கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5129 topics in this forum
-
காலைக் கதிரொளியில் காற்று வரும் வழியில் - புதுக் காதல் கண்களுடன் உன் முகம் மாலை மயங்குகையில் மார்பில் ஜடை தவள -நகை மலரும் கண்களுடன் உன் முகம் நீண்ட இரவொன்றில் நிலவின் கீற்றொளியில்- நீர் மல்கும் கண்களுடன் உன் முகம் பாழும் பகலொன்றில் பாதைகள் மாறிய போது - துயர் நிறைந்த கண்களுடன் உன் முகம்....
-
- 7 replies
- 781 views
-
-
கிளிசரின் வெட்கப்படுகிறது ! அழகின் உயிர்ப்பு கண் என்றால் உணர்ச்சியின் துடிப்பு கண்ணீர்… கண்ணீர் எனப்படுவது இரண்டு வகைப்படும். செந்நீரை பறிகொடுத்தும் கண்ணீரை பரிதவித்தும் சோகத்தில் குடியிருக்கும் மாந்தருக்கு காலந்தோறும் உடனோடும் ஜீவநதி கண்ணீர்… வேடிக்கை பார்ப்போர் அழுதாலொழிய வேஷம் கட்டியோருக்கு வயிறு நிரம்பாது! அந்தக் கூத்தாடிகள் பிதுக்கும் கண்ணீர் ஒரு நடிப்புக் கலை! சினிமாவில் கண்ணீர் அருவியை திறக்கும் மந்திரப் பொருள் கிளிசரின். பிகினி காலத்து மாடல் பொம்மைகளுக்கு கிளிசரின்கள் டன் கணக்கில் தேவைப்படும். கிளிசிரினுக்கு செலவு வைக்காமல் கண்ணை குழாயென திறந்து விட…
-
- 0 replies
- 780 views
-
-
காவல் தெய்வங்களே சாவை தழுவி சந்தண மாலை சூடியோரே இமைக்கும் பொழுதினில் எரிமலையாய் வெடித்தீரோ ஈழத்தின் விடியலிற்காய் எமக்காய் எரிந்தீரோ எங்கே சென்று மறைந்தீரோ கடலில் கரைந்தீரோ களத்தில் எரிந்தீரோ விண்ணேறி விடியல் தேடி சென்றீரோ கண் முன்னே வாரும் கனவு தேசம் நாளை கைகொட்டி மகிழ்வோம் கனவு சுமந்து களம் வென்றவரே கடலெல்லை காத்து மீண்டவரே எங்கே சென்றீரோ எப்போது வருவீரோ விழியில் ஓளி ஏற்றி உம் விரல் தொடுகைக்காய் விரதம் இருக்கின்றோம் எம் ஈழத்தின் அரசிற்காய் உம் இதயத்தில் இடம் தந்தீரோ தாயை காப்பதற்காய் தவிப்பெல்லாம் எமக்களித்தீரோ புலியாகி சென்றீரே எம் புகழதை வென்றீரோ வெற்றிக் கிண்ணம் நம்கையில் கொட்டி மகிழ்வோம் ஒடி வாரு…
-
- 1 reply
- 780 views
-
-
ஈழத்தமிழருக்காக பிரளயனின் கலைக் குரல். -வ.ஐ.ச.ஜெயபாலன் இரண்டு இரவுகளும் ஒரு பகலும் என்னால் எழுத முடியவில்லை. பண்டிச்சேரி பல்கலைக் களக நடபகத்துறையினர் தயாரிப்பில் பிரளயன் இயக்கிய பாரி படுகளம் நாடகத்தின் தாக்கத்துள் இருந்து இன்னும் வெளிவர இயலவில்லை என்பதுதான் அதற்க்குக் காரணம். மூவேந்தர்களால் சுற்றி வழைக்கப் பட்ட பரம்பும் கூலிக்குப் போராட வந்த மூவேந்தர் படையும் மண்ணையும் மக்களையும் மீட்க்கப் போராடும் பெண்களும் ஆண்களும். மாவீரர் தின நடுகல் வழிபாடும். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்றும் தமிழால் ஒன்றுபடுவோம் என்றும் எழும் வானதிரும் கோசங்களும். சுவடிக்குள் உட்சுவடியாக ஈழத்தமிழர் போராட்ட ஆதரவு கலைத்துவமாக வெளிப்பட்டு மனசு கனக்க நிறைந்தது. மாவீரர் நடுகல் வழிபாட்டில் போர…
