Jump to content

விடைபெறக் காத்திருக்கிறேன்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி!!!

இத்தனை உயிர்கள் போராட்டத்தில் மரணித்த போதும், இப்போதும் ராஜனி திரணகமவின் மரணத்தைப் பற்றி மட்டும் பேசும் கூட்டத்துக்கு இது எங்கே புரியப் போகின்றது. இவர்கள் குற்றம் காட்டுகினாம்.

Link to comment
Share on other sites

  • Replies 173
  • Created
  • Last Reply

அதை விட தமாசு- இந்த யூட் - மற்றவங்க எல்லாம் கோப்பை கழுவுற கேஸ் - நான் அமெரிக்க அரசாங்கத்தையே தெரிவு செய்யும் - பவர் உள்ளவன் - அமெரிக்க அரசாங்கமே என்னை கூப்பிட்டுது -

அடங்க் கொய்யால- இவர் பண்ணின ரவுசு - கொஞ்சமா -நஞ்சமா?

யாராவது வாசிச்சு இருக்கிங்களா அதெல்லாம்?

அதை விட இன்னும் ஒன்னு - எதை பேச ஆரம்பிச்சாலும் - அங்க போனன் - வன்னிக்கு போனன் - அந்த மீட்டின்க் ல - அவரை - சந்திச்சன் என்னு தொடக்குவார் மாமு-

அதாவது- எனக்குத்தான் எல்லாம் தெரியும் என்னு சொல்ல வாறாராம்!

நண்பு யூட்டு- நீங்கள் விடையம் தெரிந்தவர்தான் - மறுப்பதற்கு இல்லை- மற்றவர்களை குறைவாய் எடை போடும் பழக்கத்தை தவிருங்கள்- உங்களை போல - தலைகனம் பிடித்த அறிவாளிகள் - என்று - தம்பட்டம் அடிப்பவர்களை -

நொடி பொழுதில் அடித்து விழுத்தும் அளவிற்கு - எங்கள் போராட்டம் - எவ்ளோ பேரை உள்வாங்கி இருக்கு

இதை நீங்க நம்பினால்- நம்பலாம்! 8)

Link to comment
Share on other sites

பள்ளிக்கூடம் போகாதது பண்பாடற்ற எழுத்திலேயே தெரிகிறது. உங்களுக்கு தெரிந்த போராட்ட வரலாற்றின் உண்மைத்தன்மையை ஆராயும் திறன் பள்ளிக்கூடம் போகாததனால் உங்களுக்கு இல்லை என்பதும் தெரிகிறது. ஆகவே நீங்கள் சொல்லித்தான் தங்கள் அறிவின் தரம் தெரியவேண்டிய அவசியம் இல்லை.

எமது தமிழ் சமுதாயத்தில் அல்லது இந்திய உபகண்ட மக்கள் கூட்டத்தில் பொதுவாக அவதானிக்ககூடிய மிக்க வேதனைக்குரிய அம்சம் யாதெனில் அவர்கள் தங்களது கல்வித்தரத்தால் தங்களை தாழ்த்திக் கொள்வதாகும். தமது கல்வியறிவின் தராதரத்தை தமதும் தம்மை சூழ்ந்தவர்களினதும் வளர்ச்சிக்கு பயன்படுத்துவதை விடுத்து அதனை மற்றவர்களை மட்டம்தட்டும் கருவியாக பாவிக்கவிளைவது பொதுவாக அவதானிக்கப்பட கூடியது. இதனை எமது வளர்ச்சியின் தடைக்கல்லாக அல்லது மானிடத்தின் ஒரு மிக பின்தங்கிய பண்பாடுகளில் ஒன்றாக அவர்களினால் காண முடியாதிருப்பது அல்லது கான மறுப்பது மிகவும் கவலைக்குரிய விடயம்.

நமது ஊரில் இருப்பவர்கள்தான் (குறிப்பிடத்தக்களவில்) அப்படியான மனப்பாங்கில் இருக்கின்றார்கள் என்றால் புலத்தில் பலகாலமாக வாழ்ந்து அந்த சமுதாயத்தின் பண்பான வாழ்க்கைமுறைக்குள் தங்களை புடம்போட்டுக் கொண்டவர்கள் அல்லது அப்படி எண்ணுபவர்கள்கூட அந்த பழைய எமது உழுத்துப் போன பண்பாட்டுச் சகதிக்குள் இன்னும் சுழன்டு உழன்டு தமக்குத் தாமே சேறடித்துக் கொண்டிருப்பதை அவதானிக்கும்போது வியப்பாகவும் பரிதாபகரமாகவும் இருக்கின்றது. இது உண்மையில் அவர்களின் கல்வியறிவின் ஆற்றலை கேள்விக்குறியாக்குகின்றது. எமது அரசியல்போராட்டத்தின் ஒரு அம்சமாக இந்த பண்பியல் விருத்தியையும் நாம் சேர்த்துக் கொள்வேண்டிய தேவையையும் இது வலியுறுத்திக் காட்டுகின்றது.

