செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7153 topics in this forum
-
ரங்கா- இ.தொ.கா தொடர்பும் மின்னல் அரசியல் நாடகமும் அம்பலம்: விசேட காணொளி July 17, 201511:29 am ராஜா மகேந்திரனின் மகாராஜா கூட்டு நிறுவன சக்தி தொலைக்காட்சி மின்னல் நிகழ்ச்சியில் ஜெஶ்ரீரங்கா செய்யும் அரசியல் கள்ள நாடகம் தற்போது கையும் களவுமாக பிடிபட்டுள்ளது. ஜூலை 4ம் திகதி இடம்பெற்ற மின்னல் நிகழ்ச்சியில் விருந்தினராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மத்திய மாகாண சபை உறுப்பினர் பி.சக்திவேல் கலந்து கொண்டார். இதன்போது இப்தார் நிகழ்ச்சிக்கான இடைவெளியில் ரங்கா, சக்திவேல் மூலம் திகாம்பரத்தை திட்டச் சொல்லும் விதமும் அதற்கு அவர் சக்திவேலுக்கு சொல்லிக் கொடுக்கும் காட்சிகள் மற்றும் காணொளி அடங்கிய வீடியோ ஒன்று எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. இந்த வீடியோவை பார்த்தால் ரங்காவின் கள்ள அரசியல…
-
- 2 replies
- 1.3k views
-
-
கூவுவதற்கான உரிமையை.. சட்டப் போராட்டத்தின் ஊடாக வெற்றி கொண்ட சேவல்! பாரம்பரியமாக இயற்கையுடன் ஒன்றித்து மனித சமூகத்திற்கு பயனுள்ள பறவையாக வாழும் சேவலுக்கு கூவுவதற்கும் சட்டரீதியாக உரிமையை பெற வேண்டிய சூழ்நிலை பிரான்சில் ஏற்பட்டுள்ளது. இந்த விடயம் அந்த நாட்டினரிடையே அபூர்வமான வழக்காக பார்க்கப்படுகிறது. எவ்வாறாயினும், மொரிஸ் என்கின்ற சர்ச்சைக்குரிய சேவலுக்கு காலையில் கூவுவதற்கான அனுமதியை பிரான்ஸ் நீதிமன்றம் ஒன்று வழங்கியுள்ளது. கிராமத்தில் வசிப்பவர்களுக்கும், நகரத்தில் வசிப்பவர்களுக்கும் இடையே ஏற்படும் மோதலின் அடையாளமாக நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கில், மொரிஸ் என்ற இந்த சேவல் தனது காலை வழக்கத்தை தொடரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சேவல் உரிமையாளரின்…
-
- 2 replies
- 530 views
-
-
கெற்பேலியில் இளைஞன் மீது தாக்குதல்; கசிப்பு அருந்த மறுத்ததால் சம்பவம்? யாழ்ப்பாணம் – தென்மராட்சி, கெற்பேலி மத்திப் பகுதியில் இன்று (13) மாலை இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் காயமடைந்து சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் சம்பவத்தில் ரவிச்சந்திரன் செந்துஜன் (20-வயது) என்பவரே காயமடைந்துள்ளார். கெற்பேலி மத்திப் பகுதியில் உள்ள மைதானத்திற்கு அருகாமையில் பாலாவியிலிருந்து வந்த இருவர் கசிப்பு அருந்தியதாகவும் அவ்வழியே சென்ற இளைஞரை கசிப்பு அருந்துவதற்காக அழைத்த போது அவர் மறுத்ததால் குறித்த இளைஞரை சரமாரியாக தாக்கியதாகவும், அதனால் அவர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்ப…
-
- 2 replies
- 668 views
-
-
