கதைக் களம்
கள உறுப்பினர்களின் சிறுகதை | மொழியாக்க கதை| தொடர்கதை | பயண அனுபவங்கள் | நாடகம்
கதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, பயண அனுபவங்கள், நாடகம் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுயமான சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், பயண அனுபங்கள், நாடகங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.
648 topics in this forum
-
மணிக்கூட்டினைப் பார்த்தான் குமார். ஆறுமணி காட்டியது. "ஐயா உதில ஒருக்கா காசு கொடுக்கணும் . இப்ப உடன வந்திடுவன்".| என்றபடி, படியைநோக்கி வந்தவனுக்கு முன்னால், மிக வேகத்தோடு வந்து முன் பின் பிரேக்குகளை ஒரே சமயத்தில் அழுத்திப்பிடித்து ஆடிவிட்டு நின்றது பல்சர். அதில் இருந்தது ஒரு பதினாறு வயது மதிக்கத்தக்க சிறுவன். "அண்ண சீக்கரெட் இருக்கோ" மோட்டர்சைக்கிளில் இருந்தபடி கேட்டான். " உமக்கு தரேலாது நீர் சின்னப்பொடியன்." என்றான் குமார். அப்போதுதான் கடைக்குள் இருந்து குமாருக்கு உதவியாக வேலைசெய்யும் ஐயா எட்டிப்பார்த்தார். "அண்ண எனக்கில்ல அப்பாதான் வேண்டிவரச்சொன்னவர் அதுதான் நான் வந்தனான்" என்றான். இப்போது மோட்டர்சைக்கிளை விட்டு இறங்கி கடையின் சாமான் வேண்டும் பகுதியை அ…
-
- 6 replies
- 964 views
-
-
முத்தப்பா, வயது எழுபது . ஊரின் கால அடையாளம். பெரு மழை இரவுகளிலும் நூலகத்தின் வாசலில் குந்தி இருப்பார். அல்லது கோயிலடி மடத்தில் படுத்திருப்பார். கம்பராமாயணம் முதல் சகுந்தலா காவியம் வரையும், கிளிண்டன் முதல் ஜாக்கிசான் வரையும் அவரிடம் தகவல் இருந்தது. பட்டிமன்றங்களிலும் சரி ஐயர் ஓதும் மந்திரங்களிலும் சரி பிழை பிடித்து ஒரு குரல் ஒலிக்கிறது என்றால் அது முத்தப்பாவினதாகவே இருக்கும். இப்படிதான் ஒரு திருமண நிகழ்வில் ஐயர் வீடு குடிபுகும் போது சொல்ல வேண்டிய மந்திரத்தை சொல்லிவிட்டார் என்று சண்டையைக் தொடக்க..ஐயர் இங்கேயும் இப்ப நடப்பது புது வீடு குடிபுகுதல் மாதிரித்தான் அதனால் இந்த மந்திரமும் சொல்லலாம் என்று சமாளிச்சு போனதை அம்மா நெடுக சொல்லுவார். எந்தளவு படிச்ச …
-
- 6 replies
- 1.7k views
-
-
Sunday, April 19, 2020 உலையும் மனசோடு அலையும் இரவு. - சாந்தி நேசக்கரம் - குண்டம்மா ? இன்னும் எவ்வளவு நேரத்தில வாறீங்கள்? அவள் வட்ஸ் அப்பில் எழுதியிருந்தாள். இன்னும் ஒரு மணிநேரத்தில்...பதில் எழுதினேன். றெயின் கொலோன் பிரதான நிலையத்தைத் தாண்டி பிராங்போட் நோக்கி ஓடிக்கொண்டிருந்தது. எத்தைனயோ ஞாபகங்களும் மனசுக்குள் அலைபோலோடி வந்து உடையும் நுரைகளாய் மணலோடு கலந்து போவது போல பிள்ளைகளுடன் வாழ்ந்த காலங்களும் அவர்களுடனான ஞாபகங்களும் வந்து வந்து போய்க்கொண்டிருந்தது. றைன் நதியோரமாக றெயின் ஓடிக்கொண்டிருந்தது. ஆவணிமாதம் ஆற்றோரமெங்கும் பச்சையாகியிருந்தது. ஆங்காங்கே சரக்குக்கப்பல்கள் பயணித்துக் கொண்டிருந்தது. வெயில் ஏறாத கால…
