சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2253 topics in this forum
-
நான் பார்த்த விடையத்தை சொல்லுறேன்.. இப்ப இருக்குற இளையர்கள் உண்மையிலே காதலிக்குறார்காளா இல்லை காமத்தில் சிக்கு உண்டு இருக்குறார்களா? என் பக்கத்து வீட்டு பெண் ஒரு பெடியனை காதலித்தாள்..அவங்கள் இரண்டு பேரும் கல்யாணத்துக்கு முன் றொம்ப நெருக்கமாக பழகினார்கள்.. கேட்டால் காதல் என்று சொல்லுவார்கள்.. நான் கேட்டேன் இது காதாலா என்று..கேட்டால் அவர்கள் இங்க லண்டனுல இருக்குறாங்களாம்.. நம்ம காலசாரம் எங்க போனது.. எனக்கு ஒன்றும் புரிய வில்லை.. இது பத்தி உங்கள் கருத்துகளை எதிர் பாக்குறேன் என் யாழ் உறவுகளே
-
- 11 replies
- 3k views
-
-
மனிதர்களுக்குத் தர வேண்டிய மதிப்பை பொருட்களுக்கும், பொருட்களிடம் வைக்க வேண்டிய தூரத்தை மனிதர்களிடம் காண்பிப்பதும் தான் இன்றைய காலகட்டத்தின் சோகம். நம்மைச் சுற்றி குவிந்து கிடக்கும் பொருட்களின் இடையே பரிதாபகரமாகச் சிக்கியிருக்கிறோம் என்பதை தெரியாதவர்களாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதும் துயரம். ஒரு பொருள் அவசியமா இல்லையோ பக்கத்து வீட்டுக்காரர் வைத்துள்ளார் என்பதற்காகவே தானும் எல்.ஈ.டி டீவியை வாங்கி வீட்டின் வரவேற்பறையில் மாட்டும்வரை சிந்தனை முழுவதும் அதைச் சுற்றித் தானே ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும்? தப்பித் தவறி நாமே மறந்தாலும், விளம்பரங்களின் வேலை என்ன? நொடிக்கொரு தடவை ஆசைக் கதவுகளைத் தட்ட வைக்கும். நம்முடைய பலவீனங்களை பலூனாக மாற்றி ஊதச் செய்து கடைசியில் வெடிக்கச் செய்த…
-
- 0 replies
- 1.1k views
-
-
-
- 1 reply
- 1k views
-
-
மனிதப் பெண்களுக்கு இயற்கையாக மாதவிடாய் என்பது நிகழ்கிறது. குறிப்பாக 10 முதல் 50 வயது வரை உள்ள பெண்களுக்கு இந்த மாதவிடாய் மாதத்தில் எப்பவோ 3 - 5 நாட்கள் வந்தே தீரும். அது கிட்டத்தட்ட 28 நாட்கள் என்ற தவணை முறையில் வருகிறது. இக்காலத்தில் பெண்களின் உடல்நிலை மட்டுமன்றி மனநிலையிலும் மாற்றங்கள்.. சோர்வு.. கோபம்.. எரிச்சல்.. தலையிடி.. வயிற்றுவலி போன்றன ஏற்பட்டு அவர்கள் சிரமங்களை அனுபவிக்கிறார்கள் என்பது என்னவோ வருந்தத்தக்க ஒன்றுதான். அண்மைய நாட்களாக இந்திய தமிழ் தொலைக்காட்சி ஒன்றில்.. விளம்பரங்களில் ஒரு 30% விளம்பரங்கள் மேற்குறிப்பிட்ட நாட்களில் பெண்கள் பயன்படுத்தும் உபகரணம் தொடர்பானது என்று அமைகிறது. அதில் ஒரு விளம்பரத்தின் இறுதியில் "Have a nice day" என்பது போல "…
-
- 19 replies
- 4k views
-
-
புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கும் கருவிகளை எளிதில் வாங்கக்கூடியவர்கள், வாங்கியபிறகு அதன் முழுபயன்பாட்டை தெரிந்து கொள்ள முடியாமல் தவிக்கிறார்கள், அவர்களுக்கு உதவுபவர்தான் தாஸ் என்கின்ற தணிகாசலம் ஸ்ரீதர் தாஸ்.சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்தவரான தாஸ் அங்குள்ள அசோக் லேலண்டு நிறுவனத்தின் வெள்ளிவிழா ஊழியர். அங்கு வேலை பார்த்த நேரம் போக மீதி நேரம் ஏதாவது கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக கிட்டாரில் ஆரம்பித்து போட்டோகிராபி வரை பல விஷயங்களை கற்றுக்கொண்டார். அதிலும் ஆப்பிள் ஐமேக் நிறுவனத்தில் இரண்டு வருடம் பைனல் கட் புரோ (fcp)வீடியோ எடிட்டிங் படித்து உயர் சான்றிதழ் பெற்றவர். இவருக்கு உள்ள நல்ல பழக்கம் தான் கற்றதை தனக்குள் வைத்துக்கொள்ளாமல் கேட்பவர்களுக்கு எல்லாம் சொல்லித்தருவார்.…
-
- 0 replies
- 1.7k views
-
-
எல்லா தினங்களும் நமக்கு உவப்பானதாக இருப்பதில்லை. எல்லாச் சூழல்களும் பிடித்தமானதாக இல்லை. ஆனால், கசப்பான தினங்களையும் விரும்பாத சூழல்களையும், அவற்றில் பங்கேற்கும் மனிதர்களையும் சந்திப்பதைத் தள்ளிப்போடலாமே தவிர, அவற்றிலிருந்து தப்பிக்கவே முடியாது. கேள்வி- பதில் அப்படியான தருணங்கள் பெரும்பாலும், நாம் நமது தரப்பு பதில்களை,விளக்கங்களைச் சொல்கிற தருணங்களாகவே இருக்கின்றன. உதாரணமாக வேலை செய்பவர், வேலை கொடுப்பவர்,வியாபாரம் செய்பவர் ... என யாராக நீங்கள் இருந்தாலும் ---உங்கள் பாஸ் / முதலாளி / மேலாளர் /வாடிக்கையாளர் /அதிகாரிகள் கேட்கிற கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டே தீரும். ஆனால், இந்தப் பதில்கள்,பெரும்பாலும், நீங்கள் வெளிப்படுத்தும் அதே உணர்வுகளுடன் புரிந்து…
-
- 0 replies
- 575 views
-
-
இயற்கை உணவு உண்டால்...300 வயது வாழ முடியும்..! - பொன்.செந்தில்குமார், படங்கள்:வி.நாகமணி [size=1]செ[/size]ன்னை அண்ணா ஆர்ச் எதிரில் உள்ள குறுக்கு சந்துக்கு பெயர் துரைசாமி ராஜா தெரு. அங்குள்ள ஏ.வி.ஜி ரெட்டி இயற்கை நல மருத்துவமனையில் மாதத்தில் கடைசி ஞாயிற்றுக்கிழமை இலவசமாக இயற்கை மருத்துவ முகாம் நடப்பதாக கேள்விப்பட்டோம். என்னதான் நடக்கிறது என்று பார்க்க நாமும் ஒரு ஞாயிற்றுக்கிழமை சென்றோம். நமக்கு முன்பு நாற்பது பேர் அங்கே ஆஜராகி இருந்தார்கள். ஒரு பக்கம் வாழைப்பழத் தார் தொங்கிக் கொண்டிருந்தது. இன்னொரு பக்கம் முளைக்கட்டிய பயறுகள், பேரீச்சம் பழம், திராட்சை போன்றவை வைத்திருந்தார்கள். அந்த இடமே விநோதமாக காட்சியளித்தது. சுவையான தாமரை டீ, தேநீர் இடைவேளையி…
-
- 4 replies
- 15k views
-
-
