Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. ஜெர்மனியில் விநோதச் 'சம்பவம்' - இளம்பெண்ணைப் பின்தொடர்ந்த அணிலுக்கு 'சிறை' 'சிறை' பிடிக்கப்பட்ட அணில். ஜெர்மனியில் இளம்பெண்ணை பின்தொடர்ந்ததாக அணில் ஒன்றை அந்நாட்டு போலீஸார் 'கைது' செய்து சிறைபிடித்தனர். நார்த் ரைன் வெஸ்ட்ஃபேலியாவில் உள்ள Bottrop பகுதியில் போலீஸுக்கு வழக்கத்துக்கு மாறான புகார் வந்தடைந்தது. தன்னை ஒரு அணில் பின்தொடர்வதாகவும், உடனடியாக காப்பாற்றும்படியும் அந்த இளம்பெண் கேட்டுக் கொண்டார். புகாரைத்தொடர்ந்து அங்கு விரைந்த போலீஸார், அணிலை 'கைது' செய்தனர். அப்போது அந்த அணில் மிக சோர்வான நிலையில் இருப்பதை போலீசார் உணர்ந்தனர். உடனடியாக அணிலுக்கு தேனை ஊட்டி, அதற்கு தெம்பூட்டினர். அணில் கைது செய்யப்பட்டது மற்றும் அதற்கு தேன் கொடுக்கும் காட்சியை அவர்கள் சமூக வலைத…

    • 16 replies
    • 670 views
  2. புதுக்கடை: புதுக்கடை அருகே பேய் பீதியில் கோயில் கிணற்றுக்குள் விழுந்த வாலிபரை தீயணைப்பு துறையினர் மீட்டனர். குமரி மாவட்டம் ஐரேனிபுரம் அருகே அயனிவிளை பகுதியை சேர்ந்தவர் ஸ்டீபன் (34) கூலி தொழிலாளி. இன்று அதிகாலை வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். திடீரென படுக்கையில் இருந்து எழுந்தார். தொடர்ந்து வீட்டில் இருந்து வேகமாக வெளியே ஓடினார். இதை வீட்டில் இருந்த யாரும் கவனிக்கவில்லை. என்னை ஒன்றும் செய்யாதே. விட்டு விடு என அலறியவாறு ஓடிய ஸ்டீபன், வீட்டில் இருந்து சிறிது தொலைவில் உள்ள நாகதேவி கோயிலுக்குள் சென்று, அந்த கோயில் வளாகத்தில் உள்ள கிணற்றில் குதித்தார். திடீரென கிணற்றில் ஏதோ சத்தம் கேட்டு, கோயில் அர்ச்சகர் பார்த்தார். அப்போது ஸ்டீபன், தண்ணீரில் நின்று கொண்டு இருந்தார். உடனடியாக …

  3. ஒரே ஆணுடன் சுற்றித்திரியும் இரு பெண்கள்: இது செம டேட்டிங் (வீடியோ இணைப்பு) அவுஸ்திரேலியாவை சேர்ந்த இரட்டை சகோதரிகள் ஒரே ஆணுடன் டேட்டிங் செய்வது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அவுஸ்திரேலியாவின் பெர்த்(Perth) நகரில் லூசி-ஆனா சினிகியூ(Lucy and Anna DeCinque Age-28) என்ற இரட்டை சகோதரிகள் வசித்து வருகின்றனர். பிளாஸ்டிக் சர்ஜரிக்காக ஒரு கோடிக்கும் அதிகமாக செலவழித்து பிரபலமான இவர்கள் இருவரும், தற்போது ஒரே வாலிபரை காதலித்து திருமணம் செய்ய உள்ளனர். இதுகுறித்து அவர்கள் பேசுகையில், நாங்கள் இருவரும் ஒருவர் இல்லாமல் ஒருவர் ஷாப்பிங் கூட செல்வது இல்லை.ஒருவரை விட்டு ஒருவர் விலக மாட்டோம் என பேசியுள்ளனர். மேலும் காதலருடன் ஒரே படுக்கையை பகிர்ந்து கொள்ளும் இரட்டையர் இர…