மனைவியுடன் சிரித்து பேசிய சகலை கன்னத்தை கடித்துத் துப்பிய புது மாப்பிள்ளை! மதுரை: மதுரை அருகே, தனது மனைவியுடன் சிரித்துச் சிரித்துப் பேசிக் கொண்டிருந்த சகலை மீது ஆத்திரமடைந்து அவரது கன்னத்தைக் கடித்துத் துப்பினர் அந்தப் பெண்ணின் கணவர். மதுரை திருமங்கலம் அருகே உள்ளது சின்னசொர்ணகுளம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி. இவரது மனைவி முத்துலட்சுமி. சமீபத்தில் இவர்களுக்கு திருமணம் நடந்தது. இந்த நிலையில் ஆடி சீர் விருந்துக்காக மாமியார் வீட்டிற்கு மனைவியுடன் வந்தார் முத்துப்பாண்டி. அங்கு அவரது சகலை (மனைவியின் சகோதரி கணவர்) விருமாண்டியும் குடும்பத்தோடு வந்திருந்தார். அப்போது விருமாண்டி, முத்துலட்சுமியிடம் சிரித்துச் சிரித்துப் பேசியுள்ளார். இதை…
-
- 2 replies
- 3.1k views
-
-
ராஜஸ்தானில் ஒரு சிறுமிக்கு தனது முன்ஜென்மம் பற்றி நினைவு வந்துள்ளது அதிசயத்தை ஏற்படுத்தியுள்ளது. பூனம் என்ற அந்த சிறுமிக்கு தற்போது 14 வயதாகிறது. முற்பிறவியில் தான் யாருடைய மகளாக பிறந்தேன் என்றும் யாருடன் தனக்கு திருமணம் நடந்தது என்றும் தற்போது நினைவு கூர்கிறார் அந்த சிறுமி. அதுமட்டுமல்லாது தன்னுடைய மரணம் எப்போது எப்படி நிகழ்ந்தது என்று கூறி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார். முன்ஜென்மத்தில் தன்னுடன் வாழ்ந்தவர்களை தேடிச் சென்று சந்தித்து பேசினார் பூனம். இதைக்கேட்டு சிறுமியின் பெற்றோர்களும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மறுபிறவி பற்றிய கதைகள் பற்றி திரைப்படங்கள் எடுக்கப்பட்டாலும், மறுபிறவி என்பது உண்மைதான் என்று பல ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் நடைபெற்ற ஆய்வில் நிரூபிக்க…
-
- 2 replies
- 954 views
-
-
இங்கிலாந்து இளவரசர் கையில் 'தடம்' பதித்த பிரதமர் மோடி புதுடில்லி:இந்தியா வந்த இங்கிலாந்து இளவரசர் வில்லியம் கையைப் பிடித்து பிரதமர் குலுக்கிய குலுக்கலில், வில்லியம் கையில் தடமே பதிந்து விட்டது. இளவரசர் வில்லியமும் அவரது மனைவி கேத்தும் சென்ற வாரம் இந்தியா வந்திருந்தனர். ஏப்.12ம் தேதி புதுடில்லியில் உள்ள ஐதராபத் ஹவுசில் இளவரச தம்பதிக்கு மதிய விருந்து அளித்து கவுரவித்தார் பிரதமர் மோடி. சைவம் மற்றும் அசைவ உணவு வகைகள் தயாராக இருந்தன. விருந்தினர்களுக்கு இசை விருந்து அளித்துக்கொண்டு இருந்தார் பிரபல சந்துார் இசை மேதை ராகுல் சர்மா. ஐதராபாத் மாளிகைக்கு தம்பதியினர் வந்ததும், அவர்களை மோடி வரவேற்றார். வில்லியம் வலது கையை அழுந்த பிடித்து க…
-
- 2 replies
- 500 views
-
-
