Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் மக்களின் தேசிய அரசியல் உணர்வு மரணித்துவிடவில்லை

Featured Replies

தமிழ் மக்களின் தேசிய அரசியல் உணர்வு மரணித்துவிடவில்லை - பஸீர் சேகுதாவூத்

வடக்கு கிழக்கு இணைந்தே இருக்கவேண்டும் தங்களைத் தாங்களே ஆளவேண்டும் என்ற தேசிய அரசியல் உணர்வு விடுதலைப்புலிகள் இல்லாத போதிலும் தமிழ் மக்களிடம் அப்படியே உள்ளன. இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளரும் பிரதியமைச்சருமான பஸீர் சேகுதாவூத் தெரிவித்தார்.

தமிழ் மக்களின் தேசிய அரசியல் விடுதலைப்புலிகள் இருந்தபோதிலும் இல்லாத போதிலும் அப்படியே உள்ளன.

ஆனால் முஸ்லிம்களின் தேசிய அரசியல் என்றபோக்கு மங்கிப்போய் ஊர் அரசியல் என்ற குறுகிய வட்டத்திற்குள் வந்திருக்கின்றது.

இது முஸ்லிம் சமுத்தின் அரசியல் எதிர்கதாலத்தை பெரிதும் பாதிக்கும்.

காத்தான்குடியில் இன்று மாலை இடம்பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கூட்டத்தில் பேசும் போது இவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

வடக்கு கிழக்கு இணைந்தே இருக்கவேண்டும் தங்களைத் தாங்களே ஆளவேண்டும் என்ற தேசிய அரசியல் உணர்வு விடுதலைப்புலிகள் இல்லாத போதிலும் தமிழ் மக்களிடம் அப்படியே உள்ளன.

அந்த உணர்வின் வெளிப்பாடுதான் உள்ளுராட்சி சபைத் தேர்தலின் முடிவுகள் என அவர் மேலும் தெரிவித்தார்.

http://news.lankasri.com/view.php?204oQjbdbcbF92S34e22IBJ2023XpGieddc4Gp1c30edPLcIbe4d829r4cb0bjQW32

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு கிழக்கு இணைந்தே இருக்கவேண்டும் தங்களைத் தாங்களே ஆளவேண்டும் என்ற தேசிய அரசியல் உணர்வு விடுதலைப்புலிகள் இல்லாத போதிலும் தமிழ் மக்களிடம் அப்படியே உள்ளன. இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளரும் பிரதியமைச்சருமான பஸீர் சேகுதாவூத் தெரிவித்தார். தமிழ் மக்களின் தேசிய அரசியல் விடுதலைப்புலிகள் இருந்தபோதிலும் இல்லாத போதிலும் அப்படியே உள்ளன.

ஆனால் முஸ்லிம்களின் தேசிய அரசியல் என்றபோக்கு மங்கிப்போய் ஊர் அரசியல் என்ற குறுகிய வட்டத்திற்குள் வந்திருக்கின்றது.

கிழிஞ்சது கிருஷ்ணகிரி(காத்தான்குடி)! :o

அப்போ இவர்கள் தமிழரல்லாத புது இனமோ? உலகமெங்கும் அவர்கள் பேசும் மொழியை வைத்துத்தானே 'இனம்' வரையறுக்கபடுகிறது? :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

கிழிஞ்சது கிருஷ்ணகிரி(காத்தான்குடி)! :o

அப்போ இவர்கள் தமிழரல்லாத புது இனமோ? உலகமெங்கும் அவர்கள் பேசும் மொழியை வைத்துத்தானே 'இனம்' வரையறுக்கபடுகிறது? :unsure:

சோனக மொழி அவர்களுடயை மொழியாம்.....அவர்கள் தாங்கள் தமிழர் இல்லை என்பதில் உறுதியாகவும் ,நிதானமாகவும் இருக்கிறார்கள்....ஆனால் எம்மவர்கள்தான் முஸ்லிம்களும் தமிழர்தான் என்று அடம் பிடிக்கினம்

  • கருத்துக்கள உறவுகள்

சோனக மொழி அவர்களுடயை மொழியாம்.....அவர்கள் தாங்கள் தமிழர் இல்லை என்பதில் உறுதியாகவும் ,நிதானமாகவும் இருக்கிறார்கள்....

சோனக மொழியின்னு கூகிளாண்டவரிடம் தேடிப் படித்தால் அது இன்னொரு 'மகாஇம்சை' புராணமாகவன்றோ இருக்கு?

