Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உன் நெஞ்சக்கூட்டறையில் நிலவரசி முற்றத்தில்....

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

5388006500_b8ab7f237d_z.jpg

உன் நெஞ்சக் கூட்டறையில்

நிலவரசி முற்றத்தில்

வந்திருந்து கதைபேசும் வரம் ஒன்று வேண்டும் :lol: :lol: :lol:

நீண்ட நாட்களின் பின்....,

ஒரு நிலவோடு...

இரட்டைப் பறவைகளோடு...

மூன்று வரிக் கவிதை!!!

:) :) :)

5388006500_b8ab7f237d_z.jpg

உன் நெஞ்சக் கூட்டறையில்

நிலவரசி முற்றத்தில்

வந்திருந்து கதைபேசும் வரம் ஒன்று வேண்டும் :lol: :lol: :lol:

மனிதவாழ்வின் முரண்பாடுகளை தெளிவாகவே படம் பிடித்துக்காட்டியிருக்கின்றீர்கள் . அதாவது , பசுமையற்ற ஒற்றைக் கிளையில் , கண்ணாம்மூஞ்சி காட்டும் வெண்ணிலவில் இரு சோடி காகங்கள் இடைவெளியுடன் . நீண்ட இடைவெளிக்குப் பின் பயனுள்ள பகுதியில் காண்பது மிகவும் சந்தோசமாகவும் எனக்குப் புதிய நம்பிக்கையையும் தருகின்றது :) 1

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்

கேட்டுப் பெறுவது, வரம்!

கேட்காமல் எடுப்பது உரிமை!

நிலவரசி முற்றத்தில்,

நீளக் கால்நீட்டி,

நெஞ்சை நிமிர்த்தி,

நீங்கள் கதை பேசும் நாள்,

நெருங்கி வர, வாழ்த்துக்கள்!

புனலாகத் தோன்றும் வரிகள், பெரும் நதியாக மாறட்டும்!>>>

  • கருத்துக்கள உறவுகள்

பாப்பா பாட்டு போய் இப்ப காக்காப் பாட்டா? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

5388006500_b8ab7f237d_z.jpg

உன் நெஞ்சக் கூட்டறையில்

நிலவரசி முற்றத்தில்

வந்திருந்து கதைபேசும் வரம் ஒன்று வேண்டும் :lol: :lol: :lol:

அக்கா ஏன் இரண்டு வரியுடன் நிறுத்திவிட்டீர்கள்...?தொடர்ந்திருந்தால் அருமையான கவிதை ஒன்றைப் படித்துச் சுவைத்திருபோம்...

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அக்க ஏன் இரண்டு வரியுடன் நிறுத்திவிட்டீர்கள்...?தொடர்ந்திருந்தால் அருமையான கவிதை ஒன்றைப் படித்துச் சுவைத்திருபோம்...

இடையிலை அத்தான்ரை ஞாபகம் வந்திட்டுதோ என்னவோ???? :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

இடையிலை அத்தான்ரை ஞாபகம் வந்திட்டுதோ என்னவோ???? :icon_mrgreen:

இல்லையாமே.. :rolleyes: அத்தான் சொன்னதை இங்கை போட்டிருக்கினமே?? :wub:

:icon_mrgreen: :icon_mrgreen: :icon_mrgreen:

சிறிய கவிதை, எளிய நடையில் , கூடவே அழகான படம் வர்ணனை கூறி நிற்கிறது.

கவிதைக்கு நன்றிகள் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீண்ட நாட்களின் பின்....,

ஒரு நிலவோடு...

இரட்டைப் பறவைகளோடு...

மூன்று வரிக் கவிதை!!!

:) :) :)

நீண்ட நாட்களின் பின்???

இல்லை கவிதை இந்தக்கவிதைவரிகூட நான்கு வருடங்களுக்கு முன்பு எழுதிய ஒரு கவிதையில் உள்ள சில வரிகள்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மனிதவாழ்வின் முரண்பாடுகளை தெளிவாகவே படம் பிடித்துக்காட்டியிருக்கின்றீர்கள் . அதாவது , பசுமையற்ற ஒற்றைக் கிளையில் , கண்ணாம்மூஞ்சி காட்டும் வெண்ணிலவில் இரு சோடி காகங்கள் இடைவெளியுடன் . நீண்ட இடைவெளிக்குப் பின் பயனுள்ள பகுதியில் காண்பது மிகவும் சந்தோசமாகவும் எனக்குப் புதிய நம்பிக்கையையும் தருகின்றது :) 1

கோமகன் உங்கள் கருத்திற்கும் நம்பிக்கைக்கும் நன்றிகள்......

