Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நித்யானந்தா கைது!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெங்களூர்: இமாச்சல் பிரதேசத்தில் பதுங்கியிருந்த சாமியார் நித்தியான்நதா இன்று கைது செய்யப்பட்டார்.

Nithyananda.jpg

அர்கி என்ற இடத்தில் பதுங்கியிருந்த அவரை கர்நாடக போலீசார் கைது செய்தனர். இந்தக் கைதுக்கு இமாச்சலப் பிரதேச போலீசாரும் உதவினர்.

அவரிடம் விசாரணை நடத்தி வரும் கர்நாடக போலீசார் அவரை பெங்களூர் அழைத்து வரவுள்ளனர்.

நித்யானந்த தியான பீடம் என்ற பெயரில் இயங்கும் பெங்களூர் ஆசிரமத்தல் நடிகை ரஞ்சிதாவுடன் குஜாலில் ஈடுபட்டார் நித்யானந்தா. இது குறித்த வீடியோ வெளியானதையடுத்து கடந்த 45 நாட்களாக அவர் தலைமறைவாக இருந்தார்.

தலைமறைவாக இருந்தபடியே வீரப்பன ஸ்டைலில் வீடியோ பேட்டிகள் அளித்து வந்தார்.

அவர் மீது தமிழகத்திலும் கர்நாடகத்திலும் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் பதிவான வழக்குகள் அனைத்தும் பெங்களூர் போலீசாருக்கு மாற்றப்பட்டுவிட்டன.

சமீபத்தில் தனது ஆசிரம தலைமைப் பதவியிலிருந்து விலகுவதாகவும் அவர் அறிவித்தார்.

இந்த வழக்குகளை விசாரித்து வரும் கர்நாடக சிஐடி போலீஸார் பிடுதியில் உள்ள நித்யானந்தாவின் ஆசிரமத்தில் சில வாரங்களுக்கு முன் ரெய்ட் நடத்தி நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தினர். முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றிச் சென்றனர்.

மீண்டும் ரெய்ட்:

இந் நிலையில் நித்யானந்தாவின் ஆஸிரமத்தில் கர்நாடக சிஐடி போலீஸார் நேற்று மீண்டும் திடீர் சோதனை நடத்தினர்.

ஆஸிரம ஆவணங்களை பார்வையிட்ட அவர்கள் சில ஆவணங்களை பறிமுதல் செய்தனர். பல மணி நேரம் சோதனையும் நடத்தினர்.

இந் நிலையில் முன் ஜாமீன் கோரி ராம்நகர் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் நித்யானந்தா தாக்கல் செய்த மனு நீதிபதி ஹூங்குண்ட் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வருகிறது.

அதேபோல தன் மீதான வழக்குகளை தள்ளுபடி செய்யக்கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நித்யானந்தா தாக்கல் செய்த மனுவும் இன்றே விசாரணைக்கு வருகிறது.

இந் நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரை கர்நாடகத்திற்குக் கொண்டு வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ள போலீசார் அதன் பின்னர் அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவுள்ளனர்.

thatstamil.com

ஒரு பதில் கருத்தையும் காண இல்லை, ஆச்சரியமாய் இருக்கிது. இந்த தலைப்பு செக்சியாய் இல்லையோ..? :lol:

உவனைப் பிடிப்பதால் என்ன விட்டால் என்ன

இன்னொருத்தன் கிளம்பாமல் பார்த்தால் சரிதான்.

அவருக்கு அண்மைப் பரிசோதனை நடத்தப் போறாங்களாம்...

சிரிப்புத்தான் வருது. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பதில் கருத்தையும் காண இல்லை, ஆச்சரியமாய் இருக்கிது. இந்த தலைப்பு செக்சியாய் இல்லையோ..? :lol:

நித்தியானந்தரை கைதுக்குப் பின், ரஞ்சிதாவையும் கைது பண்ணி விடுவார்களோ.... என்று கவலையில் இருக்கிறம். உங்களுக்கு பகிடியாய் கிடக்குது. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

சாமிக்கே சிறை....

அருள் வேண்டி தொழுத எமக்கு என்னவோ?

அவரின் பணியை நீங்க்கள் விரும்பினால் அங்கிருந்து தொடரலாம்

சாமிக்கே சிறை....

அருள் வேண்டி தொழுத எமக்கு என்னவோ?

மந்தைகள் மேய்க்க போகலாம்.

