Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பேசுவது எப்படி..

Featured Replies

மனைவியுடன் பேசுவது எப்படி என்று குறித்து என் சிறிய பார்வை.

"ச்சே, என்ன இழவு இது? சாம்பார்ன்ற பேருல ஏதோ பண்ணி வச்சிருக்கே" என்று மனைவியைத் திட்டத் தெரிந்த நீங்கள் என்றாவது அடுக்களையில் அவர்களுக்கு உதவி செய்த அனுபவம் உண்டா? உங்கள் மீது அன்பு இருக்கும் காரணத்தால் எத்தனையோ தியாகங்களைச் செய்து உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் தன்னையே உருக்கிக் கொள்கிற அந்த ஜீவனுக்கு நீங்கள் உங்கள் தோலையே செருப்பாகத் தைத்துப் போட்டாலும் ஈடாகாது.

யோசித்துப் பாருங்கள், யாரோ ஒருவர், உங்கள் நல்லது கெட்டது எதிலும் நாட்டமில்லாதவர் ஆனால் உங்கள் மேனேஜர் என்ற ஒரே காரணத்திற்காக அவர் திட்டும் எல்லா வார்த்தைகளையும் ஜீரணிக்கிற உங்களால் உங்களுக்காக மட்டுமே வாழ்கிற, உங்கள் சுக, துக்கங்களில் பங்கு கொள்கிற உங்கள் மனைவியின் ஒரு சிறிய கோப வார்த்தையைக் கூட தாங்கிக் கொள்ள முடியாமல் போகிறதே, அது ஏன்?

நானும் என் மனைவியிடம் சண்டை போட்டவன்தான், போடுபவன்தான். ஆனால் சமீப காலங்களில் எங்களுக்குள் சண்டையே வந்ததில்லை. காரணம்?- நீங்கள் யூகித்து சரிதான், நான் பல சமயங்களில் விட்டுக் கொடுக்கப் பழகிக் கொண்டேன்.

உங்கள் மனைவியிடம் எப்போதாவது "அழகாக இருக்கிறாய்" என்று சொல்லியிருக்கிறீர்களா? சொல்லிப் பாருங்கள், "நீ வைத்த குழம்பும், ரசமும் என் வாழ்வில் சாப்பிட்டதில்லை" என்று மட்டும் சொல்லிவிட்டால் போதும், உங்கள் சொல்லுக்கு என்றும் அவர் அடிமைதான். "அது எப்படி மனசார பொய் சொல்வது" என்று (காமெடிக்காகவாவது)கேட்கிறீர்களா? அதே மேனேஜர் உதாரணம்தான். "யு ஆர் கிரேட் சார்","வாட் எ பன்டாஸ்டிக் திங் யு ஹாவ் டன் சார்", என்றெல்லாம் மேனேஜரைப் புகழும் உங்களுக்கு இது ஒரு கஷ்டமான காரியமா?

அதே போல்தான், தினசரி குடும்ப நடவடிக்கைகளில் உங்கள் மனைவிக்கு சிறு சிறு உதவிகள் செய்தாலே போதும், உங்கள் மீது மதிப்பு பல மடங்கு ஏறிவிடும். நீங்கள் ப்ரீயாக இருந்தால், குழந்தைக்குப் பல் துலக்கி, குளித்துவிட்டு, யூனிபார்ம் மாட்டிவிட்டு (இதில் ஏதாவது ஒன்றைச் செய்தால் கூடப் போதும்) பிறகு பாருங்கள், உங்கள் இல்லற வாழ்க்கை இனிய வாழ்க்கைதான்.

கணவன் மனைவி சண்டைகளைப் பற்றிய ஜோக்குகளைக் கொஞ்சம் மூட்டை கட்டி வைத்துவிட்டு பார்த்தால், பெரும்பாலான கணவன் -மனைவிகள் சந்தோஷமாகவே இருக்கிறார்கள். ஒரு ஆணுக்கு கல்யாணத்திற்குப் பிறகுதான் குடும்பப் பொறுப்புகள் பற்றி ஒரு தெளிவு வருகிறது என்பது நிதரிசனம்.

நான் ஏற்கெனவே கூறியதுதான், இருந்தாலும் திரும்பவும் சொல்கிறேன், "நீங்கள் பிறரிடம் எதை எதிர்பார்க்கிறீர்களோ, அதை அவருக்கே கொடுங்கள், உங்கள் வாழ்க்கை இனிமையாகும்" மனைவியிடம் அன்பை எதிர்பார்க்கும் நீங்கள் அவருக்கு அன்பைக் கொடுங்கள், அந்த அன்பு என்றும் வீணாகாது!