இந்த சோடிக்காகங்களின் படத்தை பார்த்தவுடன் இங்கே இணைக்க வேண்டும் என்று தோன்றியது. இந்தக் காகங்களைப் பார்க்கும்போது ஏதோ ஒரு பாசம்... படத்தை தனிய இணைப்பதைக்காட்டிலும் இரண்டு வரிகள் சேர்த்துப் போட்டால் கொஞ்சம் கலகலப்பாக இருக்கும் என்பதால் எப்போதோ எழுதிய வரிகளை இதனுடன் இணைத்தேன்....இப்படி எழுதுகிறேன் என்றுவிட்டு என்னையும் காகம் என்று கூப்பிடக்கூடாது... சொல்லிட்டேன்

பரவாயில்லை இந்தப்படத்திற்கு இந்தவரிகளை ஏற்றுக் கொண்டுள்ளீர்கள் என்பது மகிழ்ச்சியே...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கேட்டுப் பெறுவது, வரம்!

கேட்காமல் எடுப்பது உரிமை!

நிலவரசி முற்றத்தில்,

நீளக் கால்நீட்டி,

நெஞ்சை நிமிர்த்தி,

நீங்கள் கதை பேசும் நாள்,

நெருங்கி வர, வாழ்த்துக்கள்!

புனலாகத் தோன்றும் வரிகள், பெரும் நதியாக மாறட்டும்!>>>

கேட்காமல் எடுக்கவேண்டும் என்கிறீர்கள்!!! :lol:

அடபோங்க புங்கையூரான் கணவனாக இருந்தாலும் விருப்பின்றி பேசுதலைக்கூட உரிமை மீறல் என்று நினைப்பவள். உரிமை என்பதற்காக அந்த நெஞ்சக்கூட்டறைக்குள் அனுமதியின்றி நுழைந்து அசிங்கப்படக்கூடாது... :icon_mrgreen:

புங்கைக்கு இப்போது தலைமுடியைப் பிய்க்கவேண்டும் என்று தோன்றியிருக்கும் :D

பாப்பா பாட்டு போய் இப்ப காக்காப் பாட்டா? :lol:

இதென்ன புதினமா முதலில் பாப்பா பாட்டுத்தான் பாடுவோம் பிறகுதான் காக்கா பாட்டுப்பாடுவோம்... அப்படித்தான் பாலர் பாடசாலையில படித்தனான். :icon_mrgreen:

இடையிலை அத்தான்ரை ஞாபகம் வந்திட்டுதோ என்னவோ???? :icon_mrgreen:

இடையிலை(வினையல்ல பெயர்)... என்றாலே அத்தானைத் தவிர வேறு யார் ஞாபகத்தில் வரமுடியும்? :wub::lol::D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இல்லையாமே.. :rolleyes: அத்தான் சொன்னதை இங்கை போட்டிருக்கினமே?? :wub:

:icon_mrgreen: :icon_mrgreen: :icon_mrgreen:

சாச்சா... அத்தான் சொன்னதை இங்கு போட முடியாது

உள்ளதிலேயே வெட்டுக்கிளி விகாரமாக பூதங்களோடு திரிகிறார்....இதுவரை எனக்கு சென்சார் போர்ட் பச்சைக் கொடிதான் காட்டியிருக்கு சிவப்புக்கொடி காட்டவைத்து என்ர தலையில் நான் மண்ணள்ளிக் கொட்டத் தயாரில்லை... :icon_mrgreen::D

சிறிய கவிதை, எளிய நடையில் , கூடவே அழகான படம் வர்ணனை கூறி நிற்கிறது.

கவிதைக்கு நன்றிகள் .