நித்தியானந்தரை கைதுக்குப் பின், ரஞ்சிதாவையும் கைது பண்ணி விடுவார்களோ.... என்று கவலையில் இருக்கிறம். உங்களுக்கு பகிடியாய் கிடக்குது. :lol:

ரஞ்சிதாவையும் கைது செய்து ஒன்றாக ஒரே சிறையில் வைப்பார்களா?

அதுதான் கவலையா?

ரஞ்சிதாவை ஏன் கைது செய்யவேண்டும்? அவ தான் சாமியென்று யாரையும் ஏமாற்ற இல்லையே?

ரஞ்சிதாவின் மீது புகார் போடமுடியாது சாமியாருடன் உடலுறவு வைக்கக் கூடாதென்று எங்கும் தடை விதிக்கப்பட இல்லையே?

ஆனால் அந்த செயல்களால் ஏமாற்றிப் இலாபம் அடைந்தாள் அவர்மீது போசடி வழக்குப் போடலாம்.

இப்ப நித்த்யானந்தாவுக்கும் அதுதான் வழக்கு உடலுறவுக்காகவல்ல.

ராமகிருஷ்ண மிசன் உற்பத்தியான நித்தியானந்த - பெரும்பாலும் பெண்களுடன் சுற்றும் ராமகிருஷ்ண மிசன் சாமிமாரின் மீது பலத்த சந்தேகத்தை கிளப்பியுள்ளது. தமது குப்பைகள் வெளிவராமல் இருக்க மேலுள்ள இணைப்பிலுள்ள ராமகிருஷ்ண மிசன் முயற்சிப்பது தெரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

.

இங்கு நான் இரண்டாவது முறை எழுதிய பதிலும், சூறாவளி எழுதிய பதிலையும் காணவில்லை.

ஏதாவது தவறாக நாம் எழுதியமாதிரி தெரியவில்லை.

சில வேண்டப்படாத சக்திகளின் ஆதிக்க வேலைகள் யாழ் களத்தில் கூடி விட்டது.

.

.

கருத்தை நீக்கிய மட்டுறுப்பினர், தனது காரணத்தை நெஞ்சை நிமிர்த்தி சொல்வதை வரவேற்கின்றேன்.

.

  • கருத்துக்கள உறவுகள்

யாரோ ஒரு சாமியார் வந்தான் . யார் யாரையோ ........ அதுவும் திருவண்ணாமலையை சார்ந்தவனாம். ராஜ சேகராம். இயற்பெயர். இந்த குப்பைகளை விட்டு தொலைத்து ஈழ விடுதலை பக்கம் தோழர்கள் தங்கள் பார்வையை திருப்புதல் நன்று.

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

சாணி :lol: தொலைக்காட்சி இதனை ஒளிபரப்பியமைக்கும் பின்னர் சாமியார் கைதுக்கும் இடையில் இச்சாமி கருணா நாதிக்கு :lol: விரும்பபடாதவர் என்பது மட்டும் விளங்குகிறது. இவர் போல் சாமிகள் தமிழ் நாட்டில் இல்லை என்பது போலும் சாணி :lol: தொலை காட்சிக்கு தெரியாதது போலும் ஒரு மாயையை யாருக்கு காட்ட முனைகிறார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

தொழரே நுணுவிலான் கருநாகத்திற்கும் இவருக்கும் நடந்த 300 கோடி பேரத்திற்கு இந்த சாமி படியவில்லை என்றே இங்கு பலரும் பேசி கொள்கிறார்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

என்ன சாமியாருக்கும் முதலமைச்சருக்கும் 300 கோடி டீலா? எந்த திட்டத்தை அமுலாக்க இவ்வளவு பணம்? நதியை திருப்ப தானே? :lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

என்ன சாமியாருக்கும் முதலமைச்சருக்கும் 300 கோடி டீலா? எந்த திட்டத்தை அமுலாக்க இவ்வளவு பணம்? நதியை திருப்ப தானே? :lol::lol:

என்ன தோழரே.... கருநாகத்தினை பற்றி உங்களுக்கு தெரியாதா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்தாள் பாத்த கேசெல்லாம் டிவோசியும் புறப்ளமுமாம்..... சமூகசேவைக்கு சாச் பண்ணுறினம். :lol:

பாத்த காசு முழுவதும் எப்பிடியெண்டாலும் பறிச்சுபோடுவினம். :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.