Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமூகச் சாளரம்

சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்

பதிவாளர் கவனத்திற்கு!

சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. இலங்கையில் ஆசிரியர் தொழிலுக்கான தகுதி என்ன.மற்றும் கலைப்பீடத்தில் பல்கலை முடித்து வரும் பட்டதாரிகளுக்குரிய வேலை வாய்ப்புகள் என்ன.இந்த பட்டதாரிகள் ஆசிரிய பயிற்ச்சிக்கு செல்லமலே கல்வி கற்பிக்கமுடியுமா.மற்றும் இந்த பல்கலை பட்டம் இருப்பதால் மட்டும் சம்பளத்தில் வித்தியாசம் இருக்குமா(கூட) உறவுகளே தெரிந்தவர்கள் விளக்கம் தாங்கோ. நனறி.

  2. அகங்காரம் அகங்காரம் என்பது ஓர் தீயகுணம் .அதுவே பல தீயவிளைவுகளுக்கு காரணமும்கூட. அகங்காரத்தில் விழுந்தவர்கள் என்றுமே உயர்ந்த நிலையை அடையமுடியாது. அகங்காரம் யாரிடம் இருக்கிறதோ அவர்கள் மற்றவர்களிடமிருந்து அன்பு , நட்பு, பாசம் போன்றவற்றைப் பெற இயலாது. அவர்களுக்கு நல்லவற்றை சொன்னாலும் கேட்கமாட்டார்கள். நல்லது சொன்னவர்களை அற்பமானவர்களாகக் கருதுவார்கள். முடிந்த வரை அகங்காரர்களிடமிருந்து தூரவிலகிச்செல்ல வேண்டும். அவர்கள் எதிர்பட்டால் நாமே அந்த வழியிலிருந்து விலகிச் செல்லவேண்டும். அகங்காரம் அகப்பகைவன்.அதனை வெளியே இருப்பவர்களால் வெல்ல முடியாது. அவரவர்களே வென்று தம்மை மாற்றிக் கொள்ள வேண்டும். அத்தையவர்களுக்கு ஏதுனும் துன்பம் நேர்ந்தால் அவர்களை பற்றி மற்ற…

  3. காலம் மாற மாற, அதற்கேற்ற வகையில் ஃபேஷன்களும் மாறிக் கொண்டே இருக்கும். உடைகளாகட்டும், நகைகளாகட்டும் ஃபேஷன்களின் அணிவகுப்பு முதன் முதலில் கல்லூரிகளில் தான் களை கட்டும். இளமையில் புதுமை தான் காணச் சலிக்காத அழகு. தங்களில் ரசனைக்கு ஏற்றவகையில் பெண்கள் இன்று தங்களை நன்கு அலங்கரித்துக் கொள்கிறார்கள். அழகுக் கலை பராமரிப்பு தனித்துவம் பெற்றிருக்கும் இந்தக் காலத்தைச் சேர்ந்த இளம் நங்கைகள் என்ன மாதிரியான உடைகளை விரும்பி அணிகிறார்கள் என்பதை அலசி ஆராய்ந்தோம். இதோ சில முடிவுகள் – ஜீன்ஸ் கல்லூரி பெண்களுக்கு மட்டுமல்ல பெண்கள் ஆண்கள் என அனைவருக்கும் பிடித்த தேசிய உடையாகி விட்டது ஜீன்ஸ். ஜீன்ஸ் பலவிதமாக இருந்தாலும் காலேஜ் பெண்கள் விரும்பி அணிவது 3/4த் ஜீன்ஸ். இவை டீஷர்…