  4. 55,000 அமெரிக்க டொலர் செலவில் திருமண பந்தத்தில் இணைந்த நாய் ஜோடி ஆண் நாயொன்றுக்கும் பெண் நாயொன்றுக்கும் 55,000 அமெக்க டொலர் செலவில் ஆடம்பரத் திருமணம் நடத்தப்பட்ட சம்பவம் அமெரிக்க கலிபோர்னிய மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது. அண்மையில் இடம்பெற்ற இத் திருமணம் குறித்து சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரூபின் என்ற பெண் நாய்க்கும் கார்ட்டர் என்ற ஆண் நாய்க்கும் பாம் டிஸேர்ட்டிலுள்ள வாசஸ்தலத்தில் நடைபெற்ற இந்தத் திருமணத்தில் 100க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் பங்கேற்றனர். மேற்படி திருமணத்தை மத குருவான ஹரி பார்பர் நடத்தி வைத்தார். ஆண் நாயின் உரிமையாளரான ஆன் இத் திருமணம் குறித்து விபரிக்கையில், "நான் எனது மகனை (கார்ட்டரை) இழக்கவில்லை. மாறாக …

  5. ஜேர்மனியின் Köln நகரில் 4வது மாடியில் இருக்கும் பெண் ஒருவர் மின்னலில் தனது கைத்தொலைபேசியில் வீடியோ பதிந்துள்ளார்.பின்னர் அவர் அந்த வீடியோவை போட்டு பார்த்த போது அதிர்ச்சியிலிம் அதிர்ச்சி??? அதில் ஒரு பேயை கண்டுள்ளார்.... பார்்க்க வீடியோ..... http://www.express.de/nachrichten/region/k...0237979250.html நன்றி. செய்தி மற்றும் படங்கள் Express.de

  6. சிங்களவர்கள், இலங்கைத் தமிழர்கள் மற்றும் இலங்கை முஸ்லிம்கள் – மரபணு ரீதியாக பல ஒற்றுமைகளைக் கொண்டுள்ளனர் என, கொழும்பு பல்கலைக்கழகம் நடத்திய ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் மரபணு தொழில்நுட்பம், மூலக்கூறு அறிவியல் துறை நடத்திய நான்கு வருட ஆய்வை தொடர்ந்து இந்த விடயம் அவதானிக்கப்பட்டது. வேறு சில அம்சங்களை ஆராயும் போது, இலங்கையின் முக்கிய இனங்கள் பற்றிய இந்த அவதானிப்பு தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்டதாக, மேற்படி ஆராய்ச்சி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் நம்பப்படுவது போல் இலங்கை முஸ்லிம்கள் மத்திய கிழக்கிலிருந்து தோன்றவில்லை என்றும், அவர்கள் இந்தியாவில் இருந்து தோன்றியதாகவும் டொக்டர் கயானி கல்ஹேன மேலும் கூறியுள்ளார். …

    • 16 replies
    • 1.2k views
  7. இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா நான் இஸ்லாம் மதத்தை தழுவியதற்கு என் அம்மாவே காரணம் என்று இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, இஸ்லாம் மதத்தை தழுவினார் என்பது தமிழ் திரையுலகினர் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. ஆனால், அது தொடர்பாக யுவன் விளக்கம் எதுவுமே கொடுக்கவில்லை. யுவன், ஜெய் இருவருமே இஸ்லாம் மதத்தை தழுவி, ரம்ஜான் அன்று மசூதிக்கு சென்று தொழுகை நடத்திய படங்கள் இணையத்தில் வெளியானது. இந்நிலையில் ஏன் இஸ்லாம் மதத்தை தழுவினார் என்ற கேள்விக்கு முதன் முறையாக பதிலளித்திருக்கிறார் யுவன். இது குறித்து யுவன் கூறியிருப்பது: "எனது தந்தை தீவிரமான இந்து. ஒரு கண்ணாடி உடைந்தாலும் ஜோசியரைக் கூப்பிடும் அளவுக்கு மூட நம்பி…

