கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
நான் பட்டைகளை அணிந்துள்ளேன், எனது நெஞ்சின் மேல், வெடி குண்டைக் காவியுள்ளேன், எனது மனதின் வெண்மையில் குளிர் காய்கிறேன், பெரு நெருப்பின் தணலாய் முகிழப் போகிறேன். மேலுள்ள வரிகள் fஉன்டமென்டல் என்னும் இசைக் குழுவின் உறுப்பினரான அகி நவாஸின் , எல்லமே யுத்தமே என்னும் புதிய இசை அல்பத்தில் வரும் ,கூக் புக் டிஐவய் , சுய சமையற் குறிப்புக்கள் என்னும் பாடலின் வரிகள். இந்தப் பாடல் தற்கொடைப் போராளிகளின் எண்ணங்களைக் காவி வருகிறது.இந்த இசைக் குழு பிரித்தானியா ஏசியர்களின் அரசியல் எண்ணக் கிடைக்கைகளை, உலகளாவிய ஆசிய மக்களின் ஏகாதிபத்திய எதிர் அரசியலின் வரிகளைக் காவி வருகிறது. இனி வெளியிடப் பட உள்ள இந்த இசைத் தட்டு பல்வேறு சர்ச்சைகளைக் கிளப்பி விட்டுள்ளது.இந்தப் பாட…
-
- 1 reply
- 990 views
-
-
அகிம்சை. ஒரு சில தசாப்தங்களுக்கு முதல் வரை அகிம்சை என்றால் காந்தி என்றனர். அதனையே உலகும் காந்தியம் என்றது. காந்தி நாடு என்று பாரதத்தை கொண்டாடியது. உண்மை அகிம்சைஎது என்று உலகுக்கு சொல்லி பாரதத்தின் முகமூடி கிழித்தான் பார்த்தீபன் பாரதம் பார்த்திருக்க பசியில் பிள்ளை நீர்த்து பன்னிரண்டாம் நாள் வீர சுவர்க்கம் சென்றான் அகிம்சை தீயை உலகில் ஏற்றிய தீபச் சுடர் திலீபன். பௌத்தத்தை அகிம்சை மதமென்றனர் மதங்கொண்ட பௌத்தார் மனட்சாட்சி இல்லாமல் கொலைக்காட்சியை உலகிற்கு காட்டினர் முள்ளிவாய்க்களில் அந்த ஆ.. கிம்சையாளருக்கு அரவனைப்பு கொடுத்தது கிம்சையாளர் ஆளும் ஹிந்தியா தமிழன் என்ற உணர்வு தலை தூக்கிய பொழுதெல்லாம் தரங்…
-
- 2 replies
- 741 views
-
-
அகிம்சைக்கு கதவடைப்பு வரலாற்றுப்பதிவுகள் பரமேஷ்வரா.................எனக்கு உன் முகம் தெரியவில்லை அண்ணா திலீபன் முகம் தான் தெரிகிறது அன்று நல்லூரின் வீதியில் இன்று லண்டனின் வீதியில் அகிம்சைக்கு கதவடைப்பு, சிங்களவன் அக்கிரமத்துக்கு வரவேற்பு மேற்குலக நாடுகளே வெற்கித் தலை குனியுங்கள் வரலாறு சொல்லட்டும் அதர்மத்தின் பக்கம் நின்று தமிழர்க்கு இழைத்தீர்கள் அநீதி என்று...
