Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழும் நயமும்

இலக்கணம் | இலக்கியம் | கலைச்சொற்கள் | பழந்தமிழ்க் காப்பியங்கள்

பதிவாளர் கவனத்திற்கு!

தமிழும் நயமும் பகுதியில் இலக்கணம், இலக்கியம், கலைச்சொற்கள், பழந்தமிழ்க் காப்பியங்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழ் மொழி, செவ்வியல் இலக்கியம், இசை, பெருங்காப்பியங்கள் சம்பந்தமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. "பண்டைய தமிழரின் செல்வம் பற்றிய சிந்தனை" இன்று நாம் வாழ்க்கையை வாழ்வாங்கு வாழ்வதற்கும், வளமோடு வாழ்வதற்கும் வழிவகுப்பன, நம் முன்னோர்களின் வாழ்க்கை நெறிகள் ஆகும். இந்த நெறிமுறைகளைப் பத்திரப்படுத்தி அதன் மூலம் எம்மை இன்றும் பக்குவப் படுத்திக் கொண்டு இருப்பன பண்டைய சங்க இலக்கியங்கள் ஆகும். உதாரணமாக பெற்றோர் சேர்த்த செல்வத்தைச் செலவு செய்வோர் உயிருள்ளவராக மதிகக்கப்பட மாட்டார்கள் என்பதையும், பொருள் இல் வாழ்க்கைக்கு அடிப்படைத் தேவை என்பதையும், பகுத்துண்டு வாழ்தல் வேண்டும் என்பதையும், மற்றும் நாம் உழைத்து, அதில் கிடைக்கும் செல்வத்தையே நாம் பயன்படுத்தி, அடுத்தவருக்கும் உதவி செய்யப் பயன்படுத்த வேண்டும் என்பதையும் சில சங்க பாடல்கள் மூலம் அறி…

  2. சென்னை : ""இந்த ஆண்டு முதல் துவக்கப்பட்டுள்ள தமிழ்வழி பொறியியல் படிப்பில் சேர்ந்துள்ள மாணவர்களில் பெரும்பான்மையினர் நல்ல மதிப்பெண்களை பெறுகின்றனர்,'' என, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னர் ஜவகர் தெரிவித்தார். அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் இந்த ஆண்டு முதல் தமிழ்வழி பொறியியல் படிப்புகள் துவக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு சிவில், மெக்கானிக்கல் படிப்புகள் தமிழ் பயிற்று மொழியில் வழங்கப்படுகின்றன. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் சார்பில், தமிழ்வழி பொறியியல் படிப்புகளுக்கான புத்தகங்களை வெளியிடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அண்ணா பல்கலை துணைவேந்தர் மன்னர் ஜவகர் புத்தகங்களை வெளியிட்டார். பொறியியல் இயற்பியல், பொறியியல் வேதியியல், கணி…

    • 0 replies
    • 850 views
  3. மய்யம் என்றால் என்ன? மையம் என்றால் எங்களுக்கு என்ன? தமிழல்லாத சொற்களுக்காக ஏன் இந்த சொற்போர்?.. நடுவம் என்பது தான் தமிழ் .. எழுத்துச் சீர்திருத்தம் என்ற போர்வையில் பெரியார் செய்த வேலையே ஐ உருபுச் சொற்களை அய் ஆக்கும் முறைமை. ஆனாலும் முதலில் தமிழ்ச் சொல்லில் கலந்திருக்கும் சமசுக்கிருதத்தை அறிந்து கொள்வது நல்லது என நினைக்கிறேன். தமிழர் தாயகப் பகுதிகளில் வன்னியிலும் யாழ்ப்பாணத்திலுமே இந்து மதத்தின் தாக்கத்தினால் மொழிக்கலப்பு மிக அதிகமாகவிருக்கிறது. தொன்மையான வழிபாட்டு முறைகளைப் பேணும் தென் தமிழீழத்தில் மொழிக்கலப்பு ஒப்பீட்டளவில் குறைவாகவே நிகழ்ந்திருக்கிறது. தமிழகத்தில் ஆங்கிலம் கலந்த வழக்கு இருப்பதால் ஆங்கிலம் கலக்காத யாழ்ப்பாணத் தமிழ், அதற்கென ஒரு உயர்வைப் பெற்றுக்கொண்டது…

