கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5130 topics in this forum
-
நீ என் தேகத்தின் மேல் கொண்ட மோகத்தினால் என் மனதை காதல் வார்தையால் வசப்படுத்தி மானத்தைச் சிதைத்து தலை கோணச் செய்து விட்டாயே! பூவின் தேனைச் சுவைத்து மற்ரொரு பூவினைத் தேடும் கருவண்டினைப் போல் என் வாழ்வினை கேள்விக்குறியாக்கி என் குடும்பத்திற்கு இழுக்கினை உண்டாக்கி விட்டு.... உன் இச்சைக்கு மறு துணை தேடுகிறாயோ? இதோ வருகிறேன் விளையாட!! காதல் விளையாட்டா? மரண விளையாட்டு... புலியினை முறத்தினால் விரட்டிய வீரத்தமிழச்சியின் வம்சமடா நான்! தன் மானம் சிதைத்தவனை உயிரோடு சிதைக்காமல் சிதையில் விழமாட்டேன்! பெண் கொஞ்சி மகிழ்ந்தால் மலர்... கொதித்து எழுந்தால் புயல்... நீயும் உணர்வாய் என் காலடியில் உன் உயிரினை விடிகையில்... இதோ வருகிறேன் ! நான் http://panip…
-
- 1 reply
- 913 views
-
-
காற்றுக்காக அவர்கள் விசிறிக்கொண்டிருக்கும் மின் மட்டைகளில் கொசுக்கள் ஏன் தற்கொலை செய்துகொள்கின்றன? -சேயோன் யாழ்வேந்தன் (புழல் சிறையில் தற்கொலை செய்யப்பட்ட ராம்குமாருக்கு)
-
- 0 replies
- 912 views
-
-
கண்ணீரிலே எம் மக்கள்..... கூலிப்படை தாடி இப்போ செய்யுது கொலை ஓடி.... மக்கள் குரலை தேடி இப்போ அழிக்குது பார் ஓடி.... கூட்டமைப்பில் இழந்தோம் இன்று நாங்கள் ஒரு சோடி.... எங்கள் மக்கள் இவனையிழந்து இன்று இப்போ வாடி.... எம் தமிழர் இன்னல்களை எடுத்து சொன்னான் ஓடி.... ஜநா முன்னால் செய்தான் நேற்று ஆர்ப்பாட்டம் தான் கூடி.... அட.. அவனை கொன்று போட்டான் இந்த....தாடி வைச்ச கேடி... அண்டை நாடு தேடி ஓடி சொன்னான் எங்கள் அவலம் கூடி.... அவனை இழந்து எங்கள் மக்கள் கண்ணீரிலே இப்போ வாடி....!!! வன்னி மைந்தன்- :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry:…
-
- 0 replies
- 912 views
-
-
பிரிவுகளும் இழப்புக்களும் அடிக்கடி வந்து பழக்கப்பட்டதென்றாலும், வலிகளும் வேதனைகளும் சர்வசாதாரணமென்று நினைத்தாலும், மீண்டும் பார்ப்போம்... என்ற நம்பிக்கையில் பிரியும் போதும் கூட, விழியோரத்தில் கசியும் நீர்த்துளிகள் ... கட்டுப்பாட்டை மீறும் தருணங்கள், கேள்விகள் கேட்டு நிற்கின்றன..... இது உனக்குப் புதியதா?... என்று !!!