WIFE IS THE SECOND MOTHER FOR A MAN WHILE A MAN IS THE FIRST SON OF HIS WIFE!

படித்ததில் பிடித்தது...

Edited by வீணா

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி ......

மனைவியிடம் பொய் சொல்ல அவசியம் இல்லை.... நேர்மையாக கதையுங்கள்.. மனைவி என்பவள் வெறும் சமையலுக்கான பதிலை எதிர்பார்த்திருக்கும் வேலைக் காரி இல்லை. அவளிடம் நேர்மையாக பேசினாலே எல்லா பிரச்சனைகளும் போய்விடும். முதலில் நேருக்கு நேரான விமர்சனமும், பதிலும் அவர்களுக்கு மிக மன உளைச்சலை தரும், ஆனால்கொஞ்ச நாட்கள் போன பின் புருஷன் தன்னிடம் நேர்மையாக கதைக்கின்றார் என்று மனைவி நிச்சயம் நம்பத் தொடங்குவார்...அன்றே இனிமையான உறவு ஆரம்பமாகும்: இது என் அனுபவம்

பிள்ளைகளுக்கு கூட பொய் சொல்லலாம்: நிச்சயம் மனைவிக்கு அல்ல

Edited by நிழலி

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பத்தில் மனைவிக்கு பொய் சொல்லி மாட்டுப்பட்ட அனுபவங்கள் அதிகம்.

எப்படித்தான் நான் சொல்லும் பொய்களை கண்டு பிடிக்கிறாரோ என்று ஆச்சரியப் படுவேன்.

ஒன்றில் எனக்கு பொய்யை வடிவாய் சொல்லத்தெரியாது, அல்லது அவர் திறமான சி.ஐ.டி யாக இருக்க வேண்டும் என்று நினைத்து இப்போ... பொய்யே சொல்வதில்லை. :D

Edited by தமிழ் சிறி

ஒருத்தொருக்கொருத்தர் விட்டுக்கொடுத்து மற்றவரின் சிரமங்களை அறிந்து அதற்கேற்ப உதவிகளையும் செய்து நண்பர்களாக பழகினால் வாழ்க்கை இனிக்கும். அதற்காகத்தான் வாழ்க்கைத் துணை என்பார்கள்.

இல்லாமல் ஒருத்தரை ஒருத்தர் அடக்க வெளிக்கிட்டிட்டு குறை பிடிக்கத் தொடங்கினால் அதோகதிதான். வேலை நேரம், தூங்கும் நேரம் தவிர்ந்த வீட்டிலிருக்கும் நேரமெல்லாம் நரகமாகத்தான் இருக்கும். அத்துடன் வேலையிலும் பிரச்சனை என்றால் சொல்லத்தேவையில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் நீங்களாக இருங்கள்

மனைவிக்காகவோ பிள்ளைகளுக்காகவோ ஒவ்வொரு முகம் காட்டலாகாது. உங்களது ஒரியினல் எதுவோ அதையே எவரும் விரும்புவர். அதுவே நிலைக்கும். அதுவே சந்தோசத்தையும் நிலையான சுகத்தையும் கொடுக்கும். :wub:

ஆரம்பத்தில் மனைவிக்கு பொய் சொல்லி மாட்டுப்பட்ட அனுபவங்கள் அதிகம்.

எப்படித்தான் நான் சொல்லும் பொய்களை கண்டு பிடிக்கிறாரோ என்று ஆச்சரியப் படுவேன்.

ஒன்றில் எனக்கு பொய்யை வடிவாய் சொல்லத்தெரியாது, அல்லது அவர் திறமான சி.ஐ.டி யாக இருக்க வேண்டும் என்று நினைத்து இப்போ... பொய்யே சொல்வதில்லை. :D

பாம்பின் கால் பாம்பறியும் தானே சிறி அண்ண? ^_^

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவள்பாவிக்கு நான் பொய் சொல்லுறதே இல்லை :o ........ சரி பொய் சொல்லி அங்கை ஒண்டும் கிழிக்கப்போறதும் இல்லை :( .....மாடு எங்கை மேயப்போனாலும் நேரகாலத்துக்கு கட்டைக்கு வந்து சேருமெண்டு சிங்கிக்கு நல்லவடிவாய்த்தெரியும் :D