  4. அக்கு வேறு ஆணி வேறு என்று சொல்கிறோமே, அதில் ஆணி என்றால் நாம் அன்றாடம் பயன்படுத்துவது. ஆனால் அக்கு என்றால் என்ன? ஆணி என்று வருவதால் அக்கு என்றால் ஆணியை அடிக்கும் முன் சுவர் பாழாகாமல் இருக்க சுவற்றில் முதலில் அடிக்கும் மரத்தக்கை என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் அகராதியைப் புரட்டினால் அக்கு என்பதற்கு அப்படி ஒரு அர்த்தம் தரப்பட்டு இருக்கவில்லை. இணையத்தில் மேய்கையில் அக்கு அக்காகப் பிரிப்பது என்பதால் அக்கு என்றால் பாகம் என்று சிலர் விளக்கம் தந்திருந்தனர். ஆனால் அகராதியில் அது போன்ற பொருளும் தந்திருக்கப்படவில்லை. அக்கு [ akku ] , s. little shells, cowries, பலகறை; 2. beads of conch shells, சங்குமணி; 3. beads of seeds of the elœocarpus worn by religious mendicants,…

  5. Started by Shakana,

    உங்களுக்காக "இயேசு காவியம்" கவிஞர் கண்ணதாசனின் கைவண்ணத்தால் மிளிரும் இறாவக் காவியம். இதன் முதற்பதிப்பு 1982ஆம் ஆண்டு வெளியானது. இது வெளியான குறுகிய காலத்தில் அச்சடிக்கப்பட்ட 28,000 பிரதிகளும் புத்தகத்தின் விலை அதிகமாயிருந்தாலும் விற்று போயின. இயேசுவின் வாழ்வும் வாக்கும் கவிஞரின் இக்காவியத்தின் வழியாக எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற எண்ணத்தில் இராண்டாம் பதிப்பு மலிவுப் பதிப்பாக 1985ஆம் ஆண்டு 50,000 பிரதிகள் அச்சடிக்கப்பட்டன. அவையும் விரைவில் விற்றுவிட்டன. தமிழ் கூறும் நல்லுலகில் கவியரசர் கண்ணதாசனின் செல்வாக்கு எத்தகையது என்பதை இஃது எடுத்துக் கூறுகிறது. கவிஞரின் கவிநயத்தையும் இறை இயேசுவின் நற்செய்திக் கருத்துக்களையும் இயம் உள்ளங்கள் ரசித்து, சுவைக்க வ…

  6. சிலம்பிலே திருமணக்காட்சி தமிழர் திருமண முறை பற்றி அறிந்துகொள்ள சங்க இலக்கியங்களில் ஒன்றும் கைகொடுக்கவில்லை. அவற்றில் ஒன்றிரண்டிலே உவமைப் பொருளாகத் திருமணம் பற்றிச் சொல்லப்படுகிறது. திருமணத்தை முழுமையாகக் காட்சிப்படுத்தும் செய்யுள் ஒன்றுகூட இல்லை. தொல்காப்பியத்திலே திருமணம் பற்றிச் சொல்லப்படுகிறது என்றாலும் அதிலும் மேலெழுந்தவாரியாகச் சுட்டிச் சொல்லப்படுவதன்றி விரிவாகக் கூறப்படவில்லை. திருமணக் காட்சியை முழுமையாகக் காட்டும் முதல் இலக்கியம் சிலப்பதிகாரம்தான். அதிலே காப்பிய நாயகி, நாயகனான கண்ணகி - கோவலன் திருமணம் பற்றிக் கூறப்படுகிறது. அது வருமாறு: "யானை யெருத்தத்து அணியிழையார் மேலிரீஇ மாநகர்க் கீந்தார் மணம் அவ்வழி முரசியம்பின முருடதிர்ந்தன முறையெ…

