Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குட்டிமணியை சிங்கள அரசிடம் ஒப்படைத்தது யார்..? நடந்தது என்ன..? வைகோ வெளியிட்ட திடுக்கிடும் தகவல்..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

1983-ம் ஆண்டு ஜூலை 25-ம் தேதி வெளிக்கடை சிறையில் சிங்கள வெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட தமிழீழத்து தளபதிகளில் ஒருவரான குட்டிமணியை 1973-ம் ஆண்டு தமிழகத்தில் கைது செய்து சிங்கள அரசிடம் ஒப்படைத்தவர் கருணாநிதிதான் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

நேற்று சென்னையில் நடைபெற்ற பார்வதியம்மாளைத் திருப்பி அனுப்பிய சம்பவத்திற்கெதிரான கண்டனக் கூட்டத்தில் பேசுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது பற்றி வைகோ பேசியதாவது :

1973-ம் ஆண்டுவாக்கில் குட்டிமணி தமிழகத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்ததை பத்திரிகைகள் செய்தியாக வெளியிட்டிருந்தன. இந்த நேரத்தில் இது பற்றி அறிந்த சிங்கள அரசு குட்டிமணியைத் தங்களிடம் ஒப்படைக்கக் கோரி இந்திய அரசுக்குக் கடிதம் எழுதியது. இந்திய அரசு தமிழக அரசுக்குக் கடிதம் எழுதி கருத்து கோரியிருந்தது.

கலைஞர் சிறிதும் யோசிக்காமல் குட்டிமணியை சிங்கள அரசிடம் ஒப்படைக்க சம்மதம் தெரிவித்தார். அதேபோல் குட்டிமணி சென்னை விமான நிலையத்தில் சிங்கள அரசு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு அவர் இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு சித்ரவதைக்குள்ளாக்கப்பட்டார்.

இந்த நேரத்தில் நான் தி.மு.க.வின் வெறி பிடித்த தொண்டன். கலைஞரின் அதி முக்கிய விசுவாசி. தீவிரமான தம்பி.. அப்போது நாடாளுமன்றத்திலே தி.மு.க.வின் சார்பிலே இலங்கை பிரச்சினை குறித்து நான்தான் ஆவேசமாக பேசிக் கொண்டிருந்தேன்.

அந்த நேரத்தில் நடந்த இந்த குட்டிமணியின் நாடு கடத்தல் உத்தரவில் என்ன நடந்தது என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால் இந்தச் சம்பவம் நடந்த உடனேயே தமிழகத்தில் ஊர், ஊருக்கு “குட்டிமணியைக் காட்டிக் கொடுத்த கருணாநிதி ஒழிக” என்று சொல்லி போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.

தி.மு.க.வின் அதி தீவிர தொண்டனான நான் இதைப் பார்த்து பெரிதும் வருத்தப்பட்டேன். முடிந்த அளவுக்கு அந்த போஸ்டர்களை கிழிக்கின்ற அளவுக்குக்கூட சென்றிருந்தேன். இதுவெல்லாம் அந்த நிகழ்ச்சியை தமிழகத்து மக்களிடமிருந்து மறைத்துவிட முடியாது என்பதை உணர்ந்த நான் அடுத்து செய்ததுதான் என் வாழ்க்கையில் நான் செய்த மிகப் பெரிய முட்டாள்தனம்.

குட்டிமணியின் வழக்கறிஞர் கரிகாலன் எனக்கும் நல்ல நண்பர்தான். அவரிடம் நான் பேசினேன். குட்டிமணி கைது செய்யப்பட்டு சிங்கள அரசிடம் ஒப்படைக்கப்பட்ட விவகாரத்தில் கலைஞருக்குத் தொடர்பில்லை என்று குட்டிமணியிடம் ஒரு கடிதம் வாங்கித் தரும்படி அவரைக் கேட்டுக் கொண்டேன்.

