நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3030 topics in this forum
-
மெனோபாஸின் பின்னரும் மாதவிடாய் ஏற்படலாமா? பெண்களின் மாதவிடாயானது நிரந்தரமாக நிற்கும் பருவம் மெனோபாஸ் என அழைக்கப்படும். இவ்வாறான மெனோபாஸ் பருவம் ஏற்படும் வயதானது 45 வயதிலிருந்து 55 வயது வரை மாறுபடும். அதாவது சிலரில் 45 வயதில் மாதவிடாய் நிரந்தரமாக நிற்கும். சிலரில் 50 வயதில் நிற்கும். சிலரில் 55 வயதில் நிற்கும். இவ்வாறு பாரிய வேறுபாடுகள் உள்ளது. எந்த வயதானாலும் மெனோபாஸ் பருவமடைந்து மாதவிடாய் நிரந்தரமாக நின்று போன பெண்களில் பல மாதங்களின் பின்னர் சரி அல்லது பல வருடங்களின் பின்னர் சரி மீண்டும் மாதவிடாய் போன்ற இரத்தப் போக்கு ஏற்பட்டால் அதன் அர்த்தம் என்ன? இது ஒரு பயப்படக்கூடிய அல்லது அச்சப்படக்கூ…
-
- 0 replies
- 315 views
-
-
பெண் பருவமடைய ஆரம்பித்ததிலிருந்து தொடங்கும் மாதாந்திர பிரச்னையான மாதவிலக்கு முழுமையாக நின்று விடுவதற்கு "மெனோபாஸ்" என்று பெயர். "மெனோபாஸ்" என்ற வார்த்தை பெண்களின் மகப்பேறு வாழ்க்கை வரலாற்றில் காணப்படும் இறுதியான அத்தியாயம். சுருங்க கூற வேண்டுமாயின் "கருப்பை" முற்றிலுமாக எடுத்துக் கொள்ளும் ஓய்வு நேரம் ஆகும். இந்நிகழ்ச்சி உள்ளுறுப்புகளில் நடந்தாலும், வெளிப்படையாக அறிந்து கொள்வது எப்படி? என்றால், வழக்கமாக வரும் மாதவிலக்கு, முற்றிலுமாக நின்று விடும் கட்டம் தான் "மெனோபாஸ்" என்று கூறப்படுவதாகும். பேருந்தில் பிரயாணம் பண்ணும்போது நிறைய நிறுத்தங்கள் வந்தாலும் சில இடங்களில் மட்டும்தான் `ஸ்டேஜ்' வருகிறது. அங்கு தான் சோதனை செய்யப்படும். அது போலவே பெண்களின் வாழ்க்கையிலும் ஒன…
-
- 20 replies
- 11.3k views
-
-
அனைவருக்கும் தேங்காய் எண்ணெயின் பயன்களைப் பற்றி நன்கு தெரியும். இதுவரை அந்த எண்ணெயை கூந்தலுக்கு தடவ மட்டும் தான் செய்வோம். சிலர் அந்த எண்ணெயை வைத்து தலைக்கு மசாஜ் செய்து, பின் ஷாம்பு போட்டு குளிப்பார்கள். அதிலும் எண்ணெயை சூடேற்றி, காய வைத்து, பின் மசாஜ் செய்வார்கள். ஆனால் தற்போது கூந்தல் நன்கு ஆரோக்கியமாக, பட்டுப் போன்று மின்னுவதற்கு தேங்காய் எண்ணெயை வைத்து ஹேர் மாஸ்க் செய்யலாம். இப்போது அந்த தேங்காய் எண்ணெயை வைத்து எப்படி மாஸ்க் செய்வதென்று பார்ப்போமா!!! தேங்காய் எண்ணெய் மற்றும் தேன்- கூந்தலை நன்கு ஈரப்பசையோடு வைப்பதில் தேங்காய் எண்ணெயும், தேனும் மிகவும் சிறந்தது. ஆகவே அதற்கு 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேனை கலந்து, ஸ்கால்ப்பிற்கு தடவி, சிற…
-
- 1 reply
- 659 views
-
-
-
