கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5130 topics in this forum
-
முள்ளுக் கம்பிக்குள்ளே முடங்கிப் போகிறோம்! துப்பாக்கி முனைகளுக்குள் துவண்டு கிடக்கிறோம்! ஒவ்வொரு வீட்டுச் சுவரிலும் அழகான குழந்தைகளின் படங்கள்!பிறப்பு-இறப்பு திகதிகளோடு! நிவாரண அரிசிக்காய் நிறையில் நிற்கிறோம்! ஊரடங்குச் சட்டத்தால் அடக்கப் படுகிறோம்! சிறைச்சாலை நாற்சுவருக்குள் நசிங்கிப் போகிறோம்! ஆயுத முனையில் சகோதரிகளின் கற்புக்கள் களவாடப் படுகின்றது! தூக்கம் என்பது நாங்கள் தொலைத்தவைகளில் ஒன்று! துக்கம் என்பது நாங்கள் உழைத்தவைகளில் ஒன்று! எங்கள் வீட்டுக்குள் போக அந்நியனின் அனுமத்திதேவை! சொத்துகள் பற்றின கவலையில்லை சொந்தங்கள் பறிபோன கவலையே! யாருக்கு யார் அறுதல் சொல்வது கண்ணீரால்தான் பேசுகிறோம்! …
-
- 3 replies
- 795 views
-
-
தலைவரை வாழ்த்தி பதியப்படும் கவிகளை இங்கு இணைக்கிறேன் அறுபத்தியொரு கவிதைகளை இணைக்க வேண்டும் என்னும் ஒரு ஆசையில் முடிந்தால் நீங்களும் உங்கள் கண்களுக்கு தென்படும் வாழ்த்துப்பாக்களை இணையுங்கள் உறவுகளே . 1. எங்களுக்குள் இருக்கும் சின்னப்பிள்ளைத் தனங்களை நினைக்கும்போதுநீ இன்னும் எங்களுக்குள் ஆச்சரியங்கள் நிகழ்த்துகின்றாய்வெறும் பேச்சுக்களில் பிரபாகரன் ஆகிவிடவேண்டுமென நினைக்கும் வியாபாரிகள் மத்தியில் நீ தெளிந்த உருவமாய் தெரிகின்றாய் உனது மயிராகவும் கூட ஒருவனும் ஆக முடியாது என கடந்த ஆறு வருடத்தில் வரலாறு நிரூபித்துவிட்டது கால புருசர்கள் வெறும் கைதட்டல்கள் மத்தியில் உருவாக முடியாது. நெடும்புயல்களுக்கு பூகம்பங்களுக்கு நெரு…
-
- 9 replies
- 48.5k views
-
-
எங்கள் அரசியல்வாதிகளின் முகங்களில், இறுக்கம் தெரிந்தது! சிங்கக் குரலோன் செருமிய போது, கூட்டம் கொஞ்சம் கலங்கித் தான் போனது! சங்கம் வளர்த்த இனம் நமதினம் என்றீர்கள்! எங்கள் தோள்கள் கொஞ்சம் அசைந்ததும் உண்மை! செருக்களமாடியது எமதினம் என்றீர்கள்! பெருமையில் விரிந்தன எமது மார்புகள்! ஒரே ஒரு தடவை மட்டும் ஒற்றுமை காட்டுங்கள், உலகத்தின் கண்கள் உற்றுப் பார்க்கின்றன! ஓடோடி வரக் காத்திருக்கின்றன! உங்கள் வாக்குகள் தான் எங்கள் அஸ்திரங்கள், மீண்டுமொரு முறை நம்பினோம்! எத்தனை தலைமுறைகள் நம்பினோம், இன்னுமொரு முறை நம்புவதால், என்ன கேடா வந்துவிடப் போகின்றது? இந்த முறை வாக்குகளைக் கிள்ளித் தரவில்லை! அள்ளியே தந்தோம்! வாக்குகள் எண்ணி முடிந்ததும், வார்த்தைகள் தடுமாறுகின்றன…
