Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரே இடத்தில் இருந்தபடி வேலை பார்க்கிறீர்களா?

Featured Replies

ஒரே இடத்தில் இருந்தபடி வேலை பார்க்கிறீர்களா?

அதிக நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பது உடல் நலனிற்கு ஆபத்தை விளைவிக்கும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. ஒரு நாளில் பெரும்பாலான நேரம் உட்கார்ந்தே இருப்பவர்களில் 54 சதவீதம் பேருக்கு மாரடைப்பு தாக்க ஏராளமான வாய்ப்புகள் உள்ளதாக எச்சரிக்கின்றது அந்த ஆய்வு முடிவு.

ஒரே இடத்தில் உட்கார்ந்தே இருப்பவர்களுக்கு உடல் பருமன், டைப் 2 நீரிழிவு போன்ற நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் புதிதாக நடைபெற்ற ஆய்வில் அதிக நேரம் அமர்ந்த நிலையில் வேலை பார்ப்பது உயிருக்கே ஆபத்தாகும் என்று தெரியவந்துள்ளது. லூசியானாவிலுள்ள பென்னிங்டன் பயோ மெடிக்கல் ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் தொடர்ச்சியாக 13 ஆண்டுகள் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது.

ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்தே இருப்பவர்களைப் பற்றி மருத்துவர் டேவிட் கேவன் தலைமையிலான குழு ஆய்வு நடத்தியது. ஆண், பெண் என மொத்தம் 17 ஆயிரம் பேரிடம் அவர்கள் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் முடிவில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

main_11059.jpg

மாரடைப்பு ஏற்படும்

ஒரு நாளில் பெரும்பாலான நேரம் உட்கார்ந்தே இருப்பவர்களில் 54 சதவீதம் பேருக்கு மாரடைப்பு தாக்க ஏராளமான வாய்ப்புகளுண்டு என்கிறது ஆய்வு. இது சிகரெட் புகைப்பதைப் போல உயிருக்கு மிகவும் அபாயகரமானது.

சிகரெட் புகைப்பதால் இருதயத்திலும்இ மூச்சுக் குழாயிலும் கடுமையாக பாதிப்பை ஏற்படுத்தும். இது உயிருக்கு மிக ஆபத்தானது. அதேபோல உட்கார்ந்தே இருப்பதாலும், அதே அளவுக்கு உடலில் ஆபத்து ஏற்படுமாம்.

உயிருக்கு ஆபத்து

ஒரு நாளைக்கு ஆறு மணி நேரத்திற்கும் மேல் ஒரே இடத்தில் உட்கார்ந்தே இருப்பவர்களில் 54 சதவீதம் பேரின் உயிருக்கு ஆபத்து மிக அதிகம். அவ்வாறு உட்கார்ந்தே இருக்கும் போது உடலின் செயல்பாடுகள் ஸ்தம்பித்து ஸ்டோரேஜ் தன்மையை அடைந்து விடுகிறதாம். புளி மூட்டையை தூக்கி வைத்தது போல உடல் செயலிழந்து தேக்க நிலையில் இருக்குமாம். அது செயல்படும் திறனை இழந்துவிடுகிறது. இதனால் உடலின் முக்கியமான உறுப்புகள் பாதிக்கப்பட்டுவிடும். மொத்தத்தில் உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையை ஏற்படுத்திவிடும் என்கிறது ஆய்வு.

அடிக்கடி நடங்க

நீண்ட நேரம் உட்கார்ந்தே வேலை பார்க்க வேண்டாம். அதையும் மீறி உட்கார வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் இடையிடையே சில நிமிடங்கள் எழுந்து நின்று கொள்ளுங்கள். சிறிது தூரம் நடக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் உடலில் ரத்த ஓட்டம் சீரடையும். உடலில் ரத்த ஓட்டம் ஸ்டோரேஜ் நிலையை அடையாது, உயிருக்கும் ஆபத்தில்லை என்று டிப்ஸ் தருகிறார் டாக்டர் டேவிட் கேவன்.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குப்பிடிக்காதது இரண்டு

வேலை செய்பவர்கள் ஒரே இடத்தில் இருந்துவேலை செய்வது

அடுத்தது அவர்களது கைத்தொலைபேசிக்கு அழைப்பு வருவது.

