Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கரும்புலிகள்.....

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கரும்புலிகள்.....

கரும்புலிகள் நினைவுக் கவிதை....

கவிதை - இளங்கவி

தமிழீழக் கடலின்

ஒவ்வோர் நீர்த்துளியும்

தன்னில் எரிந்த கரும்புலியின்

கதை சொல்லக் காத்திருக்கு........

எதிரியிடம் சிக்கி

மானம் இழந்ததனால்

அது விடும் கண்ணீர்த்துளிகள் சேர்ந்து

ஆழிப்பேரலையாகக் காத்திருக்கு......

நீரிலே அக்கினிக்குண்டம் வளர்த்து

அதிலே எதிரியைப் பலிகொடுத்து

எங்கள் கடலை எதிரி தொடாமல்

எங்களுக்காய் வைத்திருந்த

இரும்பு மனிதர்கள்

எங்கள் கரும்புலிகள்........

பிரயாணம் தொடங்கிவிட்டால்

அவனுக்கு புரிவதெல்லாம்

ஈழ விடுதலை......

தெரிவதெல்லாம்

எதிரியின் இலக்கு.......

அவன் இலட்சியம்

தான் எரிந்து எதிரியை எரிப்பது.....

தன் வாழ்வுக்காய்

தன் இனத்தை எரிப்பதல்ல....

காதல், வீரம், பாசம், சோகம்

எல்லாம் ஒன்றாய் சேர்த்த

ஓர் உறுண்டை அவன்.....

அது தனி மனிதருக்காய் அல்ல....

தான் பிறந்த மண்ணுக்காய்....

எரிந்த மனிதர்கள் எலும்பில்

குளிர்காய அவன் விரும்பியதில்லை.....

புலிதான் அவன்

ஆனாலும் பொறுக்கிப் போடப்படும்

இறைச்சி தின்னும்

புலியாய் இருக்கவில்லை.....

புல் மட்டும் உண்ணும்

பசுவாகவே இருந்தான்......

நாட்டுக்காய் தன் உயிரையே

பாலாகக் கொடுத்தவன்.....

செம்மொழி மாநாட்டின்

(அ)சிங்கமாய் இருக்க

அவன் விரும்பியதே இல்லை....

தன் மொழி உயிரோடிருக்க

தன்னுயிரை உருக்கி

படிக்கல்லாய்க் கட்டியவன்.....

அவனின் இலக்கணங்கள்

சுய நலமென்றால் என்ன என்றால்

பதில் தெரியாது முழிப்பான்.......

போர் என்ற சொல் கேட்க முதல்

அவன் துப்பாக்கி

குண்டுகளால் நிரம்பிவிடும்.....

இரவுத் தூக்கமின்றி

ஆந்தைபோல் விளித்திருப்பான்....

ஆனாலும் காலைப் பொழுதாகிவிட்டால்...

வாசல் நோக்கி அவன் கண்கள்

தபால்காரனை நோக்கியே இருக்கும்

காதலியிடமிருந்து கடிதத்துக்கல்ல.....

அம்மாவின் பாசமடலுக்கல்ல....

தலைவனிடமிருந்து மட்டும்

தன் யாத்திரைக்கு

திகதி குறிக்கும் மடலுக்காக மட்டுமே.....

மரண பயத்துக்காய்

தினம் தினம் மாண்டுபோகும்

மனிதரின் மத்தியில்......

மண்ணுக்காய் தான் மரணிக்கப் போகும்

தாமதிக்கும் கணங்களுக்காய்

தினம் தினம் செத்த

ஓர் தியாகக் குழந்தையவன்.....

இவன் உயிரை உருக்கி

நெருப்பில் காய்ச்சிய இரத்தத்தில்

உல்லாசக்குளியல் போடும்

சுயநலக் குப்பைகள்

கரும்புலியின்

தியாக வெம்மையில் கருகும்

தேதியொன்று வரும்......

அங்கே அக்கினனிப் பறவைகளாய்

மீண்டெழும் தமிழினத்தின்

விடுதலைக் கரங்கள்

பாதையோரம் காத்திருந்து வணங்கும்

ஈழ விடுதலைக்கு

பாதையமைத்துத் தந்தவனுக்காய்.......

இளங்கவி.

  • கருத்துக்கள உறவுகள்

கரும்புலிகள்.....

கரும்புலிகள் நினைவுக் கவிதை....

கவிதை - இளங்கவி

செம்மொழி மாநாட்டின்

(அ)சிங்கமாய் இருக்க

அவன் விரும்பியதே இல்லை....

தன் மொழி உயிரோடிருக்க

தன்னுயிரை உருக்கி

படிக்கல்லாய்க் கட்டியவன்.....

இவன் உயிரை உருக்கி

நெருப்பில் காய்ச்சிய இரத்தத்தில்

உல்லாசக்குளியல் போடும்

சுயநலக் குப்பைகள்

கரும்புலியின்

தியாக வெம்மையில் கருகும்

தேதியொன்று வரும்......

