Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராஜபக்சே (விகடனில் இருந்து)

Featured Replies

படித்ததில் பிடித்துப் போய் பகிர விரும்பும் ஒரு கவிதை இது

விகடன் இணையத்தில் உலாவரும் போது கண்ணில் பட்ட ஒரு கவிதை. நானே கேள்வி நானே பதில் பகுதியில் இடம்பெற்று இருந்தது.

''ராஜபக்ஷே...''

''சமீபத்தில் 'காக்கைச் சிறகினிலே’ என்கிற சிற்றிதழில் படித்த ஸீர்கோ பெகாஸின் கவிதைதான் நினைவுக்கு வருகிறது...

'வான்வெளியில் கொல்லப்பட்டன

அந்தப் பறவைகள்

கொலைகாரர்களுக்கு எதிராக

நட்சத்திரங்களும் மேகங்களும்

காற்றும் கதிரவனும்

சாட்சி கூறவில்லை என்றாலும்

அடிவானம் அதுபற்றிக்

கேட்க விரும்பவில்லை என்றாலும்

மலைகளும் ஆறுகளும்

அவற்றை மறந்துபோய்விட்டாலும்

ஏதேனும் ஒரு மரம்

அந்தக் கொடுஞ்செயலைப்

பார்த்துத்தானிருக்கும்

தன் வேர்களில்

அக்கொடியோனின் பெயரை

எழுதிவைக்கத்தான் செய்யும்!’ ''

- சாய்மீரா, மயிலாடுதுறை.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நிழலி பகிர்வுக்கு

ஆமாமா... இப்போ கவிதைதான்...

ஒரு கேடு.....!!

ஆனந்த விகடனுக்கு சொல்லுங்க......

உங்க் வாய் பேசும் வார்த்தைகள் .. எங்களுக்கு புரியாதுன்னு! :)

  • தொடங்கியவர்

ஆமாமா... இப்போ கவிதைதான்...

ஒரு கேடு.....!!

ஆனந்த விகடனுக்கு சொல்லுங்க......

உங்க் வாய் பேசும் வார்த்தைகள் .. எங்களுக்கு புரியாதுன்னு! :)

அறிவு கெட்டவர்களுக்கு வேண்டுமென்றால் புரியாமல் இருக்கலாம்

ஆனால் இந்தக் கவிதை ஒரு பெரும் வரலாற்றை சொல்லுது என்று எனக்கு படுது..........

அறிவு கெட்டவர்களுக்கு வேண்டுமென்றால் புரியாமல் இருக்கலாம்

ஆனால் இந்தக் கவிதை ஒரு பெரும் வரலாற்றை சொல்லுது என்று எனக்கு படுது..........

ஆமாம.. உலக அறிவு உள்ள நிழலி போன்றவர்களாய் பிறக்க,,, எனக்கு...

எங்கபோய் எக்ஸாம் பாஸ் பண்ணனு நு தெரியல! :(

  • தொடங்கியவர்

ஆமாம.. உலக அறிவு உள்ள நிழலி போன்றவர்களாய் பிறக்க,,, எனக்கு...

எங்கபோய் எக்ஸாம் பாஸ் பண்ணனு நு தெரியல! :(

பொய் அற்று, பாசாங்கில்லாமல் வாழ்ந்தாலே போதும்: நிழலி போல பிறக்க வேண்டியதில்லை

பொய் அற்று, பாசாங்கில்லாமல் வாழ்ந்தாலே போதும்: நிழலி போல பிறக்க வேண்டியதில்லை

அப்போ,,, இனிமே நிழலி தொல்லையே இல்ல...

யாழு மெம்பர்சு........!

உங்க பாட்டுக்கு அவருபோல பொறுப்பில்லாம, போகமா,

டீசென்டா நடந்துக்குங்க! :rolleyes:

பொய் இல்லியாம்...........

நிழல் எங்கிறதே பொய் தானே.........

இதுல பாசாங்கு இல்லியாம்,, பாயாசம் இல்லியாம்...