  8. உள்ளாடைகளில் மூன்று மலைப்பாம்புகளை மறைத்து கடத்த முயன்றவர் கைது kugenJuly 4, 2025 வனவிலங்குகளை நாட்டிலிருந்து வெளியே கடத்த முயன்றதற்காக இலங்கையர் ஒருவர், சுவர்ணபூமி விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார், அவரது உள்ளாடைகளில் மூன்று மலைப்பாம்புகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்டறிந்தனர். இலங்கை சந்தேக நபர் ஒருவர் தாய் ஏர்வேஸ் விமானத்தில் நள்ளிரவு 12.06 மணிக்கு பாங்காக்கிற்கு வந்ததாக செவ்வாய்க்கிழமை (01) அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்ததாக வனவிலங்கு குற்றப் புலனாய்வு மையம் தெரிவித்துள்ளது. ஷீஹான் என்று மட்டுமே அடையாளம் காணப்பட்ட மேற்படி சந்தேகநபர், பல்வேறு வனவிலங்கு இனங்களை கடத்தியதாக பதிவு இருப்பது முன்னர் நடத்தப்பட்ட சோதனைகளில் கண்டறியப்பட்டுள்ளது. வனவிலங்க…

  9. விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பார்ப்பதுண்டா ? நீதிபதிகள் முதல் போட்டியாளர்கள் வரை அனைவரும் கேரள மாநிலத்தை சார்ந்தவர்களாகவே இருக்கிறார்கள். அத்திபூத்தாற் போல் ஒரு சில தமிழர்களைத் தவிர.. ஒரு நாள் நிகழ்ச்சியில் பாடகி எல்.ஆர். ஈஸ்வரி அவர்கள் நீதிபதியாக வந்திருந்தார். அப்போதுதான் அவருடைய தமிழின உணர்வு எனக்கு தெரிந்த்து. தமிழ் வார்த்தைகளை சரியாக உச்சரிக்காத பாடகர்களை தமிழை எப்படி உச்சரிக்க வேண்டும் என்று திருத்தியது மட்டுமில்லாமல் ”நீ தமிழச்சியா ? ஒரு தமிழச்சி தமிழை இப்படி உச்சரிக்கலாமா ?” ”தமிழச்சினா தமிழச்சிதான்” என்று பூரிப்பு அடைந்தது வரை நிகழச்சி முழுக்க தமிழ், தமிழச்சி என்று பெருமையாக பேசிக் கொண்டிருந்தார். இது தாங்காத ஒரு கேரள மாநில போட்டியாளர் பெய…

    • 16 replies
    • 1.5k views
  10. ஜெர்மனியில் ஒய்ஃபு... ஹாயாக ஸ்கைப்பில் தீர்ப்பு- கலக்கும் "ஹொஹோய்" ராஜா! ஜெர்மனியில் ஒய்ஃபு... ஹாயாக ஸ்கைப்பில் தீர்ப்பு- கலக்கும் கானா: ஸ்பை மூலம் பிற நாடுகளை உளவு பார்த்து நாட்டை ஆண்ட ராஜாக்கள் இன்று இல்லை. மாறிவரும் மாடர்ன் உலகில் அரசர் ஒருவர் உட்கார்ந்த இடத்தில் இருந்தே, "ஸ்கைப்" மூலமாக நாட்டை ஆண்டு வருகின்றார் என்றால் நம்ப முடிகின்றதா? அந்தக் கால அரசர்கள், சிம்மாசனத்தில் அமர்ந்து தீர்ப்பு சொன்னார்கள். ஆனால் இந்தக் காலத்தில் ஹாயாக ரெஸ்டாரண்டில் சாப்பிட்டுக்கொண்டே தீர்ப்பு சொல்கிறார் அரசர் கிங் பான்சா. இவருடைய கெட்டப்பைப் பார்த்ததும் பழங்காலத்து அரசர் என்று நினைத்துவிடாதீர்கள். பக்கா மாடர்ன் ராஜா தான் இவர். மாடர்ன் ராஜ்ஜியம்: இவர் ஒரு மார்டன் அரசர். நவீன…

