Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வயிற்றில் பாம்பை சுமந்த பெண்

Featured Replies

வயிற்றில் பாம்பை சுமந்த பெண்

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 36 வயதுப் பெண்ணின் வயிற்றில் புகுந்த பெரிய பாம்பை டாக்டர்கள் அறுவைச் சிகிச்சை மூலம் எடுத்துள்ளனர். அந்தப் பாம்பு உயிருடன் இருந்ததால் டாக்டர்களும் மருத்துவமனை ஊழியர்களும் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

நியூயார்க்கைச் சேர்ந்த 36 வயதுப் பெண்மணியான பாட்ரிசியா ரோஜர் என்பவர் கடும் வயிற்று வலியால் துடித்தார். இதையடுத்து அவரை அவரது கணவர் டேவிட் மருத்துவமனைக்குக் கொண்டு வந்தார்.

அங்கு அவரை அனுமதித்த டாக்டர்கள் அவரது ஆடைகளை நீக்கி வயிற்றைப் பார்த்தனர். அப்போது வயிற்றுக்குள் ஏதோ நெளிவது போல இருந்ததைப் பார்த்து அவர்கள் குழம்பினர். மேலும்இ பாட்ரிசியா தொடர்ந்து கடுமையாக வாந்தியும் எடுத்தபடி இருந்தார். அவரால் உட்காரக் கூட முடியவில்லை.

இதைப் பார்த்து குழம்பிய டாக்டர்கள் எக்ஸ் ரே எடுக்க முடிவு செய்தனர். எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தபோது டாக்டர்களுக்குப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. காரணம் பாட்ரிசியாவின் வயிற்றில் ஒரு பாம்பு நெளிந்தபடி இருந்ததுதான்.

உடனடியாக அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்ய முடிவு செய்தனர் டாக்டர்கள். இதையடுத்து பாட்ரிசியாவை அறுவைச் சிகிச்சைக்கு உள்ளாக்கினர். அவரது வயிற்றுக்குள் சுதந்திரமாக சுற்றிக் கொண்டிருந்த பாம்பை வெளியே எடுத்தபோது அது உஷ் என்று சீறியபடி வெளியே வந்தது.

இதைப் பார்த்த ஒரு நர்ஸ் மயக்கமடைந்து கீழே விழுந்து விட்டார். டாக்டர்களும் கூட ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைந்து போய் விட்டனர்.

அந்தப் பாம்பு சிறிதாக இருந்தபோதே பாட்ரிசியாவின் குடலுக்குள் புகுந்துள்ளது. பாட்ரிசியா சாப்பிட்ட சாப்பாட்டிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து அதுவும் வளர்ந்து வந்துள்ளது.

எப்படி இந்த பாம்பு பாட்ரிசியாவின் வயிற்றுக்குள் புகுந்தது என்பதுதான் டாக்டர்களுக்குக் கொஞ்சம் கூட புரியவில்லை. ஆனால் சில காலத்திற்கு முன்பு பாட்ரிசியா டூர் சென்றிருந்தபோது அங்கு ஆற்று நீரை அள்ளிக் குடித்துள்ளார்.

அப்போது ஆற்று நீரில் இருந்த பாம்பு முட்டைகள் அவரது வயிற்றுக்குள் போயிருக்கலாம். அந்த பாம்புதான் தற்போது வளர்ந்து பெரிதாகியிருக்கலாம் என டாக்டர்கள் சந்தேகப்படுகின்றனர்.

பாட்ரிசியாவின் வயிற்றில் இருந்த பாம்பு 1.83 மீட்டர் நீளம் இருந்தது. வெள்ளை நிறத்தில் இருந்த பாம்பின் உடலில் கருப்புப் பட்டைகள் காணப்பட்டன. வாய் அகலமாக இருந்தது.

ஏதோ திகில் படத்தைப் பார்த்தது போல அந்த மருத்துவமனை டாக்டர்கள் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

சமீப காலத்தில் இப்படி ஒருவரது வயிற்றுக்குள் பாம்பு குடியிருந்த சம்பவம் இதுவே உலகில் முதல் முறை என்று கூறப்படுகிறது.

16ம் நூற்றாண்டில் பிரான்ஸைச் சேர்ந்த ஒரு செருப்புத் தைக்கும் தொழிலாளிக்கு இப்படித்தான் கடும் வயிற்று வலி ஏற்பட்டது. அதைப் பொறுக்க முடியாமல் அவர் வயிற்றைக் கிழித்துக் கொண்டு இறந்தார். பின்னர் அவரை சவப் பெட்டிக்குள் வைத்து புதைத்து விட்டனர். ஆனால் சில நாட்கள் கழித்து அந்த சவப் பெட்டிக்குள்ளிருந்து ஒரு பாம்பு வந்தது.

அவரது வயிற்றில் இருந்த பாம்புதான் அது என்பது பின்னர் தெரிய வந்தது.

இதேபோல 1642ம் ஆண்டு ஜெர்மனியைச் சேர்ந்த காத்தரீனா என்ற பெண் 14 ஆண்டுகளாக தொடர்ந்து பல்லிகளைக் கக்கி வந்தார் என்பது அந்தக் காலத்து பயங்கர சம்பவமாகும்.