கடுப்பாகிவிடுவேன். :lol::D :D

எனது வேலை கணணி மென்பொருள் தயாரிப்பு தொடர்பானது என்பதால் அநேக நேரங்களில் ஒரே இடத்தில் தொடர்ந்து அமர்ந்து இருந்தே செய்ய வேண்டி இருக்கு. இதனை குறைக்க பின்வரும் சில விடயங்களை செய்து வருகின்றேன்

1. நிறைய தண்ணீர் குடிப்பது. இதனால் அடிக்கடி 'சிச்சா' பெய்ய எழுந்து போக வேண்டி இருக்கும்

2. அடுத்த அறையில் இருக்கும் பெண்களுடன் அரட்டை அடிக்க அடிக்கடி போவது

3. அடிக்கடி எழும்பி நின்று முறிவெடுப்பது (stretching)

4. மதிய சாப்பாட்டின் பின் பிராக்கு பார்க்க 20 நிமிடம் நடந்து செல்வது

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குப்பிடிக்காதது இரண்டு

வேலை செய்பவர்கள் ஒரே இடத்தில் இருந்துவேலை செய்வது

அடுத்தது அவர்களது கைத்தொலைபேசிக்கு அழைப்பு வருவது.

கடுப்பாகிவிடுவேன். :lol::D :D

வேலை இடத்தில்... கைத்தொலைபேசி பாவிக்க, அனுமதிக்கவே... வேண்டாம் விசுகு.

  • கருத்துக்கள உறவுகள்

-----

1. நிறைய தண்ணீர் குடிப்பது. இதனால் அடிக்கடி 'சிச்சா' பெய்ய எழுந்து போக வேண்டி இருக்கும்

-----

மூத்திரம் பெய்யிறதுக்கு, கௌரவமான பெயர்.. சிச்சாவா?

நம்மூரல ஆண்கள் மூத்தா எண்டும், பெண்களுக்கு சிச்சா எண்டும் சொல்வம்.

நீங்க, எந்த வகை?

  • கருத்துக்கள உறவுகள்

சிறி

இத்தனை நாள் பழகியபின் இப்படிஒரு சந்தேகம் வரலாமா??? :(

நான் நிழலியைத்தான் யோசிக்கின்றேன் எப்படி நிரூபிக்கப்போறார்??? :lol::icon_idea: :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

சிறி

இத்தனை நாள் பழகியபின் இப்படிஒரு சந்தேகம் வரலாமா??? :(

நான் நிழலியைத்தான் யோசிக்கின்றேன் எப்படி நிரூபிக்கப்போறார்??? :lol::icon_idea: :icon_idea:

நிழலி, அலியாக இருக்கலாமோ.... விசுகு.

எதுக்கும்.... நீங்கள், நேரே கண்டனீர்கள். கனடாப் பயணத்தில் எழுதுவீர்கள் எதிரிபார்த்து, ஏமாந்து போனோம்.

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி, அலியாக இருக்கலாமோ.... விசுகு.

எதுக்கும்.... நீங்கள், நேரே கண்டனீர்கள். கனடாப் பயணத்தில் எழுதுவீர்கள் எதிரிபார்த்து, ஏமாந்து போனோம்.

யோவ்

நேரே சந்தித்தால் இதையெல்லாமா காட்டும்படி கேட்கமுடியும்???

எனக்கே இப்ப சந்தேகமாக்கிடக்கு...??? :o

நட உடை பாவனைகளை யோசிச்சுப்போட்டு வந்து எழுதுறன்...