-
- 6 replies
- 2.6k views
-
-
இரவு வேலைக்குப்போய் வந்து தன் தனிமை வாழ்க்கைக் கதையை தலையணையோடு பகிர்ந்துவிட்டு போர்வைக்குள் புகுந்த குமரன், பத்து மணி நேர வேலை அலுப்பின் அசதியை நித்திரையில் கரைத்துக்கொண்டு இருந்தான்.அந்த நேரம்பார்த்து சிவபூசையில் கரடி புகுந்தால்போல் அவன் தொலைபேசியின் அழைப்பு "நித்திரையா தமிழா நிமிர்ந்து பாரடா" என்ற பாடலுடன் ஒலித்தது.தூக்க அசதியில் கைபேசியை கையில் எடுத்து ஒருவாறாகாத் தடவி இணைப்பை காதுக்குள் வைத்தான் மறு முனையில் அவன் தாய் ஊரில் இருந்து "தம்பி என்ன நித்திரயா"?எனக் கேட்கவே "ஓம் அம்மா சொல்லன" என்று தன் தூக்க அலுப்பிலும் தன் பாசத்தை அன்போடு பகிர்ந்தான். தாயும் "அப்பன் அப்பாட துவசமடா இன்டைக்கு விரதமா இரையா" என்றவே அவனுக்கு சுருக்கென்று கோவம் வந்தது "இங்க என்ணண்டு என? வேலைக்கு…
-
- 6 replies
- 1.4k views
-
-
காலை 7 மணி கைத்தொலைபேசியும் வீட்டு தொலைபேசியும் மாறி மாறி அடிக்க. . யார்ராது காலங்காத்தால என்று எரிச்சலோடு போனை எடுத்தால் .. மனிசி பதட்டதோடு " என்னங்கோ. மரியா வீட்டு பெல்லை கனநேரமா அடிக்கிறேன் நாய்கள். குலைக்கிற சத்தம் தான் கேட்கிது கதவு திறக்கேல்ல . எனக்கு பயமாயிருக்கு. கெதியா வாங்கோ" என்றார் . ஆறுதலாக சோம்பல் முறித்து கொட்டாவி விட்டபடி. 10 மணிக்கு எழும்பும் நான் அரக்கப்பரக்க. எழும்பி சப்பாத்தை கொழுவிக்கொண்டு ஓடிப்போனேன் . மழை வேறு 4 வது நாளாக. விடாமல் அழுதுகொண்டேயிருந்தது .மரியா வீட்டுக்கு போவ துக்கிடையில் அவரைப்பற்றி சொல்லி விடுகிறேன். மரியா வயது 78 .வீட்டுக்கு அருகிலிருக்கும் வசதியானவர்கள் வசிக்கும். அதி நவீன வசதிகளுடன் கூடிய அடுக்குமாடி குடியிருப்பில் 7 வது ம…
-
- 6 replies
- 4.4k views
-
-
மௌனமான யுகங்கள் இன்பமான அதிர்ச்சியோடு தான் இந்த நாள் ஆரம்பித்தது, இன்னொரு புதிருக்கு விடை தரப்போவதும் தெரியாமலே! எதிர்பாராத விதமாக இன்று காலையில், அவசர அவசரமாக, எண்ணி ஒரு சில ஊழியர்களை மட்டும், அவர்கள் கடின உழைப்பை அங்கீகரித்து, பணி உயர்வு குறித்துப் பேச வேண்டும் என, முகாமைத்துவ அதிகாரி தனது அலுவலகத்துக்கு வருமாறு பணித்திருந்தார். அந்த ஒரு சிலரில் அவனும் ஒருவராக இருந்தான். அழைக்கப்பட்ட அனைவருமே நேர்மையான, கடின உழைப்பை விரும்புகின்ற ஊழியர்களாக இருந்தது அங்கு தொழில் புரிகின்ற அனைவருக்கும் தெளிவாகவே தெரிந்தாலும் எப்படி இவர்களைத் தெரிவு செய்தார்கள், யார் இவர்களைக் கண்காணித்தார்கள், எப்படி இது சாத்தியமாயிற்று என்பதெல்லாம் தெரியாத, புரியாத புதிராகவே இருந்தது. …
