Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழீழ விடுதலைப் புலிகளின் உயர் மட்டத் தலைவர்கள் பலர் இன்றுவரை இரகசிய தடுப்பு முகாமில்

Featured Replies

குளோபல் தமிழ்ச் செய்திகளின் புலனாய்வுச் செய்தியாளர்

தமிழீழ விடுதலைப் புலிகளின் உயர் மட்டத் தலைவர்கள் பலர் இன்றுவரை இரகசிய தடுப்பு முகாமில் வைக்கப்பட்டு உள்ளதாக குளோபல் தமிழ்ச் செய்திகளின் புலனாய்வுச் செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

2009 மே 17, 18, 19 ஆம் திகதிகளில் கைது செய்யப்பட்ட மற்றும் சரணடைந்த புலிகளின் மூத்த தளபதிகள் பொறுப்பாளர்கள் பலர் இரகசியமாக வைக்கப்பட்டு உள்ளதாகவும் இதில் யோகி, எழிலன், புதுவை இரத்தினதுரை முதலானவர்கள் உள்ளடங்குவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அண்மையில் விடுதலைப் புலிகளின் தளபதிகளில் ஒருவரான நகுலன் கொல்லப்பட்டதாக கூறப்படும் பொலநறுவை மின்னேரிய முகாமிலேயே இவர்களும் இரகசியமாக தடுத்து வைக்கப்பட்டு உள்ளதாக குளோபல் தமிழ்ச் செய்திகளின் புலனாய்வுச் செய்தியாளருக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.

பொலநறுவை மாவட்டம் மின்னேரியாப் பகுதியில் பாரிய பரப்பளவில் அமைந்துள்ள பிரதான முகாம் பகுதியில் இரு வேறு தனிப்பட்ட முகாம்களில் இவர்கள் வைக்கப்பட்டு உள்ளதாகவும் தொடர்ச்சியான சித்திரவதைகள் விசாரணைகள் தொடர்வதாகவும் கூறப்படுகிறது.

விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு, அவர்களின் அசையும் அசையாச் சொத்துகள், அவற்றை பராமரிப்பவர்கள், அல்லது கையகப்படுத்தி வைத்திருப்பவர்கள், தொடர்ந்தும் செயற்பாட்டில் உள்ளவர்கள் உள்ளிட்ட விடயங்களை முழுமையாகப் பெற்றுக் கொள்வதற்கும், அவ்வப்போது புலம் பெயர் தமிழ்ர்களுடன் உறவுகளை ஏற்படுத்துவதற்கும் இவர்களை பயன்படுத்துவதாக குளோபல் தமிழ்ச் செய்திகளின் புலனாய்வுச் செய்தியாளருக்கு தகவல்களை வழங்கியவர் கூறுகின்றார்.

இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டவர்கள் தொடர்பான விடயங்கள் யாவும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸவின் நேரடிக் கட்டுப் பாட்டுள் அவருக்கு மிக நெருங்கிய புலனாய்வுப் பிரிவின் உயர்மட்ட அதிகாரிகள் சிலரின் கண்காணிப்பில் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரியவருகிறது.

எனினும் இவை குறித்த ஆதாரபூர்வமான விடயங்களை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புக்கள் மிகக் குறைவானதாகவே இருப்பதாக கூறும் புலனாய்வுச் செய்தியாளர் விரைவில் அவற்றிற்கான முயற்சிகள் தொடர்வதாக தெரிவிக்கின்றார்.

http://www.globaltam...IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

மேற்சொல்லப் பட்டவர்கள்,இன்னும் உயிருடன் இருப்பார்கள் என்னும் செய்தி உண்மையானால், இதை விடவும் சிறந்த புத்தாண்டுச் செய்தி இருக்கமுடியாது, நிழலி!!!

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் உயிருடனிருப்பது மகிழ்ச்சியான செய்தி.