கற்கள் தானாக நகரும் அதிசயம் : மண்டையை பிய்த்துக்கொள்ளும் விஞ்ஞானிகள் அமெரிக்காவின் கலிபோனியா மாநிலத்தில் அமைந்திருக்கும் 'Death Valley National Park' என பெயரிடப்பட்டுள்ள தேசிய பூங்கா ஏறத்தாள 1000 வருடங்களுக்கு முன்னர் அமெரிக்காவை பிறப்பிடமாகக் கொண்ட சொஸோன் என்று அறியப்பட்ட 'டிம்பிஸா' எனப்படும் ஒரு பழங்குடியினர் வாழ்ந்த பிரதேசமாகும். டிம்பிஸா பழங்குடியினரினால் டும்பிஸா என பெயரிடப்பட்டிருந்த இப்பள்ளத்தாக்கிற்கு 'கலிபோர்னியா தங்க நெருக்கடி' காலப்பகுதியில் அதாவது 1849ஆம் ஆண்டளவில் 'Death Valley' எனும் ஆங்கிலப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதில் ஆச்சரியத்தக்க வகையில் என்னதான் இருக்கிறது? நம்ப மறுக்கும் அளவிற்கு என்னவென யோசிக்கத் தோன்றுகிறாதா? அவ்வாறு இந்த மரணப் பள்ளத்தாக்க…
-
- 2 replies
- 650 views
-
-
சிறார் பாலியல் துஷ்பிரயோகங்கள் தொடர்பான குற்றச்சாட்டில் வத்திக்கான் திருச்சபை தலைமை பீடத்தால் மதபோதகர் அந்தஸ்து பறிக்கப்பட்ட கத்தோலிக்க பாதிரியரின் எண்ணிக்கை விபரங்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் பாப்பரசர் பெனடிக்ட், 2011-ம், 2012-ம் ஆண்டுகளில் கிட்டத்தட்ட 400 பாதிரியரை மதபோதகர் பொறுப்புகளிலிருந்து நீக்கியுள்ளதாக புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. கடந்த ஆண்டுகளில் மதகுரு பொறுப்புகளிலிருந்து தடைசெய்யப்பட்ட பாதிரிமாரிலும் பார்க்க இந்த எண்ணிக்கை மிகப் பெரிய அதிகரிப்பு என்று கருதப்படுகிறது. ஜெனீவாவிலுள்ள ஐநா ஆணையத்தின் முன்பாக இந்த வாரத்தின் ஆரம்பத்தில் ஆஜரான வத்திக்கான் அதிகாரிகள் சமர்ப்பித்திருந்த ஆவணங்களிலேயே இந்த புள்ளிவிபரங்கள் தெரியவந்துள்ளன. பாலியல் துஷ்பிரயோக…
-
- 2 replies
- 384 views
-
-
மணமகளை மட்டும் வளைத்து வளைத்து போட்டோ எடுத்த புகைப்படக்காரரை தாக்கிய மணமகன் பிலாஸ்பூர் மணமேடையில் தன்னை மட்டுமே வளைத்து வளைத்து போட்டோ எடுத்த புகைப்படக்காரரை மணமகன் அடிப்பதை பார்த்து கீழே விழுந்து சிரிக்கும் மணமகளின் வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் அதற்கான உண்மை காரணம் தெரிய வந்துள்ளது. அண்மையில் வெளியான வீடியோ ஒன்றில் மணமகனும், மணமகளும் திருமணக்கோலத்தில் மணமேடையில் நின்றிருக்க அவர்களை போட்டோ எடுத்த புகைப்படக்காரர், மணமகளை மட்டும் வளைத்து வளைத்து போட்டோ எடுத்ததுடன், மணமகளின் கன்னத்தை பிடித்து போஸ் கொடுக்க கூறி உள்ளார். அப்பொழுது அருகிலிருந்த மணமகன் ஆத்திரம் அடைந்து அந்த புகைப்படக்காரரை அடித்தது மட்டுமின்றி மணமேடையில் இருந்தே வெளியேறுமாறு…
-
- 2 replies
- 531 views
-
-
விருந்தில் ரசம் இல்லாததால் ரசாபசம்: திருமணத்தை நிறுத்திய மணமகன்! பெங்களூர்: திருமண விருந்தில் ரசம் இல்லாததால் திருமணத்தையே நிறுத்தி உள்ளார் மணமகன் ஒருவர். கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டம் குனிக்கல் பகுதியைச் சேர்ந்த தம்பதி பிரகாசம்–சவுபாக்கியம்மா. இவர்களது மகள் சவுமியா. இவருக்கும், ஸ்ரீராமபுரம் திம்மையம்மா மகன் ராஜுவுக்கு குனிக்கல் கிராமத்தில் நேற்று திருமணம் நடத்த, இரு வீட்டாரும் முடிவு செய்திருந்தனர். இதற்காக, உற்றார், உறவினர் மற்றும் நண்பர்களுக்கு இரு வீட்டாரும் அழைப்பிதழ்கள் வினியோகம் செய்திருந்தனர். திருமண கனவுகளோடு மணப்பெண்ணும், மணகமனும் தங்களது குடும்பத்தினருடன் திருமண மண்டபத்தில் நேற்று முன் தினம் கூடி மகிழ்ச்சியில் ஆழ்ந்திருந்தனர். த…
