Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. கனடிய வரலாற்றிலேயே மிகப்பெரிய அபராத தொகை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு [ புதன்கிழமை, 03 யூன் 2015, 11:26.41 மு.ப GMT ] புகையிலை நிறுவனங்கள், புகைப்பிடித்ததால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 12.4 பில்லியன் டொலர்களை இழப்பீடாக கொடுக்க வேண்டும் என கனடா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கியூபெக் மாகாணத்தில் 1998-ம் ஆண்டு, புகைப்பிடிப்பதால் வரும் உடல்நலக் கேடுகள் பற்றி விளம்பர வாசகம் மூலம் தனது தயாரிப்புகளில் சொல்லாத நிறுவனங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. கியூபெக் பகுதியில் சிகரெட் பிடிப்பதால் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் காசநோய், தொண்டை மற்றும் நுரையீரல் புற்றுநோயால், பாதிக்கப்பட்டுள்ளனர் என புகார் கூறப்பட்டிருந்தது. பல ஆண்டுகளுக்கு …

    • 1 reply
    • 379 views
  2. பிரதமர் பொரிஸ் ஜோன்சன் பதவி விலகுகிறாரா? பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் ஊதியம் போதவில்லை என்று கூறி தனது பதவியை எதிர்வரும் வசந்த காலத்தில் இராஜினாமா செய்யவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பெயரிடப்படாத நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் வெளியிட்ட தகவலை மேற்கோளிட்டு பிரித்தானிய டேப்ளாய்ட் தி டெய்லி மிரர் இந்த செய்தியினை வெளியிட்டுள்ளது. பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தற்போது 150,402 பவுண்டுகள் ஊதியமாகப் பெற்று வருகிறார். இது அவரது முந்தைய வருவாயோடு ஒப்பிடுகையில் மிகவும் குறைவு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொரிஸ் ஜோன்சன், பிரதமராவதற்கு முன்பு, நாளிதழ் ஒன்றில் தலையங்கம் எழுதி மாதம் 23,000 பவுண்டுகள் ஊதியமாக பெற்று வந்ததாக மேற்குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் கூறியுள்…

  3. பதவியை இராஜினாமா செய்கிறாரா கெஹலிய? சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, தமது அமைச்சுப் பொறுப்பை இராஜினாமா செய்யத் தயாராகி வருவதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மருந்த கூட்டுத்தாபனத்தின் தலைவர் பதவியிலிருந்து விலகு வதற்காகப் பிரசன்ன குணசேன எடுத்த தீர்மானத்தை ஒரு மாதத் திற்கு ஒத்திவைக்குமாறு ஜனாதிபதி கோரியுள்ளார். இதனால் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அசௌகரியத் திற்கு முகங்கொடுத்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. கெஹெலிய ரம்புக்வெல்லவுடனான தகராறு காரணமாகப் பிரசன்ன குணசேன தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்ததாக முன்னதாக ஊடகங்கள் செய்திகள் வெளியான. நேற்றுவரை கெஹலிய ரம்புக்வெல்ல அணி வெற்றி பெற்றதாகத் தோன்றினாலும், ஜனாதிபதியின் தலையீட்டால் நில…

  4. அம்பாறை பொத்துவில்லில் இருந்து பதின்ம வயது சிறுமியை அழைத்து வந்து முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் குடும்பம் நடத்தி வந்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அம்பாறை மாவட்டம் பொத்துவில் கிராமத்தில் வசித்து வரும் இளைஞன் ஒருவன் தன் காதலியான 14வயது சிறுமியை அழைத்துக்கொண்டு முல்லைத்தீவு சிலாவத்தை மாதிரிகிராம பகுதியில் குடும்பம் நடத்தியுள்ளார். குறித்த சிறுமியினை காணவில்லை என பெற்றோர் அம்பாறை பொத்துவில் பகுதி பொலிசாருக்கு முறைப்பாடு செய்ததையடுத்து பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய குறித்த சிறுமியுடன் குடும்பம் நடத்திய இளைஞனையும் சிறுமியையும் கைது செய்துள்ளனர். முல்லைத்தீவில் 14வயது சிறுமியுடன் குடும்பம் நடத்தியவர் கைது! | Virakesari.lk