-
- 0 replies
- 779 views
-
-
விடியல் வன்னியில் போர்மேகம் புலத்தில் மக்களின் எழுச்சி .... வீதியில் தாய் தமிழககத்தில்...அரசியல் சித்து சிலபேரின் தற்கொடை தவிர வெறீயின் விளின்பில் தமிழீழம் புலம் மக்களோ வீதியில் எழுச்சியில்... சர்வதேசம் பாராமுகம் விடியல் தூரம் இல்லை விழித்திரு விடியலுக்காக இளையோன்
-
- 0 replies
- 779 views
-
-
அறிமுகமாகாமல் நான் ஆமீ அட்டித்த குண்டில் அம்மாவின் கருவறையோடு நானும் அஷ்தியானவன் அம்மாவின் கல்லறைக்குள் அறிமுகமாகாமல் நான்
-
- 0 replies
- 779 views
-
-
வலைப்பூவெனும் வலையால், இணையத்தின் துணையால், கடலலைபோல் எழுந்தேகி... எண்ணக்கடலின் கரை தேடலாம்! வண்ண வண்ண வடிவங்களாய்... எண்ணமெல்லாம் வடிக்கலாம்! சின்னச் சின்னச் சித்திரமாய்... எழுத்துக்களைச் செதுக்கலாம்! காகிதத்தில் எழுதி, கடிதங்களாய் அனுப்பி, காத்திருந்து காத்திருந்து... பார்த்திருக்கத் தேவையில்லை! இணையச் சுவரில் கிறுக்கிட... வலைப்பதிவொன்று போதுமே! உலகமெல்லாம் பகிர்ந்திட... வலைப்பூவுலகும் விரிந்திடுமே! விசைப்பலகை தடவி விரலால், வலைப்பூவில் தூவி வினாடிகளில்... உலகமெங்கும் மலர்ந்திடுமே - உங்கள் எண்ணங்கள் வண்ணங்களாய்...! எண்ணங்களை எழுத்துக்களாய்... படைப்பவனும் பிரம்மன்தான் ! வண்ணம் தரும் வார்த்தைகளை... வடிப்பவனும் ரவிவர்மன்தான் !! வலைப்பூவை உருவா…
-
- 2 replies
- 779 views
-
-
*** இலை ஓன்று கிளையில் இருந்து பெயர்ந்து விழுகிறது அதன் ஓலம் கேட்டு திரும்புகிறேன் மிகுந்த வலியோடு மண்ணில் புலம் பெயர்ந்து கிடக்கிறது இனி ஒரு போதும் கிளைக்கு திரும்ப முடியா மரண வேதனையோடு மட்கி போக துணிகிறது மண்ணோடு . http://www.saraladevi.com/2013/06/blog-post.html
-
- 6 replies
- 779 views
-
-
குழந்தைகளுக்கு மட்டுமே மழையின் மொழி புரியும் மழையே வா வா மழையே வா பூக்களின் மேலே வந்து உன் புன்னகையை கொட்டிப் போ ஒரு கவி சொல்லக் காத்திருக்கிறேன் நீ பூவோடு பேசிய காதலை மௌனமாக வந்து என் காதோடு பேசி விட்டுப் போ வா மழையே வா . -பா.உதயன்
-
- 2 replies
- 778 views
-
-
நந்திக்கடல் – 2012 ஆவணி : நிலாந்தன் மிஞ்சியிருப்பது இரும்பும் சாம்பலுமே, மாமிசத்தாலானதும் சுவாசிப்பதுமாகிய அனைத்தையும் சுட்டெரித்த பின் தங்கத்தாலானதும் துருப்பிடிக்காததுமாகிய அனைத்தையும் கவர்ந்து சென்றுவிட்டார்கள். மாமிசத்தாலாகாததும் துருப்பிடிக்கக் கூடியதுமாகிய இரும்பையெல்லாம் சேகரித்து உப்புக்களியில்குவித்து வைத்திருக்கிறார்கள். உப்புக்களியில் இருபோக மழையில் துருவேறிக் கிடக்கிறது கனவு. காடுகளின் சூரியன் நந்திக் கடலில் உருகி வீழ்கிறான். கானாங்கோழி காணாமற்போனவரின் கடைசிச் சொற்களை அடைகாத்திருக்கிறது. நிலாந்தன், 2012 – ஆவணி, யாழ…