இயற்கையும் அதிசயங்களும் இயற்கையின் அதிசயங்கள் பல. அவற்றை கண்டும் கேட்டும் ஏன் அனுபவித்தும் அதிசயித்திருப்போம். உண்மைகளை கண்டறியாத கண்டறிய முடியாத நிலையிலும் அவை எமக்கு சில படிப்பினைகளைத்தருவதாகவும் ஏன் சுட்டிகளாகவும் இருந்திருக்கும். இருக்கின்றன. அவை பற்றி இங்கு பேசலாம் என விளைகின்றேன். தங்களிடமும் எதிர்பார்க்கின்றேன். 1- காகமும் குயிலும் ஒரே நிறமுடையவை. இதைப்பாவித்து குயில் செய்யும் சேட்டை என்ன வெனில் தனது முட்டைகளைப் பெற அல்லது பராமரிக்க தான் எந்தவித கூடும் கட்டுவதில்லை. காகத்தின் கூட்டுக்குள் முட்டைகளைப்போட்டுவிட்டு சென்றுவிடும். இதில் இன்னொரு அதிசயம் என்னவெனில் குயில் காகத்தின் கூட்டுக்குள் முட்டையிட முன் எத்தனை முட்டைகள் கூட்டுக்குள் இர…
-
- 8 replies
- 2k views
-
-
இயற்கைவழி இயக்கம் எமது பாரம்பரிய மரபுசார்ந்த நல்ல விடயங்களை அறிவியல் தளத்துக்கு சமாந்தரமாக எடுத்துச் சென்று எதிர்கால சந்ததியினர் அவற்றை மனித குல மேம்பாட்டுக்கு பயன்படுத்த வேண்டும். அவ்வாறான செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்புக்களை வழங்குவதே இயற்கை வழி இயக்கத்தின் நோக்கமாகும். எங்களுடைய மரபிலிருந்து கற்றுக்கொண்ட நல்ல விடயங்களை மீண்டும் வாழ்வியல் நடைமுறைக்கு கொண்டுவருவது இதன் பிரதான நோக்கமாகும். இதற்காக பாரியளவிலான செயற்பாட்டுத் தளத்தை நாங்கள் கட்டியெழுப்ப வேண்டியுள்ளது. மரபுசார்ந்த வாழ்வியலில் அக்கறை கொண்ட நண்பர்கள் குழுவாக இணைந்து கட்டமைத்த இயக்கமே இதுவாகும். இதில் செயற்பாட்டாளர்க…
-
- 0 replies
- 1.5k views
-
-
இயல்பிலேயே மனிதன் சைவ உணவு உண்பவன் என்பது திட்டமிட்ட பொய் எழுதியது இக்பால் செல்வன் *** Friday, November 23, 2012 மனிதர்கள் சைவ உணவை மட்டுமே உண்ணக் கூடியதாகவே படைக்கப்பட்டான் (!!?) என்றும், அவனால் சைவ உணவை மட்டுமே உண்டு வாழ முடியும் என்றும் ஒரு சிலர் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்தியாவில் இப்படியான பிரச்சாரங்களுக்கு பின் இன, மத, சாதிய வெறுப்புணர்வுகள் உள்ளன என்பது தனிக் கதை. ஆனால் அறிவியலி மனிதன் தாவர உணவாளன் தானா என்பதை நாம் சொல்ல வேண்டி இருக்கின்றது. ஏனெனில் தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரர்களாகிய போலி அறிவியல் தகவல்களை இணைய வெளியில் பரப்பி வருகின்றனர். அவர்களது ஓரே நோக்கம் தமது வாதமே உண்மை என நம்ப வைக்க வேண்டும். அது உண்மையா, இல்லையா என்பதை எல்லாம் சிந்திக…
-
- 5 replies
- 5.3k views
-
-
இரட்டை குழந்தைகள் - இவர்களில் யார் மூத்தவர் என்று கூற முடியுமா, முதலில் பிறந்தவரா அல்லது இரண்டாவதக பிறந்தவரா? கண்ணாமூச்சி படம் அனேகர் பார்த்திருப்பீர்கள், விஞ்ஞான ரீதியாக விளக்கம் தரமுடியுமா?