    • 0 replies
    • 2.2k views
  4. 2011 முடிய போகிறது இந்த ஆண்டு எங்களின் வாழ்க்கையில் பல நினைவுகளை விட்டு செல்கின்றது ஒரு சிலருக்கு அது மிகவும் துன்பகரமான நினைவுகளாகவும் இருக்கலாம் இன்னும் சிலருக்கு மிகவும் மகிழ்ச்சியான நினைவுகளை தந்தும் செல்லலாம் 2011 இன் ஆரம்பத்தில் நீங்க சில திட்டம்களை தீட்டி இருப்பீர்கள்..அத்திட்டம்கள் நிறைவேற்ற கூடியதாய் இருந்ததா..? 2011 ஒரு முறை மீட்டல் செய்து பார்ப்போமா.... 1) 2011 இல் உங்களின் மனசில் நிக்கும் மகிழ்ச்சியான சம்பவம் எது? ஒரு நல்ல புதிய உறவு கிடைச்சது 2) 2011 இல் உங்களின் மனசினை பாதிச்ச துயரமான சம்பவம் எது ? நட்பின் துரோகம் 3) 2011 இல் உங்களின் மனசினை பாதிச்ச உள்ளூர் அரசியல் நிகழ்ச்சி(அது உங்களுக்கு சந்தோசத்தினை தந்ததா? …

  5. திருவாளர் திருமதி என்றொரு நிகழ்ச்சி சன் ரிவியில் ஒலிபரப்பாகும் ஓரு புதிய நிகழ்ச்சி.சில வாரங்களாக நடைபெற்று வருகிறது.உங்களில் பலர் பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.சும்மா ஒரு பொழுது போக்கு நிகழ்சிதான்.முதல் சுற்றை டுயட் றவுண்ட் என்று சொல்கிறார்கள்.அதாவது கணவன் மனைவியிருவரும் தங்களுக்குப் பிடித்த ஒரு பாடலைத் தெரிவு செய்து அதற்கு நடனமாட வேண்டும்.புள்ளிகள் வளங்குவதற்கு பிரத்தியேகமாக அவர்கள் என்ன பொருட்களைப் பயன்படுத்தினார்கள் முகபாவனை தம்பதிகளுக்கிடையேயான அந்நியோன்யம் இப்படி பல அம்சங்களைக் கவனிக்கிறார்கள். அடுத்த சுற்றில் நிகழ்ச்சித் தொகுப்பாளர் குடுக்கும் பட்ஜெட்டில் தம்பதிகள் சொப்பிங் செய்ய வேணும்.இரு தம்பதிகளில் யாருடைய பொருட்கள் பட்ஜெட்டையொட்டியிருக்கிறதோ அவர்களுக…

    • 8 replies
    • 2.2k views
  6. காதலுக்கு கொடி பிடிக்கும் விஷயத்தில் இந்திய சினிமாவை வெல்ல வேறு எதுவுமே கிடையாது. ஏன், காதல் இல்லாத இந்திய சினிமாவே இல்லை என்று கூறும் அளவிற்கு காதலுக்கு அப்படியொரு முக்கியமான இடம். இதன் விளைவாக, கண்ட உடன் காதல், காணாமலே காதல், தொலைப்பேசியில் காதல், இன்டர்நெட்டில் காதல், பள்ளிக் காதல், கல்லூரிக் காதல் என எங்கு பார்த்தாலும் காதல் மயம். இப்போது தான் பிடித்த ஒருவரை பார்த்திருக்கிறேன்!!. இது காதலா என்பது தெரியவில்லை. காதலிக்கலாமா, வேண்டாமா ? என்ன செய்வது ? என்று குழம்பிக் கொண்டிருக்கிறீர்களா? உங்களுக்காகத் தான் இந்த கட்டுரை. கொஞ்சம் பொறுமையாக, திறந்த மனதோடு வாசித்துப் பார்த்து பிறகு முடிவெடுங்கள். காதல் ஒரு உன்னதமான உணர்வு. காதலுக்கு விளக்கம் கூற முடியாது, அதை உணர்வுப் பூர்வம…

