Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இவர்களின் நோக்கம் என்ன??????????????????

Featured Replies

இந்தப்பகுதியில் கருத்திணைக்கும் சிலருக்கு காலம்தான் பதில் சொல்லும்.

உண்மைதான். ஆனால், அந்த காலமே பதில் சொல்லாமலும் போகலாம். ஏனெனில் நாம் இருக்கும் வாய்ப்புக்களை அன்றும் இன்றும் சரியாகப்பயன்படுத்த தவறுகிறோம்.

எமக்கு முன்னால் உள்ளதை 'சனியன்' எனக்கூறி இல்லாத 'தேவவதைக்கு' ஏங்கி நிற்போம், 'பரதேசிகளாக' .

  • Replies 52
  • Views 5.2k
  • Created
  • Last Reply

என்னைப் பாதித்த இந்தப் பதிவை உங்களுடன் பகிர்கின்றேன் எங்களுக்கும் எமது போரட்டத்திற்கு இந்தப் பதிவர்களைப் போல் பலர் பால பாடம் எடுக்க வெளிக்கிடுகின்றார்களா என்ன?????????????

ந்த வருஷம் மாவீரர் நாளின் போது, தலைவர் பிரபாகரன் அவர்களது திருவுருவப்படம் வைத்து, அஞ்சலி செலுத்துவதற்கு ஒரு குழுவினர் தயாராகி வருவதாக நம்பகரமான தகவல் ஒன்று கிடைத்துள்ளது!

LTTEsports_5.jpg

மேலும், தலைவர் பிரபாகரன் வீரச்சாவடைந்துவிட்டார் என்பதை உத்தியோக பூர்வமாக அறிவிக்கவும் போகிறார்களாம்! யார் அந்தக் குழுவினர்? அவர்களின் பின்னணி என்ன? அவர்களின் நோக்கம்தான் என்ன?

வாருங்கள் ஆராய்வோம்!

01. யார் அந்தக் குழுவினர்?

இவர்களை வெறுமனே துரோகிகள் என்றோ, ஒட்டுக்குழுக்கள் என்றோ சொல்லிவிட முடியாது! இவர்களும் “ முக்கியமான” ஆட்கள்தான்! விடுதலைப்போரில் இவர்களது பங்களிப்பும் அளப்பரியதுதான்! இந்தக் குழுவில் பல முன்னாள் போராளிகளும் அடக்கம்! இன்னும் சொல்லப் போனால், எடுத்த எடுப்பில் புறம்தள்ளி, ஒதுக்கிவிட முடியாத குழுவினர் என்று சொல்லலாம்!

ஃபிரான்ஸை தளமாக கொண்டு இயங்கி வருகிறார்கள்!

02. இவர்களின் விளக்கம்!

தலைவர் பிரபாகரன் மே 18 ல் இறந்ததை இந்தக் குழுவினர் நம்புகிறார்களாம்! மேலும் மக்களும் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக, தலைவர் இறந்ததை நம்பத் தொடங்கிவிட்டார்களாம்! இதற்கு மேலும் இதனை மறைத்து வைப்பதற்கு என்ன இருக்கிறது?

தலைவருக்கு செய்ய வேண்டிய மரியாதைகளைச் செய்துவிடுவோம்! என்று இக்குழுவினர் தெரிவித்துள்ளனர்!

03. மாவீரர் தினத்தில் குழப்பமா?

ஆனால், இன்னுமொரு “ முக்கிய” குழுவினர், தலைவர் பிரபாகரன் இறந்ததை ஏற்றுக்கொள்ளவில்லை! அவர்களும் மாவீரர் நாள் தொடர்பாக, அறிவித்தல்கள், பிரசுரங்களை வெளியிட்டுள்ளார்கள்! ஆனால் தலைவர், உயிரோடு பத்திரமாக இருப்பதாக சொல்கிறார்கள்!

பெருமளவிலான மக்கள் தலைவர் இறந்ததை நம்பவில்லை என்றும், மக்களின் நம்பிக்கையை தாங்கள் வீணடிக்க விரும்பவில்லை என்றும் இக்குழுவினர் தெரிவிக்கிறார்கள்!

இவர்களும் ஃபிரான்ஸில்தான் செயல்படுகிறார்கள்!

04. உண்மை என்ன?

உண்மையில் தலைவர் இருக்கிறாரா? இல்லையா? இருக்கிறார் என்பவர்கள் அதற்குரிய ஆதாரத்தை முன்வைக்க முடியாமல் சிரமப்படுகிறார்கள்! ஆனால் தலைவர் இருக்கிறார் என்பதை உறுதியாக நம்புகிறார்கள்!