  11. முதல் தடவையாக ஒவ்வொரு தளமும் சுயாதீனமாக அசையக்கூடிய கட்டடம் துபாயில் கட்டப்பட உள்ளது. இத்தாலிய நாட்டு கட்டட கலை நிபுணரான டேவிட் பிஸ்ஸர் என்பவரால் வடிவமைக்கப்படும் இந்த கட்டடம் 80 தளங்களை கொண்டதாகும். 420 மீற்றர் உயரத்தில் அமையும் இந்த கட்டடத்தின் ஒவ்வொரு தளமும் 360 பாகை சுழற்சி (முழுச்சுழற்சி) அடைய 1 - 3 மணித்தியாலங்கள் எடுக்கும். அதைவிட 79 காற்றாலை இயந்திரங்களும் ஒவ்வொரு தளத்திலும் இணைக்கப்ப்ட்டிருக்கும் மூலச்செய்தி, காணொளி.. http://news.bbc.co.uk/2/hi/middle_east/7472722.stm

    • 16 replies
    • 2.1k views
  12. இந்தியாவின் பெங்களூரைச் சேர்ந்த கல்லூரியொன்றின் பணிப்பாளரொருவர் தன்னை விட சுமார் 35 வருடங்கள் வயது குறைந்த மாணவியை திருமணம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பேராசிரியரான அவரது வயது 64 எனவும் , மாணவியின் வயது 27 எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இத்திருமணம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்றுள்ளது. கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இது இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் தமது மகள் , திருமணப் பதிவாளர் அலுவலகத்துக்கு , திருமணச் சான்றிதழை பெற வருவதனை அறிந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் அங்கு கூடியுள்ளனர். இதனைத் தொடர்ந்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஜோடிகள் மீது தாக்குதலும் நடந்துள்ளது. www.hirunews.lk/.

  13. உலகிலேயே உயரமான குடும்பம் என்ற உலக சாதனையை படைத்துள்ளனர் பூனே ஐ சேர்ந்த இந்தியாவின் குடும்ப அங்கத்தவர்கள். குடும்ப தலைவரான ஷராட் குல்கர்னி (வயது 52) 7 அடி 1.5 அங்குலம், குடும்ப தலைவி ஷஞ்யொட் (வயது 46) 6 அடி 2.6 இஞ்ச், மற்றும் இவர்களின் மகள்மாரான 22 வயதாகும் ம்ருகா (6 அடி 1 அங்குலம்), 16 வயதாகும் ஷன்யா (6 அடி 4 அங்குலம்) ஆகியோரே இந்த உலக சாதனைக்கு சொந்தக்காரர்கள். http://www.padalai.com/?p=10592

  14. இப்படியே பேய் பேய் என்று சொல்லி அதுகளின்ர மன அழுத்தங்களுக்கு மருந்து தேடாமல் விட்டு.. லூசாக்கிடுங்க..!

