Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆண்கள் ஏன் உணர்ச்சிகளை அடக்கிக் கொள்கிறார்கள்.

Featured Replies

ஆண்கள் தங்களது உணர்ச்சிகளை வெளியே கொட்டாமல் அடக்கிக் கொள்கிறார்கள்.அதனால் பல பிரச்சினைகள் என்றும் ஒரு தகவலை படித்தேன்.உண்மையில் கோபமோ,ஆத்திரமோ எந்த உணர்வும் உள்ளேயே அடக்கப்படுவது நல்லதல்ல.இருந்தும் ஏன் வெளியே கொட்டுவதில்லை? காரணம் சாதாரணமானது.அள்ளிக்கொள்ள ஆளிருந்தால் கொட்டுவார்கள்.

ஆண் தனக்குள்ளேயே முடங்கிப்போவது அதிகம்.பெண்களுக்கு இந்த பிரச்சினைகள் குறைவு.பெரும்பாலும் எல்லாவற்றையும் வெளியே சொல்லி விடுகிறார்கள்.அம்மா,சகோதரிகள்,தோழிகள் என்று அவர்களுக்கு நெருக்கமான உறவுகள் அதிகம்.ஆனால் ஆணுக்கு அப்படியெல்லாம் இல்லை.

AA.jpeg

சகோதர உறவு என்பது முக்கியமானது.பெண்களைப்போல ஆண்களுக்கு இது அமைவதில்லை.சண்டை பிடித்து கோர்ட்டுக்கு போகும் அண்ணன் தம்பிகளை நீங்கள் பார்க்க முடியும்.அண்ணன் தம்பி உறவு வலுவாக இருப்பது மிகவும் குறைவு.பெண்களைக் கவனித்துப் பார்த்தால் தெரியும்.அக்கா,தங்கை உறவு என்பது மிக நெருக்கமானது.வேறெங்கும் இவ்வளவு பாசமான உறவு நிலையை நீங்கள் காண முடியாது.

மற்றவர்களிடமும்,பொருளாதரத்திலும் அந்தஸ்து பெறுவதற்காக ஆண் வெளியுலகத்துடன் அதிக உறவு நிலைகளை ஏற்படுத்த வேண்டியிருக்கிறது.போட்டி,பொறமை,துரோகம்,போட்டுக்கொடுப்பது போன்றவற்றை சமாளிக்க வேண்டியிருக்கிறது.அலுவலகத்திலோ,தொழில் செய்யும் இட்த்திலோ இதெல்லாம் சகஜம்.யாரிடமும் பகிர்ந்து கொள்வதுகூட கஷ்டம்தான்.

AB.jpeg

நண்பர்களும் தெரிந்தவர்களும் ஒருவனது உணர்வுகளைப் பற்றி பகிர்ந்து கொள்வதை கேட்க விரும்புவதில்லை.நான்கு பேர் சந்தித்தால் ஆண்கள் ,அரசியலைப்பற்றியோ,சினிமா பற்றியோ,பெண்களைப்பற்றியோ பேசுவார்களே தவிர கஷ்ட்த்தை சொன்னால் ஓடிப்போய் விடுவார்கள்.ஜோக் சொல்லிக்கொண்டிருந்தால் வெகு நேரம் அங்கே இருப்பார்கள்.

அரசியல்,சினிமா போன்றவற்றை அதிகம் தெரிந்து கொள்ள ஆசைப்படுவதற்கும் இதுவே காரணம்.நான்கு பேர் முன்னால் விஷயம் தெரிந்தவன் என்று காட்டிக்கொள்வதற்கு என்று ஒரு ஆசிரியர் சொன்னார்.உண்மைதான்.ஆண்கள் கூடினால் உள்ளே அரித்துக்கொண்டிருக்கும் விஷயத்தை வெளியே விடாமல் ஏதேதோ பேசிவிட்டு தவறணையைத் தேடி போய் விடுகிறார்கள்.

AC.jpeg

உள்ளே இருப்பதை வெளியே சொல்லாமல் சரக்கு உள்ளே போன பிறகு உளறிக்கொண்டிருப்பார்கள்.மனித உறவுகளில் இணக்கமோ,நெருக்கமோ இல்லாதநிலை பெரும் நெருக்கடி.இந்த நெருக்கடி ஆணுக்கு அதிகம்.மது,சிகரெட் என்று ஒளிந்து கொள்வதற்கு இவை முக்கியமான காரணம்.பல நேரங்களில் குழந்தைகள்மீதும்,பெண்கள்மீதும் பாய்கிறான்.இதனால் வீட்டு உறவுகளும் துண்டிக்கப்பட்டுவிடுகின்றன.