Link to comment
Share on other sites

வர்ணன் நீங்கள் கூறியது போல நான் ஆரம்பத்திலிருந்தே யுூட்டின் கருத்துகளை படித்துதான்: வருகிறேன் அவர் அய்ரோப்பிய அகதி தமிழரை கோப்பை கழுவிற கூட்டம் என்று நக்கலடித்தபோது நானும்தான் வாக்கு வாத படடிருக்கிறேன் அதைவிட ஒருமுறை இந்திய இராணுவ பெண்களின் பாலியல் வன்முறை பற்றி எழுதியபோது உங்களிற்கெல்லாம் வேறை வேலையில்லை யுத்தம் என்றால் அது எல்லாம் சாதாரணம் என்று பதில் எழுhதியவர் எனவேஇங்கு யுூட்டுடன் எனக்கு கருத்து மேதலை தொடர விருப்பம் இல்லை அண்மையில்கூட ரட்ணஜீவன் கூல் நியமன பக்கத்தில் வன்னியில்தான் புலிகள் பகுதியில் பாம்பும் பல்லியும் அதிகம் என்று புலிகளை நக்கலடித்தார் இப்போ புலிகளின் பண்பு படிப்பு எண்று கூறுவதும் நக்கலுக்கே இவர்போன்ற மெத்தபடித்தவர்களுடன் வாதிடும் அழவுக்கு எனக்கு அறிவு போதாது அதே போல அவர் கூறுகிறார் படிக்காததால்தான் போராட்டத்தை பற்றிய ஆராயும் திறன் இல்லையாம் ;சரி எமது போராட்டத்தை உலகின் தலைசிறந்த பொறியியல் வல்லுனர்களாலேயோ அல்லது மருத்துவர்களாலேயோ விஞ்ஞானிகளாலேயோ நடத்தபடவில்லை மெத்படித்தவர்கள் என்று கூறிகொண்டு போராட்டத்தை ஆரம்பித்தவர்களும் பல தலைவர்களையும் கூட காணவில்லை யுூட் போன்ற அமெரிக்க அரசையே தீர்மானிக்கும் அதி புத்திசாலிகளால் மற்றும் நீலன் கதிர்காமர் வினோதன் பேன்றவர்கள்எங்கள் போராட்டத்தின்பாதையில் எத்தனை படிகளை அமைத்தார்கள் என்று எமக்கு தெரிந்ததுதானே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன வர்ணன் நீங்கள்!!

அண்ணாச்சி தான் ஜநாவின் திட்டமிடல் அதிகாரியாக இருக்கின்றார். இவரின் சொல்லைக் கேட்டுத்தானம் எல்லாம் நடக்குது ................. என்று றோட்ரோத்தில் கனவு காணும் ஆட்களைத் திருத்தவே முடியாது. புலம்பட்டும்

Link to comment
Share on other sites

மணிமாறன் மிகச் சரியானா ஒப்பு நோக்கு,

இதற்கு எனக்கு நாபகம் வரும் பழமொழி ' நாய் வாலை நிமித்த முடியுமா? என்பதுவே.

புலத்தில் பல்வேறு சமூகத்தருடன் பழகியவர்கழுகுத் தெரியும் அவர்கள் எவரையும் தாழ்த்திப் பேசுவது அல்லது மட்டம் தட்டுவது கிடயாது என்பது ,குறிப்பாக ஒருவர் செய்யும் வேலையோ அன்றி படிப்பையோ குறிப்பிட்டு, .பட்டம் பெறுவது பண்பாட்டை வளர்க்க,மனித நாகரீகத்தை மனித வளத் திறனை வளர்க்க.படிப்பென்பது இதற்கான வழி முறையே அன்றி,ஒருவர் பட்டம் பெற்று விட்டர் படித்து விட்டார் ஆதலால் அவர் சொல்வதைத் தான் மற்றவர்கள் கேட்க வேணும், என்பது நகைப்பிற்கு இடமானது.அவர் தான் கற்றவற்றைக் எவ்வாறு பயன் படுதுகிறார் என்பதிலயே அவர் படித்தற்கான சான்று உள்ளது.

இதை நடைமுறையில் பயன் படுத்தத் தெரியாதவர்கள் தான் தமது பட்டம் பற்றி தம்பட்டம் அடிப்பதுவும் , தமது படிப்பைக் காட்டி கீழ்த் தரமாக மற்றவர்களை விமர்சிக்க முற்படுபவர்களாக இருக்கிறார்கள்.

எமது போராட்டம் படிக்க வசதி வாய்ப்புக்கள் இல்லாத பல உணர்வாளர்களால், அல்லது போராட்டத்திற்காக தமது கல்விச் செயற்பாடுகளைக் கைவிட்ட ,ஏழை எளிய இழஞ்சர்களின் உயிரால்,உதிரத்தால் வளர்க்கப் பட்டது,இவர்களிடம் இருக்கும் தன்னடக்கம் இந்த படித்துப் பட்டம் பெற்றவர்கள் என்று கூறிக்கொள்பவர்களிடம் இல்லை.பிசா வினியோகிப்பதை ,விடுதலைப் போரில் உயிரைக் கொடுத்து போரடுவதை விட கஸ்டமான ஒரு விடயாமக் வெக்கமில்லாமல் கூறும் நிலயிலயே இந்த பட்டதாரிகள் இருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

கவனிக்கபட வேண்டியது- தான் பிறந்த இனத்தையே - மட்டம் தட்டிய இந்த நபர் - இன விடுதலைக்கு உதவி செய்ய போகிறேன் என்று சொன்னது!

இப்பிடி

http://www.yarl.com/forum/viewtopic.php?t=8373&start=0

என்ன சொல்ல- எல்லாத்தையும் நம்பி தொலைச்சே வாழ்க்கை அழியுது!

யூட் அண்ணா - ஈபிடிபி- க்கு வேணும்னா ஆலோசகராய் போங்க - அங்க ஒண்ணு இங்க ஒண்ணு பேசி - உங்க அறிவு ஜீவிதத்தை காட்ட- அவ்ளோ ஒண்ணும் -நீங்க நினைக்கிற அளவுக்கு- ரொம்ப பலவீனம் இல்ல நாங்க !