-
- 6 replies
- 1.8k views
-
-
புனிதப்போர்-சிறுகதை-சாத்திரி நடு இணைய இதழுக்காக ஓவியம்: சமித்திரா ஸ்ரீரங்கநாதன் 2005-ம் ஆண்டு யூலை மாதம் 25 நள்ளிரவை தாண்டிய நேரம் பிரான்சின் அதிபருக்கு உளவமைப்பன டி ஜி எஸ் சின் தலைவரிடமிருந்து அவசரமாக சந்திக்கவேண்டும் மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சரும் உடனிருந்ததால் விரும்பத்தக்கது என்றொரு தகவல் வந்திருந்தது.சிறிது நேரத்தில் அதிபரின் வீட்டிலேயே அந்த இரகசிய சந்திப்பு நடை பெற்றது. ஆப்கானிலிருந்த பிரெஞ்சு இராணுவத் தளத்திலிருந்து சங்கேத மொழியில் புலனாய்வு பிரிவு அனுப்பிய அந்த செய்தியை உளவமைப்பின் தலைவர் விபரமாக சொல்லி முடித்தபின்னர், “எல்லாமே தயார் நிலையிலுள்ளது. திட்டம் கூட வகுத்து விட்டார்கள்.உங்களின் சம்…
-
- 6 replies
- 2.1k views
- 1 follower
-
-
நேற்று ஒரு சம்பவம் வேலை இடத்தில் நடந்தது எல்லோரும் சாப்பிட அமர்த்து இருக்கும்போது கண்டவர் ..காணாதவர் என்று வர அனைவருக்கும் மாறி மாறி வணக்கம் சொல்லிட்டு உணவை சூடாக்கி சாப்பிட தொடங்கும் நேரம் பார்த்து பக்கத்தில் இருந்த ஆளின் தொலைபேசி ..பார்த்த முதல்நாளா என்னும் பாடலுடன் ஒலியை எழுப்ப அனைவரும் சத்தம் வந்த திசையை நோக்கி பார்க்க சட்டென போனை எடுத்து ஐந்து நிமிடம் கழித்து எடுக்கிறேன் வையும் என்று பதில் சொல்லி இணைப்பை துண்டித்தார் அவர் ... அந்த போன் வந்த நேரம் தொட்டு அருகில் இருந்தவருக்கு முகம் மாறிட்டு சாப்பிடாமல் அவரை பார்ப்பதும் பின் சாப்பாட்டை பிசைவதுமா இருந்தார் அவரின் செயலை பார்க்கும்போது ஆள் செம கடுப்பா இருக்கு என்று மட்டும் விளங்குது ..சரி என்னதான் பிரச்சினை என்று …
-
- 6 replies
- 1.8k views
-
-
அந்த குதிரை கடை கடையாக போய் நிற்கின்றது உணவுக்கடை உரிமையாளர்கள் தங்களிடம் உள்ள மிஞ்சிய உணவுகளை கொடுக்கின்றனர் ...குதிரைக்கு பிரியமான உணவு கொள்ளு என்பது சின்ன வயசில எங்களுக்கு சொல்லி தந்தவையள் .ஆனால் இந்த குதிரை பசி காரணமாக எதையும் திண்ணும் .புலம் பெயர்ந்த டமிழனை போல..எங்களை தான் சொல்லுறன் ,புட்டு இடியப்பம் என்று காலை மாலை ஊரில் சாப்பிட்டு ஏப்பம் விட்டு கொண்டு திரிந்த நாங்கள் இப்ப பேர்கர்,நூடிள்ஸ்,ஸ்பகட்டி.பாஸ்டா என்று சாப்பிட்டு ஏப்பம் விடுற மாதிரி அந்த குதிரையும் கொள்ளு சாப்பிட்டுறதை மறந்து யாழ்ப்பாணத்தானின்ட பேக்கரியில் இருக்கும் பணீஸ்,கொத்து ரொட்டி,தோசை ,இட்லி எல்லாம் சாப்பிட்டு கொழுத்து சுப்பர் சரக்கு போல ஊரை சுற்றி கொண்டு தனக்கு ஏற்ற ஜோடியை தேடிக்கொண்டு இருந்தது.…
-
- 6 replies
- 973 views
- 1 follower
-
-
