Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாவீரர் வாரத்தில் மண்ணுக்காக வாழ்ந்து இன்று சிறையிருக்கிற முன்னாள் போராளிகளுக்கு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர் வாரத்தில் மாவீர்கள் சென்ற வழியில் சென்று தங்கள் வாழ்வை இன்று சிறைகளில் கழிக்கிற முன்னாள் போராளிகள் முகவர்கள் ஆயிரக்கணக்கில் சிறைகளில் வாடுகிறார்கள். இவர்களுக்கான அடிப்படை வசதிகள் எதுவுமற்ற மிகவும் அவலப்படுகிறார்கள். அவர்களுக்கான அடிப்படை உதவிகளை வழங்கியுதவுங்கள்.

தமிழ் அரசியல் கைதிகளின் அடிப்படைத் தேவைகளையாவது கொடுக்க உதவுங்கள்.

இலங்கை சிறைச்சாலைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகள் தமது அத்தியாவசிய தேவைகளுக்கான சிலவற்றுக்கான உதவிகளை வேண்டியுள்ளனர்.

அவசர தேவைகளான சவர்க்காரம் , பற்பசை , பற்தூரிகை போன்றவற்றை புலம்பெயர் சமூகத்திடமிருந்து எதிர்பார்க்கின்றனர். இவர்களது குடும்பங்கள் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்வதும் இவர்களைச் சென்று பார்க்கவோ பொருட்களை வழங்கவோ பொருளாதார வசதிகள் இல்லாதுமுள்ளனர்.

உதவி வேண்டும் சிறைச்சாலைகளின் விபரமும் உதவி வேண்டும் தமிழ் கைதிகள் எண்ணிக்கையும் :-

அனுராதபுரம் சிறைச்சாலை – 95பேர்.

கொழும்பு புதிய மகசீன் சிறைச்சாலை – 240பேர்.

கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலை – 200பேர்

மொத்தம் = 535பேர்.

அனுராதபுரம் 95பேர் :-

பற்பசை = ஒருவருக்கு – 140.00ரூபா = 95 x 140.00ரூபா =13300.00ரூபா

பற்தூரிகை = ஒருவருக்கு 2 = 120.00ரூபா = 95 x 120.00ரூபா = 11400.00ரூபா

சவர்க்காரம் ஒருவருக்கு 4 = 140.00ரூபா = 95 x140.00ரூபா = 13300.00ரூபா

மொத்தம் = 38000.00ரூபா (அண்ணளவாக யூரோவில் 260.00€)

கொழும்பு புதிய மகசீன் 240பேர் :-

பற்பசை = ஒருவருக்கு – 140.00ரூபா = 240 x 140.00ரூபா =33600.00ரூபா

பற்தூரிகை = ஒருவருக்கு 2 = 120.00ரூபா = 240 x 120.00ரூபா =28800 .00ரூபா

சவர்க்காரம் ஒருவருக்கு 4 = 140.00ரூபா = 240 x140.00ரூபா =33600 .00ரூபா

மொத்தம் = 96000.00ரூபா (அண்ணளவாக யூரோவில் – 655.00€)

கொழும்பு விளக்கமறியல் 200பேர்:-

பற்பசை = ஒருவருக்கு – 140.00ரூபா = 200 x 140.00ரூபா =28000.00ரூபா

பற்தூரிகை = ஒருவருக்கு 2 = 120.00ரூபா = 200 x 120.00ரூபா =24000 .00ரூபா

சவர்க்காரம் ஒருவருக்கு 4 = 140.00ரூபா = 200 x140.00ரூபா =28000 .00ரூபா

மொத்தம் = 80000.00ரூபா (அண்ணளவாக யூரோவில் – 545.00€)

மொத்தம் தேவைப்படும் பொருட்களும் விலைகளும்:-

பற்பசை = ஒருவருக்கு – 140.00ரூபா = 535 x 140.00ரூபா = 74900.00ரூபா

பற்தூரிகை = ஒருவருக்கு 2 = 120.00ரூபா = 535 x 120.00ரூபா = 64200.00ரூபா

சவர்க்காரம் ஒருவருக்கு 4 = 140.00ரூபா = 535 x 140.00ரூபா = 74900.00ரூபா

மொத்தம் = 214000.00ரூபா (அண்ணளவாக யூரோவில் – 1460.00€)

இவ்வுதவியை புலத்து உறவுகளாகிய உங்களிடமிருந்து நேசக்கரம் வேண்டுகிறது.