Link to comment
Share on other sites

கவனிக்கபட வேண்டியது- தான் பிறந்த இனத்தையே - மட்டம் தட்டிய இந்த நபர் - இன விடுதலைக்கு உதவி செய்ய போகிறேன் என்று சொன்னது!

வர்ணன், எந்த நபரைப்பற்றி எழுதியிருக்கிறீர்கள்?

நான் எந்த இனத்தையும் தாழ்த்தி எழுதியதில்லை. தமிழில் ஒரு பழமொழி இருக்கிறது. மருண்டவன் கண்களுக்கு இருண்டதெல்லாம் பேய் என்று. தாழ்வுமனப்பான்மை எனும் உளநோயால் நீங்கள் பீடிக்கப்பட்டிருந்தால், யார் எதை சொன்னாலும் உங்களை தாழ்வாக சொல்வதாக தான் தெரியும். இனவிடுதலை ஒரு அடிமைப்பட்ட இனத்துக்கு தான் தேவை. எனது இனம் அடிமை இனமும் அல்ல. ஒரு வேளை நீங்கள் வேறு இனம், நான் வேறு இனமாக இருக்க கூடும்.

தமிழீழ விடுதலைப்போராட்டத்தை தமிழ் இனத்தின் போராட்டமாக பார்ப்பவர்கள் நிறையவே இருக்கிறார்கள். ஆனால் தமிழீழ தமிழர்கள், உலகத்தமிழினத்தில் ஒரு சிறிய பிரிவே ஆகும். உலகத்தமிழர்கள் அனைவரும் தமிழீழத்தை தமது நாடாக கருதவில்லை. ஆகவே தமிழீழ விடுதலைப்போர் தமிழரின் இனவிடுதலை போர் என கூறுவது எல்லாரும் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. இலங்கையின் வடகிழக்கு மக்களின் அடிப்படை உரிமைகளுக்கான போராகவே நான் அதை பார்க்கிறேன். .

அதற்கு தான் நான் உதவி செய்ய விரும்பினேன்.

எனக்கும் களத்தில் உள்ள மற்றவர்களுக்கும் கருத்தொருமைப்பாடு இல்லாத நிலை உள்ளதனால் நான் அந்த முயற்சியை தொடரவிரும்பவில்லை.

உங்கள் இனவிடுதலைக்கு நான் உதவிசெய்ய முன்வரவும் இல்லை. என்னால் அதை செய்யவும் முடியாது. காரணம் உங்கள் இனஅடிமைநிலை உங்களது தாழ்வுமனப்பான்மையின் காரணமாக உருவான ஒரு தோற்றப்பாடு. அதற்கு உதவுமளவுக்கு எனக்கு அந்த துறைபற்றி அறிவு இல்லை.

Link to comment
Share on other sites

அதைவிட ஒருமுறை இந்திய இராணுவ பெண்களின் பாலியல் வன்முறை பற்றி எழுதியபோது உங்களிற்கெல்லாம் வேறை வேலையில்லை யுத்தம் என்றால் அது எல்லாம் சாதாரணம் என்று பதில் எழுhதியவர் எனவேஇங்கு யுூட்டுடன் எனக்கு கருத்து மேதலை தொடர விருப்பம் இல்லை

சாத்திரி, உமது எழுத்தில் நேர்மை இல்லை. நான் இவ்வாறு இந்திய இராணுவம் பற்றி எழுதவில்லை. பொய் எழுதியிருக்கிறீர்கள்.

முதலில் புஸ்பராஜா பற்றியும், பஸ்தியாம்பிள்ளை பற்றியும் உமக்கு தெரிந்த உண்மையான வரலாற்றை ஏன் இன்னமும் நீர் இங்கே எழுதவில்லை? உண்மை என்றால் எழுத ஏன் தயக்கம்? எனக்கு தெரிந்த வரலாறு தவறு என்றால் உண்மையை எழுதி தெரிய வைக்க வேண்டியது தானே? நான் இந்திய இராணுவம் பற்றி எழுதாததை எழுதியதாக சொல்லி, அதனை சாட்டாக வைத்து கருத்து மோதலை தொடரவிருப்பமில்லை என்று நழுவிக்கொள்வது, தங்களது கருத்தின் உண்மைத்தன்மையையும், தங்களது நேர்மையையும் கேள்விக்கு உரியதாக்குகிறது.

கான மயிலாட, கண்டிருந்த வான்கோழி

தானும் தன் பொல்லாச்சிறகை - விரித்தாடினாற்போல்

கல்லாதான் கற்ற கவி!

உண்மையும் நேர்மையும் பண்பாளருக்கும் கற்றோருக்கும் அழகு. மற்றவர்களை பற்றி பொய்யும், புனைகதையும், அவதூறும் எழுதுவது பண்பற்றவர்களுக்கும் கல்லாதோருக்கும் வழக்கு.

அழுக்காறு அவா வெகுளி இன்னாச்சொல் நான்கும்

இழுக்கா றியன்ற தறம்.

- திருக்குறள்.

Link to comment
Share on other sites

யுூட்டிற்கு நான் எழுதிய விழக்கங்கள் எதுவுமே விழங்கவில்லை ஆனால் நான் பள்ளி கூடம் போகவில்லையெண்டது மட்டும் சரியா விழங்கியிருக்கு

நீங்கள் பள்ளிக்கூடம் போனதும் போகாததும் எந்த வகையில் இந்த தலைப்பில் சம்பந்தப்பட்டது? நீங்களாக தந்த தரவான உங்கள் "பள்ளிக்கூடம் போகாத" நிலைப்பாடு கருத்து களத்துக்கு வந்ததால் விமரிசிக்கப்பட வேண்டியது ஆகிறது.

