Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வலன்ரைன் தாத்தாவின் சிரார்த்த தினம்.. பெப் 14..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

192450555_3c4e5a0f96.jpg

வாடிய முகத்தோடு

பூங்காவின் வாங்கினில்

அவள்...

அன்பின் அடையாளமாக

இல்லை..

ஆட்களுக்கு அடையாளம் காட்ட

தேடிப் பிடித்தவனின்

வலன்ரைன் பரிசுக்காக..

உள்ளத்தில் ஏக்கங்களோடு..!

நேரம் ஆகுது

காத்திருப்பாளே...??!

பதட்டத்தோடு

தெருவோர உண்டியலில்

மணிக்கு ஒரு பவுண் தாரைவார்த்து

பெற்ற அந்த

கார் தரிப்புச் சீட்டைக் கூட

சரியாக ஒட்டாமல்..

ஓட்டமும் நடையுமாய்

வந்தான்

அவளிடம் அவன்..!

வந்தவன் நெருங்கி

பொக்கேயை நீட்டினன்..!

ஆத்திரத்தில் ஆழ்ந்திருந்த

வனிதையின் கரங்களில் வன்முறை..!

பொக்கே வானில் பறந்து

ஈர்ப்பில் கவர்ந்து

பூமியில் வீழ்ந்தது..!

அவன் காதலும்

நொருங்கிச் சிதறியதாய்

நல்ல பாடம் படித்திட்டான்..

உள்ளூர அவள்...

தன் செயலில் சாதனை

படைத்திட்டதாய் கனவினில்..!

காளை கொஞ்சம் திகைத்தாலும்

கலங்கவில்லை..!

மெளனத்தைப் பரிசாக்கி..

பொக்கேயை கூட்டி அள்ளி

"அப்ப நான் வாறன்"..

காத்திருப்புக்கு

பதில் சொல்லி

புறப்பட்டவன்...

அவள் கண்முன்னே

அங்கிருந்த சமாதியில்

அதை சாத்தினன்..!

வலன்ரைன் தாத்தாவிற்கு

சிரார்த்த தினம் இன்று..

காதல் பரிசாக அல்ல

அந்த பொக்கே..

காணிக்கை அளிக்க

தந்ததே அது..!

புரிந்து கொள்..!

நான்.. வேடிக்கை காட்ட

வித்தைக்கு வளர்த்த குரங்கல்ல..

விதி சமைக்கப் பிறந்த

ஆண் மகன்..

விடை பெற்றான் அவன்..!

வாங்கினில்

அழுது புரண்டவளுக்கு

ஆறுதல் சொல்ல

சமாதியாய்

வலன்ரைன் தாத்தாவும்

அவன் பொக்கேயும்

மட்டுமே..!

Edited by nedukkalapoovan

ம்ம்ம்ம்ம்ம்ம்ம் நல்லாத்தான் இருக்கு நெடுக்ஸ்!

உண்மையான சில விடயங்களை அருமையாக வரிகளில் சொல்லியிருக்கின்றீர்கள்...அதுவும், தக்க சமயத்தில்.

தருணம் பார்த்துக் காத்திருந்தீரா... கன்னியரின் கனவுகளில் வில்லன் நீங்கள்தானாம்! :D

உண்மையிலேயே அருமை நெடுக்ஸ்! :)1

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்ம்ம்ம்ம்ம் நல்லாத்தான் இருக்கு நெடுக்ஸ்!

உண்மையான சில விடயங்களை அருமையாக வரிகளில் சொல்லியிருக்கின்றீர்கள்...அதுவும், தக்க சமயத்தில்.

தருணம் பார்த்துக் காத்திருந்தீரா... கன்னியரின் கனவுகளில் வில்லன் நீங்கள்தானாம்! :D

உண்மையிலேயே அருமை நெடுக்ஸ்! :)1

காத்திருந்து தாக்கிறது தான் கரந்தடி..! :):lol:

  • கருத்துக்கள உறவுகள்

அருமை நெடுக்கு, நன்றி பகிர்வுக்கு

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதோர் கவிதை, நெடுக்ஸ்!

