நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3014 topics in this forum
-
நோயின்றி ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதற்கு சில உணவுப்பொருட்களை கண்டிப்பாக சேர்த்துக்கொள்ள வேண்டும். காய்கறிகள், பழவகைகள், பருப்புவகைகள் என அன்றாடம் உணவில் எடுத்துக்கொள்ள வேண்டும். கீழே கொடுப்பட்டுள்ள 10 உணவுகளை தவிர்க்காமல் சாப்பிட்டு வந்தால் ஆரோக்கிய வாழ்க்கை கிடைக்கும். வெள்ளைப்பூண்டு குடலில் உள்ள புழுக்களிலிருந்து மற்றும் தலைவலி முதல் புற்றுநோய் வரை பல நோய்களையும் குணமாக்க வெள்ளைப் பூண்டு பயன்படுத்தப்படுகிறது. பூண்டில் உள்ள ஆன்டி ஆக்சிடன்டுகள், வைட்டமின் சி, பி6 மற்றும் கனிமங்கள், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கின்றன. வெங்காயம் வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளன. எனவே நம் உடம்புக…
-
- 2 replies
- 1.2k views
-
-
வெறும் வெள்ளைத் துணியில் தண்ணீரை வடிகட்டுவதுதான் 25 வருடங்களுக்கு முன்னர் இருந்த எளிய சுத்திகரிப்பு முறை. தண்ணீரை ஃபில்டர் செய்யக் கூடாது, கேன் தண்ணீர் பயன்படுத்தக் கூடாது, பாட்டிலில் அடைக்கப்பட்ட மினரல் வாட்டரைக் குடிக்கக் கூடாது... வேறு எப்படித்தான் சுத்தமான தண்ணீரைப் பெறுவது என்று உங்களுக்குத் தோன்றலாம். சாதாரணமாகக் குழாய்களில் வரும் நீரைப் பிடித்து, கொதிக்க வைத்து குடிநீராகப் பயன்படுத்தலாம். அதுவே போதும். இன்னும் சில பகுதிகளில் குழாய்த் தண்ணீரை நேரடியாகவே மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். பொதுவாகவே நாம் குடிக்கும் தண்ணீர் மாசடைந்திருக்கிறது என்று பிரசாரம் செய்யப்படுவதைக் கண்டிருக்கலாம். அதனால் தண்ணீர் குறித்த பயம் தோன்றக் கூடும். இதற்காக பெ…
-
- 2 replies
- 2.9k views
-
-
பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் எழுதியவர்,சஜித் ஹுசைன் பதவி,பிபிசி ஹிந்திக்காக 5 மணி நேரங்களுக்கு முன்னர் முன்பெல்லாம் உடல் பருமன் என்பது மேற்கத்திய நாடுகளில் மட்டும்தான் பிரச்னையாக பார்க்கப்பட்டது, ஆனால் சமீப ஆண்டுகளாக இந்தியா போன்ற நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளிலும் பிரச்னையாக மாறியுள்ளது. இதை எதிர்கொள்ளும் பொருட்டு, உடல் பருமனுக்கு எதிராக நாடு தழுவிய இயக்கத்தை முன்னெடுக்குமாறு பிரதமர் நரேந்திர மோதி கூறியுள்ளார். பிப்ரவரி 23 அன்று நடைபெற்ற 'மான் கி பாத்' வானொலி நிகழ்ச்சியில், தாங்கள் எடுத்துக்கொள்ளும் எண்ணெயின் அளவை 10 சதவிகிதமாக குறைக்குமாறு மக்களை கேட்டுக்கொண்டார். உடல் பருமனை குறைப்பதில் அது முக்கியமான நடவடிக்கை என்றும் குறிப்பிட்டார். "ஆரோக்கியமான நாடாக மாறு…
-
- 2 replies
- 525 views
- 1 follower
-
-
