Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

திரும்பி வந்தவன்

Featured Replies

>> கதையை நான் முழுமையாகப் படித்தேன்.தேவதைகளின் தீட்டுத் துணி நண்பர் ஒருவர் கேட்டுக் கொண்டதற்காக முழுமையாக வாசித்தேன், விமரிசனம் எழுதக் கேட்டார் நண்பர் பேசாமல் விட்டு விட்டேன்.இன்னுமொருவனின் கருத்தே எனது கருத்தாகவும் இருக்கிறது.கர்ணன் சமரச அரசியல் சுய நலத்திற்காகவும் சோபாசக்தியின் பின் புலத்தில் நின்று இத் தகைய அரசியல் நிலைப்பாட்டுக்கு ஆதரவு தரும் சக்திகளின் ஆதரவைப் பெறுவதற்காக உண்மைச் சம்பவங்களை புனைவுகளினூடாக , திருபு படுத்தித் தருகிறார்.அவரிடம் நல்ல மக்கள் இலக்கியத்தைப் படைப்பதற்கான ஆளுமையோ முதிர்ச்சியோ இல்லை.புலி எதிர்ப்பு சக்திகளின் இன்னுமொரு பிரச்சாரச் செயலாளராக வருவதற்கான தகுதியே அவருக்கு இருக்கிறது.மற்றைய வர்களின் குரல்கள் மெல்ல மெல்ல இப்போது தான் வெளிவரத் தொடங்கி உள்ளது.உண்மையான போராளிகள் இன்னும் சிறையினுள்.உண்மை மெல்ல மெல்ல வெளியால் வரும்

நன்றி நாரதர். கர்ணனின் அரசியல் நிலைப்பாடுகள் எனக்குக் தெரியாது. ஆனால் நீங்கள் சொல்லுவது உண்மையானால் அவரது உண்மை முகம் சற்று நாட்களில் தெரியவரும். (பலரைப் பல நாட்கள் ஏமாற்றமுடியாது) ; ஆனால் அவரின் படைப்புத் திறனை நீங்கள் தூக்கி எறிவதை என்னால் ஏற்றுக் கொள்ளமுடியாது. உதாரணமாக ஷோபா சக்தியை எனக்கு அறவே பிடிக்காது. ஆனால் அதற்காக அவரிற்குப் படைப்புத் திறன் இல்லை என்று நான் சொல்லமாட்டேன்.

Edited by கறுவல்

நன்றி இன்னோமொருவன்,

விமர்சனம் யாரும் எவர்மீதும் வைக்கலாம்.யோ.கர்ணனுக்கு,சோபா சக்திக்கு இந்த சமூகத்தில் உள்ள கோபம் தான் அவர்களை இந்த சமூகம் மீது தூற்றவும்,நையாண்டி பண்ணவும் வைக்கின்றது.இது உலகில் எங்கும் உள்ள ஒருவிடயம் தான்.ஏன் இந்த சமூகம் இவ்வளவு பிற்போக்காகவும்,அறியாமையிலும் உழலுகின்றதேன்று கண்டும் காணாமல் தானுண்டு தன் வேலையுண்டு என்றில்லாமல் அதை எதோ ஒருவழியில் தனது சமூகத்திற்கு சொல்வதே அவர்கள் நோக்கம்.