15.07.1996 பார்த்திபனின் வரவு. 15.07.1996 பார்த்திபனின் வரவு. 12.07.1996 வெள்ளிக்கிழமை. காலைச்சாப்பாடு செய்து கொண்டிருந்தேன். வளமையைவிட வித்தியாசமாக வயிறு வலித்தது. கொஞ்சநேரம் வலி பிறகு ஏதுமில்லை. மதியத்திற்கு பிறகு என்னால் நிற்க இருக்க முடியாது விட்டுவிட்டு வலித்துக் கொண்டிருந்தது. பின்னேரமாகியது. வலியில் மாற்றமில்லை. என்னை மருத்துவமனைக்கு கூட்டிப்போகும்படி அழுதேன். ஏற்கனவே பலதடவைகள் மருத்துவமனை போய் வந்த அனுபவங்களைச் சொல்லி தாமதித்து போகலாம் என சொல்லப்பட்டது. வெள்ளிக்கிழமை பின்னேரம் நண்பர்களோடு கூடி கிறிக்கெட் விளையாடும் அவசரம் மட்டுமே இருந்ததை அறிவேன். பின்னேரம் வெளிக்கிட்டால் இரவு டிஸ்கோ உலாத்தி வீடு வர விடியப்பறமாகும். அதவர…
-
- 6 replies
- 3.7k views
-
-
ஜீவா எண்ணியும் பார்த்ததில்லை தமக்கும் இப்படி ஒரு நிலை வரும் என்று. வழமையாக அதிகாலையில் நித்திரையால் எழுவதுதான். பாடசாலைக்குச் செல்லும் கணவனுக்கும் பிள்ளைகளுக்கும் காலை உணவு செய்து பாடசாலைக்கும் கட்டி ஒழுங்கு செய்ய எப்பிடியும் ஒன்றை மணி நேரம் கடந்துவிடும். அதன்பின் எல்லோரையும் எழுப்பி பால் காச்சித் தேத்தண்ணியும் போட்டு எல்லாருக்கும் சேவகம் செய்யவே நாரிப்பூட்டு விண்டுவிடும். இப்ப மேலதிகமாக டாங்கிகளில் வரும் தண்ணீரைப் பிடிப்பதற்கு அரை மணி முன்னதாக எழுந்து வேலைகளை முடித்துவிட்டுக் காத்திருக்க வேண்டும். கொஞ்சம் பிந்தினாலும் பிறகு அரைவாசி தண்ணீர்தான் கிடைக்கும். எதோ தான் மட்டுமே தண்ணீர் பாவிப்பதுபோல கணவன் ஒருநாள் கூட உதவி செய்வதில்லை. சரி அவர் படிப்பிக்கப் போகவேணும்தான். அத…
-
- 5 replies
- 1.5k views
-
-
முந்தைய இரவின் மெல்லிய பனித் தூறலிலும் சில்லென்று வீசும் காற்றிலும் மெல்லிதாக அவனுக்கு குளிரத் தொடங்கியது. ஆனாலும் அவனது நோக்கம், எண்ணம் எல்லாம் அந்த வீடு பற்றியதாக இருந்தமையால் அவன் எதையும் பொருட்படுத்தாதவனாக நடக்கிறான். இன்னும் அந்த வீட்டில் யாரோ இருக்கிறார்கள் என்பதற்கான அடையாளமாக மெழுகுவர்த்தியோ அல்லது ஏதோ ஒன்றின் வெளிச்சத்தில் இரண்டு உருவங்கள் அங்கும் இங்குமாக அசையும் விம்பம் மட்டும் யன்னலூடாகத் தெரிந்தது. *** பனிக்காலம் முடிந்து வசந்த காலம் வந்துவிட்டது. இன்னும் அந்த வீட்டில் வசந்த காலத்துக்குரிய எந்த விதமான அறிகுறியும் தெரியவில்லை. பனிப்பொழிவு தொடங்கிய இந்த ஆறு மாத காலத்தில் ஒரு தடவை கூட அவளைக் காணவில்லை என்பதும் இதற்கான காரணங்களில் ஒன்றாகியது. அவ…
-
- 5 replies
- 2.3k views
-
-
