Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்களமொழியில் கற்கும் தமிழ் மாணவர்கள்

Featured Replies

மூலம் பதிவில் இருந்து: http://www.pathivu.com/news/6159/54/.aspx

மாத்தறை மாவட்டதின் தவளம பிர தேச செயலகத்திற்குட்பட்ட வீரபாண கிரா மத்தில் கணிசமான தோட்டத்தொழிலா ளர் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றபோதும் அங்கு ஒரு தமிழ்ப்பாடசாலை இல்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்காரணமாக இங்குள்ள சுமார் 50 மாணவர்கள் வீரபாண கனிஷ்ட வித்தியா லயமான சிங்களப் பாடசாலையில் சிங் கள மொழியிலேயே கல்விகற்றுவருகின்ற னர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

சுமார் 450 சிங்களக் குடும்பங்களும், 100 தோட்டத் தொழிலாளர் குடும்பங்களும் வாழும் இப்பகுதியில் உள்ள இந்த ஒரே ஒரு சிங்களப் படசாலையான இப்பாடசா லையிலும் போதிய வசதிகளின்றி மாண வர்களின் கல்வியில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும் விசனிக்கப்படுகின் றது.

இங்கு தமிழ்ப்பாடசாலை ஒன்று இல் லாத நிலையில் தமிழ் மாணவர்கள் தாய் மொழியில் கற்கும் தமது உரிமையைத் துறந்து சிங்கள மொழிமூலமே கல்வியைத் தொடர்கின்றனர் என விசனிக்கும் தோட் டத்தொழிலாளர்கள் அரசியல்வாதிகள் இதுகுறித்து கவனம் செலுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கின்றனர்.

சிங்கள மொழியில் அதுவும் மாத்தறையில் படிச்ச்சால் என்ன குறைஞ்சா போய்விடும் ?? வெளிநாடுகளில் உள்ள தமிழ் மாணவர்கள் இங்கு பாடசாலையில் என்ன தமிழ் மொழியிலா கற்கின்றனர்?

சிங்கள மொழியில் அதுவும் மாத்தறையில் படிச்ச்சால் என்ன குறைஞ்சா போய்விடும் ?? வெளிநாடுகளில் உள்ள தமிழ் மாணவர்கள் இங்கு பாடசாலையில் என்ன தமிழ் மொழியிலா கற்கின்றனர்?

யாழ்ப்பாண சிங்களமகாவித்தியாலயத்தில் சிங்களவர் மட்டுமா படித்தார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள மொழியில் அதுவும் மாத்தறையில் படிச்ச்சால் என்ன குறைஞ்சா போய்விடும் ?? வெளிநாடுகளில் உள்ள தமிழ் மாணவர்கள் இங்கு பாடசாலையில் என்ன தமிழ் மொழியிலா கற்கின்றனர்?

அது சரி. கனடாவில ஆங்கிலத்தில படிக்கலாம் என்றால்.. சிறீலங்காவில சிங்களத்தில படிக்கலாம் தானே. எதுக்கு தமிழைப் படிக்கனும். தமிழனுக்கு என்று நாடு இருக்கா... நிர்வாகம் இருக்கா. ஒரு செத்துக் கொண்டிருக்கிற மொழியை ஏன் நாங்கள் கற்க வேண்டும். வளர்ந்து கொண்டிருக்கும் சிங்களத்தையும்.. வாழ வைத்துக் கொண்டிருக்கும் ஆங்கிலம் உட்பட்ட மொழிகளை தான் நம்மவர்கள் கற்க வேண்டும். அதைவிடுத்து தமிழ் தமிழ் என்று சொல்லி இனவாதம்.. மொழிவாதத்தை விதைத்து உலகில் உள்ள அனைத்து நாடுகளையும் ஒன்றிணைத்து பெளத்த சிங்கள பூமியாக இந்தப் பூமியை மாற்ற நினைத்திருக்கும் எமக்கும் எமது சகோதர சிங்கள மக்களுக்கும் யாரும் துரோகம் செய்ய வேண்டாம் என்று காட்டமாகவே கேட்டுக் கொள்கின்றோம்.