-
- 5 replies
- 1.5k views
-
-
இரட்டைக்குழந்தைகள், ஒவ்வொன்றுக்கும் வேறு வேறு தந்தையர். பிரேசில் நாட்டில், பதும வயது பத்தொன்பது வயது பெண், இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்தார். கருவுற்ற தினமன்று, இருவருடன் உடலுறவு கொண்டதால், அந்த இருவரில் யார் குழந்தைகளின் தந்தை என அறிய, குழந்தைகளுக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்ய, இரண்டுமே வேறு, வேறு என்று தெரிய வந்து மருத்துவ உலகமும், பெண்ணும், பெண்ணின் ஒழுக்கம் குறித்து அவரது உறவினர்களும் அதிர்ச்சி அடைந்தது மட்டுமல்லாது, உலகமே வியப்புடன் இது எப்படி சாத்தியம் என அரண்டு போயுள்ளது. உலகலாவிய ரீதியில் வைரலாகி உள்ளது இந்த சங்கதி. https://www.dailymail.co.uk/news/article-11188561/amp/Brazilian-woman-19-gives-birth-twins-DIFFERENT-fathers.html
-
- 4 replies
- 545 views
-
-
"உங்களைப் பெற்றவர் என்ற காரணத்துக்காக உங்கள் அம்மாவை எப்படி மதிக்கிறீர்களோ, நேசிக்கிறீர்களோ அதே மாதிரி உங்கள் குழந்தைகளின் அம்மாவையும் நேசியுங்கள். தன்னை எங்கேயும் விட்டுக்கொடுக்காமல் நேசிக்கிற கணவனைத்தான், மனைவி மனதுக்குள் `ஆண்' என்று கொண்டாடுவாள்." இரண்டாவது தேனிலவு... தேனிலவுக்கே போகாத தம்பதியர்தான் நம்மிடையே அதிகம் பேர். இருந்தாலும், இரண்டாவது தேனிலவு செல்வது ஏன் அவசியம்; திருமணமான எத்தனை வருடங்கள் கழித்து இரண்டாவது தேனிலவுக்குச் செல்லலாம்? இதனால், ஒரு கணவன் - மனைவிக்குக் கிடைக்கிற நன்மைகள் என்னென்ன? டாக்டர். ஷாலினியிடம் கேட்டேன். அவருடைய விளக்கமான பதில்களை படியுங்கள். தேனிலவு ஏன் அவசியம்? `திருமணமான புதிதில் கணவன் - மனைவி இருவரும் ஒ…
-
- 27 replies
- 3.9k views
-
-
தூக்கத்தில் குறட்டை விடுவதால் கணவனை விவாகரத்து செய்யும் மனைவி, ருசியாக சமைக்க தெரியாததால் மனைவியை விவாகரத்து செய்யும் கணவன் ஆகியோருக்கு மத்தியில், இளம்பிள்ளை வாதத்தால் இரண்டு கால்களையும் இழந்த மனைவி மற்றும் நடைபழகும் பச்சிளம் குழந்தை ஆகியோரை தூக்கி சுமந்தபடி வலம் வருகிறார் ஒரு வட மாநில வாலிபர். சத்திஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர் நிஷாந்த். எட்டாம் வகுப்பு வரை படித்துள்ள இவர் அங்கு கூலி வேலையை பார்த்து வந்தார். திருமணம் பற்றிய எண்ணமே இல்லாமல் இருந்த அவர் இளம்பிள்ளை வாதத்தால் பாதிக்கப்பட்ட நிஷா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரை சந்தித்தார். பல எதிர்ப்புகளுக்கு இடையே நிஷாவை திருமணம் செய்து கொண்டார். மகள் பிறந்தாள். குடும்பம் வளர்ந்தது. தனி மனிதனாக இருந்தபோது சமாளித்த …
-
- 0 replies
- 689 views
-
-
