Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்தமிழர்காரு, இக்கட சூடடண்டி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆந்திர மாநிலம் நெல்லூர் நகரில் காந்தி சிலையருகே 'மனவாடுகள்' ஈழத்தமிழர்களின் படுகொலையை எதிர்த்து போராட்டம் நடத்திய படங்களை முகநூலில் கண்டேன்...உங்கள் பார்வைக்கு... :unsure:

20p6gls.jpg25tglqo.jpg

21b3vvq.jpg2ytsfeq.jpg

11uzwo4.jpg

திரு.வெங்கடேஸ்வரலு பேச்சு

2nlu5ag.jpg

திரு.புரேந்தரின் பேச்சு

Source: FB.

.

Edited by ராஜவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்

மனவாடுகள் என்றால் என்ன அர்த்தம், வன்னியன்?

உங்களுக்கு இணைப்புக்காகவும், ஆந்திர உறவுகளுக்கு,எமக்காகப் போராட்டம் நடத்தியமைக்காகவும் எனது நன்றிகள்!!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மனவாடுகள் என்றால் என்ன அர்த்தம், வன்னியன்?

'மனவாடு' என்றால் "இது நம்ம ஆளு", "எங்கள் இனததை சார்ந்தவர்" என்பதனை தெலுங்கில் சொல்வது.

தமிழர்கள் கூடியிருக்கும் போது, யாராவது தெலுங்கர் வந்தாலோ, கடந்து சென்றாலோ "கொல்டி ஒச்சேஸ்னாரு..." "மனவாடு ஒச்சேஸ்னாரு" என கிண்டலாக சொல்வது வழக்கம். மொத்தத்தில் "மனவாடு" என்றால் "கொல்டி" அல்லது "தெலுங்கர்" என அர்த்தம்.. இதில் கொல்டி என்பது சிறிது தரங்குறைந்து அழைப்பதாக பொருள்படும்...!

"பஞ்சதந்திரம்" படத்தில் 'கிளப்'பில் குடித்துக்கொண்டே கமல்கூட நண்பரை 'கொல்ட்டி' என செல்லமாக அழைத்து கன்னத்தில் இடிப்பதை ரசித்திருப்பீர்கள்.. !

ஆனால் ஒன்று, 'மனவாடுகள்' நிச்சயம் 'மல்லு'களை விட தமிழர்களுக்கு நல்லவர்களே. :lol:

தகவலுக்கும் இணைப்புக்கும் நன்றிகள்.

இந்திய மாநிலங்கள் அனைத்திலும் சிங்கள படுகொலைகள் அறியப்படுதப்படல் வேண்டும். டெல்லியில் கொள்கை மாற்றம் வர அது உதவும்.

  • கருத்துக்கள உறவுகள்

கர்நாடகத்திலும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக கன்னட தமிழ் அமைப்புக்கள் பேரணிகளை.. ஆதரவு அறிக்கைகளை வெளியிட்டுள்ளதுடன் போர் குற்றவாளிகள் தண்டிக்கப்படவும் சிறீலங்கா மீது பொருளாதாரத் தடை கொண்டு வரவும் வற்புறுத்தியுள்ளன.

அவற்றின் செயற்பாடுகளும் நாம் நன்றி சொல்லி ஊக்கம் அளிக்க வேண்டும்.

அதேபோல்.. ஆந்திர மாநிலத்திலும் எழுந்துள்ள இந்த ஈழத்தமிழர் மீதான அனுதாபத்தை நாம் எமதாக்கி அவர்களை அரவணைத்துச் சொல்ல முனைய வேண்டும்.

கேரள நடிகர்கள்.. குறிப்பாக நடிகைகள்.. தமிழகத்திற்கு வந்து நடித்துப் பிழைக்கும் நிலையில் இருந்து கொண்டும்... அசின்.. போன்றவர்கள் சிங்கள அரசிற்கு தெரிந்து கொண்டும் உதவி வருகின்றனர். இதனை அவர்கள் நிறுத்தவும்.. கோடம்பாக்கத்தின் செயல் திட்டங்களுக்கு அமைய ஈழத்தமிழர் விவகாரத்தில் ஒருங்கிணைந்து செயற்படவும் அவர்களை வற்புறுத்த வேண்டும். இதற்கு தென்னிந்திய சினிமாத்துறை உதவ வேண்டும்.

