Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அழியாத காதல் ........

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மனித வாழ்வில் அழியாத சில நிகழ்வுகள் பொன் எழுதுக்களால் பொறிக்கப்படும். அந்த வகையில் சோபிதாவின் வாழ்கையில் ஏற்பட்ட திருப்பம் மிகவும் முக்கியமான் ஒன்று.

.........சோபிதா அழகான சிறுமி . காலம் செய்த கோலம் ஐந்து வயதில் தந்தையை இழந்தவள் . மற்றும் நான்கு பெண் குழந்தைகளுடன் ஐந்தாவதாக் வளர்ந்த கடைக்குட்டி .தாயின் சிறந்த செல்லம். தாய் இளமையில் மிகவும் கஷ்டபட்டு இவர்களை வளர்த்தாள். இருந்தும் அந்த இன்பம் நீடிக்க வில்லை. சில வருடங்களில் தாய் குணமாக்க முடியாத நோயில் இறந்து விட்டாள் . கால மாற்றத்தில் எல்லா பெண் சகோதரிகளும் திருமணம் முடித்து தம் கணவருடன் சென்று விடவே இவள் பனிரெண்டு வயதில் ...விடுதிக்கு அனுப்ப பட்டாள் . சில காலம் தாபரிப்பு பணம் கட்டினார்கள் பின்பு அவர்களுக்கும் கஷ்டம் பள்ளி விடுமுறையின் போது மட்டும் போய் ஒவ்வொரு சகோதரிகள் வீடிலும் மாறி மாறி தங்கி வந்தாள். காலப்போக்கில் அவர்கள் வந்து பார்ப்பதும் குறைவு...... பின்பு பணம் கட்டுவதும் நின்று விட்டது ....விடுதியில் உறவினர் வந்து பொறுப்பு எடுக்க வராவிடால் தனியே அனுப்ப மாடார்கள். விடுதி மேற்பார்வையாளர் சில கடிதங்கள் போட்டு பார்த்தார் . அவை மீண்டும் திரும்பி வந்தன . அது ஒரு கிறிஸ்தவ துறவியர் நடத்தும் விடுதி .....முறையாக் பணம் கட்டவில்லை .. யாரும் பார்க்க வாருவதுமில்லை. அவர்களுக்கும் என்ன கஷ்டமோ இவள் ...அதே மடத்தில் இருந்த .( orphanage ) கதியற்றவர் பகுதியில் சேர்க்க பட்டாள். பள்ளியில் தொடர்ந்தும் படித்து கொண்டிருந்தாள் .கால ஓட்டத்தில் பன்னிரண்டு வயதில் சேர்க்கப் பட்டவள் . உயர் வகுப்பில் சித்தியடைந்த்தும்..அந்த ஊரின் மத்தியில் உள்ள ஒரு , தொழிற்சாலையில் ,மடத்துக் கன்னியர்களின் அனுமதியுடன் தொழிற்சங்க நிர்வாகி உதவியுடன் , வேலையில் சேர்ந்து கொண்டாள்.

