Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

க.பொ.சாதாரண தரத்தில் திருகோணமலை மாவட்டத்தில் அதிக சித்திகள் பெற்று முதலிடமும் இலங்கை ரீதியாக ஆறாவது இடமும் பெற்று கல்வியில் சாதனை படைத்த மாணவனின் செல்வன் ரட்ணகுமார் நீதன் அவர்களுடனான நேர்காணல்

Featured Replies

ஜேர்மனியில பிறந்து டொச்சில படிச்சு பிறகு அஞ்சாம் வகுப்பில பதினொரு வயசில இருந்து தமிழ் எழுத, வாசிக்க பழகி பத்தாம் வகுப்பில க.பொ.த.சா பரீட்சையில சிறந்த பெறுபேற்றை பெறுகிறது என்பது மிகவும் பாராட்டப்படவேண்டிய விசயம். அவர் இனி திரும்ப ஜேர்மனிக்கு போறதிலை விருப்பம் இல்லை என்கின்ற மாதிரி சொல்லி இருக்கிறார். தொடர்ந்து கல்வியில் சாதனைகள் செய்து முன்னேற மாணவன் நீதனுக்கு உளங்கனிந்த வாழ்த்துகள்! இவரிண்ட குரலை கேட்க எங்கட இளைஞன் கதைக்கிறது மாதிரி அவரிண்ட குரல் மாதிரி இருக்கிது. :lol:

எல்லாத்துக்கும் விழுந்து அடிச்சு கருத்து எழுதிற ஆக்கள், அரக்க பரக்க செய்தி பார்க்கிற ஆக்கள் இப்படியான விசயங்களை பார்க்க, கண்டுகொள்ள பாராட்ட மாட்டீனமோ. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

பல்வேறு இன்னல்கள் மத்தியில் வடகிழக்கில் பரீட்சை எடுத்து சாதனை படைத்த செல்வன் இரட்ணகுமார் நீதனைப் பாராட்டுக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மனியில பிறந்து டொச்சில படிச்சு பிறகு அஞ்சாம் வகுப்பில பதினொரு வயசில இருந்து தமிழ் எழுத, வாசிக்க பழகி பத்தாம் வகுப்பில க.பொ.த.சா பரீட்சையில சிறந்த பெறுபேற்றை பெறுகிறது என்பது மிகவும் பாராட்டப்படவேண்டிய விசயம். அவர் இனி திரும்ப ஜேர்மனிக்கு போறதிலை விருப்பம் இல்லை என்கின்ற மாதிரி சொல்லி இருக்கிறார். தொடர்ந்து கல்வியில் சாதனைகள் செய்து முன்னேற மாணவன் நீதனுக்கு உளங்கனிந்த வாழ்த்துகள்! இவரிண்ட குரலை கேட்க எங்கட இளைஞன் கதைக்கிறது மாதிரி அவரிண்ட குரல் மாதிரி இருக்கிது. :lol:

எல்லாத்துக்கும் விழுந்து அடிச்சு கருத்து எழுதிற ஆக்கள், அரக்க பரக்க செய்தி பார்க்கிற ஆக்கள் இப்படியான விசயங்களை பார்க்க, கண்டுகொள்ள பாராட்ட மாட்டீனமோ. :rolleyes:

உங்களுக்கு ஒரு விசயம் தெரியுமா. முன்னரெல்லாம் இலங்கையில் விஞ்ஞானக் கல்வியை ஆண்டு 7 இல் இருந்துதான் கற்பிப்பார்கள். அதன் பின்னர் தான் அதைப் படிச்சு பிள்ளைகள் சோதனை எழுதி பாஸாகிறது.

ஆங்கிலத்தை ஆண்டு 3 இல் இருந்துதான் கற்பிப்பார்கள். அதன் பிந்தான் அதைக் கற்று தேறுவது.

பல்கலைக்கழகம் போறவங்க கூட உயர்தரம் வரை தமிழில் படிச்சிட்டு அங்கு போய் ஆங்கிலத்தில தான் படிக்கிறாங்க.

அதுமட்டுமன்றி ஊரில் தமிழ் சிங்களத்தில் படிச்சிட்டு பல பேர் ரஷ்சியா ஹங்கேரி ஜேர்மனி பிரான்ஸ் சுவீடன் நோர்வே ஜப்பான் போன்ற நாடுகளில் உயர்கல்வி கற்க போய் அந்தந்த நாட்டு மொழிகளைக் கற்று அதன் படி உயர்கல்வி பெற்று வந்திருக்கின்றனர். இதெல்லாம் போர் அவல வாழ்வு தந்த அகதி வாழ்வுக்கு முன்னர் பெருமளவில் எம்மக்கள் மத்தியில் நடப்பில் இருந்தது.

