Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. இந்தியாவின் மகாராஜாக்கள் அல்லது சுதேச ராஜ்ஜியங்களின் ஆட்சியாளர்கள் பொதுவாக யானைகள், நடனமாடும் பெண்கள் மற்றும் பெரிய அரண்மனைகள் இவற்றுடன் இணைத்தே பார்க்கப்படுகிறார்கள். வரலாற்றாசிரியர் மனு பிள்ளை அவர்களின் பாரம்பரியத்தை ஆராய்கிறார். ஏராளமான நகைகளைப் பூட்டிக்கொண்டு, பெரிய அரண்மனைகளிலும் அலங்கரிக்கப்பட்ட நீதிமன்றங்களிலும் ஆட்சி செய்ததைத் தாண்டிப் பார்த்தால், அவர்கள், சிற்றின்பத்துக்கு அடிமைகளாக, கேலிப்பொருளாக, உல்லாசமாக வாழ்ந்ததாகவே அவர்கள் சித்தரிக்கப்பட்டார்கள். ஆங்கிலேயர்கள் தங்கள் காலத்தில், உள் நாட்டு இளவரசர்களைக் கோழைகளாகவும் அரசாட்சியில் கவனமின்றி சிற்றின்பத்துக்கு அடிமையானவர்களாக இருந்ததாகவே சித்தரித்திருந்தார்கள். உதாரணமாக, ஒரு வெள்ளை அ…

  2. கையடக்கத் தொலைபேசியின் உதவியுடன் உயர்தரப் பரீட்சை எழுதிய பாடசாலை அதிபரின் மகன் – மன்னாரில் சம்பவம்! மன்னார் – மடு கல்வி வலயத்திற்கு உட்பட்ட அடம்பன் மத்திய மகா வித்தியாலயத்தில் உயர்தரப் பரீட்சையின்போது மாணவனொருவன் தொலைபேசியை கொண்டுசென்று பிரிதொரு ஆசிரியரின் உதவியுடன் பரீட்சை எழுதிய சம்பவமொன்று பதிவாகியுள்ளது. அடம்பன் மத்திய மகா வித்தியாலய பாடசாலை அதிபரின் மகன் குறித்த பாடசாலையிலேயே உயர் தரப் பரீட்சைக்குத் தோற்றி வருகின்றார். இந்த நிலையில் கணித பாட பரீட்சையின்போது அதிபரின் மகன் பரீட்சை மண்டபத்திற்குள் மறைமுகமாக கையடக்கத் தொலைபேசியொன்றை கொண்டுசென்றுள்ளார். மேலும் கையடக்கத் தொலைபேசியின் வட்ஸ்அப் மூலம் வந்ததாக கூறப்படும் வினாக்களுக்கான விடையை தொலைபேசியை பார்…

    • 1 reply
    • 335 views
  3. ஜனாதிபதி கோட்டாபயவின்... ஜோதிடரான, ஞானக்காவின்... ஜோதிட நிலையத்தினை, முற்றுகையிட முயற்சி – விசேட பொலிஸ் பாதுகாப்பு! அநுராதபுரத்திலுள்ள பிரபல ஜோதிடர் ‘ஞானக்கா’வின் இல்லத்திற்கு அருகில் இன்று(சனிக்கிழமை) பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டிருந்ததாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர அனுராதபுரத்திலுள்ள ஞான அக்காவின் சோதிட நிலையத்திற்கு ஆதரவாளர்கள் குழுவுடன் சென்றுள்ளார். இதன்போது குறித்த குழுவினரை பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர். ஞானா அக்காவுக்கு எதன் அடிப்படையில் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது, அவர் அரசியல்வாதியா என சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவரிடம் ஹிருணிகா இதன்போது கேள்வி எழுப்பியி…