விடுதியின் நிபந்தனைக்கு ஏற்ப பத்தொன்பது வயது வந்தததால் ,விடுதியில் தங்க முடியாத காரணத்தால் , தொழிற்சங்க த்தில் இவளுடன் வேலை பார்க்கும் நண்பியின் உதவியுடன் ,வாழ்வதற்கு ஒரு இல்லிடமும் தெரிந்து கொண்டு அங்கு வசித்து வரும் நாளில் , தினமும் சந்திக்கும் ஜான்சன் இவளை விரும்புவதாகக் சொன்னான் .தனது நிலையை சொல்லி மறுத்த போதும் காலப்போக்கில் மனம் மாறி ஜான்சனை மிகவும் நேசித்தாள். இவளுடைய உறவுகளில் ஒரு சிலர் ஈழத்தின் சண்டைநடைபெற்ற பகுதியில் வசித்தனர் . மற்றவர்கள் இவளை பொறுப்பு எடுத்துக் கொள்ள விரும்பாது ...இவளுக்கு விலாசம் தெரியாது மறைந்து வாழ்ந்தனர். சண்டை மிக உக்கிரமாக் ஆரம்பிக்கவே இவள் , தலை நகருக்கு மாற்றலாகி போனாள். பின்பு சில காலம் ஜான் சனின் தொடர்பு இருந்தது .அவர்களது நட்புறவில் பேசும் போது அவன் சொல்வான் தனக்கு சில பொறுப்புகள் இருபதாகவும் ...ஒரு வேளை தனக்கு உயிராபத்து நெருங்கும் போது ..தான் வேறிடம் சென்று விடுவதாகவும் எந்த ஜென்மத்திலும் நீ தான் என் மனைவி என்றும் சொல்லியிருந்தான் பணியில் அவள் மிகவும் ஈடுபட்டிருந்ததால் காலமும் மிக விரைவாக வே ஓடிக்கொண்டிருந்தது . யாழ்ப்பாணத்தில் இருந்து தொடர் புகள் கிடைப்பது மிகவும் சிரமமாக இருந்தது . கடைசியாக் ஒரு கட்டத்தில் ..மிக அவசரமான் மடல் ஒன்று வந்தது. தான் நாட்டை விட்டு புறப்படுவதாகவும் நேரில் கண்டு சொல்ல முடியாதென்றும் எழுதியிருந்தான் . நண்பன் மூலம் அனுப்ப பட்ட அந்த க்கடிதம் இவன் புறப்பட்டு சில வாரங்களின் பின் தான் இவள் கைக்கு கிடைத்தது........அவளுக்கும் சோதனை மேற் சோதனைகள். ..

அவள் வேலை பார்த்த தொழில் நிறுவனம் மிகவும் நட்டத்தில் சென்றதால் மூடப்படும் அபாயம் ஏற்பட்டது. இதனால் அவள் தாதியர் பயிற்சி கல்லூரிக்கு விண்ணப்பித்து அங்கு அனுமதியும் கிடைத்து விட்டது . பயிற்சி பெற்று ....பணிக்கு தெரிவு செய்ய பட்டாள். இருந்தாலும் என்றாவது அவன் தொடர்பு கொள்வான் என்ற நம்பிக்கையில் வருடங்கள் பத்து உருண்டோடி விட்டது . அவனை தவிர ...யாரையும் திருமணம் செய்யும்எண்ணமே இல்லை பலர் புத்தி சொல்லிபார்த்தார்கள்.

அவளது முப்பத்தைந்தாவது பிறந்த நாள் முடிந்த மறு நாள். ஐரோப்பாவில் இருக்கும் தூரத்து உறவு மூலம் ...இவளது ஜான்சன் ....கனடா நாட்டில் இருப்பதாக அறிந்து கொண்டாள். தனது முயற்சி எல்லாம் திரட்டி தேடினாள் ....இறுதியில் வெற்றியும் பெற்றாள் . ஜான்சன் இன்னும் அவளுக்காகவே வாழ்ந்து கொண்டிருந்தான்... அவளுக்கு வார்த்தையில் சொல்ல முடியாத மகிழ்ச்சி ..........ஈழத்தின் ஒரு போர் நிறுத்தக்காலத்தில், விடுமுறையில் ஜான்சன் சென்று திருமணம் செய்து வந்தான் ......குடிவரவு சட்ட திட்டங்கள் பூர்த்தி செய்யப்பட்டு இங்கு வந்து கடந்த ஒரு சில வருடங்களாக இந்த மண்ணில் வாழ்ந்து கொண்டிருகிறாள்.

அவளை பல வருடங்களுக்கு பின் அடையாளம் கண்டு பேசிய எனக்கு இனம் புரியாத அதிர்ச்சி கலந்த மகிழ்ச்சி . நிறைய பேச நினைத்தாலும் நேர ம இடம் கொடுக்க வில்லை. தொலைபேசி எண்களைபரி மாறிக் கொண்டு வந்து விட்டேன் .

நிஜக்கதை கேட்ட உங்களுக்கு....என் நன்றிகள். அழியாத காதல் இரு உள்ளங்களை இணைத்து வைத்தது என்ற மகிழ்வில் நானும், உங்களிடம் இருந்து விடை பெறுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் இனைந்ததில் மகிழ்ச்சி...ஆனால் ஏன் அவர் கனடா போய் பத்து வருடமாக சோபிதாவை தொடர்பு கொள்ளாமல் இருந்தார்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரதி.......அவரது வெளி நாட்டுபயணம் மிகப்பயங் கரம் ....சில சிறைவாசம் போன்ற அனுபவம்.