  5. யு.எஸ்- மெக்சிக்கோவை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 10வருடங்களிற்கும் மேலாக வைத்திருந்த ஒரு பாவித்த வானின் கதவிற்குள் இருந்து கிட்டத்தட்ட 13-இறாத்தல்கள் எடையுள்ள கஞ்சாவை கண்டு பிடித்துள்ளார். வாகன சொந்தக்காரரின் குடும்பம் 1990-மாடல் செவ்ரலொட் வானின் பின் பக்க கதவின் பூட்டில் ஏற்பட்ட பிரச்சனையை சரிசெய்ய முயன்ற போது இது கண்டுபிடிக்கப்பட்டது. கண்டுபிடித்த கஞ்சாவை தூக்கி எறியாது வாகனத்தின் சொந்த காரரான மெலொடி பெயில் சரியான செயலாக அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டார். வாகனத்தின் கதவு பனலை திருத்த எடுத்த போது குடும்ப நண்பர் ஒருவர் இதனை கண்டுள்ளார். பெரிய குவியல் கஞ்சா பயணிகள் கதவிற்குள்ளே அடுக்கி வைக்கப்பட்டிருந்துள்ளது. மெலொடி பெயில் வாகனத்தை 10-வருடங்களிற்கு முதல் 3,500 டொலர்களிற்கு…

  6. முதலமைச்சர் CVயுடன் இணையத் தயார்..! மாவை June 19, 201512:04 pm வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுடன் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பயணிப்பதற்கு தயாராகவுள்ளனர் என தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் தெற்கில் பணம் வாங்கினார்கள் என வடமாகாண முதலமைச்சர் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் அது தொடர்பில் மாவை விளக்கம் கேட்டு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். அதற்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வியாழக்கிழமை (18) பதில் அனுப்பியிருந்தார். இந்த பதில் கடிதம் தொடர்பில் பதில் கூறுவதற்காக மாவை சேனாதி…

  7. MCC உடன்படிக்கையை இரத்து செய்ய அமெரிக்கா தீர்மானம் – நிதி உதவிகளை இழக்கும் இலங்கை 19 Views MCC எனப்படும் மிலேனியம் கோப்பரேஷன் உடன்படிக்கையை இரத்து செய்வதற்கு அமெரிக்கா தீர்மானித்துள்ளது. இதற்கமைய 5 வருட காலத்திற்காக இலங்கைக்கு வழங்க உத்தேசிக்கப்பட்டிருந்த 480 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி இரத்து செய்யப்படவுள்ளது. MCC பணிப்பாளர் சபை இந்த தீர்மானத்தை எடுத்ததாக அமெரிக்காவின் வௌிநாட்டு முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது. https://www.ilakku.org/?p=37434

  8. வீட்டுக்குள் நுழைந்த சவரத் தொழிலாளிக்கு நேர்ந்த கதி! வீட்டுக்குள் அனுமதி பெறாமல் சென்ற சவரத் தொழிலாளியைக் காலணிகளை வாயால் சுத்தப்படுத்த வைத்த கொடூரம் பீகாரில் நாலந்தா அருகே அரங்கேறியிருக்கிறது. பீகார் ஷெரிப் மாவட்டத்தில் உள்ள நாலந்தா அருகேயுள்ள அஜேபூர் பஞ்சாயத்தின் தலைவராக இருப்பவர் சுரேந்திர யாதவ். இதே கிராமத்தில் சவரத் தொழில் செய்து வரும் மகேஷ் தாக்கூர் என்பவர் அஜய் யாதவின் வீட்டுக்குச் சென்றுள்ளார். இந்தக் கிராமத்தின் வழக்கப்படி, ஆண்கள் இல்லாத சமயங்களில் பிற ஆண்கள் வீட்டுக்குள் போகக் கூடாதாம். மகேஷ் தாக்கூர் சென்ற சமயத்தில் சுரேந்திர யாதவ் வீட்டில் இல்லை. இதையடுத்து, கிராம பஞ்சாயத்துக் கூட்டப்பட்டது. பஞ்சாயத்தில் மகேஷ…