எங்களுக்காக வாழ்ந்தவர்களுக்கான அடிப்படைத் தேவைகளையேனும் கொடுத்து உதவுவோம்.

உதவ விரும்புவோர் தொடர்பு கொள்ள :-

முகவரி:

Nesakkaram e.V

Hauptstr – 210

55743 Idar-Oberstein

Germany

Shanthy Germany – 0049 6781 70723

மின்னஞ்சல்: nesakkaram@gmail.com

Vereinsregister:

AZ- VR 20302

Amtsgericht 55543 Bad Kreuznach

Finanzamt Idar-Oberstein,Steuer-Nr. 09/665/1338/8

Bank information

Germany:

NESAKKARAM e.V.

55743 Idar-Oberstein

Konto-Nr. 0404446706

BLZ 60010070

Postbank Stuttgart

Other countries:

NESAKKARAM E.V

A/C 0404446706

Bank code – 60010070

IBAN DE31 6001 0070 0404 4467 06

Swift code – PBNKDEFF

Postbank Stuttgart

Germany

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த உறவுகளுக்கான தனது உதவியை வழங்கி அதற்காக ஒரு திரியினையும் உடையார் என்ற உறவு துளித்துளியாய் பகுதியிலும் ஆரம்பித்துள்ளார்.

http://www.yarl.com/...showtopic=94710

உடையாருக்கு மிக்க நன்றிகள்.

உதவிகள் விபரம்

உடையார் - 100அவுஸ்ரேலிய டொலர்கள்.

Edited by shanthy

எந்த சந்தர்ப்பத்தில் எதைக் கோருவது என்று கொஞ்சம் சிந்தித்தால் நல்லது. மாவீரர் வாரமென்பது ஒரு கொண்டாட்டம் அல்ல. அதற்கு ஒரு பரந்த, ஆழமான நோக்கமுண்டு.

மனிதாபிமானம் அற்றவர்கள் தான் அது கொச்சைபடுத்தப்படுவது பற்றிக் கவலைப்படமாட்டார்கள். அந்தப் புனித தினத்திலும் தமது நோக்கங்களை (அது நல்லதாக இருந்தாலும்) மட்டும் நிறைவேற்றிக்கொள்ள முனைவர்.

ஆட்டுக்குள் மாட்டை விடுவதில் சந்தர்ப்பவாதிகள் தான் கைதேர்ந்தவர்கள். நீங்களுமா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எந்த சந்தர்ப்பத்தில் எதைக் கோருவது என்று கொஞ்சம் சிந்தித்தால் நல்லது. மாவீரர் வாரமென்பது ஒரு கொண்டாட்டம் அல்ல. அதற்கு ஒரு பரந்த, ஆழமான நோக்கமுண்டு.

மனிதாபிமானம் அற்றவர்கள் தான் அது கொச்சைபடுத்தப்படுவது பற்றிக் கவலைப்படமாட்டார்கள். அந்தப் புனித தினத்திலும் தமது நோக்கங்களை (அது நல்லதாக இருந்தாலும்) மட்டும் நிறைவேற்றிக்கொள்ள முனைவர்.

மாவீரர் வாரத்தையும் மாவீரர் நாளையும் கொண்டாட்டமென்று கூடி கும்மிடியத்து கு(ளி)டித்துக் கொண்டாடும் கொண்டாட்டமாக அழைப்பதில்லை ஆனால் 21.11-27.11 வரை புனிதநாளாக கொண்டாடுகிறோம். (இது விழாவுமல்ல திருவிழாவுமல்ல)

மாவீரர் வாரத்துக்குள் உள்ள பரந்த ஆளமான நோக்கத்தில் ஒரு பகுதிதான் மாவீரர் வாரத்தில் மாவீரர்களின் குடும்பங்களை கவுரவித்தல். அதுபோல வெளிநாடுகளில் உள்ள மாவீரர்களின் குடும்பங்களையும் கவுரவிக்கப்படுகிறது.

மாவீரர் வாரத்தில் மாவீரர்கள் சுமந்த இலட்சியத்தைச் சுமந்து தங்கள் வாழ்வை சிறைகளில் அவலத்தோடு கழிக்கிற முன்னாள் போராளிகளுக்கு உதவியைக் கோருவதில் எந்தத்தவறுமில்லையென்பது அடியேனின் கருத்து.