மாம்பழம் சாப்பிடுபவர்களுக்கு எச்சரிக்கை! தமிழகத்தில் மாம்பழ சீசன் துவங்கியுள்ளது. சாலை ஓரக்கடைகளிலும், பழக்கடைகளிலும், பழுத்த மாம்பழங்கள் விற்பனைக்கு வரத் துவங்கியுள்ளன. குவியல் குவியலாக அடுக்கி வைக்கபட்டிருக்கும் மஞ்சள் நிறத்தில் உள்ள இந்த பழுத்த மாம்பழங்களால் சாப்பிடுவோருக்கு ஒரு பெரும் ஆபத்து காத்திருக்கிறது. விவசாயத்தை பிரதானமாக கொண்ட சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தோட்ட பணப்பயிர்களில் அதிக அளவில் மா சாகுபடி செய்யப்படுகிறது. இந்த பகுதிகளில் மொத்தம் ஒரு இலட்சம் ஹெக்டேரில் “மா” சாகுபடி செய்யப்படுகிறது. “மா” உற்பத்தியை பொறுத்த வரையில் ஓராண்டில் விளைச்சல் நன்றாக உள்ளது என்றால், அடுத்தாண்டு சுமார் மகசூல் என்ற நிலையில் தான் இ…
-
- 2 replies
- 1.5k views
-
-
உபவாச சிகிச்சை! உடல் தன் இயல்பு நிலையிலிருந்து மாறுவதே நோய் என்று நோய் இயல் வல்லுனர்கள் குறிப்பிடுகிறார்கள். உடலை மறுபடியும் தன் இயல்பு நிலைக்குத் திரும்ப வைப்பதே இயற்கை மருத்துவ சிகிச்சையின் நோக்கம். மற்ற சிகிச்சை முறைகளில் உள்ளது போல நோய்க்குத் தகுந் தவாறு மருந்துகள் என்று இதில் இல்லை. எந்த சிகிச்சை முறையைப் பயன்படுத்தினாலும் இயல்பு நிலைக்குத் திரும்ப வைப்பதே இதன் நோக்கம். இந்த முறைகளில் உபவாச சிகிச்சை தலை சிறந்தது. இயற்கை மருத்துவத்தின் மற்ற எந்த சிகிச்சையையும் விட உபவாச மும், பிராணாயாமமும் உடலை சீக்கிரம் தன் சகஜ நிலைக்குத் திருப்பி விடுகிறது. உபவாசத்தை ‘பட்டினி கிடப்பது’ என்று பலர் குறிப்பிடுகிறார்கள். பட்டினிக்கும் உபவாசத்திற்கும் ஒரு வேற…
-
- 2 replies
- 3.6k views
-
-
சிகரெட், மதுவை போன்று ஆபத்தான பொருளாக மாறிய சர்க்கரை!- அதிர்ச்சி ரிப்போர்ட் Feb 05, 2014 Admin மருத்துவம் 0 இனிப்யை விரும்பி சாப்பிடாதவர்கள் யார் தான் இருக்க முடியும்? காலையில் எழுந்தவுடன் குடிக்கும் காப்பியிருந்து இரவு படுக்கச் செல்லும் முன் குடிக்கும் பால் வரை சர்க்கரை எனப்படும் சீனி ஒரு ஊடுபொருளாக நமக்குள் செல்கிறது. பதார்த்தத்தில்தான் என்றில்லை; சர்க்கரையை அப்படியே அள்ளியும் சாப்பிடுகிறோம்.இப்படிதான் நீங்களும் தினமும் அளவுக்கு அதிகமான சர்க்கரை சேர்த்துக் கொள்பவரா? ஆம் எனில் உங்களுக்கான அதிர்ச்சி தகவல் தான் இது. இதனால் இதய நோய் உங்களை விரைவில் தாக்கும் என்பதுடன் எலும்பில் கால்சியத்தை குறைத்து, எலும்பு முறிவு நோயை உண்டாக்குகிறது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். ச…
-
- 2 replies
- 677 views
-
-
அரிசியை தவிட்டுடன் சேர்த்து சாப்பிடும் போது உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும். அதுபோல் அரிசியில் அடங்கியுள்ள மாவுப் பொருளை எளிதில் செரிமானம் செய்யச் (digest) செய்யும். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு எனும் பழமொழியை நாம் அறிந்திருப்போம். எந்தவொரு பொருளையும் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் அது பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதே இதன் பொருள். ஆனால் அதை முறியடிக்கும் மருந்தும் அந்த உணவிலேயே இருக்கிறது என்பதை பலர் அறிந்திருக்க மாட்டார்கள். இதைத்தான் சித்தர்கள் சத்துரு (பகைவன்) மித்துரு (நண்பன்) என்கின்றனர். அதாவது, மாம்பழம் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் அது பின்விளைவுகளை ஏற்படுத்தும். ஆனால், அதோடு சிறிதளவு மாம்பருப்பையும் சேர்த்து சாப்பிட்டால் எவ்வித பின…