  7. (14-11-2012 அறிவன்கிழமை மாலை விழுபுரம் மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்ற தேசிய நூலக விழாப் பாட்டரங்கில் கலந்து கொண்டு பாடியது) பெருஞ்சித்திரனார் பேசினால்…! அன்பார் பெரியீர்! அறிஞர்காள்! பாட்டரங்கில் பண்பார் பலபுலவர் பாடவந்த பாவலரே! இன்னன்புத் தாய்க்குலமே! எந்தமிழ நல்லிளைஞீர்! முன்வந்தே போட்டி முனைநிற்கும் மாணவர்காள்! வல்ல செயலாற்றும் வாசகர் வட்டத்தீர்! எல்லார்க்கும் என்றன் இனியவணக் கம்உரித்தே! இன்றைய நூலக இன்விழாப் பாட்டரங்கில் தன்னேரில் தூயதமிழ் வல்லரிமா வான பெருஞ்சித்தி ரப்பெரியார் பேசினால்... என்னும் அருந்தலைப் பொன்றை அளித்துப்பா டென்றனரே! யார்பெருஞ் சித்திரனார்? இங்கறியார்க் காகசில பேர்விளக்கும…

  8. தமிழ் இந்தோ ஐரோப்பிய மொழித்தொடர்பு

    • 0 replies
    • 1.7k views
  9. எல்லா(hello)! வணக்கம் மக்களே... இங்கு படைத்துறையில் பயன்படுத்தக்கூடிய வகையில் 1000+ கலைச்சொற்களை தொகுத்து ஆக்கியுள்ளேன். அவற்றுள் என்னால் இயன்றளவு பழந்தமிழ்ச் சொற்களை கையாண்டுள்ளேன். இச்சொற்கள் படைத்துறை பற்றி எழுதுபவர்களுக்கு பெருமளவில் பயன்படும் என்று நம்புகின்றேன்! ''நாம் குறைந்த சொற்களை வைத்து எல்லாவற்றிற்கும் ஒப்பேற்றிவிடலாம் என்று எண்ணுகிறோம். அது பிழை... எப்பொழுதும் பேச்சில் சொற்றுல்லியம் தேவை; இல்லையெனில் பொருள் பிறழும்'' தமிழறிஞர் இராம.கி

  10. Started by Theventhi,

    தமிழ் இலக்கியமான விவேக சிந்தாமணி அருமையான கவி வரிகளைக் கொண்டது, இந் நூல் தற்போது எம்மவரிடம் கைவசம் இருப்பதே அரிதிலும் அரிது. ஆகவே இப் பாடல்களை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் சந்தோசம் அடைகின்றேன். இலக்கியத்தில் ஆர்வம் உள்ளவர்கள் வாசியுங்கள், அத்துடன் கருத்துக்களையும் எழுதுங்கள், தற்காலத்தில் அதன் பயன்பாட்டை நோக்குவோம். (விவேக சிந்தாமணியை எனது பதிவான "தமிழ்" பகுதியில் முன்னர் பதிவு செய்திருந்தேன், ஆனால் "விவேக சிந்தாமணி"யை தனிப் பிரிவில் பதிவு செய்வதே சிறப்பாக இருக்குமென்பதால் தனித் தலைப்புக்கு மாற்றியுள்ளேன், சிரமத்துக்கு மன்னிக்கவும்) விவேக சிந்தாமணி ஆசிரியர் திருத்தக்கதேவர்எனக் குறிப்பிடப்பட்டுள்ள போதிலும் இதற்கு ஆதாரம் போதியளவு இல்லாததால் ஆசிரியர் யாரென உறுத…