இனி மலையக தமிழரிடம் போனால், அவர்கள் 'சோனக தேசத்திற்கு' பதிலாக இன்னொரு 'வாமன தேசம்' இங்கே கி.பி பத்தாம் நூற்றாண்டில் இருந்தது...அது நுவரெலிய, பதுள, களுத்துற வரைக்கும் விரவி இருந்தது என புலூடாவையும் காணலாமோ? :o

மொத்தத்தில் இந்த நெல்லிக்காய்களை நிமித்திப் பிடித்து ஒரு மூடையில் கட்ட, இன்னொரு 'சோழன்' வராமலா போய்விடுவான்? :)

  • கருத்துக்கள உறவுகள்

மொத்தத்தில் இந்த நெல்லிக்காய்களை நிமித்திப் பிடித்து ஒரு மூடையில் கட்ட, இன்னொரு 'சோழன்' வராமலா போய்விடுவான்? :)

அந்த சோழனையே கூறுபோட்டது இந்த சோனிகள் தானையா..... :(:(:(

கிழிஞ்சது கிருஷ்ணகிரி(காத்தான்குடி)! :o

அப்போ இவர்கள் தமிழரல்லாத புது இனமோ? உலகமெங்கும் அவர்கள் பேசும் மொழியை வைத்துத்தானே 'இனம்' வரையறுக்கபடுகிறது? :unsure:

இனம் மற்றும் தேசியம் குறித்தான வரையறைகள் மிகுந்த பரந்த அளவில் வைத்தே தீர்மானிக்கப்படுகின்றன. ஒரு குறிப்பிட்ட மொழியை பேசுவதனால் மட்டும் அது ஒரு இனத்தினை சார்ந்ததாக வரையறை செய்யபப்டுவதில்லை. ஒரு இனம் பற்றிய வரையறைகளும் மிகுந்த பரந்த அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்றன

உங்கள் கேள்விக்கு உதாரணம். இன்று புலத்தில் புதிய தமிழ் தலைமுறை, தமிழை பேசாது வளருகின்றது (அல்லது அப்பா அம்மாவுடன் மட்டும் தமிழ் பேசி). இது அடுத்த அடுத்த தலைமுறைகளில் இன்னும் அதிகமாகும். ஆயினும் அவர்களும் தமிழ் இனம் என்ற அடிப்படையில் தான் இனங்கானப்படுவர்

ஒரு கேள்வி,

தமிழகத்தில் தமிழ் மொழி பேசும் பார்பனர்கள் ஏன் தம்மை தமிழ் தேசியத்துக்குள் இனம் காணுவதில்லை?

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு இனத்தின் அடையாளத்தை தீர்மானிப்பது அவர்களின் தாய் மொழியே. கால மாற்றங்களும் இடம்பெயர்ந்த சூழலும் அவர்கள் தற்பொழுது பேசும் மொழியை சிதைக்கலாம். ஆனால் அடையாளம் என வரும்பொழுது அவர்களின் வேரை நோக்கியே அது சுட்டும்.

தமிழ் நாட்டின் பார்ப்பனர்கள் பலரும் தங்கள் தாய்மொழி சமஸ்கிருதம் என்றே சொல்வதுண்டு-வெளியே பாதுகாப்புக்காக தமிழ்.(தமிழகத்தின் தெற்கே இடம்பெயர்ந்த தெலுங்கர்கள் போல). மொரீஸியஸிலும், மலேயாவிலும் சுயம் தொலைத்த தமிழர்கள் இன்றுமுண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

அந்த சோழனையே கூறுபோட்டது இந்த சோனிகள் தானையா.....

திருக்கோவிலூருக்கு புதுக்கதையே அங்கே திரிகிறது சோழர்களுக்கு முன்பே சோனைகள் இருந்ததாக. :o

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் தாங்கள் தமிழர் இல்லை என்பதில் உறுதியாகவும் ,நிதானமாகவும் இருக்கிறார்கள்....

ஆம் உறுதியாக உள்ளார்கள்.

இங்கு சென்று பாருங்கள். மிக நீண்ட விளக்கம் உண்டு.

சான்று இங்கே... http://idrees.lk/?p=194

Edited by nunavilan

  • தொடங்கியவர்

ஆம் உறுதியாக உள்ளார்கள்.

இங்கு சென்று பாருங்கள். மிக நீண்ட விளக்கம் உண்டு.

சான்று இங்கே... http://idrees.lk/?p=194

போனேன் பார்த்தேன் நிறையவே கடிக்கிற மாதிரித் தெரிகிறது. எதிர் வாதங்களை வைப்பதற்கு இது இடமல்ல என்பதால் இப்படி எழுதுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

திருக்கோவிலூருக்கு புதுக்கதையே அங்கே திரிகிறது சோழர்களுக்கு முன்பே சோனைகள் இருந்ததாக. :o

சோழரின் காலம் கி.பி மூன்றாம் நூற்றாண்டு. முகம்மது நபியின் காலம், கி.பி. ஆறாம் நூற்றாண்டு.

எங்கேயோ கணக்கு உதைக்கின்றது ராஜவன்னியன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.