இலங்கையில் மாத்திரமல்லாமல் உலகெங்கிலும் சமூக, பொருளாதார, கலாசார மற்றும் உடல் உள ஆரோக்கிய பிரச்சினைகளில் ஒன்றாக மதுசாரப் பாவனை விளங்குகின்றது. இப்பாவனை காரணமாக வருடமொன்றிற்கு உலகளாவிய ரீதியில் கிட்டத்திட்ட 3மில்லியன் மக்கள் மரணிக்கின்றனர். அதாவது உலகில் வருடம் ஒன்றிற்கு ஏற்படும் மரணங்களில் கிட்டத்தட்ட 6வீதமான மரணங்களுக்கு அடிப்படைக் காரணமாக மதுசார பாவனை உள்ளது. அத்தோடு உலகில் ஏற்படும் நோய்களில் 5.1வீதமான நோய்கள் மதுசார பாவனையினால் ஏற்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது. இலங்கையைப் பொறுத்தவரையில் வருடமொன்றிற்கு கிட்டத்தட்ட 23000பேர் மதுசார பாவனையினால் மரணிக்கின்றனர். 297மில்லியன் இலங்கை ரூபாய் மதுசார பாவனைக்காக எமது மக்களால…
-
- 1 reply
- 1.2k views
-
-
*****மனிதன் அதிகம் உண்ணும் சத்தில்லாத உணவுகளில் சீனியும் ஒன்று. உண்மையில் நம்முடைய உடலுக்கு சீனி அறவே தேவையில்லை. உடலுக்கு சக்தி தேவைப்படும்போது இதர உணவுகள் குளூகோஸ் ஆக மாற்றி அமைக்கப்படுகின்றன. **** சீனி உடலுக்கு எந்த சத்தையும் கொடுக்காமல் இருப்பதோடு மட்டுமல்லாமல், உடம்பிலுள்ள சத்தையும் ஈர்த்துக் கொள்கிறது. அதனால்தான் இது சத்தில்லாத கலோரி, சத்தில்லாத உணவு என்றும் அழைக்கப்படுகிறது. ******சிகரெட், மது முதலியவற்றைவிட சீனி அதிக ஆபத்தானது என்று சொல்லலாம். புற்றுநோய், எலும்பு முறிவு நோய், மூட்டு வியாதிகள், உடல் பருமன், இதய நோய்கள், இரத்த அழுத்தம், சருமநோய்கள், விரைவில் முதிர்ச்சி, முதுமை, பித்தக்கல், ஈரல்நோய், சிறுநீரகக்கோளாறு, சொத்தைப்பல், பெண்ணுறுப்பு தொற்றுநோய், அளவுக்க…
-
- 10 replies
- 1.9k views
- 1 follower
-
-
மெல்லத் தமிழன் இனி...! 18 - ஏழு தலைமுறை தாண்டியும் தாக்கும் ஏவுகணை! கடந்த அத்தியாயத்தில் அந்த இளைஞருக்கு எந்த ஒரு பிரச்சினையும் இல்லை; ஆனால், அவர் ஏன் மது அருந்துகிறார் என்று அவரைப் பரிசோதித்த மருத்துவர்களாலும் சொல்ல இயலவில்லை என்று குறிப்பிட்டிருந்தோம். கட்டுரையைப் படித்துவிட்டு நிறைய பேர் தொடர்புகொண்டு காரணங்களை அடுக்கினார்கள். பெரும்பாலானவர்கள் குறிப்பிட்டது ‘திமிர்’. இதுகுறித்து டாக்டர் மோகன வெங்கடாசலபதியிடம் கேட்டேன். “அப்படிச் சொல்ல வேண்டாம். உண்மையில், மிகவும் பரிதாபத்துக்குரியவர் அவர். அவர் ஏன் மது அருந்துகிறார் என்பது அவருக்கே தெரியாது. அவர் ஒரு குடிநோயாளி என்பது மட்டுமே உண்மை. அந்தரீதியில் மட்டுமே அவரை அணுக வேண்டும். அந்த இளைஞருக்கு மட்டும் இல்லை. பொதுவாகவே …
-
- 0 replies
- 599 views
-
-