  4. சொந்தமாக தீவொன்றை வாங்கிய Facebook உரிமையாளர் மார்க் http://gossip.sooriyanfm.lk/251/2014/10/mark-zuckerburg-buys-island மிக பிரபலமாக, மக்கள் மத்தியில் இடம்பிடித்துள்ள பேஸ்புக் சமூகவலைத்தின் நிறுவுனரான மார்க்ஸ் சுக்கர்பேர்க் ஹவாய் தீவிலுள்ள அழகான ஒரு கடற்கரை நிலப்பரப்பினை விலைக்கு வாங்கியுள்ளார் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 100 மில்லியன் டொலர் கொடுத்து 'கவுவாய்' எனும் ஹவாய் தீவின் 700 ஏக்கர் நிலப்பரப்போடு சேர்ந்த தீவையே இவர் வாங்கியுள்ளார். வெள்ளை மணல் கொண்ட ஒரு பகுதியும், விளைச்சல் செய்யக்கூடிய ஒரு வகையான வளம் மிக்க மண்ணும் இந்த தீவில் உள்ளதாக குறிப்பிடப்படுகிறது. விடுமுறையை களிக்க தன் மனைவியுடன் ஏற்கனவே இந்த தீவிற்கு வந்துள்ள மார்க், இந்த தீவை…

  5. சிறிலங்கா அரச தரப்புடன் சுமார் ஒரு வருட காலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடாத்திவந்த மூடுமந்திரப் பேச்சுவார்த்தையின் இலக்கு தற்போது புரிய ஆரம்பித்துள்ளது. தரவே மாட்டேன் என்ற அடம்பிடித்தலுடன் மகிந்த ராஜதானிகளது இறுக்கத்தைக் கலைத்து, அவற்றைப் பெற்றுவிட்டோம் என்ற இறுமாப்புடன் தமிழீழத்திற்கு மாற்றீடாக மாகாணசபையை ஏற்றுக்கொள்ளும் திட்டத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நகர்வதாகவே புலப்படுகின்றது. அதாவது, கடந்த மூப்பது வருடங்களுக்கும் மேலாகத் தமிழ் மக்களால் முற்றாக நிராகரிக்கப்பட்ட பரிபூரண சிங்கள மேலாதிக்கம் கொண்ட மாகாணசபையினை ஏற்றுக்கொள்வதனூடாக தமிழீழ மக்களது தமிழீழ இலட்சியத்தையும், அதற்கான விடுதலைப் புலிகளது அர்ப்பணிப்புக்களையும், உயிர்த் தியாகங்களையும் அதனுள் புதைத்துவ…

  6. பணம் தேவையானவர்கள் என்னிடம் கேட்டுப் பெற்று கொள்ளுக - ரஞ்சன் எம்.பி. ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் சிங்களத் திரைப்பட நடிகருமான ரஞ்சன் ராமநாயக்க தன்னிடமுள்ள 40 இலட்சம் ரூபாய் பணத்தைப் பொருளாதார ரீதியில் நலிவுற்ற மக்களுக்கு வழங்கவுள்ளார் என்று தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற அமர்வுகளுக்காகத் தனக்குக் கிடைத்த 40 இலட்சம் ரூபா பணத்தையே அவர் இவ்வாறாக மக்களுக்கு வழங்குகின்றார் என்று கூறியுள்ளார். இது தொடர்பாக அவரது யூடியூப் பக்கத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ள ரஞ்சன், மேசை ஒன்றின் மீது 5000 ரூபா பணத்தாள்களைப் பரப்பி வைத்து, பணம் தேவையானவர்களைத் தனது செயலாளரைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். கடந்த நான்கு வருடங…

  7. ஈரத் துணியில் சுருட்டி...வேலூரில் மாவட்டத்தில் பெண் சிசு கொலை கொடூரம்!! ஆகஸ்ட் 04, 2007 வேலூர்: வேலூர் மாவட்டத்தில் வறுமை காரணமாக பிறந்த பெண் சிசுக்களை பெற்றோர்களே கொன்று புதைத்து வரும் அவலம் அரங்கேறியுள்ளது. தமிழகத்தைத் தாண்டி யாருக்கும் தெரியாமல் இருந்த மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கிராமம் சில ஆண்டுகளுக்கு உலகப் புகழ் பெற்ற கிராமமாக மாறியது. ஏதோ நல்லது செய்தோ அல்லது சாதனை செய்தோ அந்த ஊருக்கு பெருமை கிடைத்து விடவில்லை. பிறந்த சிசுக்களைக் கொன்று குவிக்கும் கொலைகார குக்கிராமமாக உசிலம்பட்டிக்குப் பெயர் கிடைத்தது. பெண் குழந்தை பிறந்தால் உடனே கள்ளிப் பால் கொடுத்தும், நெற்கதிர்களை தொண்டைக்குழியில் போட்டும் கொன்று புதைக்கும் கொடூரம், காலம் …