-
- 2 replies
- 912 views
-
-
தமிழா ! தமிழா ! இன்னும் என்னடா எதிர்பார்ப்பு..?!! உன் உறவுகள் அழிந்தது போதாதா..??! அதனால் நீ இரவுகள் தொலைத்ததும் போதாதா..?!! உடமைகள் இழந்தாய்..! இருப்பிடம் தொலைத்தாய்..! உறவுகள் கதற காதுகேளாதவனாய் தமிழ்..! தமிழ்..! தமிழன் என்றாய்..! இன்று உன் கண்முன் உன் உறவுகளின் ஒப்பாரி..! எல்லாம் இயலும் என்ற உன் நம்பிக்கைகள், ஊனமாய் எதுவும் இயலாது முள்வெளிகளுக்குள் கண்ணீருடன் இன்று ..! நாங்கள் இன்னுமொரு பிணம் ரசிக்கவா..?? நீ இன்னும் அங்கு நின்றுகொண்டு தமிழன்..! தமிழன்..! என்கிறாய்..! உன் சுவாசம் தவணை முறையில் தரப்படுகிறது. தீர்ந்துபோகும் கொடுத்த கேடு என்று ஆவேசமாய் நீ உள்ளிழுக்கும் காற்றில் எல்லாம் இன்னும் தீர்ந்து போகாத பிண வாடை ..! ஆடைய…
-
- 2 replies
- 911 views
-
-
அண்மையில் கனடா சென்றபோது எழுதிய கவிதை. கவி நாயகி/ muse - வ.ஐ.ச.ஜெயபாலன் வெண்பனிக் கோலமும் இல்லாத புகை வண்ணக் கொடுங்குளிர் நாள். தேனீரால் உயிரை சூடாக்கியபடி கண்ணாடி மாளிகையுள் இருந்தேன் * தூரத்துக் கரும் அணில்கள் கோடையில் புதைத்த கொட்டைகளை மீட்க்க அலைந்தன. நானோ அந்த உறைந்த நெடும் பகலில் சென்ற வருகையில் எனக்காக நாளொரு பறவையும் பொழுதொரு பூவுமாய்க் கமழ்ந்த டொரன்டோ நகரின் நினைவுகளை மீட்டிக் கொண்டிருந்தேன். சில கவிதையாய் சிறகசைத்தபடி. * கடந்த வசந்தகால வருகையைவிட. இக் கொடுங் கூதிர் வருகை இனிதாகுமென ஒருபோதும் நம்பவில்லை. ஆனாலும் வாழ்வு …
-
- 7 replies
- 911 views
-
-
ஆச்சி எடன அரிவாளை.. எதுக்கடா பேராண்டி பொங்கலுக்கு புதுக்கதிர் எடுக்கவோ..?! இல்லையன ஆச்சி இனமானப் போரில் பொட்டிழந்து பொலிவிழந்து.. குளிக்கும் உன்னைக் கூட கணக்குப் பண்ணும் சிங்கள **களை போட்டுத்தள்ள...! விடுடா அது அவன் பிறவிக் குணம்.. இல்லையன ஆச்சி தமிழர் நாங்கள் புலியாய் பாய பயந்தோடிய தெருநாய்கள் உலக உருண்டையின் பொய் நயத்தால் வெற்றிக் கோசம் சேர்த்து எம் தேசம் மேய்கின்றன. இன்னும் என்னை சும்மா இருக்கச் சொல்லுறியோ..??! தம்பி ராசா.. பொங்கிய இரத்தம் போதும் செத்து வீழ்ந்ததும் போதும் வீரம் விவேகம் விளையாடினதும் போதும் எனிக் கொஞ்சம் இராஜதந்திரம் படிக்கட்டும் எம் இனம் சும்மா கிடவடா..! என்னன ஆச்சி சொல்லுறா கண் முன்னால அநியாயம் கண்டும்...…
-
- 11 replies
- 911 views
-
-