உங்கள் கருத்துடன் உடன்படாதிருக்க, என்னால் முடியவில்லை!

அவளது காலில், அவன் விழுவது தானே முறை? :D

அது தானே உலக நியதி? :lol:

நான்.. வேடிக்கை காட்ட

வித்தைக்கு வளர்த்த குரங்கல்ல..

விதி சமைக்கப் பிறந்த

ஆண் மகன்..

விடை பெற்றான்..!

வரிகள், அருமை!!! :icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்லதோர் கவிதை, நெடுக்ஸ்!

உங்கள் கருத்துடன் உடன்படாதிருக்க, என்னால் முடியவில்லை!

அவளது காலில், அவன் விழுவது தானே முறை? :D

அது தானே உலக நியதி? :lol:

வரிகள், அருமை!!! :icon_idea:

குட்டக் குட்ட எத்தினை நாளைக்குத் தான்.. எவ்வளவு தான் குனியுறது. எனி ஒரு விதி செய்வோம் என்று பசங்க கிளம்பிட்டா.. பொண்ணுங்க.. தலைமுடியை பிச்சுக்க வேண்டியது தான்..! :lol::icon_idea:

நல்ல கவிதை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வேடிக்கை காட்ட

வித்தைக்கு வளர்த்த குரங்கல்ல..

விதி சமைக்கப் பிறந்த

ஆண் மகன்..

விடை பெற்றான்..!

மக்கிப்போன ஆணாதிக்க சமுதாயத்தின் விம்பங்கள் என்று சொல்லி நெடுக்ஸ் அண்ணாவை ஒரு பிடி பிடிக்கப்போறாளவை.. :rolleyes::lol::icon_idea:

நன்றி நெடுக்ஸ் அண்ணா கவிக்கு.. :)

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள் நெடுக்குத் தம்பி. :(

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்களைப் புகழ்ந்தும் பெண்களை இகழ்ந்தும்

எப்போதுமே கவிதை வடிக்கும் நெடுக்சைக்

கண்டிக்கின்றேன் :)

வரிகள் நன்றாக இருந்தாலும் கருத்தில் உடன்பாடு இல்லை.:lol:

  • கருத்துக்கள உறவுகள்

காதலியின் அலட்சியத்தைக்கூட இரசிக்க வைப்பதுதான் அண்ணாச்சி காதல்... பூவை எறிஞ்சியா புடிக்கலையா? பாய் என்று சொல்லிவிட்டு நகர்வது தெருவோர பிச்சைக்காரனுக்குப் போட்ட பைசாவைப்பார்த்து அவன் தூக்கி விசுக்கும்போது இவனுக்கு ரொம்பத்தான் திமிரு என்று கருவிவிட்டு செல்வதுபோன்றது அப்படி அமைந்து இருக்கிறது கவிதை....ஐயோ நெடுக்கு காதலுடன் எந்தவகையிலும் ஒட்டவே மாட்டேன் என்கிறீர்களே... :huh:

  • கருத்துக்கள உறவுகள்

192450555_3c4e5a0f96.jpg

வாடிய முகத்தோடு

பூங்காவின் வாங்கினில்

அவள்...

அன்பின் அடையாளமாக

இல்லை..

ஆட்களுக்கு அடையாளம் காட்ட

வாங்கினில்

அழுது புரண்டவளுக்கு

ஆறுதல் சொல்ல

சமாதியாய்

வலன்ரைன் தாத்தாவும்

அவன் பொக்கேயும்

மட்டுமே..!

இப்படியான பெண் எதற்காக அழவேண்டும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கவிதை

நன்றி..! :)

மக்கிப்போன ஆணாதிக்க சமுதாயத்தின் விம்பங்கள் என்று சொல்லி நெடுக்ஸ் அண்ணாவை ஒரு பிடி பிடிக்கப்போறாளவை.. :rolleyes::lol::icon_idea:

நன்றி நெடுக்ஸ் அண்ணா கவிக்கு.. :)

இந்த ஆண் மகன் மட்டுமல்ல.. எந்தப் பகுத்தறிவுள்ள உயிரினமும்.. இப்படியான பெண்களின் முன் அப்படித்தான் நடந்து கொள்ளும். இதனை ஆணாதிக்கம் என்று சொல்லிக் கத்திறவ கத்திட்டு.. ஒரு ஓரமா மூலையில சுருண்டு கிடக்க வேண்டியது தான். அவை கத்தி.. உலகம்.. கருத்தில் எடுக்கப் போறதில்ல...!

