கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5130 topics in this forum
-
ஆண்ட மண்ணில் நாம் அகதியாகிப் போனாலும் நீண்ட நெடுங்காலம் நிம்மதியை இழந்தாலும் கண்டபல காட்சிகளால் கண்கலங்கி நின்றாலும் மீண்டு வந்திடுவோம் இது உறுதி என்று விட்டீர் றோட்டுப் போட்டவரும் கோட்டுப் போட்டவரும் பாட்டுப் போட்டு அங்கே பப்ளிசிட்டி தேடிவிட்டு வோட்டுக் குவியும் என்று போட்டிட்ட கணக்கிற்கும் வேட்டு வைத்துவிட்டு விடியலுக்காய் ஏங்குகிறீர் கண்ணே மணியென்று உமைக் கவர முயன்றவரும் வண்ணப் படத்துடனே மதில்தன்னை நிறைத்தவரும் எண்ணிப் புழுங்குகின்றார் எரிச்சலிலே துடிக்கின்றார் விண்ணர்கள் உம் கடமை சிறப்புடனே செய்திட்டீர் திறந்திருக்கும் சிறையினிலே நிம்மதியை பறித்துவிட்டு சிறந்ததோர் வாழ்விற்காய் வாக்களியும் என்றவரும் பறந்தங்கே வந்துமக்கு பாசமுகம் போட்டவரும் ம…
-
- 13 replies
- 1.1k views
-
-
அம்மாவின் கனவு தம்பிகளின் தங்கையின் நம்பிக்கை சுதர்சனா ! நீயெப்படி ? நெருப்பில் எரிந்து கரித்துண்டமானாய்….? எப்போதோ செய்தியாய் சந்தேகமாய் கேள்விப்பட்டது…. அது மறந்து போன ஒருநாளில் தோழனொருவன் ஊடாய் தொடர்பில் வந்த உன் அம்மாவின் கண்ணீர் இன்னும் நனைத்தபடியிருக்கிறது நினைவுகளை…. அம்மாக்களுக்கு நிரந்தர துயராய் பிள்ளைகளின் இழப்புகள் எங்களுக்கென்ன எழுதப்படாத விதியா சுதர்சனா…? உன் நினைவாய் நீ போன இடம் வரப்போவதாய் புலம்புகிற அம்மாவின் கனவுகளில் ஏன் தீமூட்டினாய்…..? அக்காவின் ஞாபகங்களில் தொலை தூரங்கள் வரையாகத் தங்கள் கனவுகளை எறிகிற உன் உடன்பிறந்தோரின் உள்ளெரியும் தீயில் அவர்கள் உயிர்வாழ்வையே வெறுப்பதை….! எந்த வா…
-
- 1 reply
- 871 views
-
-
என் ஐயராத்து அம்மணி கவிதை - இளங்கவி... என் ஐயராத்து அம்மணி நீ அழகான என் கண்மணி.... உன் ஒற்றை மூக்குத்தியால் என்னை கொழுவி இழுத்தவள் நீ.... உன் தெத்திப் பல் சிரிப்பில் என்னை சிக்கவைத்தாய் நீயடி... உன் ஆளுயரக் கூந்தலில் என்னை அசரவைத்தாய் நீயடி.... உன்னை வீதியெங்க்கும் துரத்தி நம் வீதியெல்லாம் உடைஞ்சு போச்சு.... அதனாலே நம் வீ.சி க்கு அதைத் திருத்துவதே வேலையாச்சு.... உன் கன்னக்குளி பார்க்க 'சுண்டுக்குளி' வரை வருவேன்; அதனால் தெருவில் இருந்த குளி விழுந்து என் காலெலும்பபு உடைஞ்சிருந்தேன்... வீட்டில் மீன் பொரியல் விடலைக் கோழிக்கறி விரும்பிய நேரம் உண்ண பூநகரி மொட்டைகறுப்பன் சோறு... அத்தனையும் சமைத்துவைத்து அம்மா …
-
- 34 replies
- 4.3k views
-
-