  9. கனடா- ரொறொன்ரோ டவுன்ரவுனில் வியாழக்கிழமை 100ற்கும் மேற்பட்ட வென்ரநில் திட்டுக்கள் திருடப்பட்டுள்ளன [fentanyl]. இதில் ஹெரோயினை விட 40 மடங்கு அதிக அளவிலான போதை மருந்து அடங்கியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். சேர்ச் மற்றும் குயின் வீதிக்கு அண்மையில் அமைந்துள்ள மருந்தகம் ஒன்றில் இருந்து புதன்கிழமை பிற்பகல் 6-மணிக்கும் வியாழக்கிழமை காலை 7-மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் எடுக்கப்பட்டுள்ளதாக Det. Sgt.மைக் றிச்மன்ட் தெரிவித்துள்ளார்.மருந்தகத்தில் இருந்து வேறு பொருட்கள் எதுவும் எடுக்கப்படவில்லை. பல்வேறு வலிமைகள் கொண்ட 14ற்கும் 20ற்கும் இடைப்பட்ட வென்ரநில் திட்டுக்கள் திருடப்பட்டுள்ளன.அதிகாரிகள் புலன்விசாரனையில் ஈடுபட்டுள்ளனர்.இது ஒருவகை வேகமாக செயல் படக்கூடிய போதை நிரம்பிய வலி நிவ…

  10. 22,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பனி யுக கரடியின் உடல் மற்றும் பிற பிபிசி செய்திகள் ரஷ்யாவின் ஆர்டிக் பிரதேசத்தில் பனி யுகத்தில் வாழ்ந்த கரடி ஒன்றின் உடல் எந்த விதமான சேதமும் இல்லாமல் நல்ல நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். வடகிழக்கு ரஷ்யாவில் உள்ள லியாக்கோவ்ஸ்கி தீவுகளில் உறைபனிக்கு அடியில், கலைமான்கள் மேய்ப்பர்களால் இந்த கரடியின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 22,000 ஆண்டுகளில் இருந்து 39,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த செங்கரடி இனத்தைச் சேர்ந்ததாக இந்தக் கரடி இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். இதன் பற்கள் மற்றும் மூக்கு ஆகியவை துளிகூட சேதமில்லாமல் நல்ல நிலையில் இருக்கின்றன. …

  11. கோழியில் இருந்து முட்டை வந்ததா.. முட்டையில் இருந்து கோழி வந்ததா?கடைசியில் பதிலை சொன்ன ஆய்வாளர்கள்.. வாஷிங்டன்: பல நூறு ஆண்டுகளாக பெரும் புதிராக இருந்த கோழியில் இருந்து முட்டை வந்ததா.. இல்லை முட்டையில் இருந்து கோழி வந்ததா என்ற கேள்விக்கான விடையை ஆய்வாளர்கள் ஒரு வழியாகக் கண்டுபிடித்துவிட்டனர். நாம் வாழும் இந்த பூமியில் பல மர்மங்கள் புதைந்து இருக்கிறது. அறிவியல் வளர்ச்சி என்பது பல மர்மங்கள், புதிர்களுக்கு விடை கொடுத்துள்ளது. கடந்த காலங்களில் மர்மமாக இருந்த பல விஷயங்களுக்கு அறிவியல் மட்டுமே துல்லியமான பதிலைக் கொடுத்துள்ளது. அதன்படி பல ஆண்டுகளாக இருக்கும் பெரிய புதிர்களில் ஒன்று கோழியில் இருந்து முட்டை வந்ததா.. இல்லை முட்டையில் இருந்து கோழி வந்ததா என…

