Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை பாராளுமன்றை அதிர வைத்த கன்னி உரை

Featured Replies

இலங்கை பாராளுமன்றை அதிர வைத்த கன்னி உரை

இலங்கை நாடாளுமன்றத்தில் 2010 தேர்தலில் தமிழ்தேசியக் கூட்டமைப்பு சார்பாக வெற்றி பெற்ற பாராளுமன்ற உறுப்பினர் திரு சிவஞானம் சிறிதரன் அவர்களின் கன்னிப் பேச்சு இன்று பாராளுமன்றத்தை அதிரவைத்தது.

Edited by suryaa

உண்மையை அப்படியே துணிந்து அப்படியே அவர்கள் கோட்டைக்குள் சொன்னதற்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.

இனியும் மற்றவர்கள் போல் கருணாவிலும்,டக்கிளசிலும்,பிள்ளயானிலும் பிழை பிடித்துக் கொண்டு காலத்தை வீணாக்காமல் நீங்கள் மக்களுக்கு செய்ய வேண்டியதை செய்யுங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சவப்பெட்டி எத்தின தேவையெண்டு இப்பவே சொன்னா ஆடர் குடுத்திடலாம். :lol:

பேச்சுக்கும் செயலுக்கும் சம்பந்தம் இல்லாதவர்கள் எண்ற வகையில் தான் அரசியல்வாதிகள் இண்டுவரைக்கும் செயற்பட்டு வந்து இருக்கிறார்கள்...

அதில் இதுவும் கடந்து போகும்...

சவப்பெட்டி எத்தின தேவையெண்டு இப்பவே சொன்னா ஆடர் குடுத்திடலாம். :lol:

மண்வெட்டியாலை கிண்டி போட்டு ரோட்டோரம் தாக்கிறதுக்கு எதுக்கு சவப்பெட்டி...?? உங்கட ஆக்கள் விடிவெள்ளியளை இப்ப துரத்தி துரத்து சுடுகிறானாம் சிங்களவன் உண்மையே...??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மையை அப்படியே துணிந்து அப்படியே அவர்கள் கோட்டைக்குள் சொன்னதற்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.

இனியும் மற்றவர்கள் போல் கருணாவிலும்,டக்கிளசிலும்,பிள்ளயானிலும் பிழை பிடித்துக் கொண்டு காலத்தை வீணாக்காமல் நீங்கள் மக்களுக்கு செய்ய வேண்டியதை செய்யுங்கள்.

நீங்கள் சொன்ன மூண்டுபேருக்கும் வேலை வந்திட்டுது :rolleyes:

இலங்கை பாராளுமன்றை அதிர வைத்த கன்னி உரை

  • கருத்துக்கள உறவுகள்

துணிவான உரை. பாராட்டுக்கள்.

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

அனைத்துத் தமிழ்மக்களும் ஒரே குரலில் வரவேற்க வேண்டிய ஈழத்தமிழ் மக்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தும் உரை.வெறும் பேச்சோடு நின்று விடாமல் செயலிலும் இறங்கினால் மக்களுக்கு ஏதாவது கிடைக்கும்.

வாத்தியார்

...............

  • கருத்துக்கள உறவுகள்

புறக்குடத்தில் வார்த்த நீர்.

செவிடர் காதில் ஊதிய சங்கு.விழலுக்கு இறைத்த நீர் என்றும் சொல்லாம்.இதைக்கேட்ட உடனே சிங்களவன் உடனே உரிமையைத் தூக்கித் தரப்போகிறான் பாருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை பாராளுமன்றை அதிர வைத்த கன்னி உரை

இலங்கை நாடாளுமன்றத்தில் 2010 தேர்தலில் தமிழ்தேசியக் கூட்டமைப்பு சார்பாக வெற்றி பெற்ற பாராளுமன்ற உறுப்பினர் திரு சிவஞானம் சிறிதரன் அவர்களின் கன்னிப் பேச்சு இன்று பாராளுமன்றத்தை அதிரவைத்தது.

ஒரு தேசமோ ஒரு இனமோ இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டு பேரழிவுகளுக்கு முகங்கொடுக்கும்போது மீளெழுவதற்கு இன்னுமொரு பாதை உண்டு என்பதை ஜப்பானியர்களும் உரோமானியர்கள் இன்று முழு உலகத்திற்கும் நிரூபித்துவிட்டனர். நாம் பயங்கரவாதிகளாக பட்டம் சூட்டப்பட்டோம்.

.

இப்பேரழிவின் பின்னால், இலங்கை அரசுக்கு உலக வல்லரசுகளும் பிராந்திய வல்லரசும் மறைமுகமாகவும் நேரடியாகவும் பெரும்பங்களிப்பை வழங்கின. இன்று இப்போரின் எம்மீது போர்க்குற்றங்கள் இழைக்கப்பட்டதாகவும், மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாகவும் குற்றம் சுமத்தி சிங்கள தேசத்தின் கழுத்தை நெரிக்க வல்லரசுகள் தங்கள் கரங்களை நீட்டுகின்றன.