-
- 24 replies
- 1.5k views
-
-
அன்றைய காலத்தில் அனைவரிற்கும் தம்பி அடுத்து வந்தவர்களிற்கெல்லாம் அண்ணன். அன்பான கணவன் அற்புதமான தந்தை அலையாய் எழுந்த தமிழினத்திற்கு தலைவன். தன்மானத்தை விற்றவர்களின் தலை வலி எதிரிக்கு எட்டாத சூரியன் சுற்றியிருந்த சுயநலக்கூட்டத்திற்கு புகழ்பாடும் கடவுள். தமிழினத்தின் குறியீடு தலைவணங்குகிறேன் அண்ணை
-
- 29 replies
- 3k views
-
-
தலைவனது துணையிவர்கள்… பெரும் வெடியோடு ஆரம்பம்.. பேரிடியாக ஆனதுவே-நெல்லியடி மில்லரடி பகைக்கு நெற்றியடி ஆனதங்கே…! கந்தக வண்டி நிரப்பி-மில்லர் காற்றோடு கலந்த சேதி வீச்சோடு பாய்ந்துவர-சிங்களம் தோற்றோடிப் போனதங்கே…! எம் தலைவன் தொடக்கிவைத்த கந்தகவெடியதுவே.. கயவன் களம் பலவும் வென்றுதர பாதையொன்றுபுதிதாய் பிறப்பெடுத்ததன்று.. மில்லர் தடம் தொடர்ந்த பலவீரர் கதையுண்டு போர்க்கண்ணாவெடிசுமந்து புலிக்கொடிநாட்டினான் மாங்குளத்தில் அன்று தலைமன்னார் சிலாபத்தில் டாம்போவெடியாகி வெற்றியைஎமதாக்க பலநூறுவீரர்கள் படைமுகாம்கள் தகர்த்தெறிந்தார்… தரைதாண்டிகடலேறி காந்தரூபன் கொலின்சுடன் வினோத்தும் இணைந்துகொள்ள அலைமீதுவெடியதிர்வு எதிரிபடகோடு தகர்த்தெறிந்தார்…. அலையடித்துஓயவில்லை அங்கயற்கன்னிஅனலாகி அதி…
-
- 3 replies
- 584 views
-
-
சுட்டெரிக்கும் சூரியனையும் சுட்டெரித்துவிடும் எம் அடிவயிற்றுத் தீ புயற்காற்றையும் விடப் பெரியது உஷ்ணமான எம் பெருமூச்சு சமுத்திரங்களையும் சிறிதாக்கும் எம் கண்ணீரும் செந்நீரும் எம் நெஞ்சின் கொதிப்பு பூகம்பத்தின் நெருப்புக்குழம்பு கடவுளே கடவுளே என்ற எம் கதறல் மரண ஓலங்கள் நாம் விடும் சாபங்கள் இத்தனையும் காத்திருக்கு இனவெறி பிடித்தாடும் இலங்கை கொடுங்கோல் ஆட்சியாளரை தண்டிக்க; ஆனால்.......... அதற்கு எத்தனை காலமெடுக்குமோ கடவுள் நின்று கொல்லட்டும் நான் காத்திருக்கின்றேன் என் தலைவனின் பதிலுக்காய் உயிர்போன குழந்தைக்கு பாலூட்டும் ஒரு அன்னை உயிரற்ற குழந்தையை உயிருள்ள பிள்ளை போல் தோலில்போடும் ஒரு தந்தை உணவின்றி தூக்கமின்றி பதுங்குகுழிய…
-
- 1 reply
- 1.4k views
-
-