இன்று எனக்கு நன்கு அறிமுமான ஒரு நண்பரை சந்திப்பதாய் ஒப்பந்தம் இருந்ததை கைத்தொலைபேசி சிணுங்கியபடியே அறிவித்தது. மனதில் அதைக் குறித்துக்கொண்டேன். அவருக்கு பின் மதியவேளை அவரை சந்திப்பதாகவும், நாம் ஒஸ்லோவின் மேற்குப் பகுதியில் உள்ள புறநகர் ஒன்றில் உள்ள ஒரு கோப்பிக் கடையில் சந்திப்போம் என்றும் குறும்செய்தி அனுப்பினேன். ”சரி” என்று பதில் குறுஞ்செய்தி வந்தது. கோப்பிக்கடைக்கு வெளியே நண்பர் உட்கார்ந்திருந்தார். அவரருகே உட்கார்ந்துகொண்டேன். பரிமாறும் அற்புத அழகியொருத்தி என்ன வேண்டும் என்றாள். ஒரு தேத்தண்ணி என்றேன். என்ன தேத்தண்ணி என்றுவிட்டு மாம்பழம், தோடம்பழம், இன்னும் பல பெயா்களைக் கூறி இதில் எது வேண்டும் என்றபடியே புருவத்தை உயர்த்தினாள், மாம்பழம் எனக்குப் பிடிக்கும் என்பதால் ம…
-
- 5 replies
- 1.6k views
-
-
நெடுஞ்சாலையின் அதிவேகத்தோடு வழுக்கியபடி ஓடிக்கொண்டிருந்த வாகனம் சற்று வேகத்தைக் மிதப்படுத்தி வெளிச்செல்லும் பாதையில் வளைவாக ஓடி சிவப்பு வெளிச்சத்தில் தரித்து நின்ற பொழுதில் வாகனத்துக்குள் சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த அனாவிற்கு தான் போகுமிடத்தை அண்மித்துக்கொண்டிருக்கிறோம் என்ற உணர்வு ஏற்பட்டது. அனா, அழகு என்றால் அனா என்று சொல்லுமளவிற்கு அங்கங்கள் ஒவ்வொன்றும் அளந்து செய்த செப்புச் சிலை. உயரமும் உயரத்திற்கேற்ற உடல்வாகும் பொன்நிற முடியும் பொலிவான தோற்றமும் கொண்ட அழகி மட்டுமல்ல அறிவு, துணிவு, ஆளுமை, கொண்ட பெண். சிறு வயதிலேயே படிப்பில் மட்டுமல்லாது விளையாட்டுத் துறையிலும் கலைகளிலும் அனாவின் தனித்தன்மை பெற்றவர்களை மட்டுமல்ல ஆசிரியர்களையும் வியக்க வைத்திருக்கிறது. உயர்வகுப்…
-
- 5 replies
- 1.6k views
-
-
அப்பா வீட்டில் சட்ட திட்டம் போடுவது குறைவு. அதை செய் இதை செய்யாதே என்று நச்சரிப்பது அரிதிலும் அரிது. இருப்பினும் சின்ன வயதிலிருந்து சில பழக்கங்களை வீட்டில் நடைமுறைக்கு கொண்டு வந்திருந்தார். அதிலொன்று இருட்டியதுவும் புத்தகமும் கையுமாய் மேசையில் போய் குந்த வேண்டும். இலங்கை வானொலியில் பின்னேர செய்தி முடிகிறபோது பெரும்பாலும் பகலை இரவு முழுவதுமாக விழுங்யிருக்கும். அதற்கு பிறகு விளையாட முடியாது. முகம் கழுவி சாமி கும்பிட்ட பிறகு புத்தகத்தோடு மேசைக்கு போக வேண்டும். இரவு சாப்பாடுவரை புத்தகத்தோடு இருக்கவேண்டும். என் பள்ளி காலங்கள் முழுவதும் இது வழக்கத்தில் இருந்தது. படிக்கிற காலத்தில் இது நிறைய உதவியதாக என்னளவிலான எண்ணம். இங்கு கனடாவில் சமர் காலத்தில் இர…
-
- 5 replies
- 3.2k views
-
-