வாழ்க்கை வெறுத்த நிலை

உண்மையான காதல் என்றுமே தோற்க்காது என்று சொல்லுவார்கள் ... அது உண்மைதான் போல இவர்கள் இருவர் விடயத்திலும் ... சந்தோசமான செய்தி இவர்கள் இணைந்தது... ரதி கேட்டதை நானும் கேட்கிறேன்... இவர் கன்டா வந்து இவ்வளவு வருடம் ஆகியும் ஏன் அவாவை தொடர்புகொள்ளவில்லை.... அவா தேடி வந்து பேசும்வரவை ஏன் காத்திருந்தார்? அவாவின் நிலமை தெரிந்தும் பேசாமல் இருந்த மாயம் என்ன ? தவறாக கேட்டு இருந்தால் மன்னிக்கவும் நிலாமதி அக்கா...

நல்ல கதை, விரைவில் இருவரும் ஒன்றுசேர்ந்து மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகள்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுஜி ...அவரைபற்றி இன்னும் மேலும் ......விபரம் கேட்கவில்லை.

உண்மையான காதல் அழவதில்லை என்பதற்கு இவர்களின் வாழ்க்கை ஒரு நல்ல எடுத்துக்காட்டு. இதை எம்முடன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள் நிலாமதி அக்கா. அவர்கள் இருவரும் இல்லறத்தில் இணைந்து இனிதே வாழ எம் வாழ்த்துக்கள்...!

  • கருத்துக்கள உறவுகள்

நிஜக்கதை தந்த நிலாமதிக்கு வாழ்த்துக்கள்.....

காதலில் இவ்வளவு விசயம் இருக்கோ?......

  • கருத்துக்கள உறவுகள்

இணைந்தது சந்தோசம்தான்

என்னைப்பொறுத்தவரை....

அந்த காத்திருப்பை வெறுக்கின்றேன்

அடுத்த தலைமுறை எம்மிடமிருந்து இவற்றை பின்பற்றாதிருக்கட்டும்

நன்றி

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

அழகான காதல் கதை. காத்திருப்பதிலும் ஒரு சுகம்.

வாழ்த்துகள் .

இணைந்தது சந்தோசம்தான்

ஆனால் இந்த 35வயதுவரை இழந்தவை.....

அவருக்கு எத்தனை வயது.....?

இந்த வயதுக்குமேல் வாழ்க்கையை ஆரம்பித்து......?

என்னைப்பொறுத்தவரை....

அந்த காத்திருப்பை வெறுக்கின்றேன்

அடுத்த தலைமுறை எம்மிடமிருந்து இவற்றை பின்பற்றாதிருக்கட்டும்

நன்றி

இந்த கருத்துடன் நானும் உடன் படுகிறேன்,மனதிற்கு துரோகம் செய்யாவிட்டாலும் உடம்புக்கு ரொம்ப துரோகம் பண்ணிப்போட்டினம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என் பதிவுக்கு வருகை தந்த ரதி..சுஜி......மச்சான்.......கறுப்பி........ஜில் .....விசு...

.ஈழமகள் ........புத்தன் யாவருக்கும் நன்றி.....

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்

சோபிதா - ஜான்சன் ரெண்டு பேருக்கும் என்ட வாழ்த்துக்கள். நல்ல காலம் ... ... .... .....

  • கருத்துக்கள உறவுகள்

சோபிதா - ஜான்சன் ரெண்டு பேருக்கும் என்ட வாழ்த்துக்கள். நல்ல காலம் ... ... .... .....

  • கருத்துக்கள உறவுகள்

தங்களது பார்வையை மதிக்கின்றேன் காவாலி

ஆனால் என்னுடைய பார்வை அதைக்கடந்து இப்படி வஞ்சிக்கப்பட்டு.....

ஏமாற்றப்பட்டு.....

இன்றும் ஏங்கியபடி ....

காலத்தையும் குடும்பத்தையும் ஏன் தன்னையே ஏமாற்றியபடி...

வயது கடந்த பெண்கள் எமது சமுதாயத்தில் லட்சக்கணக்கில்......

Edited by விசுகு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.