-
- 2 replies
- 1.9k views
-
-
தமிழர் மருத்துவம் நோய், நோய்க்கான காரணங்கள், நோய் அறியும் முறைகள், நோய் அறிபவர் (மருத்துவர்), மருத்துவ முறைகள், மருந்து, சராசரி இறப்பு வயது, மருத்துவ முறை வெளிப்படுத்தப்படாத நிலை போன்ற செய்திகளைத் தமிழ் இலக்கியங்கள் வழி அறிய முடிகிறது. மனித உடல் அமைப்புக் குறித்த செய்திகளும் இலக்கியங்களுள் குறிப்பிடப்பட்டுள்ளன. கருத்தோன்றும் காலம், கருவின் தோற்றம், வளர்ச்சி, பிறப்புநிலை, கருச்சிதைவு, செயற்கை முறையில் கருத்தரித்தல் போன்ற மனித உயிரின் பிறப்பு முறைகளும், இவை மட்டுமன்றி ஓரறிவுயிர் முதலாக ஆறறிவுயிர் ஈறாக உயிர்த் தோற்றம் பற்றிய நிலைகளும், விலங்குகளின் தன்மைகளும் இலக்கியங்களில் விரிவாகப் பேசப்படுகின்றன. இக்கட்டுரை இவ் இலக்கியச் செய்திகளின் வழித் தமிழர் மருத்துவம் கு…
-
- 2 replies
- 16.3k views
-
-
அளவு மீறினால் பாலும் விஷமோ? கடலூர் வாசு கடலூர் வாசு பிறந்த முதல் நாளிலிருந்து இறக்கும் வரை, ஏன் இறந்த பின்னும் நம் வாயினுள் செல்லும் ஒரே பானம் பால்தான் என்பதில் யாருக்குமே சந்தேகம் இருக்காது. இந்து மதம் பாற்கடலையே பரந்தாமனின் இருப்பிடமாக கருதுகிறது. பசுவை மற்ற பிராணிகளை போலல்லாமல் ஒரு தெய்வமாகவே இந்துக்கள் பார்க்கின்றனர். தேவர்களும் அசுரர்களும் மரணத்தை வெல்லும் அமிருதத்தை எடுக்க வேண்டும் என்று பாற்கடலை கடைந்து கொண்டேயிருந்தபோது ஆலஹாலம் எனும் கொடிய விஷம் வெளிக்கிளம்பி அதன் நச்சுத்தன்மையை தாங்க முடியாமால் சிவனிடம் அவர்கள் சரணாகதி அடைய அவ்விஷத்தை விழுங்கி தொண்டையில் நிறுத்தியதால் கழுத்தில் நீலம் பர…
-
- 2 replies
- 1.1k views
-
-
மாரடைப்பை விரட்டும் விரதம்: ஆய்வு லண்டன்: மாதம் ஒரு முறை விரதம் இருந்தால் மாரடைப்புக்கான சாத்தியத்தை தவிர்க்கலாம் என இங்கிலாந்து விஞ்ஞானிகளின் ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்தியர்கள் மத்தியில் குறிப்பாக இந்து சமுதாயத்தினரிடம் வாரம் ஒருமுறை விரதம் இருக்கும் வழக்கம் பண்டைய காலம் முதல் உள்ளது. கடவுளின் பெயரால், பல்வேறு விசேஷ தினங்களின் பெயரால் இந்த விரதம் நடைமுறையில் உள்ளது. ஆனால் இந்த விரதங்களுக்குப் பின்னால் மாபெரும் மருத்துவ பலன் உள்ளது தற்போது விஞ்ஞானிகளின் ஆய்வில் தெரிய வந்துள்ளது. மாதம் ஒருமுறை விரதம் இருந்தால், மாரடைப்பு வருவதைத் தடுக்க முடியும் என்பதுதான் இங்கிலாந்து விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பாகும். விரதம் இருப்பதன் காரணமாக உடலின் மெட்டபாலிசம் …
-
- 2 replies
- 1.6k views
-
-