நீங்கள் உங்களை படிக்காத மேதை என்று காட்டவா பள்ளிக்கூடம் போகாதது பற்றி எழுதியிருந்தீர்கள்? பள்ளிக்கூடம் போனவர்களுக்கும், போகாதவர்களுக்கும் ஆய்வியல் ஆற்றல் பெருமளவில் வேறுபடுகிறது. காரணம் பள்ளிக்கூடத்தில், ஒரு கருத்தை அல்லது ஒரு பிரச்சினையை ஆய்வு செய்யவே கற்றுக்கொடுக்கிறார்கள். அது சட்டமாக இருக்கலாம் அல்லது விஞ்ஞானமாகவும் இருக்கலாம். தங்களது தரவான "பள்ளிக்கூடம் போகவில்லை" என்பது கருத்துக்களத்துக்கு வந்த நிலையில், அதன் அடிப்படையில் தங்களது ஆய்வுத்திறன் மதிப்படப்படுகிறது. அது உங்களுக்கு பிரச்சினையாக இருக்குமானால் நீஙகள் பள்ளிக்கூடம் போகாத சங்கதியை கருத்துக்களத்துக்கு கொண்டுவந்திருக்க கூடாது.

நீஙகள் ஏன் இன்னமும், தங்களுக்கு நிச்சயமாக தெரிந்த புஸ்பராஜாவின் வரலாற்றை எழுதவில்லை? குறிப்பாக பஸ்தியாம்பிள்ளையை யார் சுட்டது? புஸ்பராஜா அப்போது எங்கிருந்தார் என்பது பற்றி ஏன் இன்னமும் எழுதவில்லை?

Link to comment
Share on other sites

என்ன வர்ணன் நீங்கள்!!

அண்ணாச்சி தான் ஜநாவின் திட்டமிடல் அதிகாரியாக இருக்கின்றார். இவரின் சொல்லைக் கேட்டுத்தானம் எல்லாம் நடக்குது ................. என்று றோட்ரோத்தில் கனவு காணும் ஆட்களைத் திருத்தவே முடியாது. புலம்பட்டும்

ஐக்கிய நாடுகள் சபையில் பல தமிழர்கள் வேலை செய்கிறார்கள்.

நீங்களும் விண்ணப்பிக்கலாம்.

https://jobs.un.org/Galaxy/Release3/vacancy...cy/vacancy.aspx

பின்தங்கிய நாடுகளின் பெண் விண்ணப்பதாரிகளுக்கு முன்னுரிமை உண்டு. பதிந்து வைத்திருந்தால் வெற்றிடங்கள் வரும்போது அழைக்கப்படுவீர்கள். தமிழ் மொழியை தெரிந்த பிறமொழிகளுள் ஒன்றாக போடுவதன் மூலம் இலங்கைக்கான செயற்பாடுகளில் இடம்பெறும் சந்தர்ப்பமும் உண்டு.

பட்டதாரியாக இருந்து ஐ.நா.வின் உத்தியோகபுூர்வ மொழிகளில் மூன்றில் தேர்ச்சி பெற்றிருந்தால் உயர்நிலை பதவிகளில் இடம்பெறும் சந்தர்ப்பங்களும் உண்டு.

உங்களுக்கு ஐ.நா. இராஜதந்திர கடவுச்சீட்டு வழங்கப்படும். ஐ.நா.வில் சம்பளத்துக்கு ஒரு நாட்டிலும் வரியில்லை. குடும்பமாக வாழ்வோருக்கு குடும்பத்தை அழைத்து வைத்திருக்கு மேலதிக பணம் வழங்கப்படும்.

Link to comment
Share on other sites

யூட் அண்ணா

எந்த நபரை பற்றியும் எழுதவில்லை

உங்களை பத்திதான் எழுதினேன்!

தாழ்வு மனப்பான்மையா?

அப்பிட்டீன்னா?-எங்க எதால- எப்போ?

யாரை பார்த்து? - உங்களையா?

ஓகோ இதுவும் சொல்லுவீங்கோ நீங்க

இன்னமும் சொல்லுவீங்கோ!!

அது போகட்டும்!

என்ன சொன்னிங்க இன விடுதலை அடிமை பட்ட இனத்துக்கு தான் தேவை - எனது இனம் அடிமை பட்ட இனம் இல்லையா?

பலே பலே - என்னமா பின்னுறீங்க - அது சரி - அடிமை படாத அமெரிக்கால வாழுற - உங்க ஊரில - 5 நாயை கொன்றால் - உங்க நிலமை என்னாகும்?

ஒரு இலட்சம் பேருக்கு மேல என் இனத்தில அழிஞ்சு போயிருச்சே அண்ணா - எப்பிடி ஆச்சு?

வானத்தில இருந்து யாரும் வந்து ஏதும் பண்ணிட்டு போனாங்களா?

சொன்னாதானே தெரியும்!

அப்புறம் சாதி விடுதலை - பேதி விடுதலை என்று எல்லாம் போறீங்க - அதை பத்தி இங்க யார் பேசினாங்க?

குறும்பு !

ஆரம்பிக்கும் போது என் இனம் அடிமை பட்ட இனம் இல்லை என்றீங்க - அப்புறம் தமிழீழ விடுதலை போராட்டம் என்று ஏதோ எடுத்து விடுறீங்க - ஏன் அண்ணா - அடிமையே இல்லாத ஊரில விடுதலை என்ற ஒரு பேச்சு வருமா? ஆர் யு ஓ.கே அண்ணா?