  15. சவுதி அரேபியப் பெண்ணுக்கு ஆஸ்திரேலியாவில் அடைக்கலம் தரக்கோரி ஆஸ்திரேலியாவில் 4 பெண்கள் மேலாடை அணியாமல் அரை நிர்வாண போராட்டம் நடத்தினர். சவுதி அரேபியாவை சேர்ந்த இளம்பெண் ரஹப் முகமது அல்கியூனன் (18). கருத்து வேறுபாடு காரணமாக தன்னை அறையில் அடைத்து வைத்து பெற்றோர் கொடுமைப்படுத்தியதாகக் கூறி நாட்டை விட்டு வெளியேறினார். குவைத்தில் இருந்து தாய்லாந்து தலைநகர் பாங்காக் வழியாக ஆஸ்திரேலியா செல்லத் திட்டமிட்டார். ஆனால் அவரிடம் விசா உள்ளிட்ட ஆவணங்கள் இல்லாததால் தாய்லாந்து அதிகாரிகள் அங்கு தடுத்து நிறுத்தினர். சவுதி அரேபியாவுக்கே அவரைத் திருப்பி அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்கு மறுத்த ரஹ…

  16. காத்­தான்­குடி பிர­தே­சத்­தி­லுள்ள வீடொன்றில் கடந்த ஐந்து தினங்­க­ளுக்கு முன்னர் காலை உண­வுக்­காக தயா­ரிக்­கப்­பட்ட ரொட்­டியில் அல்லாஹ் முகம்மத் எனும் எழுத்து காணப்­பட்­டுள்­ளது. இது பற்றி தெரி­ய­வ­ரு­வ­தா­வது, காத்­தான்­குடி பி.ஜே.எம்.வீதி­யி­லுள்ள மர்சூக் என்­ப­வரின் வீட்டில் காலை உண­வுக்­கான ரொட்டி தயா­ரிக்­கப்­பட்ட வேளை ரொட்­டியை தயா­ரித்து முடிந்த பிறகு அந்த ரொட்­டியின் மேல் பகு­தியில் அல்லாஹ், முகம்மத் என காணப்­பட்­டுள்­ளது. இதை­ய­டுத்து இந்த ரொட்­டியை சாப்­பி­டாமல் விட்­டுள்­ளனர். இந்த ரொட்­டியை தயா­ரித்த ரொட்டி கல்லில் எந்த வொரு எழுத்தும் இருக்­க­வில்­லை­யெ­னவும் இதில் அல்லாஹ் என்ற எழுத்தை கண்­ட­வுடன் தான் அதிர்ச்­சி­ய­டைந்­த­தா­கவும், இது ஒரு அற்­பு­த­மாகு…

  17. 17 வயதுச் சிறுவனுடன் குடும்பப் பெண் ஒருவா் மாயமானா். கொழும்பு வெள்ளவத்தை 37 வீதிப் பகுதியில் வசித்து வந்த குடும்பப் பெண்னே சிறுவனுடன் மாயமாகியுள்ளார். குறித்த பெண் பெரும்பான்மை இனத்தைச் சோ்ந்தவா் எனவும் சிறுவன் யாழ்ப்பாணம் கந்தா்மடம் பகுதியைச் சோ்ந்தவன் எனவும் தெரியவருகின்றது. குறித்த சிறுவனின் சகோதரி வெளிநாட்டில் வசிப்பதாகவும் சகோதரி கொழும்பு வெள்ளவத்தைப் பகுதியில் தொடா்மாடியில் வீடு வாங்கி அதனை பெரும்பாண்மையினத்தைச் சோ்ந்த குடும்பப் பெண்ணுக்கு வாடகைக்குக் கொடுத்ததாகவும் தெரியவருகின்றது. குறித்த பெண்ணின் கணவா் கப்பலில் பணியாற்றுவதாகவும் இப் பெண்ணுக்கு 5 வயதில் ஒரு சிறுமி இருப்பதாகவும் தெரியவருகின்றது. சிறுவன் தனது தாயுடன் கடந்த இரு வருடங்களாக விடுமுறை நாட்களில் வெள்ள…

