Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு கிழக்கு தேர்தல் வெற்றிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உரிமை கோர முடியாது – ஆனந்த சங்கரி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு கிழக்கில் ஜெனரல் சரத் பொன்சேகா ஈட்டிய வெற்றிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உரிமை கோர முடியாது என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

குறித்த பிரதேசத்தில் இயங்கிவரும் துணை இராணுவக் குழுக்களின் ஆயுத செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நோக்கில் பிரதேச மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக வாக்களித்துள்ளனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வடக்கு கிழக்கில் இயங்கி வரும் துணை இராணுவ குழுக்களின் செயற்பாடுகளை அரசாங்கம் களைந்திருந்தால், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூடுதல் வாக்குகளைப் பெற்றிருக்கக் கூடிய சாத்தியம் காணப்பட்டதென அவர் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இல்லாதொழிக்கப்பட்டதனைப் போன்றே குறித்த ஆயுதக் குழுக்களையும் இல்லாதொழிக்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தனியார் தொலைக்காட்சி சேவை ஒன்றில் நடைபெற்ற அரசியல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த வருட முதல் பகுதியில் யுத்தம் நடைபெற்ற சந்தர்ப்பத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு தொடர்பில் மக்கள் இன்னமும் அதிருப்தியுடன் காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளினால் கட்டுப்படுத்தப்பட்ட அப்பாவி பொதுமக்களின் அவல நிலைமைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காத்திரமான தீர்வுகளை வழங்கத் தவறியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் சுதந்திரமானதும் நியாயமானதுமான சூழ்நிலையில் நடைபெற்ற தேர்தலில் வெற்றியீட்டவில்லை என தெரிவித்துள்ளனர்.

globaltamilnews

கிறுக்குப்பயலா இருக்கிறான் பாவிமகன் அது சரி சங்கு கனடாவில எங்கையப்பா இருக்கிறார் ஓய் கனடா வாழ் கள மெம்பர்களா உந்த லூசு மனுசனை கண்டா ஓருகா காலில விழுந்து சொல்லங்கப்பா அடிக்கடி பகிடிவிட வேணாம் எண்டு :huh: :huh: :huh:

  • கருத்துக்கள உறவுகள்

நேற்றுத்தானே யாரோ கள நண்பர் தேடினார் இவரை...

இவரும் யாழ். கள உறவோ....?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கருணாவும் பிள்ளையானும் டக்கிளசும் இதைப் படித்திருப்பாங்கள்தானே.

எல்லாரையும் முடிச்சுப்போட்டு,முழுத்தமிழ்மக்களையும் முடிச்சுப்போட்டு (சங்)கரி கிள்நொச்சியிலைபோய் உடும்புக்கறி

சாப்பிடப்போறார் போலகிடக்கு..ம்ம்ம்

  • கருத்துக்கள உறவுகள்

அவங்களோட கலந்துபேசி

அறிக்கையையும் காட்டிய பின்புதான் அறிக்கை விட்டிருப்பார்....?

  • கருத்துக்கள உறவுகள்

ஏனய்யா அந்த பெரியவரை எல்லோரும் சேர்ந்து திட்டுறீங்க? பாவம் தானே.

இறுதியாக நடந்து முடிந்த போரில் 20,000 - 50, 000 பொதுமக்கள் துடிக்கத்துடிக்க கொல்லப்பட்டார்கள்

கொல்லப்பட்டவர்கள் அனைவரும் தமிழர்கள்...

அப்பாவித் தமிழர்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

நேற்றுத்தானே யாரோ கள நண்பர் தேடினார் இவரை...

இவரும் யாழ். கள உறவோ....?

யாரை சின்னப்புவையா?? :huh: :huh:

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களோடு போட்டுத்தள்ளுற அரசியல்தான் செய்ய முடியும். இந்த மனிதனுக்கு புலிகள் ஏதோ வேற்றுக்கிரகவாசிகளாகத் தெரிகின்றனர் போலும். ஐயா உங்கள் கண்களை அகலத்திறந்து பாருங்கள்.. புலிகளின் குருதியில் தமிழ் இரத்தம் இருப்பதை.. தமிழ் மக்களின் புதல்வர்கள் புதல்விகள் என்ற நிலைகள் இருப்பதை உணர்வீர்கள்.

ஒரு சாதாரண உண்மையை விளங்கிக் கொள்ள நாதியற்ற இந்த ---- எல்லாம்.. எமக்கு அரசியல் போதிப்பதுதான் வேடிக்கை. அதிலும் ஜனநாயக அரசியல்.