-
- 2 replies
- 516 views
-
-
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் உயிர் கொல்லியான கொரோனா வைரஸ், சீனாவில் இளம்பெண் ஒருவரை காப்பாற்றியுள்ளது. பெயரை கேட்டாலே நடுங்க வைக்கும் அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா, இளம்பெண்ணை எப்படி காப்பாற்றியுள்ளது என்பதை பார்ப்போம். கொரோனாவின் மையமான வூகான் நகரில் இருந்து 3 மணி நேரம் பயண தூரத்தில் உள்ள நகரம் ஜிங்ஷான். இங்கு கடந்த வாரம் 25 வயது மதிக்கத்தக்க மர்ம மனிதன் ஒருவன் கொள்ளையடிக்கும் நோக்கத்தோடு, வீடு ஒன்றில் நுழைந்துள்ளான். அந்த வீட்டின் படுக்கையறையில் இளம்பெண் ஒருவர் தனியாக இருந்துள்ளார். இதனை கண்ட கொள்ளையன், அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்யும் நோக்கத்தோடு நெருங்கியுள்ளான். திடீரென தனது படுக்கை அறையில் மர்ம மனிதன் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடை…
-
- 2 replies
- 505 views
-
-
-
நபர் ஒருவர் ஐபோன் ஒன்றை வாங்கி விட்டு கதறி அழுத சம்பவம் ஒன்று சிங்கப்பூரில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, வியட்நாம் நாட்டை சேர்ந்த பாம் வான் தொய் என்பவர் சிங்கப்பூருக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு அவர் தன்னுடைய காதலிக்கு ஐபோன் 6 ஒன்றை வாங்க விரும்பி ஆப்பிள் காட்சிறைக்கு சென்றுள்ளார். அங்கு ஐபோன் 6 ஒன்றி விலை 950 டொலர்கள் என காட்சிப்படுத்தப்பட்டிருந்ததையடுத்து ஐபோன்6 ஒன்றினை வாங்கினார். ஆனால் அவருடைய ஐபோனுக்கு மேலதிக உத்தரவாக கட்டணத்தை சேர்த்து 1500 டொலர்கள் என அவருக்கு பற்றுச்சீட்டு கொடுக்கப்பட்டுள்ளது. அவர் குறித்த பற்றுச்சீட்டில் குறிப்பிடப்பட்டிருந்த தொகையை கவனிக்காமல் தன்னுடைய டெபிட் கார்டை கொடுத்து பணத்தை கட்டிவிட்டார். பின்னர் தொகையை பார்…
-
- 2 replies
- 1.4k views
-
-
ஜார்கண்ட் மாநிலத்தில் ஒரு சிறுவன் 6 வருடங்களாய் நாய் பால் குடித்து வருவதை பழக்கமாக வைத்திருக்கிறான் என்ற செய்தி வெளியாகியிருக்கிறது. ஜார்கண்ட் மாநிலம் தனபாத் எனும் ஊரில் வசிப்பர் சுபேந்தர் சிங். இவர் சாலையோரம் பழ ஜூஸ் கடை நடத்தி வருகிறார். இவருக்கு தற்போது 10 வயதில் மொகித்குமார் என்ற மகன் இருக்கிறான். அந்த சிறுவன் தனது 4 வயது முதல் நாய் பால் குடிக்கும் பழக்கத்தை பின்பற்றி வருகிறான். மொகித் சிறு வயதில் விளையாடிக் கொண்டிருந்த போது, அங்கு இருந்த நாயின் அருகில் சென்று அதனிடம் பால் குடித்துள்ளான். அந்த நாயும் அதற்கு ஒத்துழைத்து பால் கொடுத்துள்ளது. நாளடைவில் மொகித் குமாருக்கு அதுவே பழக்கமாகிவிட்டது. ஒ…