இல்லை என்பவர்கள், அதற்கு ஆதரமாக இலங்கை அரசு சொன்ன செய்திகளையும், காட்டிய படங்களையும் எடுத்துக்காட்டுகிறார்கள்! இலங்கை அரசு சொல்வதை நம்பியா, எமது தலைவரை இல்லை என்று நாம் சொல்லமுடியும்? என்று ஒரு தொகுதி மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்!

05.என்னுடைய சில கேள்விகள்!

தலைவர் இறந்துவிட்டார் என்று சொல்லி, அவருக்கும் சேர்த்து மாவீரர் நாள் கொண்டாட தயாராக இருக்கும் அந்தக் குழுவினரிடம் நான் சில கேள்விகளை முன்வைக்க விரும்புகிறேன்!

1. தலைவர் இறந்துவிட்டார் என்பது உங்களுக்கு எப்படித் தெரியும்? ஆதாரம் உண்டா? 2009 மே 18 ல் தலைவர் இறந்ததாக, இலங்கை அரசு சொன்னதை, பெருமளவிலான மக்கள் நம்பவில்லை! இலங்கை அரசின் அந்த அறிவிப்பை மக்கள் முற்றுமுழுதாக நிராகரித்து விட்டனர்!

அன்று மக்கள் நிராகரித்த ஆதாரத்தையா, மறுபடியும் தூசி தட்டி, மக்கள் முன் வைக்கப் போகிறீர்கள்?

<a href="

http://3.bp.blogspot.com/-XkitLoZCbSM/ToDyVbga8dI/AAAAAAAAAMs/mjA-uWNqhnw/s1600/Police_3.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em">Police_3.jpg

2. உங்கள் கூற்றுப்படி, இப்போது மக்கள் தலைவர் இறந்துவிட்டார் என்பதை நம்புகிறார்கள் என்றால், அதனை நம்பாத மக்களும் இருக்கிறார்கள்தானே! இதில் நம்பும் மக்களின் எண்ணிக்கை அதிகமா? நம்பாத மக்களின் எண்ணிக்கை அதிகமா?

ஆய்வு செய்தீர்களா? முழுமையான மக்களின் கருத்துக்களை கேட்டறிந்தீர்களா? இல்லை தன்னிச்சையாக நீங்களே முடிவெடுத்தீர்களா? நீங்கள் தலைவருக்கு அஞ்சலி செலுத்திய பின்னரும், மக்கள் அதனை நம்பாவிட்டால் என்ன செய்வீர்கள்?

3. தலைவரின் படத்துக்கு மாலைபோட்டு, மௌன அஞ்சலி செலுத்துவதோடு உங்கள் பணி முடிந்துவிடுமா? உங்கள் பேச்சை நம்பி, தலைவருக்காக மக்கள் குமுறி அழுதால், அவர்களை எப்படி ஆறுதல்படுத்துவீர்கள்?

4. தலைவருக்கு நீங்கள் கொடுக்கப் போகும் ரேங் ( RANK ) என்ன? ஜெனரல் பட்டம் கொடுத்து, சரத் ஃபொன்சேவுடன் சரி சமமா பார்ப்பீர்களா? அல்லது அதற்கும் மேலான ராணுவ பட்டம் கொடுப்பீர்களா?

ஒன்று சொல்லட்டுமா? உலகத்தில் எத்தனையோ தலைவர்கள் இறக்கிறார்கள்! அப்போதெல்லாம், மக்கள் இந்தளவுக்கு நம்பிக்கையை வெளிப்படுத்தவில்லையே! அவர்களின் இறப்பை ஏற்கத்தானே செய்கிறார்கள்!

ஆனால் தலைவர் விஷயத்தில் மட்டும், மக்கள் உறுதியாக நம்புகிறார்களே! இப்படி ஒரு அசைக்க முடியாத மக்களின் நம்பிக்கையை, வேறு எவராலும் பெற முடியுமா? இது எமது தலைவர் பெற்ற மாபெரும் பேறல்லவா?

இந்தப் பேற்றைவிடவா, நீங்கள் கொடுக்கப் போகும், இராணுவ ரேங், உயர்ந்ததாக இருக்கும்? ஒருவர் இறந்ததாக சொல்லப்படும்போது, மக்கள் அதனை நம்பாமல் உறுதியாக இருந்த சம்பவம், இதற்கு முன்னர் வரலாற்றில் எங்கேனும் நடந்ததுண்டா?

5. தலைவர் இறந்ததை தமிழ்மக்கள் ஏற்றுக்கொண்டால், தமிழர்களுக்கு தீர்வு தருவோம் என்று இலங்கை அரசு சொல்லியதா? போர்க்குற்றவாளிகளுக்குத் தண்டனை தருவோம் என்று ஐ நா சொல்லியதா? சிறையில் வாடும் போராளிகள் முழுமையாக விடுவிக்கப்படுவார்களா? இடம்பெயர்ந்த மக்கள் மீளக் குடியேற்றப்பட்டு, அவர்களது வாழ்க்கை சிறப்படைய நடவடிக்கை எடுக்கப்படுமா?