தலைவனுன்னா… மக்கள் விட்டு எட்ட நின்று.. குளிரூட்டி வாகனத்தில் தான் மகிழ்ந்திருந்து.. வெயில் காய்ந்த புழுதி குளித்த வியர்வை வழிந்தோடும் மக்கள் முன்.. கசங்காத வெள்ளை வேட்டி மேடை தரிசனம் தந்து.. வலு விழந்த வாழ்விழந்த சொந்தங்கள் முன்.. நாலு வார்த்தை நயவஞ்சகமாய் உதிர்த்து… எதிரி தாழ் பணிந்து சூழ்ச்சி மகுடம் சூடி… கேட்ட கேள்வி நேரிடைப் பதில் இன்றி மேவிப் பேசி.. வாய்கிழிய தத்துவம் பேசி… புத்திசீவித்தனம் என்று தலைக்கன ரவுடீசம் செய்து நடப்பவனல்ல..! தானைக்கும் தலைவன்… தமிழர் தரணிக்கும் பரணிக்கும் சொந்தக்காரன் தமிழர் தளபதி… தகுதி விகுதி என்றின்றி… தமிழ் தாயை தரையில் வந்து அவள் நிகராய் நின்று கையெடுத்து வணங்கி.. அவள் புரியும் மொழி கொண்டு …
-
- 12 replies
- 1.3k views
-
-
தலைவன் வழியிலே.. தலைவன் வழியிலே.. புலிகள் பாய்ந்திடும் வேளை வந்ததே தோழா... தரணியாண்டிட தமிழைக் காத்திட நேரம் வந்ததே தோழா.. நான் சொல்வதெல்லாம் நடக்கும்.. ஈழமெலாம் புலிக்கொடிகள் பறக்கும்... வெற்றிச்சேதி வீடு தேடி வருதே.. கவலை ஏனடா கைகள் இணைய வா தோழா.. அடிக்குமேல் அடி அடித்தால் அம்மியும் நகருமடா.. அம்மனை நகர்த்திவிட்டார்... அங்கு புத்தர்சிலை பூக்குதடா.. திருவிழாத்தேர்கள் இழுத்திட்ட வீதியில் எதிரிக் கவசங்கள் உறுமுதடா குழந்தையும் தாயும் கொஞ்சிய முற்றத்தில் முட்களின் சோலையடா..அதற்கு தமிழ்ப்பிணங்களே உரங்களடா.. ஐயனைத்தெருவில் இராணுவம் மிதித்தால் ஐரோப்பாவில் பிள்ளை ஐயையோ என்பார்.. துடிப்பவர் தலைவரடா.. துண்டிப்பார் அரக்கரின்…
-
- 21 replies
- 3.3k views
-
-
தலைவர் இருக்கிறார் மீண்டும் வருவார்.. இது எம் முதல்வனைக் கொண்டாடும் தருணம் பகிருங்கள்.... என் தலைவனுக்கு ஒரு பக்தனின் வாழ்த்துப்பா!! --------------------------- காந்தள் மலர்க் காடுகளே! எனக்கொரு கடி மலர் வேண்டும் வெடிகளுக்குள் முளைத்தெழுந்த எம் வீரப் புதல்வன் பொன் அடிகளுக்கு அதைச் சாற்றவேண்டும் நீடூழி வாழ்கவெனப் போற்றவேண்டும் கதைகளிலே படித்துவந்த காவியத்து வேல் முருகன் சதை உடுத்தி வந்த நாள் இன்று போர்க் கதை உயர்த்தி வா!! போரில் வென்றுவா என மனம் பதை பதைக்கப் பிணமான எதிரிகளின் சிதைகளுக்கு தீ வைத்த தெய்வத் திரு வேந்தன் தமிழின வாதை துடைத்த வரலாற்று நாயகனை வாழ்த்த வேண்டும் வாருங்கள் …
-
- 3 replies
- 1.6k views
-
-
இப்பாடலை எனக்கு பெரியார் திரவிடக் கழகத்தைச் சேர்ந்த யாழ்கள உறுப்பினர் தனிமடலில் அனுப்பி இருந்தார். கேட்க நன்றாக இருக்கிறது. http://www.thayagakaatru.com/songs-2009/el...n-thalaivan.mp3
-
- 5 replies