அன்று முதல் இன்றுவரை புகை பிடிப்பது இளைஞர்கள் மத்தியில் ஃபேஷனாகவே இருக்கிறது. தான் பெரிய ஆள் என்பதை உணர்த்துவதற்காக சிகரெட்டை விரல் இடுக்கில் பிடித்தபடி ஸ்டைல் காட்டும் இளைஞர்கள் இன்று அதிகம். புகை பிடிக்கும் பெண்களும் இன்றைக்கு அதிகரித்து வருகிறார்கள். புகை பிடிப்பது உடல் நலத்துக்குத் தீங்கு விளைவிக்கும் என்று சிகரெட் பாக்கெட்டில் அச்சிடப்பட்டுள்ள வாசகங்களைப் பற்றியெல்லாம் யாரும் கவலைப்படுவதில்லை. புகை பிடிப்பவர்களுக்கும் புகையிலை சார்ந்த பழக்கம் கொண்டவர்களுக்கும் மற்றவர்களைவிட புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்பது புதிய தகவல் இல்லை. ஆனால், ஒரு பக்கம் புற்றுநோய் மரணங்கள் அதிகரித்துவருவதும், மற்றொரு புறம் புகையிலைப் பொருட்கள் விற்பனை அதிகரித்துவருவதையும் ஒருசேரப் பா…
-
- 1 reply
- 513 views
-
-
மேஜிக் காளான்களில் உள்ள சைலோசிபின் மன அழுத்தத்திற்கு மருந்தாக பயன்படுகிறதா? ஃபிலிப்பா ரோக்ஸ்பி சுகாதார நிருபர் 23 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் மேஜிக் காளான்களில் காணப்படும் சைலோசிபின் என்கிற ஒருவித மயக்கத்தை தரக்கூடிய ரசாயனம், தீவிர மன அழுத்தத்தில் சிக்கியுள்ளவர்களை அதிலிருந்து விடுவிக்கும் என ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. மன அழுத்தத்திலிருந்து வெளியில்வர எடுத்துக்கொள்ளப்படும் வழக்கமான மருந்துகளைவிட இவை அதிக செயலாற்றுவதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வுக்காக 60 பேரின் மூளையை ஸ்கேன்…
-
- 0 replies
- 226 views
- 1 follower
-
-
அதிகமாக சாப்பிடுதல், அதிக உடலுக்கு கெடுதல் விளைவிக்கக்கூடிய பானங்களை அருந்துதல், மிக குறைவான உடற்பயிற்சி போன்ற மேற்கத்திய வாழ்க்கை முறைகளாலேயே பிரித்தானியாவில் இருக்கும் பெண்களுக்கு அதிக அளவில் மார்பக புற்றுநோய் உருவாவதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். கிழக்கு ஆப்ரிக்காவில் தான் மார்பக புற்றுநோய் வீதம் மிக குறைவு. அதனோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் பிரித்தானியாவில் உள்ள பெண்களுக்கு மார்பக புற்றுநோய் 4 மடங்கு அதிகமாக உள்ளது அதிர்ச்சியளிப்பதாக உள்ளதாகவும் கூறியுள்ளனர். அதே போன்று தென் அமெரிக்கா மற்றும் ஆசியாவின் சில பகுதிகளிலும் மார்பக புற்றுநோய் வீதம் குறைவாக இருப்பதை சுட்டிக் காட்டியுள்ள நிபுணர்கள் இதிலிருந்து மேற்கத்திய வாழக்கை முறையை மாற்றிக் கொண்டால்…
-
- 0 replies
- 590 views
-
-