மாணவர்களுக்கு அரசியல் தேவையா ...? ஊழல்வாதிகள் அடிப்படை வாதிகள்... மாறாச் சமூகை உறுதி படுத்த வைக்கப்படும் கேள்வி... வாக்குப்போட மட்டும் உங்கள் தேவையை கேட்பர்... கூட விரலில் கருப்பு மையை வைத்து ஜனநாயக கடமை முடிந்ததாக சொல்லுவர்... வெள்ளையனின் ஓட்டத்தில் மாணவர்களின் பங்கிலாத அரசியல் உண்டோ? மொழிக்காக்க தீயாய் எரிந்த போரில் தீயே நீங்கள் அல்லவா.... மநூவின் நீதியை குலத்தொழிலை மறுத்த போர் இளைஞர்களின் போரல்லவா.... தந்தைச் செல்வாவின் வெற்றி வாக்கரசியலை சிங்களம் மிதித்ததாலேயே.... எழுதுகோல் ஏந்திய கைகளில் துவக்கு ஏந்திய அரசியலை உலகம் அறியாததா? சோவியத்தில் செஞ்சீனத்தில் பொலியாவில் வியட்நாமில் தத்துவ பலத்தை அரசியலாக்கியதில் இளைஞர்களில் பாதையை…
-
- 1 reply
- 910 views
-
-
வல்லமைச் சூரியனாய் வழிகாட்டும் பேரொளி வீரத்திருவே எங்கள் வேரின் தணலே விடியாத வாழ்வுக்கு வெளிச்சம் தந்த ஈகப்பெரு நதியே.... அகவை ஐம்பத்து ஒன்பது காணும் அணையாச் சுடரே அன்பின் உருவே அலையாய் கரையாய் நிலவாய் நீராய் நெருப்பாய் நீயே எங்களின் நிச்சயம்.... ஏன்றென்றும் எங்களின் வழிகாட்டி ஒளிகாட்டி வுரலாற்றின் திசைகாட்டி எல்லாம் நீயே எங்களின் தலைவனே.... பெருமைமிகு தோழனே பெறுதற்கரிய பெருமையே தலைநிமிரும் வீரத்தையும் ஈகத்தையும் தந்த பேரூற்றே.... தளபதியே எங்களின் தந்தையே எல்லாமுமான வல்லமையே நீ பிறந்த பின்னாலே நாங்கள் வீரம் பெற்றோம் விடுதலையின் சுவையறிந்தோம்... நீயில்லாமலெங்களுக்கு நிமிர்வில்லை நண்பனே நீயே எங்களின் வல்…
-
- 3 replies
- 909 views
-
-
சிங்கள பெரினவாதம் சிங்க கொடியுடன் சீறும் வரை தமிழினத்தின் உரிமைக்கான தாகம் தவிர்க்க முடியாதது சிறுபன்மையினர் உலகில் சிங்களம் நாம் என்று சிறிலங்காவில் சிறுபான்மையினரை அழித்தால்_உன் இருப்புக்கு நீ இடும் புதை குழி முள்ளிவாய்க்கால் தில்லானவல்ல திருப்புகழுமல்ல சுபமும்மல்ல நன்றி வணக்கமுமல்ல ஊ சிவமயம் ஆகும் ஆயுதமா அகிம்சையா என்பதை தீர்மானிப்பது சிங்கள பெரினவாதம்....
-
- 5 replies
- 909 views
-
-
நா பிளந்து உமிழ்நீர் வறண்டு செல்லரித்து மூச்சடங்கிபோன எங்கள் குரல்வளைகளில் ஆழ்துளைக் குழாய் பதிந்து எதை தேடுகிறீர்? விடுதலை ஒன்றையே நேசித்து கந்தக காற்றை சுவாசித்து நெடியேறி வெடிக்கத் துடிக்கும் நுரையிரலை கவனமாக கையாளுங்கள்... போரியல் நெறியும் வாழ்வியல் பண்பும் வகுத்த தலைவன் வழிவந்த இதயத்தை மாற்றியும் அறுவைசிகிச்சை செய்து விடாதீர் ஞானம் பிறந்துவிடும் புத்தருக்கு... இன்னும் கிடைக்கவில்லையா தேடும் பொருள்? காத்திருத்தலையும் உடனடி கீழ்படிதலையும் கற்பிக்கும் பசியை துறந்து காடுகளில் அலைந்து திரிந்து சிறுகுடலாய் போன பெருங்குடல் உங்கள் கறிக்கு உதவாது.... இன்னும் சில பாகங்கள் காத்திருக்கின்றன நகங்களில் கிழிபட... ஈழ…
-
- 5 replies
- 909 views
-
-