  8. பத்மநாபசுவாமி கோயில் ரகசிய அறைகளில் இதுவரை 700 கிலோ எடை கொண்ட 19.50 லட்சம் தங்க நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஒரு தங்க சங்கிலியில் மட்டுமே 997 வைரக்கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசுவாமி கோயிலில் 6 ரகசிய அறைகள் உள்ளன. ஏ முதல் எப் வரை பெயரிடப்பட்டுள்ள இந்த அறைகளில் பல லட்சம் கோடி மதிப்புள்ள பொக்கிஷங்கள் உள்ளன. பி அறையை தவிர மற்ற 5 அறைகளும் திறக்கப்பட்டு அவற்றில் உள்ள பொக்கிஷங்களை உச்ச நீதிமன்றம் நியமித்த 6 பேர் அடங்கிய குழு மதிப்பீடு செய்து வருகிறது. இதன் விவரம் பற்றி 4 மாதங்களுக்கு ஒருமுறை அறிக்கை தாக்கல் செய்யும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. அதன்படி, இதுவரை செய்யப்பட்ட மதிப்பீட்டின் விவர அறிக்கையை உச்ச நீதிமன்றத்தி…

  9. நித்தியானந்தாவின் கைலாசா போல உங்களுக்கும் சொந்த நாடு வேண்டுமா? – இப்படி செய்தால் கிடைக்கும் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,KAILASA'S SPH JGM NITHYANANDA PARAMASHIVAM/FB இந்தியாவை விட்டு வெளியேறிய நித்தியானந்தா தான் ஒரு தேசத்தை உருவாக்கியதாக அறிவித்தார். அதற்கு கைலாசா என்றும் பெயர் சூட்டப்பட்டது. அதைப் போலவே நீங்களும் சொந்த நாட்டை உருவாக்கலாம். எப்படி என்பதை இங்கு பார்ப்பொம். இந்த கைலாசாவின் பிரதிநிதியாக சமீபத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டங்களில் பெண் ஒருவர் பங்கேற்றது சர்ச்சையை ஏற்படுத்தியது. …

  10. திடீர் உடல்நலக் குறைவு காரணமாக நடிகர் ரஜினிகாந்த், இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் 'ராணா'படத்தின் படப்பிடிப்பு ஏவிஎம் ஸ்டுடியோவில் இன்று தொடங்கியது. நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டு சில காட்சிகளில் நடித்தார்.தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் உடனடியாக மயிலாப்பூரில் உள்ள இசபெல்லா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.எனினும் கவலைப்படும்படி எதுவும் இல்லை என்றும், மருத்துவமனையில் இருந்து அவர் நாளை வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவி…

    • 1 reply
    • 572 views
  11. [Wednesday, 2011-09-07 11:01:22] திருமண மண்டபத்தில் மணப்பெண்ணுக்குத் தாலி கட்டிய பின்னர் மணமகனையும் பெண்ணின் தந்தையையும் தாக்கி விட்டு மணப் பெண்ணைக் கடத்திச் செல்ல முற்பட்ட இளைஞர் மண்டபத்தில் கூடியிருந்த மக்களால் பிடிக்கப்பட்டார். சினிமாப் பாணியில் கடந்த 31 ஆம் திகதி சாவகச்சேரி பகுதியில் உள்ள பிரபல திருமண மண்டபம் ஒன்றில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: மண்டபத்தில் கூடியிருந்த மக்கள் இளைஞரை விசாரித்த போது மச்சாள் முறையான மணப்பெண்ணை சிறுவயது முதல் விரும்புவதாகவும் தான் விரும்புவது மணப்பெண்ணுக்குத் தெரியாது எனவும், திருமண நிகழ்வில் குழப்பத்தை ஏற்படுத்தி சினிமாப் பாணியில் அழைத்துச் செல்ல முயற்சி…