தூக்குத் தண்டனைக் கைதிகள் விடுவிக்கப்படுவார்களா? வதிவிட உரிமை இல்லாமல் வெளிநாடுகளில் துன்பப்படும் மக்களுக்கு, விஸா கிடைத்துவிடுமா?

அப்படி என்னதான் நன்மை நடந்துவிடும் என்று கருதி, இப்போது தலைவருக்கு மாலை போடுகிறீர்கள்!

மேலும் மேலும் மக்கள் மத்தியில் குழப்பத்தை உண்டு பண்ணுவதைத் தவிர, உங்களால் வேறு, என்னத்தை வெட்டிப் புடுங்க முடியும்?

எதற்கு இந்த அவசர குடுக்கைத் தனம்?

6. தலைவருக்கு செத்த வீடு கொண்டாடி, என்ன லா ஷபேல் சந்தியில், பூசணிக்காயை நாலு துண்டாக வெட்டி, குங்குமம் பூசி கழிப்பு கழிக்கப் போறீங்களா? அல்லது எட்டு செய்து, இறைச்சி படைத்து மூக்கு முட்ட தின்னப் போகிறீர்களா?

என்னதான்யா உங்க நோக்கம்?

charles_memorial01.jpg

7. அவரது படத்துக்கு பூமாலை போட்டு, மௌன அஞ்சலி செலுத்திவிட்டால், அவரை நீங்கள் கௌரவித்து விட்டதாக அர்த்தமா? இதற்காகவா, அந்த மனுஷன் 30 வருஷமா, போராடினார்?

இந்தக் கேள்விக்கெல்லாம் பதில் சொல்லுங்கையா?

“ தலைவர் உயிரோடு இருக்கிறார்! மீண்டும் போராடப் போறார்! அனைவரும் நிதி தாங்க” என்று யாராவது நிதி வசூலித்து, மக்களை ஏமாற்றிக் கொண்டு திரிந்தால், நீங்கள் இப்படி ஒரு அறிவிப்பை விடுவது நியாயம்!

இப்ப என்ன நடந்துவிட்டது என்று, புதுசு புதுசா கெளம்புறீங்க?

போங்கையா போங்க! போய் வேற ஏதாவது உருப்படியான வேலை இருந்தா பாருங்க!

http://ideamani615.b...og-post_27.html

இங்கு யாழில் இதற்கு பதிலளிக்க ... எம்மில் பலரால் முடியாது!!! ... மிஞ்சி மிஞ்சினால் விசிலடிப்போம், இல்லையேல் கொய்யோ முறையோ என்று திட்டுவோம்!!! ஆனால் இங்கும் பதிலளிக்க ஒருவர் உள்ளார்!!!!! அவர் ... உமை தான்!!! ... அவருக்கு நிறைய தெரியலாம்?????

  • கருத்துக்கள உறவுகள்

கோமகன் இரண்டு தரப்புக்களுடனும் தொடர்ந்து கதைத்தபடியே உள்ளேன் மீண்டும் அடுத்த ஞாயிறு ஒரு கூட்டம் நல்ல முடிவெடுப்பார்கள் என நினைக்கிறேன் . இல்லா விட்டால் இனிவருங்காலங்களில் மக்கள் தங்கள் வீடுகளிலேயே அஞ்சலி செலுத்துவதுதான் நல்லது

  • கருத்துக்கள உறவுகள்

கோமகன் இரண்டு தரப்புக்களுடனும் தொடர்ந்து கதைத்தபடியே உள்ளேன்

மீண்டும் அடுத்த ஞாயிறு ஒரு கூட்டம் நல்ல முடிவெடுப்பார்கள் என நினைக்கிறேன் . இல்லா விட்டால் இனிவருங்காலங்களில் மக்கள் தங்கள் வீடுகளிலேயே அஞ்சலி செலுத்துவதுதான் நல்லது

இது அப்படி வருகுததா??? :o :o :o

இசை சொன்னது தான் என் கருத்தும்.

தலைவர் இல்லை என்பவர்கள், மற்ற மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் போது, சேர்ந்து செலுத்தட்டும். தலைவர் இருக்கிறார் என்பவர்கள், மாவீரர்களாகிவிட்டவர்கள் என்று உறுதிப்படுத்தப்பட்டவர்களுக்கு மட்டும் வணக்கத்தை செலுத்துங்கள்.

காலம் எல்லோருக்குமே பதில் சொல்லும்.

இந்த காலகட்டத்தில் சிலர் குறுக்கால் புகுந்து பலவிதமான கருத்துக்களை சொல்வார்கள். தேவையானதை எடுத்து மற்றதை விடுக.