குளோபல் தமிழ்ச் செய்திகளின் புலனாய்வுச் செய்தியாளர்

தமிழீழ விடுதலைப் புலிகளின் உயர் மட்டத் தலைவர்கள் பலர் இன்றுவரை இரகசிய தடுப்பு முகாமில் வைக்கப்பட்டு உள்ளதாக குளோபல் தமிழ்ச் செய்திகளின் புலனாய்வுச் செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

2009 மே 17, 18, 19 ஆம் திகதிகளில் கைது செய்யப்பட்ட மற்றும் சரணடைந்த புலிகளின் மூத்த தளபதிகள் பொறுப்பாளர்கள் பலர் இரகசியமாக வைக்கப்பட்டு உள்ளதாகவும் இதில் யோகி, எழிலன், புதுவை இரத்தினதுரை முதலானவர்கள் உள்ளடங்குவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அண்மையில் விடுதலைப் புலிகளின் தளபதிகளில் ஒருவரான நகுலன் கொல்லப்பட்டதாக கூறப்படும் பொலநறுவை மின்னேரிய முகாமிலேயே இவர்களும் இரகசியமாக தடுத்து வைக்கப்பட்டு உள்ளதாக குளோபல் தமிழ்ச் செய்திகளின் புலனாய்வுச் செய்தியாளருக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.

பொலநறுவை மாவட்டம் மின்னேரியாப் பகுதியில் பாரிய பரப்பளவில் அமைந்துள்ள பிரதான முகாம் பகுதியில் இரு வேறு தனிப்பட்ட முகாம்களில் இவர்கள் வைக்கப்பட்டு உள்ளதாகவும் தொடர்ச்சியான சித்திரவதைகள் விசாரணைகள் தொடர்வதாகவும் கூறப்படுகிறது.

விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு, அவர்களின் அசையும் அசையாச் சொத்துகள், அவற்றை பராமரிப்பவர்கள், அல்லது கையகப்படுத்தி வைத்திருப்பவர்கள், தொடர்ந்தும் செயற்பாட்டில் உள்ளவர்கள் உள்ளிட்ட விடயங்களை முழுமையாகப் பெற்றுக் கொள்வதற்கும், அவ்வப்போது புலம் பெயர் தமிழ்ர்களுடன் உறவுகளை ஏற்படுத்துவதற்கும் இவர்களை பயன்படுத்துவதாக குளோபல் தமிழ்ச் செய்திகளின் புலனாய்வுச் செய்தியாளருக்கு தகவல்களை வழங்கியவர் கூறுகின்றார்.

இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டவர்கள் தொடர்பான விடயங்கள் யாவும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸவின் நேரடிக் கட்டுப் பாட்டுள் அவருக்கு மிக நெருங்கிய புலனாய்வுப் பிரிவின் உயர்மட்ட அதிகாரிகள் சிலரின் கண்காணிப்பில் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரியவருகிறது.

எனினும் இவை குறித்த ஆதாரபூர்வமான விடயங்களை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புக்கள் மிகக் குறைவானதாகவே இருப்பதாக கூறும் புலனாய்வுச் செய்தியாளர் விரைவில் அவற்றிற்கான முயற்சிகள் தொடர்வதாக தெரிவிக்கின்றார்.

http://www.globaltam...IN/article.aspx

ஆரம்பம் நல்லாதானிருக்கு.. ஆனா ஃப்னிஸிங்க் சரியில்லயே

குளோபல் புலனாய்வாளருங்க!

எல்லாத்தையுமே கண்டுபுடிச்சார் அவரு என்னுட்டு நீங்க சொல்ல,,, ஆசையோடையும், கண்ணீரோடையும் நாங்க வாசிச்சு கொண்டிருக்கும்போது...

”எனினும் இவை குறித்த ஆதாரபூர்வமான விடயங்களை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புக்கள் மிகக் குறைவானதாகவே இருப்பதாக கூறும் புலனாய்வுச் செய்தியாளர் விரைவில் அவற்றிற்கான முயற்சிகள் தொடர்வதாக தெரிவிக்கின்றார்.”

இப்டி முடிக்குறீங்க! ஏன் நீங்க இப்புடி??