கொஞ்சம் அவகாசம் தேவை. :lol::icon_idea: :icon_idea: :icon_idea:

  • தொடங்கியவர்

பொதுவாக பலமாடி கட்டிடங்களில் வேலைசெய்பவர்கள் குறைந்தது ஒவ்வொரு இரண்டு மணித்தியாலங்களுக்கும் அந்த படிகளில் ஏறி இறங்குவது நன்று :)

அடிக்கடி பக்கத்து சீட்டுப் பெட்டையுடன் கடலை போட்டாலே இரத்த ஓட்டமெல்லாம் சீராகி உற்சாகம் பிறக்கும். வேளை கிடைக்கும் பொழுது இருவரும் சேர்ந்து ஓடலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனது வேலை கணணி மென்பொருள் தயாரிப்பு தொடர்பானது என்பதால் அநேக நேரங்களில் ஒரே இடத்தில் தொடர்ந்து அமர்ந்து இருந்தே செய்ய வேண்டி இருக்கு. இதனை குறைக்க பின்வரும் சில விடயங்களை செய்து வருகின்றேன்

1. நிறைய தண்ணீர் குடிப்பது. இதனால் அடிக்கடி 'சிச்சா' பெய்ய எழுந்து போக வேண்டி இருக்கும்

2. அடுத்த அறையில் இருக்கும் பெண்களுடன் அரட்டை அடிக்க அடிக்கடி போவது

3. அடிக்கடி எழும்பி நின்று முறிவெடுப்பது (stretching)

4. மதிய சாப்பாட்டின் பின் பிராக்கு பார்க்க 20 நிமிடம் நடந்து செல்வது

பிறகென்ன உந்த நாலுவிசயத்தையும் செய்யவே வேலைநேரம் முடிஞ்சுபோகும்........போட்ட உடுப்பு மடிப்புகுலையாமல் அப்பிடியே வீட்டை போவியள்....அங்கை மனுசியும் பிள்ளையளும் "அப்பா" வேலையாலை வந்துட்டார் எண்டு துள்ளிகுதிக்குங்கள்....இவரும் சிவாஜிகணேசன் ஸ்ரையில்லை சூட்கேசை அப்பிடியே சோபாவிலை செல்லமாய் தூக்கியெறிஞ்சு வேலை அலுப்பை பந்தாவாய் காட்ட.........வந்துட்டாங்கள் எங்களுக்கு சேக்கஸ் காட்ட.... :huh:

  • கருத்துக்கள உறவுகள்

பிறகென்ன உந்த நாலுவிசயத்தையும் செய்யவே வேலைநேரம் முடிஞ்சுபோகும்........போட்ட உடுப்பு மடிப்புகுலையாமல் அப்பிடியே வீட்டை போவியள்....அங்கை மனுசியும் பிள்ளையளும் "அப்பா" வேலையாலை வந்துட்டார் எண்டு துள்ளிகுதிக்குங்கள்....இவரும் சிவாஜிகணேசன் ஸ்ரையில்லை சூட்கேசை அப்பிடியே சோபாவிலை செல்லமாய் தூக்கியெறிஞ்சு வேலை அலுப்பை பந்தாவாய் காட்ட.........வந்துட்டாங்கள் எங்களுக்கு சேக்கஸ் காட்ட.... :huh:

இதைத்தானே எல்லோரும் செய்கின்றோம்.

அந்தப்பிள்ளை வெளியில் சொல்லி அடிவாங்குது

நாங்கள் சுழியன்கள்

செய்வம்

ஆனால் மூச்சு...??

:lol: :lol: :icon_idea: :icon_idea:

அடப்பாவிகளா...இன்றுதான் இந்தத் திரியை மீண்டும் பார்த்தேன்.. .ஒரு சிச்சா என்ற சொல்லால எனக்கு வந்த் வினை..!!

மூத்திரம் பெய்யிறதுக்கு, கௌரவமான பெயர்.. சிச்சாவா?

நம்மூரல ஆண்கள் மூத்தா எண்டும், பெண்களுக்கு சிச்சா எண்டும் சொல்வம்.

நீங்க, எந்த வகை?