  • கருத்துக்கள உறவுகள்

இதுவரை மாவீரர் நாளை எப்படி நினைவு கூர்ந்தோமோ அப்படியே தொடர்ந்தும் செய்வதே நல்லது.2009 மே 19 இற்குப் பின்னர் 2 மாவீரர் நாள் வந்து போய்விட்டது.அப்போதெல்லாம் இல்லாத அளவுக்கு இந்த முறை என் இந்தக் குழப்பம் வருகிறது.சிறிலங்கா தந்த ஆதாரங்களை வைத்து தலைவர் இல்லை என்று சொல்வது சிறிலங்கா ஒரு உண்மை பேசும் பரிசுத்தமான நாடு என்று வக்காலத்து வாங்குவது போலாகும்.இல்லை என்பவர்கள் தகுந்த நம்பகமான ஆதாரங்களைத்தர வேண்டும்.மாறாக இருக்கிறார் என்பவர்கள் தகுந்த ஆதாரங்களைக் கொடுப்பது போர்க்குற்றம் தொடர்பான சிறிலங்கா மீதான விசாரணையை முடக்கும் செயலாகும்.அதற்காகத்தான் சிலர் தொடர்ந்து தலைவர் இல்லை என்று சொல்லி வருகிறார்களோ தெரியவில்லை.தலைவர் தன் சக்திக்கு மேலாக தமிழினத்திற்காகப் போராடியுள்ளார். அவர் போராடியது போதும்.அவர் தமிழினத் தேசிய எழுச்சியை மக்களிடம் ஏற்படுத்தியிருக்கிறார்.இந்த எழுச்சியை தகுந்த வழியில் முன்னெடுத்துச் செல்லாது தம்மிடையே அடிபடும் தமிழா!குழப்ப வாதிகளை ஒதுக்கி உண்மையானவர்களை தேர்ந்தெடு.காலம் சரியான தலைவனை மீண்டும் இனம் காட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இதுவரை மாவீரர் நாளை எப்படி நினைவு கூர்ந்தோமோ அப்படியே தொடர்ந்தும் செய்வதே நல்லது.2009 மே 19 இற்குப் பின்னர் 2 மாவீரர் நாள் வந்து போய்விட்டது.அப்போதெல்லாம் இல்லாத அளவுக்கு இந்த முறை என் இந்தக் குழப்பம் வருகிறது.சிறிலங்கா தந்த ஆதாரங்களை வைத்து தலைவர் இல்லை என்று சொல்வது சிறிலங்கா ஒரு உண்மை பேசும் பரிசுத்தமான நாடு என்று வக்காலத்து வாங்குவது போலாகும்.இல்லை என்பவர்கள் தகுந்த நம்பகமான ஆதாரங்களைத்தர வேண்டும்.மாறாக இருக்கிறார் என்பவர்கள் தகுந்த ஆதாரங்களைக் கொடுப்பது போர்க்குற்றம் தொடர்பான சிறிலங்கா மீதான விசாரணையை முடக்கும் செயலாகும்.அதற்காகத்தான் சிலர் தொடர்ந்து தலைவர் இல்லை என்று சொல்லி வருகிறார்களோ தெரியவில்லை.தலைவர் தன் சக்திக்கு மேலாக தமிழினத்திற்காகப் போராடியுள்ளார். அவர் போராடியது போதும்.அவர் தமிழினத் தேசிய எழுச்சியை மக்களிடம் ஏற்படுத்தியிருக்கிறார்.இந்த எழுச்சியை தகுந்த வழியில் முன்னெடுத்துச் செல்லாது தம்மிடையே அடிபடும் தமிழா!குழப்ப வாதிகளை ஒதுக்கி உண்மையானவர்களை தேர்ந்தெடு.காலம் சரியான தலைவனை மீண்டும் இனம் காட்டும்.

சரியாக சொன்னீர்கள் புலவர்,

காலம் சரியான தலைவனை மீண்டும் இனம் காட்டும். இதில் மட்டும் எனக்கு மொரன்பாடு உள்ளது தலைவர் இருக்கையில் ஏன் இன்னொருவரை தெரிவு செய்ய வேண்டும் ?

  • கருத்துக்கள உறவுகள்

தலைவர் இருக்கிறாரா இல்லையா என்கிற விவாதம் தேவையற்றது..! புலிகளே தாங்கள் போராட்டத்தை மௌனிக்கிறோம் நீங்கள் இனி தொடர்ந்து பணி செய்யுங்கள் என்று கூறிவிட்டார்கள்..! :rolleyes:

தவிர, தலைவர் இறந்ததாக சிங்களவன் காட்டிய பாடத்தில் சிங்களவனுக்கே நம்பிக்கை இல்லை..! :wub: மற்றவர்களை நம்புமாறு திணிப்பது சரியாகத் தெரியவில்லை..! :unsure:

தலைவர் இல்லையென்றால் அதை நிருபிக்க வேண்டியது சிங்களவன் / ஒட்டுக்குழுக்களின் வேலை..! :unsure:

மற்றும்படி, வழக்குகளில் Innocent until proven guilty என்று சொல்வது மாதிரி ...