  7. நான் வயசுக்கு வந்ததில் இருந்து எல்லா கடவுளையும் கும்பிடுவேன் ஆனா அர்ச்சனை, உண்டியலில் போடுவது, ஐயரை காசு கொடுத்து வலைப்பது (விபூதி தரமல் போய் கூப்பிட்டு வங்க வேண்டிய நிலை),...etc, etc.. செய்வதில்லை & விருப்பமும் இல்லை, ஆனா மனைவி எனக்கு நேர்மாறு, அவாவின் இந்த விஷயத்தில் தலையிடுவதில்லை பிறகு எனக்குதான் பிரச்சனை ஏன்ட தலையிட்டம் என்று..... கோயிலுக்கு போட்டுவரும்போது வாசலில் இருக்கும் ஏழைகளுக்கு போட்டுவிடுவேன். அத்துடன் கன ஏழைகளுக்கு என்னால் இயன்ற உதவி செய்தனான் & செய்து கொண்டிருக்கிறேன். "ஏழைகளின் சிரிப்பில் கடவுளை காண்கிறேன்". வலியை அனுபவிச்சாதான் வலியை பற்றி நல்லா புரியும். இப்ப கேள்வி நேரம் கேள்வி: எல்லாம் அவன் செயல், அவனின்றி ஓரணுவும் அசையாது, தலை…

  8. கடந்த வெள்ளிக்கிழமை நல்ல மழை பெய்கிறதே என்று விடுப்பு எடுத்துக் கொண்டு வீட்டில் உட்கார்ந்திருந்தேன். தொலைக்காட்சியில் காலையிலிருந்தே தொடர்கள் ஓடிக்கொண்டே இருந்தன. நான் எப்போதுமே தொலைக்காட்சித் தொடர்களைப் பார்ப்பதில்லை என்பதால் அதன் வீரியம் எனக்கு இது வரை உறைக்காமல் போனதில் ஆச்சரியமில்லை. அன்றைக்கு ஹாயாக சோபாவில் அமர்ந்து கொண்டு தொலைக்காட்சித் தொடர்களை அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பார்த்த எனக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. எல்லா சீரியல்களிலும் ஏதாவது ஒரு மனைவி தன்னுடைய கணவனை இன்னொருத்திக்கு கல்யாணம் செய்து வைக்கிறார். திருமணம் செய்து வைத்ததோடு நின்று விடாமல் அவரும் மனைவியாகவே தொடர்கிறார். அல்லது கணவனின் குடும்பத்தில் வேலைக்காரியாகவோஇ கொடுமைகளைச் சகித்துக் கொள்ளும் இயலாமை …

    • 11 replies
    • 2.2k views
  9. யாழில் வெற்றிகரமான தொழில் முனைவோராக சாதிக்கும் பாலா "செய் அல்லது செத்து மடி." யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை கெருடாவில் பகுதியிலுள்ள வி.எஸ்.பி பண்ணை அலுவலக கதவில் தொங்கும் வாசகம் இது. இவ்வலுவலகம் வெற்றிகரமான தொழில் முனைவோராக இப்பண்ணையினை(VSP Farm) நடாத்தி வரும் பரமசிவம் பாலமுருகனுக்கு சொந்தமானது. விவசாயம், பண்ணை விலங்கு வளர்ப்பு, சந்தைப்படுத்தல் என்பவற்றை கடந்த எட்டு வருடங்களாக சிறந்த முறையில் இவர் செய்து வருகிறார். முக்கியமாக கோழி வளர்ப்பு, பன்றி வளர்ப்பு ஆகியவற்றோடு முருங்கை, வாழை மற்றும் விவசாய பயிர்களையும் வெற்றிகரமாக இயற்கை முறையில் மேற்கொண்டு வருகிறார். பாலமுருகன் பலருக்கு தொழில் வாய்ப்பையும் வழங்கியுள்ளார். இந்த …

