானப்பணிப்பெண் இருக்கை பட்டிகளை சரி செய்யும் படி சைகை மூலம் காட்டினாள் கனவி லிருந்து விடுபட்டவன் போன்று பாஸ்கரன் தன பட்டியை சரி செய்து கொண்டான். விமானம் மத்திய கிழக்கு நாடொன்றில் தரை இறங்கியது. எல்லாம் கனவு போலானது அவனுக்கு. தன தாய் நாட்டை விட்டு புறப்பட்டு கிட்ட தட்ட பதினொரு மணித்தியாலங்கள் ஆகி விட்டன. இங்கு ஒரு கம்பனியில் ஒப்பந்த அடிப்படையில் கட்டிட நிர்மாணம் ச ம்பந்தமாக வேலை செய்வதற்கு அனுமதி கிடைத்து வந்திருந்தான். முகவரின் , வரவுக்காக காத்திருந்தவனின் சிந்தனை தாயகம் நோக்கி ............

கொழும்பிலே ஒரு பிரபல கட்டிட நிர்மாண காரியாலயத்தில் வேலையில் இருந்த போது அன்றாட தேவைகளுக்கும் விலை வாசிகளுக்கும் ஈடு கொடுக்க முடியாமல் வெளி நாட்டு வேலை வாய்ப்புக்காக விண்ணபித்து இருந்தான் பாஸ்கரன். அவனுக்கு இவ்வளவு விரைவில் கிடைக்கும் என எண்ணவே இல்லை. மகிழ்ச்சி ஒரு புறம் அவளது பிரிவு ஒருபுறமாக் புறப்பட்டு விட்டான் . பாஸ்கரன் தந்தையை இழந்து ஒரு வருடமே ஆகியிருந்தது தன் இரு தங்கைகளையும் ஒரு நல்ல நிலைக்கு வைக்கும் பணியும் வீட்டுப் பொறுப்பும் அவனி டம் ஒப்படைத்து விட்டு , தந்தை காலமாகி விடார். அவருக்கு அதிக வயது இல்லய் என்றாலும் , வருத்தமும் துன்பமும் சொல்லிக்கொண்டா வரும் . தலைக்குள் விறைப்பு என்று படுத்தவர் பின் அது மூளைக் கட்டியாக்கி சத்திரசிகிச்சை வரை போய் சென்ற வருடம் , அவரை காலன் கவர்ந்து சென்று விடான். பாஸ்கரன் முடிந்த வரை வீடு பொறுப்பையும் தங்கைகளின் பாடசாலை தேவைகளையும் அவனே பார்த்து கொண்டான். இதுவரை தந்தையின் சேமலாப பணம் கை கொடுத்தது கடந்த மூன்று மாதங்களாக் தான் மிகவும் கஷ்ட படான். இதற்கிடையில் அவனது தந்தையின் ஒன்று விட்ட சகோதரி குடும்பம் நாட்டு பிரச்சினையால் கொழும்பு வந்து சேர்ந்தார்கள். அவர்களின் ஒரே மகள் சந்தியா , ஆசிரியையாக வவுனியாவுக்கு அண்மையில் ஒரு சிறு கிராமத்தில் படிப்பித்து கொண்டு இருந்தாள். அங்கு பிரச்சினையால் மாற்றல் வாங்கி கொண்டு கொழும்புக்கு வந்திருந்தார்கள். இடமும் புதிது ,அவர்களுக்கு தேவையான் உதவிகளை செய்து கொடுத்தான் பாஸ்கரன். அவர்கள் இவர்களையே நம்பி வந்திருந்தார்கள். இவனது நட்பு அண்மையில் தான் காதலாகியிருந்த்து .