மைக்குரேவேவ் அவன்கள் குறுகிய காலத்தில் மிகப்பிரல்யம் ஆனதும் மட்டுமன்றி மனிதர்களை சோம்பேறியும் ஆக்கியது. இப்ப என்னடான்னா அந்த மைக்குரேவேவ் அவன்களின் பெருக்கம் தான் உடற்பருமன் ஆண்களிலும் பெண்களிலும் சிறுவர்கள் மத்தியிலும் அளவுக்கு அதிகமாக இருக்க காரணமாகியுள்ளது என்று பிரித்தானிய ஆய்வென்று கண்டறிந்துள்ளது..! உடற்பருமன் அதிகரித்தால் தெரியும் தானே தோன்றாத நோயெல்லாம் தோன்றிக் கொள்ளும்..! Microwaves may be to blame for kick-starting the obesity epidemic, a UK scientist suggests. http://news.bbc.co.uk/1/hi/health/6725775.stm
-
- 16 replies
- 2.8k views
-
-
மைக்ரோ வேவ் சமையல்- உஷார் மைக்ரோ வேவ் இல்லத வீடு தற்ப்போது தேடி பார்த்தால் குறைவு தான். அந்த அளவுக்கு இந்த அவன் அத்தியாவசியம் ஆகிவிட்டது. மைக்ரோ வேவ் அவனில் சமைக்கப்படும் உணவுப் பொருட்கள் கடுமையான மூலக்கூறு சிதைவுக்கு உட்படுகின்றன. அத்தகைய உணவுகளை உண்பது இரத்தத்தில் மாற்றங்கள் ஏற்படுத்துவதோடு உடலின் நோயெதிர்ப்பு தன்மையையும் பாதிப்பதை புதிய ஆராய்ச்சி முடிவுகள் காட்டுவதாகDr.மெர்கோலா தெரிவிக்கிறார். அனேக மக்கள் இது பற்றிய விழிப்புணர்வின்றி அலட்சியமாக இருக்கிறார்கள். *** புரொக்கொலி (broccoli) எனும் உணவுப் பொருளில் உள்ள மூன்று முக்கிய புற்று நோய்த் தடுப்பு ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் (antioxidant)கள் ஆவியில் வேக வைப்பதை விட மைக்ரோ வேவ் அவனி…
-
- 1 reply
- 804 views
-
-
பட மூலாதாரம்,SERENITY STRULL/BBC/GETTY IMAGES மைக்ரோக்லியா என்பது நம் மூளையில் நிரந்தரமாக இருக்கும் நோய் எதிர்ப்பு செல்கள். நோய்க் கிருமிகளைக் கண்டறிந்து அவற்றை அழித்து மூளையின் ரத்த நாளங்களைப் பாதுகாப்பதுதான் அவற்றின் வேலை. ஆனால், அந்த செல்களே மூளைக்குத் தீங்கு விளைவித்தால் என்ன ஆகும்? நோய் எதிர்ப்பு அமைப்பைப் பாதுகாக்கும் செல்களாகவே அவை பெரும்பாலும் அறியப்படுகின்றன. ஆனால், போதைப் பழக்கத்திற்கு அடிமையாதல் முதல் வலியை ஏற்படுத்துதல் வரை பலவற்றில் மைக்ரோக்லியா முக்கியப் பங்கு வகிப்பதாக விஞ்ஞானிகள் தற்போது அதிகளவில் நம்புகின்றனர். அல்சைமர் நோய், மன அழுத்தம், மனப் பதற்றம், கோவிட் தாக்கம், நாள்பட்ட சோர்வு ( chronic fatigue syndrome) என அற…
-
- 0 replies
- 390 views
- 1 follower
-
-
-
மொபைல் போன்களால் ஆபத்து: மூளைப்புற்று நோய், ஆண்மை குறைவு, இதயநோய் அபாயம் மொபைல் போன் பயன்படுத்துவோருக்கு, அதனால் என்னென்ன பாதிப்புகள் எல்லாம் ஏற்படும் என ஒவ்வொரு நாளும்,புதுப்புது தகவல்கள் வெளிவந்தபடி இருக்கின்றன. மொபைல் போன்களால், அதை பயன்படுத்தாதவர்களுக்கும் பாதிப்பு ஏற்படும் என்பது தெரியுமா? உண்மை தான் என்கிறார் கனடா நாட்டு ஆராய்ச்சியாளர், டாக்டர் ஹாவர்டு பிஷர். மொபைல் போன் மற்றும் கதிர்வீச்சு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், "கண்ணுக்கு புலப்படாத அபாயம்' என்ற தலைப்பில் எலக்டோரமேக்னடிக் கதிர்வீச்சு மற்றும் மொபைல் போன் கதிர்வீச்சுகளால் ஏற்படும் அபாயத்தை விவரித்துள்ளார்.மொபைல் போன் இல்லாத ஒருவர், அருகில் உள்ள இன்னொருவர் மொபைல் போன் பயன்படுத்தும் போ…