தாங்க முடியல... அலப்பறை! :)

  • கருத்துக்கள உறவுகள்

வானமும் கொதித்து,,

வண்ணத்தைச் சிவப்பாக்கி,

கோபம் காட்டியது!

காற்றும் அழுது,,

கந்தகத்தின் எரிச்சல் ஏந்திக்,

கண் மூடி நின்றது!

நீரோடைகள் கூட,,

நீலம் சென்னிறமாகக்,

கலங்கிக் குமைந்தன!

மரங்களும் அழுதன தங்கள்,

கரங்கள் முறிதல் கண்டு!,

பஞ்ச பூதங்களும்.

பாரதமாதாவின்,

நஞ்சு வேதங்களால்,

நேர்மை மறந்தன!

நன்றிகள், நிழலி, பகிர்வுக்கு!!!

Edited by புங்கையூரன்

  • தொடங்கியவர்

அப்போ,,, இனிமே நிழலி தொல்லையே இல்ல...

யாழு மெம்பர்சு........!

உங்க பாட்டுக்கு அவருபோல பொறுப்பில்லாம, போகமா,

டீசென்டா நடந்துக்குங்க! :rolleyes:

பொய் இல்லியாம்...........

நிழல் எங்கிறதே பொய் தானே.........

இதுல பாசாங்கு இல்லியாம்,, பாயாசம் இல்லியாம்...

தாங்க முடியல... அலப்பறை! :)

உங்களுக்கு பிரச்சனை...நான் இணைக்கும் பதிவுகள் அல்ல; நான் தான். முடிந்தால் இந்தப் பதிவை நான் பொறுப்பில்லாமல் தான் பதிந்து உள்ளேன் என்றதற்கான காரணத்தையும் விளக்கத்தையும் விளக்கமாக சொல்லுங்கள், நான் இணைத்தது யாழின் கள விதிகளுக்கு முரண் என்றால் மட்டுப் பணியில் இருந்து இருந்து ஒதுங்கிக் கொள்கின்றேன்.

முடியாவிட்டால் நீங்கள் ஒதுங்க வேண்டும் என்று விரும்பமாட்டேன்

உங்களுக்கு பிரச்சனை...நான் இணைக்கும் பதிவுகள் அல்ல; நான் தான். முடிந்தால் இந்தப் பதிவை நான் பொறுப்பில்லாமல் தான் பதிந்து உள்ளேன் என்றதற்கான காரணத்தையும் விளக்கத்தையும் விளக்கமாக சொல்லுங்கள், நான் இணைத்தது யாழின் கள விதிகளுக்கு முரண் என்றால் மட்டுப் பணியில் இருந்து இருந்து ஒதுங்கிக் கொள்கின்றேன்.

முடியாவிட்டால் நீங்கள் ஒதுங்க வேண்டும் என்று விரும்பமாட்டேன்

எதுவுமே இல்ல, நிழலி அண்ணான்னா ரொம்ப பிடிக்கும் எனக்கு...!!

ஏன்னா... மனசுக்கு ப்[ட்டத்தை எதுக்குமே பயப்பிடாம புட்டு புட்டு வைக்கிறதால, ...

& மனிதாபிமானத்தில, மத்தவங்களுக்கு உதவி செய்யுறதில தனிப்பட்ட வாழ்க்கைலகூட நிங்க உசந்து நிக்குறதால!

சொக்க தங்கம் உடையாரண்ணாவை தவிர எனக்குன்னு , நண்பர்வட்டம் எதுவுமே இங்க இல்ல,! அன்ட் யாருக்குமே என்னை பிடிக்குறதும் இல்ல!

அதுக்காக கருத்துகளம்னு வந்துட்டா, கலாய்க்காம இருக்க முடியுமா?

எனக்கு ரொம்ப பிடிச்ச............ விசுகு அண்ணா, கோமகன் ,நெடுக்கு, நெல்லையன் ,குமாரசுவாமியண்ணா,அலைமகள்.,,அர்ஜுன் அண்ணா,தூயவன், சாந்தி, சாத்திரி ,,எல்லாரையும்தானே கலாய்ச்சிருக்கேன்,,சண்டை போட்டிருக்கேன்!