முறை மாமா ஏதும் சொல்ல மாட்டார் என்ற தைரியத்தில் ஆழமாக் இறங்கி விடான் காதலில் . ஆனால் தன் தங்கைகளின் நல் வாழ்வையும் மறக்க வில்லை இரு வீட்டு பெற்றவர்களுக்கும் தெரியாது. அதற்கிடையில் இப்படி வெளி நாட்டு அழைப்பு வரும் என எண்ண வில்லை அவன். விடை பெறும் நாளும் வந்தது

.எல்லோருக்கும் பயணம் சொல்லி புறபட்டு விட்டான் . வவனியா மாமா தான் விமான நிலையம் வரை வந்தார். முதல் நாள் இரவு , சந்தியா கோவிலுக்கு சென்று வரும் வழியில் ,. சந்தியாவை கண்டு சத்தியம் வாங்கி இருந்தான். தான் வரும் வரை தனக்காக் காத்திருக்கும் படியும் ....வந்ததும் பெற்றவர்களிடம் சம்மதம் வாங்கி திருமணம் செய்வதென்று உறுதியுடன் கூறியிருந்தான். காலம் இவர்களுக்காக காத்திருக்குமா ? காதல் திருமணத்தில் முடியுமா? குடும்பத்தில் ஒரே பெண்ணான சந்தியாவை இவனுக்கு கொடுப்பார்களா ? ...........ஏக்கங்களுடன் காத்திருக்கிறான் பாஸ்கரன்.

காலம் தான் இவர்களை சேர்த்து வைக்க வேண்டும்.

நிச்சயம் பாஸ்கரன் சந்தியாவுக்காக வருவான். ஆனால் அவனுக்குகாக சந்தியா காத்திருப்பாளா? இல்லவே இல்லை. பாஸ்கரன் வரும்போது சந்தியா வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு வழ்க்கைப்பட்டு கனடா போயிருப்பாள். பாவம் பாஸ்கரன்.

  • கருத்துக்கள உறவுகள்

அத்தைமகள் அந்தரப்படாமல் இருந்தால் கண்டிப்பாக அவர்கள் இருவரும் ஒன்று சேர வாய்ப்புக்கள் உண்டு.நன்றி அக்கா உங்களின் சிறுகதைக்கு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ராசா ராசன் ...........யாயினி உங்கள் கருத்துக்கு நன்றிகள்.

அத்தை மகள் அந்தர படமாடாள்....(?). மாமா மாமி மனம் மாறாமல் இருந்தால் சரி ...........

பாராட்டுகள் அக்கா....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிலாமதி அக்கா

உங்கள் கதையின் இறுதிக் கேள்விக்கு விடைசொல்லமுடியாத காலமிது...

எடுக்கும் கருப்பொருளை இலாவகமாகச் சொல்லும் பக்குவம் உங்களிடம் இருக்கிறது.. வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் கதையை படிக்கும் போது பாஸ்கரனது குடும்ப பொறுப்புக்கள் சுமப்பது போன்ற உணர்வையும்

சந்தியாவினது நட்பு சுகமான உணர்வையும் தருகின்றது இதைத்தான் 'சுகமான சுமைகள்' என்பதோ

இப்படி எத்தனை அன்பான‌ அண்ணன்கள்

எத்த‌னை க‌ண்ணிய‌மான‌ காத‌ல‌ன்க‌ள்

இவ‌ர்க‌ள் எல்லாம் எம் க‌லாச்சார‌த்தின் அடையாள‌ங்க‌ள் அல்ல‌து குரியீடுக‌ள்

பாஸ்க‌ர‌ன் போன்ற‌ காத‌ல் வாய்த்தால் சுமைக‌ள் கூட‌

சுக‌மாக‌ இருக்கும்

கால‌ம் அவ‌ர்க‌ளை சேர்த்து வைக்க‌ட்டும்.சேர்த்து வைக்கும் என்ற‌ ந‌ம்பிக்கையில்......

  • கருத்துக்கள உறவுகள்

அத்தை மகள் அந்தர படமாடாள்....(?). மாமா மாமி மனம் மாறாமல் இருந்தால் சரி ...........

மாமா,மாமி மனம் மாறினாலும் மாறிவினம்,சிலவேளை அவுஸ்ரெலியா,கனடா,இங்கிலாந்து போன்ற நாடுகளின் சிட்டிசன் சிப் இருக்கிற மாப்பிள்ளை கிடைச்சால் :(

நிலா அக்கா உங்கள் கதையில் காதலியை விட்டு

காதலன் அரபு நாடு ஒன்றுக்கு போவதாக எழுதியிருக்கிறியள்..........