Image caption ஃபட்மடா கனு மேற்கு ஆஃபிரிக்க நாடான சியரா லியோனில் உள்ள ஒரு பாலியல் தொழிலாளியின் கதை இது. சியரா லியோனில் சுமார் 3,00,000 பெண்கள் பாலியல் தொழில் செய்கிறார்கள். இபோலா நெருக்கடியை அடுத்து அதிக பெண்களை தெருக்களில் காண முடிவதாக தொண்டு நிறுவனங்கள் கூறுகின்றன. 18 வயதான ஃபட்மடா கனு, பாலியல் தொழிலாளியாக தான் இருக்கும் வாழ்க்கைக் குறித்து விவரிக்கிறார். "பாலியல் உறவு வைத்துக்கொள்ள தெருக்களில் ஆண்கள் கிடைக்கவில்லை …
-
- 2 replies
- 3.8k views
- 1 follower
-
-
நான் சில காலத்திற்கு முன்னர் எனது நண்பி ஒருவர் இந்தியாவில் செட்டியார் (காரைகுடி)திருமணம் செய்தது பற்றி (அந்த பதிவை பார்க்க முடியவில்லை) குறிப்பிட்டு இருந்தேன், அதற்காக அவர் தனது ஆடை அணிகலண்கள், வாழ்வியல் முறைகளில் பல மாற்றங்களை செய்ய வேண்டி இருந்தது. அதில் ஒரு அம்சம் தான் அவர் அவரது இரண்டு மூக்குகளிலும் பெரிய மூக்குத்தி அணியுமாறு வேண்டப்பட்டார், உண்மையில் அவரது படங்களை யாழில் பிரசுரித்து கள உறுப்பினர்களின் கருத்தை அறியலாம் என இருந்தேன் ஆனால் எனது நண்பி அதை பிரசுரிக்க வேண்டாம் என்று கூறினார், ஆனால் அண்மையில் தொலைகாட்சி விளம்பரஙக்லில் அவர் திருமணம் செய்த சமூகத்தவர் சம்ப்ந்தமான ஒரு திருமண காட்சி இடம் பெறுவதாக கூறி தான் அணித்து இருப்பது போல் மூக்குத்தி அணிந்த பெண்ணின் புகை…
-
- 11 replies
- 12.7k views
-
-
நடுத்தர இனம் - என்ன செய்யும்? மா.பா. குருசாமி ஒரு சமுதாயத்தின் வளர்ச்சியும் மேன்மையும் அந்தச் சமுதாயத்திலுள்ள பல்வேறு வகையான மக்களின் செயல்பாட்டிலும் பங்களிப்பிலும் இருக்கின்றன. இதனை அறிய சமுதாயத்திலுள்ள மக்களை ஏதாவதொரு அடிப்படையில் பகுத்தும் பிரித்தும் ஆராய்வது நீண்ட நெடுங்காலமாகத் தொடர்ந்து வருகின்றது. மனித நடவடிக்கைகளைத் தீர்மானிப்பதில் பல்வேறு காரணிகள் பங்கு பெறுகின்றன. அவற்றில் முதன்மையானதாகவும், ஆற்றலுடையதாகவும் பொருளாதாரக் காரணி இருப்பதால், அதன் அடிப்படையில் மக்களின் செயல்பாட்டை ஆராய்வது பயனுடையதாக இருக்கும். மக்களை மேல் நிலை, இடை நிலை, கீழ் நிலை என்று பொருளாதார அடிப்படையில் பகுக்கின்றபொழுது, இந்த அளவுகோல் நாட்டிற்கு நாடு, காலத்திற்குக் காலம் மா…
-
- 1 reply
- 1.5k views
-
-
ஐஸ்வர்யா ரவிசங்கர் பிபிசி தமிழ் …
-
- 3 replies
- 2.8k views
- 1 follower
-
-
இராவணனின் ராச்சியத்தில் உய்யலாலா..! யாழ் 'தமிழ் சிறி'யின் நீராகார 'வெள்ளி இரவு' முடிந்து, சனிக்கிழமையாக உதித்திருக்கும் இந்த நாள் இனிய நாள்..! இப்பொன்னாளில், உங்கள் மன்னனின் வாழ்க்கை பொன்பொழிகளை சற்றே கேட்டு இந்நாளை தொடங்குவோமா..? முள்ளிவாய்க்காலைவிட மிக மோசமான யுத்தம்..! இரத்தம் பெருக்கெடுத்து ஆறாக ஓடிக்கொண்டிருந்தது..!! எங்கு நோக்கினும் பிணக்குவியல்கள், அலறல்கள், உயிர்மூச்சுக்கள்..!!! போரில் தோற்று வீழ்த்தப்பட்ட இராவணன், தனது இறுதி கணங்களை நெருங்கிக்கொண்டிருந்தான்.. குருதிசகதிக்குள் அமிழ்ந்த இராவணன், மரண எல்லையில் வலியால் முனங்கிக்கொண்டிருந்தான்.. இராமன், இலக்குமணனை அழைத்தான்.. தமையன் சொல்லுக்கு எப்பொழுதும் கீழ்ப்…