  11. புதுமைக்கால ஆய்தங்கள் தொடர்பான கலைச்சொற்கள்: முக்கிய விடையம்: துப்பாக்கி, பீரங்கி, தோட்டா ஆகிய மூன்றும் சொற்களும் பிறமொழிகளில் இருந்து தமிழிற்கு வந்து சேர்ந்த சொற்கள்... இவற்றினை தொலைவிற்கு வீசிவிட்டு புத்தம் புதிய தமிழ்ச் சொற்களை கையாள்வோமாக! துப்பாக்கி/ துவக்கு → இச் சொல்லானது "துபக்(tüfek)" என்னும் துருக்கிய மொழிச் சொல்லிலிருந்து தமிழுக்கு வந்தேறிய சொல்லாகும்... -நிகரான தமிழ்ச் சொற்கள் = சுடுகலன்(gun ), துமுக்கி (rifle), தெறாடி (musket), பீரங்கி → இச் சொல்லானது ஒரு போர்த்துக்கேய மொழிச்சொல். அப்படியே கடன் வாங்கி தமிழில் வழங்குகிறோம்.. -நிகரான தமிழ்ச் சொற்கள் = கணையெக்கி (Mortar), தகரி/தகரூர்தி (Tank), தெறோச்சி…

  12. ஆங்கிலத்துடன் ஒரு அக்கப்போர்! மொழிகளின் இயற்கை புரிந்துவிடு! மனிதர்க்குத் தமிழே ஆதிமொழி!-1 பேராசிரியர் ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், திருநெல்வேலி. "பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!" - பாவேந்தர் பாரதிதாசன் "இங்கிலீஸ்காரன் 26 எழுத்தை வைச்சுக்கிட்டு ஒலகத்தையே ஆட்டிப்படைக்கிறான்! தமிழ்-ல உயிர்-12; மெய்:1௮, உயிர்மெய்:216; ஆய்தம்:1 ன்னு ஆகமொத்தம் 247 வைச்சி ஒண்ணும் கிழிக்க முடியலே! தமிழ உருவாக்கின சிவபெருமான் short and sweet-ஆ யோசிக்கல போல", என்றார் நண்பர். "இருக்கலாம்!", என்றேன் நான். "என்னப்பா! ஏதாச்சும் சுவாரசியமாச் சொல்லுவேன்னு நெனச்சா பொசுக்குனு படுத்துட்டயே!", என்று உண்மையாகவே வருத்தப்பட்டார் நண்…

    • 1 reply
    • 1.7k views
  13. பழமொழி நாம் அனைவரும் அறிந்த ஒன்று பழமொழிக்கு பல அர்த்தங்கள் உண்டு இது வரை நான் அறிந்த பழமொழிகளை பாட்டியின் பழமொழியும் சங்கவியும் என்றும் பழமொழி என்றும் இருபதிவாக பதிவிட்டுள்ளேன். இப்பதிவில் நான் படித்த பலமொழிகளை தொகுத்துள்ளேன். பழமொழி என்றால் என்ன? ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக ஒரு சமுதாயத்தில், ஒரு பண்பாட்டில் உருவான நம்பிக்கைகளை, எண்ணங்களை, கருத்துக்களை, புத்திமதிகளை, அனுபவங்களை நறுக்குத்தெரித்தாற்போல நாலு வார்த்தைகளில் சொல்வதே பழமொழி. இது இலக்கிய நயமான சொற்களில் இருக்க வேண்டிய அவசியமில்லை. கொச்சையான கிராமத்தான் சொற்களிலும் இருக்கலாம். ஆனால் அதிலுள்ள ஆழமான கருத்தை விளக்க ஒரு பெரிய ஆய்வுக் கட்டுரையே தேவைப்படும். பாமர மக்களும் பழமொழிகளைச் சரளமாகப் பயன்படுத்துவது ஒரு…

