Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழர் தாயகத்தின் 31 ஆசனங்களுக்காக 1867 வேட்பாளர்கள் போட்டி: சிறிலங்கா நாடாளுமன்றத்தில் தமிழர் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படும்?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழர் தாயகத்தின் 31 ஆசனங்களுக்காக 1867 வேட்பாளர்கள் போட்டி: சிறிலங்கா நாடாளுமன்றத்தில் தமிழர் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படும்?

[ வெள்ளிக்கிழமை, 26 பெப்ரவரி 2010, 17:47 GMT ] [ கார்வண்ணன் ]

எதிர்வரும் ஏப்ரல் 8ம் திகதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தல், சிறிலங்காவின் தேர்தல் வரலாற்றில் அதிகளவு கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் போட்டியிடும் தேர்தலாக அமைந்துள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் 19 ஆசனங்களுக்காக 836 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதுவே மாவட்டம் ஒன்றில் அதிகளவு வேட்பாளர்கள் களமிறங்கிய தேர்தலாகும்.

இங்கு 22 அரசியல் கட்சிகளும், 16 சுயேட்சைக் குழுக்களுமாக மொத்தம் 38 அணிகள் மோதுகின்றன.

அம்பாறை மாவட்டம் அதிகளவு அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் மோதும் மாவட்டமாக சாதனை படைத்துள்ளது. இங்கு 66 அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் போட்டியிடுகின்றன.

இவற்றின் சார்பில் மொத்தம் 660 வேட்பாளர்கள் ஏழு ஆசனங்களுக்காகப் போட்டியிடுகின்றனர்.

அதே வேளை இந்தப் பொதுத் தேர்தலில் சிறிலங்கா முழுவதும் 7265 பேர் போட்டியிடுகின்றனர். இவர்கள் அரசியல் கட்சிகள் சார்பிலும், 298 சுயேட்சைக் குழுக்கள் சார்பிலும் போட்டியில் நிறுத்தப்பட்டுள்ளனர். எனினும் இவர்களில் 196 பேர் மட்டுமே தேர்தல் மூலம் நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

தமிழர் தாயகப் பிரதேசங்களில் குறிப்பாக திருகோணமலை, அம்பாறை போன்ற மாவட்டங்களில் அதிகளவில் அரசியல் கட்சிகள் சுயேட்சைக் குழுகள் போட்டியிடுவதால் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

அம்பாறையில் ஒரு தமிழ்ப் பிரதிநிதி தெரிவு செய்யப்படுவதற்கு வாய்ப்புகள் இருந்த போதும் அங்கு பெரும் எண்ணிக்கையான கட்சிகள், சுயேட்சைக் குழுக்கள் போட்டியில் இறங்கியிருப்பதால் வாக்குகள் பிரிந்து தமிழர் பிரதிநிதித்துவம் பறி போகலாம் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதே வேளை கடந்த முறை திருகோணமலையில் இரு தமிழ்ப் பிரதிநிதிகள் தெரிவான போதும் இம் முறை ஒருவர் கூடத் தெரிவாவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதிக கட்சிகள், சுயேட்சைக் குழுக்கள் போட்டியிடுவதாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக தமிழ்க் காங்கிரஸ் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளதாலும் திருகோணமலையில் ஒரு தமிழ்ப் பிரதிநிதியைப் பெறுவது கூட நெருக்கடியாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலதிக இணைப்பு:

இதற்கிடையே வடக்கு, கிழக்கு பகுதிகளில் உள்ள மொத்தம் 31 ஆசனங்களுக்காக 1867 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் 15 அரசியல்கட்சிகள், 12 சுயேட்சைக் குழுக்களின் சார்பில் 324 வேட்பாளர்க்ளும்,

வன்னி மாவட்டத்தில் 18 அரசியல்கட்சிகள், 9 சுயேட்சைக் குழுக்களின் சார்பில் 308 வேட்பாளர்களும்,

மட்டக்களப்பு மாவட்டத்தில் 17 அரசியல்கட்சிகள், 27 சுயேட்சைக் குழுக்களின் சார்பில் 360 வேட்பாளர்களும்,

திருகோணமலை மாவட்டத்தில் 17 அரசியல்கட்சிகள், 14 சுயேட்சைக் குழுக்களின் சார்பில் 217 வேட்பாளரக்ளும்,

அம்பாறை மாவட்டத்தில் 17 அரசியல்கட்சிகள் 49 சுயேட்சைக் குழுக்களின் சார்பில் 660 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.

http://www.puthinappalakai.com/view.php?20100226100581

தமிழர் தாயகத்தின் 31 ஆசனங்களுக்காக 1867 வேட்பாளர்கள் போட்டி

'சங்கீதக் கதிரை'(music chair) விளையாட்டு நிலைமைக்கு வந்தது விட்டது :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடப்பாவங்களா... ஸ்ரீ லங்கா பிச்சை லங்கா என்று மாறுவது தெரியும். ஆனால் 31 வேலைக்கு 1831 பேர் போட்டி போடுமளவிட்க்கு வேலை திண்டாட்டம் என்று நினைக்கவில்லை. வேலை இல்லாமல் அலையுதுகள், ஓசிக்காசை சுருட்டி திண்டு கொழுக்கிறதுக்கு!