-
- 0 replies
- 684 views
-
-
அகோர கோரம் மரணத்தின் ஓலங்களினாலானதாயிருக்கிறது அங்கு படர்ந்திருக்கும் கனத்த இருள் குருதியின் கருஞ்சிவப்பாயிருக்கிறது அந்த இருளின் நிறம் ரத்த மயமான அந்நிலம் சூழ் ஆழியிலிருந்து அலைகளுக்கு பதிலாய் பிரேதங்களெழும்பிக் கொந்தளித்து கொடும்மரணத் தடம் பதிக்கின்றன காலூன்ற இடமின்றி நிலமெங்கும் உறைந்த ரத்தப் புள்ளிகளிட்டு தெறித்துச் சிதைந்த மனித நரம்புகளால் அகோர கோலம் இட்டிருக்கும் துப்பாக்கியேந்திய கொடுங்கரங்கள் உணர்வின் வேள்வி குண்டத்திலிருந்து ரணங்களின் பெரும் ஓலம் எதிரொலிக்க அக்கினியில் ஆகுதியாயின மரித்த சடலங்கள் யுத்தச் சரித்திரங்களின் சிதிலக் குவியல்களிலிருந்து மரணத்தின் மஹாகுரூர முகம் தனது ஆட்காட்டி விரலால் உதட்டை …
-
- 1 reply
- 1.1k views
-
-
பழஞ்சோற்றிலும் பழைய மீன்குழம்பிலும் இருந்த ருசி, இங்குள்ள பீட்சாவிலும் பர்கரிலும் இல்லை! நாட்டுக்கோழி... நம்நாட்டு நாட்டாடுபோல... கென்டுக்கியும் மக்டொனால்டும் இல்லவே இல்லை!! அழகான காரிலிங்கு சொகுசாக சுற்றினாலும், ஊரிலுள்ள தெருவெல்லாம்... சைக்கிள் மிதித்துத் திரிந்ததுபோல் சந்தோசமாயில்லை...! பெட்டிக்கடையில் மிட்டாய் வாங்கிச் சாப்பிட்டால், வாய்மட்டுமா இனிக்கும்...?! முழு மனசுமே சேர்ந்தினிக்குமே! கிடைச்ச நேரமெல்லாம் கந்தப்புவின்ர காணியில விளையாடி மகிழ்ந்த கிரிக்கெட்டினை நேரடி அலைவரிசையில் பார்க்கமட்டுந்தான் முடிகிறது... இரசிக்க முடியவில்லை! அதிகாலை சுப்ரபாதத்தையும் திருவெண்பா காலச் சங்கொலியையும் அதிகாலைத் தூக்கத்திலும் இரசித்த மனதுக்கு ...இப்பொ…
-
- 14 replies
- 1.5k views
-
-
அக்கா நீங்களுமா....? Jul 3, 2013 வாழ்வு வசமாச்சுதென்று பாடிச் சென்றான் ஒருவன் நாசமாப் போச்சுதென்கிறேன் நான் இருதலைக் கொள்ளியாய் எம் தேசம் நம்பிக்கைகள் நரம்பறுந்து போயின எனக்கு ஊமைக்கனவுகள் தொடர்கின்றன. வெள்ளை மாளிகையையும் செங்கோட்டையையும் நம்பி எங்கள் வாழ்வு துக்கத்திலும் ஏக்கத்திலுமாய் கழிகிறது இரவுகள் வெடியோசைகள் கேட்கவில்லை விசும்பல்கள் தொடர்கின்றன. அழுதாலும் புனர்வாழ்வாம் நிமிர்ந்து நிற்றல் குற்றமென்றா சொல்கிறார்கள் உறைந்து கிடந்த ஊத்தைகள் எல்லாம் உன்மத்தம் கொண்டு ஆடுகின்றன. சாதிச் சங்கங்கள் பிரதேசப் பெயர்க் குழுக்கள் மூலை முடுக்கெங்கும் வக்கிரங்கள் என்ன இழிவடா எங்கள் இனத்துக்கு அன்று முளாசியெரிந்த நெருப்பில் இந்தக்குப்பைகள் எரியாமல் போன மாயம் என…
-
- 1 reply
- 689 views
-
-