நன்றி ஜீவா கருத்துப் பகிர்விற்கு. :):icon_idea:

காதலியின் அலட்சியத்தைக்கூட இரசிக்க வைப்பதுதான் அண்ணாச்சி காதல்... பூவை எறிஞ்சியா புடிக்கலையா? பாய் என்று சொல்லிவிட்டு நகர்வது தெருவோர பிச்சைக்காரனுக்குப் போட்ட பைசாவைப்பார்த்து அவன் தூக்கி விசுக்கும்போது இவனுக்கு ரொம்பத்தான் திமிரு என்று கருவிவிட்டு செல்வதுபோன்றது அப்படி அமைந்து இருக்கிறது கவிதை....ஐயோ நெடுக்கு காதலுடன் எந்தவகையிலும் ஒட்டவே மாட்டேன் என்கிறீர்களே... :huh:

இதையே ஒரு ஆண் உங்களுக்குச் செய்தால்.. உடனே அதனை ஆணாதிக்கம் என்பீர்கள். அதையே ஒரு பெண் ஆணிற்குச் செய்தால்.. ஐயோ பிச்சைக்காரன் விட்டெறிந்த ஐந்து சதம் போல எண்ணி எட்டிக்கத் தெரியல்லையே என்றும் சொல்வீர்கள். மொத்தத்தில்... பெண்கள் என்ன செய்தாலும் அது நியாயம். ஆண்கள் என்ன செய்தாலும் அது அநியாயம்..! இதுதான் எந்த வகையிலும் நிஜத்தோடு ஒட்ட மாட்டேங்குது..!

கருத்துப் பகிர்விற்கு நன்றி அக்கா. :):icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆண்களைப் புகழ்ந்தும் பெண்களை இகழ்ந்தும்

எப்போதுமே கவிதை வடிக்கும் நெடுக்சைக்

கண்டிக்கின்றேன் :)

வரிகள் நன்றாக இருந்தாலும் கருத்தில் உடன்பாடு இல்லை. :lol:

சதா.. பெண்களை அன்பே.. பூவே.. தேனே.. தேன் அமுதே.. நிலவே.. பறவையே.. பாவையே.. பேபியே.. என்று அழைச்சுப் பழகின எங்களுக்கு அவங்கட கொடூரப் பக்கத்தை வெளிச் சொல்ல மனசு வாறதில்ல. அப்படி யாரும் தப்பித் தவறி அதை வெளிக்காட்டிட்டா கூட.. அதை இகழ்ந்து என்று சொல்லி மூடி மறைச்சிடுறம். அப்புறம்.. பாவம்.. ஆண் ஒருத்தன்.. பூவென்று கட்டிக் கொண்டது.. அல்லது அன்பே என்று காதலித்துக் கொண்டது புயலாக மாறி அவன் வாழ்வை சீரழிக்கும் போது.. ஆறுதலுக்கு கூட யாரும் இருக்கமாட்டார்கள். வலியும் வேதனையுமே அவனோடு மிஞ்சும். அதிலும் பெண்களின் கொடூர முகங்களையும் கவிதையில் கொண்டு வந்து அவர்களின் ராட்சத குணங்களையும் உலகிற்கு ஆண்களுக்கு காட்டும் போதுதான் ஆண்களும் விழிப்போடு.. இருப்பாங்க. பெண்களும் குட்டு வெளிச்சிட்டே என்று திருந்தி நடப்பாங்க.. அல்லது திருந்த முயற்சிப்பாங்க...! :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

காதல் விவகாரங்களுக்கு கருத்து எழுதுவதற்கு எனக்கு விருப்பின்றியே போய்ட்டு..என்னத் சொல்கிறது,எழுதிறது..போறன்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான பெண் எதற்காக அழவேண்டும்