- 4.8k views
-
-
வானம் உனக்கு வாழ்த்துச் சொல்லும், விடியலும் வரும் காற்றும் உனக்குத் துணை நிற்கும், சுதந்திரம் நிட்சயம் கிடைக்கும். தலைவா! நீ அரசியல் வாழ்வில் நுளையவில்லை, சுயநலவாதிகளிடம் அகப்படவில்லை, நீ தனிப்படை வீரன் தலைவா! உன்னை நம்பினால் வாழ்வு அர்த்தமாகும், உனக்குச் சொந்தங்கள் உண்டு, உலகத் தமிழனம் உன் உறவு முறை, உயிர் கொடுக்கும் தோழர்கள் உன் உடன் பிறப்புக்கள் தலைவா! நீ தமிழ் வீரம் காத்த மாபெரும் தமிழன், உனக்கு யார் ஈடு இணை, நேர் நிகர், காயங்களைக் கண்டு அஞ்சமாட்டாய், மீண்டும் எழுவாய், தமிழீழம் காண்பாய். தலைவா! வெல்வோம் இது உறுதி எமக்கேது தோல்வி. உன்னை வாழ்த்துகிறேன் மீண்டும் எழுவாய் தலைவா! புனைந்தவர் - கு. அன்பரசு – சுபாங் ஜெயா…
-
- 4 replies
- 659 views
- 1 follower
-
-
இரவாய் இருந்த எம் வாழ்க்கை பகலாய் விடிய வந்துதித்த தலைவா வாழீ நீ! முதலாய் வந்த குடியின் முதுகெலும்பு ஒடிக்கப்பட்ட போது உனக்கு மீசை கூட முளைக்கவில்லை! ஆசை அரும்புகின்ற அந்த வயதில் ஆயுத பாஷையன்றி வேறெதுவும் இவர்க்குப் புரியாதென உணர்ந்தவன் நீ! துவக்கை கைகளில் எடுத்தவன் நீ! தமிழின விடுதலைக்குப் புது துவக்கம் கொடுத்தவன் நீ! உலகில் தமிழின இருப்பை எதிரொலிக்கச் செய்தவன் நீ காந்திய வழியில் நடந்து சோர்ந்தவர்களுக்கு நீ பிறந்தது பெரும் தெம்பு! ஏந்திய துவக்கின் வாய் திறந்து பேசிய வார்த்தையால் தான் பேச்சு வார்த்தை கூட நடந்தது! உன் வேர்கள் ஆழமானது நீ பரப்பி…
-
- 3 replies
- 1.3k views
-
-
தலைவியை இழந்த வானம் போருக்குப் புதல்வர்களை தந்த தாயாக வானம் அழுகிறதென எழுதிவளுக்காய் கவிழ்ந்து கிடக்கிறது பூமி பாலையை கிழிக்கும் குரலில் பேரன்பு கந்தகம் படிந்த முகத்தில் அழகிய புன்னகை இரும்பு மனுசியின் கம்பீரத்தில் சீரழகு தாய்மை நிறைந்த நிகரற்ற தலைவி வீரக் கதைகளில் சீருடைகளுடன் இன்னும் உலவும் தலைவியின் மௌனத்திலும் இறுதி வார்த்தைகளில் உறைந்திருந்தது மாபெரும் நெருப்பு வாதையின் பிணியே சூழ்ச்சியாய் தன் புதல்வியை தின்றதென புலம்புகிறாள் தாயொருத்தி நெஞ்சில் மூண்ட காலத் தீயே தன் தலைவியை உருக்கியதென துடிக்கிறாள் சேனைத்தோழியொருத்தி மௌனமாகவும் சாட…
-
- 1 reply
- 1.4k views
-
-