    • 5 replies
    • 2.2k views
  10. மனைவியைக் கொன்று கடந்த 2 மாதங்களாக பிரிட்ஜில் பத்திரப்படுத்தி வைத்திருந்த மென்னியல் பொறியியலாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மனைவியைக் கொன்று சிறு சிறு துண்டுகளாக்கி "ப்ரீசரில்" அவர் வைத்திருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். 37 வயதாகும் ராஜேஷை கைது செய்தபோது இந்த திடுக்கிடும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. அந்தப் பெண்ணின் சகோதரர் தன் சகோதரி எங்கிருக்கிறாள் என்பது பற்றி கண்டுபிடித்துத் தருமாறு போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின்பேரில் காவல்துறையினர் ராஜேஷிடம் விசாரணை நடத்தியதில் இந்த அதிர்ச்சியூட்டும் தகவல் கிடைத்தது. டேரா டூனைச் சேர்ந்த மென்னியல் பொறியியலாளர் ராஜேஷ் (37). இவரது மனைவி அனுபமா (33). இவர்களுக்கு இடையே கடந்த அக்டோபர் மாதம் 17-ம் தேதி ப…

    • 8 replies
    • 2.2k views
  11. எமது மக்களிடையே தாயகத்திலும் சரி இங்கும் சரி எதெற்கெடுத்தாலும் <நாங்கள் பிஸியாக இருக்கின்றோம்> என்று கூறிக்கொள்கின்ற வியாதியை காணக்கூடியதாக இருக்கின்றது.தாயகத்தில் இதன் வீச்சு கொஞ்சம் தூக்கலாகவே இருக்கின்றது.அவர்களுடன கதைக்கும் பொழுது மிகவும் எரிச்சலாக இருக்கின்றது.நாம் வாழ்கையில் அன்றாடம் செய்ய வேண்டய கடமைகளை இவர்கள் ஏன் ஊதிப்பெரிதாக்குகின்றார்கள்?இது ஒரு ஆரோக்கியமான போக்காக உங்ளுக்குத் தெரிகின்றதா? அல்லது எனது தப்பான புரிதலா? உங்களடைய கருத்துகளை எதிர்பாக்கின்றேன்?.

  12. சமுதாய திட்டங்கள் மாற்றத்திற்கு உட்பட்டது. பல வருடங்களுக்கு முன் ஒரு பெண் காதல் திருமணம் செய்வது என்பது கனவிலும் நடக்காத ஓர் விஷயம். காதல் திருமணம் செய்தவர்களை மட்டுமல்ல அவர்களின் இரு குடும்பத்தையும் சமுதாயத்திலிருந்து ஒதுக்கி வைத்த காலங்கள் உண்டு. ஆனால் தற்சமயம் காதல் திருமணங்கள் என்பது சர்வசாதாரணமாகி விட்டது. அன்று மறைவான இடங்களில் சென்று காதலை வளர்த்தவர்கள் இன்று தனது காதலர்களை பெற்றோருகு அறிமுகப்படுத்திய பின்பு வளர்க்கிறார்கள். தற்கால சமுதாய நிலையில் காதல் திருமணங்கள் பற்றி முதிர்ந்த வயதுள்ளவர்களை கேட்டால் “எல்லாம் கலிகாலம்” என நொந்து கொள்வார்கள். உண்மையில் அனைத்து யுகத்திலும் காதல் திருமணம் இருந்தது என்பதற்கான ஆதாரம் உள்ளது. நவீன நாகரீகம் படைத்தவர்கள் எனும் பெயரில்…

  13. என்னிடம் வரும் சில ஆண்கள்,''எனக்கும் என் மனைவிக்கும் உள்ள கருத்துவேறுபாடுதான் செக்ஸ் இன்பத்துக்குத் தடையாக இருக்கிறது. இதற்கு கவுன்சலிங் தாருங்கள்" என்பார்கள். இப்படி வந்தவர்களில் ஒருவர் கேட்ட கேள்வி, 'இந்த பொம்பளைங்களைப் புரிஞ்சுக்கவே முடியாதா?'என்பதுதான்! கிங் ஆர்தர் என்கிற இங்கிலாந்து மன்னரிடம் டேர்னே வேத்திலைன் என்கிற வீரன் ஒரு கேள்வி கேட்டான். 'பொதுவாக, எல்லாப் பெண்களும் ஆண்களிடம் என்னதான் எதிர்பார்க்கிறார்கள்?'இதற்குச் சரியான விடையைச் சொல்ல கிங் ஆர்த ருக்கு ஒரு வருட கால அவகாசம் கொடுத்தான் டேர்னே. 'அப்படிச் சரியான பதிலைச் சொல்லவில்லை எனில், என்னிடம் ஒண்டிக்கு ஒண்டி சண்டை போட்டு ஜெயிக்க வேண்டும்'என்றும் கேட்டுக்கொண்டான். நாட்டில் இருக்கும் ஞானிகள், பெரியவர்க…