மூன்று மாதங்களுக்கு ஒரு முறைதான் வழக்கறிஞர் கரிகாலனால் குட்டிமணியைச் சந்திக்க முடியும் என்பதால் நான் இதை மிகவும் அவசரப்படுத்தினேன். கரிகாலன் முதல் முறை குட்டிமணியைச் சந்தித்து இது பற்றித் தெரிவித்தபோது குட்டிமணி இது பற்றி தங்கத்துரை மற்றும் ஜெகனிடம் ஆலோசித்துவிட்டுச் சொல்வதாகச் சொல்லியனுப்பி விட்டார்.

ஆனால் அடுத்த முறை கரிகாலன் அவர்களைச் சந்தித்தபோது ஒரு கடிதத்தை எழுதியனுப்பினார் குட்டிமணி. அந்தக் கடித வாசகங்கள்கூட நான் எழுதிக் கொடுத்தவைதான். அதேபோல் குட்டிமணி எழுதிக் கொடுத்திருக்கிறார்.

அதுல இருந்தது என்னவென்றால், “குட்டிமணியாகிய நான் கைது செய்யப்பட்டு சிங்கள அரசிடம் ஒப்படைக்கப்பட்டபோது, நான் ஒரு தமிழ் போராளி என்பது தமிழக முதல்வர் கருணாநிதிக்குத் தெரியவே தெரியாது..” என்று எழுதப்பட்டிருந்தது.

இந்தக் கடிதம் கலிங்கப்பட்டியில் இருந்த எனக்கு கரிகாலன் மூலமாகக் கிடைத்தது. நான் உடனேயே இதனை கருணாநிதிக்கு அனுப்பி வைத்தேன். பின்பு ஒரு பத்து நாட்கள் கழித்து சென்னைக்கு வந்து கருணாநிதியைச் சந்தித்து அந்தக் கடிதம் பற்றிக் கேட்டபோது “இவ்ளோ முக்கியமான லெட்டரை எதுக்கு போஸ்ட்ல அனுப்புனீங்க..? இப்பத்தான் எல்லா லெட்டரையும் பிரிச்சுப் பார்த்துட்டுத்தான கொடுக்குறாங்க.. சென்சார்ஷிப் இருக்குன்னு உங்களுக்கே தெரியாதா..?” என்றார்.

இப்படியும் ஒருவேளை நடந்தாலும் நடக்கும் என்பதால் நான் அந்தக் கடிதத்தை ஜெராக்ஸ் எடுத்து வைத்திருந்தேன். அந்தக் காப்பியை உடனேயே எடுத்து கருணாநிதியிடம் கொடுத்தேன். அதனை கருணாநிதி வாங்கிப் படித்துவிட்டு அடுத்த நாளே முரசொலியில் அதனை வெளியிட்டார். ஆனால் அந்தக் கடிதத்தை வாங்க உதவிய என்னைப் பற்றி ஒரு வார்த்தைகூட அப்போது குறிப்பிடவில்லை.

ஆனால் இதுதான் என் அரசியல் வாழ்க்கையில் நான் செய்த மிகப் பெரிய முட்டாள்தனம் என்று இப்போதும் கருதுகிறேன்..” என்று வருத்தத்தோடு குறிப்பிட்டார் வைகோ.

http://tamilulakam.com/news/view.php?id=9378

  • கருத்துக்கள உறவுகள்

தானாக ஒரு கட்சி தொடங்காமல் இப்படி கருணாநிதியுடனும், ஜெயலலிதாவுடனும் கூட்டு சேர்ந்தால் அவர்கள் உபயோகித்து விட்டு தூக்கி எறிவார்கள் தானே.

  • கருத்துக்கள உறவுகள்

குட்டிமணி, தங்கண்ணா இறுதியாக பிடிபட்ட இடம், சூழ்நிலை வேறுபட்டதாகவே நாணறிந்த தகவல்!!!

