Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கை மீதான பாரிய முற்றுகை ஒன்றுக்காக அமெரிக்கா வேவு -

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை மீதான பாரிய முற்றுகை ஒன்றுக்காக அமெரிக்கா வேவு -

09 ஆகஸ்ட் 2011

படைகளை தயார் நிலையில் வைக்குமாறு குணதாஸ அமரசேகர கோரிக்கை

இலங்கை மீதான பாரிய முற்றுகை ஒன்றுக்காக அமெரிக்கா இலங்கையை வேவு பார்ப்பதாகவும், எனவே, அரசாங்கம் படைகளுடன் எந்த நேரத்திலும் உஷார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அது மட்டுமன்றி, உள்ளூர் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் அமெரிக்காவுடன் இராஜதந்திரத் தொடர்புகளை அவசரமாக கையாள வேண்டும் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர குறிப்பிடுகின்றார்.

அமெரிக்காவின் பத்து போர் விமானங்கள் இலங்கை வான்பரப்பில் அத்து மீறி ஊடுருவியது தற்செயலாக இடம் பெற்ற செயலாக கருத முடியாது. தற்போது அவ்வாறான சம்பவம் நடைபெறவில்லையென்றும் அமெரிக்கா கூறிவருகின்றது. இதிலிருந்து உள்நோக்கமும் நாட்டிற்கு எதிரான முற்றுகையும் வெளிப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தத்திற்கு பின்னர் இலங்கைக்கு எதிரான சர்வதேச செயற்பாடுகள் மிகவும் தீவிரமாகவே காணப்படுகின்றன. குறிப்பாக அமெரிக்கா இலங்கை விடயத்தில் மிகவும் தீவிரமாகவே செயற்படுகின்றது என்றும் குறிப்பிட்டார்.

அது மட்டுமன்றி அனுமதியின்றி ஏனைய நாடுகளின் எல்லைக்குள் ஊடுருவி தாக்குதல்களை நடத்துதல், சிறு நாடுகளை ஆக்கிரமித்தல் என்று பல்வேறு நடவடிக்கைகளிலும் அமெரிக்கா அண்மைக் காலமாக தீவிரமாக செயற்படுகின்றது. அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்டன் இந்திய விஜயத்தின் போதும் இலங்கைக்கு எதிரான கருத்துக்களையே தெரிவித்திருந்தார்.

தற்போது ஆசிய பசுபிக் கடற்பரப்பில் நிலை கொண்டுள்ள அமெரிக்க 7 ஆவது விஷேட கூட்டுப்படையின் 10 போர் விமானங்கள் இலங்கை வான் பரப்பில் ஊடுருவிச் சென்றுள்ளன. இந்த ஊடுருவல் முதல் தடவையாக இடம் பெற்றதாக கூறமுடியாது. ஏனெனில் தற்போது வெளிப்படுகின்ற தகவல்களைப் பார்த்தால் பல தடவைகள் மிகவும் மர்மமான முறையில் அமெரிக்க விமானங்கள் வேவுபார்த்துள்ளமை தெரியவந்துள்ளது.

எனவே அமெரிக்கா, இலங்கையின் இறையாண்மையை கேள்விக் குறியாக்கியுள்ளது. எந்த சந்தர்ப்பத்திலும் அரசாங்கம் உஷார் நிலையில் இருக்க வேண்டும். இராஜதந்திர தொடர்புகளை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும். அமெரிக்காவினால் எப்போதும் ஆபத்து வரலாம் என்பதை அரசு புரிந்து கொள்ள வேண்டும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாஸ அமரேசேகர குறிப்பிட்டார்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/65422/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

எனவே அமெரிக்கா, இலங்கையின் இறையாண்மையை கேள்விக் குறியாக்கியுள்ளது. எந்த சந்தர்ப்பத்திலும் அரசாங்கம் உஷார் நிலையில் இருக்க வேண்டும்

புலிகளை தோற்கடித்த உங்களுக்கு அமேரிக்காவை தோற்கடிக்கிறது பெரியவிடயமல்ல.......அமேரிக்கா வுக்கு போய் குண்டு போடுங்கோ இந்தியா உதவி செய்ய்யும்