மாசி வந்தால் மனசில் ஒரு படபடப்பு .. மயங்காத மங்கை மனதை உடைக்க முன் .. மறுபடியும் போட்டுருவம் ஒரு விண்ணப்பம் ... கண்ணே என்று தொடங்கவா ;இல்லை பெண்ணே ... என்று பழைய பல்லவி பாடவா ,என் செல்லமே .. எல்லோரும் தாமரைக்கு ..ரோஜாக்கு ஆசைப்பட ... நான் மட்டும் செந்தாமரைக்கு ஆசைப்பட்டது தப்பா .. சேறு உன்னை சுற்றித்தானே இருக்கு உன்னில் இல்லையே .. உன்னை பறிக்குவரை என்னிலும் ஒட்டி பிடிக்கும் .. உன்னை கைப்பற்றி விட்டால் நான் கழுவி விடுவேன் .. உள்ளம் அது என்னது மெய்யடி நீ எந்தன் கவியடி .. காதலர் தினம் வேஷம் உன் அப்பன் மனது விஷம் .. என் அப்பத்தா பார்ப்பா தோஷம் நானோ உன் பாசம் .. என்னை கைகழுவி போகாதே மழை மேகமே ...நான் நெருப்பை உண்ணும் கோழியே உனக்கு கட்டுவேன் தாலியே .. ஜா…
-
- 11 replies
- 1.2k views
-
-
யாழிளையா….! கம்பீரம் மொட்டவிழ்க்கும் கட்டழகா! நெடிதுயர்தல், நீள் வளர்தல் அனைத்துமாய் நின் மாற்றம் குரலொலியில் தெரிகிறது ஆண்மையின் ஏற்றம் செறிந்த பலம் குவிந்து நிமிர்கிறது நின் மார்பு அகண்ட பெரு வெளியில் விரிகின்றன உன் தோள்கள் யாழிளையா….! கம்பீரம் மொட்டவிழ்க்கும் கட்டழகா தமிழேந்தி வலையுலவும் மெட்டழகா பதினாறின் விடலையே பயமேது உனக்கு பால் வடியும் முகத்தில் அரும்புதடா மீசை பக்கவாட்டு கன்னங்களில் படருதடா புற்கள் இலக்கியத்தில் உனைச் சொன்னால் இரும்பூக்கும் என் சொல் இன்றுனக்கு பதினாறாம் இளையவனே! தவழ்பருவம் முடித்துவிட்டாய்.. தமிழேந்தித் திரிந்து தரணியை வரி அமிழ்ததொன்றே அவ…
-
- 18 replies
- 2.2k views
-
-
நிலவின் நிர்வானத்தால் கடல் தினவு கொள்ளும் இரவுகளில் உன்னிரு இதழ்களிலும் வழிகிறது சுயத்தை தின்றுவிடும் சூட்சுமம்.. நம் அன்பு தொலைந்துபோன எட்டாவது வர்ணம் மழைப்பொழுதில் விழுந்து தொலைக்கும் மின்னலின் கனம் புல்நுனிகளில் திரளும் நீர் யாருமறியாமல் எங்கிருந்தோ எழுகிறது மறைகிறது உனக்குள் தொலைந்து போதலும்.. அபத்தப் பொழுதொன்றில் இளக்காரம் சுமந்து நெளியும் உதடுகளில் நேசத்தைக் கொட்டிவிட முனைந்து தோற்றுவிடுதலுடன் நீள்கிறது நமக்கிடையிலான களவொழுக்கம்.. வியர்வை நாற்றம் அறிய பயணித்து இடைவெளிகளில் பலியாகிக் போகின்றன ஓசையிழந்த முத்தங்களும் தீண்டல் தவிப்புகளும் துப்பிவிட்ட நேசங்களும்.. எட்டாவது வர்ணம் கொள்ளுதல் முரண் முரண்களால்தான் வாழ்வு வீடுபெறடைகிறது நம் அன்ப…
-
- 6 replies
- 821 views
-
-
