Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜோசப் பரராஜ சிங்கம் கொல்லப்பட்டு 4 வருடங்கள்

Featured Replies

இன்றுடன் ஜோசப் பரராஜ சிங்கம் சிங்கள் ஒற்றர்களால், ஒட்டுக்குழுக்களின் துணையுடன் கொல்லப்பட்டு சரியாக 4 வருடங்கள் பூர்த்தி. எனக்கு உறவு முறையில் மாமனாகவும், தமிழர்களுக்கு பல வழிகளில் பல படுகொலை சம்பவங்களை வெளிக் கொண்டு வந்த ஒரு தைரியமுள்ள தமிழ் தேசிய உணர்வாளனாகவும், ஈற்றில் மட்டக்களப்பு மக்களால் பிரதேச வாத தேர்தலில் நிராகரிக்கப்பட்டு பின் தேசியப் பட்டியல் மூலம் எம்.பி யாக வந்தவராகவும் ஆன மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்துக்கு என் கண்ணீர் நினைவு துளிகள்

கிறிஸ்மஸ் தினம் அன்று, தேவாலயத்தில் வாயில் அரைவாசி புனித அப்பத்தை தின்றபடி நிற்கையில் சுட்டுக் கொல்லப்பட்ட இவரின் கொலையை இலங்கையில் இருந்த எந்த பங்குத் தந்தையும் கண்டிக்க வில்லை எனும் மிக மோசமான வரலாற்று உண்மை ஒவ்வொரு நத்தார் தினத்திலும் எனக்கு வந்து போகும்.

அவரின் இறுதிக் கிரியையின் போதும் அந்த இறுதி அப்பம் வாயினுள்ளே இருந்தது...

தேவனின் திருச்சபையில் அந்த வாயினுள் இருந்த மிச்ச அப்பம் காணிக்கையாகுக...

ஆமின்

Edited by நிழலி

தமிழருக்காக இறுதிவரை தைரியமாகக் குரல்கொடுத்த மாமனிதர்.

கண்ணீர் அஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

இவரின் கொலையை இலங்கையில் இருந்த எந்த பங்குத் தந்தையும் கண்டிக்க வில்லை எனும் மிக மோசமான வரலாற்று உண்மை.

ஆமின்

மெளனமாய் அந்த மாமனிதரின் படுகொலையை ஒரு கண்டனம் கூடச் செய்யாத பங்குத்தந்தைகள் இன்றும் எத்தனையோ விடயங்களில் மெளனமாக உள்ளார்கள்.

தன்னினத்துக்காகக் குரல் கொடுத்துப் பாலன் பிறப்பு நாளில் தன்னை விலைதந்த அந்த மாமனிதருக்கு அஞ்சலிகள்.

அஞ்சலியைத் தவிர எங்களிடம் இப்போது ஒன்றுமில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாமனிதர்கள் மக்களால் என்றும் மறக்கப்படுவதுமில்லை!

துரோகிகள் மக்களால் என்றும் மதிக்கப்படுவதுமில்லை!

மாமனிதருக்கு கண்ணீர் அஞ்சலிகள்!

  • கருத்துக்கள உறவுகள்

மெளனமாய் அந்த மாமனிதரின் படுகொலையை ஒரு கண்டனம் கூடச் செய்யாத பங்குத்தந்தைகள் இன்றும் எத்தனையோ விடயங்களில் மெளனமாக உள்ளார்கள்.

அன்றே உலகமுடிவு அவர்களுக்கு தெரிந்ததுதான்

ஆனால் நாம்தான் இந்த கோரத்தை செய்தவர்களுடன்

இன்றும் அவர்களது காலடிகளை வருடியபடி...

உலக முடிவு தெரிந்துதான் வேறு வழியில்லாது அவர்கள் எமக்காய் தமது உயிர்போனாலும்

தமிழனுக்கு ஏதாவது கிடைக்கட்டும் என்று உயிரை கொடுத்தனர்

ஆனால் நாம்தான் எமக்காய் தமது உயிரையும் கொடுத்தோருக்கு கெடுதல் செய்தபடி....

