Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2வது திருமணம் செய்யச் சொல்லி பொறியாளரின் குழந்தையை கடத்திய மருத்துவ செவிலி

Featured Replies

தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த பொறியாளரின் குழந்தையை அதே நிறுவனத்தில் மருத்துவப் பிரிவில் வேலைப்பார்த்த செவிலிப்பெண் கடத்திச்சென்ற சம்பவம் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. சென்னை எம்ஜிஆர் நகர் கங்கை கொண்ட சோழன் தெருவைச் சேர்ந்தவர் குடியரசு (31). இவரது மனைவி வாசுகி (30). தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் இன்ஜினியர்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு ஒன்றரை வயதில் அம்சவள்ளி என்ற பெண் குழந்தை உள்ளது. இவர்கள் பணியாற்றும் அதே கம்ப்யூட்டர் நிறுவனத்தில் மருத்துவப் பிரிவில் நர்ஸாக பணியாற்றுபவர் தேன்மலர் (24). காஞ்சிபுரத்தைச் சேர்ந்தஇவர், குடியரசு வீட்டின் அருகிலேயே வசித்து வந்தார்.

குடியரசு, வாசுகி, தேன்மலர் ஆகியோர் ஒரே நிறுவனத்தில் வேலை செய்வதாலும், பக்கத்து வீட்டில் வசித்ததாலும் ஒருவருக்கொருவர் நெருங்கிப் பழகி வந்தனர். அதில் குடியரசுவுக்கும், தேன்மலருக்கும் காதல் ஏற்பட்டது. இவர்கள் கடந்த 9 மாதமாக காதலித்து வந்தனர்.

குடியரசும், வாசுகியும் ஒரே நேரத்தில் வேலைக்குச் செல்வதில்லை. ஒருவர் பகலில் வேலை செய்தால், மற்றொருவருக்கு இரவில் வேலை இருக்கும். இதனால் அவர்கள் தனியாக இருக்க நேரிடும். அப்போது குடியரசும், தேன்மலரும் தனிமையில் சந்தித்து வந்துள்ளனர்.

இந்தநிலையில் கடந்த 3 மாதத்துக்கு முன் தன்னை திருமணம் செய்யும்படி குடியரசுவிடம் தேன்மலர் வற்புறுத்தி வந்தார். இந்த விவகாரம் மனைவிக்குத் தெரிந்தால் பிரச்னையாகிவிடும் என்பதால் குடியரசு மறுத்து வந்தார். திருமணம் செய்யவில்லை என்றால், குடியரசுவின் குழந்தையை கடத்தி சென்றுவிடுவேன் என தேன்மலர் மிரட்டல் விடுத்துள்ளார். ஒரு முறை குழந்தையை கடத்தப் போவதாகக் கூறி, எடுத்துச் சென்றார். பின் மனம்மாறி, வீட்டில் குழந்தையை விட்டுச் சென்றார்.

இரண்டு நாட்களுக்கு முன் மீண்டும் தன்னை திருமணம் செய்யும்படி குடியரசுவிடம் சண்டை போட்டுள்ளார். நேற்று மாலை 5 மணிக்கு குடியரசுவின் வீட்டுக்கு தேன்மலர் சென்றுள்ளார். பின் 6.30 மணிக்கு அருகில் உள்ள பார்க்கிற்கு குழந்தையை அழைத்துச் சென்றார்.

அதன்பின் குழந்தையை தேன்மலர் கொண்டுவரவில்லை. இது குறித்து எம்ஜிஆர் நகர் போலீசில் குடியரசு புகார் செய்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையையும், தேன்மலரையும் தேடி வருகின்றனர். 2வது திருமணத்துக்காக ஒன்றரை வயது குழந்தையை பெண் கடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited by இளைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

பொறியியலாளர் இப்ப பொறிக்குள்! :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

பொறியியலாளர் இப்ப பொறிக்குள்! :lol::D

பொறியியலாளருக்கு கடைசிலை தேன்மலரும் , வாசுகியும் இல்லாமல் ....... :D

தனித் தவில்தான் போலை....... :D:D:o

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

பொறியியலாளருக்கு அனுபவம் காணாது..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

பொறியியலாளருக்கு அனுபவம் காணாது..! :lol:

கணக்கு பாடங்கள் கனக்க படித்தாலும்............. பெண்களை கணக்கு பண்ணுவது பற்றி படித்து கொள்ளவில்லை என்று சொல்கின்றீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்

கணக்கு பாடங்கள் கனக்க படித்தாலும்............. பெண்களை கணக்கு பண்ணுவது பற்றி படித்து கொள்ளவில்லை என்று சொல்கின்றீர்களா?

பின்ன..? சிறீலங்கன் நாடுகளை மோத விடுற மாதிரி, தேன்மலரையும், வாசுகியையும் மோதவிட்டு காரியத்தைக் கொண்டுபோவாரா? அதை விட்டிட்டு இப்பிடி ஒளிச்சு ஒளிச்சு கடைசியில மாட்டுப்பட்டிட்டார். ஐயோ பாவம்.. :unsure:

தூண்டில் பாகம் 2ஆக இருக்குமோ? :unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குடியரசும், வாசுகியும் ஒரே நேரத்தில் வேலைக்குச் செல்வதில்லை. ஒருவர் பகலில் வேலை செய்தால், மற்றொருவருக்கு இரவில் வேலை இருக்கும். இதனால் அவர்கள் தனியாக இருக்க நேரிடும். அப்போது குடியரசும், தேன்மலரும் தனிமையில் சந்தித்து வந்துள்ளனர்.

அன்பார்ந்த புலம்பெயர் உறவுகளே சிந்திக்கவும்? :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

அன்பார்ந்த புலம்பெயர் உறவுகளே சிந்திக்கவும்? :unsure:

காலம் கடந்து இனி சிந்திச்சு என்ன ஆகப்போகின்றது?

ஒரு பிள்ளை வெள்ளையா இருக்கு............... மற்றது கறுப்பா இருக்கு.................... மற்றதுக்கு கண் நீலமா இருக்கு!

எல்லாம் இயற்கையின் கோளாறு என்றெண்ணி வாழ்கை சுமூகமா போய்கொண்டிருக்கு. இதில நீங்கள் வேறே சிந்தியுங்கோ........... சிரியுங்கோ எண்டு

பொறியியலாளர் ஒழுங்கா தமிழ் சீரியல் பார்ப்பதில்லை போல இருக்கு..... பாத்திருந்தால் இத இலகுவாக சமாளித்திருப்பார்...

  • கருத்துக்கள உறவுகள்

கணக்கு பாடங்கள் கனக்க படித்தாலும்............. பெண்களை கணக்கு பண்ணுவது பற்றி படித்து கொள்ளவில்லை என்று சொல்கின்றீர்களா?

பிள்ளையை மீட்பதற்காக தேன்மலரை திருமணம் செய்யும்படி வாசுகி சொல்லக்கூடும் என்று பொறியாளாலர் கணக்கு போட்டிருப்பார்

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு ஏதோ இந்திய தமிழ் நாடகம் பார்த்தால் போல் இருக்குது

  • கருத்துக்கள உறவுகள்

அன்பார்ந்த புலம்பெயர் உறவுகளே சிந்திக்கவும்? :unsure:

இப்பமட்டும் என்ன சிந்திக்காமலா இருக்கினம்.ஒரே காசு

பற்றிய சிந்தனைதான். :unsure:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.