வடக்குக்கிழக்கு மக்களால் வாக்குகளாலேயே விரட்டி அடிக்கப்பட்ட பின்னும் ஏன் இவர்களுக்கு ஒரு ஜனநாயகம். எலும்பு பொறிக்கு வாழத்தானே..!

தயவுசெய்து மக்களால் நிராகரிக்கப்பட்ட இந்த புத்திபேதலித்த யதார்த்தை உணராத மனிதர்களின் அறிக்கைகளை ஜனநாயகம் மாற்றுக்கருத்து என்பதன் பெயரால் இங்கு வெளியிடுவதை தவிர்க்க முயலுங்கள்.

இதுகாள் வரை அமைதியாக இருந்துவிட்டு.. இப்போ மீண்டும் கொக்கரிக்கிறா-- ஏன்..??!

இயற்கையும் இந்த நாதாரிகளை இன்னும் பூவுலகில் விட்டு வைத்திருக்கிறது. எமது இனத்தின் அழிவிற்காகவா..???!

Edited by நிழலி
தணிக்கை செய்யப்பட்டுள்ளது

அட உந்தமனுசன் இப்பவும் உயிருடன் இருக்குதோ கனகாலமாக சத்ததை காணவில்லை!!!!

வடக்கு கிழக்கில் ஜெனரல் சரத் பொன்சேகா ஈட்டிய வெற்றிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உரிமை கோர முடியாது என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

குறித்த பிரதேசத்தில் இயங்கிவரும் துணை இராணுவக் குழுக்களின் ஆயுத செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நோக்கில் பிரதேச மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக வாக்களித்துள்ளனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வடக்கு கிழக்கில் இயங்கி வரும் துணை இராணுவ குழுக்களின் செயற்பாடுகளை அரசாங்கம் களைந்திருந்தால், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூடுதல் வாக்குகளைப் பெற்றிருக்கக் கூடிய சாத்தியம் காணப்பட்டதென அவர் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இல்லாதொழிக்கப்பட்டதனைப் போன்றே குறித்த ஆயுதக் குழுக்களையும் இல்லாதொழிக்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தனியார் தொலைக்காட்சி சேவை ஒன்றில் நடைபெற்ற அரசியல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த வருட முதல் பகுதியில் யுத்தம் நடைபெற்ற சந்தர்ப்பத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு தொடர்பில் மக்கள் இன்னமும் அதிருப்தியுடன் காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளினால் கட்டுப்படுத்தப்பட்ட அப்பாவி பொதுமக்களின் அவல நிலைமைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காத்திரமான தீர்வுகளை வழங்கத் தவறியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் சுதந்திரமானதும் நியாயமானதுமான சூழ்நிலையில் நடைபெற்ற தேர்தலில் வெற்றியீட்டவில்லை என தெரிவித்துள்ளனர்.

globaltamilnews

ஒரு சில நல்ல விசயங்களையும் சொல்லி இருக்கிறான் பாவி....

Edited by shanu thinesh

  • கருத்துக்கள உறவுகள்

அட்ரா சக்கை!தமிழர்களுக்கு தலைமை தாங்க புதிய தலைவன் ரெடி.புலி இளைச்சா எலி அதன் முதுகில் ஏரோபிளேன் ஓடுமாம்.

தமிழா உன் நிலமை இப்படியாகி விட்டதே? கண்ட கண்ட நாதாரிகளெல்லாம் உனக்கு தலனை; என்று சொல்கிறார்களே?

  • கருத்துக்கள உறவுகள்

நல்லகாலம் தன்னால் தான் வெற்றி பெற்றார்கள் என்று கூறவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு கிழக்கில் இயங்கி வரும் துணை இராணுவ குழுக்களின் செயற்பாடுகளை அரசாங்கம் களைந்திருந்தால், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூடுதல் வாக்குகளைப் பெற்றிருக்கக் கூடிய சாத்தியம் காணப்பட்டதென அவர் தெரிவித்துள்ளார்.

யாழ் மாநகர சபை தேர்தலில் 180 வாக்கு எடுத்த அரசியல் அநாதை ஊருக்கு உபதேசம் பண்ணுது. :huh::huh:

  • கருத்துக்கள உறவுகள்

நம்ம ஜம்முபேபி இவருக்காக ஒரு அறிக்கை விடுவார் என்று எதிர்பார்க்கிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.