"அமைதியின் கதவு திறக்கட்டும்" இலங்கையின் கிழக்குக் கடற்கரையில் உள்ள ஒரு சிறிய மீனவ கிராமத்தில், வங்காள விரிகுடாவின் அலைமோதும் நீருக்கும் தீவின் பசுமையான காடுகளுக்கும் இடையில், ரவி என்ற இளம் மீனவன் வசித்து வந்தான். ரவி தனது 25 வருட வாழ்க்கையில் மோதல்களையும் கொந்தளிப்பையும் தவிர வேறு எதையும் அறிந்திருக்கவில்லை. வடக்கும் கிழக்கும் என்றும் சண்டை, வலி மற்றும் பயம் ஆகியவற்றிற்கு உள்ளாக்கிக் கொண்டு இருக்கும் இந்த மண்ணில் தான் அவன் பிறந்தான். பல தசாப்தங்களாக, இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகள் ஒரு மிருகத்தனமான உள்நாட்டுப் போரால் சிதைக்கப்பட்டன. இந்த மோதல் ரவி போன்ற எண்ணற்ற குடும்பங்களுக்கு சொல்லொணாத் துன்பத்தையும், இழப்பையும்…
-
-
- 5 replies
- 507 views
- 1 follower
-
-
புன்னாலைக்கட்டுவன் பெற்ற புலிவீரன் மேஜர் தமிழரசன் (டொச்சன்) நவம்பர் 15, 2013 | ஒரு போராளியின் குருதிச் சுவடுகள். Edit Post (இயற்பெயர் - கந்தசாமி.ஜெயக்குமார்) வீரப்பிறப்பு- 21.06.1966 – வீரச்சாவு – 24.11.1992 வடக்குப்புன்னாலைக்கட்டுவன் 80களில் விடுதலைப்புலிகளை ஆதரித்த ஊர்களில் ஒன்று. இங்கு பல ஆரம்பகால விடுதலைப்புலிகளின் வரலாறும் பலரது வரலாற்றின் வேர்களும் பரவியிருக்கிறது. தலைவர் பிரபாகரன் வந்து தங்கி வாழ்ந்து அவரைப் பாதுகாத்த ஊர்களில் வடக்குப்புன்னாலைக்கட்டுவனும் ஒன்று. தலைவருடன் வாழ்ந்த போராளிகளில் ஒருவர் தலைவர் நன்றியுடன் ஞாபகம் கொள்ளும் ஒருவர் பற்றி ஒருமுறை உரையாடிய போது சொன்னவை :- புன்னாலைக்கட்டுவனில் தலைவரை பாதுகாத்த குடும்பங்களில் ஒன்று சுவிஸ் குல…
-
- 5 replies
- 1.5k views
-
-
ஆபிரிக்காவில் பசியிருக்கும் ஈழப்போராளியின் குழந்தைகள். சாந்தி ரமேஷ் வவுனியன் அவன் ஒரு கடற்புலிப்போராளி. அவனொரு திறமையான சண்டைக்காரன். அவனொரு சிறந்த படகோட்டி , அவனொரு சிறந்த கலைஞன் , நடிகன்....! இப்படித்தான் அவனைப்பற்றிய அறிதல் இருந்தது. 2009 முடிவுகளின் பின்னர் நாட்டைவிட்டுத் தப்பிவிட ஆயிரக்கணக்கில் நேசித்த தாயகத்தைவிட்டு வெளியேறவும் அவர்களது குடும்பங்களையும் குழந்தைகளையும் காப்பாற்றவும் வேண்டிய கட்டாயத்தில் இந்தியா , இந்தோனேசியா ,மலேசியா என கடல்கடக்கத் துணிந்தார்கள். எரியும் வீட்டில் பிடுங்கியது மிச்சமென புதிய புதிய வெளிநாடனுப்பும் முகவர்கள் பாதிக்கப்பட்ட போராளிகளை அணுகினார்கள். வெளிநாடுகளில் இருந்தெல்லாம் பல அழைப்புக்கள். துறைசார்ந்த நட்புகள் தொடக்கம் பல …
-
- 5 replies
- 1.5k views
-
-
புலிகளை வன்மையாகச் சாடுவேர் பற்றி நினைக்கையில் எனது பெரிய தந்தையார்தான் நினைவுக்கு வந்து போவார். முன்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஆதரவாளராக இருந்தவர். புலிகளின் காலத்தில் எதுவுமே அவர்களுக்கு எதிராகப் பேசமாட்டார். ஒருமுறை வவுனியாவுக்குச் சென்று வந்ததன் பின்னர். புலிகளுக்கெதிராக வீட்டில் கடுமையாக பேசத் தொடங்கிவிட்டார். ஆனால் (ஒன்றுவிட்ட)அண்ணன்மார் இருவரும் புலிகளின் பயங்கர ஆதரவாளர்கள். இதனால் அடிக்கடி அவர்களுக்குள் கொள்கைரீதியான முரண்பாடுகள் வரும். சிலவேளகளில் பேசாமல் கூட இருப்பார்கள். பெரியப்பாவின் மாற்றம் குறித்து சின்னண்ணாவும் நானும் ஆராயத் தொடங்கினோம். கடைசியில் எங்களுக்குத் தெரிந்த ஆசிரியர் ஒருவர்,வவுனியா செல்லும்போது புலிகளின் செக்பொயின்டில் பெரியப்பாவுக்…