    • 2 replies
    • 9.5k views
  14. சிவகுமாரின் மகாபாரதம் குமரி எஸ். நீலகண்டன் நடிகர் சிவகுமார் அவர்கள் ஈரோட்டில் பேசிய இரண்டு மணி நேர மகாபாரத சொற்பொழிவின் காட்சிப் பதிவினை சமீபத்தில் பார்த்தேன். என்னைப் பொறுத்தவரை எந்தக் குறிப்புமில்லாமல் மகாபாரதக் கதையை சொல்வதென்பது ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு கடலில் நீந்திக் கடப்பதற்கு ஒப்பானது. இன்னொரு உதாரணம் கூட சொல்லலாம். திசை தெரியாத அடர்ந்த வனத்திற்குள் நூறு கிலோ மீட்டர் தூரத்திலிருந்து தன்னந்தனியனாய் வெளியே வருவதற்கு ஒப்பானதாகும். மகாபாரதக் கதையை கையாளுவதென்பது மிகவும் கடினமானது. நிறைய குட்டிக் கதைகள்… நூற்றுக் கணக்கான கதாபாத்திரங்கள்… மிகச் சிக்கலான முடிச்சுகள் கொண்ட நூற்பந்து போல் உருவம் கொண்ட சிக்கலான மகா காவியம். அது ஒரு…

    • 1 reply
    • 975 views
  15. காற்றுக்கு எல்லையுண்டு, கண் காணும் காட்சிக்கு எல்லையுண்டு, கலவிக்கும் புலவிக்கும் எல்லையுண்டு. ஆனால் கனவில் நாம் காணும் காட்சிக்கும் கற்பனைக்கும் எல்லைகள் உண்டோ !!?? செவ்வரி விழிகள் செய்கை மறந்து செயலிழக்கலாம். தேனூறும் இதழ்கள் கசந்து போகலாம். தயங்கி புறத்தூண்டலில் மயங்கி பின் முயங்கும் காலம் அழிந்து போகலாம். ஆனால் வாசிக்கும் எழுத்துக்களால் வழிந்தோடும் கற்பனைகள் வருடிவிடும் காதல் நினைவுகள் ஊன் ஒடுங்கினும் ஓயாது. என்னை இந்த கற்பனை பிரபஞ்சத்தில் படர வைத்த இலக்கிய வரிகள் உங்கள் வாசிப்புக்கு... (Image courtesy: solvanam.com) ஓராயிரம் யானை கொன்றால் பரணி ..போர்ப் பொறி பறக்கும் பரணியில் காதற் பொறியும் பறக்கிறது.பரணி பாட சென்ற கணவன்மார்கள் வெற்றி கண்டு உடனே ஊர் திரு…

  16. சங்க இலக்கியத்தில் குறுங்கூளியரும் .. உருவெழு கூளியரும் .. சங்க இலக்கியங்கள் பல்வேறு வகையான நிகழ்த்துக் கலைஞர்களின் வாழ்வியல் குறித்துப் பேசுகின்றன. சங்கக் கலைஞர்கள் கலைகளை வளர்ப்பதற்கென்றே தங்கள் வாழ்நாளின் பெரும்பாலான நாட்களைச் செலவிட்டுள்ளனர். கலைவேறு வாழ்கை வேறு என்று அறிய முடியா வண்ணம் அவர்களின் வாழ்வியல் கலையோடு பின்னிப்பிணைந்திருந்தது. அவ்வகையில் இரவலர்க் கலைஞர்களாக அறியப்பெறும் குறுங்கூளியர் குறித்தும், அவரில் மற்றொரு பிரிவினரான உருவெழு கூளியர்கள் குறித்துமான பதிவுகள் சங்க இலக்கியங்களில் விரவியேக் காணப்படுகின்றன. இக்கலைஞர்கள் குறித்து உரையாசிரியர்களிடையே பல்வேறு கருத்துக்கள் நிலவி வருகின்றன. இவற்றில் உள்ள சில புரிதல்களை முன்வைப்பதாய் இக்கட்டுரை அமைகிறது.…