தலைவர் is alive until proven otherwise..!!

நன்றி இசைக்கலைஞன்,

உங்கள் கருத்து வரவேற்க தக்கது.

  • கருத்துக்கள உறவுகள்

நான் சாக்கடை அரசியலில் கலக்க விரும்பவில்லை. குழுக்களாகப் பிரிந்து அடிபட்டுக்கொண்டு இருப்பவர்களைப் பார்த்துக்கொண்டு கண்ணைமூடிக் கடமைகளைச் செய்யும் அப்பாவிகள்தான் இக்குழுக்களைப் பலப்படுத்துபவர்கள். அந்த அப்பாவி ரகத்தில் நான் என்றுமே இருந்ததில்லை.

மற்றது, பங்களிப்பு என்ற வார்த்தையே எப்போதும் காசைக் கறப்பதைத்தான் நினைவுக்குக் கொண்டுவருகின்றது. எனவே வேறு சொற்பிரயோகத்தைப் பாவிக்கவேண்டுகின்றேன்.

இப்படி எழுத எந்த பொறுப்பும் தேவையில்லைக்கிருபன். பொறுப்புக்களை சுமப்பவருக்கே அதன் வலிகள் தெரிய வாய்ப்புண்டு. அதேநேரம் ஒற்றுமையாக இருந்தபோதும் நாம் ஏதும் செய்ததில்லை. இங்கு தமிழனுக்கான எந்த விடுதலையை நோக்கி தாங்கள் எழுதுகின்றீர்கள் என்பதும் புரியவில்லை.

தங்களது குடும்பத்துக்கான செயல்களை எந்த வார்த்தை கொண்டு அழைப்பீர்களோ அதே சொல்தான் பங்களிப்புக்கும் வரும்.

பாருங்கள் தமிழன் தனது பண விடயத்தில் எவ்வளவு கண்ணும் கருத்துமாக இருருக்கின்றான் என்பது. பங்களிப்பு என்றதற்கே பணமா என்பதன்மூலம் தெரிகிறது.

இருப்பினும் நன்றி தங்களது நேரத்திற்கு.

  • கருத்துக்கள உறவுகள்

சரியாக சொன்னீர்கள் புலவர்,

காலம் சரியான தலைவனை மீண்டும் இனம் காட்டும். இதில் மட்டும் எனக்கு மொரன்பாடு உள்ளது தலைவர் இருக்கையில் ஏன் இன்னொருவரை தெரிவு செய்ய வேண்டும் ?

ஏன் முரண்பாடு? இதில் வரும் மீண்டும் என்னும் சொல்லுக்கு பல அர்த்தங்கள் இருக்கலாம் இல்லையா?

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி எழுத எந்த பொறுப்பும் தேவையில்லைக் கிருபன். பொறுப்புக்களை சுமப்பவருக்கே அதன் வலிகள் தெரிய வாய்ப்புண்டு. அதேநேரம் ஒற்றுமையாக இருந்தபோதும் நாம் ஏதும் செய்ததில்லை. இங்கு தமிழனுக்கான எந்த விடுதலையை நோக்கி தாங்கள் எழுதுகின்றீர்கள் என்பதும் புரியவில்லை.

தங்களது குடும்பத்துக்கான செயல்களை எந்த வார்த்தை கொண்டு அழைப்பீர்களோ அதே சொல்தான் பங்களிப்புக்கும் வரும்.

பாருங்கள் தமிழன் தனது பண விடயத்தில் எவ்வளவு கண்ணும் கருத்துமாக இருருக்கின்றான் என்பது. பங்களிப்பு என்றதற்கே பணமா என்பதன்மூலம் தெரிகிறது.

இருப்பினும் நன்றி தங்களது நேரத்திற்கு.

மே 18 அழிவுகள் முடிந்து இரண்டு வருடங்கள் தாண்டியும், எதையுமே சீராகச் செய்யமுடியாமல்தான் தேசியத்தை முன்னெடுப்பதாகக் கூறும் குழுக்கள் உள்ளன. இவர்களின் நோக்கம் மிகவும் தெளிவானது. தமிழ்மக்கள் நியாயமாக வேண்டி நிற்கும் அரசியல் அபிலாஷைகளை வைத்தும், தமிழீழத்திற்காக உயிர்நீர்த்த மாவீரர்களின் தியாகத்தை வைத்தும் தமது மேலாண்மையை நிறுவவும், சொந்த வாழ்வில் முன்னேறவும் விரும்புகின்றார்கள்.

அதனால்தான் ஒவ்வொருவரும் மற்றையவரை இலங்கையரசின் கூலிகள் என்று தாக்கிக்கொண்டு இருக்கின்றனர்.