-
- 5 replies
- 1.5k views
-
-
ஊர்களில் பெரும்பாலும் பேசப்படும் சொல் இந்த ஓடிப்போதல் எங்க அப்பத்தா அடிக்கடி சொல்லுவா யாராவது பற்றி பேசிக்கொண்டு இருக்கும் போது, அவன் அவளோட எல்லோ ஓடி போனவள் என்று .அல்லது இன்னாரின் பெடியன் அவற்ற பேத்தியோட ஓடிப்போனவன் என்று ,சொல்லும் போது அறியாத வயதில் விபரம் தெரியாத நாம் என்ன இது ஓடிப்போறது என்று குழம்பி போய், என்ன கிழவி ஓடுறான் ஓடுறாள் என்று சொல்லுற என்ன அது என்று கேட்டா உனக்கு இப்ப முக்கியம் போடா போ போய் வாய்ப்பாடு எடுத்து பாடமாக்கு என்று கிழவி கலைக்கும் .. பிறகு கொஞ்ச காலம் போக எங்க வீட்டுக்கு பக்கத்தில ஒரு கலியாணம் நடந்தது ஊரே ஒரே பரபரப்பு, இந்தா அவனின் மாமன் வாறான் ..மூத்த அண்ணன் வாறன் சரி அடிபாடு தொடங்க போகுது என்று, எல்லோரும் ஆளையால் மாறி மாறி கதையும் ஓடி ஓ…
-
- 5 replies
- 1.8k views
-
-
ஒவ்வொருவருடைய வாழ்விலும் சில சந்தர்ப்பங்கள், வாழ்வின் திருப்பு முனையாக அமைவது உண்டு . அந்த வகையில் சாதனா வாழ்க்கையிலும் ஒரு சம்பவம். பள்ளிப் படிப்பின் பத்தாம் ஆண்டு , முதற் தடவை ஓல் பரீட்ச்சை யில் எட்டுக்கு ஐந்து படங்கள் சித்தி எய்திய நிலையில் கணிதம் அவளுக்கு தோல்வியை தந்தது . பெற்றோரிடமும் ஆசிரியரிடமும் நன்றாக வாங்கி கட்டிக்க கொண்டாள் . " பராக்கு க்கு கூடிபோச்சு" "படிச்சு முன்னேறும் வழியை பாரு " " தோழிகள் சகவாசம் கூடிப்போச்சு" "தலை யலங்காரம் செய்யும் வேளை படித்தால் என்ன ? என சில நாகரிகமற்ற வசவுகள் . அவளை மேலும் கவலை யும் கண்டனங்களும் ஈட்டியாய் குத்தின.. அடுத்த கல்வி ஆண்டு ( ஏ எல்) வேறு பாடசாலை க்கு சக மாணவிகள் பாடசாலை மாற தயார…
-
- 5 replies
- 1.9k views
- 1 follower
-
-
சுவரில் இருந்த கடிகாரம் 'டாண்... டாண்...' பன்னிரண்டு முறை அடித்து ஓய்ந்தது. திடுக்கிட்டவளாக தன் நினைவுகளில் இருந்து மீண்டாள் சந்தியா. சாய்ந்திருந்த தூணில் இருந்து சற்று நிமிர்ந்தமர்ந்து பார்வையை சுற்றுமுற்றும் ஓடவிட்டாள். அவள் அருகில், அவளின் ஒரே மகனான ராஜு நன்கு அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தான். அடுத்த அறையில் இருந்து வரும் 'லொக்கு... லொக்கு...' இருமல் ஒலி அவள் தாயாரின் உடல் நிலையை ஊருக்குகே பறைசாற்றியது. எதிரே கண்ணாடி பிரேமினுள் இருந்து அவளது அப்பா அவளை தன் சோடப்புட்டி கண்ணாடியோடு பார்த்து சிரித்தார். " ம்..." நீண்ட பெருமூச்சு அவளிடம் இருந்து வந்தது. 'அப்பா செத்து ஐந்து வருடமாச்சு' தனக்குள் நினைத்துக் கொண்டாள். அவள் நினைவுகளில் மீண்டும் புதைந்துகொண்டாள் அவளை அ…