-
- 23 replies
- 2.5k views
-
-
இராவணன் போல் ஒரு தமிழ் வீரன் இராமாயணத்தில் இல்லை.. கதைக்காக தமிழனை அப்படி காட்டியிருந்தாலும்.. இராவணன் போல் ஒரு தமிழ் வீரன் இராமாயணத்தில் இல்லை.. கதைக்காக தமிழனை அப்படி காட்டியிருந்தாலும்.. அவனின் வீரம் போற்றுதலுக்குறியது.. மற்றும் மாற்றான் தோட்டத்து மல்லிகையை அவனின் கை படாது வைத்திருந்த கண்ணியவான்.. உண்மையில் தமிழ் உலகம் தந்த மாபெரும் வீரன் அவன். வரலாற்றின் திரிபுகளால் கொடுங்கோலன் ஆக்கப்பட்டான். ஆனால் என்னைப் பொறுத்தவரைக்கும் சிறந்த சிவபக்தன். இராமனை விட மேலானவன். இராவணன் இராவணன் இலங்கையை ஆட்சி செய்த அரசனாகவும்இ பக்தனாகவும்இ இராமனுக்கு நேர் எதிராகவும் இராமாயணத்தில் சித்தரிக்கப்பட்ட தீயகதாபாத்திரம் ஆவார். பல ஓவியங்களில் இராவணன் பத்துத் தலைகளை உடையவனாக…
-
- 8 replies
- 18.5k views
-
-
ஒவ்வொரு ஆணுக்குள்ளும் ஒரு பெண் இருக்கிறாள். ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் ஒரு ஆண் இருக்கிறான். ஆண் தனக்குள் இருக்கும் பெண்வடிவத்தை காதலிக்கிறான். பெண் தனக்குள் இருக்கும் ஆண்வடிவத்தைக் காதலிக்கிறாள் என்கிறது உளவியல். ஆண்களுக்குப் பெண்தன்மை அதிகரித்து வருகிறது. பெண்களுக்கு ஆண்தன்மை அதிகரித்து வருகிறது. என்கிறது அறிவியல். ஆண்போல வீரம் நிறைந்த பெண்களையும், பெண் போல அச்சம் நிறைந்த ஆண்களையும் நடைமுறை வாழ்க்கையில் நாம் காணமுடிகிறது. 100 விழுக்காடு ஆண்தன்மையுள்ள ஆண்களும், 100 விழுக்காடு பெண்தன்மையுள்ள பெண்களும், இல்லை என்கிறது மருத்துவம். மனித இனம் தோன்றிய காலத்திலிருந்தே ஆணுக்கும் பெண்ணுக்குமான போர் தீராது நடந்து வருகிறது. இந்தப் போருக்குப…
-
- 0 replies
- 863 views
-
-
எமது சமுதாயத்தில் இரு மதத்தவர் இடையே திருமணம் நடப்பது சாதாரணமானது. ஏமது ஈழ சமுதாயத்தில் இது பெரும்பாலும் கிறிஸ்த்தவர்களுக்கும் சைவர்களுக்கும் இடையில் தான் நடக்கும். இவ்வாறான சந்தர்ப்பஙளில் பெரும்பாலும் அது ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி, பெரும்பாலும் தமது மதத்தை விட்டுக் கொடுப்பவர் சைவ மத்தவராகவே இருப்பார். இது ஏன்? ஏன் சைவ மக்களால் தமது மதத்தை விட்டுக் கொடுத்து திருமணம் செய்ய தயங்குவதில்லை, அவர்களது பெற்றாரோ அல்லது சகோதரரோ ஏன் அவர்களுக்கு அறிவுறை கூறுவது இல்லை.எம்மைத் திருமணம் செய்பவரின் மதத்தை மதிப்பது முக்கியம் தான், அதற்கு இரு மத முறைப்படியும் திருமணத்தை நடத்தலாம், ஆனால் சைவ மதத்தைச் சார்ந்தவர்கள் பலர்,முழுமையாக அல்லவா தமது மதத்தை விட்டுக் கொடுகின்றனர், …