  • கருத்துக்கள உறவுகள்

கொசுக்கடி தாங்கமுடியலயப்பா..... :lol::lol::lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புலிகளை தோற்கடித்த உங்களுக்கு அமேரிக்காவை தோற்கடிக்கிறது பெரியவிடயமல்ல.......அமேரிக்கா வுக்கு போய் குண்டு போடுங்கோ இந்தியா உதவி செய்ய்யும்

ஸ்ரீலங்கா தானும் ஒரு உலகவல்லரசு என்று நினைப்பு அந்த நினைப்பில் சில வேளை அமெரிக்க மீது கொத்து குண்டு,வெள்ளை பொஸ்பரஸ் குண்டு, போட்டாலும் போடும். :D :D :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ரீலங்கா தானும் ஒரு உலகவல்லரசு என்று நினைப்பு அந்த நினைப்பில் சில வேளை அமெரிக்க மீது கொத்து குண்டு,வெள்ளை பொஸ்பரஸ் குண்டு, போட்டாலும் போடும். :D :D :lol: :lol:

கொசுவாவது சாகும்போது கைதட்டு வாங்கும், அதோடு இந்த இரத்த காட்டேரிகளை ஒப்பிட்டு, அதை கேவல படுத்த வேண்டாம்

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை மீதான பாரிய முற்றுகை ஒன்றுக்காக அமெரிக்கா வேவு - படைகளை தயார் நிலையில் வைக்குமாறு குணதாஸ அமரசேகர கோரிக்கை
நினைப்புத்தான்... பிழைப்பை கெடுக்கிறது.

ஒசாமா பின் லாடனையே 45 நிமிசத்தில் தூக்கிக் கொண்டு போய் கடல்லை கொட்டினவங்களுக்கு.... சொறிலங்கா எம்மாத்திரம்.

படைகளை தயார் நிலையில் வைக்குமாறு குணதாஸ அமரசேகர கோரிக்கை

எனக்கு 23 ம் புலிகேசி சினிமாதான் ஞாபகம் வருகிறது

இலங்கை மீதான முற்றுகை எதற்காக?

நாங்கள் உலகின் நாலாவது பலமான நாட்டை ஆட்டின மாதிரி அவர்களும் ஒருக்கா ஆட்டிப்பார்க்க முயற்சிக்கினமோ தெரியவில்லை?

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் சீனா, இரஸ்யா ,ஆசிய, ஆபிரிக்கா நாடுகளின் ஆதரவுதான்

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் உலகின் நாலாவது பலமான நாட்டை ஆட்டின மாதிரி அவர்களும் ஒருக்கா ஆட்டிப்பார்க்க முயற்சிக்கினமோ தெரியவில்லை?

மக்களின் சாப்பாட்டை வாங்கி சாப்பிட்டு விட்டு அவர்களுகே இலங்கையை பிடித்து தரலாம் என அம்புலிமாமா கதை விட்ட ஆட்களை இன்னும் உலகில் வாழுகிறார்கள் என்னும் போது உடம்பெல்லாம் புல்லரிக்கிறது.இதற்குள் விமர்சிசனத்துக்கு அதாவது ஏதாவது பிழை பிடிக்கலாம் என்பதில் மட்டும் விண்ணாதி விண்ணர்கள்.இந்தியாவிடம் கேனைகளாக ஏமாந்து விட்டு அவரை தெரியும் இவரை தெரியும் என்று படம் காட்டுவதில் மட்டும் எந்த குறைச்சலும் இல்லை. :):)

இவங்கள் "பரனொயிட் மென்ரல் கேசுகள்". சோனியா பிறந்திகுக்கேலையெண்டால், உலகம் இவங்களை எப்பவோ கண்டு பிடிச்சிருக்கும். கோத்தா Headlines Todayல் கதைச கேவலம் மாதிரி உலகத்திலை எவனும் கதைக்க மாட்டன்.

புலிகளின் சாதாரண கிளைடர் தர விமானங்களையே,

அவர்களா கொண்டுபோய் கொழும்பில் விழுத்தும்வரை , எதுவுமே பண்ணமுடியலியே...

இவன் எந்தப்படையை அமெரிக்காவை எதிர்கொள்ள தயாராக சொல்றான்?

சிரங்குப்படையா இல்லை சொறிப்படையா?

இந்த அவிஞச வாயனுக்கு கலாநிதி பட்டம் கொடுத்த நாறபயலுக்கு ..

இளநீ கோம்பையால எறியணும்! :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.