இதே காதலன் ஐரோப்பிய நாடு ஒண்டுக்கு வந்திருந்தால்

சில வேளை அவர்கள் காதல் நிறை வேறலாம்????

புத்தன் சொன்னது போல் தான் நானும் சொல்லுகிறேன்

புலத்தில விசாவுடன் மாப்பிள்ளை வந்தால்.................

பெற்றோர் மட்டுமல்ல காதலியும் ஓம் எண்டு சொல்லி

சந்தோசமாக திருமணமும் நடக்க வாய்ப்பிருக்கிறது........

காதல் எல்லாம் இன்றய நிலமையில் சந்தர்ப்பம் சுhழ்நிலைக்கு ஏற்றால் போல

மாறும் தன்மை கொண்டவையாகவே இருக்கின்றன!!!!!!!!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிலாமதி அக்கா நீங்க என் வீட்டுக்கு பக்கத்திலை இல்லைத்தானே? :(

நிலா அக்கா உங்கள் கதையில் காதலியை விட்டு

காதலன் அரபு நாடு ஒன்றுக்கு போவதாக எழுதியிருக்கிறியள்..........

இதே காதலன் ஐரோப்பிய நாடு ஒண்டுக்கு வந்திருந்தால்

சில வேளை அவர்கள் காதல் நிறை வேறலாம்????

புத்தன் சொன்னது போல் தான் நானும் சொல்லுகிறேன்

புலத்தில விசாவுடன் மாப்பிள்ளை வந்தால்.................

பெற்றோர் மட்டுமல்ல காதலியும் ஓம் எண்டு சொல்லி

சந்தோசமாக திருமணமும் நடக்க வாய்ப்பிருக்கிறது........

காதல் எல்லாம் இன்றய நிலமையில் சந்தர்ப்பம் சுhழ்நிலைக்கு ஏற்றால் போல

மாறும் தன்மை கொண்டவையாகவே இருக்கின்றன!!!!!!!!!!

அப்படி போடு அரிவாளை :D

'சுகமான சுமைகள்' என்பதோ

எத்த‌னை க‌ண்ணிய‌மான‌ காத‌ல‌ன்க‌ள்

இவ‌ர்க‌ள் எல்லாம் எம் க‌லாச்சார‌த்தின் அடையாள‌ங்க‌ள் அல்ல‌து குரியீடுக‌ள்

காத‌ல் வாய்த்தால் சுமைக‌ள் கூட‌

சுக‌மாக‌ இருக்கும்

என்னது சுகமான சுமையோ ஏன்யா??

எதுக்கும் நொந்து நூடில்ஸ் ஆன நம்ம நெடுக்கண்ணா போன்றவர்களைக் கேழுங்கள் சுகமான சுமையா என்று?? :D

(நெடுக்ஸ் கோபிக்காதீங்க)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வேணாம் வலிக்குது அழுதிடுவேன் ஜீவா:(

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தில், சிறிலங்காவில் இருக்கும் பெற்றோர்கள் மகளை உடனடியாகக் கல்யாணம் செய்து வெளினாடுகளுக்கு அனுப்பத்தான் பார்ப்பார்கள். நாட்டின் நிலமை மிகவும் கவலைக்குறியது. அதுவும் வவுனியாப் பக்கத்தில் இருந்து வரும் இளம் ஆண்களும், பெண்களும் கொழும்பில் கனகாலம் சுதந்திரமாக இருக்க கோத்தபாயாவின் கொலைகாரப்படையினர் விடமாட்டார்கள். நாட்டுப் பிரச்சனை காரணமாக , ஈழத்தில் பிறந்த பலரின் காதல்கள் , திருமணத்தில் முடியவில்லை.

வேணாம் வலிக்குது அழுதிடுவேன் ஜீவா:lol:

நிலாமதி அக்கா நீங்க என் வீட்டுக்கு பக்கத்திலை இல்லைத்தானே? :lol:

சொந்தக்கதை எதேனும் இருக்கிறது போலக்கிடக்குதே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.