Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஐக்கிய நாடுகள் சபையின் ஒன்பதாவது பொதுச் செயலாளர் ராதிகா குமாரசுவாமி?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஐக்கிய நாடுகள் சபையின் ஒன்பதாவது பொதுச் செயலாளர் ராதிகா குமாரசுவாமி?

சனி, 26 மார்ச் 2011 21:22

ஐக்கிய நாடுகள் சபையின் ஒன்பதாவது பொதுச் செயலாளராக ஐ.நாவின் மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவரான ராதிகா குமாரசுவாமி நியமிக்கப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஐ.நாவின் தற்போதைய பொதுச்செயலாளர் பான் கீ மூனின் பதவிக்காலம் ஜூன் மாதம் இறுதியில் நிறைவடைய இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

ஐ.நா பொதுச்செயலாளர் பதவிக்கு இலங்கையைச் சேர்ந்த ராதிகா குமாரசுவாமியுடன் மூன்று பெண்களது பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. முன்னாள் அயர்லாந்து பிரதமர் உட்பட மூன்று பெண்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டபோதும் அவர்கள் இதனை நிராகரித்துள்ளதால் ராதிகா குமரசுவாமி ஐ.நாவின் பொதுச் செயலாளராக தெரிவு செய்யப்படுவார் என நம்பப்படுகிறது.

பெண்கள் பிரதிநிதித்துவத்துக்கு வாய்ப்பளித்தல் மற்றும் ஆசியப் பெண்களுக்கு முன்னுரிமை அளித்தல் ஆகிய செயற்திட்டங்கள் ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு ராதிகா குமரசுவாமிக்கு ஐ.நா பொதுச்செயலாளர் பதவி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

tamilenn

இலங்கைத் தமிழரின் அவலங்களை தெரியாத, சொகுசு வாழ்க்கை வாழ்ந்த, இலங்கைத் தமிழ் பெண் ராதிகாவால் தமிழருக்கு நியாயம் கிடைப்பது தள்ளிப் போகலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

மூனின் பதவிக்காலம் ஜூனுடன் முடிகிறது என்கிற செய்தியே மிகப்பெரிய ஆறுதல்..! :D:rolleyes:

முன்பு சிங்களம் தனது மூத்த இராசதந்திர குருவான ஜயந்த தனபாலவை ஐ.நா. செயலாளர் ஆக்கும் முயற்சியில் ஈடுபட்டு பின்னர் அதை கைவிட்டது.

மீண்டும் இந்த முயற்சியில் ஒரு பெண்ணை, தமிழரை இறக்குவதன் நோக்கம் போர்க்குற்ற விசாரணைகளில் இருந்து தப்பிக்கும் நோக்கமாக இருக்கலாம். ஆனால் இது எவ்வளவு தூரம் சிங்ககளத்திற்கு வெற்றி தருமோ தருமோ தெரியவில்லை.

அதேவேளை அப்படியே குமாரசாமி வந்தாலும் அவரால் எல்லாவற்றையுமே சிங்களத்திற்கு ஆதரவாக செய்யமுடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

radhika-kumaraswamy.jpg

ராதிகா குமாரசாமி வந்தால் சிங்களர் பக்கமே.. ஆதரவாக நிற்பார்.

இரண்டாவது முறையும் ஆசியாவை சேர்ந்தவரை தேர்ந்தெடுப்பார்களா.... என்பது சந்தேகமே.

  • கருத்துக்கள உறவுகள்

ராதிகா குமாரசாமி வந்தால் சிங்களர் பக்கமே.. ஆதரவாக நிற்பார்.

இரண்டாவது முறையும் ஆசியாவை சேர்ந்தவரை தேர்ந்தெடுப்பார்களா.... என்பது சந்தேகமே.

இதுக்கு ஒரு தீர்வு இருக்கு..! :unsure:

எங்கடை குமாரசாமி அண்ணையை பழம்பெரும் நடிகை ராதிகாவுக்கு முதலில கல்யாணம் பண்ணிவைக்க வேணும்..! :D மிச்சத்தை அண்ணன் பார்த்துக்கொள்ளுவார்தானே..! :lol:

இதுக்கு ஒரு தீர்வு இருக்கு..! :unsure:

எங்கடை குமாரசாமி அண்ணையை பழம்பெரும் நடிகை ராதிகாவுக்கு முதலில கல்யாணம் பண்ணிவைக்க வேணும்..! :D மிச்சத்தை அண்ணன் பார்த்துக்கொள்ளுவார்தானே..! :lol:

எப்படி எல்லம் இப்படி யோசிக்க முடியுது :D :D :D :D

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்கு ஒரு தீர்வு இருக்கு..! :unsure:

எங்கடை குமாரசாமி அண்ணையை பழம்பெரும் நடிகை ராதிகாவுக்கு முதலில கல்யாணம் பண்ணிவைக்க வேணும்..! :D மிச்சத்தை அண்ணன் பார்த்துக்கொள்ளுவார்தானே..! :lol:

கலியாணம் கட்ட ராதிகா சம்மதித்தாலும்......., smiley-love063.gif

குமாரசாமி அண்ணர் சம்மதிப்பாரா.....smiley-love007.gifsmiley-love064.gif :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்கு ஒரு தீர்வு இருக்கு..! :unsure:

