Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம்பெயர் நாடுகளில் இருந்து ஐயப்பன் திருத்தலயாத்திரையாம்???!!!...

Featured Replies

வெறிபிடித்த மலையாள போலீஸ் :

தமிழக பக்தர்கள் கதறல்

தமிழகத்தில் உள்ள மலையாளிகளுக்கும், மலையாள நிறுவனங்களுக்கும் தமிழக போலீஸ் பாதுகாப்பு அளித்து வருகிறது. ஆனால், கேரளாவில் மலையாள போலீசார் வெறிபிடித்து தமிழர்களை தாக்குகிறார்கள்.

மு ல்லை பெரியாறு பிரச்சணை தொடங்கிய நாளில் இருந்து தமிழகத்திலிருந்து ஐயப்பன் கோயிலுக்கு மாலை அணிந்து செல்லும் பகதர்கள் மீது மலையாளிகள் தாக்குதல் நடத்த தொடங்கினார்கள்.

அதன் பிறகு தமிழின உணர்வாளர்கள் தமிழகத்தில் உள்ள மலையாளிகளின் கடைகள் மீது முற்றுகை , தாக்குதல் தொடுத்தனர்.

தோடர்ந்து தமிழர்கள் தாக்கப்படுவதால் கேரளாவுக்கு செல்லும் பால், காய்கறிகளை செல்லவிடாமல் தமிழர்கள் தடுத்து வந்தனர்.

கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் தமிழக தோட்ட தொழிலாளிகள் தாக்கப்படுவது தொடர்கதையாகிவிட்டது.

ஐயப்ப பக்தர்கள் தாக்கப்படுவதால் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் தமிழக எல்லையில் உள்ள பல்வேறு கோயில்களில் மாலை கழட்டி தரிசனம் செய்து விட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்ததால் கேரள அரசுக்கு வருமானம் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் தமிழக பக்தர்கள் பாதுகாப்பாக சென்று வர கேரள அரசு உதவி செய்யும் என்று சொன்னதால் தமிழக பக்தர்கள் மீண்டும் கோயிலுக்கு செல்ல தொடங்கினார்கள்.

சிவகங்கை மாவட்டம் பரமக்குடி ஹரி , கார்த்திக் தலைமையில் ரெட்டை பிள்ளையார் கோயில் தெரு, மருதுபாண்டியர் நகர், வேந்தொனி மற்றும் சில கிராமங்களைச் சேர்ந்த 35 பக்தர்கள் ஐயப்பன் கோயிலுக்கு சென்றனர்.

இன்று ஞாயிற்று கிழமை காலை பம்பையில் உள்ள ஒரு உணவு விடுதியில் உணவருந்திவிட்டு வெளியே வரும் போது 5 பேர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். மற்றவர்கள் இதை கேட்டதால் அவர்களையும் அடித்துள்ளனர்.

அப்போது அங்கு வந்த மலையாள காவல் துறையும் தமிழக பக்தர்கள் மீது தாக்கி அவர்கள் சாப்பிட்டு பணம் கொடுக்காமல் தகராறு செய்துள்ளனர். அதனால் அவர்களில் 20 பேரை கைது செய்துள்ளோம் என்று கூறியுள்ளனர்.

அவர்களுடன் சென்ற மற்ற பக்தர்களின் வைத்திருந்த செல்போன்களையும் பறித்துக் கொண்டனர் மலையாள போலிஸ். இந்த தகவல் உறவினர்களுக்கு தெரிந்ததால் கதறிக் கொண்டிருக்கின்றனர்.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=67322

அங்கு மலையாளிகள் போட்டு தாக்கி தள்ளுகிறார்கள், இங்கோ??? ஐயப்பன் திருத்தல யாத்திரைக்கு IBC tamil அழைப்பு விடுத்துக் கொண்டிருக்கிறது!!! ... கேட்பாரற்று ஐயப்பன் பார்த்துக் கொண்டிருக்க மோட்சம் அடைய உடன் அழையுங்கள்! :icon_mrgreen:

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறவுகள்

தாங்களாக மோட்சம் தேடும் பக்தர்களை ஏன் தடுக்கவேண்டும் ^_^

தமிழ்நாடு கேரளா எல்லையில் மோட்சம் கிட்டுதோ ?