தமிழாவது.. மண்ணாங்கட்டியாவது. தமிழர்கள் சிங்களம் படிப்பதால் ஒன்றும் குறைந்துவிடமாட்டார்கள். தமிழர்கள் வெளிநாடுகளில் என்ன தமிழா படிக்கிறார்கள். இல்லைத்தானே. பிறகெதற்கு சிறீலங்காவில் மட்டும் தமிழ் தமிழ் என்று கத்துகிறீர்கள். அதுவும் உங்களுக்கு வெளிநாடு தானே. நீங்கள் கள்ளத்தோணிகள் தானே. சிங்கள மக்களின் பூர்வீக மண்ணில் சிங்களமே ஆட்சி மொழி. அதையே தமிழர்கள் படிக்க வேண்டும். விரும்பினால் தமிழை.. ஆங்கிலத்தைப் படிக்கலாம். இதுதான் இன ஐக்கியத்திற்கான எமது முதற் செயற்திட்டம். அதை எவரும் குழப்ப வேண்டாம். ஓகே. :):rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள கத்தா கரண்ட புழுவங்..........???

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள மொழியில் அதுவும் மாத்தறையில் படிச்ச்சால் என்ன குறைஞ்சா போய்விடும் ?? வெளிநாடுகளில் உள்ள தமிழ் மாணவர்கள் இங்கு பாடசாலையில் என்ன தமிழ் மொழியிலா கற்கின்றனர்?

அய்யா விடிவெள்ளி இதுவும் ஒரு திட்டமிட்ட இனச்சுத்திகரிப்புத் தான். இலங்கை சுத்ந்திரம் பெற்ற காலத்தில (1948) மேற்குக்கரை வத்தளை மட்டும் தமிழ் பேசும் சமூகத்தவர் தான் வாழ்ந்து வந்தனர். டீ. எஸ். சேனாநாயக்கா திட்டமிட்டு சில அற்ப சலுகைகளை வழங்கி, தமிழ் பாடசாலைகளை சிங்களப் பாடசாலைகளாக மாற்றினார். இவ்வாறு நூற்றுக்கும் அதிகமான பாடசாலைகள் மூடப்பட்டன. இன்று புத்தளம் முதல் வத்தளை ஈறாக உள்ள பிரதேச மக்கள் முற்றிலும் சிங்கள மக்களாக வாழ்கின்றனர். இதற்கு இலங்கையின் முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னான்டோப்புள்ளே குடும்பம் சிறந்த உதாரணாமாகும். இது ஒரு நில ஆக்கிரமிப்புடன் கூடிய இனச்சுத்திகரிப்பு ஆகும்.

சிங்களவன் இனச்சுத்திகரிப்புக்கு தமிழர் மீது முதல் கை வைத்தது தமிழ்மொழியின் மீதுதான்.

விடிவெள்ளி நீங்கள் நல்ல பரந்த மனமுள்ள ஆள். நன்றாகத்தான் உங்கள் பணியை ஆற்றுகின்றீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

என் வீட்டுக்குள் ஒருவர் வந்து தான் நினைத்ததை என்னை செய்ய வைப்பதையும்

நான் வெளியில் போய் எனக்கு வேண்டியதை தேடிப்பெறுவதையும் ஒன்றுதான் என்கிறார்கள் சிலர்.

Edited by விசுகு

தமிழ் நாட்டிலே சேலத்து பெரியார் பல்கலைக்கழகளகம் என்ன பாஷையில் நடக்குது எண்டு தெரியுமோ ... இங்க பாருங்கோ

Edited by ஜெகுமார்

விடிவெள்ளி நீங்கள் நல்ல பரந்த மனமுள்ள ஆள். நன்றாகத்தான் உங்கள் பணியை ஆற்றுகின்றீர்கள்.

தம்பி..... அவர்கள் துப்பாக்கி முனையில் எம்மை வென்று இருக்கின்றனர்....அதனால் இனி எதிர்காலத்தை நாம் புரிந்து நடந்தால் சரி... நாம் எல்லாம் தூர நோக்கோடும், தீர்க்க தரிசனதோடும் இருந்து தான் 1 - 2 இலட்சம் சனங்களை சும்மா காவு கொடுத்தோம். எனவே சும்மா ஒழித்திருந்து வீரம் பேசாமல் உண்மையை ஒத்துகொண்டு பிழைக்கின்ற வழியை பாரும்.

சிங்கள கத்தா கரண்ட புழுவங்..........???

ஓவ் ஓவ் ஐயா

Edited by vidivelli

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள மொழியில் அதுவும் மாத்தறையில் படிச்ச்சால் என்ன குறைஞ்சா போய்விடும் ?? வெளிநாடுகளில் உள்ள தமிழ் மாணவர்கள் இங்கு பாடசாலையில் என்ன தமிழ் மொழியிலா கற்கின்றனர்?