-
- 4 replies
- 778 views
-
-
நான் கேட்காமல் கிடைத்த ஆலயம் என் தாய் நான் கேட்டதும் கிடைத்த தெய்வம் என் தாரம் * இறைவனிடம் வரம் கேட்டேன் அவன் தன்னை கேட்டதாய் நினைத்து தானே என் மனைவியானான் * எல்லோரும் ஆறுதல் தேடி ஆலயம் போவார்கள் நான் உன்னைத் தேடி வருவேன் * என் கவிதைக்குள் யாரும் இல்லை கிறுக்கல் ஆனது என் காதலுக்குள் நீ இருக்கிறாய் கவிதையானது என் வாழ்க்கை -யாழ்_அகத்தியன்
-
- 4 replies
- 778 views
-
-
கருமங்கள் கை கூடாமல். சறுக்குகிற நேரமெல்லாம். சனியன் நினைவுக்கு வருகிறான்! ஆச்சியும், அப்புவும், அன்போடு சேர்த்து, ஊட்டி வளர்த்த நம்பிக்கைகள்! சனிபகவானுக்குச் சால்வையோடு, சந்தனமும் பூசியுள்ளார்கள்! பிரபலங்கள் எல்லாம், வரிசையில் நிற்கின்றன! எல்லோரும் படித்தவர்கள்! எனக்கும் பெருமையாக இருக்கிறது! முதல் முறையாக, அப்புவிலும் ஆச்சியிலும், அளவில்லாத மரியாதை, அணையுடைத்துப் பாய்கிறது! எண்ணைச் சட்டிகளும், பெரிதாகி இருந்தன! புலத்தில் பெரிய பிரச்சனைகள், பெரிய சட்டிகளும் தேவை தான்! வரிசை முடிவில், பெரியவர் சிரித்தார்! ஓய்வு பெற்றவராம்! முகத்தில் அமைதியின், முத்திரை தெரிந்தது! சனியன் விலகியதால், சாந்தமாகியது போலும்! …
-
- 13 replies
- 777 views
-
-
வணக்கம் இந்தக் கவிதை என்னுடையது இல்லை . முகநூலில் என்னை நெருடிய முள் அவ்வளவே . நேசமுடன் கோமகன் ******************************************************************************************************************************************************** காதலின் புனிதத்தை காமத்தின் பெயரால் கறைபடிய விட்டதும் காணாமல் கருவுக்கு உயிர் கொடுத்து தெருவில் எறிந்த மனிதமற்ற மண்புழுக்களே வார்தைகள் கொண்டு உங்களை திட்டுவது தமிழுக்கு நான் செய்யும் துரோகம்.... நல்ல உள்ளங்களே யாரும் ஆனாதையாக பிறப்பதில்லை இந்த சமுதாய சனியன்கள் சிலரால் உருவாக்க படுகிறார்கள்................... நன்றி : முகநூல்
-
- 5 replies
- 777 views
-
-
கேப்பாபிலவு, மனதினுள் மரித்திடாரணங்கள் – முல்லைதாரிணி:- கேப்பாபிலவு அடங்கி இருந்து உடைமையைபெற்றிட உறங்கியிருந்தனர் முட்கம்பிக்குள்ளும் முகாம்களுக்குள்ளும் முடிவு! அடக்கிவந்தவர் உடைமைகளை முடக்கிக்கொண்டனர் முடிந்தளவுமுனுமுனுத்தனர் முற்றுப்புள்ளியில்லை பசுமைவயல் தென்னந்தோப்பு குளிரூட்டும் தென்றல் அப்புச்சி இருந்தமாமரம் அதன் கீழ் ஒருஊஞ்சல் – என கண்ணைநிறைத்திடும் நிணைவுகளுடனும் விவசாயம் செய்யதுடித்திடும் மனதுடனும் அகிம்சைவழியில் உரிமைகள் கோரினர் பெரியதலைகள் – உதவிக்கரங்களை நீட்டுவதுபோல் நீட்டிமுடக்கிக்கொண்டன உரிமைகள் வாய் மூட பலவா…