கல்வியில் மொழி ஒரு பெரிய தடை போல காட்டி அதன் அடிப்படையில் இது பெரிய சாதனை என்று எம்மவர்கள் காட்ட விளைவதை என்னால் சாதனை என்று ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஏதோ அளவு கடந்த பெரு விம்பம் அளிக்கப் படுகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

மற்றும்படி அனைத்துப் பாடங்களிலும் ஏ சித்தி பெற்றுள்ளமை பாராட்டத்தக்கது. அதுமட்டுமன்றி நேர்மையாக நான் இதைத்தான் எதிர்பார்த்தன்.. அதை விட கூட வந்திருக்குது என்று சொல்லும் ஜேர்மனிய அந்தக் குழந்தைத் தனம் பிடித்திருக்குது. ஊரில பிறந்தது என்றால் இட்டுக்கட்டி நாலு கூடச் சொல்லி இருக்கும்.

அதுமட்டுமன்றி பேட்டி கண்டவர் தான் புகுத்த வேண்டிய விளம்பரங்களை தனியார் கல்விக்கூடத்தின் பெயர் உட்பட புகுத்தி இருப்பது ஒரு சாதாரண தமிழர்களின் அண்டப்புழுகுப் புத்தி இவருக்குள்ளையும் அடுக்குமாடி கட்டி வாழுது என்றதைக் காட்டுது. உந்த வானொலியின் இந்தப் பேட்டி காண்பவர் பல தடவைகள் தனது கருத்தை திணித்து பேட்டியாளர்களை சுதந்திரமாக கருத்துச் சொல்ல அனுமதிக்காமல் தனது கருத்தோடு அவர்களை இழுத்து வர முனைவதை கண்டிருக்கிறேன். இதனை அவர் தவிர்க்கப் பழக வேண்டும். சுயாதீன பேட்டி காண்பவராக இருக்க வேண்டும். :lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்கள்!!!

கமோன் நெடுக்கு, சின்னப்பையன் ஒருத்தன் சாதனை செய்து இருக்கிறான், இதுக்கு இவ்வளவு விளக்கவுரை வேண்டாம். எனது நண்பர்கள் சிலரும் ரஷ்யா சென்று ரஷ்யமொழியில மருத்துவம் படிச்சுவிட்டு தற்போது மருதுவர்களாக பல்வேறு நாடுகளில பணியாற்றுகிறார்கள். அது வேற விசயம்.. அதுமாதிரி ஆங்கிலத்தை மூனாம் வகுப்பில இருந்து இரண்டாவது மொழியாக படிக்கிறது வேற விசயம். ஆனால் இந்தப்பையன் சுமார் ஐந்து வருசங்களில தமிழை படிச்சு தேசியரீதியாய் ஆறாவதாக வந்து இருக்கிறான். உங்களுக்கு தெரியவேணும் விசாகா தொடக்கம் றோயல், யாழ் இந்து வரை க.பொ.த.சா பரீட்சையில எவ்வளவு கெட்டிக்கார பிள்ளைகள் தோற்றி இருந்திருப்பார்கள் என்று. க.பொ.உயர்தரம் பரீட்சையில தேசிய ரீதியாய் முன்னுக்கு வருகிறதில இருக்கிற போட்டியைவிட இதில யார் தேசிய ரீதியில முன்னுக்கு வாறது எண்டுறதில போட்டி என்கின்ற வகையில இன்னமும் கடுமையாய் இருக்கும் என்றுகூட சொல்லலாம். ஏன் என்றால் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகம். தவிர எல்லோரும் ஒரே பாடங்களை எடுப்பார்கள்.

வழமையில எல்லோரும் தங்களை விளம்பரப்படுத்துவது வழமைதானே. இது பிழை என்று சொல்வதற்கும் இல்லை. ஏன் என்றால் அவர்கள் இல்லாத ஒன்றுக்கு அவர்கள் விளம்பரம் தேட இல்லைத்தானே. மாணவன் நீதன் அவர்களின் சிறந்த பெறுபேறுகளுக்கு பின்னால் குறிப்பிட்ட கல்வி நிறுவனத்தின் சேவைக்கும் பங்கு இருக்கின்றது உண்மைதானே?

முன்பு ஈபிஆர்எல்எவ் இயக்கத்தினால சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பரியோவான் கல்லூரி மாணவன் தேவகுமாரன்/அறிவாளி அவர்கள் தேசிய ரீதியில க.பொ.சா பரீட்சையில இரண்டாவதாய் வந்ததாய் சொன்னார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

முன்பு ஈபிஆர்எல்எவ் இயக்கத்தினால சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பரியோவான் கல்லூரி மாணவன் தேவகுமாரன்/அறிவாளி அவர்கள் தேசிய ரீதியில க.பொ.சா பரீட்சையில இரண்டாவதாய் வந்ததாய் சொன்னார்கள்.