நீங்கள் சாகும்வரை நாங்கள் போராடுவோம்…! வேரோடு பிடுங்கி விசங்களால் நிறைக்கப்பட்ட நிலத்தில் அவலமுறும் உயிர்களுக்காய் போராட்டம் நிகழ்கிறது….! நீதி கேட்க ஐ.நா.ஐரோப்பிய ஒன்றிய வாசலெங்கும் நிலம்விட்டகன்று போனவர்கள் நீதி கேட்கின்றோம்….. ஆழுக்கொரு கொள்கை அத்தோடில்லாம் அடிதடி துரோகம் அநியாயம் வசைபாடல் நாடுகடந்த கடக்காத பேரவைகளின் கால்களில் போராடியோர் குரல்களும் உயிர்களும் நசுங்கிக் கொண்டிருக்க நீதிக்கான போராட்டம் நித்தமும் நடக்கிறது. செய்திகளும் அறிக்கைகளும் கர்த்தருக்காகவும் கருணையுளம் கொண்ட உயிர்களின் விலைகளுக்காகவும் சமர்ப்பணமாக…. எப்போதும் போல விசிலடித்து வீரம் விளைவிக்கும் புதிய கர்த்தர்களாலும் பழைய கடவுகள்களின் …
-
- 18 replies
- 2.7k views
-
-
அம்மா திரும்பியிருக்கிற ஆற்றங்கரை காணி நிலம் தீபச்செல்வன் புற்களும் பற்றைகளுமாய் கிடக்கும் நிலத்தில் வீடு கரியிருக்கும் உருக்குலைந்த காணியில் அம்மாவின் களைப்பு தணலூட்டப்பட்டிருக்கிறது கடவுள்கள் எங்களை கைவிட்டதாய் ஒரு நாள் உணர்ந்தபொழுது காணி நிலம் தரும் பராசக்தியிடம் அம்மா உணவிழந்து பசியிருந்தாள் ஆற்றங்கரையில் கிடக்கும் இந்தக் காணிநிலத்தை பராசக்தி ஏன் கைவிட்டாள்? யுத்தக் குற்றங்களுக்காக நிறைவேற்றப்பட்ட தண்டனைக்காலத்தின் எந்தச் சித்திரவதைகளையும் பகிரப்போவதில்லை என்று அம்மா ஒப்புதலளித்திருக்கிறாள். வீடு திரும்பியிருக்கிறோம் என்பதை இந்த ஆற்றங்கரைப் பறவைகள் கொண்டாடுகின்றன ஒரு நாள் ஆறு பெருக்கெடுக்கையில் என்னை கைகளில் அம்மா நிரப்ப…
-
- 0 replies
- 1.1k views
-
-
இனிக்கும் நினைவலைகள் நெடிதுயர்ந்த நிழல்மரங்கள் கீழ் நிழலில் நீட்டிக்கால் வைத்துநான் நீண்டு படுத்திருந்திருந்தேன் விடிகாலை எழில்கூடி வெளிவந்த ஆதவனும் நடுவானில் நின்றிருந்து சுடுகதிரை வீசிநின்றான் துடிகூட அசையாத தளிர்ச்சோலை மலர்க்கூட்டம் தம்மழகால் எனைமயக்கி தாள்வாரம் நின்றுவிட இடையிடையே தொலைவினிலே இறக்கையினம் இசைபாட இன்னிசைபோல் தென்றலிலே மிதந்து வந்ததுவே முடிசார்ந்த மன்னவரின் முன்சரிதை மலர்எடுத்து இடையின்றி ஒவ்வொன்றாய் இனித்துச் சுவைத்திருந்தேன் துடியிடையும் பிடிநடையும் துவளும் தமிழ்ப்பாவையர்கள் வடிவழகின் வர்ணனையை மனக்கண்ணால் ரசித்திருந்தேன் அடியாளும் அடிசிலொடு இரசமுடன் இருகறிகள் மடைபோட்டு முடித்துவிட்டு மன்னவ…
-
- 10 replies
- 3.6k views
-
-