-
- 0 replies
- 777 views
-
-
ஓர் நாள் கும்மிருட்டில் அண்ணனைக் கொண்டு செல்லும்பொழுது வாகனத்தின் பேரிரைச்சல் கேட்கையில் அண்ணன் எங்கே என்பதைத் தவிர அவள் வேறெதுவும் கேட்கவில்லை தெருவில் அண்ணனைப் போன்றவர்களைப் பார்க்கும்போதும் அடுத்த வீட்டுப் பிள்ளைகளுடன் விளையாடச் செல்லும்போதும் அண்ணன் வந்துவிட்டானா? என்பதைத் தவிர அவள் வேறெதுவும் கேட்வில்லை யாராவது திருவிழாவுக்கு செல்லும்போதும் கொண்டாட்டநாட்கள் வரும்போதும் அண்ணன் வரமாட்டானா? என்பதைத் தவிர அவள் வேறெதுவும் கேட்கவில்லை தூங்கி எழும்பும்போதும் பள்ளிக்கூடம்செல்லும்போதும் அண்ணா எப்பொழுது வருவான்? என்பதைத் தவிர அவள் வேறெதுவும் கேட்கவில்லை வருடங்கள் பல ஓடிய பின்னரும் யாரைப் பார்த்தாலும் எங்காவது அண்ணாவைக் கண்டீர்க…
-
- 3 replies
- 776 views
-
-
கிளைகளை வெட்டி விட்டேன் பக்கத்துவீட்டுக்காரன் ஒரே சத்தம் காணியை கடத்து கொப்பு வருவதாக மீண்டும் மீண்டும் துளிர்த்து அத்திசையே போகிறது கொஞ்சம் யோசிச்சேன் மரம் இருந்தால் தானே மாதம் மாதம் வெட்டும் வேலை நச்சரிப்பு தாங்கும் எண்ணம் இல்லை இனி ஆதலால் மரத்தை அறுத்து விட்டேன் அட ஆறுதலா அமரும் இடம் எந்த போக்கத பயல் வெட்டியது பக்கத்துக்கு வீட்டு கிழவி இது ஒம்மென ஆச்சி என்றால் பேத்தி எதிரில் வந்த வேலிக்காரன் ஏன் மரத்தை வெட்டினியல் என்றான் இருக்கும் போது என்னை நீ இருக்க விட்டியா இப்ப சோகம் வேர் இருக்கு மீண்டும் துளிர்க்கும் கிளை என் பக்கம் வரட்டும் பிள்ளைக்கு ஊச்சல் கட்டனும் இது அவன் சேர்த்து இருத்து கதை பேசலாம் இனி இது நான் .
-
- 0 replies
- 776 views
-
-
நீ புனிதன்... ( நிமலராஜன் ) தோழனே... ஆண்டுகளோ ஆறாச்சு எம்மை நீ பிரிந்தாச்சு.... ஆனாலும் எம் மனசில் நீ நீங்காத நினைவாச்சு.... எங்கள் மண்ணில் நின்று பகை எம் தமிழை கொல்லையிலே... உந்தன் பேனா நீ எடுத்து உண்மைகளை நீ உரைத்தாய்... எம் தமிழர் அவலங்களை எங்கனுமே நீ உரைத்தாய்... அச்சமில்லை என்றென்னி உன் உயிரை துச்சமதாய் நீ நினைத்து உந்தன பணி நீ செய்தாய்... செம்மணியின் கொலைகளையும் செம்மையாக நீ உரைத்தாய்.... அம்மணியின் ஆட்சியதின் அவலங்களை நீ உரைத்தாய்.... ஜயோகோ பொறுக்கலையே அவர்தனைக்கு... பாய்நதடித்து வந்துந்தன் பாவி உயிர் குடித்தனரே.…
-
- 0 replies
- 776 views
-
-
இன்பமில்லாத பொங்கலில்.... -------------------------------- காலையெழுந்தவள் கடமை தனதென்று பொங்கினாளவள் பிள்ளைகளுக்காகவென்று...... நித்திரை தொலைந்த இரவுகள் ஆனதால் அதிகாலையிலே படுக்கையைத் துறந்து நீராடிவிட்டு சமையலறையை எட்டிப் பார்த்தேன் பொங்கியிருந்தாள் ! பொங்கியழுதது என் மனம் அப்போ...... நம்பிக்கை பொங்கிய நாட்களை எண்ணி நம்பிக்கை தந்தோர் நடைபிணமானது எண்ணி விழுப்புண்ணடைந்தோர் விதியினை எண்ணி விலங்குகள் போல சிறைகளில் வாடும் தமிழரை எண்ணி தை பிறந்தால் வழி பிறக்குமாம்(!) தமிழன் வாழ்வில் எப்போது பிறக்கும் பிணங்களின் மேலே கண்டிய நடனம் தமிழன் எலும்புகளாலே மாலைகள் சூடும் தமிழ்த் தலைமைகள் இருக்கும் வரையிலே இ…