அழுது புரண்டது அவனுக்காக அல்ல. இதுவரைக்கும் தன் வெளி வேசத்தை நம்பி இருந்த இந்த ஏமலாந்தி போல.. எனி.. ஒருத்தன்.. கிடைப்பானா என்ற ஏக்கத்திலும்.. ஊருக்கு காட்ட எனி இன்னொருத்தனைப் பிடிக்க.. எவ்வளவு காலமோ.. எவ்வளவு கஸ்டமோ.. எனி என்ன செய்வேன்... எதிர்காலம் எப்படி அமையுமோ.. என்ற சோகத்திலும்..... இவ்வளவு கால முயற்சி உச்ச பயனை அடைய முன்.. வீணாகிட்டே என்ற ஆதங்கத்திலுமே.. அன்றி.. அந்த ஆணின் மீதான அன்பில்.. அக்கறையில் அல்ல..!

எந்தப் பெண்ணுமே.. ஆணின் மீதான அக்கறையில் அன்பில் அழுவதும் இல்லை.. இரங்குவதும் இல்லை. மாறாக.. தான் அந்த ஆணிடம் ஏமாந்திட்டனே.. தான் எதிர்பார்த்ததை அவனிடம் அடைய முடியல்லையே.. தன் முயற்சி வீணாகிட்டே.. எதிர்காலம் எப்படி ஆகப் போகுதோ.. என்று தான் எல்லாப் பெண்களும் கவலை அடைகின்றனரே தவிர... ஆண்களுக்காக கவலைப்பட (சில தாய் மாரைத் தவிர.. வெகு சில மற்றவர்கள் மீது நிஜமான அன்பு செலுத்தும் பெண்களைத் தவிர..) ஒரு பெண்ணும் இந்த உலகில் கிடையாது..! :icon_idea::)

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காதல் விவகாரங்களுக்கு கருத்து எழுதுவதற்கு எனக்கு விருப்பின்றியே போய்ட்டு..என்னத்த .. சொல்கிறது,எழுதிறது..போறன்..

எதையாவது எழுதுங்க... தங்கச்சி. காதல் தானே. அதை யார் இந்த உலகில் நிஜமா மதிக்கிறா. எல்லாரும் வந்து உதைஞ்சிட்டு.. விளையாடிட்டு போற.. ஒரு கால்பந்து தான் அது.

பாவம்.. அந்தப் பந்தை சொந்தங் கொண்டாட வெளிக்கிட்டு உதை வாங்கிற ஆக்கள் தான்..! :lol::icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாங்கினில்

அழுது புரண்டவளுக்கு

ஆறுதல் சொல்ல

சமாதியாய்

வலன்ரைன் தாத்தாவும்

அவன் பொக்கேயும்

மட்டுமே..!

விசர்ப்பெட்டை <_<

எட்டாபழம்புளிகும் :icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எட்டாபழம்புளிகும் :icon_idea:

ஏதோ எட்டிற பழம் எல்லாம் தித்திக்கும் என்றாப் போல.. வந்திட்டாங்கையா.. பழமொழியும் கையுமா..! உந்தப் பழமொழிகளைக் கொண்டு போய் குப்பையில வீசுங்க. இப்ப எல்லாம் பறிக்கிற பழங்களில் பாதியே.. ஓமோன் அடிச்சுத்தான் பழுக்க வைக்கிறாங்க..! :):lol::icon_idea:

விசர்ப்பெட்டை <_<

நோ.. காமண்ட்..! :):icon_idea::lol:

  • கருத்துக்கள உறவுகள்

எதையாவது எழுதுங்க... தங்கச்சி.  காதல் தானே. அதை யார் இந்த உலகில் நிஜமா மதிக்கிறா. எல்லாரும் வந்து உதைஞ்சிட்டு.. விளையாடிட்டு போற.. ஒரு கால்பந்து தான் அது.

பாவம்.. அந்தப் பந்தை சொந்தங் கொண்டாட வெளிக்கிட்டு உதை வாங்கிற ஆக்கள் தான்..! :lol::icon_idea:

சிரார்த்ததினம் என்று வந்த பின் ஒன்றையும் எழுதிப் பிரியோசனம் இல்லை..:)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.