ஹெர்மன் ஹஸ்ஸி- கவிதை தமிழில் மொழிபெயர்ப்பு : பேராசிரியர் மு. விஜயகுமார் ஜெர்மன் எழுத்தாளர். நோபல் பரிசு பெற்றவர். (1970) தலைப்பு: நிலைகள் நிலைகள் ஒவ்வொரு பூக்களும் தோன்றி மறைதல் போல இளமையும் மறைகிறது வாழ்வின் நிலைகளில். ஒவ்வொரு ஒழுக்கத்திலும் உண்மையை அறிகிறோம் மலரின் பருவங்கள் நிலையானதல்ல ஏனெனில் வாழ்க்கை ஒவ்வொரு வயதிலும் உள்ளது வருந்தாமல் தைரியமாக எதிர்கொள்ளுங்கள் பழைய உறவுகள் மறக்காமல் புதிய ஒளியைக் கண்டுபிடிங்கள் எல்லாத் தொடக்கமும் ஒரு மாயசக்தியாக வழிநடத்துகிறது. அதுவே நம்மைப் பாதுகாத்து உதவுகிறது அமைதியாக நெடுந்தூரப் பயணத்தைத் தொடங்குங்கள். வீட்டு நினைவுகள் நம்மைத் தடுக்கிற…
-
- 0 replies
- 334 views
-
-
பனி உமிழும் மாலைப்பொழுதில் மொழிபெயர்ப்பு: பேராசிரியர் மு.விஜயகுமார் ஆங்கிலத்துறைப் பேராசிரியர் வேல்டெக் ரங்கா சங்கு கலைக் கல்லூரி ஆவடி, சென்னை – 600062 யாருடைய பனித்துகள்கள் இவைகள்? தெரிவது போல உணர்கிறேன். அவரின் வீடோ அருகே உள்ளகிராமத்தில் நானோ இங்கு ஓய்வில். என்இருப்பை அறிய வாய்ப்பில்லை. காடுகள் முழுவதும் பனித்துளிகளின் கைகள் படர்ந்துள்ளது. என் இளமை ததும்பும்குதிரை பனிஉதிரும் காடுகளுக்கும் சிலைபோன்ற ஆறுகளுக்கு இடையைவீடுகளற்ற இடத்தை கண்டு சற்றே குழம்பியது. அதன் கழுத்தில் உள்ள மணிகள் அசைந்து தவறுகள் நேராமல் கவனமாக இருக்க வேண்டி கட்டளையிட்டது. …
-
- 2 replies
- 647 views
-
-
முன்னழகு முந்திவர பின்னழகு அசைந்து வர என்னருகே வந்தவளே காதல் கனிமொழி தந்தவளே எங்கையடி சென்றாய் நீ என்னை விட்டு? அசைந்துவரும் உன் இடையதிலே கட்டிவிட்டேன் என் மனமதையே மாயமாய் சென்று மறைந்தனையே நீ மங்கை தானா மறுமொழி கூறடியே தங்கம் என மின்னும் உடலோடு சொர்க்கம் எனச் சொக்கும் மன்மதக் கணையோடு அன்னம் என எழிலுறும் நடையோடு மொத்தம் இதுவென நித்தம் பருகிட கருவண்டு நானென ரோஜா நீயென - என் அர்ப்பணம் இதுவென தந்தனை நின் உடலினை பசியாற பணி செய்யும் பாவை நீயென மகிழ்ந்தனன் நான்... இதழதில் இதழ் வைத்து இன்பரசம் அருந்துகையில் மனமதில் கள்ளம் வைத்து நடித்தனையே நீயும் பாவி கொடும்பாவி என்னாவி துடி துடிக்க வைத்த மாபாவி என்னவாகி நான் போனேன்... …
-
- 6 replies
- 1.8k views
-
-
என்னருமைத் தமிழகமே ஏனிந்த தடுமாற்றம் ? என்னருமை உடன்பிறப்புக்கள் ஏதிலியாய் உங்கள் மண்ணில் ஓடோடி வருவதுவும் ஒன்றும் புதிதல்லவே .. உங்களுக்கு ! எத்தனை காலத்துக்கு எங்களின மக்களுக்கு அகதி என்ற முத்திரையும் அரிசி .. இத்தியாதிகளை கொடுப்பதாகத் திட்டம் .. என்று கொதித்துப் போனேன் .. நேற்றுவரை ஆனால் .. இன்று உங்கள் நடவடிக்கை ! இடியேறு கேட்ட நாகமானேன் ! என்காதை வந்தடைந்தால் .. எப்படி .. எழுதாமல் இருப்பேன் ? ஈழமண்ணின் விடுதலைக்கு இந்தியாவால் முடியாதென்றால் .. உதவத்தான் முடியலைன்றாலும் உபத்திரவம் தான் கொடுப்பதுமேன் ?