அதெப்படி சாதாரண தரத்தில் அதாவது ஓல் (GCE O/L) லில் நாட்டில எத்தினையாவது இடம் என்று பார்க்கிறது. அறிவாளிக்கு பிறகு தான் நாங்களும் பரீட்சைக்கு தோற்றினோம். அப்படி எந்த ஒரு நிலையும் வரேல்ல. அதுமட்டுமன்றி சித்திர பாடத்துக்கான முழுப் பெறுபேற்றைக் கூட சில ஆண்டுகள் கழித்தே பெற்றோம். இப்படியெல்லாம் இருக்கும் போது.. சாதாரணத்திற்கு aggregate புள்ளிகள் பாடசாலைகள் மட்டத்துக்கே வழங்கப்படாத போது தரங்கள் மட்டுமே வழங்கப்படும் நிலையில்.. எப்படி இப்படியான தேசிய மட்ட நிலைகள் குறித்தான விசயங்களை தெரிஞ்சுக்கிறாங்க. :lol::rolleyes:

அந்த மாணவனிடம் உள்ள திறமையில் சந்தேகம் இல்லை. அவன் பாராட்டப்படுவதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் அபரிமிதமான தோற்றப்பாடுகள் அவசியமற்றவை. அதுமட்டுமன்றி அந்த மாணவனாக குறித்த தனியார் கல்வி நிறுவனத்திற்கு நன்றி சொல்ல அனுமதிப்பது வேறு. பேட்டிக்காக கேள்வி கேட்பவரே அதை அந்த மாணவனிடம் அறிமுகப்படுத்தி அது தொடர்பாக மாணவனை கருத்துக் கூற வைப்பது அப்பட்டமான விளம்பரமாகத் தெரிகிறது. இதையாவது தவிர்த்திருக்கலாம் என்றே படுகிறது. :lol:

முன்னுக்கு வருகிற ஆக்களை கண்டுபிடிக்கிறது என்ன கஸ்டமான வேலையா? ஒவ்வொரு பாடத்திலையும் அதிக புள்ளிகள் பெறுகிற பத்து இருபது மாணவர்களை கண்டறிந்தாலே இது இலகுவாய் சாத்தியம். உத்தியோகப்பற்றற்ற முறையில தேசியரீதியாக க.பொ.சா பரீட்சையில முன்னுக்கு வருபவர்கள் கண்டறியப்பட்டு இருக்கலாம். எனக்கு நினைவு இருக்கிது தேவகுமாரன் தேசிய மட்டத்தில இரண்டாவதாய் வந்ததை பாடசாலையில சொன்னார்கள். இதுபோலவே தேசியரீதியில ஓர் குறிப்பிட்ட பாடத்தில அதிகபுள்ளியை பெறுகின்ற மாணவர்களையும் இனம்கண்டு இருக்கின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நானும் நீதன் ரட்ணகுமார் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

முன்னுக்கு வருகிற ஆக்களை கண்டுபிடிக்கிறது என்ன கஸ்டமான வேலையா?

நாங்கள் கல்வி கற்ற கல்லூரியில் மட்டும் குறிப்பிட்ட எண்ணிக்கையானோர் அன்றைய பாடத்திட்டத்திற்கு அமைய அனைத்துப் பாடங்களிலும் அதிவிசேட சித்தி பெற்றிருந்தனர். அவர்களில் எவருக்குமே அவர்களின் தேசிய நிலை தெரியாது. உண்மையில் சாதாரண தரப் பரீட்சையில் இந்த தேசிய நிலையை சாதாரணமாக கண்டறிவது முடியாத காரியமே. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

நீதனுக்கு வாழ்த்துக்கள். உயர்தரத்திலும் இலங்கையில் முதலாவதாக வர வாழ்த்துகிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரட்ணகுமார் வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

.

இரட்ணகுமார் நீதன் அவர்களுக்கு, வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் உரித்தாகுக.

அவருக்கு தமிழ் மொழியை கற்பித்த, தாயாருக்கு இரட்டை பாராட்டுக்கள்.

.

நாங்கள் கல்வி கற்ற கல்லூரியில் மட்டும் குறிப்பிட்ட எண்ணிக்கையானோர் அன்றைய பாடத்திட்டத்திற்கு அமைய அனைத்துப் பாடங்களிலும் அதிவிசேட சித்தி பெற்றிருந்தனர். அவர்களில் எவருக்குமே அவர்களின் தேசிய நிலை தெரியாது. உண்மையில் சாதாரண தரப் பரீட்சையில் இந்த தேசிய நிலையை சாதாரணமாக கண்டறிவது முடியாத காரியமே.

றோயல், விசாகா தொடக்கம் யாழ் இந்து பரியோவான் வரை ஒரு பாடசாலையிலையே பலபேருக்கு எல்லாத்திலையும் அதிவிசேட சித்தி வருகிறது வழமைதானே. ஆனால், தேசிய நிலை அறியப்படுவது சாத்தியப்படாத விசயமாக அப்போது இருந்து இருக்கும் என்று சொல்ல ஏலாது. கல்வித்திணைக்களம் என்ன அவ்வளவு கேவலமான நிலமையிலையா அப்போது இருந்திச்சிது.

  • கருத்துக்கள உறவுகள்

.

நாடும், நாமும் இருக்கும் சூழ்நிலையில்....

சில இடங்களில் அவரின் தனிப்பட்ட விடயங்களை தவிர்த்திருக்கலாம்.

எத்தனையோ விடயங்களில் ஒட்டுக்குழுக்கள் முனைப்பாக வேலை செய்து கொண்டிருக்குது. கவனம். கள்ளர் கூட்டம்.

.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.