  • கருத்துக்கள உறவுகள்

பாம்பின் கால் பாம்பறியும் தானே சிறி அண்ண? ^_^

பெண்கள் பொதுவாக நல்ல வகையில் ஆண்களின் நடத்தைகளை கவனிக்கிறார்கள். ஆண்கள் சொல்லுறதை இலகுவாக நம்பிறதில்லை என்று நினைக்கிறன். அதனால் அவர்கள் பொய்களை இலகுவாக அடையாளம் காண முடிகிறது. ஆனால் அதே நேரம் பெண்கள் சொல்லும் பொய்களை ஏமாளி ஆண்கள் இலகுவில் இனங்காண முடிவதில்லை என்றும் நினைக்கிறன். ஆண்கள்.. உணர்ச்சிக்கு அடிமையாகி அறிவை பயன்படுத்த தவறிவிடுகிறார்கள். பெண் என்ற உடன் ஆண் அதிகம் இரங்குவதும் அவன் பெண்களின் முன் தோல்வியடையக் காரணமாகிறது.

எதையும் பிளான் பண்ணி .. ஈவு இரக்கம் காட்டாது செய்தா.. பெண்கள் ஒன்றும் பண்ண முடியாது. :D:lol:

Edited by nedukkalapoovan

நீங்கள் சொல்லவது கூட சரியாக இருக்கலாம்...

மனசாட்சி என்று ஒன்று இருக்குமானால்... எம்மில் அன்பானவர்களிடமோ அல்லது நெருக்கமானவர்களிடமோ அனாவசிய பொய் சொல்ல வேண்டும் என்று சிந்திக்க விடாது. அதையும் மீறி சொல்ல வெளிக்கிட்டால் உடல் அசைவுகள் body language காட்டிக் கொடுத்துவிடும். (ஒரு பொய் சொல்வதானால் நல்லது நடக்கும் என்று நினைத்தால் சொல்லலாம்...)

பெண்கள் பொதுவாக நல்ல வகையில் ஆண்களின் நடத்தைகளை கவனிக்கிறார்கள். ஆண்கள் சொல்லுறதை இலகுவாக நம்பிறதில்லை என்று நினைக்கிறன். அதனால் அவர்கள் பொய்களை இலகுவாக அடையாளம் காண முடிகிறது. ஆனால் அதே நேரம் பெண்கள் சொல்லும் பொய்களை ஏமாளி ஆண்கள் இலகுவில் இனங்காண முடிவதில்லை என்றும் நினைக்கிறன். ஆண்கள்.. உணர்ச்சிக்கு அடிமையாகி அறிவை பயன்படுத்த தவறிவிடுகிறார்கள். பெண் என்ற உடன் ஆண் அதிகம் இரங்குவதும் அவன் பெண்களின் முன் தோல்வியடையக் காரணமாகிறது.

எதையும் பிளான் பண்ணி .. ஈவு இரக்கம் காட்டாது செய்தா.. பெண்கள் ஒன்றும் பண்ண முடியாது. :D:lol:

இதையெல்லாம் பப்ளிக்கில் சொன்னால் "வெரி டேஞ்சரஸ் பில்லௌஸ்... இவர்களைக் கேயார்புல்லாத் தான் ஹான்டில் பண்ணோணும்..." என்று பெண்கள் ப்ளான் பண்ணி இருப்பார்கள்... :rolleyes::D

இதெல்லாம் காதும் காதும் வைச்சது மாதிரி சொல்லோணும்... :lol:

  • 2 weeks later...

மனைவியிடம் பொய் சொல்ல அவசியம் இல்லை.... நேர்மையாக கதையுங்கள்.. மனைவி என்பவள் வெறும் சமையலுக்கான பதிலை எதிர்பார்த்திருக்கும் வேலைக் காரி இல்லை. அவளிடம் நேர்மையாக பேசினாலே எல்லா பிரச்சனைகளும் போய்விடும். முதலில் நேருக்கு நேரான விமர்சனமும், பதிலும் அவர்களுக்கு மிக மன உளைச்சலை தரும், ஆனால்கொஞ்ச நாட்கள் போன பின் புருஷன் தன்னிடம் நேர்மையாக கதைக்கின்றார் என்று மனைவி நிச்சயம் நம்பத் தொடங்குவார்...அன்றே இனிமையான உறவு ஆரம்பமாகும்: இது என் அனுபவம்

பிள்ளைகளுக்கு கூட பொய் சொல்லலாம்: நிச்சயம் மனைவிக்கு அல்ல

ஆத்துக்காரி யாழ்களம் பாக்கிறவாவோ? :D :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.