-
- 3 replies
- 1k views
-
-
கொடுமை கொடுமை .... காட்டுமிறான்டிகளின் உச்ச கட்ட கொடுமை .... ஈழத்தமிழிச்சிகள் தொடர்ந்து ... கொடூரமாய் கொல்லப்படும்... கொடூர கொடுமை ......!!! அந்நிய படையின் ஆதிக்கத்தில் ... கற்பிழந்த ஈழச்சிகள் .....! ஆக்கிரமிப்பு படையின் வெறியில் ... செம்மணி வெளியில் .... வேம்படி மாணவி ....!!! வெறி நாய்களிடம் அகப்பட்ட ... வெள்ளை முயல்போல் .... புங்குடுதீவில் வித்தியாவின் .... கொடூர கொலை ...!!! நான் சொல்லும் தீர்ப்பு ....!!! வெறிகொண்ட .... காட்டுமிறாண்டிகளை.... உடன் கொல்ல கூடாது .... அணுவணுவாய் அனுபவித்து .... சாகவேண்டும் .....!!! இவர்கள் பெற்றெடுத்த பெண் .... குழந்தைகளை இவர்களிடம் இருந்து ..... பாதுகாக்க வேண்டும் ....!!! இல்லாவிட்டால் பெற்ற பிள்ளைகளுக்கே .... இவர்களிடமிருந்து பாத…
-
- 1 reply
- 767 views
-
-
இன்னொருமுறை உனக்கு பிறப்பு வாய்த்தால்....... எங்கள் இனத்தில்.. பிறக்காதே! எனக்கு அப்பா.. நீ தானென்று...... சத்தமிட்டு சொல்வேன்.... அதில் எந்த களங்கமும் என் ... அம்மாவுக்கும் வராது...! ஏன் என்றால்... என் அம்மாவின்.. தாத்தாவுக்கும்.. நீர்தானே அப்பா! உயிரின் தொடக்கம் என்பது... வெறும் பிறப்பு ... உறுப்புக்கள் காறி... துப்பும் சங்கமம் இல்லை..! மானம்....! பிறந்து ..தின்று.. உண்டு ..ஒய்யாரமா.. கதை-பேசி.. சத்தமெழுப்பி... நாளையபொழுதில் .. செத்துப்போனால்... காக்கை கூட... தன் இனத்துக்காய்..... அழும்! ஊருக்காவே...வாழ்ந்து.. போனியே உனக்கு ஏதாச்சும் தந்ததா.. இந்த சனம்? நம்பினவன.. சந்ததியை... …
-
- 1 reply
- 704 views
-
-
நினைத்து பார்க்கிறேன் கோயில் திருவிழாவை பத்து நாள் திருவிழாவில் படாத பாடு பட்டத்தை ...!!! முதல் நாள் திருவிழாவிற்கு குளித்து திருநீறணிந்து பக்திப்பழமாய் சென்றேன் பார்ப்பவர்கள் கண் படுமளவிற்கு....!!! இரண்டாம் நாள் திருவிழாவில் நண்பர்களுடன் கோயில் வீதி முழுவதும் ஓடித்திரிவதே வேலை பார்ப்பவர்கள் எல்லோரும் திட்டும் வரை ....!!! மூன்றாம் நாள் திருவிழாவில் மூண்டது சண்டை நண்பர்கள் மத்தியில் - கூட்டத்துக்குள் மறைந்து விளையாட்டு ....!!! நாளாம் நாள் திருவிழாவில் நாலாதிசையும் காரணமில்லாது அலைந்து திரிவேன் ...!!! ஐந்தாம் நாள் திருவிழாவில் சேர்த்துவைத்த காசை செலவளித்து விட்டு வெறும் கையோடு இருப்பேன் ...!!! ஆறாம் நாள் திருவிழாவை ஆறுதலான நாளாக கருதி வீட்டிலேயே இர…