அதுமட்டுமன்றி கேரளாவிற்கு உல்லாசப் பயணம் போவதை புறக்கணிக்கப் போவதாக.. பகிரங்கமாக காரணங்களைச் சொல்லி.. புலம்பெயர் தமிழர்கள் கேரளத்தின் சிங்கள இனவாத அரசு ஆதரவு நிலைப்பாட்டிற்கு.. அடையாள எதிர்ப்பை காண்பிக்க வேண்டும். குறிப்பாக நம்பியார்.. எம் கே நாராயணன் போன்றவர்களின் செயற்பாடுகளும்.. ஈழத்தமிழர் மீதான போர் குற்றமும் பற்றிய ஒரு குறிப்பை ஏற்றி கேரள சுற்றுலாத்துறைக்கு எதிராக அதனை பிரச்சாரம் செய்யும் போது நிச்சயம் கேரள அரசும் மக்களும் சிந்திக்கத் தலைப்படுவார்கள்.

கேரள சுற்றுலாத்துறை சர்வதேச அரங்கில் அடிக்கடி தன்னை வெளிக்காட்டி வருகின்றமை முக்கியமான ஒன்று. அந்தளவிற்கு தமிழக சுற்றுலாத்துறை இல்லை. தமிழக சுற்றுலாத்துறையின் வளர்ச்சி என்பது எமது தாய் தமிழ் சொந்தங்களின் பொருண்மிய வளர்ச்சிக்கு உதவக் கூடிய ஒன்று என்பதையும் புலம்பெயர் தமிழர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

மனவாடுகளுக்கு நன்றிகள்..!

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி ராஜவன்னியன்.எமக்காக குரல் கொடுக்கும் எவருக்கும் தமிழ் மக்கள் நன்றி செலுத்துவார்கள்.

ஈழத்தமிழர்களின் படுகொலையை எதிர்த்து போராட்டம் நடத்திய மக்களுக்கும், அதனை இங்கே இணைத்த உங்களுக்கும் நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்

తెలుగు దేశం ధన్యవాదాలు

நன்றி தெலுங்கு தேச உறவுகளுக்கு

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு நன்றி வன்னியன்.

தெலுங்கர்களுக்கு நன்றி. கன்னடர்களும் எமக்கு ஆதரவாக போராட்டம் நடத்தியுள்ளார்கள். மலையாளத்தவர்தான்...... போராட்டம் நடத்தவில்லை.

அசின், மகிந்த ராஜபக்சவின் பெஞ்சாதியோடை யாழ்ப்பாணம் வந்ததோடை சரி....

Asin-Shiranthi+Wickramasinghe+Rajapaksa.jpg

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு நன்றி வன்னியன்.

தெலுங்கர்களுக்கு நன்றி. கன்னடர்களும் எமக்கு ஆதரவாக போராட்டம் நடத்தியுள்ளார்கள். மலையாளத்தவர்தான்...... போராட்டம் நடத்தவில்லை.

அசின், மகிந்த ராஜபக்சவின் பெஞ்சாதியோடை யாழ்ப்பாணம் வந்ததோடை சரி....

Asin-Shiranthi+Wickramasinghe+Rajapaksa.jpg

என்ன தமிழ் சிறி இந்த நாராயணன், சிவசங்கர் மேனன்,விஜே நப்பியார் போன்று இன்னும் என்னும் சில மலையாளிகள் காங்கிரசின் அடிவருடிகளாக செயற்பட்டார்கள் ஈழ தமிழர்களை ஸ்ரீலங்கா இராணுவம் கொன்றொளித்த போது இவர்களும்தான் அதற்க்கு உடந்தையாக இருந்தார்கள் ஞாபகமில்லையா நண்பா ....?

மனிதநேயம் தெரிந்த கன்னட, தெலுங்கு மக்களுக்கு நன்றிகள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.