ஒட்டியுலர்ந்து ஊட்டச்சத்தெல்லாம் உறிஞ்சப்பட்டுப் பதுங்குளியிலிருந்து இழுத்துவரப்பட்ட போது மிரளும் விழிகளின் அருகாய் அருகாய் துப்பாக்கிகள்….. *அம்மா காப்பாற்று அப்பா காப்பாற்று* கண்ணீர் வற்றிய கண்களிலிருந்து சொட்டிய துயர்….. கனவுகளைத் துரத்திக் கொண்டு இரவுகள் அலைகிறது…… கட்டையாய் கத்தரிக்கப்பட்ட தலைமயிருக்கான காரணங்கள் கேட்டுக் கேட்டுப் பதிவிடுகிறார்கள்….. சொல்லால் வசியம் செய்து சொல்ல முடியாக் கதைகள் நிரம்பிய கதைகளை மீள்பதியமிடும்படி வேண்டுகிறார்கள்…… ‘எனக்குத் தெரியாது‘ எத்தனையோ தரம் எழுத்துமூலமும் வாக்குமூலமும் எடுத்த பின்னாலும் கிளறிக் கிளறி ரணங்களைத் தோண்டுகிறார்கள்….. *பம்பைமடு* விசப்பாம்புகளின் குடியிருப்புகள் பே…
-
- 12 replies
- 1.9k views
-
-
செவ்வந்திப்பூ! பூத்திருக்கும் பூக்களெல்லாம் சந்தோசக் கவிதை சொல்லும்! பார்த்திருக்கும் பொழுதெல்லாம் புன்னகைகள் மின்னலிடும்! இறைவா உன் படைப்பினிலே இத்தனை இனிமைகளா? பூரித்து நிற்கின்றேன் பொன்மனதும் மலர்கிறது! விதியின் முடிவுகள்! மகிழ்ந்து மலர்ந்திருக்கும் வசந்தங்கள் வாழ்வில் இல்லை! என்றாலும்… மனமது மரத்து விடவில்லை! கூடிக் குலாவித் திரிந்து அணைபோட முடியாத அன்பையெல்லாம் அர்ச்சித்து போற்றுதற்கு ஜோடி என்று ஒன்றுமில்லை! என்றாலும்… கண்ணிலும் கருத்திலும் கனிவிற்கு குறைச்சலில்லை! கண்டதும் இருட்டு! காண்பதும் இருட்டு! காணப்போவதும் இருட்டாகலாம்! என்றாலும்… மென்மையான மெளனங்களில் துளியான நிம்மதியில் வாழ்க்கை கழிந்தே தீ…
-
- 9 replies
- 2.1k views
-
-
அக்கினி குஞ்சுகள் காலத்தை வென்ற கதாநாயகர்கள் நம் தமிழினத்தை காக்கும் காவல் தெய்வங்கள்; கப்டன் ------- எனும் முதல் விதையில் முளைத்த அரும்புகள் இன்று எதிரியின் மூச்சையே திணறடிக்கும் முழு விருட்சங்கள். பெரும் கடலையே விழுங்கிவிடும் கருப்புச் சூரியர்கள் பெரும் தணலில் கூட உயிர்வாழும் ஃபீனிக்ஸ் பறவைகள் உங்கள் கண் முன்னே ஒர் தெரிவு மரணமா எதிரியா? மரணத்தை வென்று எதிரியை அழித்திடும் இரும்பின் உறுதிகொண்ட இரும்பு பாறைகள். புற்றீசலாய் புறப்படும் எதிரியின் படைகளை பூண்டோடு அழித்திடும் புயல் காற்று நீங்கள் எதிரிகளை நடுங்கவைக்கும் தமிழ் ஈழத்தின் பிரம்மாஸ்திரம் தமிழ் மக்களின் உயிர்காக்கும் மார்புக்கவசங்கள். ஐம்பது…
-
- 5 replies
- 1.3k views
-
-
அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் அதை அங்கொரு காட்டிடை பொந்தினில் வைத்தேன் வெந்து தணிந்தது காடு தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ? தத்தரிகிட தத்தரிகிட தத்தோம். கவிதை: மகாகவி: படம்:முகநூல்: எல்லாத்தையும் கலந்தது தந்தது: நெடுக்ஸ்
-
- 1 reply
- 1.3k views
-
-
அந்த அகதிமுகாம்கள் இல்லையில்லை மீட்பர்களற்ற வதைமுகாம்கள் மின்சார முட்கம்பிகள் சூழப்பட்ட அந்தகாரத்தில் மூழ்கிக் கிடக்கின்றன. பசி மயக்கத்தில் கேட்பாரற்று உறவுகளைத் தவறவிட்ட அவலத்தில் சருகாகின தனிமைக் கூடுகள். அட்டதிக்கிலும் முற்றுப்பெறாத ஒப்பாரிகள் உயிரைப் பிசைந்து உணர்வைக் கரைக்கிறது. கூடி அழ ஆளின்றி மானிட மரணங்கள் மலினப்படுகின்றன. தன் பிறப்பை மறந்த அன்னையைப் பார்த்து சிசு கதறிக் கதறி விதி வலிக்கக் கிடக்கிறது. ஒதுங்கவும் உள்ளுடுத்தவும் வழியின்றி பெண்மை கறையுற்று நனைகிறது. மறைப்புகள் அற்ற திறந்த வெளி இருட்டில் மட்டுமே மானத்தைக் காக்கிறது அகரத்தை எரிக்கும் அசிட் திரவத்தை அடிவயிற்றை கிழித்து மிருகங்கள் உமிழ்கின்றன. …