வீரத்தின் வனப்பிற்கு உவமை தந்த வரலாறே! காரிருள் போர்த்தி நிலம் கண்விழித்துப் பார்த்திருக்க, கறுப்புமுகில் தான் கவிந்து காணவென்று பூத்திருக்க, ஆழிமகள் அணைக்கவென்ற ஆர்ப்பரிப்பில் அலை எறிய. வந்துதித்த ஆதவனே! வாழிய நீ பல்லாண்டு. புற்றீசல் மெட்டெடுத்து புதுப்பாடல் இசைத்திருக்க, புவி நனைத்து வர்ணமகன் பன்னீரை வார்த்திருக்க, நறுமலர்கள் வாடாத நனிதிங்கள் கார்த்திகையில் பிறப்பெடுத்த பெருமகனே! வாழிய நீ பல்லாண்டு. கிழக்குமுகம் சிரிக்க எழும் ஒளியின் அடர்வே!. செம் பொன்னள்ளி வீசிவரும் சூரியச் சுடரே! இலக்கெடுத்துச் சுயம் ஒடுக்கும் மானிடத் திருவே! இலங்குபுகழ் தலைமகனாய் வாழிய நீ பல்லாண்டு. தாயகத்தை நெஞ்சிலேற்ற தலைமை வேளே! தனித்துவப் …
-
- 2 replies
- 909 views
-
-
திசை தெரியாத் தேசமொன்றில் அடைபட்ட அந்நியர் போல் அடிமைச் சாசனம் எழுதியபின் எஜமானர்களின் கல்லா நிரப்பி மீளும் பெரும் பணிச் சுமையுடன் போயிருந்த அவர்கள் - இன்று எம்முடன் இல்லை தெருநாய்கள் இயங்கும் தெருவில் துப்பாக்கி குண்டுகளால் தொளையிடப்பட்டு தூக்கி வீசப்பட்டனர் இன்னமும் மனித முகங்கள் கண்டறியப் படாத அயல் மண்ணில் கருப்பு இரவுகளின் தனிமை தணிவதற்குள் எங்கள் ஏழைத் தொழிலாளர்களின் ஜீவநாடி அடங்கிப் போனது வன்மம் கொட்டித் தீர்க்கப்பட்ட பின்னர் கண்ணீர்த் துளிகளை மட்டுமே எமக்குப் பரிசாக அளித்தன பிசாசுகள் நாளை பற்றிய கனவுகளைச் சுமந்து சென்ற ஏதிலிகள் மேல் தங்கள் குரோதத்தைக் கொட்டி மரணத்தை மட…
-
- 7 replies
- 909 views
-
-
பொங்குவோம் பகிர்ந்துண்டு வாழ்வோம் விடுதலைக்காய்ப் பசித்திருப்போம் புறம் சொல்லோம் போகியில் மனத்தீமையெல்லாம் விட்டொழித்து புதிதாய்ப்பிறப்பெடுப்போம் எமக்கிது விதியே என ஏங்காது எதிரிக்காய் விழித்திருப்போம் இனி ஒரு விதிசெய்வோம் வரும் கணங்கள் எல்லாம் மீண்டும் வாராக்கணங்களே அதனால் ஆயிரம் கதைகள் பேசி அடுக்குத் தமிழ்பேசி பெருவாழ்வு வருகுதென பொய்சொல்லி ஏய்ப்போரைப் புறமொதுக்கி ஒட விரட்டி முட்டிமோத வரும்போது எதிர்நின்று மோதிடும் கட்டுக்காளையை அடக்கும் காளையாய் சேர் இடம்போகுமட்டும் பொருதுவாய் புலியாய் தமிழ…
-
- 0 replies
- 909 views
-
-
நான் எப்பவுமே கோவிலுக்கு வந்த உன்னை திட்டுறதுக்கு தான் வருவேன் ஆனா இப்ப உனக்கு நன்றி சொல்ல வந்து இருக்கேன் அந்த பொண்ணு சொன்ன வார்த்தை மட்டும் முதல் சொல்லி இருந்தால் நான் இந் நேரத்துக்கு உயிரோட இருந்திருக்க மாட்டேன் நான் யாரு எப்பல்லாம் மறக்கிறானோ? அப்ப எல்லாம் நீ சரியாய் ஞாபகபடுத்திர எல்லாருக்கும் தெரியுர மாதிரி முகத்தை படைக்கிற நீ ஏன் யாருக்கும் தெரியாத மாதிரி "மனசை" படைக்கிற...