இந்த தகவலை ...ஒரு மீடியா எங்கிற ரீதியில, சனல்4 க்காவது அனுப்பி, ஒரு யுத்தக்குற்றச்சாட்டை சிங்களவன்மேல மேலும் சுமத்த உதவி பண்ணி இருக்கலாமே! ஏன் பண்ணல? அப்பிடி பண்ணினா, கோத்தபாயா உங்கள தூக்கிடுவான்னு சொல்லுவீங்களா?

இப்போமட்டும் என்ன பண்ணுறீங்க? நேரடியா அவனோட கட்டுப்பாடில உள்ள இடத்துல நடக்குற விஷயம் பத்திதானே பயமே இல்லாம புலனாய்ஞ்சு .. பட்டைய கெளப்புறீங்க!

உங்கமேல சந்தேகம்னு அர்த்தம் இல்ல... !!

ஆதாரபூர்வமா நிரூபிக்க வாய்ப்புக்கள் குறைவானதை செய்தி ஆக்காதீங்க,,, வேணாம் ஏற்கனவே நொந்துபோயிருக்குறபலபேர் மனச,, உங்க ஊடக கிளுகிளுப்புக்கு ...பிரச்சாரத்துக்கு

பெட்ரூம் ஆக்கிடாதீங்கன்னுதான் சொல்ல வர்றேன்! :)

நிச்சயமாக இவர்கள் உயிருடன் இருக்கிறார்கள் என்ற விடயம் உண்மையானால், இது தான் இந்த புதுவருடத்தின் ஆரம்பத்தின் உற்சாக ஊற்று. தகவல்கள் மேலும் கிடைக்க வேண்டும்.....

இவர்கள் உயிருடன் இருக்க வேண்டும் என்பது தான் அனைவரது விருப்பம்.

அவர்கள் விடுதலையாகி வந்தால் அவர்கள் வைக்கும் கருத்தை வைத்து துரோகிகளாகவும்,இவங்களை இதிலும் பார்க்க கொன்றிருக்கலாம் என்று சொல்ல தான் பலர் வெளிநாட்டில் தயாராக இருக்கின்றார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

போராளிகள் உயிருடன் இருப்பதை அம்னெஸ்ரி,சர்வதேச மன்னிப்புசபை போன்றவற்றுக்கு குளோபல் தமிழ் அறிவித்து அவர்களை அங்கு(மின்னேரியா முகாம்)சென்று சந்திக்க செய்யலாம்.இவர்கள் (அம்னெஸ்ரி போன்றவர்கள்)மூலம் மகிந்த அரசுக்கு அழுத்தம் கொடுக்கலாம்.

அரசின் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ளவர்கள் அவர்கள் சொல் கேட்க வேண்டிய துர்பாக்கிய நிலையில் இருக்கிறார்கள்.ஒரு சிலரை போல அவர்கள் டாம்பீக வாழ்வும் வாழ்வில்லை.இவர்களை துரோகிகள் ஆக்க யாருக்கும் உரிமை இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் உயிருடன் இருக்க வேண்டும் என்பது தான் அனைவரது விருப்பம்.

அவர்கள் விடுதலையாகி வந்தால் அவர்கள் வைக்கும் கருத்தை வைத்து துரோகிகளாகவும்,இவங்களை இதிலும் பார்க்க கொன்றிருக்கலாம் என்று சொல்ல தான் பலர் வெளிநாட்டில் தயாராக இருக்கின்றார்கள்

நீங்கள் சொன்னதும் நடக்கலாம்.

இவர்கள் சிறைக்குப் போனதுக்கும், தமிழ் மாற்றுக்கருத்தாளர்களின் காட்டிக் கொடுப்பே அன்றி, சிங்களம் பெரிதாக சாதித்துவிடவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தவின் ஆட்சியில் இவர்கள் உயிருடன் இருப்பது ஊர்ஜிதப்படுத்தப்படுவது கேள்விக்குறியே. :mellow:

poor souls

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.