தனது சமூகத்தில் பாரதி காட்டாத கோபத்தையா இவர்கள் காட்டிவிட்டார்கள்.இல்லவே இல்லை.இங்கு பலருக்கு சுடும் விடயமாக இருப்பது இவர்களின் புலிகள் மீதான விமர்சனமே.என்னவும் செய்யுங்கோ அடிமடியில கை வையாதேயுங்கோ.இதனாலேயே இவர்கள் மீது இவ்வளவு காழ்புணர்வு பலருக்கு.உங்களுக்கு ஒன்று வடிவாக விளங்கவேண்டும் தாங்கள் யாரையும் நடுச்சந்தியில் கொண்டுவந்து சீலை உரியலாம் ஆனால் தங்களை பற்றி யாரும் மெல்ல வாய் திறந்தாலே இவர்களால் தாங்க முடியாது.முப்பது வருடமாக உதை வெற்றிகரமாக ஓட்டியவர்களுக்கு இப்போது எல்லாம் முடிந்த நிலையில் நல்ல பிள்ளைகள் போல் நடந்ததை ஏன் கிளறுவான்,ஏன் உதை திரும்ப திரும்ப கதைத்துக்கொண்டு,என்று ஏதும் நடவாதவர்கள் போல் நாடகமாட பார்க்கின்றார்கள்.நடந்தது நல்லது கேட்டது எல்லாம் சந்திக்கு வரவேண்டும்.போரின் அவலமும், கீழ்மட்ட போராளிகள் பட்ட கஷ்டங்களும்,வன்னி மக்கள் அனுபவித்த தாங்கொணா துன்பமும் பதியப்பட்டாலே திரும்ப இதுபோல ஒரு கேவலம் மீண்டும் வராமல் இருக்கும்.

சமூக நலன் இருக்கலாம். சுயலாபம் தேடுவதில் சமூக நலன் இருப்பது போல் காட்டிக்கொள்வது தான் எரிச்சலை தருகிறது.

சோபாசக்தியே தனது கதைகள் தனது நீண்ட அரசியற் துண்டறிக்கைகள் எனச் சொல்லி இருக்கிறார்.இவர்கள் தமது அரசியலை நியாயப்படுத்த , நிஜ மனிதர்கள் சம்பவங்களை வைத்து தமது அரசியலுக்கு ஏற்ப புனைவுகளை உருவாக்குகிறார்கள்.தன்னை ஒரு கதாபாத்திரமாக பல கதைகளில் சோபா ஒரு தலித்தாகச் சித்தரித்திருப்பார்.இந்தக் கதைகளை வாசிக்கும் எவரும் சோபாவை ஒரு தலித்தாகவே எண்ணுவார்கள்.ஆனால் உண்மையில் சோபா ஒரு தலித் அல்ல.ஆனால் அவரின் அரசியலுக்கு அத்தகைய ஒரு புனைவு அவசியமாக இருக்கிறது.சோபா முதல் ஜெயமோகன் வரை தமது அரசியலை நியாயப்படுத்தும் புனைவுகளையே கதைகளாக எழுதுகின்றனர்.அவர்களுக்கு எழுத்தாற்றல் இருக்கிறது உண்மை தான், ஆனால் அவர்கள் படைக்கும் இலக்கியம் எதனைச் செய்கிறது என்று பார்க்க வேண்டும்.சமூகத்தில் அது எத்தகைய தாக்கத்தை உண்டு பண்ணுகிறது என்று பார்க்க வேண்டும்.எழுத்தாளன் என்பவன் வெறுமனே எழுத்தாற்றல் உள்ளவன் மட்டும் அல்ல,அவன் சமூகம் பற்றிய அக்கறை உள்ளவனாகவும் இருக்க வேண்டும்.சமூகத்தில் இருக்கும் உண்மைகளை வெளிக் கொண்டு வருபவனாக இருக்க வேண்டும்.புனைவுகளால் உண்மைகளை மறுதலிப்பவன் , தனது சுய நல அரசியல் நலன்களுக்காக சமூக நலனை காவு கொடுப்பவன் எல்லாம் எனது அகராதியில் எழுத்தாளன் அல்ல.