-
- 0 replies
- 2k views
-
-
புலி மௌனம் கலைத்த பூகம்பச் செய்தி காலப் பெரு வெளியில் - ஈழக் கதை எழுதும் இளைய தேவரீரே! தமிழர் வாழ்வெடுக்கத் திறனாயும் பணியதனை தரணிக்கு விட்டுச் சென்ற தமிழ்மானப் புதல்வர்களே! வரலாறு எழுதும் வண்டமிழ்க் கோல்களுக்கு உரமூறும் கரு தந்த காலக் கருவூலங்களே! கருவூறும் உயிரணுவும், காடேகும் திருவுருவும், இருப்புக்கு மத்தியிலே இயங்கும் எவ்வுயிரும் சிரம் தாழ்த்தி உமைத் தொழுதெழும். நீங்கள் இலக்கெடுத்துப் போனகதை இதயத்தில் வலித்திடினும், இனவாத இதயத்தில் அறைந்த சேதி இனிக்கிறது. வெள்ளரசின் அடியினிலே வேதாளக் கழுத்தறுத்து, விம்மியழும் அன்னையவள் விழிநீரைத் துடைத்து விட்டீர். இது இனங்காக்கும் போர், ஈழ நிலங்காக்கும், மனித வளங்காக்குமெனச் சிங…
-
- 9 replies
- 2.6k views
-
-
கல்லரை முன் கண்ணீர் சிந்தி கண்துடைக்க என்னை எழுப்பிவிடாதே உன் கருவறையில் ஜனனிக்க வேண்டும் நான்! ......................... உன் உள்ளங்கையில் குடியேற ஆசைப்பட்டு முற்றத்தில் சொட்டியது அந்திமழை ....................... உதிர்ந்தது பூ வலியில் துடித்தாய் நீ! .................... சொட்டுச்சொட்டாக உள் இறங்கி உரைந்துப் பனிச்சிலையானது! மனசெல்லாம் நீ! ...................... தீக்குள் விரலை வைத்தால் உன்னை தீண்டும் இன்பம் தோன்றுதடி நான் பூக்களை பரித்துவிட்டால் உன் பாதி உயிர் கரையுதடி நீ என்ன முரண்களின் மகளா! .................. என் உதடு யாத்திரீகன்கள் உன் …
-
- 0 replies
- 10.7k views
-
-
கிரேக்கம் தந்த ஒலிம்பிக் கிறக்கம் தனில் உலகம்.. கிலோ கணக்கில் உலோக நாணயங்கள் தங்கம் வெள்ளி வெண்கலம் என்று... முடிசூடிக் கொள்ளும் மன்னர்களோ அநேகர் பணக்கார வீட்டு செல்லக் குழந்தைகள்..! மனித உழைப்பும் திறமையும்.. அன்று கிரேக்கம் தனில் விளையாடி நிற்க பணமும் தொழில்நுட்பமும் இன்று... விளையாடும் வியாபாராமனது ஒலிம்பிக்..! இங்கிலாந்தின் பொருண்மியம் சரிந்து விழும் சங்கதி கூட செல்லாக் காசாச்சு.. சிரியாவின் இனப்படுகொலை சிந்தனை விட்டுப் போயாச்சு ராஜபக்சவின் மனிதப் படுகொலைக் குற்றங்கள் மன்னிக்கப்பட்டு மறந்தாச்சு.... இப்படி எத்தனையோ அநியாயங்களை அப்படியே மென்று விழுங்குது இன்றைய ஒலிம்பிக் அதற்கு தங்கப் பத…
-
- 7 replies
- 1.1k views
-