சிட்னியில் 12ம் வகுப்பில் தமிழர்கள் பலர் தமிழை ஒரு பாடமாக தனியார் பாடசாலையில் படிக்கிறார்கள். பல்கலைக்கழகத்துக்கு செல்ல 5 பாடங்கள் அவுஸ்திரெலியாவில் படிக்கவேண்டும். சிலர் 5 பாடங்களில் ஒன்றாக தமிழைப் படிக்கிறார்கள். சிலர் 6 பாடங்களில் ஒன்றாக தமிழைப்படித்து அதிக புள்ளிகள் பெறும் முதல் 5 பாடங்களின் அடிப்படையில் பல்கலைக்கழகத்துக்கு செல்கிறார்கள். இந்தவருடம் 11 மாணவர்கள் 90க்கு மேல் புள்ளி பெற்றிருக்கிறார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் இவர்களில் பெரும்பாலோர் அவுஸ்திரெலியாவில் பிறந்தவர்கள். அதிக புள்ளி பெற்றவரும் அவுஸ்திரெலியாவில் பிறந்தவர். மேலும் அவுஸ்திரெலியாவில் பிறந்த பல மாணவர்கள் 80 - 90 வரையிலான புள்ளிகள் பெற்றிருக்கிறார்கள். அவுஸ்திரெலியாவில் பிறந்த மாணவர்கள் பலர் பட்டிமன்றங்களை நடாத்தக்கூடிய தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள்.

கொம்பூஸ் பாடசாலையில் தமிழைக் கற்க விரும்பி ஒரு வெள்ளைக்காரர் இப்பொழுது 6ம் வகுப்பில் படிக்கிறார். இதைவிட அவுஸ்திரெலியாவில் பிறந்து பல்கலைக்கழகங்களுக்கு சென்ற தமிழ் தெரியாத தமிழ் மாணவர்கள் தமிழ் கற்க வேண்டும் என்ற காரணத்தினால் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் கோம்புஸ் தமிழ்ப்பாடசாலைக்கு செல்கிறார்கள். ஒபன் தமிழாலயம் பாடசாலையில் தென்னாபிரிக்காவில் பிறந்த தமிழரும் அவரது மகனும் தமிழ் கற்றார்கள். இவர்களுக்கு தமிழ் தெரியாது தமிழைக்கற்க வேணும் என்ற நோக்கத்திற்காகக் கற்கிறார்கள்.

இவ்வருடம் கொம்பூஸ் பாடசாலையில் 12ம் வகுப்பில் தமிழ் கற்று 90க்கு மேல் புள்ளிகள் பெற்ற மாணவர்கள் விபரங்களைப் பார்வையிட http://www.tsch.org.au/web/hsc-information/hsc-results.html

Edited by கந்தப்பு

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி..... அவர்கள் துப்பாக்கி முனையில் எம்மை வென்று இருக்கின்றனர்....அதனால் இனி எதிர்காலத்தை நாம் புரிந்து நடந்தால் சரி... நாம் எல்லாம் தூர நோக்கோடும், தீர்க்க தரிசனதோடும் இருந்து தான் 1 - 2 இலட்சம் சனங்களை சும்மா காவு கொடுத்தோம். எனவே சும்மா ஒழித்திருந்து வீரம் பேசாமல் உண்மையை ஒத்துகொண்டு பிழைக்கின்ற வழியை பாரும்.

அண்ணை துப்பாக்கி முனையால சிங்களவன் எங்களை வெண்டதைக் குறிச்சு உங்களுக்கு நல்ல சந்தோசம் போல. அதுக்காக கானகாலம் தவம் கிடந்திருக்கிறியள் போலக் கிடக்குது. நல்லது. துப்பாக்கி முனையால ஒருவேளை எங்கட (தமிழரின்ட) ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டு இருக்கலாம், அதுக்காக தமிழன் சிங்களவனின்ட காலைக் கழுவி வாழவேண்டும் என்டு இல்லையண்ணை. தமிழரின்ட விருப்பு வெறுப்புக்களை சிங்களவர் புரிந்துகொண்டு அதற்கான சரியான தீர்வு காணுமட்டும் போராட்டம் ஏதொ ஒரு வடிவத்தில நடந்துகொண்டுதான் இருக்கும் அண்ணை.

அண்ணை தமிழன் தமிழ் மொழியில கற்கவிரும்புறதுக்கும், 1 - 2 இலட்சம் பேரைக் காவுகொடுத்ததுக்கும் என்ன சம்பந்தம் அண்ணை?, ஓ, தலைவர் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி அவரை வச்சுத்தானே வயித்துப் பிழைப்பை நடத்தவேணும். அத நான் மறந்து போயிட்டன் அண்ணை. தமிழுக்கும் தமிழனுக்கும் உரிய அந்தஸ்தை சிங்களவன் குடுக்காதபடியால்தான் அண்ணை உவ்வளவு பேர் உயிரிழக்கவேண்டி வந்தது அண்ணை.