இவர்களில் பெரும்பான்மையானவர்கள் தமிழருக்கு ஒரு உதவி கூட செய்யாதவர்கள் தான்.

  • கருத்துக்கள உறவுகள்

.

சம்பந்தரின் புண்ணியம்.

.

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தர் தேவாரம் பாடினபடியால்தான் இவ்வளவு கதவு திறந்திருக்கு வாழ்க சம்பந்தர்...வளர்க அவர் பணி....

இப்படியெல்லாம் இனிமேல் போட்டியிடத்தானே வேண்டும். கடிவாளமற்ற குதிரை. இனி தடியெடுத்தவனெல்லாம் தண்டல் காரர்கள். மக்கள்தான் நிலையை உணர்ந்து பதிலளிக்க வேண்டும்.

வாக்காளர் தீர்ப்பு சொல்ல இந்தளவு பெரிய பட்டியலில் யாருடைய பெயரை எங்க தேடுறது.

இந்த நாய்கள் எக்கேடு கெட்டால் என்ன என்று போட்டு ஏதோ ஒண்டில புள்ளடிய போட்டுட்டு போய் விடுவினம்.

அதிஸ்டகாரன் காத்தில் மழை தான்

குரங்கு கையில பூமாலையை குடுத்தா உதுதான் நடக்கும்.

முந்தி திருகோணமலையையைத்தான் குடுத்தார்கள் இனி வடக்கை கிழக்கை மொத்தமாக சிங்களவனிட்டை குடுத்துட்டு அடிமை சேவகம் செய்யலாம்

Edited by Subiththiran

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அறிவில்லாத ஆக்களாயிருக்கு! கொழும்பில ஒரு வட்டம் மலையகத்தில ஒரு வட்டம் போட்டு 50 ஆசனங்கள் எண்டு போட்டிருக்கலாம். :rolleyes:

அடப்பாவங்களா... ஸ்ரீ லங்கா பிச்சை லங்கா என்று மாறுவது தெரியும். ஆனால் 31 வேலைக்கு 1831 பேர் போட்டி போடுமளவிட்க்கு வேலை திண்டாட்டம் என்று நினைக்கவில்லை. வேலை இல்லாமல் அலையுதுகள், ஓசிக்காசை சுருட்டி திண்டு கொழுக்கிறதுக்கு!

ஒருவேளை ஓசிச் சோற்றில உரிசை அதிகமோ?

அட்ரா சாமி...... ஆட்ரா சாமி......... ஆட்ரா சாமி.........

ஆட்ரா..... ஆட்ரா...... ஆட்ரா......

பழிபோட ஒருத்தன் இருந்தால் பாவமென்ன புன்னியமேன்னா. ஆட்ரா..... ஆட்ரா...... ஆட்ரா......

தமிழ் மக்களுக்கு சேவை செய்ய இவ்வளவு ஆட்களா என்றால் சிரிப்புத்தான் வருது....

இவங்கள் எல்லாம் தங்கள் பணத்தை செலவழித்து மத்தவங்களுக்கு சேவை செய்யாவா வெளிக்கிட்டாங்கள்?

உழைச்சு சேர்த்த பணத்தை பந்தயக்குதிரையில் மயிரைக் கட்டினார்கள்...

Edited by Sooravali

  • கருத்துக்கள உறவுகள்

இப்பிடி போட்டி இருக்கும் என்டு தெரிஞ்சிருந்தால் நானும் இங்க இருந்து கொண்டு சுயேட்சயா போட்டி போட்டு இருப்பனே....அட்லீஸ்ட் ஊர் சனமாவது ஒட்டு போட்டு இருக்காதா என்ன?

என்ட சின்னம் என்னென்டா சுண்டல்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒருபக்கத்தில் சர்வதேசத்துடன் சனநாயகவிளையாட்டு விளையாடவேண்டும் என்று முடிவு எடுத்துவிட்டீர்கள்.

புலத்திலும் விரல்களை மைகளால் நிறமாக்கிவருகிறீர்கள்.

சனநாயகத்தில் ஒரு தேர்தலில் இவ்வளவு ஆட்கள்தான் கேட்கவேணும் என்ற கோட்பாடு ஏதும் இருக்கிறதா என்ன..?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.