  14. சாமத்தியவீடு என்பதன் நோக்கம் ஒரு பெண்ணின் பெற்றோர் தன் பெண் பிள்ளை கல்யாணம் கட்டுவதற்கு தயார் என அறிவிக்கும் ஒரு நிகழ்வு. இது எங்கள் கலாச்சாரத்துக்கு தேவைதானா?

  15. நான் இங்கு வாழும் காலத்தில், ஆற்றில் குளித்து மரணமான தமிழர்களின் எண்ணிக்கை, அறியக்கூடியதாக 20 ஆட்களுக்கு மேல் இருக்கும். இங்குள்ள ஆறுகள் அமைதியாக ஓடிக்கொண்டிருந்தாலும் மிக ஆழமானவை. ஆற்றின் கரைப்பகுதியே பல இடங்களில் இரண்டு தொடக்கம் மூன்று மீற்றர் ஆழம் உடையவை. அதன் நடுப்பகுதி எட்டுமீற்றர் வரை ஆழம் உடையது. அத்துடன் எவ்வளவு வெய்யில் எறித்தாலும் ஆற்றின் நீர் 5 பாகை அளவில் தான் இருக்கும். அந்த குளிர் நீர் எமது உடலுக்கு ஏற்றதல்ல. எவ்வளவு நீச்சல் தெரிந்தவராக இருந்தாலும்..... ஆற்றில் நீந்திக் கொண்டிருக்கும் போது... குளிர் நீரில், எமது தசைகள் இறுகிவிடும். அதன் பின் எம்மால்... நீந்த முடியாது. எவ்வளவோ உலகச் சாதனை படைத்த ஆழிக்குமரன் ஆனந்தனும் தேம்ஸ் நதியில் நீந்தும் போது தான் மரணம் …

  16. இன்று உலக சனத்தொகை தினம் 1804 ம் ஆண்டளவில் உலக சனத்தொகை ஒரு மில்லியார்டன். 1927 ம் ஆண்டளவில் உலக சனத்தொகை இரண்டு மில்லியார்டன்.இன்றைய கணக்கின்படி உலகில் சுமார் ஏழு மில்லியார்டன் மக்கள் வாழ்கின்றனர். இது ஐக்கிய நாடுகள் சபையின் தகவல். உலக சனத்தொகையைக் கட்டுப்படுத்த பல அமைப்புக்களும் நாடுகளும் பலவிதமான வழிகளில் முயற்சி செய்தபோதும் அல்லது இன்றும் முயற்சி செய்து கொண்டிருக்கும் போதும் உலகசனத்தொகை குறைவதற்காக சான்றுகள் மிகக் குறைவானதாகவே இருக்கின்றன. இன்றைய நிலையில் இன்னும் நாற்பது வருடங்களில் உலக சனத்தொகை ஒன்பது மில்லியார்டனாக உயரும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கை செய்கின்றனர்.அதைவிட இன்னும் அதிர்ச்சியான தகவல் 2100 ம் ஆண்டளவில் உலக சனத்தொகை 10 , 1 மில…

  17. இளம் தலைமுறையின் மன உறுதியைக் குலைக்கின்றனவா சமூக வலைத்தளங்கள்? கொடுமைகளுக்கு எதிரான தொண்டு நிறுவனமான 'டிச் தி லேபிள்'அமைப்பு நடத்திய ஆய்வில், சமூக வலைத்தளங்கள் இளைஞர்களை அதிக பதட்டம் உடையவர்களாக மாற்றுவதாக தெரிய வந்துள்ளது. படத்தின் காப்புரிமைTHINKSTOCK சமூக வலைத்தளங்களில் பதிவிடப்படும் தன்னுடைய செல்ஃபிகளை யாரும் லைக் செய்யவில்லை என்றால் மன வருத்தம் அடைவதாக 40 சதவீத இளைஞர்களும், தங்களுடைய சமூக வலைத்தள கணக்கை பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை தங்களின் மன உறுதியுடன் நேரடி தொடர்பு கொண்டிருப்பதாக 35 சதவீத இளைஞர்களும் தெரிவித்துள்ளனர். தங்களை சமூக வலைத்தளங்களில் யாராவது கிண்டல் செய்துவிடுவார்களோ என்ற பயத்தில் வாழ்வதாக ம…

