Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் எந்திரன் மோகம் குறைந்தது-தியேட்டர்கள் வெறிச்சோடுகின்றன

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் எந்திரன் மோகம் குறைந்தது-தியேட்டர்கள் வெறிச்சோடுகின்றன

16-enthiran61-2010.jpg

கொழும்பு: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் இணைந்து நடித்துள்ள எந்திரன் படத்திற்கு இலங்கையில் மோகம் குறைந்து விட்டதாக செய்திகள் கூறுகின்றன. பல தியேட்டர்களில் படம் எடுக்கப்பட்டு விட்டதாகவும், கூட்டம் குறைந்து வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

இதுகுறித்து தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள செய்தி...

இலங்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு பெரும் எதிர்பார்ப்புடனும், பெரும் ரசிகர் ஆரவாரத்துடனும் எந்திரன் திரையிடப்பட்டது. நீண்ட காலத்திற்குப் பிறகு ஒரு தமிழ்ப் படத்திற்கு இந்த அளவுக்கு வரவேற்பும், எதிர்பார்ப்பும் கிடைத்தது இதுவே முதல் முறையாகும்.

ஆனால் தற்போது கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் எந்திரனுக்கு மவுசு குறைந்து விட்டது. இங்குள்ள பல்வேறு தியேட்டர்களில் எந்திரன் படத்தை எடுத்து விட்டனர். கூட்டம் குறைந்து போனதே இதற்குக் காரணம்.

இதுகுறித்து யாழ்ப்பாணத்தில் இரு தியேட்டர்களுக்கு உரிமையாளரான தியாகராஜா என்பவர் கூறுகையில், படத்தைப் பார்க்க வரும் தமிழர்கள், இது தமிழ்ப் படம் போல இல்லையே, ஆங்கிலப் படம் போல இருக்கிறதே என்று கூறுகிறார்கள். அதை விட முக்கியமாக நமது கலாச்சாரத்திற்கும், இதற்கும் பொருத்தமாக இல்லையே என்பதுதான் அவர்களது முக்கிய கவலையாக உள்ளது.

இந்த எண்ணம் சிலரிடம் மட்டும் ஏற்படவில்லை. ஒட்டுமொத்த இலங்கைத் தமிழர்கள் மத்தியிலும் பரவியுள்ளதால் படத்தைக் காண வருவோர் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதன் காரணமாக எங்களது இரு தியேட்ட்டர்களில் போட்டிருந்த எந்திரனை, ஒரு தியேட்டரிலிருந்து எடுத்து விட்டோம் என்றார்.

பூபாளசிங்கம் என்ற தமிழர் கூறுகையில், இது தமிழ்ப் படம் போலவே இல்லை. வடிவேலு, கவுண்டமணி, செந்தில் போன்றோரின் காமெடி இல்லாமல் போனது படத்துக்கு மிகப் பெரிய பலவீனம். இங்குள்ள தமிழர்களுக்கு தமிழ்ப் படம் என்றால் அதில் காமெடியைத்தான் அதிகம் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் எந்திரனில் இது இல்லாதது பெரும் பலவீனம் என்றார்.

ஆரம்பத்தில் ரஜினி, ஐஸ்வர்யா படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்புடன் தியேட்டர்களுக்கு ரசிகர்கள் வந்தனர். ஆனால் அவர்கள் எதிர்பார்த்தது இல்லை என்பதால் ரசிகர்களிடையே ஆர்வம் குறைந்து போய் விட்டது என்றும் கூறினார் பூபாளசிங்கம்.

இதை விட முக்கியமாக, எந்திரன் ரிலீஸான அடுத்த நாளே மலேசியாவிலிருந்து பெருமளவில் டிவிடிக்கள் வந்து குவிந்து விட்டனவாம். இதுவும் தியேட்டர்களுக்கு ரசிகர்கள் வருகை குறைந்து போனதற்கு முக்கியக் காரணமாம். யாழ்ப்பாணத்தில் எந்திரன் திருட்டு விசிடியும், டிவிடியும் தாராளமாக கிடைக்கிறதாம்.