-
- 2 replies
- 622 views
-
-
இங்கிலாந்து நாட்டில் பாலியல் பலாத்கார வழக்கில் 101 வயது முதியவருக்கு 13 ஆண்டு ஜெயில் இங்கிலாந்து நாட்டில் பாலியல் பலாத்கார வழக்கில் 101 வயது முதியவருக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. லண்டன்: இங்கிலாந்து நாட்டில் பாலியல் பலாத்கார வழக்கில் 101 வயது முதியவருக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனை பெற்றவரின் பெயர் ரால்ப் கிளார்க். இவர் முன்பு லாரி டிரைவராக இருந்த போது 1970-ம் ஆண்டு வாக்கில் சகோதரிகளான 4 வயது மற்றும் 13 வயது சிறுமிகள் இருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அவர்களுடைய சகோதரனை தாக்கியதாகவும் கூறப்பட…
-
- 2 replies
- 377 views
-
-
10 JUL, 2023 | 10:42 AM யாழ். மட்டுவில் பிரதேசத்தைச் சேர்ந்த 59 வயதான செ.திருச்செல்வம் 7 நிமிடங்கள் 48 செக்கன்களில் 1550 கிலோ கிராம் எடை கொண்ட ஊர்தியை 400 மீற்றர் தூரம் தனது தாடியால் இழுத்து உலக சாதனை படைத்துள்ளார். சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் ஏற்பாட்டில் ஞாயிற்றுக்கிழமை (09) பிற்பகல் யாழ். மட்டுவில் ஐங்கரன் சன சமூக நிலைய முன்றலில் இந்த சாதனை நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக தொழிலதிபர் அ.கிருபாகரன் கலந்துகொண்டார். மேலும், சிறப்பு அதிதிகளாக சமூக சேவகர் கலாநிதி அகிலன் முத்துக்குமாரசாமி, ஈ.சிற்றி ஆங்கில கல்லூரியைச் சேர்ந்த றஜீபன் ஆகியோரும் அதிதிகளாக பன்னாட்டு எம்.ஜி.ஆர் பேரவைத் தலைவர் ம.விஜயகாந்…
-
- 2 replies
- 753 views
- 1 follower
-
-
நான் ஒருமுறை வெளிநாடு ஒன்றுக்கு சென்றிருந்தேன். அந்த நாட்டு விமான நிலையத்தில் இறங்கியதும் நாம் எந்த நாட்டில் இருந்து வருகிறோமோ, அந்த நாட்டு மொழியில் நமக்கு வணக்கம் சொல்வார்கள். நான் இந்தியா என்றதால், என்னிடம் இந்தி மொழியில் வணக்கம் சொல்லி என்னை வரவேற்றார்கள், நான் அதுக்கு பதில் சொல்லவில்லை. அதனால் அந்த நாட்டை சேர்ந்த ஒருவர் என்னிடம் கேட்டார், ஏன் நான் வணக்கம் சொன்னதுக்கு நீங்கள் பதில் சொல்லவில்லை? என்று கேட்டார். நான் சொன்னேன் எல்லா மொழியிலும் வணக்கம் சொல்கின்றீர்கள் என் மொழியில் நீங்கள் வணக்கம் சொல்லவில்லையே, அதுதான் பதில் சொல்லவில்லை என்று, அவர்கள் கேட்டார்கள் நீங்கள் இந்தியன் தானே, ஆம் நான் இந்தியன், ஆனால் என் தாய் மொழி #தமிழ் என்று சொன்னேன். அப்போது அவன் சொ…
-
- 2 replies
- 593 views
- 1 follower
-
-