கருணாநிதிக்கு பிறகு தான் தான் தி.மு.க.தலைவர் எண்ரு நம்பி குட்டிமணிக்கும் ஈழத்தமிழருக்கும் அப்போதே இவர் துரோகம் செய்திருக்கின்றார்.துரோகத்தின் தொடர்கதை தான் கருணாநிதியோ ஜெயலலிதாவோ தனது தலைவர் என தெரியாமல் தவித்தது.

இவரும் எல்.கணேசனும் டெல்கியில் இருக்கும் போது கருணாநிதி பற்றி அப்பவே எங்களுக்கு சொன்னார்கள்..84 இல் சென்னையில் இலங்கை தமிழர் தொடர்பாக கருணாநிதி ஒரு பெரிய கூட்டத்தைகூட்டியிருந்தார்.நானும் போயிருந்தேன்.மரீனா கடற்கரையில் நடந்தது.பலரும் வந்து ஏதேதோ பேசினார்கள் கடைசியில் கருணாநிதி வந்து தமிழீழம் என்ற ஒரு சொல்லு வாராமல் பட்டும் படாமல் பேசிவிட்டு போய்விட்டார்.இதை எல்.கணேசன் சொன்னார் மத்திய குழு கூட்டத்தில் நாங்கள் உணர்சிவசப்பட்டு கனக்க கதைத்தோம் கருணாநிதி தங்களை பார்த்து எமது அரசியலுக்க ஈழப்பிரச்சனையை சீரியசாக இழுத்தால் நாங்கள் இல்லாமல் போய் விடுவோம் சும்மா மேடையில் பேசுவதுடன் காணும் என்றார்.எனவே நீங்கள் கருணாநிதியைன் நம்பவேண்டாம் என்று அவருடன் இருந்தவர் 84 இலேயே சொன்னார்.

மருதங்கேணி நம்பமாட்டார்.அதற்காக விலாசம். 86 சவுத் அவெனியு. நியு டெல்கி.

எல்.கணேசன்,வை கோ இருவரும் உயிருடன் தான் இருக்கின்றார்கள் போன் போட்டு கேட்டு பாரும்

  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதிக்கு பிறகு தான் தான் தி.மு.க.தலைவர் எண்ரு நம்பி குட்டிமணிக்கும் ஈழத்தமிழருக்கும் அப்போதே இவர் துரோகம் செய்திருக்கின்றார்.துரோகத்தின் தொடர்கதை தான் கருணாநிதியோ ஜெயலலிதாவோ தனது தலைவர் என தெரியாமல் தவித்தது.

இவரும் எல்.கணேசனும் டெல்கியில் இருக்கும் போது கருணாநிதி பற்றி அப்பவே எங்களுக்கு சொன்னார்கள்..84 இல் சென்னையில் இலங்கை தமிழர் தொடர்பாக கருணாநிதி ஒரு பெரிய கூட்டத்தைகூட்டியிருந்தார்.நானும் போயிருந்தேன்.மரீனா கடற்கரையில் நடந்தது.பலரும் வந்து ஏதேதோ பேசினார்கள் கடைசியில் கருணாநிதி வந்து தமிழீழம் என்ற ஒரு சொல்லு வாராமல் பட்டும் படாமல் பேசிவிட்டு போய்விட்டார்.இதை எல்.கணேசன் சொன்னார் மத்திய குழு கூட்டத்தில் நாங்கள் உணர்சிவசப்பட்டு கனக்க கதைத்தோம் கருணாநிதி தங்களை பார்த்து எமது அரசியலுக்க ஈழப்பிரச்சனையை சீரியசாக இழுத்தால் நாங்கள் இல்லாமல் போய் விடுவோம் சும்மா மேடையில் பேசுவதுடன் காணும் என்றார்.எனவே நீங்கள் கருணாநிதியைன் நம்பவேண்டாம் என்று அவருடன் இருந்தவர் 84 இலேயே சொன்னார்.

மருதங்கேணி நம்பமாட்டார்.அதற்காக விலாசம். 86 சவுத் அவெனியு. நியு டெல்கி.