தங்களுடன் தோழோடு தோழாய் நின்று மடிந்த வீரர்களின் நினைவுகளோடும் அந்தப் புனிதர்களைச் சிறைகளிலும் நினைவு கூர்ந்து செத்துக் கொண்டிருக்கிறவர்களுக்காக கேட்கப்படுகிற உதவியில் எவ்வித புனிதமும் அழிந்து போகாது.

தனது கணவனையும் மகனையும் நாட்டுக்காக மாவீரராக ஈந்த தாய். தனது கணவனுக்கும் மகனுக்கும் ஒரு விளக்கெரிக்க ஒரு சொட்டு எண்ணையில்லையே என்று அழுகிற தாய் , தனது மாவீரக் கணவனினதும் மகனினதும் கனவுகளை ஏந்திச் சிறையிலிருக்கிற முன்னாள் போராளி மகன் உடுத்துக்கொள்ள ஒரு சாரத்தையேனும் இந்நாளில் வழங்குவீர்களா எனக்கேட்கிற அழுகையொலியை இந்தநாளில் இதெல்லாம் கேட்க வேண்டாமென ஒதுக்க முடியவில்லை.

உணர்ச்சி மேலீட்டிலும் பார்க்க உணர்வுகளை மதிப்போம் ஆராவமுதன் அதுகூட மாவீரர்களுக்குச் செய்கிற கைமாறுதான்.

Edited by shanthy

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அக்கா, இப்படியான செய்திகளை படிக்கும்போது தான் எனக்கு நான் பணக்காரன் ஆகவேண்டும் என்று ஆசை வருகிறது.

எமது இலண்டன் உயர்கூழாம்கள் கடிகாரமே நீங்கள் கேட்ட மொத்த தொகையில் பார்க்க பத்து மடங்கு பெறுமதி. அதை காட்டி பெருமை பேசிவிட்டு, இருபது பவுண்ட்ஸை எனது மாவீரர் நாள் கஞ்சி நிகழ்விற்கு பெரிய மனதுடன் தந்தார். எதோ கிடைத்த அளவிற்கு லாபம் என்று திரும்பி வந்தேன்.

நான் கூறியது போல், ஜனவரியில் என்னால் ஆன உதவியை செய்கிறேன்.

இப்போதைக்கு ஒரு சிறிய தொகையை அனுப்புகிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எந்த சந்தர்ப்பத்தில் எதைக் கோருவது என்று கொஞ்சம் சிந்தித்தால் நல்லது. மாவீரர் வாரமென்பது ஒரு கொண்டாட்டம் அல்ல. அதற்கு ஒரு பரந்த, ஆழமான நோக்கமுண்டு.

மனிதாபிமானம் அற்றவர்கள் தான் அது கொச்சைபடுத்தப்படுவது பற்றிக் கவலைப்படமாட்டார்கள். அந்தப் புனித தினத்திலும் தமது நோக்கங்களை (அது நல்லதாக இருந்தாலும்) மட்டும் நிறைவேற்றிக்கொள்ள முனைவர்.

ஆட்டுக்குள் மாட்டை விடுவதில் சந்தர்ப்பவாதிகள் தான் கைதேர்ந்தவர்கள். நீங்களுமா?

ஆமாம், ஆராவமுதன் மாவீரரின் சகோதரங்கள் வாய் நாறிப்போய், பின்னை கழுவிப்போட்டு கைக்கு போட சவர்க்காரம் கூட இல்லாமல் இருக்கலாம்.

நாங்கள் இங்கு பல இலட்சம் பவுண்ட்ஸ் செலவழித்து மாவீரர் நாள் "கணக்கு காட்டி" கொண்டாடவேண்டும் இல்லையா?

எது முக்கியம் என்று என் கண் திறந்ததற்கு நன்றி.

பின்குறிப்பு: இப்போது நாம் பருகும் பால் "பசுவில்" இருந்து வந்ததல்ல. ஹோல்ச்டீன், ஜெர்சி மாடுகள், இந்திய பசுக்களுக்கும் ஆப்பிரிக்க சீபோக்களுக்கும் பிறந்தவை.

எந்த சந்தர்ப்பத்தில் எதைக் கோருவது என்று கொஞ்சம் சிந்தித்தால் நல்லது. மாவீரர் வாரமென்பது ஒரு கொண்டாட்டம் அல்ல. அதற்கு ஒரு பரந்த, ஆழமான நோக்கமுண்டு.

