Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிறீலங்கா இராணுவப் பிடியில் யாழ்ப்பாண பெண்கள் கெட்டவர்கள். விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் வன்னி பெண்கள் ஒழுக்கமானவர்கள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாண பெண்கள் ஒழுக்கம் கெட்டவர்கள்: இமெல்டா சுகுமார்!

பதிந்தவர்: ஈழப்பிரியா ஞாயிறு, 19 ஜூன், 2011

யாழ். மாவட்டத்தில் சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டுக்கடங்காமல் அதிகரித்துச் செல்வதாக யாழ். மாவட்ட அரச அதிபர் இமெல்டா சுகுமார் கவலை தெரிவித்துள்ளார். இதற்குப் பிரதான காரணம் இளைஞர்கள் வேலைவெட்டி இல்லாமல் திரிவதுதான் என அவர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் பெண்களிடமும் ஒழுக்கம் கிடையாது என அவர் தெரிவித்தார். கடந்த எட்டு வருடங்களாக நான் முல்லைத்தீவு மாவட்டத்தில் அரச அதிபராக கடமையாற்றியிருந்தேன். நான் அங்கு கடமையாற்றிய காலத்தில் இப்படி பெண்களுக்கு எதிரான வன்முறைகள் எதுவும் காணப்படவில்லை. வன்னியில் காணப்பட்ட ஒழுக்கம் தற்போது யாழ்ப்பாணத்தில் இல்லை என அவர் தெரிவித்தார்.

யாழ். மாவட்டத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் செயலில் மட்டுமல்ல பேச்சிலும் தொடர்கின்றன. எத்தனையோ இளம் சிறுவர்கள் இந்த துஷ்பிரயோகங்களால் தினமும் மரணித்துக் கொண்டிருக்கின்றனர். யாழ். மாவட்டத்தில் 500 சிறுவர்கள் வரையில் கல்வி கற்காமல் இருக்கின்றனர். இவர்கள் கற்காமல் விட்டமைக்கான காரணங்கள், வறுமை, சகபாடிகளின் தொல்லை, தீராத நோய்கள் எனக் கூறலாம்.

இவையனைத்தையும் குறைப்பதற்கான நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொள்ள வேண்டும். அத்துடன் சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைப் பிரச்சினைகளுக்குரிய மிகப் பிரதானமாக இருக்கும் இளைஞர்களின் வேலையின்மை பிரச்சினை நீக்கப்பட வேண்டும் என்று யாழ். மாவட்ட அரச அதிபர் கூறியுள்ளார்.

விடுதலைப் புலிகளை அதிகம் குற்றஞ்சாட்டி வரும் இமெல்டா சுகுமார் தன்னை மறந்து இங்கே ஒரு உண்மையைக் கூறிவிட்டார். வன்னி மாவட்டத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் காணப்படவில்லை என அவரே கூறியுள்ளார். இவர் வன்னி மாவட்டத்தில் இருந்த காலகட்டத்தில் புலிகள் கட்டுப்பாட்டில் வன்னி இருந்தது என்பதனை எவராலும் மறுக்க முடியாது. அக் கால கட்டத்தில் ஒழுக்கம் எவ்வாறு இருந்தது என்பத்னை இவரே தற்போது தன் வாயால் கூறும் நிலை வந்துள்ளது!

தகவல்: வன்னிஆன்லைன்.

இந்த உண்மையை சொன்னதில் அவரை ( இமெல்டா சுகுமார் ) சுற்றியுள்ள இராணுவம் பெரியளவில் குறை கண்டுகொள்ளாது. அதனால் அவர் இதை சொல்லக்கூடியதாக இருந்தது, அவர் இராணுவத்தையும் குறை சொல்லவில்லை.

மற்றும்படி அரச அதிபரோ இல்லை எமது கலாச்சாரமோ அந்த மக்களையும் அவர்கள் வாழும் சுற்றச்சூழலிலும் அரசியல் வழிகட்டலிலுமே தங்கியுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
emeld.jpg:rolleyes::rolleyes:
  • கருத்துக்கள உறவுகள்

தலைப்பில் உள்ளமாதிரி பூதாகரமாக அவர் சொல்லவில்லையே!

அவர் என்ன சொன்னாலும் பொய் என்பவர்கள் தமக்கு சாதகமாக எதுவும் வந்தால் தூக்கிபிடித்து விடுவதேன்.

இமெல்டா தான் கிளிநொச்சியில் ஒழுக்கமாகவும், யாழில் ஒழுக்கம்கெட்டு சிங்கள பயங்கரவாதி ஹத்துருசிங்கவின் ...... ஆக இருப்பதை போதையில் உளறிவிட்டாரோ?

  • கருத்துக்கள உறவுகள்

அவர் என்ன சொன்னாலும் பொய் என்பவர்கள் தமக்கு சாதகமாக எதுவும் வந்தால் தூக்கிபிடித்து விடுவதேன்.

வாய் ஒன்றெனிலும் வார்த்தைகள் வேறு என்பதனால் இருக்கலாம்.

நாங்கள் ஒரு பூசனி தோடத்தையே ஒரு கோப்பைக்குள் புதைக்க படாதபாடு படவில்லையா யாழ்களத்தில் அப்படிதான். எத்தனைநாளைக்குதான் பொய்களை பொய்களால் சோடிப்பது? பொய்களுக்கு பற்றாக்குறை வரும்போது முன்னையவற்றை மறந்து சில உண்மைகளாலும் சோடிக்கும் கட்டாயத்தை காலம் கொடுக்கிறது.

கல்களால் மனிதர்கள் நடக்கும்போது செய்திகளில் போடுவதில்லை.............. யாராவது கையால் நடந்தால் செய்திகளில் போடுவார்கள்.

அப்படிதான் இதுவும் என்று நினைக்கிறேன்.

Edited by Maruthankerny

  • கருத்துக்கள உறவுகள்

அவர் என்ன சொன்னாலும் பொய் என்பவர்கள் தமக்கு சாதகமாக எதுவும் வந்தால் தூக்கிபிடித்து விடுவதேன்.

இது உங்களையே நீங்கள் கேட்கவேண்டும் முதலில்..........

  • கருத்துக்கள உறவுகள்

இது உங்களையே நீங்கள் கேட்கவேண்டும் முதலில்..........

இதை ஏன் நாங்கள் நடைமுறைச் சாத்தியமாக சிந்திக்கக்கூடாது? அதாவது பாருங்கோ அவரும் நல்லவராகவே இருக்கலாம், நல்லதையே சொல்லவும், செய்யவும் விரும்பலாம் ஆனால் சூழ்நிலை சிலவேளை தடுக்கலாமல்லவா? ஆகவேதான் இடைக்கிடை சிங்களவனுக்கு புரியாத பாஷையிலை சில தகவல்களை கசிய விடுறா போலை....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.