நன்றி கல்கி,

மேல மற்றவர்களுக்கு அளித்த பதில்களைப் பார்த்துப் பயந்திடாதீங்க....எல்லாரும் பாசக்காரபயலுக... :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

இடையிலை(வினையல்ல பெயர்)... என்றாலே அத்தானைத் தவிர வேறு யார் ஞாபகத்தில் வரமுடியும்? :wub::lol::D

நிழலி அண்ணா தமிளகத்திட்கு டிக்கெட் பார்கிறார்.............

இடையில் ( ) ஒரு ஞாபகம் வந்திருக்க வேண்டும் அவருக்கு

நீங்கள் இப்படி எழுதுறிங்கள்..........

இடையில ............. இருக்கிற எமக்கு எதுவுமே புரியவில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நிழலி அண்ணா தமிளகத்திட்கு டிக்கெட் பார்கிறார்.............

இடையில் ( ) ஒரு ஞாபகம் வந்திருக்க வேண்டும் அவருக்கு

நீங்கள் இப்படி எழுதுறிங்கள்..........

இடையில ............. இருக்கிற எமக்கு எதுவுமே புரியவில்லை.

என்ன மருது உங்களுக்கும் தமிழகம் தமிளகமாக :o மாறிவிட்டதா?

மருது இடைவெளிவிட்டு நின்றால் இப்படித்தான் ஒன்றுமே விளங்காது. :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

என்ன மருது உங்களுக்கும் தமிழகம் தமிளகமாக :o மாறிவிட்டதா?

மருது இடைவெளிவிட்டு நின்றால் இப்படித்தான் ஒன்றுமே விளங்காது. :lol::D

நான் ஏற்கனவே எழுதியிருக்கிறேன் எனது கீ போர்டில் ஒரு தவறு உள்ளது அதில் ள ழா வாக வருகிறது. வெட்டி ஓட்டவேண்டிய நிலையில் நேர மிச்சத்திட்காக அப்படியே விட்டு விடுவேன்.

நீங்கள் நிழலி அண்ணா எல்லாம் இன்னும் எத்தனை நாளைக்குதான் இடையில நின்று எங்களுக்கு வெறுப்பேத்த போறிங்கள் என்று பார்க்கத்தானே போகிறோம்?

எங்களுக்கான காலமும் ஒருநாள் கனியும்போது

யாழ் களத்திற்கே இடைக்கு ........... இடைவெளியாகத்தான் வந்து போவோமாக்கும்.

நீண்ட நாட்களின் பின்???

இல்லை கவிதை இந்தக்கவிதைவரிகூட நான்கு வருடங்களுக்கு முன்பு எழுதிய ஒரு கவிதையில் உள்ள சில வரிகள்...

அக்கா!

யாழில்.... சகாறா என்றால் கவிதையும் ஞாபகத்துக்கு வரும். ஆனால் கவிதைப் பகுதியில் தாங்கள் பல நாட்களாக அதிக ஈடுபாடு காட்டவில்லையே.... அதாவது, தங்களது சுய ஆக்கங்களினை இடவில்லையே! என்ற ஆதங்கம் என்னைப் போலவே பல உறவுகளுக்குள்ளும் இருந்திருக்கும் என நினைக்கின்றேன்.

ஆனால், தங்களின் இந்த சிலவரிக் கவிதையினைப் பார்த்ததும் மிகவும் சந்தோசப்பட்டேன்! :)

தயவுசெய்து தொடர்ந்து எழுதுங்கள்...அக்கா!

உங்களை அடையாளப்படுத்துவது என்பது எது.... என்பதனை தெளிவாக புரிந்துகொள்ளும் ஆற்றல் உடையவர் தாங்கள்.

தொடர்ந்து உங்கள் படைப்புக்களை ஆவலோடு எதிர்பார்க்கின்றோம்! :)

நன்றி அக்கா!

Edited by கவிதை

  • கருத்துக்கள உறவுகள்

கவிதைக்கும்,போட்ட படத்திற்கும் இன்னொரு அர்த்தம் இருக்கும் போல இருக்குது...கவிதை குறைந்தது ஜந்து வரியில் இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்...கவிதை சொன்ன மாதிரி தொடர்ந்து கவிதை எழுதுங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.