அப்புறம் என்ன சொன்னிங்க அறிவாளி அண்ணா- தமிழீழ விடுதலை போராட்டத்தை - உலக தமிழர் போராட்டமா பார்க்கிறவங்க இருக்காங்களா - ?

இருக்கட்டுமே - அதுக்கு நாம் என்ன செய்ய?

அண்ணா எங்கட ஊரில நடக்கிறது - ஒரு பிரச்சார - அரசியல் நாடகம் இல்லை அண்ணோய்-- வாழுறதா- சாகிறதா என்ற பிரச்சனையுங்கோ- ஏன் தேவையிலாம - எல்லை மீறிய கருத்தாடல் ?

உலக தமிழர் தமிழீழத்தை தனிநாடாக கருதவில்லை - சரிதான் - அவர்கள் கருதவேணும் என்றதுக்காகவா - கரும்புலியாய் போய் சாகிறாங்க?

கடைசில அடிப்படை உரிமைக்கான போர் நடக்குது-என்னு - குழம்பிட்டிங்களே- சொதப்பிட்டிங்களே!

அண்ணா - ஒரு நாட்டின் அரசியல் எல்லைகளுக்குள் - வாழும் - பல்லினங்களுக்கிடையில்- அடிப்படை உரிமைகள் - பகிர்ந்து அளிக்கப்படாதவிடத்து- அந்த இனம் தேர்வு செய்ய கூடிய மாற்று வழி என்ன?

கடைசில திருகுறள் வேறையா? டாமாசு - டமாசு-

அதே குறள்ல அறத்து பால் தொகுதியில - இன்னும் கொஞ்சம் வாசியுங்க - உங்க வறட்டு - கூச்சல் ஓயும்!! 8)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை அண்ணாச்சி!!

உங்களைப் போன்ற மெத்தப்படித்த மேதாவி போலக் அல்லது அப்படிக் காட்டிக் கொள்ளுபவர்களுக்கு தான் அந்த இடம் போதுமானது.

Link to comment
Share on other sites

இல்லை அண்ணாச்சி!!  

உங்களைப் போன்ற மெத்தப்படித்த மேதாவி போலக் அல்லது அப்படிக் காட்டிக் கொள்ளுபவர்களுக்கு தான் அந்த இடம் போதுமானது.

அந்த தகவல் அதனை பயன்படுத்த விரும்புவர்களுக்கு மட்டுமே.

பயனற்றவர்களுக்கு அல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த தகவல் அதனை பயன்படுத்த விரும்புவர்களுக்கு மட்டுமே.

பயனற்றவர்களுக்கு அல்ல.

நான் நினைக்கவில்லை. வேறு யாரும் இங்கே உலகமகா அறிவாளியாகக் காட்டிக்கொள்வதில்லை என்று

Link to comment
Share on other sites

 

நான் நினைக்கவில்லை. வேறு யாரும் இங்கே உலகமகா அறிவாளியாகக் காட்டிக்கொள்வதில்லை என்று

நீங்கள் அதைத்தானே செய்து கொண்டிருக்கிறீர்கள்?

மற்றவர்களை மட்டம் தட்டுவது, அவதூறு செய்வது, போன்றவற்றை தானே நீங்களும் செய்து கொண்டிருக்கிறீர்கள்?

அறிவுக்குரிய கருத்துக்களை விவாதிக்க கருத்துக்களங்கள் இருக்கின்றன. தங்களைப்போல அவற்றை பயனற்றதாக்கும் வகையில், மற்றவர்களை மட்டம் தட்டுவதும், அவதூறு செய்வதுமாக எழுதுபவர்களும் இருக்கிறார்கள். நீங்கள் உங்களை உலகமாக அறிவாளியாக நினைப்பதால் மற்றவர்களும் அவ்வாறே என கருதுவது உண்மையாகாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்பக்கத்திலேயே தெரியும். சாத்திரியார் தொடக்கம் பலரை மட்டம் தட்டியவர்கள் யார் என்று.

மற்றது நான் உலகமகா அறிவாளியாக காட்டுவதாகவா உணர்கின்றீர்கள். எதை வைத்து உணர்கின்றீர்கள். நான் என்ன அவரைத் தெரியும். இவரைத் தெரியும் என்று போட்டேனா? அல்லது அன்றோரு நாள் யாழ் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த நாளில்............... என்று எழுதத் தொடங்கினேனா?? :wink: :P

Link to comment
Share on other sites

மேற்கோள்:

நிறையவே கூச்சலிட்டிருக்கிறீர்கள்

அண்ணா நான் கேட்டதுக்கு ஒண்ணும் பதில் சொல்லலையே! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேற்கோள்:

நிறையவே கூச்சலிட்டிருக்கிறீர்கள்

அண்ணா நான் கேட்டதுக்கு ஒண்ணும் பதில் சொல்லலையே! :lol:

எனி எந்தப்பல்கலைக்கழகத்தில் படித்ததாக மேற்கோள் காட்டுவது என்று முடிவான அப்புறம் தான் பதில் வரும் :wink: :P

Link to comment
Share on other sites

யூட் என்ற ஒட்டுப்படைக்கு பதிலளிக்கவேண்டிய அவசியமில்லை என்று நினைக்கின்றேன்.

யூட் நீர் ஒரு ஒட்டுப்படை

Link to comment
Share on other sites

ஒட்டுப்படை என்றால் என்ன?

சத்தியமாக இதற்கு எனக்கு அர்த்தம் தெரியாது.... இங்கு நிறைய பேர் இந்த வார்த்தையை பயன்படுத்துகிறீர்கள்.... எங்கள் ஊரில் எட்டப்பன் போல என்கிறோமே? அதுவா? இல்லை இப்போ வைகோவை சொல்கிறார்களே.... அது போலவா?