-
- 0 replies
- 1.6k views
-
-
[size=4]பொதுவாக பால் பொருட்களில் அதிக அளவு கொழுப்பு சத்துக்கள் நிறைந்துள்ளன என்று தான் அனைவருக்கும் தெரியும். ஆனால் பால் பொருட்களில் பாலில் மட்டும் தான் அதிக அளவு கொழுப்பு உள்ளது. மற்ற பொருட்களிலும் குறைந்து அளவே கொழுப்புகள் உள்ளன. அதிலும் தயிரில் தண்ணீரை சேர்த்து, அடித்து மோர் போன்று செய்து தினமும் குடித்தால், நிச்சயம் உடல் பருமன் குறையும். அதிலும் தயிரை வாங்கும் போது குறைந்த கொழுப்புச்சத்து நிறைந்துள்ள தயிரை வாங்கி, மோர் தயாரிக்க வேண்டும்.[/size] [size=4]மேலும் ஒரு டம்ளர் பாலை விட மோரில் மிகவும் குறைந்த அளவு கலோரிகள் மற்றும் கொழுப்புகள் உள்ளன. இதனால் இது ஒரு சிறந்த ஆரோக்கியத்தை தரும் பானமாகும். அதிலும் தினமும் ஒரு டம்ளர் மோரை குடித்தால் எடை குறைவதோடு, உடலில் இருக்கும்…
-
- 0 replies
- 780 views
-
-
யப்பானியர்களின் நீண்ட ஆரோக்கியமான ஆயுளுக்கான காரணங்கள்
-
- 3 replies
- 605 views
-
-
யானைகள் சீக்கிரமே எங்க விருந்தாளியாக வரும்; ஆவலுடன் காத்திருக்கிறோம்!"- நடிகர் கிஷோர் "எங்க தோட்டத்துலயும் பலா மரம் நல்லா வளர்ந்துட்டு வருது. அதுல காய்கள் அதிகரிக்க ஆரம்பிச்சதும், யானைகள் தினசரி விருந்தாளியா வர ஆரம்பிச்சுடும்." ‘ஆடுகளம்’, ‘கபாலி’ உட்பட பல தமிழ்த் திரைப்படங்களில் நடித்திருக்கும் கிஷோர், கன்னடம் மற்றும் தெலுங்கிலும் புகழ்பெற்ற நடிகர். இயற்கை விவசாயத்தின்மீது அதீத ஆர்வம் கொண்டவர். நடிப்புக்கு இடையே மனைவி விஷாலாவுடன் இணைந்து இயற்கை விவசாயம் செய்துவருகிறார். பெங்களூருவில் இருந்து 35 கிலோமீட்டர் தொலைவிலுள்ள கரியப்பனதொட்டி கிராமத்தில் அமைந்திருக்கிறது இவரின் …
-
- 0 replies
- 654 views
-
-
Carpal tunnel surgery செய்தவர்கள் இருக்கிறீங்களோ? எவ்வளவு காலத்திற்கு பிறகு கை இயல்பான செயற்பாடு வரும்? 6 வாரம் முதல் Carpal tunnel surgery செய்தேன். காயம் ஆற 5 வாரங்கள் சென்றது. Carpal tunnel surgery செய்த கையில் 2 விரல்கள் ஏற்கனவே உணர்வு இல்லாமல் போய் விட்டது. தற்போது உணர்வு வந்துள்ளது ஆனால் விரல்கள் மடிக்கவோ வேலை செய்யவோ முடியாது இருக்கிறது. மணிக்கட்டு உள்ளங்கை தேனீ குற்றினால் இருக்கும் வலிபோன்று வலிக்கிறது. உங்கள் அனுபவங்களை பகிருங்கள்.