http://youtu.be/AKpH53IFBTg நீங்கள் உங்கள் வாழ்க்கையில் எதுக்கெல்லாமோ போராடியிருப்பீர்கள்.. ஆனால் ஒரு வெற்றுப்பானைக்காக போராடிய அனுபவம் உண்டா? இல்லையாயின் இந்த காணொளியை பாருங்கள் ஒரு வெற்றுப்பானைக்காக ஒரு கூட்டமே நின்று போராடுகிறது. அதுவும் நாயின் தலைக்குள் அகப்பட்ட ஒரு வெற்றுப்பானையை மீட்பதற்காகவே இந்த போராட்டம். பாவம் அந்த அப்பாவி நாய் அதை அப்படியே விட்டு விட்டால் அதுக்கும் கடினம். ஆகையால் அதை காப்பாற்றியே ஆகவேண்டும்.. ஆனால் இவர்கள் நாயை போட்டு படுத்தும் பாட்டை பார்க்கும் போது என்னமோ நாயை காப்பாற்ற முயன்றது போலவே தெரியவில்லை.. குடம் அதாவது பானை பறிபோய்விடும் என்பதற்காக போட்ட போராட்டமாகத்தால் தெரிகிறது. எது எப்படியோ நாயும் பிழைத்தது பானையும் பத்திரமாக கிடைத்தது…. காணொ…
-
- 2 replies
- 788 views
-
-
5118748fdf258f71758ac060c8c48568
-
- 2 replies
- 478 views
-
-
நெல்லை மாவட்டம், கடையம் அருகே வனப்பகுதியில் 15 அடி நீளத்திற்கும் அதிகமான ராஜநாகம் பிடிபட்டுள்ளது. மிகுந்த நச்சுத்தன்மை உடைய இந்த பாம்பை வனத்துறையினர் உயிரைப்பணயம் வைத்து பிடித்தனர். வனச்சரகர் இளங்கோ ஆலோசனைபடி வேட்டைத் தடுப்பு காவலர் ஸ்னேக்பாபு என்ற ரமேஸ்பாபு மற்றும் வனத்துறையினர் பிடித்தனர். வயது, வளர்ச்சி, எடை, நீளம் போன்ற விவரம் அளவிட்ட பின்னர் மீண்டும் இந்த பாம்பு வனத்தில் விடப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=150894
-
- 2 replies
- 2.1k views
-
-
யேர்மனிய வீதிகளில் E-Scooter பாவனைக்கு, 2019 யூன் மாதத்தில், அரசு அனுமதி வழங்கியதில் இருந்து போக்குவரத்துக்களில் நாளொன்றுக்கு ஒரு பிரச்சனை வந்து கொண்டுதான் இருக்கிறது. கடந்த வியாழக்கிழமை அதிகாலை 2மணியளவில் கேர்ள்ன் நகரைச் சேர்ந்த ஒருவர் A4 அதிவேக நெடுஞ்சாலையில் ஒரு கையில் பியர் போத்தலுடன் E-Scooter இல் Olpe நகரத்தை நோக்கிப் பயணித்திருக்கிறார். இதை அவதானித்த பல வாகன ஓட்டுனர்கள் நெடுஞ்சாலைப் பொலீஸாருக்குத் தகவலைத் தந்திருக்கிறார்கள். பொலீஸர் E-Scooter பயணியை நிறுத்தி விசாரித்ததில் தான் பாதை மாறி நெடுஞ்சாலைக்குள் புகுந்து விட்டதாக அவர் தெரிவித்திருக்கிறார். ஆனால் அவரது கையில் இருந்த பியர் போத்தலை அவரால் மறைக்க முடியவில்லை. பொலீஸார் மேற்கொண்ட சோதனையில் இரத்தத்த…
-
- 2 replies
- 574 views
-
-
பேட்டி எடுத்த பெண் நிருபரிடம் பேட் பற்றி படு ஆபாச கமெண்ட்.. மீண்டும் சர்ச்சையில் கிறிஸ் கெயில் பெங்களூர்: பேட்டி எடுத்த பெண் நிருபரிடம் ஆபாசமான முறையில் பேசியதாக மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் வீரரும், ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக ஆடுபவருமான கிறிஸ் கெயில் மீது சர்ச்சை எழுந்துள்ளது. ஆஸ்திரேலியாவில் சமீபத்தில் நடைபெற்ற உள்நாட்டு டி20 கிரிக்கெட் தொடரான 'பிக் பாஷ்-ல்' ஆடிய கிறிஸ் கெயில் டிவி வர்ணனையாளரான பெண்ணிடம் மோசமான முறையில் பேசினார். இதற்காக கெயிலுக்கு 10 ஆயிரம் ஆஸ்திரேலிய டாலர் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், ஆஸ்திரேலியாவில் தனது அறையில் தங்கியிருந்தபோது, சாப்பாடு கொண்டு வந்த பணிப்பெண்ணிடம், இடுப்பில் …