  17. வைசிய புராணமும்- வளையாபதியும் எது உண்மை? வளையாபதியின் சிறப்பு; வட மொழியில் தோன்றிய ரகுவம்சம் குமார சம்பவம் சிசுபால வதம் நைடதம் கிராதர்ஜீனியம் ஆகிய 5 நூல்களை பஞ்ச காவியம் என்று அழைப்பர்.அதே போல தமிழில் தோன்றிய சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம்,மணிமேகலை,வளையாபதி ,குண்டல கேசி ஆகிய 5 நூல்கள் ஐம்பெரும்காப்பியம் எனப்பட்டன. இந்த பாகுபாட்டை யார் வகுத்தது என்று தெரியவில்லை.. நன்னூலுக்கு உரை வழங்கிய மயிலை நாதர் ஐம்பெரும்காப்பியம் எண் பெரும்தொகை,பத்து பாட்டு எட்டு தொகை பதினொண்கீழ்கணக்கு என இலக்கியங்களை வகைபடுத்தியுள்ளார்..ஆனால் அவர்க் கூட ஐம்பெரும்காப்பியம் எவை எவை என்று வகைப்படுத்தவில்லை.. பிற்காலத்தில் ஆசிரியர் பெயர்தெரியா பாடலென்று ஐம்பெரும் காப்பியத்தினை வகை…

    • 3 replies
    • 8.2k views
  18. கொன்றை வேந்தன் பாட்டின் முதல் தொடரால் இந்நூல் இப்பெயரைப் பெற்றது. இதில் 91 அடிப்பாக்கல் உள்ளன கடவுள் வாழ்த்து கொன்றை வேந்தன் செல்வன் அடியினை என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே. நூல் உயிர் வருக்கம் 1. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் 2. ஆலயம் தொழுவது சாலவும் நன்று 3. இல் அறம் அல்லது நல் அறம் அன்று 4. ஈயார் தேட்டை தீயார் கொள்வர் 5. உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு 6. ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும் 7. எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும் 8. ஏவா மக்கள் மூவா மருந்து 9. ஐயம் புகினும் செய்வன செய் 10. ஒருவனைப் பற்றி ஓரகத்து இரு 11. ஓதலின் நன்றே வேதியர்க்கு ஒழுக்கம் 12. ஒளவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழிவு 13. அஃகமும் காசும் சிக்கெனத் தேடு ககர …

  19. பெண்ணைக் குறிக்கும் சொற்கள், தமிழில் ஏராளம் உண்டு. அதில், பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் என்று ஏழு பருவங்களுக்கும் தனித்தனிப் பெயர்கள். இவற்றைத்தவிர, வேறு சில சொற்களும் உள்ளன. அவை, அணங்கு, ஆடவள், ஆட்டி, இளம்பிடி, இளையாள், காந்தை, காரிகை, கோதை, சிறுமி, சுந்தரி, சுரிகுழல், தையல், நல்லாள், நாரி, நுண்ணிடை, பாவை, பூவை, பெண்டு, மகடூ, மகள், மடவரல், மடவோள், மாது, மாயோள், மானினி, மின், வஞ்சனி, வஞ்சி, வனிதை, நங்கை, மதங்கி, யுவதி, விறலி.

  20. நாம் அன்றாடம் பயன்படுத்தும், பழமொழிகளின்... உண்மையான அர்த்தம் இதுதான்.