-
- 8 replies
- 1.6k views
-
-
போனால் போகட்டும் போடா இந்த மாகாண சபையை வென்றவன் யாரடா போனால் போகட்டும் போடா போனால் போகட்டும் போடா இந்த மாகாண சபையை வென்றவன் யாரடா மகிந்தரும் வந்தார் பொய்களைச் சொன்னார் நடந்தது நமக்கே புரியாது தோத்த முகத்துடன் கொழும்புக்குப் போனால் கோட்டையில் எமக்கு இடமேது மக்கள் மனதில் உறுதியடா அதை மாற்றற நினைத்தது கொடுமையடா இனி ஆழ நினைப்பது மடமையடா போனால் போகட்டும் போடா உரிமை உள்ளவன் கேட்கின்றான் அதை இல்லை என்றால் அவன் விடுவானா ஆசையைச் சொல்லி அழுவதனாலே ஆளச் சொல்லித் தருவானா கூக்குரலாலே கிடைக்காது இனி கோட்டுப் போடவும் முடியாது மக்களை மிரட்டுவும் முடியாது போனால் போகட்டும் போடா இந்த மாகாண சபையை வென்றவன் யாரடா போனால் போகட்டும் போடா மக்களை மிரட்டி வாக்கினை…
-
- 27 replies
- 2.4k views
-
-
மொட்டென முகம் மூடியிருந்தேன்............. கிளி - கொத்தாதவொரு கொவ்வை பழமாய்......... என் பாட்டில் நானிருந்தேன்! சட்டென்று கடந்தது ஒரு -மைனா..... பட்டென்று முழைத்தது - காதல்! எழுத்துகூட்டி தமிழ் படித்தவன் ஒரே இரவில் கவிஞன் என்றானேன்! இதயத்தின் அடியிலொரு நீர் வீழ்ச்சி..... இனி என் இயங்கு திசை எங்கும் .......... அவள் ஆட்சி! ஆயுள் ரேகை உண்டென்று.......... உலகம் ஆயிரம் சொல்லும்...... ஆளவந்தாள் என்னை - இனி அவளே என் ஆயுளுக்கு நீதிபதி! பாடல் கேட்க பிடிக்குது...... சித்ரா பாடியது அதுவென்று தெரிந்தும்........ என் சித்திரம் பாடுதென்று ........ திருட்டு கனவு வருது! போச்சு போச்சு................ இனி என்ன செய்ய நான்? ஊர் உறங்கும…
-
- 17 replies
- 3.1k views
-
-
மழை பின்னிப் பெருமழையெனப் பொழிகிறது மரங்களும் இலையுதிர்த்தலுக்காய் வண்ணம் பூசத் தொடங்கிவிட்ட இம்மண்ணில் இருத்தலுக்காய் இயந்திரமாகாவிடின் அன்னியமாகி தொலைந்தேவிடுவோம் என்னும் துயராய் வாழ்வு அசைகிறது சலனமின்றி மழையை ரசித்தலில் காற்றில் துகள்களாகி கரைந்துபோகும் தேசம் அது ஒரு கோடைத் துலம்பலில் பிரிந்துவந்த என் மண்ணில் இன்னமும் புதைந்திருக்கிறது மௌனத்துள் மழை தடுமாறிக் கருக்கொள்ளும் மேகங்களும் காற்றள்ளப் போய்த் தொலைகிறது... வெள்ளிகள் முளைக்காத இருண்ட இரவுகளில் கடந்துபோகிறது துயர நிலவு தடுமாறி உயிராகும் வார்த்தைகளை கண்களில் நீர் அள்ள, கடந்துபோகும் காலத்துடன் மேற்கில் வீழ்ந்தணைகிறது சூரியன். ஆழக்கடலில் கலந…
-
- 4 replies
- 645 views
-
-