-
- 23 replies
- 2.5k views
- 1 follower
-
-
மாதவிடாய் நேரத்தில் வயித்து வலியாய் கட்டு படுத்த ஏதவாது யாருக்கு தெரிந்தால் சொல்லுங்களன்
-
- 3 replies
- 2.2k views
-
-
யாருக்கெல்லாம் மாரடைப்பு ஆபத்து அதிகம்? படத்தின் காப்புரிமைMADDIE MEYER/GETTY IMAGES) ஐக்கிய ராஜ்ஜியத்தில் 20 மில்லியனுக்கு மேலானோர் உடல் அளவில் இயங்காமல் (செயல்படாமல்) இருப்பதாக பிரிட்டிஷ் இதயம் பவுண்டேஷன் தகவல் வெளியிட்டுள்ளது. இவ்வாறு செயல்படாமல் இருப்போர் இதய நோய்களுக்கு ஆளாகும் ஆபத்து அதிகரித்து ஒவ்வோர் ஆண்டும் ஏறக்குறைய 1.2 பில்லியன் பவுண்ட் தேசிய சுகாதார சேவையில் செலவை ஏற்படுத்துவதாக எச்சரித்துள்ளது. தன்னுடைய 44 வயதில் மாரடைப்பு ஏற்பட்ட ஹாரியட் முல்வானே, அவருடைய வாழ்க்கை முறையில் மாற்றங்களை ஏற்படுத்தி கொள்ள தீர்மானித்தார். "இப்போது திரும்பிப் பார்க்கையில், நான் அதிகமாக இயங்காமல், செயல…
-
- 0 replies
- 586 views
-
-
நம் மூக்கில், இரண்டு துவாரங்களையும் சுவாசிக்க / காற்றை வெளியிட உபயோகிக்கிறோம். வலது துவாரம் சூரியனையும், இடது துவாரம் சந்திரனையும் குறிக்கிறது. தலைவலி வரும் போது, வலது துவாரத்தை மூடி, இடது துவாரம் வழியாக சுவாசிக்கவும். ஐந்தே நிமிட நேரத்தில் தலைவலி காணாமல் போய் விடும். மிகவும் களைப்பாக இருக்கிறதா? இடது துவாரத்தை மூடி, வலது துவாரம் வழியாக சுவாசிக்கவும். சிறிது நேரத்தில் களைப்பு போய் விடும், பிகு பண்ணாமல் சாத்திரி அண்ணாவிடம் நாடி சுத்தி பழகவும், இதனால் தான் இவர் அவ்வளவு சந்தோஷத்துடன் எல்லாரையும் குதறுகிறார் நன்றி - தினமலர்
-
- 4 replies
- 1.1k views
-
-
யாழ் திருநெல்வேலி விவசாய கண்காட்சி அழகான பூச்செடிகள் விவசாயக் கண்காட்சியைப் பார்ப்பதற்காக நேற்றையதினம் திருநெல்வேலி விவசாயப் பயிற்சி நிலையத்திற்குச் சென்றிருந்தோம். அருமையான ஏற்பாடுகள். விவசாயத்தின் மீது, வீட்டுத்தோட்டத்தின் பால் ஆர்வத்தை தூண்டக் கூடிய வகையில் கண்காட்சி ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. ஏகப்பட்டோர் அந்தக் கண்காட்சியை