    • 1 reply
    • 568 views
  12. லண்டனில் வசித்து வரும் மகன்கள் இலங்கையில் தாய்க்கு ஐம்பொன்சிலை அமைக்க ஏற்பாடு செய்துள்ளனர். இலங்கை யாழ்ப்பாணத்தில் உரும்புராய் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி, ராசதிரவியம் தமபதியருக்கு 4 மகன்கள், 4 மகள்கள் உள்ளனர். கடந்த 1968ல் இலங்கையில் கலவரம் வெடித்த போது ராசதிரவியம், தன் குழந்தைகளை இங்கிலாந்து அல்லது கனடாவுக்கு சென்றுவிடுங்கள் எனக்கூறி தன் கணவரோடு அனுப்பி வைத்துள்ளார். அவர்கள் இங்கிலாந்து சென்று படித்து, வேலைக்கு சேர்ந்து வாழ்க்கை சீரான பின் தங்கள் தாயை அழைத்த போதும், அவர் தான் பிறந்த மண்ணை விட்டு வர மாட்டேன் என கூறி மறுத்து விட்டார். பின்னர் 1986ல் விடுதலைப்புலிகளுக்கும் சிங்கள ராணுவத்திற்கும் போர் மூண்ட சமயத்தில் ராசதிரவியத்தை மகன்கள் வற்…

  13. வீரகேசரி நாளேடு - தெஹிவளை தேசிய மிருகக்காட்சி சாலையில் அனகொண்டா 23 குட்டிகளை கடந்த வெள்ளிக்கிழமை ஈன்றெடுத்துள்ளது. இதில் மூன்று குட்டிகள் இறந்துள்ளதாக மிருகக்காட்சி சாலை நிருவாகம் தெரிவித்தது. அமேசன் நதியோரங்களில் வாழ்கின்ற மஞ்சள் நிறத்திலான வகையைச் சேர்ந்த அனகொண்டாவே இவ்வாறு 23 குட்டிகளை ஈன்றுள்ளதாகவும் இது சுமார் 25 அடி நீளத்தை கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. வெளிநாட்டு மிருகக்காட்சி சாலைகளுடன் மிருகங்களை பரிமாறிக்கொண்டபோதே தெஹிவளை மிருகக்காட்சி சாலைக்கு வெளிநாடொன்றிலிருந்து இந்த வகையை சேர்ந்த அனகொண்டா கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னர் கிடைக்கப்பெற்றுள்ளது. இந்த அனகொண்டா ஏனைய அனகொண்டா வகையை போல ஆபத்தானது அல்ல என்றும் மிருகக்காட்சி சாலை நிர்வாகம் தெ…

    • 1 reply
    • 1.1k views
  14. கொஞ்ச நேரம் நம் கனடிய பாராளுமன்றில் அப்படி என்ன தான் நடக்கிறது எனப் பார்த்தால் மெய் சிலிர்த்து விடுவீர்கள். அவ்வளவு நகைச்சுவையான விவாதங்கள் அவ்வப்போது நடைபெறும், சமீப காலமாகவே அமெரிக்காவின் தொலைக்காட்சி நிலையமொன்றில் ஆத்மா இல்லாமல் உலவும் உடல்கள் மனிதர்களைத் தாக்குவது போலவும் , இதனால் அமெரிக்க செய்தி ஒலிபரப்புத் துறையே சேதமடைந்தது போன்ற யூகங்களையும் வெளியிட்டது அமெரிக்க ஊடகங்கள் சில. இதனை மையமாக வைத்து அமெரிக்காவிலிருந்து ஆவிகள் கனடா வராமல் தடுக்க எல்லைப் பாதுகாப்பில் என்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளீர்கள் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் பெயர்டிடம் என்.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் பட் மார்ட்டின் கேட்க அவை முழுவதும் சிரிப்பொலி தான். அதற்கு ஜான் பெயர்ட் என்ன பதில்…