..இதுக்கெல்லாம் காரணம் என் தாத்தாவாகத்தான் இருக்க வேண்டும்.. தாத்தா அப்பாக்கும், அப்பா எனக்கும், நான் என் மகனுக்கும் என்று இந்த சொல் பரம்பரை பரம்பரையா ஊடு கடத்தப்பட்டு வருகுது... எங்கள் பகுதியில் ஆண் பெண் வேறுபாடு இன்றி இதைத் தான் சின்னப் பிள்ளைகளுக்கு சொல்லித் தருவினம்...நானும் நினைவு தெரிந்த நாளில் இருந்து இப்படிதான் அழைப்பது வழக்கம்

நிழலி, அலியாக இருக்கலாமோ.... விசுகு.

எதுக்கும்.... நீங்கள், நேரே கண்டனீர்கள். கனடாப் பயணத்தில் எழுதுவீர்கள் எதிரிபார்த்து, ஏமாந்து போனோம்.

யோவ்

நேரே சந்தித்தால் இதையெல்லாமா காட்டும்படி கேட்கமுடியும்???

எனக்கே இப்ப சந்தேகமாக்கிடக்கு...??? :o

நட உடை பாவனைகளை யோசிச்சுப்போட்டு வந்து எழுதுறன்...

கொஞ்சம் அவகாசம் தேவை. :lol::icon_idea: :icon_idea: :icon_idea:

என்றாலும்.... உண்மையைச் சொல்லி இருக்கலாம் தானே? :D

பிறகென்ன உந்த நாலுவிசயத்தையும் செய்யவே வேலைநேரம் முடிஞ்சுபோகும்........போட்ட உடுப்பு மடிப்புகுலையாமல் அப்பிடியே வீட்டை போவியள்....அங்கை மனுசியும் பிள்ளையளும் "அப்பா" வேலையாலை வந்துட்டார் எண்டு துள்ளிகுதிக்குங்கள்....இவரும் சிவாஜிகணேசன் ஸ்ரையில்லை சூட்கேசை அப்பிடியே சோபாவிலை செல்லமாய் தூக்கியெறிஞ்சு வேலை அலுப்பை பந்தாவாய் காட்ட.........வந்துட்டாங்கள் எங்களுக்கு சேக்கஸ் காட்ட.... :huh:

என் வீட்டில் கள்ள கமராவை பூட்டி விடுப்பு பார்த்தவர் யார் என்று இப்ப கண்டு பிடிச்சிட்டன்... கு.சா...'அந்த' வீடியோ விடயத்தையாவது வெளியே சொல்ல வேண்டாம்..

மிச்சத்தை சொல்லாமல் விட்டுவிட்டீர்கள்... அப்படி களைத்து போய் வந்த மாதிரி படம் காட்ட, மனிசியும் கால்கள் கைகளை பிடித்து அமுக்க..அந்த நேரத்தில் அத்தி பூத்தாப் போல, பிள்ளைகளும் இல்லாமல் இருக்கும் நேரம் என்றால் மனிசி கால்கள், கைகள் மற்றும் எல்லா இடத்திலும் பிடித்து விட...பேந்தென்ன... திருவிழா தான் !!

Edited by நிழலி

  • கருத்துக்கள உறவுகள்

பிறகென்ன உந்த நாலுவிசயத்தையும் செய்யவே வேலைநேரம் முடிஞ்சுபோகும்........போட்ட உடுப்பு மடிப்புகுலையாமல் அப்பிடியே வீட்டை போவியள்....அங்கை மனுசியும் பிள்ளையளும் "அப்பா" வேலையாலை வந்துட்டார் எண்டு துள்ளிகுதிக்குங்கள்....இவரும் சிவாஜிகணேசன் ஸ்ரையில்லை சூட்கேசை அப்பிடியே சோபாவிலை செல்லமாய் தூக்கியெறிஞ்சு வேலை அலுப்பை பந்தாவாய் காட்ட.........வந்துட்டாங்கள் எங்களுக்கு சேக்கஸ் காட்ட.... :huh:

அணணை இப்ப ஏன் இந்த ரென்சன்.நீங்கள் மட்டும் என்னவாம் :lol:

அடிக்கடி பக்கத்து சீட்டுப் பெட்டையுடன் கடலை போட்டாலே இரத்த ஓட்டமெல்லாம் சீராகி உற்சாகம் பிறக்கும். வேளை கிடைக்கும் பொழுது இருவரும் சேர்ந்து ஓடலாம்.