இதையெல்லாம் புரியாமல் இருப்பதும் ஒருவகையில் உடல்/உள ஆரோக்கியத்திற்கு நல்லதுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

உங்களது ஆதங்கம் புரிகிறது. ஆனால் நாம் திடமாக இருக்கவேண்டிய வேளையிது. இதற்குள் போகாமல் எம்மால் செய்யக்கூடிய பணிகளைச்செய்வதுடன் இவர்களை சந்திக்கும்போதெல்லாம் எமது எதிர்ப்பைக்காட்டுவதும் தான் சரியானதே தவிர நாமும் இன்னொரு பக்கம் நின்று அதையும் பிரிப்பது வேதனையில் வாடும் எமது மக்களை மேலும் தனியேவிடும் செயல். மற்றும் படி இலங்கையிரசின் கூலிகளாக எவரையும் நான் வகைப்படுத்தவில்லை. அப்படி எவரையும் நான் இங்கு காணவுமில்லை.

மே 18 அழிவுகள் முடிந்து இரண்டு வருடங்கள் தாண்டியும், எதையுமே சீராகச் செய்யமுடியாமல்தான் தேசியத்தை முன்னெடுப்பதாகக் கூறும் குழுக்கள் உள்ளன. இவர்களின் நோக்கம் மிகவும் தெளிவானது. தமிழ்மக்கள் நியாயமாக வேண்டி நிற்கும் அரசியல் அபிலாஷைகளை வைத்தும், தமிழீழத்திற்காக உயிர்நீர்த்த மாவீரர்களின் தியாகத்தை வைத்தும் தமது மேலாண்மையை நிறுவவும், சொந்த வாழ்வில் முன்னேறவும் விரும்புகின்றார்கள்.

அதனால்தான் ஒவ்வொருவரும் மற்றையவரை இலங்கையரசின் கூலிகள் என்று தாக்கிக்கொண்டு இருக்கின்றனர்.

இது ஆரோக்கியமாக நிதானமாக விவாதிக்கப்பட வேண்டிய விடயம். ஏனெனில் இதில் ஒரு இனத்தின் வாழ்வாதாரமே தங்கியுள்ளது.

இன்று பல புலம்பெயர் அமைப்புக்கள் உள்ளன. இந்த இரண்டு வருட காலத்திலும் அவர்கள் யார்? அவர்கள் எதனை சாதித்தார்கள்? எதனை சாதிக்கவில்லை? என அலசுவது உபயோகமானது. மாறாக எல்லோரயும் ஒரே குட்டைக்குள் போடுவது நல்லது செய்பவர்களையும் அவமதிப்பாகின்றது.

ஒரு மிகமோசமான சர்வதேச படுகொலைக்கு ஆளான, ஒரு சின்ன, இயல்பாகவே பிளவுபட்ட ஒரு சிறு இனம், இந்த இரண்டு வருட காலத்திலும் சாதித்தவை - சாதிக்காதவை எனப்பார்க்கும் பொழுது நாம் இன்றும் சர்வதேச அரங்கில் எமது பிரச்னையை உயிர்ப்புடன் வைத்துள்ளதே வெற்றிதான்.

இதையெல்லாம் புரியாமல் இருப்பதும் ஒருவகையில் உடல்/உள ஆரோக்கியத்திற்கு நல்லதுதான்.

இல்லை இதையெல்லாம் நகைச்சுவையாக எடுத்து எம்மை நாமே அவமதித்தும் செல்லலாம்.

Edited by akootha

இவர்களின் நோக்கம் மீண்டும் பணம் பறிப்பதுதான். கேளிக்கையாக செய்தால்தானே பணம் கறக்க முடியும்????

இப்படித்தான் இங்கும் ஒரு கூட்டம் தலைவர் இல்லை என்று கூறிக்கொண்டு நவம்பர் மாதம் மட்டும் அவரின் பிறந்தநாளை விமரிசையாகக் கொண்டாடி வருகிறது. அதைவிட வேடிக்கை என்னவென்றால் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டவர்களும் மாவீரர் பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பதுதான்.....

Edited by தமிழச்சி

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களின் நோக்கம் மீண்டும் பணம் பறிப்பதுதான். கேளிக்கையாக செய்தால்தானே பணம் கறக்க முடியும்????

இப்படித்தான் இங்கும் ஒரு கூட்டம் தலைவர் இல்லை என்று கூறிக்கொண்டு நவம்பர் மாதம் மட்டும் அவரின் பிறந்தநாளை விமரிசையாகக் கொண்டாடி வருகிறது. அதைவிட வேடிக்கை என்னவென்றால் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டவர்களும் மாவீரர் பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பதுதான்.....

அப்படியா தமிழச்சி!!!!!!!

