Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நினைக்க மறப்பது ஏனோ

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பட்டணத்து ஐயா என்று அழைக்க பட்ட செல்லத்தம்பி அவர்கள் காலமானார் . அவருக்கு வயது 85.. வாழ்வாங்கு வாழ்ந்தவர். பட்டணத்தில் அவரது கந்தோர் இருந்ததால் மூன்று மாதமொருமுறை வந்துபோவார். இரு ஆண்களும் இரு பெண்களுமாக் நான்கு பிள்ளைகள் .மனைவி ராசமணி அவரது வரவுக்கேற்ப செலவு செய்து பிள்ளைகளை படிப்பித்து ஆளாக்கி கலியாணமும் செய்து வைத்தார். மூத்தவர் டாக்டர் அமெரிக்காவில் குடும்பத்துடன் வாழ்ந்து கொண்டிருந்தார். இரண்டாவது மகன் லண்டனில் ஒரு நிறுவனத்தில் சொந்தக்காரராக் இருந்தார். மூன்றாவது மகள் கனடாவில் குடும்பத்துடன் வாழ்ந்தாள் .கடைக்குட்டி இந்தியாவில் ,தன் குழந்தைகளுடன் வாழ்த்து கொண்டிருந்தாள். எல்லோரும் குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தார்கள். மூன்றாவது மகள் தாய்த ந்தையாரை தனது நாட்டுக்கு கூப்பிட்டு அன்பாக் பராமரித்தாள் ஐந்து வருடங்களுக்கு முன் தாயார் இறந்து விட்டார் .. தந்தை வயோதிகத்தாலும் தனிமையாலும் அவதிப்படுவதால் பராமரிப்பு நிலையத்துக்கு அனுப்பினார்கள்.

விடுமுறையின் போது ஒவ்வொரு மக்களும் தமது குடும்பத்துடன் வந்து பார்த்து போவார்கள். மூன்றாவது மகள் தனது கவனிப்பிலேயே வைத்திருந்தால். வார இறுதியில் சென்று பார்த்து வருவாள். வேண்டிய போது வைத்திய நிர்வாகத்துடன் தொடர்பு கொண்டு கேட்டுக் கொள்வாள் . இவருக்கு பதினொரு பேரப்பிள்ளைகளும் மூன்று பூட்டப் பிள்ளைகளும் இருந்தனர். கடந்த சில வாரங்களாக் பேச்சு அற்று இருந்தார். உறவினர் சென்று பார்த்து குரல் கொடுத்தால் ம்ம்ம் ம்ம்ம் .....ம் என்ற உணர்வை தவிர எந்த பேச்சும் இல்லாதவராக இருந்தார். சென்ற வாரம் திங்கட் கிழமை காலமானார். உறவுகளுக்கெல்லாம் செய்தி பறந்தது. தாங்கள் இறுதிச்சடங்குக்கு வருவதாகவும் உடலை அதற்கேற்ற ஆயதங்களுடன் எட்டு நாள்வரை பாது காக்கும்படியும் சொன்னார்கள்.

அடக்கம் செய்யும் நாளுக்கு முதல் நாள் மாலையும் மறு நாள் காலையும் பார்வைக்கு வைத்து மதியம் ஆலய வழிபாடுடன் அடக்கம் செய்வதாக் ஒழுங்கு செய்தார்கள். முதல் நாள் மாலை ஊரவர்கள் உறவினர்கள் என்று மண்டபம் நிறைந்த ஜனக்கூட்டம். அவரை வைத்திருந்த பேழை ( சவப்பெட்டி ) மிகவும் விலை உயர்ந்தது. சடங்குக்கு வந்திருந்தவர்கள் எல்லாம் அவரது வாழ்க்கையை பற்றி புகழ்ந்தார்கள். பேரப் பிள்ளைகளும் தாத்தா என்று மாலை மரியாதை செய்தார்கள். உறவினர்களும் மலர் வலயம் வைத்து வணக்கம் செலுத்தினார்கள். சமய தலைவர்களும் வணக்க் நிகழ்வுகளை நடத்தினார்கள். எல்லோரும் அவரை அஞ்சலி செலுத்தி வழியனுப்பினார்கள்.அடக்க ஊர்வலம் மிக நீண்ட கார் பவனி போல் இருந்தது . அடக்க நிகழ்வுகளும் முடிவுற்ற பின் ஒரு மண்டபம் ஒழுங்கு செய்து மதிய உணவு வழங்கினார்கள். எல்லோரும் பசியாறி சென்றார்கள்.