பார்த்துக் கொண்டிருந்தனர். உரைப்பைகளில் மண்ணையிட்டு, தக்காளி, கத் தரி, மிளகாய், உற்பத்தி செய்யப்பட்டிருந்ததை பார்த்த எவரும் மகிழாமல் இருக்க முடியாது. வீட்டுத் தோட்டம் செய்வதற்கு நிலம் போதாது என குறைபடுவோருக்கு இந்த உரைப்பை முறை அவர்களை ஆற்றுப்படுத்தியிருக்கும் என்ற நினைப்பு. கண்காட்சியின் நுழைவாயில் அதன் இரு மருங்கிலும் வற்றாளைக்கொடியின் இளம்…
-
- 0 replies
- 1.4k views
-
-
எமது மண்ணின் மூலிகைகளோடு ஒன்றித்த பெருவாழ்வு இயற்கையோடு ஒன்றித்து வாழ்வது குறித்து விளக்குகிறார் இயற்கை விவசாயி நமசிவாயம் குருபரன். செலவே இல்லாமல் எமது சூழலில் கிடைக்கும் இயற்கை மூலிகை உணவுகள் யாழ்ப்பாணத்தின் தென்மராட்சிப் பிரதேசத்தின் மீசாலை வேம்பிராய் சந்திக்கு அருகில் தனக்கு சொந்தமான காணியில் இயற்கை விவசாயம் செய்து வருகிறார். நமது மண்ணின் பாரம்பரிய இயற்கை மூலிகை மரக்கறி வகைகளையும் பாதுகாத்து வளர்த்து வருகிறார். எந்தெந்த நோய்களுக்கு எவ்வகையான மூலிகைகள் பயன்படும் என்பதையும் அறிந்து வைத்திருக்கிறார். பாரம்பரிய மரக்கறி வகைகளையும், இயற்கை மூலிகைகளையும் ஏனையோருக்கும் அறிமுகப்படுத்தி வரும் குருபரனின் இயற்கை மரக்கறி மற்றும் மூலிகைத் தோட்டத்தையும் விளக…
-
- 0 replies
- 525 views
-
-
யாழ்ப்பாணம் வந்து ஒரு மாதம் குடி கூத்தனம், விழா, பண்டிகை, காதுகுத்து, கல்யாணம், கருமாதி எல்லாத்தையும் செலவு பண்ணிட்டு போகும் போது மட்டும் ஏதோ நிமிடத்துக்கு சம்பளம் எடுக்கும் பில்கேட்ஸ் மாதிரி நினைத்து நேரம் மிச்சம் பிடிச்சு சாமம் சாமமாக வான் ரைவர் ஓடச் சொல்லி அவனோ காலை 3 மணிக்கு புத்தளம் தாண்ட எங்காவது கொண்டு அடிச்சு அவனும் செத்து நீங்களும் செத்து இதுக்கு பதில் ஒரு நாளைக்கு முன்னர் கிளம்பி கொழும்பில் எங்காவது தங்கிட்டு பகல் பிரயாணம் செய்தால் அடுத்த வேக்கேசனுக்கு உயிரோடையாவது நாட்டுக்கு வர முடியும் புரிந்தால் சரி. நீங்கள் நினைப்பது போல் 5 மணி நேரத்திலேயே அல்லது 6மணி நேரத்தில் air port செல்ல முடியுமா? சிந்திப்போம் இது ஒன்ற…
-
- 3 replies
- 928 views
-