இது புதுச்செய்திதான் ஆதாரத்தோடு இங்கு இணையுங்கள். யாராக இருந்தாலும் மக்கள் முன் நிறுத்தப்படவேண்டும்.

2010ஆம் ஆண்டு நடைபெற்ற பிறந்தநாள் விழாப் படங்கள்

http://www.ninaivuka...106417269_fFqa9

முள்ளிவாய்க்கால் அவலம் நடந்து முடிந்த ஆறு மாதத்திற்குள் விமரிசையாகச் செய்யப்பட்ட பிறந்தநாள் படங்கள் சில இதோ...

http://www.ninaivuka...724886355_J7sEr

post-3262-0-64577800-1317470736_thumb.jp

post-3262-0-16064200-1317470748.jpg

post-3262-0-23917600-1317470759_thumb.jp

post-3262-0-29250500-1317470768.jpg

post-3262-0-20126300-1317470778.jpg

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களின் நோக்கம் மீண்டும் பணம் பறிப்பதுதான். கேளிக்கையாக செய்தால்தானே பணம் கறக்க முடியும்????

இப்படித்தான் இங்கும் ஒரு கூட்டம் தலைவர் இல்லை என்று கூறிக்கொண்டு நவம்பர் மாதம் மட்டும் அவரின் பிறந்தநாளை விமரிசையாகக் கொண்டாடி வருகிறது. அதைவிட வேடிக்கை என்னவென்றால் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டவர்களும் மாவீரர் பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பதுதான்.....

அப்படியா தமிழச்சி!!!!!!!

இது புதுச்செய்திதான் ஆதாரத்தோடு இங்கு இணையுங்கள். யாராக இருந்தாலும் மக்கள் முன் நிறுத்தப்படவேண்டும்.

2010ஆம் ஆண்டு நடைபெற்ற பிறந்தநாள் விழாப் படங்கள்

http://www.ninaivuka...106417269_fFqa9

முள்ளிவாய்க்கால் அவலம் நடந்து முடிந்த ஆறு மாதத்திற்குள் விமரிசையாகச் செய்யப்பட்ட பிறந்தநாள் படங்கள் சில இதோ...

http://www.ninaivuka...724886355_J7sEr

அடடா எங்கு சுத்தி எங்கு வருகிறீர்கள்...... உங்களை நான் கேட்டது புலிகளால் குற்றவாளிகளாக மரணதண்டனை கொடுக்கப்பட்டவர்களை மாவீரர்கள் பட்டியில் இணைத்திருப்பதற்கான ஆதாரங்களைத்தான்.

அடுத்த மிக முக்கியமான விடயம் என்னுடைய மகள் தலைவர் அவர்களின் படத்தை வைத்துக் கொண்டு நிற்கும் படத்தை இங்கு இணைத்திருக்கிறீர்கள். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒன்று மட்டும் குழப்பமாக இருக்கிறது உங்கள் மூலமாக நாடுகடந்த அரசாங்கம் என்னையும் குறி வைக்கிறதா?

இன்னொன்றை இதில் கூறுகிறேன். தலைவர் அவர்களின் பிறந்தநாள் என்பதை நானும் என் ஊரவர்களும் இங்கு மட்டுமில்லை தாயகத்திலும் கொண்டாடுகிறோம். என்ன தமிழச்சி இதே நிகழ்வில்தான் சீமானை கனெடிய அரசு கலந்து கொள்ளவிடாமல் திருப்பி அனுப்பியதை நீங்கள் மறந்து விட்டீர்களா? அந்த விழாவிற்கு நீங்களும் வருகை தந்திருந்ததை அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க மாட்டீர்கள். அவ்விழா முடிவடைந்தபின் இந்த யாழ்க்கருத்துக்களத்தில் ஜான்சிராணி எழுதியது அவ்வளவு சீக்கிரம் மறக்கக்கூடியதா? :D

Edited by valvaizagara

  • கருத்துக்கள உறவுகள்

முக்கியமான விடயம்

இங்கு விளக்கேற்றுபவருக்கு அருகாமையில் உள்ளவரோடு சிரிஆர் நட்சத்திரவிழாவில் ஒரே கூடாரத்தின் கீழ்,...

நாடு கடந்த அரசாங்கத்தின் சார்பில் நீங்களும் இன்னும் சிலரும்

தேசிய மக்களவை சார்பாக அவரும்மேலும் சிலரும் ஒன்றாக இருந்து தமிழீழ தேசிய அடையாள அட்டைக்கான விண்ணப்பங்களை வழங்கிக் கொண்டிருந்தீர்கள். அப்போது நீங்கள் அவரிடம் கேட்கவில்லையா இக்கேள்வியை..... ஏன் தலைவரின் பிறந்தநாளைக் கொண்டாடுகிறீர்கள் என்று!!!!!