    • 1 reply
    • 2.6k views
  21. திருப்தியுடன் உண்ட சுகத்தில், கவிஞர்கள் எழுதிய பாடல்களைப் போலவே, பசிப் பிணியாலும் இதர உடற்பிணியாலும் வருந்திய கவிஞர்களாலும் அருமையான பாடல்கள் பாடப் பட்டுள்ளன. அவ்வையார் பாடாத பொருள் இல்லை. பசிக்கு உணவளித்தவர்களைப் பாடியது போலவே, பசிப்பிணியை உணர்த்தும், வயிற்றையும் நொந்து அதனுடன் பேசுவதாக ஒரு பாடல் பாடி இருக்கிறார். "ஏ வயிறே! உன்னோடு வாழ்வது அரிதான செயலாகிவிட்டது. ஒரு நாளைக்கு உணவில்லாமல் இருக்கக் கூடாதா என்றால் கேட்க மறுக்கிறாய். எங்காவது விருந்துக்குப் போனால் இரண்டு நாட்களூக்கு போதுமான அளவு உண்டுவிடு என்றாலூம் கேட்பதில்லை. என் வலி உனக்குத் தெரியவில்லயே!" என்று பாடுகிறார். ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய் இருநாளைக்கு ஏலென்றால் ஏலாய் - ஒருநாளும் என்…

  22. 14 பிப்ரவரி 2023 பட மூலாதாரம்,GETTY IMAGES இன்று காதலர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. பலரும் காதல் கவிதைகளையும் திரைப்பாடல்களையும் சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். ஆனால், தமிழில் காதலைப் பேசும் பாடல்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இருந்து வருகின்றன. குறுந்தொகையில் காதலைப் பாடும் அழகிய பத்து பாடல்களை பொருளுடன் இங்கே படிக்கலாம். 1. யாயு ஞாயும் யாரா கியரோ எந்தையு நுந்தையு மெம்முறைக் கேளிர் யானு நீயு மெவ்வழி யறிதும் செம்புலப் பெயனீர் போல அன்பு…

  23. உலகின் எல்லா நாடுகளிலும் இப்போது தமிழர்கள் வாழ்கின்றார்கள். முன்பெல்லாம் தமிழர்கள் அதிகமாக வாழும் நாடாக தமிழகத்தை அடுத்து இலங்கையையும், மலேசியா சிங்கப்பூரையுமே நாம் உதாரணம் சொல்லிக் கொண்டிருந்தோம். ஆனால் தற்பொழுது உலகின் எல்லா மூலைகளிலும் தமிழர்கள் பரந்து விரிந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். பல்வேறு காரணங்களுக்காகத் தமிழர்கள் புலம்பெயர்ந்து சென்று வெவ்வேறு நாடுகளில் தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் சூழ்நிலை. இப்படி புலம்பெயர்ந்து செல்லும் போது, இருக்கின்ற நாட்டின் தேவைக்கேற்ப புதிய மொழி, கலாச்சாரம் ஆகியவற்றை பின்பற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படுகின்றது. இது தவிர்க்கப்படமுடியாத ஒன்றே. ஆகினும் தமிழ் மக்கள் தாய் மொழியை மறந்து விடாமல் தங்களது அடுத்த சந்ததியினருக்கும் இ…

    • 8 replies
    • 8.7k views
  24. தொல்காப்பிய கால பெண்களின் நிலைகள் முனைவர் பூ.மு.அன்புசிவா தொல்காப்பியம் தோன்றிய காலம் பற்றி பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட காலக்கணிப்பு ஏதும் இல்லை. பல்வேறு காலக்கட்டங்களில் பல ஆய்வாளர்கள் வௌ;வேறு விதங்களில் இதன் காலத்தை கணிக்க முயன்றுள்ளார்கள். பண்டையக்காலத்தில் பாண்டிய நாட்டில் இருந்து தமிழ் வளர்த்ததாகக் கருதப்படும் மூன்று தமிழ்ச் சங்கங்களில் இடைச் சங்க காலத்தின் இறுதியில் இந்நூல் எழுதப்பட்டதாகச் சிலர் கருதுகிறார்கள். இதன் அடிப்படையிலும், இறையனார் களவியல் உரை என்னும் நூலில் காணப்படும் மேற்படி சங்கங்கள் செயற்பட்ட கால அளவுகளை அடிப்படையாகக் கொண்டும். தொல்காப்பியம் கி.மு 5000 ஆண்டளவில் ஆக்கப்பட்டது என்று இவர்கள் கணித்தார்கள். எனி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.