இனமாக எழுந்து இனமாக வீழ்ந்தார்கள் இனவிடுதலைப் போராட்டத்தில் வீழ்ந்த வித்துடல்களை ஒரு வயலில் விதைத்தார்கள் சமூக விடுதலைப்போராட்டத்தில் முளைக்கும் என்று விதைக்கப்பட்ட விதைகளை சாமியாக்கி சட்டைப்பையில் கொண்டுதிரிகின்றார்கள் இரண்டு விடுதலையினதும் எல்லைக்கு வெளியே சென்றவர்கள் இரட்டை ஒடுக்குமுறையில் இருந்தும் விடுபட முடியாத இறுக்கத்தில் வீழ்ந்தவர்களின் நினைவுநாள் திசைகாட்டி அறிவை இழந்து ஊனப்பட்ட இனத்துக்கு ஊன்றுகோல் ஊன்றி நடக்கவேண்டிய ஊன்றுகோலை தலையில் தூக்கி காவடி ஆடிவிட்டு அடுத்தது எப்போதென பழய பஞ்சாங்கத்தை புரட்டும் பூசாரிகள் ஒருபக்கம் உணர்ச்சிப்பெருக்கெடுத்து தேசம் நினைத்து தேகம் சிலிர்த்து காக்கிலோ அரிசிவாங்கக் கூட பெறுமதியி…
-
- 3 replies
- 1.2k views
-
-
அசையாத திலீபன்களும் அன்னை பூபதிகளும் கவிதை - இளங்கவி குட்டித் திலீபன்களாய் எங்கள் குமரர்கள் வீதியிலே கட்டிவத்தி விட்டதையா காளை இரத்தம் அவர் உடம்பினிலே..... அன்னை பூபதியாய் எங்கள் அம்மாக்கள் தெருக்களிலே அகிம்சை போராட்டம் குளிரிலே அமைத்த அந்தக் குடிலினிலே..... கொண்டகொள்கை மாறாது தங்கள் உயிர் பாராது தமிழினத்தின் விடியலுக்காய் தான் எரியும் மெழுகுகளாய் தங்கள் உடலெல்லாம் கசங்க கண்களும் பார்வை மங்க நீர்த்துளிகள் சிலகண்டாலும் நெல்லரிசி காணாமல் தமிழர் விடியலுக்காய் பல உயிர்கள் வேள்விகள் நடத்துகின்றார்...... பரமேஸ்வரன் இன்றும் மரணத்தை பார்த்தவண்ணம் நடக்கின்றான் பாதையது தவறாமல் தன் லட்சியத்தை தொடர்கின்றான் வேதனை வி…
-
- 0 replies
- 572 views
-
-
அசோகன் பேசுகிறான் மீண்டும்..... வரலாறுகள் மாற்றி எழுத முடியாதவை ....கடந்த சில காலங்களில் பல ரணங்களை எமக்குள்ளே விட்டு சென்ற எமது தேசத்தின் அழிவுகளும் கூட..இறந்து கொண்டு இருக்கிறோம் என்பதை தவிர எதையுமே அறிந்திராமல் இறந்து போனது எத்தனை பேர்.... அதன் வலிகள் என்னை இன்றுவரை சுகமாக தூங்க விட்டதில்லை.... புத்தம் இந்த உலகிற்கு பரவியது அசோகனின் மூலமே...... அன்பு ஒன்றை தவிர ஏதும் இல்லை இவ்வுலகில் பெரிதாக என்ற வார்த்தை எல்லாம் பொய்த்து போனது எம் மண்ணில்... தமிழனை கொள்வோம்.... தமிழனை கொள்வோம்.... தாரக மந்திரம் இதுவென சொல்வோம் என்று கொள்வதை தவிர வேறு ஒன்றும் செய்ய வில்லை தமிழனுக்காக சிங்கள அரசு... எல்லாம் முடிந்தது தடையங்களும் அழிந்தது ... இன்று சில அசோக மனங்கள் மட்டும் உ…
-
- 3 replies
- 696 views
-
-
ஊடக இளவலுக்கு - வ.ஐ.ச.ஜெயபாலன் இளய கலைஞர்களே சென்னை வரும்போது சென்றவனைப் பாருங்கள் என்பேனே இன்று அவனில்லை. இயமனும் கவிதை சிறுகதைகள் எழுதிப் பிரசுரிக்க அவாவுற்று இவனை அழைத்தானோ. தாகத்தில் தெருப் பாடகர் நினைத்துவரும் சாலையோரத்து ஊருணி மாரியிலேயே வரண்டதுபோல ஊடக இளவல் கிருஸ்ணா டாவின்சி இளமையில் வீழ்ந்தானே. எங்கள் முகங்களை அறிமுகம் செய்த இனியன் முகமின்றி எரிதழலில் படுகிறதோ. இல்லை வாழும் முகமானாள் மகள் நேகா என்றும் சாகா முகமையா உனக்கு தமிழ் கலைஞர் எங்கள் நினைவுகளில்.