போருக்குப் புதல்வர்களை தந்த தாயக வானம் அழுகிறதென எழுதிவளுக்காய் கவிழ்ந்து கிடக்கிறது பூமி பாலையை கிழிக்கும் குரலில் பேரன்பு கந்தகம் படிந்த முகத்தில் அழகிய புன்னகை இரும்பு மனுசியின் கம்பீரத்தில் சீரழகு தாய்மை நிறைந்த நிகரற்ற தலைவி வீரக் கதைகளில் சீருடைகளுடன் இன்னும் உலவும் தலைவியின் மௌனத்திலும் இறுதி வார்த்தைகளில் உறைந்திருந்தது மாபெரும் நெருப்பு வாதையின் பிணியே சூழ்ச்சியாய் தன் புதல்வியை தின்றதென புலம்புகிறாள் தாயொருத்தி நெஞ்சில் மூண்ட காலத் தீயே தன் தலைவியை உருக்கியதென துடிக்கிறாள் சேனைத்தோழியொருத்தி மௌனமாகவும் சாட்சியாகவும் வாழட்டுமென நினைத்திருந்த தலைவியையும் இழந்தோம் பரந்தன் வெளியில் அலறி விழுமொரு பறவையை தேற்ற வார்த்தையற்றிருக்கிறது துயருண்ட தேசம் …
-
- 1 reply
- 764 views
-
-
பால்ராஜ் அமரனுக்கு அமரா நீ மீட்ட ஆனையிறவில் சுடப் பட்ட செங்கால் நாரைகள் போல் வன்னியெங்கும் தாயின் மணிக்கொடிகள் பதிகின்றனவே. என் கவிதையிலே நீ இருக்க ஈழம் கதறியழும் நியாய மென்ன. நீயோ முடங்கிய காலில் மூண்டெரிந்த விடுதலைத் தீ. தீவெட்டியாய் உன்னைச் சுமந்து சென்ற தோழருக்கு 'இத்தாவில்' பகையிருட்டில் வெற்றியின் பாதை விளங்க வைத்த மாவீரா. உன்னை எழுதாமல் இந்தத் தமிழ் எதற்கு. களம் களமாய்த் தோழர் உன்னைச் சுமந்ததுபோல் காலங்கள் ஊடே என் கவிதை இனிச் சுமக்கட்டும் அவனை ஆழப் புதைக்காதீர் ஆலயங்கள் கட்டாதீர். நாளை மணலாற்றை மீட்டு வாழ திரும்புகையில் நம் சனங்கள் மசிரை விட்டுதுகள் தம் மனம் நிறைந்த நாயகனை. மணலாற்று அகதிகளின் புதையல் ஆழப் புதைக்காதீர். -வ.ஐ.ச.ஜ…
-
- 7 replies
- 1.4k views
-
-
தளபதிகள் தவறு செய்வதில்லை! அவர்கள் தவறுகளே செய்வதில்லை, அது அவர்கள் எதையுமே செய்யாதலாலில்லை. அவர்கள் செய்கிற எதிலும் சரியான அனைத்தும் அவர்களுடையதாகவும் தவறான அனைத்தும் மற்றவர்களுடையதாகவும் உரிமைப் படுத்தப் படுகின்றன. அதைவிடவும், மற்றவர்கள் செய்கிறவற்றிலும் சரியானவற்றின் வழிகாட்டலுக்கான உரிமையும் அவர்களையே சாருகிறது. தவறானவற்றைப் பகிர பலருங் காத்திருக்கின்றனர். எனவே, அவர்கட்கு எல்லோரையுந் திருத்திக் கொண்டிருக்க முடிகிறது. என்ற போதும், அதே தவறுகள், நாள் தவறாமல் திரும்ப திரும்ப நிகழ்கின்றன. ஒவ்வொரு தடவையும், ஒவ்வொரு தவறும் அவர்கட்கன்றி மற்றவர்கட்கே உரித்தாகுகின்றன. அவர்கள் தவறுகளே செய்வதில்லை, ஏனெனில் அவர்கள் தளபதிகள். தளபதிக…
-
- 0 replies
- 1.8k views
-
-