-
- 2 replies
- 596 views
-
-
வெளிநாட்டில் நடந்த மனதை உருக்கும் சம்பவம்! 5நிமிடம் ஒதுக்கி படிக்கவும்... வீட்டு வேலைக்காரிக்கு (கத்தாமா) பாமிலி ஸ்டேட்டஸ். இங்கு ஒரு அரபிக்கு திருமணம் முடிந்து 20 வருடங்கள் கழித்து ஒரு ஆண் குழந்தை பிறந்தது. பல கம்பனிகளுக்கு சொந்தக்காரர். அனைத்து சொத்துக்கும் வாரிசு இல்லாமல் போய்விடுமோ என்ற கவலையில் இருந்த அந்த குடும்பத்திற்கு பொக்கிசமாக வந்த குழந்தை. இந்த வீட்டில் ஒரு ஸ்ரீலங்கா வை சேர்ந்த ஒரு பெண்மணி வேலைக்காரியாக பணிபுரிந்து வருகிறார். இந்த அம்மணிக்கு 3 குழந்தைகள். சிறு வியாபாரம் செய்து குழந்தைகளையும் கவனித்து வருகிறார் அவரின் கணவர். இந்த வேலைக்காரி அம்மணி தான் இந்த குழந்தைக்கு எல்லாேம. தாய்பாலை தவிர அனைத்து தேவைகளையும் பூர்த…
-
- 2 replies
- 661 views
-
-
நாய்க் கறித் திருவிழாவுக்கு சீன அரசு தடை விதிக்க வேண்டும்: - அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம்! [Saturday 2016-05-28 09:00] சீனாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் நாய்க் கறித் திருவிழாவுக்குத் தடை விதிக்கும்படி அந்த நாட்டு அரசை வலியுறுத்தி அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.சீனாவின் குவாங்ஸி மாகாணம், யூலின் நகரில் கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் வருடாந்திர நாய்க் கறித் திருவிழா கொண்டாடப்படுகிறது.தொடர்ந்து 10 நாள்களுக்குக் கொண்டாடப்படும் இந்தத் திருவிழாவில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கூண்டுகளில் அடைத்துக் கொண்டு வரப்படும் நாய்கள் குரூரமான முறையில் கொல்லப்பட்டு, அவற்றின் மாமிசமும், அந்த மாமிசத்தில் தயாரிக்கப்பட்ட உணவ…
-
- 2 replies
- 431 views
-
-
எனது மந்திரத்தின் மூலம் செய்யும் தியாகத்தால் நல்வாழ்வு கிட்டி மிகக் கூடிய விரைவில் செல்வந்தராகி நீடித்த ஆயுளுடன் வாழ முடியும்", எனக் கூறி ஏமாற்றி தன்னுடன் அமைதி தியானத்தில் இருந்த 7 பெண்கள் மீது பாலியல் வல்லுறவை மேற்கொண்ட மந்திரவாதி ஒருவரை பிரதேச மக்களுடன் பொலிஸாரும் இணைந்து மடக்கிப் பிடித்துள்ளனர். இச் சம்பவம் அம்பாறை இங்கினியா கல பொலிஸ் பிரிவிலுள்ள மொரகஹபல்லம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. தென் மாகாணத்தின் வலஸ்முல்லையைச் சேர்ந்த 40 வயது நிறைந்த மந் திரவாதி ஒருவர் மொரகஹபல்லம் பகுதியில் உறவினர் வீடொன்றுக்கு வருகை தந்துள்ளார். இப்பிரதேச மக்களுக்கு நோய்நொடிகள் நீங்கி வாழவும் மிகக்கூ டிய விரைவில் சமூகத்தில் செல்வந்தராகவும் முடியுமென, தனது மந்திரச் செயற் பாட்டை வ…
-
- 2 replies
- 969 views
-