  18. தாலிகட்டும் நேரத்தில் மணப்பெண் செய்த காரியம் : மணமகன் வேதனை வேலூர் மாவட்டம் வாலாஜா கோட்டை பகுதியை சேர்ந்தவர் அப்பாதுரை மகன் மாதவன் மளிகை கடை வைத்துள்ளார். இவருக்கும் சேலத்தை சேர்ந்த கோசால் என்பவரது மகள் ஜெயசுதா என்பவருக்கும் திருமணம் செய்ய பெரியோர்களால் நிச்சயம் செய்யப்பட்டது. இன்று வாலாஜாவில் உள்ள திருமண மண்டபத்தில் திருமணத்தை நடத்த முடிவு செய்தனர். இருவீட்டாரும் தங்களது உறவினர்கள், நண்பர்களுக்கு பத்திரிகை அழைப்பிதழ் கொடுத்து வரவழைத்தனர். வாலாஜாவில் உள்ள கோட்டாராமையா திருமண மண்டபத்தில் நேற்று இரவு திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடந்தது. சேலத்தில் இருந்து மணப்பெண் வீட்டார் நேற்று இரவு வந்தனர். இதனை தொடர்ந்து பெண் அழைப்பு, மாப் பிள்ளை அழைப்பு போன்ற ச…

  19. இதோ பத்து ஐடியாக்கள்! சும்மா நலம் விசாரிப்பதற்காக போன் செய்வது என்பது கூடவே கூடாது. முக்கியமான விஷயம் என்றால் மட்டுமே போனை பயன்படுத்த வேண்டும். அதேபோல எதிர்முனையில் பேசுபவர், ‘‘அப்புறம் வேற என்ன விசேஷம்?’’ என்று ஆரம்பித்தால், வம்புப் பேச்சுக்குத் தயாராகிறார் என்பதை உணர்ந்து உஷாராகிவிடவேண்டும். சதாசர்வ காலமும் செல்போனிலேயே பேசாமல் வாய்ப்புக் கிடைக்கும்போது காயின் போனில் பேசுவது என்று முடிவெடுங்கள். ஒவ்வொரு நிமிடத்துக்கும் ஒரு ரூபாய் காயினைப் போடும் போது காசு செலவழிவதைக் கண்ணெதிரே பார்க்கமுடியும். தானாகவே பேச்சு குறையும். காலப்போக்கில் செல்போனிலும் சிக்கனமாகப் பேசும் பழக்கம் வந்துவிடும். எல்லா செல்போன் நிறுவனங்களுமே குறிப்பிட்ட நேரத்தில் பேசினால், …

    • 9 replies
    • 2.1k views
  20. 2018ஆம் ஆண்டில் #MeToo, மித்தாலி, சபரிமலையில் பெண்கள் செல்ல அனுமதி கோரி போராட்டம் என பெண்களை பாதித்த, பரவலாக பேசப்பட்ட நிகழ்வுகளின் தொகுப்பு இது. திரைத்துறையை கலங்கவைத்த #Me too கடந்த ஆண்டில் உலக அளவில் பிரபலமான மீ டூ 2018ஆம் ஆண்டில் இந்தியாவிலும் பரவலாக பேசப்பட்டது. படத்தின் காப்புரிமை CHINMAYI SRIPADA/FACEBOOK அதில் குறிப்பிடத்தக்கவையாக, வெளியுறவுத் துறை இணை அமைச்சராக இருந்த எம்.ஜே அக்பர் மீதும் மீ டூ புகார்கள் எழுந்தன. மீ டூ புகார்கள் கூறப்படும் பெண்கள் மீது பல…