காட்டிக் கொடுப்பவன் எங்கே? - அந்தக் கயவனைக் கொண்டு வா! தூணோடு கட்டு! சாட்டை எடுத்துவா இங்கே! - தம்பி சாகும்வரை அடி பின்பு கொளுத்து! அன்னைத் தமிழை மறந்தான்! - பாவி அடுத்தவன் கால்களை நக்கிக் கிடந்தான்! என்ன கொடுமை இழைத்தான்! - தீயன் எட்டப்பனார் வேலை செய்து பிழைத்தான்! மாற்றார்க் கழைப்பு விடுத்தான்! - வீட்டில் மதுவும் கொடுத்தான்! மகளும் கொடுத்தான்! சோற்றுப் பதவிகள் ஏற்றான்! - மானம் தூள் தூளாய் ஆக்கி நெருப்பிலே போட்டான்! பல்லாயிரம் நாட் பயிரை - வீரம் பாயும் தமிழ்க் குல மாந்தர் உயிரை எல்லாம் நிறைந்த தமிழை - தழலில் இட்டவன் உடல்மேல் இடடா தழலை! தீயன் உடல்தீயத் தீவை! - எங்கள் தெய்வத் தமிழ்வாழ இவன் சாவு தேவை! பாயும் புலியே! தமிழா! - தம்பி! பச்சைத் துரோகி …
-
- 11 replies
- 842 views
-
-
அன்பு பெருக்கும் கனிவு வேண்டும், துன்பம் உதிர்க்கும் உறவு வேண்டும், ஊக்கம் கொடுக்கும் உளம் வேண்டும், ஏக்கம் தணிக்கும் பரிவு வேண்டும், வீழ்வு தடுக்கும் உறுதி வேண்டும், தாழ்வு போக்கும் விரிவு வேண்டும், சஞ்சலம் நீக்கும் தெளிவு வேண்டும், அஞ்சாமன மாக்கும் பக்தி வேண்டும், வேற்றுமை விலக்கும் வலிவு வேண்டும், ஒற்றுமை படைக்கும் புத்தி வேண்டும், வாழ்வு பெருக்கும் சக்தி வேண்டும், ஈழம் அமைக்கும் பலம் வேண்டும்! தமிழ் ஈழம் அமைக்கும் தவம் வேண்டும்!! - சயனி
-
- 25 replies
- 2.5k views
-
-
தவிக்க விட்டாய் யாரையுமே விரும்பக்கூடாது என்றிருந்தேன் யாரையும் இதயத்தினுள் விடக்கூடாது என்றிருட்ந்தேன் எங்கிருந்து வந்தாய் நீ என்னை அருகில்... எப்படியடா என்னை இழக்கவைத்தாய் உன்னிடம் மனம் நெருங்கத்தொடங்கிய வேளை உன்னுடைய மனம் வேறொருத்தியை நாடியது நான் வளர்த்த ஆசைகள் அனைத்தும் ஒரே நொடியில் தேய்பிறை போலல்லவா தேயத்தொடங்கியது உங்கள் மனமே உங்களிடம் இல்லையே பின்னர் நான் எப்படி உங்களை நினைப்பது... நீங்களே வேறொருத்தியை நினைத்தபின் நான் உங்கள் நிழல்மேல் ஆசைபடுவது தவறன்றோ.. என்னையே நான் வெறுக்கத்தொடங்கினேன் எண்ணங்களை மறக்கத்தொடங்கினேன் என் ஆசைகள் அனைத்தும் நிராசைகள் ஆகின என் கனவுகள் என் கண்களை போல் கலங்கின உன்னை நினைத்த இந்த மனதி…
-
- 2 replies
- 1k views
-
-