  15. சிறிலங்கா அரசு கூறும் புலிகளின் உயிரிழப்புத் தொகை குடாநாட்டு மக்கள் தொகையின் 2 மடங்கு: "சண்டே ரைம்ஸ்" கடந்த இரு தசாப்தங்களாக இடம்பெற்று வரும் போரில் கொல்லப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கங்களினால் கூறப்பட்டு வரும் எண்ணிக்கையைக் கணக்கிட்டால் யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள மொத்த மக்களும் இரு தடவைகளுக்கு மேல் உயிரிழந்திருக்க வேண்டும் என்று கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில வார ஏடான "சண்டே ரைம்ஸ்" தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அந்த ஏட்டின் பாதுகாப்பு ஆய்வாளர் இக்பால் அத்தாஸ் தனது பத்தியில் தெரிவித்துள்ளவற்றின் முக்கிய பகுதிகள்: போரில் "உண்மை தான்" முதலில் மரணத்தை தழுவுவது உண்டு. கடந்த இரு தசாப்தங்களாக இடம்பெற்று வரும் போரில் கொல்லப்ப…

  16. பிரிட்டனில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளைப் பெற்றெடுத்து 55 வயது பாட்டி ஒருவர் சாதனை படைத்துள்ளார்.கிளாம் ஷரோன் கட்ஸ் என்ற அவர், ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளைப் பெற்ற பிரிட்டனின் மிக அதிக வயதுடையவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.நான்கு குழந்தைகளுக்குப் பாட்டியான ஷரோன், செயற்கைக் கருத்தரிப்பு முறையில் இந்த 3 குழந்தைகளையும் பெற்றெடுத்துள்ளார்.பிரிட்டனின் அரசு மருத்துவமனைகளில் 42 வயதுக்குட்பட்டவர்களுக்கு மட்டுமே செயற்கைக் கருத்தரிப்பு சேவைகளை வழங்கி வருவதால், தனியார் மருத்துவமனையை அணுகிய அவருக்கு இரண்டு ஆண் குழந்தைகளும், ஒரு பெண் குழந்தையும் பிறந்தன. குழந்தை பிறக்கும்போது மிகவும் வயதான தோற்றம் இருக்கக் கூடாது என்பதற்காக, வயதைக் குறைத்து காட்டுவதற்…

  17. இலங்கை வான்பரப்பில் அடையாளம் காணப்படாத உயிரினம் – கொழும்பு பல்கலைக்கழக வானியல் பேராசிரியர் இலங்கையின் வான் பரப்பின் பல பிரதேசங்களில் அடையாளம் காணப்படாத உயிரினம் ஒன்று நாட்டின் பல பகுதிகளில் அடையாளம் காணப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானியல் பேராசிரியர் சந்தன ஜயரத்ன இதனை தெரிவித்துள்ளார்.ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை உட்பட பல பிரதேசங்களில் குறித்த உயிரினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இதேவேளை, இது எந்த வகை உயிரினம் என்பது குறித்து இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில் இது தொடர்பான ஆராய்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.எவ்வாறாயினும் இது எந்த வகை உயிரினம் என்பது குறித்து இதுவரை அடைய…

  18. தமிழரசுக் கட்சிப் பொதுச் செயலாளர் பதவியை இராஜினாமா செய்வதற்கு துரைராஜசிங்கம் முடிவு? September 4, 2020 தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை இராஜினாமா செய்வதற்கு கி.துரைராஜசிங்கம் தீர்மானித்திருப்பதாக அவருடன் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன. பொதுத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வி, தேசியப் பட்டியல் விவகாரம் போன்றவற்றால் அவர் மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றது. தமிழரசுக் கட்சியின் மத்திய குழுவின் கூட்டத்திலும் அவர் மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டது. தமிழரசுக் கட்சியின் பொதுச் சபையைக் கூட்டி அவரைப் பதவிநீக்கம் செய்வதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்தப் பின்னணியில் அவர் பதவியை இராஜினாமா ச…