-
- 2 replies
- 909 views
-
-
சட்டென்று ஒரு வெடிச்சத்தம்...! பட்டென்று போனது ஓருயிர்! சிட்டென்று பறந்த சின்னக் குருவி... வேட்டொன்றில் வீழ்ந்தது வீணாய்! பாழ்பட்ட யாழ் மண்ணில் ஒருநாள், தேள்கொட்டிய மாதிரி ஒரு செய்தி... நோபட்ட மனதோடு விடிந்தது... சிவந்த காலை, மார்தட்டி நின்றவன் புழுதியில் கிடந்தான்!!! கார்கொண்ட மேகம் கண்ணீர் அஞ்சலி செலுத்த, பேர் கொண்ட அவர் முகம் தணலாய் மறைக்க, வீறுகொண்ட நாலுபேர் இருக்குமிடம் விலகினார்! போர்கொண்ட உள்ளங்களின் காரியக் குணம் போல..! காரணம் தெரியாது...! காரியம் புரியாது...! ஆழங்கள் தாண்டி... தோண்டும் நேரம் இதுவோ? காரிருள் ஊடே ஒரு விடிவெள்ளி.. வெளிச்சம் காட்டிச் சிரிக்கிறது! விடைதெரியாத வினாக்களுக்கும், விடைகொடுக்கும் நேரமிது! கடை…
-
- 2 replies
- 908 views
-
-
வானம் வஞ்சகமின்றி வெள்ளைப் பூக்களை அள்ளி வீசிக் கொண்டிருக்கின்றது! நானும் இந்த கடுங்குளிர் தேசத்தில் என் மவுனச் சாளரங்களினூடே அந்த அழகியை ரசித்துக் கொண்டிருக்கின்றேன்! அவளும் மெல்ல என்னை நோக்கித் தன் காதல் தேசத்தின் பாரிய படையெடுப்பொன்றை தன் மலர்விழிகளால் மட்டுமே நடத்திக்கொண்டிருக்கின்றாள்! என் இதயக் கோட்டையின் மதில்கள் எல்லாம் ஒவ்வொன்றாய் சரிந்து விழுந்துகொண்டிருக்கின்றன! இன்னும் சில நொடிகளுக்குள் அவை முற்றாகவே தகர்ந்து விழுந்துவிடப் போகின்றன! நான் தோற்றுவிடுவேனோவென்று மெல்லக்கூறி பட்சி நகைத்துக் கொண்டிருக்கின்றது! இல்லை நடுங்கிக்கொண்டிருக்கின்றது! தோற்றேதான் போய்விட்டேன்!!! இப்போது என் இதயப் பேரரசின் முடிசூடா ராணி அவள்!!!!!! என் மனைவியின் …
-
- 9 replies
- 908 views
-
-
''கண்ணீரை துடைத்து விடு..'' வெள்ளைத் தேரேறி வெளியுலகு போனவனே- உன்னை கள்ளத் தேரேறி வந்து கயவன் உனை கொன்றானே... வெலிகந்தையில் வைத்துன்னை வெறியர்கள் கொன்றாரே நினைத்து பார்க்கையிலே நெஞ்சு கொதிக்குதய்யா... உன்னை இழந்தின்று தமிழினம் தவிக்குதய்யா- உந்தன் கல்லறை இன்று கண்ணீரால் நனையுதய்யா... விலை போனதொன்று வீம்புகள் செய்கையிலே தப்பிப் போய் தலைவனடி தமிழீழம் காத்தாயே... ஜநா முந்தலிலே ஜயா நீ உரைத்தாயே அண்ணன் உள்ளவரை அஞ்சாதே தமிழ் என்றாயே... ஒட்டு படையதற்க்கு ஓல வாழ்வளித்தாயே மட்டு நகர் நின்று மரண அடி கொடுத்தாயே... பல் குழல் பேச்சாலே- அவர் பரப்புரை அழித்தாயே அனுகுண்டாகி நீ அகிலத்தில் திகழ்ந்தாயே... ஈழமத…
-
- 1 reply
- 908 views
-
-
அறுத்தெறியப்பட்ட இதயத்தின் இரத்தக் குழாய்கள் கொப்பளித்த சிவப்பணுக்களில் - என் உயிர் உச்சரித்த உன் காதற் சிதறல்களைத் தேடிக்கொண்டிருக்கின்றேன் இன்னும்! புரிதல்களும் புரியாமையும்.... புரிந்துகொள்ளப்படுவதற்கு, சில காலங்கள் செல்லும்! - அதுவரை, இந்த ரணவலித் தேடல்கள் தொடர்ந்துகொண்டேதான் இருக்கும்!!!