நமக்கென்ன ரிஸ்க்கை ரஸ்க்கு போல் எடுக்கின்றார்களோ என்னமோ :blink:

ஏதாவது பேசினால் கடவுள் குத்தமாகிவிடும் :(

  • தொடங்கியவர்

எனது நண்பர் ஒருவர் .. அர்ஜுனின் முன்னால் தோழர் .. அடிக்கடி ஐயப்பன் விசிட் அடிப்பார்! .. கேட்டேன் யார் ஐயப்பன் என்று? எமக்கு பிள்ளையார், முருகன், சிவன், ... இப்படி சிலபேர்களை நன்கு தெரியும், ஐயப்பனையும் கேள்விப்பட்டிருப்போம், கிஸ்ரி தெரியாதலால் ... அவர் சொனார், ... ஐயப்பன் ஆனவர் சிவனுக்கும் விஸ்ணுவிற்கும் பிறந்தவர் என்று!!! ... சிவனுக்கும் விஸ்ணுவிற்கும் என்றால் ..???????????? :o

  • கருத்துக்கள உறவுகள்

இது பற்றி முன்னரும் சபேசனின் ஒரு பதிவில் எழுதி உள்ளேன்...ஒரு அர‌க்கன் பெயர் மறந்து விட்டது பெண்களை தவிர‌ எல்லோரையும் அழித்து முடித்து விட்டு விஸ்னுவையும் அழிக்க வருகிறார்[அந்த அர‌க்கனுக்கு அந்த சக்தியை கொடுத்தது சிவன் என்பது வேற கதை] அப்போது சிவனின் காலடியில் தன்னை காப்பாற்றி கொள்ள வரும் விஸ்னுவை பெண் வேட‌ம் போட‌ வைத்து தனது மனைவியாக்கி கொள்கிறார்...அவர்கள் இருவருக்கும் பிறந்தவர் தான் ஜயப்பன்[ஆணுக்கு எப்படி குழந்தை பிறந்தது என என்னைக் கேட்க வேண்டாம்]...இதன் மூலம் ஓரின சேர்க்கையை உலகிற்கு அறிமுகப்படுத்தியதே எங்கள் கட‌வுள் தான்

இம்முறை கேரளா - தமிழ்நாட்டு பிரச்சனை காரணமாக அங்கு செல்ல முடியாத பக்தர்கள் அந்த பணத்தை தாயக மக்களின் நல்வாழ்க்கைக்கு இல்லை நாடு கடந்த அரசு / உலகத்தமிழர் பேரவை / TAG ... போன்ற அமைப்புக்களுக்கு தந்துதவலாம்

  • கருத்துக்கள உறவுகள்

பல சந்தர்பங்களில், நாங்கள் எப்போதும், திருந்தவே முடியாத இனமோ, என்று கூட நான் ஆச்சரியப் படுவதுண்டு!

அண்மையில், எமது சமூகத்தின் மூத்த உறுப்பினர்கள், சிலர் தென்னிந்திய கோவில்கள் எல்லாம் தரிசித்து, அங்குள்ள தெய்வங்களின் பூரண அருளைப் பெற்றுக் கொண்ட பின்பு, நேரே திருக்கைலாய மலைக்கும் போய் வந்துள்ளார்கள். அவர்களுடன் நெருங்கிப் பழகுபவன் என்ற முறையில் ஒருவரிடம் கேட்டேன்!

அப்படி என்னத்தை விசேஷமாகத் திருக்கைலாச மலையில் கண்டீர்கள், என்று?

அவர் சொன்ன கதையின் அதிர்ச்சியில் இருந்து, நான் இன்னும் மீண்டு வரவில்லை!

கங்கோத்திரி (கங்கை ஊற்றெடுக்கும் இடம்) என்னும் இடத்தில் ஒரு வாவி இருந்ததாம். அங்கு உள்ள ஒரு விடுதியில் தாங்கள் எல்லோரும் தூங்கிக் கொண்டிருந்த போது, நள்ளிரவில் ஒரு இனிமையான இசை கேட்டு விழித்து எழுந்தார்களாம்! அந்த இசையை, அவர்கள் முன்னெப்போதும் கேட்டதில்லையாம். (தேவகானம்???)

பின்பு தேவ கன்னிகைகள், வானத்தில் இருந்து, ஒவ்வொன்றாக இறங்கி வந்து, அந்த வாவியில் குளித்தார்களாம்!

நான் அவர்கள், எவ்வாறு தேவகன்னியர்கள் என்று அடையாளம் கண்டு கொண்டீர்கள் எனக் கேட்டேன்!

அவர் சொன்னார், தான் ஊர்வசியை ' அம்புலிமாமா' புத்தகத்தில் ஏற்கெனவே பார்த்திருந்ததால், அடையாளம் கண்டு கொள்ள முடிந்தது, என்று!

அவரது மிகுதிக் கதையைக் கேட்க, நான் அங்கு நிற்கவில்லை!