ஒரே குடையில் இருப்பவர்கள் வெளியே முதுகில் குத்தும் நடவடிக்கைகளை இப்படியான திரிகளில் மேற்கொள்வது ஒற்றுமையை ஊக்குவிக்குமா?....

என்னமோ செய்யுங்கள்.....

பாவம் தமிழனம்

:(

Edited by valvaizagara

  • கருத்துக்கள உறவுகள்

அதானே.. அந்தப் பிள்ளையை எங்கேயோ பார்த்தமாதிரி இருக்கே எண்டு யோசிச்சன்..! :rolleyes:

தமிழச்சி நாடுகடந்த அரசாங்கம்.. வல்வை அக்கா என்ன கட்சி? ^_^

உந்தப் புடுங்குப் பாடுகளை விட்டுப்போட்டு சிங்களவன் என்ன செய்யிறான் என்கிறதையும் கொஞ்சம் பாருங்கோ..! :wub:

  • கருத்துக்கள உறவுகள்

அதானே.. அந்தப் பிள்ளையை எங்கேயோ பார்த்தமாதிரி இருக்கே எண்டு யோசிச்சன்..! :rolleyes:

தமிழச்சி நாடுகடந்த அரசாங்கம்.. வல்வை அக்கா என்ன கட்சி? ^_^

உந்தப் புடுங்குப் பாடுகளை விட்டுப்போட்டு சிங்களவன் என்ன செய்யிறான் என்கிறதையும் கொஞ்சம் பாருங்கோ..! :wub:

எந்தக் கட்சியும் இல்லை....... தாயக விடுதலையில் வேணவாக் கொண்ட.....சாதாரண தமிழ் குடிமகள். :)

தமிழண்டா.... :lol:

  • கருத்துக்கள உறவுகள்

சரியாக சொன்னீர்கள் புலவர்,

காலம் சரியான தலைவனை மீண்டும் இனம் காட்டும். இதில் மட்டும் எனக்கு மொரன்பாடு உள்ளது தலைவர் இருக்கையில் ஏன் இன்னொருவரை தெரிவு செய்ய வேண்டும் ?

ஏன் முரண்பாடு? இதில் வரும் மீண்டும் என்னும் சொல்லுக்கு பல அர்த்தங்கள் இருக்கலாம் இல்லையா?

அப்படியா ................? புரிகின்றது நான் நினைப்பது போல் நீங்களும் நினைத்திருந்தால் நன்றி உடையார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சும்மா வெட்டிப்பேச்சு கதைக்காமல் ஆக வேண்டிய வேலையைப் பாப்பம்.புலத்தில் மாவீரர் தினம் 3 தடவைகள் வந்திட்டுது.ஒவ்வொரு கடையிலையும் நல்ல வருமானம். அனால் நாட்டில் இன்னும் அதே நிலைதான். ஏதோ ஒரு சிலருக்கு கொஞ்ச உதவி கிடைக்கின்றது .நிறையப்பேருக்கு இல்லை. மாவீரர்கள் போற்றப்பட வேண்டியவர்கள் தான், ஆனாலும் மாவீரராகியவரின் மனைவி,பிள்ளைகளை,தாய்,தந்தையரை கஸ்டப்படாமல் பார்த்தாலே அவர்களுக்கு நாம் செய்யும் வணக்கமாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா வெட்டிப்பேச்சு கதைக்காமல் ஆக வேண்டிய வேலையைப் பாப்பம்.புலத்தில் மாவீரர் தினம் 3 தடவைகள் வந்திட்டுது.ஒவ்வொரு கடையிலையும் நல்ல வருமானம். அனால் நாட்டில் இன்னும் அதே நிலைதான். ஏதோ ஒரு சிலருக்கு கொஞ்ச உதவி கிடைக்கின்றது .நிறையப்பேருக்கு இல்லை. மாவீரர்கள் போற்றப்பட வேண்டியவர்கள் தான், ஆனாலும் மாவீரராகியவரின் மனைவி,பிள்ளைகளை,தாய்,தந்தையரை கஸ்டப்படாமல் பார்த்தாலே அவர்களுக்கு நாம் செய்யும் வணக்கமாக இருக்கும்.

பாரத் நன்றாக சொன்னீர்கள், உங்களுக்கு என் முதல் பச்சை

  • கருத்துக்கள உறவுகள்

கோமகன் இரண்டு தரப்புக்களுடனும் தொடர்ந்து கதைத்தபடியே உள்ளேன் மீண்டும் அடுத்த ஞாயிறு ஒரு கூட்டம் நல்ல முடிவெடுப்பார்கள் என நினைக்கிறேன் . இல்லா விட்டால் இனிவருங்காலங்களில் மக்கள் தங்கள் வீடுகளிலேயே அஞ்சலி செலுத்துவதுதான் நல்லது

எங்கே ஐயா முடிவு?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.