எனது நண்பி ஒருவரும் இந்த அடக்க நிகழ்வுக்கு சென்று இருந்தாள். இது பற்றி பேசும் போது ...செலவுகள் வேண்டாமென்று சொல்ல வில்லை . சற்று சுருக்கமாய் செய்து அதில் சேமிக்கும் பணத்தை நம் நாட்டில் வாடும் உறவுகளுக்கு அனுப்ப ஏனோ இந்த மக்கள் மனம் வைப்பதில்லை. அந்த முதியவர் வாழ்வாங்கு வாழ்ந்து வேண்டியதெல்லாம் அனுபவித்து சென்றவர். உறவினர்களோ தங்கள் அன்பை பாசத்தை உயர்வகை பேழை எடுப்பதிலும் கோலாகலமாக் கொண்டாடி வழியனுப்புவதிலும் செலவிடுகிறார்களே என்று எண்ணிக் கவலைபட்டாள். தங்கள் அந்தஸ்த்து படாடோபம் என்பதை காட்டுகிறார்கள். எத்தனை பேருக்கு தாயகத்தில் வாடும் குழந்தைகள் விதவைகள் ஏழைகள் வதிவிடமிலாதோரை நினைக்க மனம் வருகிறது.........

எல்லோருக்கும் ஆறடி நிலம் தான் சொந்தம் .

கேளிக்கைகள் கொண்டாட்டங்களில் திளைக்கும் மனம் தானம் செய்யும் மன நிலையில் இல்லாதது ஏனோ ?.

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் ஊரில எங்கட அன்ரி ஒருவர் செத்துப் போனார்...அவவுக்கு ஊரிலேயே விலை கூடின பிரேதப் பெட்டி வாங்கி செத்த வீடு செய்தவை...சில பேர் பெற்றோர் உயிரோடு இருக்கும் போது கவனிக்க மாட்டார்கள் செத்தப் பிறகு ஆடம்பரமாய் செத்த வீடு செய்வார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஆக்கம் நன்றாக உள்ளது சகோதரி :lol:

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்வியலை எழுதும் தங்களது அடுத்த முயற்சிக்கு நன்றி

ஆனால் இது எவ்வளவு தூரம் சரி என்று தெரியவில்லை

சிலவற்றை சிலர் விட மாட்டார்கள்

இதை நிறுத்தி இதை செய் என்று சொல்வது சரியாக இருக்காது

அத்துடன் இதையும் செய்யுங்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம்

எனது தகப்பனாரின் இறுதி வேண்டுகோள்

தனது இறுதி ஊர்வலத்தை கல்யாணவீடுபோல் எந்த துக்கமும் இல்லாது செய்யவேண்டும் என்பது

அப்படித்தான் செய்தோம்

சிலவேளை அதை பார்ப்பவர்களுக்கு கேள்விகள் எழலாம்

அதற்காக எமது மற்றைய பொறுப்புக்களை நாங்கள் ஒதுக்கவோ பிற்போடவோ இல்லை

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனை பேருக்கு தாயகத்தில் வாடும் குழந்தைகள் விதவைகள் ஏழைகள் வதிவிடமிலாதோரை நினைக்க மனம் வருகிறது.........

எல்லோருக்கும் ஆறடி நிலம் தான் சொந்தம் .

கேளிக்கைகள் கொண்டாட்டங்களில் திளைக்கும் மனம் தானம் செய்யும் மன நிலையில் இல்லாதது ஏனோ ?.

நிலாமதி,

வளமை போல ஏதாவதொரு விடயத்தை வலியுறுத்தும் உங்கள் கதைகளில் இந்தக்கதையின் இறுதிக் கேள்வி சிந்திக்க வேண்டிய விடயம். ஆயினும் ஆறடிநிலம்கூட இல்லாமல் சாம்பராய் போகும் உடலை வழியனுப்பிய ஆயிரங்களால் எத்தனையோ ஆயிரம்பேரின் தேவையை பூர்த்தி செய்யலாம்.

மரணச்சடங்கு மட்டுமில்லை பல கொண்டாட்டங்கள் பகட்டுக்கு நடக்கின்றது. இதையெல்லாம் சிந்தித்தால் எங்கள் குழந்தைகளும் பெண்களும் அவலமுறும் நிலைவராது.

பாராட்டுக்கள் நிலாமதி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என் பதிவுக்கு கருத்து பகிர்ந்த ரதி..... புரட்சி .....விசு ......சாந்தி யாவருக்கும் என் நன்றிகள்

கேளிக்கைகள் கொண்டாட்டங்களில் திளைக்கும் மனம் தானம் செய்யும் மன நிலையில் இல்லாதது ஏனோ ?.

தானம் செய்யிறவனைப்பற்றி ஒருத்தும் பெரிசாக புகழ்ந்து கதைக்கமாட்டினம்,ஆனால் கல்யாணம் ,செத்தவீடு ஆடம்பரமாக செய்தால் பெரிசாக புகழ்ந்து கதைக்கும்.....அதுதான் மனம் நினைக்க மறுக்குதோ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லதொரு சமூகக்கதை. நன்றி நிலாமதி

எல்லோருக்கும் ஆறடி நிலம் தான் சொந்தம்.

கேளிக்கைகள் கொண்டாட்டங்களில் திளைக்கும் மனம் தானம் செய்யும் மன நிலையில் இல்லாதது ஏனோ ?.

உண்மைதான்.. சமூகப் பொறுப்புள்ள நியாயமான கேள்வி. மேலும் பல படைப்புக்களை தர வாழ்த்துக்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.