அஞ்சலி செலுத்துவதற்குமுன் எமை நாம் நெருப்பில் காய்ச்சவேண்டும்

இல்லாவிடில் இவையும் வெறும் வார்த்தை யாலங்கள்தான்....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

g-j.jpg

கிறிஸ்மஸ் தினம் அன்று, தேவாலயத்தில் வாயில் அரைவாசி புனித அப்பத்தை தின்றபடி நிற்கையில் சுட்டுக் கொல்லப்பட்ட இவரின் கொலையை இலங்கையில் இருந்த எந்த பங்குத் தந்தையும் கண்டிக்க வில்லை எனும் மிக மோசமான வரலாற்று உண்மை ஒவ்வொரு நத்தார் தினத்திலும் எனக்கு வந்து போகும்.

அவரின் இறுதிக் கிரியையின் போதும் அந்த இறுதி அப்பம் வாயினுள்ளே இருந்தது...

தேவனின் திருச்சபையில் அந்த வாயினுள் இருந்த மிச்ச அப்பம் காணிக்கையாகுக...

ஆமின்

  • கருத்துக்கள உறவுகள்

ஜோசப் பரராஜ சிங்கம் ஐயாவுக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள் :)

  • கருத்துக்கள உறவுகள்

ஜோசப் பரராஜசிங்கம் அவர்களுக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள். இக்குருர செயலை கண்டிக்காத பங்கு தந்தை வேறென்னவெல்லாமோ கதைக்கிறார்.

http://globaltamilnews.net/tamil_news1.php?nid=18870&cat=1

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

.

imgA.jpg

மாமனிதர் ஜோசப் பரராஜ சிங்கம் ஐயாவுக்கு கண்ணீர் அஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாமனிதர் ஜோசப் பரராஜ சிங்கம் ஐயாவுக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்றுடன் ஜோசப் பரராஜ சிங்கம் சிங்கள் ஒற்றர்களால், ஒட்டுக்குழுக்களின் துணையுடன் கொல்லப்பட்டு சரியாக 4 வருடங்கள் பூர்த்தி. எனக்கு உறவு முறையில் மாமனாகவும், தமிழர்களுக்கு பல வழிகளில் பல படுகொலை சம்பவங்களை வெளிக் கொண்டு வந்த ஒரு தைரியமுள்ள தமிழ் தேசிய உணர்வாளனாகவும், ஈற்றில் மட்டக்களப்பு மக்களால் பிரதேச வாத தேர்தலில் நிராகரிக்கப்பட்டு பின் தேசியப் பட்டியல் மூலம் எம்.பி யாக வந்தவராகவும் ஆன மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்துக்கு என் கண்ணீர் நினைவு துளிகள்

நிழலி மட்டக்களப்பு மக்கள் பிரதேசவாதம் காரணமாக அவரை நிராகரிக்கவில்லை. கருணா என்ற துரோகியின் அடாவடித்தனங்களினாலும் கள்ள வாக்குகளாலுமே அவர் தோற்க வேண்டி வந்தது. மேலும் கருணா எழுப்பிய பிரதேசவாதம் தென் தமிழீழ மக்களிடையே சிறு ஈர்ப்பை ஏற்படுத்தியது உண்மையே. அதற்கு காரணம் பிரதேசவாதத்தினால் அவர்கள் பாதிப்படைந்திருந்தமையே ஆகும். ஆனால் கருணாவின் துரோகத்தினால் அது மூடி மறைக்கப்பட்டு விட்டது என்பதே உண்மை.

ஆனால் தமிழீழ தேசிய உணர்வில் யாழ் மக்களை விடவும் பற்று கொண்டவர்கள் தென் தமிழீழ மக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஜோசப் பரராஜ சிங்கம் ஐயாவுக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.