Link to comment
Share on other sites

ஒட்டுப்படை என்றால் என்ன?

சத்தியமாக இதற்கு எனக்கு அர்த்தம் தெரியாது.... இங்கு நிறைய பேர் இந்த வார்த்தையை பயன்படுத்துகிறீர்கள்.... எங்கள் ஊரில் எட்டப்பன் போல என்கிறோமே? அதுவா? இல்லை இப்போ வைகோவை சொல்கிறார்களே.... அது போலவா?

குருவிச்சை மரம் தெரியுமா? பெரியமரங்களில் ஒட்டி இருக்குமே கிட்டத்தட்ட அதேமாதிரி,

அல்லது தந்தையின் செல்வாக்கில், வருங்கால முதலமைச்சர் கனவில் மிதக்கும் ஸ்டலினையும் ஒட்டிவாழும்பயல் என கிட்டத்தட்ட கூறலாம். :P :P :P

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: VISHNU   04 JUN, 2024 | 01:46 AM தேசிய மட்ட அபிவிருத்தித் திட்டங்களின் பயனை கிராமப்புற மக்களுக்குப் பெற்றுக்கொடுக்கும் வகையில் வீதி கட்டமைப்பை மேம்படுத்தி நாடு முழுவதும் 250 புதிய பாலங்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். 2014-2024 காலப்பகுதியில் நெதர்லாந்து ஜென்சன் பிரிஜிங் நிறுவனத்தினால் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் 750 கிராமிய பாலங்களை வெற்றிகரமாக நிர்மாணித்து நிறைவு செய்ததை முன்னிட்டு 03 ஆம் திகதி திங்கட்கிழமை முற்பகல் கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.  இந்தப் பாலங்கள் ஊடாக இணைக்கப்பட்டுள்ள பிரதேச மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகத் தெரிவித்த ஜனாதிபதி, நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடையும் போது, குறைந்த வருமானம் பெறும் மக்களும் அதன் மூலம் பயனடைவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார். கிராமப்புறங்களில் உள்ள மக்கள் மீது அதிக கவனம் செலுத்துவதன் மூலம் பல பரிமாண வறுமையை 10% வரை குறைக்க வேண்டும் என்பதே அரசின் எதிர்பார்ப்பு என்றும், கிராமப்புறங்களில் உட்கட்டமைப்பு வசதியை மேம்படுத்தும் இவ்வாறான திட்டங்கள் அந்த இலக்கை அடைவதற்கு மிகவும் முக்கியமானவை என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். இந்தத் திட்டத்திற்கு பங்களித்த நெதர்லாந்து அரசாங்கத்திற்கும் ஜனாதிபதி நன்றி தெரிவித்தார். ஜென்சன் பிரிஜிங் நிறுவனத்தின் 10 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு அந்நிறுவனம் இலங்கையில் 750 பாலங்களை வெற்றிகரமாக நிர்மாணித்து நிறைவு செய்ததை முன்னிட்டு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நெதர்லாந்து நாட்டின் இலங்கைக்கான தூதுவர் பொனி ஹோர்பாக்       ( Bonnie Horbach)  அவர்களுக்கு விசேட  நினைவுப் பரிசொன்றையும் வழங்கினார். மேலும் இங்கு கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  கூறியதாவது: இலங்கையில் ஜென்சன் பிரிஜிங் நிறுவனத்தால் நிர்மாணிக்கப்பட்ட 750 பாலங்களின் பணிகள் நிறைவடைந்ததை இன்று நாங்கள் ஒன்றிணைந்து கொண்டாடுகிறோம். இது அந்த நிறுவனம் வெற்றிகரமாக நிறைவேற்றிய மாபெரும் பணி என்பதைக் கூற வேண்டும். இந்த கிராமப்புறப் பாலங்கள் நிர்மாணிக்கப்பட்ட பிரதேசங்கள் பற்றி எனக்குத் தெரியும். அவை மிகவும் பின்தங்கிய பகுதிகளில் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இந்தப் பாலங்களால் இணைக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது. மேலும், இந்த விரிவான வீதிக் கட்டமைப்பு, முக்கிய அதிவேகப்பதைகளுக்கு பொருட்களை கொண்டு செல்வதற்கும், கொழும்பு அல்லது பிற முக்கிய நகரங்களுக்கு பொருட்களை அனுப்புவதற்கும் உதவுகிறது. எனவே, இத்திட்டம் மிகவும் முக்கியமான திட்டம் என்பதை குறிப்பிட வேண்டும். மேலும் இதுபோன்ற 250 பாலங்களை அமைக்க எதிர்பார்த்துள்ளோம். நம் நாட்டில் 2019 ஆம் ஆண்டில் 15% ஆக இருந்த வறுமை விகிதம் தற்போது 25% ஆக அதிகரித்துள்ளது. 2032 ஆம் ஆண்டிற்குள் 10% வரை குறைக்க வேண்டும் என்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என்பதைக் கூற வேண்டும். நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடையும் போது, குறைந்த வருமானம் பெறும் மக்களும் அதன் மூலம் பயன்பெறுவதை உறுதி செய்ய வேண்டும். கிராமப்புறங்களில் உள்ள மக்களை மையமாகக் கொண்டு பல பரிமாண வறுமையை 10% வரைக் குறைப்பது எமது முக்கிய குறிக்கோள்களில் ஒன்றாகும். அந்த இலக்கை நோக்கிச் செல்ல இது போன்ற திட்டங்கள் நமக்கு உதவுகின்றன. எனவே இந்த திட்டங்களுக்கு பங்களித்த நெதர்லாந்து அரசாங்கத்திற்கு நான் நன்றி கூறுகிறேன். வடமாகாணத்தில் மக்களின் சுகாதார சேவைகளை விரிவுபடுத்தும் வகையில் 04 புதிய வைத்தியசாலைகளை திறப்பதற்கு நெதர்லாந்து தூதுவர் அண்மையில் எம்முடன் இணைந்து கொண்டார். இந்த இரண்டு திட்டங்களும் இலங்கையின் கிராமப்புற சமூகத்தை பலப்படுத்தும். நான் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர், இந்த