-
- 5 replies
- 1.3k views
-
-
எட்டுமணிக்கு முந்திய காலைப்பொழுது. தினம் விரியும் காட்சிகள் அப்படியே விரிந்து கொண்டிருக்கின்றன. பத்து நிமிட நடையில் மூன்று நடைபாதை நித்திரைகொள்ளிகள். காட்டுக்குள் காட்டெருமைகள் குழாமாய் நீரிற்கு ஓடுவதைப்போல் அலுவலகம் நோக்கி மனிதர்கள் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். நடைபாதை நித்திரைகொள்ளிகளை மிதித்துவிடக்கூடாது என்ற கவனத்தில் மேற்படி மூன்று இடங்களிலும்; காட்டருவி கிளையாய்ப் பிரிந்து பின் மறுபடி சேர்ந்து ஓடுவதைப்போல அலுவலக பயணிகள் விலகி இணைந்து நடந்து கொண்டிருந்தார்கள். நடைபாதை மனிதரை மிதித்துவிடக்கூடாது என்ற சிரத்தையில் நமக்கு அழுக்காகுமோ என்ற கவனமும் அவர்களிற்குள்ளாக இருந்ததாகவே பட்டது. அழுக்கு எனும்போது அது மனவெளியில் நடைபாதை மனிதன் சித்தரிக்கும் அந்தஸ்த்து இழப்பு சார்ந்து நிக…
-
- 5 replies
- 2.6k views
-
-
அவர் ஒரு ஆபிரிக்க செனகல் நாட்டைச்சேர்ந்த வயதான பெண். அடிக்கடி கடைக்கு வருவார். நிறைப்பணம் செலவளிப்பார். ஊருக்கும் அனுப்புவார். கனக்க பைல்கள் கொண்டு வந்து போட்டோக்கொப்பி எடுத்து பல இடங்களுக்கும் அனுப்புவார். பைல்கள் முறையாக அடுக்கப்பட்டு அதற்கேற்ப ஒழுங்கமைக்கப்பட்டு இருக்கும். எழுதப்படிக்கத்தெரியாத அவரது இந்தத்திறமையைக்கண்டு நான் பிரமித்ததுண்டு. எழுதப்படிக்கத்தெரியாததால் என்னிடம் விலாசங்களை எழுதித்தரும்படி கேட்பார். அதில் பிள்ளைகளின் படிப்பு மற்றும் சொத்துக்கள் சம்பந்தமானதும் விவாகரத்து மற்றும் முறைப்பாடுகள் சார்ந்த அமைச்சுக்களின் விலாசங்களும் இருக்கும். ஒருநாள் கனநேரமாக தொலைபேசியில் அழுதபடியிருந்தார். என்னுடனும் …
-
- 5 replies
- 2.5k views
-
-
ஆரண்ய காண்டம் ---------------------------- இராமன் நாடு விட்டு காடு போய், அங்கு காட்டில் வாழ்ந்த நாட்கள் தான் ஆரண்ய காண்டம் என்று படித்திருக்கின்றோம். அங்கே காட்டில் கொடிய அரக்கர்களும், அசுரர்களும் இருந்தார்கள். அவர்கள் வனத்தில் தவமிருந்த அப்பாவி முனிவர்களுக்கு தொல்லைகளும், கஷ்டங்களும் கொடுத்தார்கள். இராமன் அந்த துஷ்டர்களைக் கொன்று அழித்தார் என்று அந்த ஆரண்ய காண்டத்தில் இருக்கின்றது. அப்படியே இராவணன் வந்து சீதாப்பிராட்டியை கவர்ந்து சென்றதும் அதே ஆரண்ய காண்டத்தில் தான். 'ஆரண்ய காண்டம்' என்னும் படம் தான் தமிழில் வந்த மிகச் சிறந்த பாதாள உலகம் பற்றிய, தாதாக்களை, சண்டியன்களை, ரவுடிகளை பற்றிய படம் என்று பல வருடங்களின் முன் ஒரு எழுத்தாளர் எழுதியிருந்த…
-
-
- 5 replies
- 620 views
-