  19. பிரித்தானியாவில் இருந்து... நாடு திரும்பி, யாழில்... கஞ்சா செடி வளர்த்தவர் கைது! வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பியவர் வீட்டில் கஞ்சா செடி வளர்த்த குற்றத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். பிரித்தானியாவில் இருந்து நாடு திரும்பி , யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் வசித்து வந்த நபரே கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் தனது வீட்டில் பூஞ்சாடியில் கஞ்சா செடி வளர்ப்பதாக கோப்பாய் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் , குறித்த நபரின் வீட்டினை நேற்று (செவ்வாய்க்கிழமை) சுற்றிவளைத்த பொலிஸார் , அவரை கைது செய்ததுடன், வீட்டில் வளர்த்த கஞ்சா செடியினை சான்று பொருளாக மீட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவரை பொலிஸ் நிலையத்தில் தடு…

  20. உலகப் பரிசு பெற்ற மூன்று புகைப்படங்கள்

  21. வைரஸ் ஹண்டர் என அழைக்கப்படும், டஸ்ஸாக் என்ற அமெரிக்க வைரஸ் விஞ்ஞானி, கடந்த 10 ஆண்டுகளில் உலகில் வெளவால்கள் வாழும் குகைகளுக்கும் மலைகளுக்கும் சென்று ஆராய்ச்சி செய்து வருகிறார். மாலை 6 மணிக்கு மேல் வெளவால்கள் கூட்டம் கூட்டமாக உணவு தேட வெளியே செல்லும். அப்போது முகக்கவசம், பாதுகாப்பு உடை அணிந்து டஸ்ஸாக்கின் குழு குகைகளை நோக்கிச் செல்லும். வெளவால்களின் சிறுநீர், கழிவுகள் என எது மேலே பட்டாலும் நூற்றுக்கணக்கான வைரஸ் நமது உடலில் தொற்றிக்கொள்ளும். இதனால் பாதுகாப்பு உடை அணிந்து விஞ்ஞானிகள் குழு வெளவால்கள் குகைக்குள் செல்லும். வெளவால்களில் கழிவுகள் உட்பட பலவற்றை இந்த விஞ்ஞானிகள் குழு சேமிப்பர். வெளவால் ஒன்றைப் பிடித்து அதன் இறகில் உள்ள ரத்தநாளத்தில் இருந்து ரத்தம் எடுக்கப்படும்…

    • 1 reply
    • 475 views
  22. இங்கிலாந்து நாட்டைச்சேர்ந்த பெண் ஒருவர் தனது உடலில் வளர்ந்து வரும் அடர்ந்த உரோமங்களால் பெரும் அவஸ்த்தைக்கு உள்ளாகி வருகிறார். இங்கிலாந்து நாட்டின் பெர்க்ஷையர் என்ற நகரில் வாழும் கர்னாம் கவுர் என்ற 23 வயது பெண்ணே பொலிசிஸ்டிக் ஓவர் சின்ட்ரோம் என்ற அரிய நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இவருக்கு 11 வயது இருக்கும்போது இவரது உடலில் உரோமங்கள் வளர ஆரம்பித்துள்ளன. இதனால் இவர் தனது சக பள்ளி மாணவர்களின கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாகியுள்ளார். இதனால் பள்ளிக்கு செல்வதை நிறுத்திவிட்டு வீட்டில் இருந்தே படிக்க தொடங்கினார். இவருடைய முகம் மட்டுமின்றி கை, கால், மார்பு போன்ற உடலின் அனைத்து பகுதிகளிலும் உரோமங்கள் வளர்ந்ததால் பெரும் அவதிக்குள்ளானா…