ஆண்கள் அனைத்தையும் பகிர்ந்து கொள்ளும் உறவுகளை கண்டுபிடிப்பது முக்கியமானது.பல ஆண்களும் மனைவியிடம் தங்கள் பிரச்சினைகளை பகிர்ந்து கொள்வதில்லை.மனைவிக்கு போதுமான அளவுக்கு இதைப்பற்றி தெரியாது என்று நினைக்கிறான்.இது ஒரு பிரச்சினை.குறைந்தபட்சம் வெளியேவிட்ட திருப்தியாவது இருக்கும்.உணர்வு பூர்வமான ஆதரவு வீட்டில் கிடைக்க வாய்ப்புண்டு.

படித்ததில் மனதில் பதிந்தது

நாம் சிறுவர்களாக இருக்கும் போதே பெற்றோர்/ பெரியோர் என்ன சொல்லி வளர்க்கிறார்கள்... ஆண் பிள்ளை பெண் பிள்ளை மாதிரி அழக கூடாது, என்றல்லவா? அப்போதே அவர்களின் உணர்வுகளுக்கு எல்லை போட்டு விடுகிறார்கள். (பொதுவாக ஆண் பிள்ளைகள் தமது தந்தையை ரோல் மொடலாக பார்த்து வளர்கிறார்கள்.)

பகிர்ந்து கொள்ளுதல் பெண்மைக்குரிய குணம் என்பதால் அவர்களால் வெளிப்படையாகக் கதைக்கக் கூடியது போல் இருக்கலாம். (அமுசடக்கிகளும் உள்ளார்கள் என்பது வேறு விடையம்... ^_^)

நல்லதொரு பதிவு இணைப்பிற்கு நன்றி

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

தான் ஆண்,சக்தி உள்ளவன்,எல்லாவற்றையும் சமாளிப்பேன் என்ற அகங்காரமும் ஆண்களின் உணர்வுகளை வெளிக்கொணர தடுக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கோமகன் இணைப்பிற்கு, மனைவியை நல்ல நண்பியாக நினைத்து கதைத்தால் நல்லது

Edited by உடையார்

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

நான் எல்லாம் கட்டுப்படுத்த வேண்டியதை தவிர வேறு உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவதில்லை. அழ வேண்டிய சூழல் எழுந்தா அழுதிடுவம். சில பிரச்சனைகளை வெளில சொன்னா.. அதைச் சமூகம்.. தவறாக உணர்தலும்.. தவறாக வழிகாட்டுதலும் செய்து நம்மளக் குழப்பாமல்.. இருக்க.. சொல்லுறதில்ல. சரியான சந்தர்ப்பம் வாய்க்கும் போது நானே தீர்வைக் கண்டுகொள்ளுவன். :)

பெண்கள் அநேகம் அனுதாபம் தேடுவதற்காக உணர்ச்சிகளை வெளிப்படுத்தி.. தங்கள் தப்புக்களை.. தவறுகளை மறைச்சுப் போடுவாங்க. பெண்கள் அடிக்கடி தப்புப் பண்ணுறவங்க போல.. அதுதான் அடிக்கடி உணர்ச்சிகளையும் வெளிப்படுத்திக்கிட்டு இருக்காங்க என்று நினைக்கிறன். அவங்க உது விசயத்தில... அதுதாங்க.. தப்புப் பண்ணிட்டு.. மறைக்கிறதில.. திருந்தவே போறதில்ல..! :lol:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

உணர்வு , உணர்ச்சி , ஆறு அறிவுள்ள மனித விலங்கிற்குப் பொதவானது தானே நெடுக்கர் .

ஆண்கள் தர்க்கரீதியாக எதையும் அணுகுவதால் அவர்களின் வடிகால் வேறுவழிகளில்

திரும்புகின்றது . மேலும் , ஆண்களில் மாயாமாலன்கள் இல்லையோ ???

  • கருத்துக்கள உறவுகள்

உதுக்குதான் சொல்லுறது பக்கத்தில ஒன்டு வேனும் என்டு.எல்லாத்தையும் கொட்டி தீர்க்க. :rolleyes::D

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கு எப்ப திரியிறக்கம்............

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதற்கு எப்ப திரியிறக்கம்............

இயற்கை தந்த நிஜத்தை மீறும் போது.....எல்லாம் தானாகவே நடக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதோர் பதிவு கோமகன்.

யாழ் கள உறவுகளுக்கு இந்தப் பிரச்சனை அதிகம் இருக்காது.

இருந்தாலும் அவர்கள் அதைக் களத்தில் கொட்டிவிடுவதால்,அவர்களின் மனோநிலை என்றுமே திடமாக இருக்கும்!!!.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.