திட்டங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அவற்றை முன்னெடுத்துச் செல்ல நான் நடவடிக்கை எடுத்தேன். இலங்கைக்குச்  சொந்தமான புராதன பீரங்கிகளை மீள இலங்கைக்கு வழங்கியமை தொடர்பில்   நெதர்லாந்து அரசுக்கு மீண்டும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த செயற்பாடுகளினால் எதிர்காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மிகவும் வலுவாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. மோசமான வானிலை காரணமாக வெள்ள நிலைமையை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இதுவரை பல உயிர்கள் பலியாகியுள்ளன. இந்த அனர்த்தத்தினால் முற்றாக அழிந்த வீடுகளை இராணுவத்தினரின் பங்களிப்புடன்  அரச செலவில் புனரமைக்க  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பகுதியளவில் சேதமடைந்த கட்டிடங்கள் தொடர்பான அறிக்கைகளைப் பெற்ற பின்னர், அது தொடர்பான முடிவுகளை எடுக்க எதிர்பார்த்துள்ளோம் என்பதையும் குறிப்பிட வேண்டும். இந்நிலையில், இன்று பிற்பகல் நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் அவசர அமைச்சரவை பத்திரமொன்றை பிரதமர் சமர்ப்பிக்கிறார். மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து நிவாரணங்களையும் வழங்குவதற்காக தற்போது உள்ள நிதியை விடுவிக்குமாறு பணித்துள்ளேன். மேலும், தேவையான அனைத்து நிதி ஒதுக்கீடுகளுக்கும் உரிய மதிப்பீடுகளை விரைவாகத் தயாரிக்க மாவட்ட செயலாளர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டு ஏற்பட்ட அனர்த்த நிலைமையின்போது அன்றைய அரசாங்கம் 170 பில்லியன் ரூபாவைச் செலவிட்டுள்ளது. கடந்த ஆண்டு, 13 மாவட்டங்களில் அனர்த்த நிலைமை ஏற்பட்டது. இம்முறை சில மாகாணங்களில் பாரிய அளவில் சேதம் ஏற்படவில்லை. எவ்வாறாயினும், இந்த வருடமும் அடுத்த வருடமும் அனர்த்த சேதங்களை புனரமைக்கத் தேவையான அனைத்து நிதியையும் வழங்க எதிர்பார்த்துள்ளோம்” எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.  நெதர்லாந்து நாட்டுத்  தூதுவர் பொனி ஹோர்பாக்( Bonnie Horbach),  கடந்த 10 வருடங்களில் இலங்கையில் 750 பாலங்களை வெற்றிகரமாக நிர்மாணித்த ஜென்சன் பிரிஜிங் நிறுவனத்தின் 10 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் இன்று ஜனாதிபதியுடன் இந்த நிகழ்வில் கலந்துகொள்வதை நான் கௌரவமாக கருதுகின்றேன். ஜென்சன் பிரிஜிங் நிறுவனம் கடந்த 10 வருடங்களாக இலங்கை முழுவதும் பாலங்களை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. அவை பெரும்பாலும் நமக்குத் தெரிந்த அலங்காரமான பாலங்கள் அல்ல. ஆனால், தேசிய வளர்ச்சித் திட்டங்களுடன் மக்களின் வாழ்க்கையை இணைப்பதோடு, கிராமப்புற மக்களுக்கு நேரடிப் பலன்களை வழங்கும் திட்டங்கள் என்பதைக் கூற வேண்டும். தலைமைத்துவம் என்பது மக்களின் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகளைத் திறப்பதாகும். இரண்டு வருடங்களுக்கு முன்னர் இலங்கை மிக மோசமான பொருளாதார நெருக்கடியை சந்தித்தது. அந்த சந்தர்ப்பத்தில் தலைமைத்துவப் பண்புகளை பிரதிபலித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த நடவடிக்கை எடுத்தார்.  இப்போது நாட்டின் வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் இருக்கிறார். அதன்போது, அனைத்து மக்களும் பயன்பெறும் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, முன்னேற்றத்தின் பலன் குறைந்த வருமானம் பெறும் மக்களையும் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும்” என்றும் அவர் தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன, நெதர்லாந்து பிரதித் தூதுக் குழுவின் தலைவர் இவன் ருஜென்ஸ் (Iwan Rutjens),, எக்சஸ் குழுமத்தின் தலைவர் சுமல் பெரேரா,  போர்சைட் இன்ஜினியரிங் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் தியோ பெர்னாண்டோ, ஜென்சன் பிரிஜிங் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் டிர்க்  பிரான்சென் (Dirk Fransen) உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/185249
    • வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி ஒரு லட்சம்  வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை  தமிழ் நாடு  முன்னிலை  திமுக  கூட்டணி 39 பா ஜ க  1  