-
வெறிச்சோடிப் போயிருந்த அந்த வெற்றுலகத்தில்... அன்புக்கான ஏக்கம் மட்டும் தலைவிரித்து ஆடிக்கொண்டிருந்தது! அந்த மண்டலத்தை என்னவென்று அழைப்பது? மனிதம் வாழும் கூடு என்றா? முதிர்ந்த குழந்தைகளின் கோவில் என்றா? பெற்றவருக்காக பிள்ளைகள் கட்டியமைத்த தனிக்குடித்தன கொட்டகை என்றா? புறக்கணிக்கப்பட்ட புண்பட்ட நெஞ்சங்களின் சரணாலயம் என்றா? அங்கே... நடக்கவே முடியாமல், நான்குச் சக்கர வண்டியில் நகர்ந்துக்கொண்டிருந்தால் ஒருத்தி! தடுக்கி விழுவோமா என்ற அச்சத்தில் தாங்கிப் பிடிக்க நாதியற்று, தடியோடு தள்ளாடிக்கொண்டிருந்தார் ஒருவர்! இவர்களைப் போலவே.. அங்கே.. அறுபதுக்கும் மேற்பட்டவர்கள்... கூண்டுக்கிளிகளாகவும், குற்றவாளிகளாகவும்.. நன்றியில்லா நாய்களை சேய்களாய் ஈன்றெடுத்த தவறைத் தவிர, வேறேத…
-
- 3 replies
- 514 views
-
-
எங்க நாடு ஏழை நாடு மல்லி எப்ப வரும் மருந்து எமக்கு தம்பி-பா.உதயன் 😔 ———————————————————————————————————— wealthy nations have purchased enough doses to vaccinate their entire populations.in the meantime poor countries are suffering to get their corona vaccine.Rich countries just 14% of the world population have bought 54% of the corona vaccines.they have enough vaccines for all.Rich countries have a moral obligation to help poor countries to get enough vaccines.If rich countries shares there will be enough vaccines for all world population.Pls save the poor people to. நாலு காசு கையில் இல்லை தம்பி நம்மை கொரோனா விட்டு போகுதில்லை தம்பி எங்க நாடு ஏழை நாடு …
-
- 2 replies
- 670 views
-
-
இனி என்னிடம் கவிதைக்கான எந்த ஒரு இலக்கிய வார்த்தையும் மிச்சம் இல்லை என் வார்த்தைகள் பிண வாடையுடன் தான் இனி வரும் *************** எனது மகன் mc donalds MC chicken கேட்கின்றான் அவனது சகோதரங்கள் அரைவாசி எரிந்த உடலுடன் கிடக்கின்றார்கள் என்பதை அவன் அறிய நான் விடவில்லை தமிழ் குழந்தைகளின் இரத்தம் இனியது என்கின்றான் என் சிங்கள நண்பன் அவை உப்பு கரிப்பது இல்லையாம் நேற்றும் எதிரியின் பரம்பரை தமிழ் குழந்தையின் பிஞ்சு போன சதையின் வழி ஊறிய இரத்தத்தை குடித்த பின் சொன்னார்களாம் தமிழ் குழந்தையின் இரத்தம் அதிக யுத்த போதை ஊற்றும் என்று *************** என் மகன் pizza கேட்கின்றான் அவன் அறிய நான் விடவில்லை அவனின் அதே …