  18. தும்மலா? அப்ப 'அதே'தான்...! வெள்ளிக்கிழமை, ஜூலை 31, 2009 'அச் அச்' என்று தும்முகிறீர்களா.. அப்படியானால் நீங்கள் செக்ஸ் குறித்த சிந்தனையில் இருக்கிறீர்கள் என்கிறது ஒரு ஆய்வு. தும்மல் வந்தால் உடனே சளி பிடித்து விட்டதோ என்று எண்ணக் கூடாதாம். மாறாக, செக்ஸ் குறித்த எண்ணம் இருந்தால்தான், அந்தக் கோணத்தில் சிந்தித்துக் கொண்டிருந்தால்தான் தும்மல் வரும் என்கிறார்கள் நிபுணர்கள். இதுகுறித்து ஆக்ஸ்போர்டில் உள்ல ஜான் ரேட்கிளைப் மருத்துவமனையில் காது மூக்குத் தொண்டை நிபுணராக இருக்கும் டாக்டர் மஹமூத் பட்டா கூறுகையில், என்னிடம் ஒரு நோயாளி வந்தார். கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அடிக்கடி தும்மல் வருவதாக கூறினார். அதுகுறித்து அவரிடம் விரிவாகப் பேசியபோது, செக்ஸ் குறித்த சிந்த…

  19. போத்தல்தண்ணீரை விட குழாய் நீரே பாதுகாப்பானது என பிரிட்டன் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பால் யங்கர் தலைமையிலான குழு தெரிவித்துள்ளதாவது: பொதுவாக குழாய்களில் வரும் தண்ணீரை விட பாட்டிலில் அடைக்கப்பட்டு விற்பனையாகும் குடி நீர்தான் பாதுகாப்பானது என பலரும் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் குழாய் நீருக்கு எந்த விதத்திலும் போத்தல்தண்ணீர் உயர்ந்தது அல்ல என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தொற்று நோய் பரவாமல் இருப்பதற்காக குழாய் நீரில் கலக்கப்படும் குளோரின் "மினரல் வாட்டர்' எனப்படும் போத்தல் தண்ணீரில் இல்லை. போத்தல்தண்ணீர் மூடியைத் திறந்தவுடன் சில மணி நேரங்களுக்குள் அந்தத் தண்ணீரை அருந்த வேண்டும். இல்லாவிட்டால் நோய்த் தொற…

  20. மேற்கு ஆபிரிக்க நாடான மாலியைச் சேர்ந்த ஹலிமா சிஸ்ஸே என்ற 25 வயதான தாய் ஒருவர் ஒன்பது குழந்தைகளைப் பிரசவித்து உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளார். இவருக்கு 5 ஆண் குழந்தைகளும் 4 பெண் குழந்தைகளும் ஒரே பிரசவத்தில் கிடைத்துள்ளன. ஏற்கனவே இவரை ஸ்கேன் செய்த போது இவருக்கு ஏழு குழந்தைகள் பிறக்கும் என வைத்தியர்கள் கூறியிருந்தனர். எனினும் ஒன்பது குழந்தைகளை அடுத்தடுத்து பிரசவித்துள்ளார் இந்த இளம் தாய். அனைத்து குழந்தைகளும் ஆரோக்கியமாக இருப்பதாக வைத்தியர்கள் கூறியுள்ளனர். மாலி இளம் தாயின் இந்த பிரவசவம் உலகில் ஆச்சரியமாக பார்க்கப்படுவதுடன் மேற்கு ஆப்பிரிக்க நாட்டின் தலைவர்களையும் ஈர்த்துள்ளது. ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளை பெற்ற இளம் தாய் | Vira…