அதுக்காக அவங்களை எனக்கு புடிக்காதுன்னு அர்த்தமா?அதுக்காக செண்டிமெண்டா பேசுறேன்னு இல்ல...

எலே கருத்து எழுதன்னு யாழுக்க வந்துட்டு வெறும் கைய வீசிக்கிடா வீட்ட போகலாம்லே?

ஒரு த்றில்லு வேணாம்? :rolleyes:

நானு திருந்தவோ & ஒதுங்கவோ மாட்டேன்... யாராச்சும் என்னைய கழுத்தைபுடிச்சு வெளில தள்ளுறவரை!

எப்பவுமே இப்பிடிதானிருப்பேன்,,, நீங்கவேணும்னா, டொங்க்னு , என்னோட மண்டைல குட்டி வெளீல தொரத்துங்களேன் நிழலி சகோதரம்! :)

ஆகா ஊரில் சண்டை கண்ணுக்குக் குளிர்ச்சி :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியே அறிவிலிக்கு உச்சந்தலையில "ணங்" என்று ஒரு குட்டு வைத்து காதை முறுக்கி எச்சரிக்கிறேன்.. :wub:

செல்லத்தம்பிகளை அக்காக்கள் இப்படித்தான் கண்டிப்போம் :lol: :lol: :lol: :lol: :D

அப்படியே அறிவிலிக்கு உச்சந்தலையில "ணங்" என்று ஒரு குட்டு வைத்து காதை முறுக்கி எச்சரிக்கிறேன்.. :wub:

செல்லத்தம்பிகளை அக்காக்கள் இப்படித்தான் கண்டிப்போம் :lol: :lol: :lol: :lol: :D

அப்பிடியே நன்றி சொல்றேன்...!

& என்னோட வல்வை அக்கா பையனுக்கு......ஒண்ணு சொல்லிக்குறேன்...

எலே சுட்டி பையா...

கிட்டார் வாசிச்சாவது,, உங்க அம்ம ரவுடி தனதை அடக்குடா! <_<

  • தொடங்கியவர்

இரண்டு நாளைக்கு வைச்சு அடிப்பம் என்று வாங்கின இரண்டு லீட்டர் வைனை ஒரே இரவில் அடிச்சுப் போட்டுட்டு விடிய எழும்பி யாழை பார்த்தால் மப்புல நான் எழுதினதை பார்க்க சிரிப்பு வருது

இதெல்லாம் கண்டுக்காத மச்சி அறிவிலி

ஆகா ஊரில் சண்டை கண்ணுக்குக் குளிர்ச்சி :icon_mrgreen:

என்னே பெருந்தன்மையான மனசு... :D

  • கருத்துக்கள உறவுகள்

ஒகே ...ஒகே எல்லாம் புரிகின்றது

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு நாளைக்கு வைச்சு அடிப்பம் என்று வாங்கின இரண்டு லீட்டர் வைனை ஒரே இரவில் அடிச்சுப் போட்டுட்டு விடிய எழும்பி யாழை பார்த்தால் மப்புல நான் எழுதினதை பார்க்க சிரிப்பு வருது

மப்பில கத்தியோடை திரியிற நேரமாப் பாத்து பயபுள்ளையள் சாய்ச்சிடப்போறாங்க தாத்தா கவனம். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

உள்குத்து,போட்டுத்தாக்குதல்,பழிவாங்குதல் இப்பிடி ஏதாவது ஒரு திரியைத்தொடங்கி அடிபடுறவையள் இனிமேல் கனடாவில இரவாய் இருக்கேக்க தொடங்குங்கோ....விடியிறதுக்குள்ள திரி மூண்டுபக்கம் தாண்டிவிடும்...விடியத்தான் நிழலிக்குத் திரியில என்ன எழுதியிருக்கெண்டு தெரியும்... :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.