    • Published By: VISHNU 03 JUN, 2024 | 07:23 PM   களனி ஆற்றுப் பள்ளத்தாக்கில் வெள்ளத்தை ஏற்படுத்தும் வகையிலும், மழை நீர் வழிந்தோடுவதைத் தடுக்கும் வகையிலும் மேற்கொள்ளப்படும் புதிய நிர்மாணங்களுக்கு இடமளிக்க வேண்டாம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். குறித்த பிரதேசங்களில் சட்டவிரோதமான முறையில் நிலம் நிரப்பப்படுவதை உடனடியாக நிறுத்துவதற்கும் முல்லேரியா மற்றும் IDH வைத்தியசாலைகளை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார். சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும்  அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமைகளைக் கண்டறிவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 03 ஆம் திகதி திங்கட்கிழமை கொலன்னாவ, களனி, அம்பத்தளை ஆகிய பிரதேசங்களுக்கு மேற்பார்வை விஜயம் மேற்கொண்டார். கொலன்னாவை சேதாவத்த வெஹெரகொட ரஜமஹா விகாரையில் நடைபெற்ற  கலந்துரையாடலில்  ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார். பாதிக்கப்பட்டோர் தங்கியுள்ள அம்பத்தளை, கல்வான புராண ரஜமஹா விகாரை, சேதவத்த வெஹெரகொட புராண ரஜமஹா விகாரை, கொலன்னாவ டெரன்ஸ் .எஸ். சில்வா வித்தியாலயம் மற்றும் வெல்லம்பிட்டி காமினி வித்தியாலய பாதுகாப்பு நிலையம் என்பவற்றுக்குச் சென்ற ஜனாதிபதி, மக்களின் நலன்களைக் கேட்டறிந்ததோடு, அவர்களின் தேவைகளைக் கண்டறிந்து அவற்றை தொடர்ச்சியாக பூர்த்தி செய்யும் பணிகளை முன்னெடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார். கொலன்னாவையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்று இரவு முதல் உணவு வழங்குமாறு கொலன்னாவை  பிரதேச செயலாளருக்கு அறிவித்த ஜனாதிபதி, அந்த மக்களின் சுகாதார மற்றும் பாதுகாப்பு வசதிகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்துவதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார். வெள்ளத்தைக் கட்டுப்படுத்துவதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபை, அனர்த்த முகாமைத்துவ திணைக்களம் மற்றும் நீர்ப்பாசன திணைக்களம் என்பவற்றுடன் இணைந்து நிரந்தர வேலைத் திட்டமொன்றை தயாரிக்க வேண்டுமென ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். குழாய்களை பயன்படுத்தி வெள்ளம் வேகமாக வடிந்து செல்ல வழிசெய்து, மக்களை துரிதமாக மீள்குடியேற்றுமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தல் வழங்கினார். அனர்த்த சூழ்நிலையில் இருந்து பாதுகாப்பான இடங்களில் தங்கியுள்ள மக்களின் வீடுகளையும் சொத்துக்களையும் பாதுகாக்க விசேட வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், ஜனாதிபதி பணிக்குழாம்  பிரதானியுமான சாகல ரத்நாயக்க அங்கு சுட்டிக்காட்டினார். கொலன்னாவ பிரதேச   செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கருத்துத் தெரிவித்த அவர், பிரஜைகள் பொலிஸாரின் பங்களிப்புடன் நடமாடும் ரோந்து சேவைகளை நடைமுறைப்படுத்த முடியும் எனவும் சுட்டிக்காட்டினார். அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு சுகாதாரமான முறையில் உணவு வழங்க வேண்டும் என்று இராணுவத்தினருக்கு பணிப்புரை வழங்கிய  சாகல ரத்நாயக்க, மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்குவதில் கவனம் செலுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவித்தார். மேலும்,  அனர்த்த நிலை குறையும் வரை மக்களுக்கு நிவாரணம் வழங்க முப்படையினர் ஆளணி பலத்துடன் தற்காலிக மத்திய நிலையமொன்றை அமைக்குமாறு அறிவுறுத்திய அவர், வெள்ளம் குறைந்த பிறகு ஏற்படக் கூடிய டெங்கு, எலிக்காய்ச்சல், வயிற்றுப்போக்கு போன்ற தொற்றுநோய்களைக் கட்டுப்படுத்த விசேட வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.  அனர்த்தம் காரணமாக முற்றாக சேதமடைந்த அனைத்து வீடுகளையும் அரசாங்கத்தின் உதவியுடன் இராணுவத்தினரின் பங்களிப்புடன் நிர்மாணிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக அவர்  மேலும் தெரிவித்தார். பொதுமக்கள்  பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன், பாராளுமன்ற உறுப்பினர்களான ரியர் அட்மிரல் சரத் வீரசேகர, சட்டத்தரணி பிரேமநாத்.சி.தொலாவத்த, எஸ்.எம்.மரிக்கார், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும்  ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் தொழிற்சங்க உறவுகள் தொடர்பான பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னபிரிய, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ, கடற்படை தளபதி  வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா, பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் உள்ளிட்ட பலர் ஜனாதிபதியுடனான மேற்பார்வை விஜயத்தில் இணைந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/185244
    • பின்புலம் தெரியாமல் கேட்கும்போது கொடுப்பதால் இப்படியானவர்கள் ஏமாற்றி வாழ்கின்றார்கள். 
    • அதுசரி சாமியார்.. நீங்கள் குளிருக்குப் போத்துப் படுக்க பெட்சீட் பாவிக்கறது இல்லையாம், பரிமளாக்காவின் சாறியைத்தான் பாவிக்கிறதா கேள்விப்பட்டன், உண்மையா??? அதுதான் சாறிஞாபகம் வந்ததோ????😁😂 
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.