-
- 5 replies
- 1.1k views
-
-
அஞ்சலி அஞ்சலி கண்ணீர் அஞ்சலி மண் மீட்க புறப்பட்ட மாவீரருக்கு அஞ்சலி மாவீரராகிவிட்ட வன்னி மக்களுக்கு அஞ்சலி அஞ்சலி செலுத்தி கடன் முடிக்க அருகதை சிறிதும் எனக்கோ இல்லை தளபதிகளுக்கு என் தாள் பணிந்து அஞ்சலி இனம் தெரியாத உறவுக்கும் இளையோருக்கும் அஞ்சலி கருவறையில் உலகம்கானாத கண்மணிக்கு அஞ்சலி கருவாகி உருவாகி மண் மீது தவளாத பாலகருக்கு அஞ்சலி வீரப்பெண் போராளிகளுக்கு அஞ்சலி உணவின்றி குடிக்க நீரின்றி உடுத்திய உடைகளுடன் துஞ்சிய உயிர்களுக்கு அஞ்சலி வெறி கொண்ட படையின் தடையற்ற வல் வளைப்பில் அழுகுரலோடு கற்பழிந்த பெண்களுக்கு அஞ்சலி சித்திரவதையில் சிதைந்த இளையோருக்கு அஞ்சலி "பேரர்களுடன் சாகிறேன் "என்ற பாட்டி மார்களுக்கு அஞ்சலி இரவென்றும் …
-
- 6 replies
- 6k views
-
-
விடிந்தும் விடியாததொரு காலை அம்மணமாய் கிடக்கும் என் சோதரி உடலை என் மேலங்கி கொண்டு போர்த்தி தரையில் அடித்து அழுதாலும்... உமது இறப்புக்காகவும் இரங்குகிறேன்! கல்லாகி போகாத மனிதனென்று நாம்...............ஆனதால்........... கல்லீரல் புற்று கணக்கு முடித்ததால் உம்...அற்ப ஆயுள் சோகம் எண்ணி மனசு - கனக்கிறோம்- ஆயினும் எலும்பெங்கும் வலிக்கிறது! அடி காயங்கள் ஆறுவதாய் இல்லை! இன்றும் உம் தோழர் - எம் அடிமடியில் தீ மூட்டுவதை எப்பிடி மன்னிக்க? மறக்க? வலிக்குது! தேரோடும் வீதியில் சேறள்ளி கொட்டிவிட்டு கோயில் வாசல் அது வருகையில் விடைபெறுகிறேன் ... புலிதான் எல்லாமென்றொரு புராணமா? கேவலம்... நீரல்ல...போய்விட்டீர் இன்னும் உம் காலடி தொழுப…
-
- 7 replies
- 1.8k views
-
-
அஞ்சலிப் பரணி - வ.ஐ.ச.ஜெயபாலன் எவர்க்கும் பணியா வன்னி பிள்ளைகளைப் பறிகொடுத்து விம்மி அழுகிறது. எதிரிகள் அறிக எங்கள் யானைக் காடு சிந்துவது கண்ணீர் அல்ல மதநீர். விழு ஞாயிறாய் பண்டார வன்னியனும் தோழர்களும் கற்சிலை மடுவில் சிந்திய குருதி செங்காந்தள் மலராய் உயிர்த் தெளுகிற மண்ணில் எங்கள் விடிவெள்ளிப் புன்னகையை புதைத்து வருகின்றோம். புலருகிற ஈழத்தின் போர்ப்பரணி பாடுதற்க்கு. எங்கள் மூன்று அம்மன்களும் பதினெட்டுக் காதவராயன்களும் முனியப்பர்களும் எங்கே ? அசுரப்பறவைகளின் சிறகில் வருவதாய் வாகைகள் பூத்துக் காத்திருந்தேனே என வன்னிக் காடு வாய்விட்டு அரற்றுது. போராளிகளுக்காக தேன் வாசனையை வாகை மலர் அரும்புகளில் பொதிந்து காத்த…
-
- 22 replies
- 4.9k views
-
-