  12. உலகப்புகழ்பெற்ற மலையேற்ற வீரர் பிரிட் காப்ரைட் மலையிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தார். அமெரிக்காவை சேர்ந்த பிரபல மலையேற்ற வீரரான பிரிட் காப்ரைட் என்பவர் எந்த வித பாதுகாப்பு உபகரணமும் இல்லாமல் மலையேறுவதில் வல்லவர். இதனால் இவர் உலகப்புகழ் பெற்றவராக திகழ்ந்து வந்தார். இந்நிலையில் பிரிட் காப்ரைட்டும் அவரது நண்பரும் சக மலையேற்ற வீரருமான அய்டன் ஜேக்கப்சன் ஆகிய இருவரும் மெக்சிகோ நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள ‘எல் பொட்ரெரோ சிக்கோ’ மலையில் ஏறினர். அப்போது பிரிட் காப்ரைட் மலையின் உச்சியை அடைந்த நிலையில் சற்றும் எதிர்பாராத வகையில் ஆயிரம் அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்தார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். https://www.polimernews.com/dnews/90823/புகழ்பெற்ற…

  13. பிரித்தானியாவின் கொடிய வல்லுறவுக் குற்றவாளிக்கு ஆயுள்தண்டனை 136 வல்லுறவுகள் உட்பட 159 பாலியல் குற்றங்களுக்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்தோனேசியாவைச் சேர்ந்த ரெய்னார்ட் சீனகா என்பவர் இங்கிலாந்தின் மிக மோசமான வல்லுறவுக் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ளார். 36 வயதான சீனாகா 48 ஆண்களுக்கு எதிராக பாலியல் பலாத்காரம் மற்றும் பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபட்டதாக நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில் இன்னும் பலர் பாதிக்கப்பட்டிருக்கலாமென பொலிஸார் நம்புகின்றனர். மன்செஸ்ரரில் உள்ள இரவு நேர விடுதிகளிலிருந்து ஆண்களை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்ற சீனாகா அவர்களுக்கு போதைப்பொருள் வழங்கி அதன் பின்னர் அவர்கள் மீது பாலியல் தாக்குதல் நடத்தியதாகவும் இந்த தாக்குதல்களை பதிவு செய்த…

  14. பிரேசில் நாட்டில் 3 பெண்களைக் கொன்று அவர்களை சமைத்து சாப்பிட்ட நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பிரேசில் நாட்டின் குவாரன்ஹன்ஸ் பகுதியைச் சேர்ந்த ஜோர்ஜ் பெல்ட்ராவ் நீகுரோமாண்ட் (வயது 54), இசபெல் (வயது 54) தம்பதிகளுக்கு கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக குழந்தை இல்லை. இந்நிலையில், ஜோர்ஜ் மற்றொரு பெண்ணை 2 ஆவது மணம் முடிப்பதற்கு அவரது மனைவி இசபெல் உதவி செய்துள்ளார். இதனையடுத்து, இளம் மனைவி (வயது 28) புரூனா மற்றும் முதல் மனைவி இசபெல் ஆகியோருடன் ஜோர்ஜ் ஒன்றாக வசித்து வந்துள்ளார். எனினும், புரூனா வழியாகவும் ஜோர்ஜூக்கு குழந்தை பிறக்கவில்லை. இந்நிலையில், வீட்டிற்கு முன் உள்ள சாலை வழியே செல்லும் இளம்பெண்களை அவர்கள் தங்களது பேச்சால் ஈர்த்து தங்களது வீட்டிற்கு அழைத்து வந்து பழகியுள்…

  15. இந்த விமானிக்கு மற்றவர்களை விட தன்னம்பிக்கை கொஞ்சம் அதிகம் தான். 80 வயதான அந்த விமான ஓட்டி தவறான இடமொன்றில் விமானத்தை நிறுத்தியுள்ளார். அது வேறு எங்கும் அல்ல 40 அடி உயரமான மரத்தில். உடனடியாக அவசர உதவிப் பொலிஸார் சம்பவ இடத்துக்கு ஓடோடி வந்துள்ளார்கள்.. இந்தச் சம்பவம் போலந்து நாட்டில் உள்ள Wielmoza என்ற இடத்தில் இடம்பெற்றுள்ளது. நேற்றைய தினம் தற்செயலாக நிகழ்ந்த இச்சம்பவத்தில் விமானிக்கு விமானத்துக்கோ பெரிதாக எந்தச் சேதமும் ஏற்படவில்லை. http://thamilfm.com/...l.aspx?ID=10177 It is remarkable that he survived unscathed and equally that this kind of thing hasn't happened before to 80-year-old Cezary Muchnik given that h…