-
- 1 reply
- 902 views
-
-
பிரசாத் என்பவரை நான் பார்த்ததில்லை. ஆனால் அவரோடு பலமுறை பேசியிருக்கிறேன். சரியாகச் சொல்வதென்றால், ஆண்டுதோறும் சரியாக இருமுறைமட்டும் நாங்கள் பேசுவோம். ஒவ்வொருமுறையும், அவர்தான் என்னை அழைப்பார். கன்னடத்தில் ‘வணக்கம்’ சொல்வார். முன்பே எழுதிவைக்கப்பட்ட வசனங்களைப் பேசுவதுபோல் எங்கள் உரையாடல் ஒரேமாதிரியாக அமையும்: ‘சார், வணக்கம், நான்தான் பிரசாத், டேங்க் க்ளீனிங்.’ ‘வணக்கம்ங்க, நல்லாயிருக்கீங்களா?’ ‘நல்லாயிருக்கேன் சார். நீங்க எப்படியிருக்கீங்க’ என்பவர் மறுநொடி விஷயத்துக்கு வந்துவிடுவார், ‘சார், உங்க அபார்ட்மென்ட் தண்ணி டேங்க்ஸெல்லாம் சுத்தப்படுத்தி ஆறுமாசமாகிடுச்சு. வர்ற திங்கள்கிழமை வந்து நான் எல்லாத்தையும் சுத்தப்படுத்தட்டுமா?’ ‘ஓ, த…
-
- 0 replies
- 1.1k views
-
-
இறந்தபின்...... காலை நேரம்., அலுவலகத்திற்குக் கிளம்பியாக வேண்டும். நான் செய்தித் தாளை எடுத்துப் பார்க்கிறேன், கண்ணீர் அஞ்சலி அறிவிப்பில் எனது புகைப்படம் அய்யோ.... என்ன ஆயிற்று எனக்கு? நான் நன்றாகத்தானே இருக்கிறேன்? ஒரு நிமிடம் யோசிக்கிறேன்.... நேற்று இரவு படுக்கைக்கு செல்லும் போது, என் இடது மார்பில் கடுமையான வலி ஏற்பட்டது. ஆனால், அதன் பிறகு எனக்கு எதுவும் நினைவில் இல்லை, நான் நன்றாகத் தூக்கிவிட்டேன் என்று நினைக்கிறேன். காபி வேண்டுமே, என் மனைவி எங்கே? மணி பத்தாகிவிட்டது என் பக்கத்தில் படுத்திருந்த யாரையும் காணோம். அது யார் கட்டிலில் கண்மூடி அசைவின்றி? அய்யோ நானே தான். அப்படியானால் நான் இறந்துவிட்டேனா? கதறினேன்...... என் அறைக்கு வெளியே கூட்டம், உறவுக்காரர்களும…
-
- 1 reply
- 808 views
-
-
இயற்கையாக மரணமடைந்தவர்கள் கனவில் வந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும் என்று கனவுகள் தொடர்பான நூல்களில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, பேரன், பேத்தி எடுத்து நன்றாக வாழ்ந்து மரணமடைந்த முன்னோர்கள் கனவில் வந்தால் அதனை ஆசி எனக் கருத வேண்டும். ஆனால் துர்மரணம் அடைந்தவர்கள் கனவில் வந்தால் சில இடர்பாடுகள் ஏற்படும். உடல் நலம் குறையலாம். விபத்து, குடும்பத்தில் வாக்குவாதம், பிரிவு உள்ளிட்டவை ஏற்படக் கூடும். இதுபோன்ற பிரச்சனைகளைத் தவிர்க்க குலதெய்வக் கோயில் வழிபாட்டை மேற்கொள்ளலாம். பொங்கல் வைத்து அன்னதானம் வழங்கலாம். வஸ்திர தானம் செய்யலாம். வயதானவர்கள், பெரியவர்கள், வாழ்க்கை முழுவதும் சிறப்பாக வாழ்ந்து இயற்கை எய்தியவர்கள் கனவில் வந்தால் கவலை கொள்ளத் தேவையில்லை.
-
- 0 replies
- 3.1k views
-