அடுத்தது அண்ணை எனக்கு வேறையாரையும் அண்டிப் பிழைக்கத் தேவையில்லையண்ணை, எமது மக்களோட தான் அண்ணை இப்பவும் நிக்கிறன் அண்ணை, உங்கள மாதிரி ஊர்க்குருவி வேசம் போடேல்லையண்ணை.

நல்லாதான் கதையளக்கின்றீர். இப்படி பல வடிவங்களில் பல இடங்களில் இனவாதம் பேசி பேசி தானே இன்று வன்னியே அழிந்தது. எனவே இனியும் நீங்கள் இப்படி என்றால் கடவுள் தான் உங்களை காப்பாற்ற வேண்டும்.

நீங்கள் எப்போதும் உங்கள் (பதுங்கல்) புரட்சியை இணையங்களில் காட்டுவதற்கு இனவாத, இனவெறி சொற்களை பிரையோகித்தீர்கள். இல்லை என்று மறுக்கின்றீர்களா? சிங்கள பேரினவாதம், சிங்கள பயங்கரவாதம் இது போன்ற இனூம் பல சொற்களை இங்கு எடுத்துகாட்ட முடியும். எப்போதாவது சிங்கள இனத்தவர் தமிழ் பயங்கரவாதிகள், தமிழ் இனவெறியர், தமிழ் காடையர் என்ற சொற்களை பாவித்து எம்மை வசை பாடினார்களா? நீங்கள் மோட்டுச் சிங்களவன் என்கின்றீர்கள்.... அவர்கள் பற தெமலோ என்கின்றனர்.இப்படி இனவாதமும், எதிலும் குறைபிடித்தலும், ஒற்றுமை இன்மையாலும் தான் நாம் சிதைந்தோம். எம்மை வன்னியில் அரச படைகள் சிதைக்கும் போது உலக வரை படத்தில் உள்ள எந்த நாடு எமக்காக குரல் கொடுத்தது? புரிகின்றதா இப்போ எம் நிலை? அடக்கி வாசியுங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்கள பேரினவாதம், சிங்கள பயங்கரவாதம் இது போன்ற இனூம் பல சொற்களை இங்கு எடுத்துகாட்ட முடியும். எப்போதாவது சிங்கள இனத்தவர் தமிழ் பயங்கரவாதிகள், தமிழ் இனவெறியர், தமிழ் காடையர் என்ற சொற்களை பாவித்து எம்மை வசை பாடினார்களா?

ஆகா என்ன அருமையான கருத்துக்கள்! உன்னைப் போல் ஒரு தலைவன் சிங்களவனின் உயர் குணங்களையெல்லம் சொல்லி தமிழனை சிங்களவனுக்கு சேவகம் செய்ய வைத்திருந்தால் இன்றிந்த நிலையே வந்திருக்காதையா! இந்த அரிய கருத்துக்களையெல்லாம் அன்றே சொல்லாமல் விட்டுவிட்டாயே!

Edited by காட்டாறு

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி வாலி. ஒரு பச்சை. உங்கள் கருத்து தான் எனது கருத்தும்.

எனக்கு ஒரு சந்தேகம் காதை பொத்தி ஒன்று கொடுத்தால் "ஓவ் ஓவ் " என்று வருமோ அல்லது என்ரை அம்மா என்று வருமோ. :lol::huh:

நன்றி வாலி. ஒரு பச்சை. உங்கள் கருத்து தான் எனது கருத்தும்.

எனக்கு ஒரு சந்தேகம் காதை பொத்தி ஒன்று கொடுத்தால் "ஓவ் ஓவ் " என்று வருமோ அல்லது என்ரை அம்மா என்று வருமோ. :lol::huh:

அப்படியா? ஒன்று போட்டால் இரண்டாவதாக நீங்கள் சொன்ன மாதிரி தான் வரும் :D:D:D:D:D

Edited by விடிவெள்ளி

ஆகா என்ன அருமையான கருத்துக்கள்! உன்னைப் போல் ஒரு தலைவன் சிங்களவனின் உயர் குணங்களையெல்லம் சொல்லி தமிழனை சிங்களவனுக்கு சேவகம் செய்ய வைத்திருந்தால் இன்றிந்த நிலையே வந்திருக்காதையா! இந்த அரிய கருத்துக்களையெல்லாம் அன்றே சொல்லாமல் விட்டுவிட்டாயே!

ஓம் அண்ணை ஒரு பெரிய பிழை நான் சொல்லியிருந்தால் நீங்கள் இப்படி நாய் மாதிரி நாடு நாடாய் அலைந்து இருக்கமாட்டீர்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.