-
- 5 replies
- 908 views
-
-
இரத்தம்தோய்ந்த குரூரச்சிவப்பான கொள்ளிக்கண்கள் பார்வைகளே படுபாதகம் செய்யுமாற்போற் சுவாலைப்பார்வைகள் தரவையெங்கும் பிச்செறியப்பட்ட பிணப்பாகங்கள் வல்லுறவினால் சிந்திய விந்துக்கள் வழியெங்கும் செங்குருதி வழிந்து காய்ந்த தேகங்களை ஆட்காட்டிக்குருவிகள் அடையாளம் கண்டுகொண்டாற்போல் அமைதியாய் இருந்தன உள்ளம் துடித்தது பற்கள் நரும்பின மீசைகள் துடித்தன தோள்கள் முறுக்கேறின எல்லாமே கனவானது ஆட்காட்டிகள் எல்லாமிழந்து அனாதரவாய் நின்றன. அவற்றின் உணர்வுகள் நம்மையும் தொற்றிக்கொண்டது பழி வாங்கும் நேரம் இதுவல்ல பார்த்து நடக்கவேண்டிய நேரம் ஏற்றத்தைக் கைவிட்டு ஆற்றைக்கடக்க வேண்டும் ஆற்றுப்படுத்த வேண்டியது அதிகம் இருக்கிறது எங்கோ பனிமலைத் தேசத்தில் இருக்கும் நண்பன…
-
- 4 replies
- 907 views
-
-
22ம் திகதி வருதாமோ? இறக்கை முளைக்கிறதா? தங்க ரதத்தில் தாய் நிலத்தை வைத்தா இழுத்தோம்? சொல்லி வைத்தவர் யாரோ விடிந்தால் சொர்க்கபுரியென்றே உன்மனசை சீரழித்தே போன அந்த செம்மல்தான் யாரோ? சிங்க தேசத்துக்கு உன் வாயாலே உணவளிக்கிறாய் கவனம்... இரத்தவாடை உன் நாவில்.... இதை உனக்கு சொல்லாமல் விட்டது யாரோ? வெட்டவெளியை ஒரு துளி மழை நனைத்தால்... பொட்டல்காடெல்லாம்... புஸ்பனவனமாகுமென்றே சொல்லி வைத்தது யாரோ? அமைதியில் நாட்டமில்ல.. போர் அவர் பிறவிக்குணம்... ஆவிபிரிப்பதே அவர் தொழில்.. அடுக்கடுக்காய் புலிக்கு அவப்பெயராம்....! இந்த நாளில் போரென்றே கொள்வாயா? இருந்த கூட்டுக்கு நீயே இடியாய் ஆவாயா? சொல்லி வைத்தது யாரடா... …
-
- 1 reply
- 907 views
-
-
பிழை நடக்குது என உணா்ந்தவன் துவக்கை எடுத்தான் களை பிடுங்க – அவன் எதிரிகள் தலையை எடுத்தான் சிலை போல் சிலா் நின்றது கண்டு விழி சிவந்து நின்றான் மலை மேல் விழினும் தலையால் மோதி உடைப்பாய் என்றான்! நிலை உயா்ந்து நின்ற சிலா் மண்ணை விலை பேசுதல் கண்டு கையிலைச் சிவன் போல் உக்கிரம் கொண்டான்! மண்ணை மீற்க மறவா் படை அமைத்தான் கழுத்தில் நஞ்சு கட்டி யமனின் வேலை குறைத்தான்! களம் பல ஆடி பகையோடு மோதி நகை பல செய்து நின்றான்! திகைத்து நின்றான் பகைவன் திசை பல ஆள் அனுப்பி சூழ்ந்து நின்று சூழ்ச்சி செய்தான்! எதிர்த்து நின்றான் தம்பிகளோடு அண்ணன் இறுதியில் வென்றது துரோகம்! வீரம் சுமந்து நெஞ்சில் ஈழம் சுமந்து நி…