  16. கேர்ள் பிரண்டை கொன்று 'தின்ற' நபர்! வெள்ளிக்கிழமை, நவம்பர் 9, 2007 அலிகேன்ட் (ஸ்பெயின்): பிரிட்டனைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது பெண் தோழியைக் கொலை செய்து அவரது உடல் உறுப்புகளை தின்றதாக பரபரப்பான வாக்குமூலம் தந்துள்ளார். பால் டியூரன்ட் என்ற அந்த நபரின் கேர்ள் பிரண்டான கேரன் டியூரெல் கடந்த 2004ம் ஆண்டு ஸ்ெபயினில் காணாமல் போனார். இது தொடர்பாக டியூரன்டின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தியபோது ரத்தக் கறையுடன் கூடிய கத்திகள் கிடைத்தன. இதையடுத்து டியூரன்ட் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்தியபோது கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். இதையடுத்து ேகரனின் உடல் சிதைந்து போன நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து சிறையில் அடைக்கப்பட்டார்…

    • 1 reply
    • 1.1k views
  17. ஜெர்மனியில் பெற்றோருக்குத் தெரியாமல் காரை எடுத்துக்கொண்டு ஓர் எட்டு வயது சிறுவன் மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகத்தில் பயணித்த சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது என்று அந்நாட்டு காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டோர்முன்ட் எனும் நகரை நோக்கிச் செல்லும் நெடுஞ்சாலையின் ஓரத்தில் அந்தச் சிறுவன் காரை நிறுத்தி வைத்திருந்தபோது உள்ளூர் நேரப்படி, இன்று, புதன்கிழமை, அதிகாலை மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல் அதிகாரிகளைப் பார்த்ததும் அந்தச் சிறுவன் கண்ணீர் விட்டு அழுதுள்ளான். காரை ஓட்டும்போது காரின் அபாய எச்சரிக்கை விளக்குகளை எரியவிட்டதுடன், காரின் பின்புறம் ஒரு சிறிய எச்சரிக்கை முக்கோணம் ஒன்றையும் அச்சிறுவன் மாட்டியுள்ளான். காவல் துறையினரிடம் தா…

  18. ஆர்.ராம் பத்தாவது பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு வியாழக்கிழமை (21) நடைபெற்றிருந்த நிலையில் இதன்போது, முதலில் சபாநாயகர், பிரதி சபாநாயகர், குழுக்களின் பிரதித் தலைவர் தெரிவுகள் இடம்பெற்றிருந்தன. இதனையடுத்து, புதிதாக தெரிவு செய்யப்பட்ட சபாநாயகர் அஷோக்க ரன்வெலவுக்கு எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தார். அவரைத்தொடர்ந்து மு.கா.தலைவர் ரவூப் ஹக்கீம் வாழ்த்துக்களைத் தெரிவு செய்திருந்தார். அவர்களைத்தொடர்ந்து சிவஞானம் சிறிதரன், நாமல் ராஜபக்ஷ உள்ளிட்டவர்கள் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதற்காக தமது ஆசனங்களில் இருந்து எழுந்தபோதும், நேரமின்மை காரணமாக வாழ்த்துரைகள் மட்டப்படுத்தப்பட்டன. இதனை அவதானித்த சபை முதல்வர் அ…

  19. நாய்க்கும் தெரிந்திருக்கின்றது அவசர உதவியை எங்கே பெற்றுக் கொள்ளலாம் என்று அதற்குத் தெரிந்திருக்கிறது. துருக்கி நாட்டின் தலைநகரமான இஸ்ரான்புல்லில் ஒரு தெருநாய், இறக்கும் தறுவாயில் இருந்த தனது குட்டியை சிகிச்சைக்காக கால்நடை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றிருக்கிறது. தெருநாய்களை அழிக்க வேண்டும் என்று நாங்கள் பேசிக் கொண்டிருக்கும் போது தனது குட்டியை காப்பாற்ற ஒரு தெரு நாய் முயன்றதைப் பார்க்கையில் மனது சிரமப்படுகிறது. அந்த நாய் ஈன்ற குட்டிகளில், இரண்டு குட்டிகளைத் தவிர மற்றையவை இறந்து விட்டன. அதில் ஒன்றைத்தான் இப்பொழுது அந்தத் தாய் நாய் தனது வாயில் கவ்வியபடி கால்நடை மருத்துவமனைக்கு வந்திருக்கிறது. “தாய் நாய் தனது குட்டியை கொண்டு வந்து எங்கள் கதவின் மு…