உயர் ரத்த அழுத்தம் போயே போச்சு! இரத்த அழுத்தம் என்றால் என்ன...? உடல் சீராக இயங்க இரத்த ஓட்டம் அவசியம். இரத்தம் என்பது ஓடிக்கொண்டே இருப்பது. அதனை இயக்கும் பம்ப்பாக இருதயம் இருக்கிறது. இருதயம் தான் இந்த இரத்தத்தை எல்லா உறுப்புக்களுக்கும் பம்ப் செய்து அவை சீராக செயல்பட உதவுகிறது. அது சீரற்று இரத்தத்தை மிகையாக அழுத்தும்போது இரத்த அழுத்தம் ஏற்படுகிறது. இரத்த அழுத்தம் ஏன் ஏற்படுகிறது...? பொதுவாக “உப்பில்லாப் பண்டம் குப்பையிலே” என்பார்கள். ஆனால் இந்த உப்புத்தான் உடலுக்குப் பகைவன். உயர் ரத்த அழுத்தத்தின் துணைவன். உப்பு அதிகமாகச் சேர்ப்பதே இதன் முக்கியக் காரணம் என்றாலும், மரபு வழியாகவும் உடற்பருமனாலும், மன உளைச்சலும் இதன் காரணங்களாகின்றன. இதில் இரண்டு…
-
- 2 replies
- 44.4k views
-
-
தீபிகாவின் கதை அழகி என்ற வார்த்தை யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ, தீபிகா படுகோனேவுக்கு கண்டிப்பாக பொருந்தும்... இந்த தைரியம் எத்தனை பிரபலங்களுக்கு வரும்!!!... இது போன்றவைகளே மேலும் மேலும் மக்களுக்கு தங்களின் பிரச்சினைகளை வெளியே சொல்ல உதவும்... தயவுசெய்து பகிரவும்... (Translated from Hindustan Times, Mumbai edition, January 15th. Reported by Kavita Awaasthi) ஹிந்தி படங்களில் காணப்படுவது போல தடைகளை தகர்க்கும் கதைதான், ஆனால் இது ஆபூர்வமான ஒன்று. உங்களுக்கு தெரியுமா?... கடந்த வருடம் தன்னை பாலிவுட்டின் முன்னணி நடிகையாக நிலை நிறுத்த போராடியபோது தீபிகா படுகோனே மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தார். ஹிந்துஸ்தான் டைம்ஸ்க்கு அளித்த பேட்டியில் தன் மனம் திறந்து தன் வாழ்கையின் இந…
-
- 2 replies
- 737 views
-
-
பழங்களின் நிறங்களும், குணங்களும்... இயற்கை நமக்களித்த கொடைகளுள் பழங்களும் ஒன்று. பழங்களை சமைக்காத உணவு என்பர் நம் முன்னோர்கள். உடலுக்கு ஊக்கத்தையும், உற்சாகத்தையும், புத்துணர்வையும் ஒருசேர தரவல்லது பழங்களே. பழங்களை விரும்பாதவர் எவரும் இருக்க முடியாது. தினமும் ஏதாவது ஒரு பழத்தை உண்டு வந்தால் நீண்ட ஆரோக்கியம் பெறலாம். நோயுற்றவர்கள் உடல் நலம் தேற மருத்துவர்கள் பழங்களையே பரிந்துரை செய்வார்கள். பழங்களை சாறு எடுத்து அருந்துவதை விட அப்படியே சாப்பிடுவது தான் நல்லது. அல்லது சாறு எடுத்த உடனேயே அருந்துவது நல்லது. அப்போது தான் அதிலுள்ள நார்ச்சத்துக்கள் அழியாமல் உடலுக்குக் கிடைக்கும். இந்த நார்ச் சத்துக்கள் மலச்சிக்கலைத் தீர்க்கும். சீரண சக்தியை அதிகரிக்கும். மேல…
-
- 2 replies
- 977 views
-
-
Next time you have a headache, leave the pain killers in the packet and just drink a glass of water. Regularly sipping water can ease the serverity of headaches and migraines, reducing the need for tablets. Scientists found drinking about seven glasses a day was enough to ease pain and improve the quality of life in patients who regularly suffered headaches. Thanks to sundaymail
-
- 2 replies
- 681 views
-
-