  21. இந்தியாவின் அகமதாபாத், ராஜ்கோட்டில் உள்ள மோர்பி மாவட்டத்தில் கொலனி ஒன்றின் வெளிப்புறத்தில் பிண நாற்றம் அடிக்க பொதுமக்கள் பொலிசிடம் புகார் தெரிவித்தனர். அங்கு விரைந்த பொலிஸ் கடுமையான விசாரணையில் இறங்கினர். அப்போது பொதுமக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் பார்தி வானியா என்ற பெண்ணை பொலிசார் சுற்றிவளைத்துப் பிடித்து கைது செய்தனர். விசாரணைகளில் புதன்கிழமை தனது கள்ளக் காதலனுடன் சேர்ந்து இந்த பார்தி வானியா, தன் கணவன் மகேந்திர தாராசந்த் வானியாவை நிர்வாணப்படுத்தி அடித்து கொலை செய்துள்ளது தெரியவந்தது. கணவனைக் கொலை செய்ய கள்ளக்காதலன் சூரிய பிரகாஷுக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு வரவழைத்துள்ளார். பின் கணவனை நிர்வாணப்படுத்தி அடித்து உதைத்து கொலை செய்தனர். அதனைத் தொடர்ந்து கணவனின் உ…

  22. நாய் நன்றியுள்ளது என்பார்கள் - ஆனால் அந்த நன்றி அதனை வசனமாகவே மட்டும் கூறும் மனிதர்களிடம் அறவே இல்லாமல் போனது வருத்தற்குரிய விஷயமாகியுள்ளது. பெங்களூருவில் கிருஷ்ணா நகரில் வசிக்கும் பொன்னம்மா என்ற பெண் எட்டு நாய்க்குட்டிகளை கொடூரமாக கொன்றுள்ளார். அம்மு என்ற நாய் பொன்னம்மா வீட்டின் கதவருகே 8 குட்டிகளை ஈன்றது. இதனால் ஆத்திரமடைந்த பொன்னம்மா அந்த நாய்க்கு தக்க பாடம் கற்பிப்பதாக எண்ணி அம்மு ஈன்ற 8 நாய்க்குட்டிகளையும் மனசாட்சியே இல்லாமல் பாறாங்கற்கள் மீது தூக்கி போட்டு கொன்றுள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர், பொன்னம்மா மீது போலீசில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்கக் கூடும். இ…

    • 15 replies
    • 900 views
  23. யாழ். துணைவி... பகுதியில், 11 வாள்களுடன் இளைஞர் கைது! வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட துணைவி பகுதியில் 11 வாள்களுடன் விசேட அதிரடிப்படையினரால் 22வயதான இளைஞர் கைது. வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட் துணவி பகுதியிலேயே நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு 8.00 மணியளவில் இக் கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது வட்டுக்கோட்டை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட துணவி பகுதியில் வாள்களை பயன்படுத்தி கட்டுச் சொல்லும் கோவிலொன்றில் வாள்களை உடமையில் வைத்திருப்பதாக யாழ்ப்பாணம் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த ப தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த அதி…

  24. எனக்கு வீட்டுல நிம்மதியே இல்லாம போச்சு. உங்ககிட்ட பேசும்போதுதான் மனசுக்கு ஆறுதலா இருக்கு. ராங் கால் மூலமா அந்த ஆண்டவன்தான் உங்களை எனக்கு அறிமுகம் செஞ்சு வச்சிருக்கார்'' என்றபடி ஜெயந்தி என்ற பெண் செல்போனிலேயே இளைஞர்கள் பலரை, தன்னுடைய பேச்சாலேயே மயக்கி பணம் பறித்ததாகவும், அவருக்குத் துணையாக அவரது கணவர் மோகன் என்பவரே செயல்பட்டதாகவும் மன்னார்குடி போலீஸாரால் கைது செய்யப்பட்டு, இப்போது அவர்கள் சிறையில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கின்றனர். மேற்படி கிளுகிளு சம்பவம் குறித்து போலீஸாரிடமே விசாரித்தோம். "கடந்த சில நாட்களுக்கு முன்பு மன்னார்குடி அருகே உள்ள கட்டக்குடி கிராமத்தைச் சேர்ந்த சந்திரசேகர் என்ற இளைஞருக்கு செல்போன் அழைப்பு ஒன்று வந்துள்ளது. மறுமுனையில் செக்ஸியான குரலில் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.