பிள்ளைகளே அமைதி, அமைதி!! எம் மக்களின் தற்போதைய தேவை நிம்மதியாக, சுதந்திரமாக வாழக் கூடிய ஒரு தமிழீழம், எல்லோரும் தமிழர்களாய் ஒன்று சேருவோம் இதற்காக. பிறகு புலியின் நல்லது, கெட்டதுகளை முச்சந்திக்கு மட்மில்ல பிள்ளைகளின் விருப்பப்படி நாற்சந்தி, ஏன் 5 சந்திகளுக்கும் கொண்டு வருவோம். ஓ கே. "ஒன்று சேருவோம் தமிழர்களாய்"

"தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்"

பிள்ளைகளே அமைதி, அமைதி!! எம் மக்களின் தற்போதைய தேவை நிம்மதியாக, சுதந்திரமாக வாழக் கூடிய ஒரு தமிழீழம், எல்லோரும் தமிழர்களாய் ஒன்று சேருவோம் இதற்காக. பிறகு புலியின் நல்லது, கெட்டதுகளை முச்சந்திக்கு மட்மில்ல பிள்ளைகளின் விருப்பப்படி நாற்சந்தி, ஏன் 5 சந்திகளுக்கும் கொண்டு வருவோம். ஓ கே. "ஒன்று சேருவோம் தமிழர்களாய்"

"தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்"

எப்படி முடியும், நாம் தான் தமிழராயிற்றே?

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கிருபன் அண்ணா இணைப்பிற்க்கு...

இன்று கதையையும், இன்னுமொருவனின் எதிர்வினைகளையும் முழுமையாக வாசித்தேன். இன்னுமொருவன் கூறுவது போன்று, கர்ணன் வெறும் சாட்சியமாக மட்டும் நின்று கொண்டு எழுதுகின்றார். தான் இன்று என்ன எழுதினால் மற்றவர்களுக்கும் முன் விலைபோகும் (அல்லது உயிர் வாழ்வுக்கு உத்தரவாதம் தரும்) என்ற அடிப்படையில் ஒரே ஒரு பக்கத்தை மட்டும் எடுத்துக் கொண்டு அதில் நக்கலையும் நையாண்டியையும் மாத்திரேம் கலந்து தருகின்றார்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்போ காசு பார்க்க

வெளியில் அறிமுகமாக

கொலரைத்தூக்கிவிட .......????????

பிரபாகரனும் நடேசனும்........ தேவைப்படுவது தெரிகிறது

ஆனால் அவர்கள் அதற்காக கொடுத்தவைகளையும் எழுதலாமே.

இப்போ யார் அதை கணக்கிலெடுக்கிறார்?????

பாலியல் உறவு என்ற பிரச்சனை தமிழ்ச்சமுதாயத்தில் எல்லாமுமமான பிரச்சனை. இதைக்கடந்து இந்தச் சமூகம் செல்லமுடியவில்லை. முட்டுச்சந்தில் நிற்கின்றது. சுற்றி சுற்றி சுப்பற்ற கொல்லைக்குள் எண்ட மாதிரி ஆன்மீகம் இதிகாசம் புராணம் இலக்கியம் இயக்கம் இன்றய அரசியல் எல்லாம் கடசியில் கவட்டுக்குள் தான் வந்து நிற்கின்றது.என்றைக்கு இந்தச் சமூகம் இதிலிருந்து வெளியில் வரப்போகுதெண்டு தெரியவில்லை.

பாலியல் உறவு என்ற பிரச்சனை தமிழ்ச்சமுதாயத்தில் எல்லாமுமமான பிரச்சனை. இதைக்கடந்து இந்தச் சமூகம் செல்லமுடியவில்லை. முட்டுச்சந்தில் நிற்கின்றது. சுற்றி சுற்றி சுப்பற்ற கொல்லைக்குள் எண்ட மாதிரி ஆன்மீகம் இதிகாசம் புராணம் இலக்கியம் இயக்கம் இன்றய அரசியல் எல்லாம் கடசியில் கவட்டுக்குள் தான் வந்து நிற்கின்றது.என்றைக்கு இந்தச் சமூகம் இதிலிருந்து வெளியில் வரப்போகுதெண்டு தெரியவில்லை.

கவட்டிற்குள் இருந்து வெளிவரும் பொது கவலைகளெல்லாம் தீரும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.