தமிழ் எந்திரன் நிலை இப்படியிருக்க, இந்தி ரோபோவுக்கு பெரும் ஏமாற்றம் மிஞ்சியுள்ளதாம். அதாவது இந்தி ரோபோவுக்கு சுத்தமாக வரவேற்பில்லையாம். இந்தியில் பார்ப்பதை விட தமிழிலேயே பார்க்கலாம் என்பதால் இந்தி ரோபோவைப் பார்க்க யாரும் ஆர்வம் காட்டவில்லையாம். மேலும், இந்திப் படம் என்றால் ஷாருக் கான் உள்ளிட்டோரின் படங்களைத்தான் அங்குள்ளவர்கள் எதிர்பார்க்கிறார்களாம். அதேசமயம், ரஜினியை தமிழ்ப் பட நடிகராக மட்டுமே பார்ப்பதாகவும், அதிலும் காமெடியில் கலக்கும் ரஜினியைத்தான் அதிகம் ரசிப்பதாகவும் தியாகராஜா கூறுகிறார்.

http://thatstamil.oneindia.in/movies/news/2010/10/16-enthiran-tamil-cinema-srilanka-jaffna.html

--------------------------------------------------------------------------------------------------

டிஸ்கி:

இந்த படம் ஓடுதா ஓடலயா என்பதிலும் பார்க்க..காமெடி தலைவருக்கு ஈழத்திலும் ரசிகரக்ள் இருப்பது மிக்க மகிழ்ச்சி :)

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

"இதுகுறித்து யாழ்ப்பாணத்தில் இரு தியேட்டர்களுக்கு உரிமையாளரான தியாகராஜா என்பவர் கூறுகையில், படத்தைப் பார்க்க வரும் தமிழர்கள், இது தமிழ்ப் படம் போல இல்லையே, ஆங்கிலப் படம் போல இருக்கிறதே என்று கூறுகிறார்கள். அதை விட முக்கியமாக நமது கலாச்சாரத்திற்கும், இதற்கும் பொருத்தமாக இல்லையே என்பதுதான் அவர்களது முக்கிய கவலையாக உள்ளது"

:):)

இலங்கையில் எந்திரன் மோகம் குறைந்தது-தியேட்டர்கள் வெறிச்சோடுகின்றன

[

இதுகுறித்து யாழ்ப்பாணத்தில் இரு தியேட்டர்களுக்கு உரிமையாளரான தியாகராஜா என்பவர் கூறுகையில், படத்தைப் பார்க்க வரும் தமிழர்கள், இது தமிழ்ப் படம் போல இல்லையே, ஆங்கிலப் படம் போல இருக்கிறதே என்று கூறுகிறார்கள். அதை விட முக்கியமாக நமது கலாச்சாரத்திற்கும், இதற்கும் பொருத்தமாக இல்லையே என்பதுதான் அவர்களது முக்கிய கவலையாக உள்ளது.

முடியல...............

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முடியல...............

vadivelu-au27-2008.jpg

நீங்க வடிவேல் ரசிகர் போல் தெரியுது தோழர்.. :)

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ரை கூட்டு ஒண்டு உந்த படத்தை பாத்துட்டு சொல்லிச்சுது....