  20. ஆர்ஜெண்டினாவில் உள்ள பரானா என்ற ஆற்றில் மாமிசம் உண்ணும் மீனினமான பிரானா மீன் கடித்து 60 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இச் சம்பவத்தில் 20 க்கும் மேற்பட்ட சிறுவர்கள் காயமடைந்துள்ளனர். 7 வயதுடைய சிறுமி தனது கை விரலின் ஒரு பகுதியை இழந்ததோடு ஏனையோர் தமது கணுக்கால், விரல்கள் மற்றும் கைகளில் ஆழமான வெட்டு காயங்களுக்குள்ளாகியுள்ளனர். இதுகுறித்து அந்நாட்டு கடல்சார் பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளர் பெட்ரிகோ கார்னியர் கருத்து தெரிவிக்கையில், இங்கு நிலவிய 100 டிகிரி வெப்பத்திலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள ஆயிரக்கணக்கான மக்கள் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென கூர்மையான பற்களை உடைய பிரானா வகை மீன் கடித்ததில் அவர்களின் கை மற்றும் கால்களில் காயங்கள் ஏ…

  21. மனிதனிடம் இருக்கவேண்டியவை இன்று விலங்குகளிடம்..... 6279d1d67577a6ce486f53a5272da291

  22. பட மூலாதாரம்,SCOTT KNUDSON படக்குறிப்பு, தலையில் இடி தாக்கிய போதிலும் அதில் உயிர் பிழைத்து, மிகவும் கடினமான பாதையில் வாழ்க்கையை நடத்தி வந்ததாக ஸ்காட் கூறுகிறார். 6 செப்டெம்பர் 2023, 14:09 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இடி தாக்கும் ஆபத்து பத்து லட்சம் பேரில் ஒருவருக்கே உள்ளது என நிபுணர்கள் கூறுகின்றனர். சரி, 2005 ஆம் ஆண்டு அமெரிக்காவின் டெக்சாஸில் ஸ்காட் நுட்சென் என்ற மாடு மேய்ப்பவருக்கு அதுதான் நடந்தது. இதுபோன்ற எல்லா சம்பவங்களையும் விட இந்த சம்பவத்தில் மிகவும் சாத்தியமில்லாத, அதிசயமான விஷயம் எதுவென்றால், தலையில் இடி விழுந்த கதையைச் சொல்ல அவர் மீண்டும் உயிர் பிழைத்து வாழ்ந்…

  23. மகள் தந்தைக்கு ஆற்றும் உதவி பிரேசிலில் உள்ள சீப்ரா நகரில், 25 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு மதுபான விடுதியில், இரு ஆண்களுக்கிடையே ஒரு பயங்கரமான மோதல் ஏற்பட்டது. மோதலுக்கான காரணம் பணம். திருப்பித் தருகிறேன் என்று வாங்கிய பணத்தைத் திருப்பிக் கொடுக்காததால்தான் அந்தச் சண்டையே தொடங்கியது. கடனாகக் பரிமாறப்பட்ட தொகை ஒன்றும் லட்சக்கணக்கானவை இல்லை. வெறும் 25 யூரோக்கள்தான். கிவால்டோ, ரைமுண்டோக்குத் திருப்பிக் கொடுக்க வேண்டிய பணத்தைக் கொடுக்காததால் ஏற்பட்ட வாக்குவாதம் இறுதியில் ரைமுண்டோ துப்பாக்கியை எடுத்து சுடும் அளவுக்குப் போய் விட்டது. கிவால்டோ இறந்து போனான். சம்பவம் நடந்த இடத்துக்கு பொலிஸ் வருவதற்கு முன் ரைமுண்டோ தப்பி ஓடி விட்டான். கொலையாளி ரைமுண்டோ இல்லாமல் நீ…

    • 1 reply
    • 512 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.