வரவேற்ற உன் விழிகளால் வைகறை தெரிந்தது வலிகள் மறைந்துதொரு வாசமெழுந்தது, உருவேற்ற முடியாவுருவங்கள் உருவாகி உயிர்வதைத்தது _மறுகணம் விளைவுகளறியாத மலர்வுகள் மகிழ்வை விதைத்தது . களைப்பறியா பயணங்கள்..... சலிப்படையா காத்திருப்புக்கள் ....... அலுக்காத நினைவுநீட்சிகள் ...... அசைமீட்பில்_ உன் மீதான நினைவிசைமீட்பில் நிகழ்காலங்கள் கரைந்தழிந்துபோக , பகிராத வார்த்தைகள் தேடி ஞாபகங்கள் உலா போயின ............ பொருளற்ற பேச்சுக்களால் நழுவிய சமயங்களை மீளுருவாக்களில் நாட்கள் நகர , புரிந்தும் எல்லாம் அறிந்தும் வார்த்தையாடுதலில் வாகாய் தவிர்த்தெனை வதைத்துரசிக்கும் வகையறிந்து உன்முகமறிந்தேன் _கொண்ட காதல் தரமறிந்தேன். எனக்கும் பிடி…
-
- 3 replies
- 1.1k views
-
-
தவிப்பு... ஏனோ தெரியவில்லை எனக்குள் நானே தனித்துவிட்டது போன்ற பிரமை... உலகம் என்னை மட்டும் விலக்கி வைத்தது போன்றதோர் உணர்வு... அடிக்கடி அடி மனசில் அனல் பற்றியெரிகின்ற கொதிப்பு... எதையோ இழந்துவிட்டது போன்ற வெறுமை... எனதான வாழ்க்கை பயணத்தில் ஏமாற்றங்களை மட்டுமே சுமந்தது போன்ற விரக்தி... திடீரென தோன்றி மறையும் வானவில்லை போல சில சந்தோசங்கள்... ஆனாலும் அடிக்கடி நான் எதிலோ தொலைந்துதான் போகின்றேன் எதிலென்றும்... இதெல்லாம் ஏனென்றும்... புரிந்துகொள்ள முடியவில்லை...
-
- 8 replies
- 4.4k views
-
-
நிலவதனை தழுவிநின்ற முகிலவன் -ஏன் கண்ணீரைச் சொரிகின்றான்....? இன்று.... மதியதனைக் காணாது அவனும் -(நிம்)மதி இழந்து போனானா..
-
- 12 replies
- 2.7k views
-
-
தேசத் தேர் நிலைக்கு வராமல் சிலருடைய சிலைக்குக் கீழே சிறைப்பட்டு விட்டது! எங்கள் கைகளைக் கட்டிப் போட்டுவிட்டு வடமிழுக்கச் சொல்கிறார்கள் இந்த வல்லவர்கள் தண்ரில் மூழ்கிக் கொண்டிருக்கிறது தாய் நாடு- எங்களுக்கே தாகம் இன்னும் தணி‘யமல் இருக்கிறது! B)
-
- 3 replies
- 1k views
-
-
சிவனெனும் பெருமான் ஓர்நாள் நகர்வலம் போனார். நடந்து நடந்தே ஊர்உலாப் போனார். தாகம் மேலிட தாகம் மேலிட "தண்ணீர்" "தண்ணீர்" சைகையில் கேட்டார். பெருமான் என்பதை ஊரறிந்தது. பஜனைகள் செய்து பக்தி கொடுத்தது. நாவுலர்ந்து போகப் போக பெருமான் "தண்ணீர்" "தண்ணீர்" நடனம் செய்தார். பக்தி மிகுந்து பக்தி மிகுந்து காணிக்கை அள்ளி ஊர் கொடுத்தது. பொன்னும் மண்ணும் பொருளுமென்று பெருமான் காலில் ஊர் குவித்தது. தாகம் மேலிட தாகம் மேலிட முடியாப்பெருமான் முடிவாய்ச் சொன்னார்... கடவுள் என்றே ஆனபோதும் முதலில் கொடுங்கள் தாகம்தீர குவளையில் தண்ணீர். - தயா ஜிப்ரான் - 03.04…
-
- 7 replies
- 1.4k views
-
-
-
- 16 replies
- 3.3k views
-