[size=3]அட[/size] [size=3]யாருங்க இப்ப [/size] [size=3]சாதி பார்க்கிறா?"[/size] [size=3]"ஆமா![/size] [size=3]யாரு இப்ப [/size] [size=3]சாதி பார்க்கிறா!!"[/size] [size=3]சங்கட மடத்துக்கு [/size] [size=3]அக்னி கோத்திரம்[/size] [size=3]சைவ மடத்துக்கு [/size] [size=3]பிள்ளைவாள் மாத்திரம்[/size] [size=3]பேரூருக்கு [/size] [size=3]வெள்ளாளக் கவுண்டர்[/size] [size=3]கோவிலூருக்கு [/size] [size=3]நாட்டுக்கோட்டைச் செட்டி[/size] [size=3]சாமித்தோப்புக்கு [/size] [size=3]நாடார் அய்யா[/size] [size=3]"அட[/size] [size=3]யாருங்க இப்ப [/size] [size=3]சாதி பார்க்கிறா?" [/size] [size=3]"ஆமா![/size] [size=3]யாரு இப்ப [/size] [size=3]சாதி பார்க…
-
- 2 replies
- 988 views
-
-
வழக்கமாக எழும் நேரத்திலேயே இன்றும் எழுந்து விட்டேன்...! விழிக்கும் போதே கடவுளிடம் பிராத்தனை செய்து கொண்டேன் நேற்று நடந்த நிகழ்வுகள் மீண்டும் நிகழாதிருக்க... இன்னும் கொஞ்சம்நேரம் தூங்கி இருக்கலாம் என கெஞ்சுகிறது அந்த கீழிமைகள்... நேற்றைய தினங்களின் பிடிக்காமல் போன முன் அனுபவங்களால் மனதுக்குள் சொல்லிக் கொண்டேன் இன்றாவது ஒழுங்காக இரு என்று... இருந்தும்., தேவதை ஒருத்தியின் உதாசீனப் பார்வையிலும், கசக்கி, பிழிந்து வெளியேத் தள்ளி பின்பு வழக்கம் போல புறப்பட்ட பேருந்து பயணத்திலும் .. டேய்.. வீட்ல, சொல்லிட்டு வந்துட்டியா என சபித்துவிட்டுப் போன ஆட்டோக்காரனிடமும்... அலுவலகம் சென்று மறதியால் செய்த பிழை…
-
- 2 replies
- 1.3k views
-
-
அந்நியர் வந்து பாத்திடும்போது அதிசயம் தானே பூத்ததடா! கவி சொன்னவர் பலர் பார்த்திடும் போது ஆகாயம் தானே பார்த்ததடா புலி ஆகாயம் தானே பாய்ந்ததடா வென்றிடும் களம் நாடிச்சென்றதில்லை அங்கே குன்றிடும் மனம் என்றும் இருந்ததில்லை சென்றிடும் வீரர் கொன்றிடும் வரையிலும் ஓய்ந்ததில்லை களம் என்றிடும் வீட்டினில் கண் தூங்கவில்லை வெடித்திடும் குண்டும் பயம் கொடுக்கவில்லை பாயும் துப்பாக்கிச்சன்னமும் கூட துளைக்கவில்லை சாயும் வேங்கைகள் என்றுமே நமைவிட்டுப் போகவில்லை பாயும் கரும்புலிகூட சிரிக்கத் தவறவில்லை சென்றிடும் போதும் சிரித்திடும் முகம் பகை கொன்றிடும் போது கலங்குது மனம் என்றிவர் மனமாறுமோ, களம் தீருமோ …
-
- 22 replies
- 4.3k views
-
-
அடங்காமல் பாய்ந்து நின்ற ஆறடிப் புலியடா...! இளங்கவி - கவிதை பூக்களும் பூக்காத கந்தக பூமியாய்.... பிணங்களின் குவியலில் நிரம்பிட்ட பூமியாய்..... கரும்புலி வேட்டைகள் பல நடத்திட்ட பூமியாய்.... பாய்ந்த இரத்தத்தின் ஈரம் காயாத பூமியாய்..... நாம் வாழ்ந்த பூமியின்று நடுத்தெருவில் தத்தழிக்க நாய்களும் நரிகளும் நக்குத் தீனிக்கு அலைகிறது..... புத்தரின் சரித்திரம் புதைந்து கிடக்குதாம்..... அதை புனரமைத்துக் கட்டிவிட புத்த பிக்குகள் அலையுதாம்.... போய்விடுங்கள் இங்கிருந்து எங்கள் பிணங்கள் தான் கிடக்கிறது..... நீர் விதைத்துவிட்ட விதைகளின்று முளைப்பதற்காய் தவிக்கிறது..... அநியாயத்தின் வெற்றி அதிக நாள் நிலைக்காது…
-
- 18 replies
- 3.1k views
-