அதாவது எங்களை அழிக்க உங்களுக்கு தோள்கொடுத்தவர்கள் இன்று உங்களை அடிமைப்படுத்த எங்களைப் பாவிக்கின்றனர். மதிப்பிற்குரிய எங்கள் சகோதர்களே எங்களுக்கெதிராக உங்களையும் உங்களுக்கெதிராக எங்களையும் பாவித்து எங்கள் எல்லோரையும் அடிமைகொள்ள முயலும் இவர்களின் வழியில் நாம் தொடர்ந்து விழத்தான் வேண்டுமா?

http://video.yahoo.com/watch/7435402"] http://video.yahoo.com/watch/7435402

இப்பேரழிவின் பின்னால், இலங்கை அரசுக்கு உலக வல்லரசுகளும் பிராந்திய வல்லரசும் மறைமுகமாகவும் நேரடியாகவும் பெரும்பங்களிப்பை வழங்கின. இன்று இப்போரின் எம்மீது போர்க்குற்றங்கள் இழைக்கப்பட்டதாகவும், மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாகவும் குற்றம் சுமத்தி சிங்கள தேசத்தின் கழுத்தை நெரிக்க வல்லரசுகள் தங்கள் கரங்களை நீட்டுகின்றன.

அதாவது எங்களை அழிக்க உங்களுக்கு தோள்கொடுத்தவர்கள் இன்று உங்களை அடிமைப்படுத்த எங்களைப் பாவிக்கின்றனர். மதிப்பிற்குரிய எங்கள் சகோதர்களே எங்களுக்கெதிராக உங்களையும் உங்களுக்கெதிராக எங்களையும் பாவித்து எங்கள் எல்லோரையும் அடிமைகொள்ள முயலும் இவர்களின் வழியில் நாம் தொடர்ந்து விழத்தான் வேண்டுமா?

கடசியாக போர் குற்றம் இழைக்க பட்டதை விசாரிப்பதை கூட விரும்பாதவர்கள் போல கிடக்கு...

இதுவரைக்கும் சிங்களவன் செய்த கொலைகளுக்கு எல்லாம் காரணம் மேற்க்கு நாடுகள் தானாம்... இதையார் சொல்லி குடுத்தவை இந்தியாவோ...??

டக்கிளசும், சிங்களவனிடம் மட்டி இட்டு இருக்கிறான், கருணாவும் மண்டி இட்டு இருக்கிறான், மற்றும் சிலரும் சிங்களவனிடம் மண்டி இட்டு இருக்கிறார்கள்... அவர்களில் இருந்து இவர்கள் எந்த வகையாக வித்தியாசமானவர்கள்...??

முன்னதாக சொன்னவர்களிடம் ஒரு இரண்டு லட்ச்சம் ரூபாவை கொடுத்தால் எதையும் இலங்கையில் சாதிக்க முடிகிறது... ஆனால் இவர்களால் என்ன முடிகிறது...??

Edited by தயா

சாணக்கியமான கன்னி உரை. பாராட்டுக்கள் சிவஞானம் சிறீதரன்.

தமிழனின் இலட்சியத்தை, பூர்வீக உரிமைகளை முழுமையாக வெளிப்படுத்தாவிட்டாலும் (அதை இங்கு உடன் வெளிப்படுத்தவேண்டும் என்று எதிர்பார்ப்பதும் பொருத்தமில்லை), அண்மைக் காலங்களில் தமிழனுக்கு ஏற்பட்ட அழிவுகளை, அதற்கு காரணமானவர்களை நாசூக்காக சொன்ன விதம் அற்புதமானது.

40 வருடங்களில் சம்பந்தனால் பாராளுமன்ற ஹன்சார்டில் பதிய முடியாததை சிறீதரன் பதிந்துள்ளார்.

பேச்சுக்குரிய ஆதாரங்களை திரட்டி, அவற்றை பல்வேறு இடங்களில் பாதுகாத்து, உரிய மனித உரிமை ஆர்வலர்களிடம், ..... கையளிப்பதுடன், மக்கள் இடர்களையும் களையும் நடவடிக்கைகளிலும் இறங்கும் போது உண்மையான பயன் கிடைக்கும். இதை அனைவரும் செய்ய முன்வரவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

அனைத்துத் தமிழ்மக்களும் ஒரே குரலில் வரவேற்க வேண்டிய ஈழத்தமிழ் மக்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தும் உரை.வெறும் பேச்சோடு நின்று விடாமல் செயலிலும் இறங்கினால் மக்களுக்கு ஏதாவது கிடைக்கும்.

வாத்தியார்

...............

அவர் மட்டும் செயலிலே இறங்கினால் அவருடைய தலையில் எமன் வந்து இறங்குவார்.....

ஆக உணர்வுள்ள இன்னுமொருவரை தமிழ் இழக்குமே தவிர இந்த அதிகார உலகில் ஆவது ஏதுமில்லை.

ஒட்டுமொத்த தமிழனும் இனியாவது தமது கடமைகளை உணர்ந்தாலே ஏதாவது முடீயும்!

சிறீதரன் அவர்கள் சம்பந்தனுக்கு அரசியல் வகுப்பு எடுத்தால் நல்லது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சவப்பெட்டி எண்ணிக்கை எவளவு எண்டு இன்னும் சொல்லயில்லயே? :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சவப்பெட்டி எண்ணிக்கை எவளவு எண்டு இன்னும் சொல்லயில்லயே? :lol:

மிஞ்சி இருக்கிறது ஈபிடிபி கள்ள கருனா கூட்டம் இதுகளுக்கு எதுக்கு சவப்பெட்டி அவ்வளவு கவுரமான சாவு உதுகளுக்கு தேவையா? வெறுங்கிடங்கு போதாதா? அதுவே மண்ணுக்கு பாரம். :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.