எல்.கணேசன்,வை கோ இருவரும் உயிருடன் தான் இருக்கின்றார்கள் போன் போட்டு கேட்டு பாரும்

இந்த கற்பனைகள் கலக்காத கதைகளை நம்பாது போனால் எனது அறிவில் ஏதும் குறைபாடு இருக்க வேண்டும்!

எனது ஆசையெல்லாம்..............

லண்டனில் மகாத்மாகாந்தி வந்து உங்களது வீட்டில் தங்கியிருந்து படித்தபோது.... நீர் ஒரு இந்தியன் ஆகவே இந்திய சுதந்திரத்திற்காக போரடவேண்டும் என்று நீங்கள் வற்புறுத்தி கூறிய அறிவுரைகளை தொடர்ந்து........... மகாத்மாகாந்தி பயணித்த பயணங்களை.

இனியும் மூடி மூடி மறைக்காமல் நீங்கள் எழுதி நாங்கள் வாசிக்க வேண்டும் என்பதே.

குறைகுடம் ஒருபோதும் தளம்பாதுதான்....... அதற்காக அந்த சரித்திரத்தை மாற்றிய சந்திப்புகளை எம்மைபோன்ற இளையோருக்கு நீங்கள் மறைப்பதும் என்பது எமது இனத்திற்கு நீங்கள் முழுதாக புடைக்வில்லை என்றாகிவிடும்!

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைச் செய்திகளை கற்பனை கலந்து பொய்யாக்கி சொல்வதால் தான் எல்லோரும் இவர்களை கோமாளி என்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

குட்டிமணி, தங்கண்ணா இறுதியாக பிடிபட்ட இடம், சூழ்நிலை வேறுபட்டதாகவே நாணறிந்த தகவல்!!!

நீங்கள் சொல்வதே சரியானதாகும்.கலைஞரைப் பழிவாங்க நினைத்து வை.கோ சில தவறான செய்தியைச் சொல்கிறார்.இது தமிழ்நாட்டில் எடுபடும் அனால் விபரம் தெரிந்த எமக்கு வை.கோ ஏன் இதைச் சொன்னார் என்றே எண்ணத் தோன்றுகிறது.

குட்டிமணி, தங்கண்ணா இறுதியாக பிடிபட்ட இடம், சூழ்நிலை வேறுபட்டதாகவே நாணறிந்த தகவல்!!!

அவர்களையும் கேபீயா காட்டி கொடுத்தார்? பூச்சாண்டி கட்டாமல் தெரிந்தவைகளை சொல்ல வேண்டும் இல்லை என்றால் அதை பற்றி வாய் திறக்காமல் இருக்க வேண்டும்/.

இந்த கற்பனைகள் கலக்காத கதைகளை நம்பாது போனால் எனது அறிவில் ஏதும் குறைபாடு இருக்க வேண்டும்!

எனது ஆசையெல்லாம்..............

லண்டனில் மகாத்மாகாந்தி வந்து உங்களது வீட்டில் தங்கியிருந்து படித்தபோது.... நீர் ஒரு இந்தியன் ஆகவே இந்திய சுதந்திரத்திற்காக போரடவேண்டும் என்று நீங்கள் வற்புறுத்தி கூறிய அறிவுரைகளை தொடர்ந்து........... மகாத்மாகாந்தி பயணித்த பயணங்களை.

இனியும் மூடி மூடி மறைக்காமல் நீங்கள் எழுதி நாங்கள் வாசிக்க வேண்டும் என்பதே.

குறைகுடம் ஒருபோதும் தளம்பாதுதான்....... அதற்காக அந்த சரித்திரத்தை மாற்றிய சந்திப்புகளை எம்மைபோன்ற இளையோருக்கு நீங்கள் மறைப்பதும் என்பது எமது இனத்திற்கு நீங்கள் முழுதாக புடைக்வில்லை என்றாகிவிடும்!

மகாத்மா மட்டுமல்ல சுபாஷ் சந்திரபோசும் ஆலோசனைகள் கேட்டிருப்பார். அவற்றையும் கற்பனை கலக்காமல் கூறினால் நல்லது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.