கால நிலையின் மாற்றத்தால் ஏற்படும் மூக்கடைப்பு. நம்முடைய மூக்கின் உட்பகுதி , தொண்டையின் உட்பகுதி, சைனஸ் எனப்படும் முக மற்றும் தலை எழும்புகளின் காற்று நிரம்பிய இடைவெளிகளின் உட்பகுதி என்பவை மிகவும் நுணுக்கமானவை. குறிப்பாக நாம் சுவாசிக்கும் போது காற்றோடு சேர்ந்து செல்லும் சில தூசி துணிக்கைகள் ( கண்ணுக்குத் தெரியாத) இந்த பகுதிகளின் உட்புறத்திலே படும் போது அந்தப் பகுதியில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படலாம். இந்த மாற்றங்கள் உண்மையில் அந்த துணிக்கைகளின் பாதிப்பில் இருந்து நம்மை பாதுகாக்கவே ஏற்படுகிறது. இவ்வாறு நம்மை பாதுகாக்க ஏற்படும் மாற்றங்களே நமக்கு சில அசௌகரியங்களை ஏற்படுத்தலாம். அதுவே அலர்ஜி (allergic reaction)எனப்படுகிறது. சில குறிப்பிட்ட காலப்பகுதியில் காற்றிலே…
-
- 2 replies
- 836 views
-
-
Diabetes (சலரோகம்) ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350"> ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350"> ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
- 2 replies
- 3.5k views
-
-
மாற்றி மாற்றி பயன்படுத்த வேண்டும்! சமையலில் பயன்படுத்தப்படும் எண்ணெய் குறித்து கூறும், சூழல் பாதுகாப்பு குழு மருத்துவர் புகழேந்தி: 'நான் இந்த எண்ணெயை தவிர, வேற எதையும் தொடறதே இல்லை'னு பெருமையாக கூறிக் கொள்வர். இது, முழுக்க தவறான நம்பிக்கை.ஒரே வகையான எண்ணெயை தொடர்ந்து பயன்படுத்தும் போது, அதிலிருக்கும் கெடுதல் தன்மை, உடலில் சேர்ந்து கொண்டே இருக்கும். எண்ணெய்களில் உள்ள நற்குணங்கள் மட்டுமே உடம்பில் சேர வேண்டும் எனில், எல்லா வகை எண்ணெய்களையும் மாற்றி மாற்றி கொஞ்சமா பயன்படுத்த வேண்டும்.மார்க்கெட்டில் விற்கப்படும் சூரியகாந்தி ரீபைண்டு எண்ணெய், சிறுநீரகத்துக்கு நல்லது இல்லை. எந்த எண்ணெயாக இருந்தாலும், அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்பது போல், ஒரே எண்ணெயை தொடர்ந்து பயன்படு…
-
- 2 replies
- 1k views
-
-
முடிகொட்டாமல் இருக்கவும், பொடுகில் இருந்து தலையைப் பாதுகாக்கவும்:- புளித்த தயிரில் மருதாணி இலை, செம்பருத்திப்பூ மூன்றையுமே அரைத்து கலக்கி தலையில் பூசி 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அதன் பிறகு சிகைக்காய் தூள் போட்டு குளிர்ந்த நீரில் குளித்து வந்தால் முடி கொட்டாது. பொடுகும் வராது. கூந்தல் பட்டுப்போல் காட்சியளிக்கும். கண்ணில் கருவளையம் மறைய... சில பெண்களுக்கு கண்களைச் சுற்றிகருப்பு வளையம் இருக்கும். இதை நீக்க வெள்ளரி, உருளைக் கிழங்கு இரண்டையும் நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு துணியை பன்னீரில் நனைத்து கண்ணின் மீது வைத்து படுத்து தூங்க வேண்டும். இவ்வாறு 5 நாட்கள் செய்தாலே போதுமானது கருவளையம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும். முகத்தை பாதுகாக்…
-
- 2 replies
- 2.3k views
-
-