-
- 5 replies
- 1.4k views
-
-
மேஜர் சிட்டு 16ம் ஆண்டு நினைவோடு நாங்கள் காற்றாய் வருகிறாய் தேசக்கனலாய் திரிகிறாய்…! காற்றலையின் இளையெங்கும் கவிதையாய் வாழ்கிறாய்…! ஊற்றாய் இசையின் மூச்சாய் உலகெங்கும் உலவித் திரிகிறாய்….! எங்கள் காதுகளில் உன் கானம் தீமூட்டி எழுவிக்கும் தீர்க்கமாய் ஒலிக்கிறாய்…..! ‘மேஜர் சிட்டுவாய்’ தமிழ் வாழும் உலகெங்கும் தமிழிசை வாழும் திசையெங்கும் தமிழர் வாழும் வரை வாழ்வாய்…..! அரும்பு மீசைக்கனவறுத்து ஆழ்மனக் காதல் நினைவறுத்து ஈழக்காதல் இதயத்தில் சுமந்து இலட்சியக்கனவோடு போன புலியே….! வருவாயொரு பொழுது மீண்டும் பாடியும் பகிடிகள் விட்டும் பல கதைகள் பேசியும் கரைந்த பொழுதொன்றை எதிர்பார்த்து….! இன்றுன் நினைவுகள் கரையும் 16ம் ஆண்டு மீள…
-
- 11 replies
- 899 views
-
-
தோற்றுப் போனவர்களின் பாடல் – முள்ளிவாய்க்கால் போர்க் காலத்தின் சில கவிதைகள்: தொகுப்பு குளோபல் தமிழ் செய்திகள்:- முள்ளிவாய்க்கால் தமிழ் இனம் மறக்க முடியாத இனப்படுகொலையின் வடு. உரிமைக்காக போராடிய இனம் கறுவறுக்கப்பட்ட நிலம். முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை உலகத் தமிழ் இனத்தையே உலுப்பிய நிகழ்வு. இந்த தாக்கம் தமிழ் படைப்பாளிகளின் படைப்புக்கள் பலவற்றில் பெரும் தாக்கத்தை செலுத்தியுள்ளது. முள்ளிவாய்க்காலின் சாட்சியாக, குரலாக, இனப்படுகொலையை பதிவு செய்த சில குறிப்பிடத்தக்க கவிஞர்களின் கவிதைகளை தொகுத்து தருகிறது குளோபல் தமிழ் செய்திகள். -ஆசிரியர் ஜெய…
-
- 0 replies
- 2.4k views
-
-
தேடுகிறோம் இப்போது?????? மனிதத்தன்மையை மக்களிடம் என்கவிதை இத்தலைப்பில்.. எங்கே மனிதன்????????என்றே...... அரசியலில் பெரும்புள்ளி ஆளுயர மாலையோடு அவர்வீட்டு வாசலிலே அயராது தொண்டர்படை ... பாமரனும் வந்தானாம் பெருந்தலைவர் புகழ்காண தலைவரவர் குணமறிய தாளாத ஆவலுடன்........ வழியிலே வழிமறித்தார் வலதுகையாம் உதவியாளர் அடுக்கடுக்காய் அளந்தாரே அண்ணலவர் அரும்பெருமையை... சிங்கமென முழங்குவார் சீற்றமுடன் மேடையிலே... புலியென பாய்ந்திடுவார் சட்டசபை கூட்டத்திலே... தொகுதி பத்தி கேட்டாலோ முழிப்பாரே ஆந்தையாய்....... குரைப்பாரே நாய்போல கும்பிட மறந்தாலோ... செவியுந்தான் பாம்பாச்சே வம்புமது கேட்பத…
-
- 6 replies
- 1k views
-