  23. ஜேஜியாங்: சீனாவில் உள்ள ஜேஜியாங் மாகாணத்தில் உள்ள நிங்போ என்ற பகுதியை சேர்ந்தவர் 32 வயதான "ஷி". இவர் கடந்த 13 ஆம் தேதி ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை திருமணம் செய்து கொண்டார். ஒரே கல்லில் ரெண்டு: இருவரும் தன்னை காதலிப்பதால் இருவரில் ஒருவரை தான் ஏமாற்ற விரும்பவில்லை என்றும், எனவே இருவரின் சம்மதத்தோடு இருவரையும் திருமணம் செய்து கொள்வதாகவும் அவர் தெரிவித்தார். ஒன்னாத்தான் வாழ்வோம்: இருபெண்களும் திருமண தினத்தன்று மகிழ்ச்சியுடன் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்ததாகவும், தாங்கள் இருவரும் ஒற்றுமையாக கடைசிவரை ஷியுடன் வாழ்வோம் என்றும் கூறினர். "நல்ல" பெற்றோர்: ஷியின் பெற்றோர் இந்த திருமணம் குறித்து கூறியபோது, தங்கள் மகனின் முடிவு தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக கூறினர். மச்சம்டா உனக்…

  24. நிர்வாணமாக நின்ற பயணி : விமானம் அவசரமாக தரையிறக்கம் போர்த்துக்கல் நாட்டு விமானத்தில் நடுவானில் பயணி ஒருவர் மது போதையில் ஆடைகளை களைந்து விட்டு, விமானப் பணிப் பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சன் எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் ஒன்று போர்த்துக்கல் நாட்டின் டப்ளின் விமான நிலையத்தில் இருந்து துருக்கி நோக்கி பயணித்தபோதே இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. விமானம் நடுவானில் பறக்கத் தொடங்கியதும், அதில் பயணித்த நபர் ஒருவர் மது போதையில் யாரும் எதிர்பார்க்காத நிலையில், தனது ஆடைகளைக் களைந்து, விமானப் பணிப்பெண் ஒருவரிடம் தகாத முறையில் நடக்கத் தொடங்கியுள்ளார். இதனையடுத்து, விமானம் அவசரமாக பெல்கிரேடில் தரையிறக்கப்பட்டு குறித்த பயணி விமான நிலைய பாதுகாப்பு அத…

  25. பசுபிக் பெருங்கடலில் 95 நாட்களாக காணாமல் போன பெருவியன் மீனவர் மீட்பு! பசுபிக் பெருங்கடலில் 95 நாட்கள் காணாமல் போய், கரப்பான் பூச்சிகள், பறவைகள் மற்றும் கடல் ஆமைகளை சாப்பிட்டு உயிர் பிழைத்த பெருவியன் மீனவர் ஒருவர், தனது குடும்பத்துடன் மீண்டும் இணைந்துள்ளார். கடந்த டிசம்பர் 7 ஆம் திகதி, தெற்கு பெருவியன் கடற்கரையில் உள்ள மார்கோனா என்ற நகரத்திலிருந்து மீன்பிடிப் பயணத்திற்காக மாக்ஸிமோ நாபா காஸ்ட்ரோ என்ற 61 வயதுடைய நபர் புறப்பட்டார். இரண்டு வார திட்டமிடப்பட்ட பயணத்திற்கான உணவை அவர் கொண்டு சென்றார். ஆனால், பத்து நாட்களுக்குப் பின்னர் புயல் காற்று அவரது படகை திசைதிருப்பியது. இதனால், அவர் பசுபிக் பெருங்கடலில் தத்தளித்ததுடன், காணாமல் போனார். இதையடுத்து, அவரது குடும்பத்தினர் தேடுத…

    • 1 reply
    • 247 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.