எங்கடை குமாரசாமி அண்ணையை பழம்பெரும் நடிகை ராதிகாவுக்கு முதலில கல்யாணம் பண்ணிவைக்க வேணும்..! :D மிச்சத்தை அண்ணன் பார்த்துக்கொள்ளுவார்தானே..! :lol:

அடப்பாவி

அவர் மேல் கோபமிருந்தால்

கருத்துக்களத்தில் நாலு வசனம் எழுதி சாத்திறதை விட்டுவிட்டு

சரத்குமாரின் அடிகளைப்பார்த்துமா(படங்களில்) இப்படி குமாரசாமியண்ணையை நினைக்க மனசு வந்தது.....??? :lol::D:D

Edited by விசுகு

இதுக்கு ஒரு தீர்வு இருக்கு..! :unsure:

எங்கடை குமாரசாமி அண்ணையை பழம்பெரும் நடிகை ராதிகாவுக்கு முதலில கல்யாணம் பண்ணிவைக்க வேணும்..! :D மிச்சத்தை அண்ணன் பார்த்துக்கொள்ளுவார்தானே..! :lol:

குமாரசாமியண்ணை இதற்கு ஒப்புக் கொள்வாரா? :blink:

குமாரசாமி அண்ணை ஐ நா ராதிகாவின் இதழ்களை பற்றி சிலாகித்து முன்பு ஒரு திரியில் எழுதியிருந்தார் என நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

:o சந்திரிக்கா காலத்தில் இருந்த கோடரிக்காம்பு லச்சுமணன் கதிர்காமரின் நெருங்கிய தோழி இவர். நீலன் திருச்செல்வத்தின் நண்பியும் கூட. அதுமட்டுமல்லாமல் சிங்கள மேட்டுக்குடி வர்க்கத்தின் விசுவாசமான அடிமை. அவர் போட்டிருக்கும் உடையைப் பார்த்தாலே தெரியும் அவரின் விசுவாசம்.

ஒருமுறை லச்சுமணன் கதிர்காமரை ஐ.நா செயலாளராகப் போடச் சிங்களம் முயன்றது. அதில் ரெண்டு விடயங்களிருந்தன. முதலாவது, சிறுபான்மைத் தமிழினத்தைச் சேர்ந்த ஒருவரை தாங்கள் நியமிப்பதாக உலகுக்குக் காட்டிப் பீற்றிக் கொள்ளலாம். ரெண்டாவது, ஒரு தமிழினத் துரோகியை வைத்தே தமிழினத்துக்கெதிரான இனக்கொலையை தங்குதடையின்றி நடத்தி முடிக்கலாம். ஆனால் கதிர்காமரின் கஷ்ட்டகாலம் அவரை சந்திரிக்காவே பின்னர் போட்டுத்தள்ள வேண்டி ஆகிவிட்டது.

இப்போது இன்னொரு கோடரிக்காம்பு ராதிகா வடிவில் கிளம்பியிருக்கிறது. புலிகளியக்கத்தில் பெண்களை இணைப்பது பாரிய மனிதவுரிமை மீறல் என்ற அரிய கண்டுபிடிப்பை மேற்கொண்டு மேற்குலகிற்கு அறிக்கை சமைத்துக் கொடுத்து தானும் ஒரு மனிதவுரிமை வாதி என்று பெயரெடுத்ததோடு மட்டுமில்லாமல் சிங்களத்துடனும் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டவர்தான் இந்த ராதிகா. தமிழர் தாயகத்தில் கட்டுப்பாடற்ற சிங்களத்தின் இனவழிப்பு நடந்துகொண்டிருந்த தறுவாயில் புலிகளின் மனிதவுரிமை மீறல்களைப் பற்றி மட்டுமே பேசி சிங்களத்தின் கோர முகத்தை சர்வதேசத்திடமிருந்து மறைத்ததில் பெரும்பங்காற்றியவர் இவர்.

போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கெதிரான கொடுமைகள் என்று குற்றம் சாட்டப்பட்டு வரும் சிங்களத்தின் சரிந்துள்ள பெயரை தூக்கி நிறுத்துவதற்கு இந்தக் கோடரிக் காம்பு பயன்படுத்தப்படப் போகிறது. சிங்களம் சிபாரிசு செய்யப்போகும் "ஐ. நா செயலாளர்" எனும் எச்சில் எலும்புத்துண்டத்திற்காக இன்னொரு தமிழ் அடிமை நாய் வாலாட்டிக்கொண்டு கிளம்பியிருக்கிறது.

நாம் செய்யவேண்டியது இந்த அடிமையின் நோக்கத்தையும், அதன் எசமானர்களின் நோக்கத்தையும் குறிப்பிட்டு ஐ.நா வுக்குக் கடிதம் எழுதுவதுடன், இவரை எந்த முறையிலும் வரவிடாமல் தடுப்பதும்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

சிறிதாக ஒரு விளக்கு எரியத் தொடங்கும் முன்னேயே, அதை முளையிலேயே அணைத்து விட சிங்களமும் அதன் எஜமானர்களும் எம்மை விட 'ஒரு அடி' முன்னுக்கே நடக்கிறார்கள் போல் உள்ளது. இவ வாறதால சீனாவுக்கும் பல அனுகூலங்கள் உண்டு.பாங்கி மூன் ஒரு அறுந்து போன செருப்பு. அவரைத் தூக்கிப்பிடித்தால் பலரது 'மனிதாபிமான' முக மூடிகள் கிழிந்து விடும்.எனவே பெண்ணுருவில் ஒரு 'பாங்கி'.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.