நல்லெண்ணெயை உணவில் சேர்ப்பதால் நல்ல கொழுப்பு கிடைப்பதோடு, ஆரோக்கியத்துக்கு தேவையான பல்வேறு சத்துகள் உடலுக்கு கிடைக்கின்றன. நல்லெண்ணெயை உணவில் சேர்ப்பதால் நல்ல கொழுப்பு கிடைப்பதோடு, ஆரோக்கியத்துக்கு தேவையான பல்வேறு சத்துகள் உடலுக்கு கிடைக்கின்றன. இதே எண்ணெயை, குளியலுக்கும் பயன்படுத்துவது வழக்கம். மேலும், நல்லெண்ணெய் குளியல் மேற்கொள்ளும் போது, அதில் பூண்டு, மிளகு, சீரகம் மற்றும் சுக்கு ஆகியவற்றை சேர்த்து வெதுவெதுப்பாக சூடேற்றி, பின் அந்த நல்லெண்ணெயை நன்கு தேய்த்து குளிக்க வேண்டும். நவ நாகரீகம் என்கிற பெயரில் இதையெல்லாமல் மறந்ததன் விளைவால் தான், முடி உதிர்வதோடு, பல்வேறு நோய் பாதிப்புகளுக்கும் ஆளாக வேண்டியுள்ளது. வாரமொரு முறை நல்லெண்ணெய் குளியல் எடுப்பதால் கிடைக்கும் நன்…
-
- 2 replies
- 1.7k views
- 1 follower
-
-
கணினியின் முன் அமர்வது எப்படி? தொழில்புரியும் இடங்களில் உடல் உபாதைகள் ஏற்படுவது வழமையானதே. குறிப்பாக நாம் இன்று கணினி யுகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். எமது வேலையை கணினி இலகுவாக்கினாலும் தொடர்ச்சியான வேலைகளால் நாம் பல இன்னல்களை எதிர்கொள்ள நேரிடுகிறது. கண்பார்வை குறைபாடு, உடல் நோ, கூன் விழுதல், கழுத்து, முதுகு வலி என பல நோய்கள் எம்மை இலகுவில் தொற்றிக்கொள்கின்றன. இவற்றிலிருந்து ஓரளவேனும் விடுபட வேண்டுமெனில் நாம் சில உடல் ஆரோக்கிய முறைகளை பின்பற்றுவது முக்கியம் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். எமது அன்றாட தொழில் நடவடிக்கைக்காக கணினியை பயன்படுத்தும் நாம், அலுவலகத்தில் வசதியாக, பாதுகாப்பாக, உற்சாகமாக இருக்கும் வழிகாட்டல் முறைகளை பின்…
-
- 2 replies
- 692 views
-
-
கறிச்சட்டி/கரிச்சட்டி ஆய்வு! உலக ரீதியில் பஞ்சம், பட்டினி, போசணைக் குறைபாடுகள் உயிர்கொல்லிகளாக ஒரு இருபது ஆண்டுகள் முன்பு வரை இருந்திருக்கின்றன. இன்றும் சில பிரதேசங்களில் இவை பிரச்சினைகளாக இருக்கின்றன. ஆனால், கடந்த 40 ஆண்டுகளில் உருவாகியிருக்கும் இன்னொரு ஆரோக்கியப் பிரச்சினை மிகைப் போசணையால் விளையும் அதிகரித்த உடற்பருமனாதல். உலகின் 180 இற்கு மேற்பட்ட நாடுகளுள் அனேகமானவற்றில் இன்று மரணத்தின் முதன்மைக் காரணங்களாக இருப்பவை: இதய நோய், உயர் குருதி அமுக்கம், நீரிழிவு ஆகிய மூன்றும் தான்!. இந்த மூன்று நோய்களோடும் நேரடியான தொடர்பு அதிகரித்க உடற்பருமனுக்கு இருக்கிறது. எனவே உடல் மெலியவும் அதனோடு சேர்ந்த ஆரோக்கியத்தைப் பேணவும் காலத்திற்குக் காலம் புதிய உணவு முறைகள் பலரால் கண்டற…
-
- 2 replies
- 972 views
-
-
ஆண்களுக்கும் பெண்களுக்கும் நாற்பது வயதுக்குப் பிறகு பாலியல் ஆசைகளும், பாலுறவு கொள்வதற்கான திறனும் குறைகிறது என்ற பொதுவான கருத்து நிலவுகிறது. இது உண்மையா? அப்படியெனில் இதற்கான காரணங்கள் என்னென்ன, நாற்பது வயதுக்குப் பிறகு பாலியல் இன்பத்தை அதிகரித்துக் கொள்வதற்கான வழிமுறைகள் என்னென்ன என்பது போன்ற பல்வேறு கேள்விகளுக்கு பாலியல் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஜெயராணி காமராஜ் பதிலளிக்கிறார். பிபிசி தமிழுக்காக ஹேமா ராக்கேஷிடம் அவர் பகிர்ந்து கொண்ட கருத்துகளின் உரை வடிவம் இது. கேள்வி: தம்பதிகளுக்கு 40 வயது ஆகும்போது குழந்தைகள் பெரியவர்களாகி விடுகின்றனர். இனி எதிற்கு காதல் உணர்வு, பாலுறவு என்பது போன்ற கேள்விகள் பலருக்கும் எழுந்து விடுகிறது. இது இயல்புதானா? …