மனிதாபிமானம் அற்றவர்கள் தான் அது கொச்சைபடுத்தப்படுவது பற்றிக் கவலைப்படமாட்டார்கள். அந்தப் புனித தினத்திலும் தமது நோக்கங்களை (அது நல்லதாக இருந்தாலும்) மட்டும் நிறைவேற்றிக்கொள்ள முனைவர்.

ஆட்டுக்குள் மாட்டை விடுவதில் சந்தர்ப்பவாதிகள் தான் கைதேர்ந்தவர்கள். நீங்களுமா?

காலம் தனது கடமையை செவ்வனே செய்கின்றது . மாவீரர் தினம் என்றோ வாரம் , என்றோ சூரியன் உதித்து மறையாமல் விடுவதில்லை . எமக்கு அவர்கள் பால் உள்ள மதிப்பும் , மரியாதையும் மனதிலே மட்டும் இருந்தால் போதுமானது . நடத்தையில் அல்ல . எங்களால் முடியாத ஒரு விடையத்தை ஒருவர் செய்யும் பொழுது ஏன் இந்த வசைபாடல்??????????? சிந்திப்போம்!!!!!!!!!!!!!!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யா.கா. க சார்பாக கள உறவு ஜீவா அனுப்பிய 50€ இத்திட்டத்திற்காக பயன்படுத்தப்படவுள்ளது.

Edited by shanthy

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அக்கா, இப்படியான செய்திகளை படிக்கும்போது தான் எனக்கு நான் பணக்காரன் ஆகவேண்டும் என்று ஆசை வருகிறது.

நான் கூறியது போல், ஜனவரியில் என்னால் ஆன உதவியை செய்கிறேன்.

இப்போதைக்கு ஒரு சிறிய தொகையை அனுப்புகிறேன்.

தினமும் வருகிற கடிதங்கள் அழைப்புகள் தருகிற துயரங்களைக் கேட்கிற போதெல்லாம் நினைப்பேன் பணக்காரியாக இருந்தால் எத்தனையோ குடும்பங்களை வாழ்விக்கலாமென்று. ஆனால் வெறுங்கையோடு நின்று கொண்டு எதையும் செய்ய முடியவில்லை.

மிக்க நன்றிகள். உங்கள் உதவி நிச்சயம் ஒரு போராளிக்கான அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றப் பேருதவியாக இருக்கும்.

உதவி செய்ய முடியாவிட்டாலும் உபத்திரம் செய்யாதிருப்போம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆராவமுதன் உங்கள் கைதேர்ச்சியை மிகவும் நன்றாகவே இருக்கிறது. உங்களுக்கான பதில் மேலே உள்ளது. போட்டுள்ள பதிலுக்கு உங்கள் பதிலை நீங்கள் தரவில்லை.

புலம் பெயர்ந்தவர்களின் மாவீரர் வார அனுஷ்டிப்பு, தமது காமாலைக் கண்களினூடாக மாவீரர் தினத்தைப் பார்க்கும் விதம், மனதில் அதைத் திரிபுபடுத்தும் விதம், தாயகத்தில் அது அனுஷ்டிக்கப்படும் விதத்திலிருந்து எவ்வளவு தூரம் வேறுபட்டது என்பது மிகத் தெளிவாக தெரிகிறது.

இங்கு பலர் தமது சுயரூபங்களை வெளிபடுத்தியுள்ளார்கள். அவர்களின் முதலைக்கண் நீர்களும் தெரிகிறது.

ஐய்யா ஆரவமுதன் , இந்தப் பதிவில் நான் , குழவி , தப்பிலி , ஆகியோரே கருத்துக்களை வழங்கியிருந்தோம் . பொதுவாகப் பலர் முதலைக்கண்ணீர் வடிக்கின்றார்கள் என்றால் எப்படி???? இங்கு எல்லோருமே அவரவர் தளங்களில் இருந்து இயங்கிக்கொண்டுதான் இருக்கின்றார்கள் . எங்கேயோ உள்ள வெக்கிராணத்தை இங்கே நீங்கள் கொட்டுவதாகவே எனக்குப் படுகின்றது . ஆயிரம் பேச்சை விட ஒரு செயல்திறன் மேலானது . அதற்கு நாள் நட்சத்திரம் ராகுகாலம் எமகண்டம் பார்க்கத் தேவையில்லை ஐய்யா ஆரவமுதன்.