மச்சான் உந்த எந்திரன் கதையை என்னட்டை தந்திருந்தால்... இந்தியாவிலை இருக்கிற நல்ல சீனறியையும் வைச்சு அங்கையிருக்கிற கொம்பியூட்டர் ரெக்கினிக்காரனையும் வைச்சு ஒரு கோடி ரூபாக்குள்ளை முடிச்சிருப்பன் எண்டு :)

அதோடை இன்னுமொண்டையும் சொன்னான்: டேய் அந்தக்காலத்திலை வந்த தமிழ்ப்பக்திபடங்களை பாரடா அந்தமாதிரி ரெக்னிக்

அதையே இப்ப உவ்வளவு காசு செலவழிச்சு எங்களை பேப்பட்டம் கட்டுறாங்கள் :)

போன வாரம் டொரொன்டோ டாப் 10 இல் எந்திரனுக்கு 8 வது இடம்.இவ்வளவிற்கும் 3 தியேட்டர்களில் தான் ஓடுகின்றது.($120,00.00).மிகப் பெரிய வெற்றி என்றுதான் சொல்ல வேண்டும்.

நானும் தியேட்டரில் போய் பார்த்தேன்.மிக நல்ல படம்.(சயன்ஸ் படமென்ற ரீதியில்).ஒரு குழப்பமுமில்லாத தெளிவான திரைக்கதை.படத்தை எடுத்த விதத்திற்கு சங்கருக்கு 90 மார்க்ஸ்.ரஜனி வழக்கம் போல சுப்பர் ஸ்ரார்.படப் பிடிப்பும் ஜ்ஸ்வர்ராயும் அழகோ அழகு. (நோ மோர் 50 கே.ஜி தாஜ்மகால் 100 கே.ஜி தாஜ்மகால்.).எந்திரன் அதை எனக்கே எனக்கா என பாடும் காட்சி சுவாரஸ்யம்.கடைசியில் படம் கொஞ்சம் இழுபட்டாலும்(கிளைமாக்ஸ் என்றால் இப்படித்தான்) மிகவும் தரமான விஞ்ஞானப் படத்தை தந்த சங்கர் தமிழ்பட உலகை அடுத்த ஒரு படிக்கு உயர்த்தித்தான் இருக்கின்றார்.

நீங்கள் எல்லோரும் எப்படியும் பார்ப்பீர்கள் எனவே கதைபற்றி எழுதவில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிகவும் தரமான விஞ்ஞானப் படத்தை

முடியல... :wub::lol::lol:

எதுங்கோ விஞ்ஞானம்? பற்றி வீக்காய் கிடந்தவர் ஒரு நொடியில் சார்ஜ் செய்துவிட்டு ரயிலை பிடிப்பதா? சுப்பர் மான் மாதிரி தாவித் தாவி தீயில் இருந்து காப்பாற்றுவதா? கார் பற்றியில் சற்று நேரம் சார்ஜ் செய்துவிட்டு அத்தனை சாகசங்கள் செய்வதா?

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு எழுதியதற்காக நான் நேற்று இப்படத்தை பார்த்தேன்

சில காட்சிகளில் பிரமிக்க தக்கதாக ஒரு தமிழனாலும் எடுக்க முடியும் என்று வேண்டுமானால் மார்தட்டலாம்

எனது மக்கள் இங்கு பிறந்தவர்கள்

அநேகமாக தமிழ் படம் பார்க்கும்போது

அதுவும் சண்டைக்காட்சிகள் பார்க்கும் போது சிரிப்பார்கள்

ஆனால் இப்படத்தின் காட்சி அமைப்புக்களில் தங்களால் பிழை பிடிக்க முடியாத அளவுக்கு அமைக்கப்பட்டுள்ளதை பாராட்டினார்கள்.

எந்திரனில் எதுவுமே இல்லை, முதல்வன் திரைப்பfஅத்தில் ப்யன்படுத்திய சில விடயாங்களை கொஞம் அதிக்மாக எடுத்து இருக்கிரார் அவ்வளவு தான், அதை விட தமிழ்ழ் சினிமா தரமான சினிமாவை நோக்கிப் போகுது, உதாரணமாக சுப்பிரமணிய புரம், அங்காடித் தெரு மற்றும் மதராஸிப் பட்டணம் போன்ற படங்களை குறிப்பிட்லாம், இவ்வாறான ஒரு க்ட்டதில் இப்படி ஒரு வடி கட்டிய மசாலா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.