-
- 3 replies
- 776 views
-
-
வேண்டாம் இனி ஒரு தீக்குளிப்பு ......... தியாகியே முருகதாசா ..... ஏன் இந்த அவசரம்..... உன் கல்வி இளமை ,உன் உயிர் நம் விடியலுக்கு தேவை அப்படி இருந்தும ஏன் இந்த் அவசரம் தீக்குளிப்பு தான் முடிவென்றால் மீதியை யார் முன்னெடுப்பது ... தேவையல்லவா உன் போன்ற இளையர்களின் பணி ... முருக தாசா ...முத்துக்குமரா ... ஏன் இந்த அவசரம் .பணியாற்ற ஏதேதோ வழி இருக்க மீள பெறமுடியாத . விலைமதிப்பற்ற உயிரை ஈந்த செல்வங்களே நீள் துயில் கொள்வீர் . .மலர்வீர் தமிழ் ஈழத்தில் ஒரு பூவாக .. .அமைதி ..... புறாவாக
-
- 1 reply
- 775 views
-
-
[size=5]புன்னகையின் காரணமாயிருந்தவளுக்குப் புற்றுநோய் [/size] பதின்மக்கனவுகள் பிணங்களும் அழுகையும் பிணியகலாப் பொழுதின் விடியலைத் தேடிய வீரரின் தடங்களில் 13வயது அவளுக்குக் காட்டிய வாசல் களமுனை கைத்துப்பாக்கி கனரக ஆயுதக் கையாள்கை..... வெற்றியே அவளது வெறிக்கனவு விடுதலையே அவளது விழிக்கனவு விளக்கி முடியுமுன் கொடுத்திடும் காரியம் முடித்திடும் தைரியம் அவளைப் பிடித்தது எல்லோர்க்கும்.... அசாத்தியத் துணிவும் ஆழுமையும் பகையின் வீட்டுக் குகைக்குள் பணி.... சிறைகளும் , சித்திரவதைக் கூடங்களும் அவளுக்கு வலித்ததில்லை வலிமையை விதைத்து வீரமாய் உரமாக்கி கறுப்பாய் வெடிக்கும் களம் தேடிக் கனவுகள் விரிந்தது.... கனவுகள் பலித்திடக் கைத்துப்ப…
-
- 2 replies
- 775 views
-
-
ஈழமண் என்றோர் நாடொன்று இருந்ததாம் இனிமையாய் தமிழினம் அதனிலே வாழ்ந்ததாம் உரிமையைப் பெற்றிட உறுதியாய் நின்றதால் உலகமே சேர்ந்ததந்த இனத்தினை அழித்ததாம் ஆண்டுகள் ஐம்பது கழிந்திட்ட பின்னதாய் அபலைகள் எம்கதை ஏட்டினில் மட்டுமோ ஏங்கியே நிற்கிற புலம்பெயர் தமிழரின் ஏக்கத்தைப் போக்கிட துணிந்திட்ட வீரரே மகிழ்ச்சியால் வாழ்ந்திடல் மங்கையைக் கவர்ந்திடல் மதுவினை ருசித்திடல் மட்டுமே மாணவர் மனதிலே இருப்பதாய் மட்டிட்ட மடையரே மடையெனத் திரண்டஎம் மைந்தரைப் பாரடா ஏழைகள் பணத்தினை எளிதினில் சுருட்டிட ஏற்றதே அரசியல் என்பதாய் எண்ணிய அராஜகர் கைகளில் சிக்கிய எம்விதி அகற்றிடக் கங்கணம் கட்டிய தீரரே! ஆண்டவர் மருண்டிட ஆள்பவர் கலங்கிட அலையெனத் திரண்ட எம் சோதரர் உங்களின் அன்பி…
-
- 14 replies
- 775 views
-
-