-
- 2 replies
- 767 views
- 1 follower
-
-
நாளாந்தம் தொலைக்கட்சிகளில் பல்வேறு பட்ட விளம்பரங்களை எல்லோரும் பார்த்திருப்பீர்கள்/ பார்ப்பீர்கள். அவற்றில் பல உணவு பொருட்களை விளம்பரப்படுத்துபவை. கனடாவில் அப்படியான உணவு விளம்பரங்களில் பல மக்களை ஏமாற்றி பொருகளை விற்கும் தந்திரம் கொண்டவையாக இருக்கிறன. அதில் முதல் பத்து இடங்ககளை பெற்ற உணவு விளம்பரங்களை கனேடிய ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் பட்டியல் இட்டுள்ளது. 1. Maple Leaf Foods' Natural Selections இந்த உணவு தயாரிப்பு நிறுவனம் பதப்படுத்தப்பட்ட இறைச்சி வகையை விற்கிறது (sausage/hotdog, ham, salami etc). இறைச்சி பதப்படுத்தலுக்கு நைத்திரேற்று சேர்க்கப்படுவது வழக்கம். இந்த நைத்திரேற்று இறைச்சிக்கு சிவப்பு நிறத்தை கொடுக்கும் பொருளுடன் (மயொகுளொபின் ) சேர்ந்து புதிய ஒரு சே…
-
- 2 replies
- 2k views
-
-
இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் தொலைக்காட்சி பார்த்தால், அவர்களின் வளர்ச்சி பாதிக்கப்படுவதாக அமெரிக்க நிபுணர்களின் ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. குழந்தை மருத்துவத்துக்கான அமெரிக்க அக்கடமி, குழந்தைகள் தொலைக்காட்சி பார்ப்பதால் ஏற்படும் பின்விளைவுகள் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொண்டது. ஆராய்ச்சியின் முடிவில், 2 வயதுக்குள்பட்ட குழந்தைகள் தொடர்ந்து தொலைக்காட்சி பார்த்து வருவார்களேயானால் அவர்களின் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படுவதாகக் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அத்தகைய குழந்தைளின் பேச்சுத்திறன் தாமதப்படுவதாகவும் நிபுணர்கள் தெரிவித்தனர். இந்தக் குறைபாடுகளைப் போக்க, இந்த வயது வரம்புக்குள்பட்ட குழந்தைகள் தொலைக்காட்சி பார்ப்பதை தவிர்க்க அவர்களிடம் பெற்றோர்கள் பேச்ச…
-
- 2 replies
- 1.5k views
-
-
அவுஸ்திரேலியாவில் , மெல்போர்ன் நகரில் ,ஒரு மருத்துவ ஆய்வுக் குழுவொன்று கண் பார்வையற்றவர்கள் தங்கள் நாவினால் ' பார்க்கும்' வகையில் ஒரு மின் உபகரணத்தை வடிவமைத்துள்ளனர். இந்த அசாதாரண தொழில் நுட்பக் கருவி 'ப்ரைன்போர்ட் விசன் டிவைஸ் ' ( BrainPort vision device ) என்று அழைக்கப் படுகிறது. இக்கருவி பார்வைக்கு மிகச் சாதாரணமாக , ஒரு சிறிய கையிலடங்கும் கொண்ட்ரோல் கோலையும் ( control unit) ஒரு கறுப்புக் கண்ணாடியையும் ( pair of sunglasses) அதனுடன் இணைக்கப் பட்ட ஒரு பிளாஸ்டிக் இணைப்பையும் அதன் முடிவில் அமைந்த ஒரு லொலிப்பொப் ( lollipop) இனிப்பு வடிவில் அமைந்த பிளாஸ்டிக் அமைப்பையும் கொண்டுள்ளது. சுமார் 2.5 cm விட்டமுள்ள மிகச் சிறிய கேமரா ( digital video camera) கறுப்புக் கண்ணாடியின…
-
- 2 replies
- 455 views
-