நீங்கள் எந்த ஓடுறதை சொலுகிறீங்கள் :rolleyes::lol:

நிழலி, அலியாக இருக்கலாமோ.... விசுகு.

எதுக்கும்.... நீங்கள், நேரே கண்டனீர்கள். கனடாப் பயணத்தில் எழுதுவீர்கள் எதிரிபார்த்து, ஏமாந்து போனோம்.

நிழலியாவது அலியாவது :)

  • கருத்துக்கள உறவுகள்

யோவ்

நேரே சந்தித்தால் இதையெல்லாமா காட்டும்படி கேட்கமுடியும்???

எனக்கே இப்ப சந்தேகமாக்கிடக்கு...??? :o

நட உடை பாவனைகளை யோசிச்சுப்போட்டு வந்து எழுதுறன்...

கொஞ்சம் அவகாசம் தேவை. :lol::icon_idea: :icon_idea: :icon_idea:

எனக்கு மறுபிறவி மீது அவளவா நம்பிக்கை இல்லை :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஒரே இடத்தில் இருந்தபடி வேலை பார்க்கிறீர்களா?

அதிக நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பது உடல் நலனிற்கு ஆபத்தை விளைவிக்கும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. ஒரு நாளில் பெரும்பாலான நேரம் உட்கார்ந்தே இருப்பவர்களில் 54 சதவீதம் பேருக்கு மாரடைப்பு தாக்க ஏராளமான வாய்ப்புகள் உள்ளதாக எச்சரிக்கின்றது அந்த ஆய்வு முடிவு.

இது சிகரெட் புகைப்பதைப் போல உயிருக்கு மிகவும் அபாயகரமானது.

சிகரெட் புகைப்பதால் இருதயத்திலும்இ மூச்சுக் குழாயிலும் கடுமையாக பாதிப்பை ஏற்படுத்தும். இது உயிருக்கு மிக ஆபத்தானது. அதேபோல உட்கார்ந்தே இருப்பதாலும், அதே அளவுக்கு உடலில் ஆபத்து ஏற்படுமாம்.

ஒரே இடத்தில் அதிக நேரம் உட்காந்து இருப்பவர்கள்

புகை பிடிப்பவர்களாகவும் இருந்து விட்டால்

தப்பிவிடுவார்கள்

- + - = + :o

ஒரே இடத்தில் அதிக நேரம் உட்காந்து இருப்பவர்கள்

புகை பிடிப்பவர்களாகவும் இருந்து விட்டால்

தப்பிவிடுவார்கள்

- + - = + :o

வாத்தி, கணக்கு பிழை.. ஒரு மறையும் இன்னொரு மறையும் கூட்டப்பட்டால் வருவது மறை தான். ஒரு மறையும் இன்னொரு மறையும் பெருக்கப் பட்டால் தான் நேர் எண் கிடைக்கும்

- + - = -

- x - = +

:D :D

அடிக்கடி பக்கத்து சீட்டுப் பெட்டையுடன் கடலை போட்டாலே இரத்த ஓட்டமெல்லாம் சீராகி உற்சாகம் பிறக்கும். வேளை கிடைக்கும் பொழுது இருவரும் சேர்ந்து ஓடலாம்.

வேளை கிடைக்கும் பொழுது இருவரும் சேர்ந்து ஓடலாம்.?? :unsure::rolleyes:

திரும்பிவராமலொ :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தி, கணக்கு பிழை.. ஒரு மறையும் இன்னொரு மறையும் கூட்டப்பட்டால் வருவது மறை தான். ஒரு மறையும் இன்னொரு மறையும் பெருக்கப் பட்டால் தான் நேர் எண் கிடைக்கும்

- + - = -

- x - = +

:D :D

தவறுக்கு மன்னிக்கவும்

நான் சொல்ல வந்தது

- (-) = +

நன்றி நிழலி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.