    • 0 replies
    • 2.1k views
  21. தற் காலத்தில் எங்கும் விழாக்கள் நடைபெறுவதனால் இதை இங்குஎழுதுகின்றேன் மனம் அமைதியடைய வேண்டும் என்பதற்காகவே ஆலயம் செல்கின்றோம். ஆனால் சிலர் ஆலயங்களிற்கு வரும்போது ஒரு திருமண வீட்டிற்கு போகின்றவர்கள் போலவே வருகின்றார்கள். அவ்வாறு வந்தவர்களில் சிலர் பிராத்தனை நடைபெறும் போதெல்லாம் கதைத்துக்கொண்டு நிற்கின்றார்கள். இதை பார்க்கும் போது ஆலயம் செல்வதன் நோக்கம் கேள்விக் குறியாகின்றது. வருங்கால சந்ததியினருக்கு இவ் நிலமை ஒரு பிழையான அவிப்பிராயதிதை ஏற்படுத்தாதா. உண்மையாகவே ஆலயம் போய் தம் மனக்கவலைகளை இறைவனிடம் கூறி வழிபாடு செய்பவர்களின் நிலை

  22. இனிய வணக்கங்கள், எனது ஆசான் ஒருவர் கனடாவில சட்டரீதியாக திருமணம் செய்துவைக்கும் அதிகாரத்தை பெற்று இருக்கிறார். பல திருமணங்களும் செய்து வைத்து இருக்கிறார். அண்மையில அவர் என்னிடம் திருமண உறுதிமொழியை (அதான் திருமணபதிவின் போது மாப்பிளையும், பொம்பிளையும் ஆளாளிண்ட கையைக்கோர்த்துக்கொண்டு சொல்லுவீனமே.. அது) தமிழில உருவாக்குவதற்கு உதவி கேட்டு இருந்தார். நானும் சரி ஓம் என்று சொல்லி அவர் அலுவலகத்துக்கு சென்று அவருடன் உட்கார்ந்து திருமண உறுதிமொழி வாசகத்தை, மற்றும் அங்கு கையாளப்படவேண்டிய நடைமுறைகளை ஓர் ஒழுங்குமுறையாக தமிழில் எழுதிக்கொண்டு இருந்தோம். இதன்போது திருமண வைபவத்தின்போது மாப்பிளை, பொம்பிளை எப்படி இருக்கையில் உட்காருவார்கள் என்பதுபற்றிய விடயத்திற்கு வந்தோம். அவர்…

    • 13 replies
    • 2.1k views
  23. வலைப்பக்கங்களில் தேடிப் படிக்கிற சில விஷயங்கள், நமக்குக் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களாகவும், வழிகாட்டுவதாகவுமே ஆகிவிடுவதுண்டு. தட்டுங்கள் திறக்கப்படும்! கேளுங்கள் கொடுக்கப்படும் என்று கிறித்தவ வேதாகமம் சொல்வது இணையத்தில் மட்டுமே நூறு சதவிகிதம் சாத்தியம்! ஆம்! நீங்கள், எதைத் தேடுகிறீர்களோ, எதைத் தட்டுகிறீர்களோ அது நிச்சயமாகக் கிடைக்கும் இடம் இந்த இணையம் மட்டும் தான்! டோனி மோர்கன் என்றொரு வலைப் பதிவர்! இவருடைய வலைப் பதிவுகள் பெரும்பாலும் கிறித்தவ சர்ச்சுகளின் நிதி நிர்வாகத்தைப் பற்றியது, கிறித்தவ சர்ச்சுக்களால் ஸ்பான்சர் செய்யப்பட்ட பதிவுகள் என்றாலும் கூட, பதிவுகளில், மனிதவளம், மேலாண்மை, நிர்வாகம் குறித்த சில விஷயங்களைப் பற்றிய கருத்துக்கள் கொஞ்சம் யோசிக்க வைப்பத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.