இந்த நிலையில் பல நூறு ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரு பெண்ணின் வயிற்றிலிருந்து பாம்பு வளர்ந்து வெளியேறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முட்டையை தன் வயிற்றில் சுமந்து அதற்கு உயிர் கொடுத்த இந்தப் பெண்மணிக்கு அந்தப் பாம்பும் ஒரு குழந்தை தானே? பாம்புப் பாப்பா தன் தாயை எப்படிக் கூப்பிடும்?

(அந்தப் பாம்பு உயிரோடு இருக்கா?)

இதன் மூலம் என்ன தமிழ் மாறன்...இணைப்பைத் தாருங்கள்...

Edited by நிழலி

  • தொடங்கியவர்

பாம்பு உயிரோடு தான் இருக்கிறதாம்.................

பாம்பு அம்மா எண்டு மட்டும் கூப்பிடாது ஏனெனில் அது

ஆங்கில அம்மாவுக்கு தானே பிறந்தது.................

அதால மம்மி எண்டு கூப்பிடும் என உறுதியாக சொல்லலாம்!!!!!!

அண்மையில் பெண் குரங்கு ஒன்று தனது கணவர் (ஆண் குரங்கு)

தன் பிள்ளையை தினமும் வந்து கொலை செய்ய முயற்சிப்பதாக அந்த ஊர் மக்களின்

துணையுடன் வழக்கு தொடர்ந்ததாம்.....................

அதே போல் இந்த அம்மாவும் கோட்டு எறாமல் இருந்தால் அதுவே பெரிய புண்ணியமாக

இருக்கும்!!!!!!! (அதற்கு பயந்து தான் பாம்பை உயிரோடு வைத்திருக்கிறார்களாக்கும்!!!!!!)

  • கருத்துக்கள உறவுகள்

ஓ.. அசல் பாம்பா? :)

  • கருத்துக்கள உறவுகள்

ஓ.. அசல் பாம்பா? :)

சீ.... றப்பர் பாம்பு. :lol:

இது என்ன பெரியவிசயம்... எங்கட தலைவர் கருணா எண்ட பாம்ப்பை 20 வருசத்துக்கு மேலாய் தன் பொக்கற்றுக்கை வைச்சு இருந்தவர்...

  • தொடங்கியவர்

பாம்பு குட்டி அது தான் தண்ணி குடிக்கேக்கை அதை உள்ள தள்ளிப் போட்டாவாம்!!!!!!

இனி தண்ணி குடிக்கேக்கை கவனம்....................

  • கருத்துக்கள உறவுகள்

இது என்ன பெரியவிசயம்... எங்கட தலைவர் கருணா எண்ட பாம்ப்பை 20 வருசத்துக்கு மேலாய் தன் பொக்கற்றுக்கை வைச்சு இருந்தவர்...

இப்ப இப்ப தான் தலைவர் எத்தனை விஷ பாம்புகளுடன் வாழ்ந்திருக்கிறார் என்பது வெளி வந்து கொண்டிருக்கிறது.

  • தொடங்கியவர்

தலைவர் மட்டுமே பாம்புகளுடன் வாழ்ந்தார்.....................

இஞ்ச எங்கட யாழ் களத்திலேயும் பொல்லாத விசப்பாம்புகளோட

பயந்து பயந்து வாழ வேண்டிக்கிடக்குது!!!!!!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

பாம்பு முட்டையா? அல்லது பாம்போடு....?

படுத்தாவா எனத் தானே கேட்க வந்தனீங்கள் :D

  • கருத்துக்கள உறவுகள்

படுத்தாவா எனத் தானே கேட்க வந்தனீங்கள் :D

1829_snake15_1.gif

இது என்ன கேள்வி ?

பாம்பு எண்டால் படையும் நடுங்கும்.afraid-male-afraid-frightened-smiley-emoticon-000138-large.gif

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

படுத்தாவா எனத் தானே கேட்க வந்தனீங்கள் :D

சரி

அவர் அப்படித்தான் கேட்டிருந்தாலும்

அதற்கு உங்களின் பதில் என்ன?

  • கருத்துக்கள உறவுகள்

சரி

அவர் அப்படித்தான் கேட்டிருந்தாலும்

அதற்கு உங்களின் பதில் என்ன?

அவ படுத்தாவோ இல்லையோ என்று எனக்கு எப்படித் தெரியும்...

ஜோவ் யார் ஐயா இது.... நான் அவ பாம்பு முடையை நீரோடு குடித்தாவா அல்லது பாம்புக்குட்டியோடு குடித்துவிட்டாவோ என்று பொருள் பட தானே கேட்டேன்... அதுக்கு சீ.. தப்பு தப்பா எல்லாம் ..... அம்மா கண்டால் ஏன் இப்பிடி கெட்ட பையங்களோட எல்லாம் கூட்டு வைக்கிறாய் என்று திட்ட போகிறா...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கீழுள்ள இணைப்புக்களைப் படிக்கவும்..

இதே செய்தி கீழுள்ள இணைப்பில் 2007 ஆம் ஆண்டு பதியப்பட்டுள்ளது.

http://message.snopes.com/showthread.php?t=14935

இதனுடன் தொடர்புடைய மேலதிக தகவல்

http://www.snopes.com/pregnant/octopus.asp

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி பிறேம்

பாம்பு முட்டை இப்படி பெரிதாக இருக்கும் போது அது தண்ணீரில் சென்று அதை அவ பருகி செல்ல வாய்ப்பில்லையே எங்கேயோ குடையுதே?? :D:D:D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.