Edited by komagan

  • கருத்துக்கள உறவுகள்

அங்குள்ள பாதிக்கப்பட்டவருக்கு இங்கிருந்து உதவி செய்பவர்கள் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள் மாவீரர் தினம் என்பதால் அந் நேரத்தில் அவர்கள் விசேசமாக செய்ய வேண்டும் என்பது இல்லை அதே நேரத்தில் சாந்தி அக்கா நேசக்கரம் என்னும் தொண்டு நிறுவனத்தை கொண்டு நடத்துவதால் எப்படியாவது உதவி பெற்று அங்குள்ளவருக்கு அனுப்ப வேண்டும் என்ட உத் வேகத்தில் இருப்பார் இந்த சந்தர்ப்பதை விட்டால் அவருக்கு வேறு சந்தர்ப்பம் அமையாது.

நான் எழுதிய கருத்துக்கான உரிய பதில் இங்கு வரவில்லை. ஏதோ ஒப்பாரி வைத்துள்ளீர்கள். அதை விளங்கி பதில் எழுதினால், மேலும் எழுதுவது பிரயோசனமாக இருக்கும்.

நாம் என்னத்தை திரும்பத்திரும்ப செய்கிறோமோ அதுவே நாமாக

ஆகிவிடுகிறோம். சிறப்பு என்பது செயலில் இல்லை, பழக்கத்தில் இருக்கிறது .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எப்படியாவது உதவி பெற்று அங்குள்ளவருக்கு அனுப்ப வேண்டும் என்ட உத் வேகத்தில் இருப்பார் இந்த சந்தர்ப்பதை விட்டால் அவருக்கு வேறு சந்தர்ப்பம் அமையாது.

ரதி தவறாகப் புரிந்துள்ளீர்கள் என நினைக்கிறேன். இச்சந்தர்ப்பத்தில் மாவீரர்களுடன் வாழ்ந்த சிறைகளில் இருக்கம் முன்னாள் போராளிகளுக்கு சிறப்பாக உதவியை வழங்குதல் அவர்களை மனரீதியாகக்கூட இன்னும் ஆறுதல்படுத்தும். மாவீரர் குடும்பத்தை எதற்காக கவுரவப்படுத்துகிறோமோ அதுபோலவே இதுவும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அகரன் சமயத்துக்கு எற்ற பாடலை இணைத்துள்ளீர்கள். நன்றிகள்.

கஸ்டப்படுபவர்களுக்கு உதவியும் ,அடுத்த சந்ததி யாரிடமும் கையேந்த ஒரு நிலைக்கு கொண்டுவரவேண்டியதுதான் புலம் பெயர்ந்தவர்கள் கடமை .

நானும் இம்முறை முடிந்ததை செய்கின்றேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

sree1.jpg

sree2.jpg

சிறீகரன் முன்னாள் போராளி வீட்டிலிருந்து நாட்டுக்காக உயிர்களைக் கொடுத்தவன். இன்று சிறையில் தான் அவலப்படுவதிலும் பார்க்க தனது குழந்தைகளும் மனைவியும் அவலப்படுகிற வறுமை போக்க மாவீரர் வாரத்தை எட்டிய 18.11.2011 எழுதிய கடிதம் இது.

பிளேட்டை திருப்பிப் போட்டு பிழைப்பு நடத்துவதிலும் வல்லவர். உங்கள் இழிபிழைப்பு எதுவென மேலே பார்த்தால் புரியும்!

நான் கோப்பையைத் திருப்பிப் போடவில்லை கோப்பையில் ஏதாவது சில்றறை யாவது அவர்களிற்காக விழவேண்டும் என திரும்ப திரும்ப நீட்டிக்கொண்டிருக்றேன்.

Edited by shanthy

... ,அடுத்த சந்ததி யாரிடமும் கையேந்த

...

... ,

நானும் முடிந்ததை செய்கின்றேன்.

... :o

  • கருத்துக்கள உறவுகள்

... :o

அர்ஜீன் போன்றவர்களே உதவ முன்வரும்பொழுது நெ;ல்லையன் நீங்கள்மட்டும் ஏன்???? :mellow:

பார்வையாளர் தேவையில்லை பங்காளிகளே தேவை

Edited by sathiri

... :o

இதில் ஒளிவுமறைவு ஏதுமில்லை நெல்லையன் .

எமது மக்கள் இப்போ அரசியல் தீர்விற்கு உலகிடமும்,பொருளாதார தீர்விற்கு புலம் பெயர்ந்தவர்களிடமும் கையேந்தி நிற்பது கண்கூடு.

இவைகள் அனைத்தயும் மறைத்து அரசியல் செய்யத்தான் பலர் நினைக்கின்றார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.