இளங்கவி.

இளங்கவியே பாராட்டுகள்.

அந்த நாள் வருமென்று நம்புவோம். நம் பணி தொடர்வோம்.

  • கருத்துக்கள உறவுகள்

நீரிலே அக்கினிக்குண்டம் வளர்த்து

அதிலே எதிரியைப் பலிகொடுத்து

எங்கள் கடலை எதிரி தொடாமல்

எங்களுக்காய் வைத்திருந்த

இரும்பு மனிதர்கள்

எங்கள் கரும்புலிகள்........

நன்றி இளங்கவி!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இளங்கவியே பாராட்டுகள்.

அந்த நாள் வருமென்று நம்புவோம். நம் பணி தொடர்வோம்.

நொச்சி

உங்கள் பாராட்டுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீரிலே அக்கினிக்குண்டம் வளர்த்து

அதிலே எதிரியைப் பலிகொடுத்து

எங்கள் கடலை எதிரி தொடாமல்

எங்களுக்காய் வைத்திருந்த

இரும்பு மனிதர்கள்

எங்கள் கரும்புலிகள்........

நன்றி இளங்கவி!

suvy

கரும்புலிகளின் தியாகங்களைச் சொல்ல வார்த்தைகள் போதாது......

மண்ணை நெருங்கி வந்த பகையை எரித்த அக்கினிக் குஞ்ச்சுகள்....

கருத்துக்கு மிக்க நன்றிகள்.....

  • கருத்துக்கள உறவுகள்

செம்மொழி மாநாட்டின்

(அ)சிங்கமாய் இருக்க

அவன் விரும்பியதே இல்லை....

தன் மொழி உயிரோடிருக்க

தன்னுயிரை உருக்கி

படிக்கல்லாய்க் கட்டியவன்.....

எனக்கு பிடித்த வரிகள் ....தொடரட்டும் உங்கள் கவிதைகள்

Edited by putthan

கரும்புலிகள் நினைவுக் கவிதை தந்த இளங்கவி அவர்களுக்கு நன்றிகள்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு பிடித்த வரிகள் ....தொடரட்டும் உங்கள் கவிதைகள்

புத்தன்

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கரும்புலிகள் நினைவுக் கவிதை தந்த இளங்கவி அவர்களுக்கு நன்றிகள்...

குட்டி

உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றிகள்.

கரும்புலிகள் என்றென்றுமே தமிழர் மனங்களை விட்டு மறையாதவர்கள்....

  • கருத்துக்கள உறவுகள்

கரும்புலிகளின் தியாகத்தை ஒப்பிடவே முடியாது ... கவி படைத்த இளங்கவிக்கு எனது பாராட்டுகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கரும்புலிகளின் தியாகத்தை ஒப்பிடவே முடியாது ... கவி படைத்த இளங்கவிக்கு எனது பாராட்டுகள்

ரதி

உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி ரதி....

உலகத்தில் எதுவுமே அவகளின் தியாகத்திற்கு ஈடாகாது... அவர்களைப் பற்றிய நினைவுகளின் எண்ண ஓட்டங்களே என் வரிகளாய்....

மரண பயத்துக்காய்

தினம் தினம் மாண்டுபோகும்

மனிதரின் மத்தியில்......

மண்ணுக்காய் தான் மரணிக்கப் போகும்

தாமதிக்கும் கணங்களுக்காய்

தினம் தினம் செத்த

ஓர் தியாகக் குழந்தையவன்.....

தன்னின மக்களுக்காய் தான் மரணிக்கப் போகும்

தாமதிக்கும் கணங்களுக்காய்

தினம் தினம் செத்த

ஓர் தியாகக் குழந்தையவன்.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தன்னின மக்களுக்காய் தான் மரணிக்கப் போகும்

தாமதிக்கும் கணங்களுக்காய்

தினம் தினம் செத்த

ஓர் தியாகக் குழந்தையவன்.....

ஆராவமுதன்

பொதுவாகவே மனிதர் எல்லோருக்கும் மரணபயம் அப்படியான மரணபயத்தை எண்ணி மனதளவில் சாகும் மனிதரின் மத்தியில் ''மண்ணுக்காய் தான் மரணிக்கப்போகும்....'' என்பது தன் நிலம், அந்த நிலத்தில் வாழும் தன் இனத்துக்காக என்பதையே குறிக்கிறது, அதை நீங்கள் குறிப்பிட்டதைப் போல தன்னின மக்களுக்காய் என்று நேரிடையாகச் சொல்ல நான் நினைக்கவில்லை....

நீங்கள் குறிப்பிட்ட வரிகளை புரிந்திராதவர்களுக்கும், புரிவதில் சிரமப்பட்டிருந்தவர்களுக்கும் நானே அதை விளக்கும் முகமாக உங்கள் விமர்சனம் அமைதிருந்ததில் எனக்கு மகிழ்ச்சி...

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.