கவிதை ...........!!! தனியே வரிகளல்ல தனியே வலிகளல்ல தனியே வார்த்தையாளமல்ல தனியே உணர்வல்ல தனியே உணர்ச்சியுமல்ல ... தனியே தனி தேவையுமல்ல தனியே தனி விருப்பமுமல்ல .... தனியே அனுபவமுமல்ல ... தனியே அறிவுமல்ல .... தனியே இன்பமுமல்ல தனியே துன்பமுமல்ல .... தனியே ஆசையுமல்ல .... தனியே மோகமுமல்ல ... தனியே ரசனையுமல்ல தனியே கற்பனையுமல்ல ... தனியே உண்மையுமல்ல கவிதை .....!!! ஆத்மாவின் வெளிப்பாடு ... ஆத்மாவின் உந்தல் ஆத்மாவின் உணர்வு ஆத்மாவின் செயற்பாடு ... ஆத்மாவின் தொழிற்பாடு ஆத்மாவின் கடமை ஆத்மாவின் தேவை ஆத்மாவின் தேடல் ஆத்மாவின் ஆரம்பம் ஆத்மாவின் முடிவு ........!!! கவிதை ......!!! எழுதும்போது ஆத்மா என்ன சொல்கிறதோ .... அதை எழுது…
-
- 0 replies
- 775 views
-
-
சின்னஞ்சிறிய குழந்தை - அதன் சிந்தையில் வஞ்சகம் இல்லை கன்னல் மழலை பொழிந்து - எங்கள் காதிற்கு அமுதமளிக்கும் ஆசையுமில்லை மோசமுமில்லை - அது ஆணவம் கொள்வது இல்லை காசையு மெண்ணுவதில்லை - இதால் கவலைப் படுவதுமில்லை பிஞ்சுக் குழந்தை மனதில் - ஒரு பேதம் வளர்வதேயில்லை அஞ்சுதல் என்பதுமில்லை - அதை யார் வெறுப்பார்? யாருமில்லை இவ்வளவு பெரிய உலகில் - துயர் பிடித் அலைந்திடும் மக்கள் மத்தியில் சின்னக் குழந்தையாய் மாறி வாழ்ந்திட ஆசை...
-
- 0 replies
- 775 views
-
-
வள்ளுவன் காதல்-1 மெல்லிராப்போது வான மேக மண்டலத்தின் கண்ணே வெண்ணிலா ஊரும் சற்றே விசும்பிடை மறையும்-மீண்டும் எண்ணிலா ஜாலம் காட்டி இதழ்க் கடை முறுவல் கூட்டி கண்ணினைச் சிமிட்டி நாணிக் களிப்புறு முகத்தைக் காட்டும். அவ்விராவதனில் தன்றன் ஆருயிரனையள் தன்னைக் கவ்விய இதழினூடு களிப்புறச் செய்தான் காளை. நாணிய பெண்மை அங்கே நகைத்தது-இதழ்கள் தன்னைக் கோணியே நெளித்து "உங்கள்குறும்பினைநிறுத்துங்(கோ)" - என்(று) ஆணிடம் சிணுங்கக் காளை ஆயிரம் சரசம் செய்தான். பூமகள் நெற்றிதன்னில் பொலிந்த குங்குமத் தூள் - அன்னான் மார்பினிற் புரள, கூந்தல் மலர் இதழ் கொட்ட - பெண்மை சோர்வினிற் துவண்டு வாயின் சொல்லற, முனக - அங்கோர் காவியம் பிறந்தது, அன்போ காமுறச் சிறந்தது. இத்தனை நிகழ்வும் ய…
-
- 0 replies
- 774 views
-
-
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்… தாயகக்கவிஞர் அ.ஈழம் சேகுவேராஃவிளம்பி "(வேட்டை நாய்களின் குரூரம்) அவர்கள் எங்கள் நிலங்களைத்தின்றுகொண்டே இருந்தார்கள்." 1. பசி (வேட்டை நாய்களின் குரூரம்) அவர்கள் எங்கள் நிலங்களைத்தின்றுகொண்டே இருந்தார்கள். நாம் உருண்ட முற்றத்தை உழுது புரட்டினார்கள். அங்கே எங்கள் வானத்தையும் அல்லவா உடைத்துப்போட்டார்கள். புலவுகளும் பொழுதுகளும் கலவரமாயிற்று. எப்படி மனசு வரும்? அவ்வளவு இலகுவில் சொந்தம் விட்டுப்போக. குட்டி ஈன்ற பூனையாக மனசு அந்த மண்ணையே வட்டமிட்டுக்கொண்டிருந்தது. லாந்தர் வெளிச்சத்திலும் பொருள் நகர்த்தினோம். பயணப்பட்ட…
-
- 3 replies
- 774 views
-