ஆனால் ஒன்று மட்டும் தெரிந்தது! வேதங்கள் எவ்வாறு உருவாகியிருக்கும், என்று!!! (உண்மைச் சம்பவம்)

எனது நண்பர் ஒருவர் .. அர்ஜுனின் முன்னால் தோழர் .. அடிக்கடி ஐயப்பன் விசிட் அடிப்பார்! .. கேட்டேன் யார் ஐயப்பன் என்று? எமக்கு பிள்ளையார், முருகன், சிவன், ... இப்படி சிலபேர்களை நன்கு தெரியும், ஐயப்பனையும் கேள்விப்பட்டிருப்போம், கிஸ்ரி தெரியாதலால் ... அவர் சொனார், ... ஐயப்பன் ஆனவர் சிவனுக்கும் விஸ்ணுவிற்கும் பிறந்தவர் என்று!!! ... சிவனுக்கும் விஸ்ணுவிற்கும் என்றால் ..???????????? :o

அட இப்பதானே பார்த்தேன்.

இந்தியாவில் நாங்கள் கொஞ்சமாவது சந்தோசமாக இருந்தது என்றால் இவர் போல நண்பர்களால் தான்.இவர் ஐயப்பன் பத்தர் என்று பேஸ்புக்கில் படம் பார்த்துத்தான் தெரியும். படங்களை பார்த்தால் பக்தி முத்தி விட்டது போலிருக்கு.

அவர் சொன்னார், தான் ஊர்வசியை ' அம்புலிமாமா' புத்தகத்தில் ஏற்கெனவே பார்த்திருந்ததால், அடையாளம் கண்டு கொள்ள முடிந்தது, என்று!

அவரது மிகுதிக் கதையைக் கேட்க, நான் அங்கு நிற்கவில்லை!

நல்ல காலம் அந்தாள் ஊர்வசியை வேறேதும் புத்தகங்களில் பார்க்காமல், அம்புலிமாமா புத்தகத்தில் பார்த்ததையாவது நினைத்துச் சந்தோசப்படுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

பல சந்தர்பங்களில், நாங்கள் எப்போதும், திருந்தவே முடியாத இனமோ, என்று கூட நான் ஆச்சரியப் படுவதுண்டு!

அண்மையில், எமது சமூகத்தின் மூத்த உறுப்பினர்கள், சிலர் தென்னிந்திய கோவில்கள் எல்லாம் தரிசித்து, அங்குள்ள தெய்வங்களின் பூரண அருளைப் பெற்றுக் கொண்ட பின்பு, நேரே திருக்கைலாய மலைக்கும் போய் வந்துள்ளார்கள். அவர்களுடன் நெருங்கிப் பழகுபவன் என்ற முறையில் ஒருவரிடம் கேட்டேன்!

அப்படி என்னத்தை விசேஷமாகத் திருக்கைலாச மலையில் கண்டீர்கள், என்று?

அவர் சொன்ன கதையின் அதிர்ச்சியில் இருந்து, நான் இன்னும் மீண்டு வரவில்லை!

கங்கோத்திரி (கங்கை ஊற்றெடுக்கும் இடம்) என்னும் இடத்தில் ஒரு வாவி இருந்ததாம். அங்கு உள்ள ஒரு விடுதியில் தாங்கள் எல்லோரும் தூங்கிக் கொண்டிருந்த போது, நள்ளிரவில் ஒரு இனிமையான இசை கேட்டு விழித்து எழுந்தார்களாம்! அந்த இசையை, அவர்கள் முன்னெப்போதும் கேட்டதில்லையாம். (தேவகானம்???)

பின்பு தேவ கன்னிகைகள், வானத்தில் இருந்து, ஒவ்வொன்றாக இறங்கி வந்து, அந்த வாவியில் குளித்தார்களாம்!

நான் அவர்கள், எவ்வாறு தேவகன்னியர்கள் என்று அடையாளம் கண்டு கொண்டீர்கள் எனக் கேட்டேன்!

அவர் சொன்னார், தான் ஊர்வசியை ' அம்புலிமாமா' புத்தகத்தில் ஏற்கெனவே பார்த்திருந்ததால், அடையாளம் கண்டு கொள்ள முடிந்தது, என்று!

அவரது மிகுதிக் கதையைக் கேட்க, நான் அங்கு நிற்கவில்லை!

ஆனால் ஒன்று மட்டும் தெரிந்தது! வேதங்கள் எவ்வாறு உருவாகியிருக்கும், என்று!!! (உண்மைச் சம்பவம்)

:o:lol: :lol: ஒரு பச்சை உங்களுக்கு அண்ணா..!

Edited by சுபேஸ்

தேசவிடுதலை தான் கிடைக்கவில்லையாம் இப்ப எல்லாரும் ஆன்மீக விடுதலை என்று லூட்ஸ் மாதா, தென்னிந்திய ஆன்மீக பயணம் என கலக்குகினம்.

சரி அதாவது முற்றா செய்கினமோ பார்ப்பம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.