-
- 1 reply
- 906 views
-
-
"""""தலைவன் பார்கிறான் இலக்கு"""" அண்ணணின் கையிலே துவக்கு அவன் பார்கிறான் அங்கொரு இலக்கு எங்களின் தேசம் மீள் நமக்கு - இனி இன்னல்கள் இல்லை எமக்கு... அமைதி வரவது இருக்கு -தமிழா அழுகையை நீ இனி ஒதுக்கு ஆண்டே ஏழதில் இருக்கு அடிமை உடையுது உனக்கு... கண்ணீர் கதறலை ஒதுக்கு கரிகாலன் எழுகிறான் நமக்கு அச்சம் உனக்கது எதுக்கு? அண்ணன் பார்கிறான இலக்கு... விடுதலை விடியுது உனக்கு விழி நீரதை நீயது ஒதுக்கு கவலைகள் கதறல்கள் விலக்கு கரிகாலன் பார்கிறான் இலக்கு..... -வன்னி மைந்தன் -
-
- 0 replies
- 906 views
-
-
காதல் பிரிவுகள் பலவகை .....!!! காதல் புரிந்துவிட்டு பல்வேறு காரணங்களுக்காக உயிரை துறக்காமல் காதலை துறப்பது ....!!! ----------------- கவிதை 01 ----------------- இரண்டு ரோஜாக்கள் அழகாக பூத்து ... உதிர்ந்து விழுவது .... காம்பு என்னும் பகுதி ... நினைவுகளோடு ... இருந்து கொண்டே இருக்கும் ...!!! +++++++ உயிராய் காதலித்து கொண்டிருக்கும் போது ஒரு உயிர் உலகை விட்டு பிரிவது ஆனால் தற்கொலையில்லை ....!!! ------------- கவிதை 02 ------------- இரண்டு ரோஜாக்கள் .... அழகாக பூத்து .... ஒரு ரோஜா கருகிவிட .... மற்றைய ரோஜா .... வாடிக்கொண்டிருப்பது....!!! +++++++++++++ உயிராய் காதலித்த உள்ளத்தில் ஒன்று எங்கே சென்றது...? எப்படி பிரிந்தது ....? மீண்டும் வருமா ..? ------------- கவிதை 03…
-
- 0 replies
- 906 views
-
-
நான் உன்னைத் தொலைத்து நீ தேட நீ என்னைத் தொலைத்து நான் தேட இருவரும் தேடினோம் எங்கெங்கோ? இதுவரை கிடைக்கவில்லை நாமெங்கோ! உணர்வுக்குள் சென்று உயிருக்குள் நனைந்து உறவாடி மகிழ்ந்த நாமெங்கே? என்னை அழைத்து அளாவிப் பேசிய ஆருயிர் அன்பே நீயெங்கே! உன்னை அணைத்து உள்ளம் நனைத்த உன்னுயிர் அன்பே நானெங்கே? நம்மை இணைத்த நல்மனம் எங்கே? நன்றி சொல்வோம் தினம் இங்கே! அல்லும் பகலும் உன் நினைவு அழுது துடிக்குதே என் உணர்வு சரவிபி ரோசிசந்திரா
-
- 0 replies
- 905 views
-